Friday, May 30, 2014

சும்மா - 4

"சும்மா
#4


வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



இந்த "சும்மா" என்ற சொல்லைத் தற்சமயம் பல வகையான அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம் அல்லவா? சிற்சில பிரயோகங்களைப் பார்ப்போமே?

(1) பேசாமல் இருப்பது:

"என்னவே! அப்பொம் பிடிச்சு பாக்கேன்?
தொணதொணன்னுன்னு பேச்சிக்கிட்டே இருக்கீர்!
இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்."

(2) ஒன்றும்செய்யாமல் இருப்பது:

"துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு!'

(3) இயல்பாக normal ஆக இருப்பது:

"என்னா மம்முது? ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே?
இப்ப எப்பிடி இருக்காலுவ?"
"இப்ப பரவாயில்லை, மாமு. சும்மாதான் இருக்காஹ."

(4) வெறுமையாக இருப்பது:

"அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளா?"
"இல்லை. இன்னும் சும்மாதான் கிடக்குது."

"அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே?"

(5) தொழிலின்றி இருப்பது:

"ஏனுங்கோ? உன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா?"
"இல்லீங்களே! சும்மாதானே இருக்குறானுங்கோ!"

(6)காரணமின்றி:

"அடங்க இஸ்க்கி! இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே?"
"சொம்மாதாங்கண்ணு."

(7)பயனின்றி:

"ஏங்க்றேன், கானா ரூனா பானா ழானா? என்னங்கிறேன்?
அந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும்
அஙிண போயிக்கிணுமா இருக்கான்?"

(8)விளையாட்டாய்ச் சொல்வது:

"வக்காலி! ஏண்டா, குருத பறக்குதுன்னுட்டு சொன்ன?"
"குருத எங்கனாச்சும் பறக்குமா? சும்மா சொன்னேன்."

(9) கருத்தில்லாமல்:

"இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்?"

(10) இலவசமாக:

"இது என்ன விலைக்கு வாங்கினே?"
"விலைக்கெல்லாம் வாங்கலை. சும்மா கெடச்சுது."

(11)ஓய்வு எடுத்தல்; relaxing:

"ரொம்ப tired ஆ இருக்கு. கொஞ்சநேரம் சும்மா இருக்கேன்."

(12) அடிக்கடி:

"ஏன் சும்மா சும்மா வந்துண்டே இருக்கேள்?"

(13) தடங்கலின்றி:

"மத்தவங்களுக்குத்தான் பர்மிஷனெல்லாம் தேவை.
நீங்க சும்மா வாங்க."

(14) பயன்படுத்தப்படாமல்:

"சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!"

"சும்மா" என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் இருக்கிறது.
வேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தொ¢யவில்லை.

ஆனால், மலாய் மொழியில் "சும்மா" என்ற சொல் இருக்கிறது.
இரண்டே அர்த்தங்களில் மட்டுமேதான் வழங்குகின்றது.

Mana pergi? (எங்கே போகிறாய்?)
"Cuma jalan jalan sahaja." (சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)

"Baju-ni cantiknya! Berapa harga?" (இந்தச் சட்டையின் விலை என்ன?")
"Tak beli-ni! Dapat percuma-dah! (வாங்கவில்லை. இலவசமாகத்தான் கிடைத்தது.)

மேலே உள்ள எடுத்துக்காட்டுகள் தமிழர்களிடையே விளங்கும் பல வட்டார, சமூக, பேச்சுமரபுகளில் இருப்பதைக்காணலாம். எல்லாருமே "சும்மா" என்னும் சொல்லைபயன்படுத்துகிறார்கள் என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும். அவ்வளவுதான்.

இந்த நீள்கட்டுரை தமிழ் இணையத்தில் வெளியிட்டேன். அதன் தொடர்பாக சில உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அவற்றிற்காக கொடுக்கப்பட்ட மேல்விளக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

¡¢ஷி தன்னுடைய posting ஒன்றில் ஜாக்ரத், ஸ்வப்னா, ஸ¤ஷ¤ப்தி, து¡¢யம் ஆகியவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

இவையெல்லாம் மனிதனின் உணர்வுகளின் பல்வேறு நிலைகள். They are various levels of Human Consciousness. இவற்றை "அவஸ்தை"கள் என்பார்கள். இவற்றுடன் து¡¢யாதீதம் என்பதனையும் சேர்த்து "பஞ்சாவஸ்தைகள்" என்பர்.

1. ஜாக்ரத் அல்லது சாக்கிரம் என்பது முழு நினைவோடு இருக்கும் விழிப்பு நிலையாகும். இதனை தமிழ் சித்தர் மரபு "நனவு" என்று அழைக்கும்.

மூளையில் தோன்றும் "Electro Encephalography" யில் "beta rhythm" காணப்படும்.

2. ஸ்வப்னா அல்லது சொப்பன நிலையாகிய கனா நிலை - தூக்கத்தில் கனவு காணும் நிலையாகும் இது. இதனை "Rapid eye Movement Phase of Sleep" அல்லது "REM Stage of Sleep" என்றும் கூறுவார்கள்.

இதன்போது மூளையின் E.E.G.யில் "theta rhythm" பதிவாகும்.

3. ஸ¤ஷ¤ப்தி அல்லது சுழுத்தி அல்லது உறக்க நிலை - கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம். தூங்க ஆரம்பித்து அரைமணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரையில் இந்த நிலை பெரும்பாலும் நீடிக்கும். இதில் E.E.G. patternஇல் "delta rhythm" தோன்றும்.

4. து¡¢ய நிலை- இது சமாதி நிலை. சும்மா இருக்கும் நிலை. இதன் ஆரம்ப நிலைகளில் E.E.G. யில் "alpha rhythm" தோன்றும்.

5. து¡¢யாதீதம் - இது போக்கும் வரவும் அற்ற நிலை. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் அல்லவா? "போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே".

பிறப்பு இறப்பு ஏற்படாத நிலை. உயிர்ப்படக்கம் என்று சித்தர்கள் கூறுவார்கள். இதுதான் "நிர்விகல்ப்ப சமாதி" எனப்படுவது. "சாயுஜ்ஜியம்" என்பதுவும் இதுபோன்றதுதான்.

தமிழ் சித்தர்கள் இவற்றிலேயே உட்பி¡¢வுகளைக்கூட கண்டிருக்கின்றனர்.

1. சாக்கிரத்தில் சாக்கிரம் - மனதை வெளியில் போய் அலையவிடாமல் ஒரே விஷயத்தில் ஆழமாக ஈடுபடுத்துவது. அந்நிலையில் ஏற்படும் சிந்தனைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து நினைவில் இருத்திக் கொள்வது.

2. சாக்கிரத்தில் சொப்பனநிலை - விழிப்பு நிலையிலும்கூட மனதை அவ்வப்போது வேறு சில Fantasy களில் சஞ்சா¢க்க விடுவது. சில விஷயங்கள் மறந்தும் சில விஷயங்கள் மனதில் நிற்பதுமாக உள்ள நிலை. "Day- dreaming".

3. சாக்கிரத்தில் சுழுத்தி நிலை - கண்கள் விழித்திருந்தாலும்கூட விஷயங்களை கவனிக்காமல் மனதை உறக்க நிலையில் வைத்திருப்பது.

4. சாக்கிரத்தில் து¡¢யம் - விஷயங்களை மிக ஆழமாக non - verbal நிலையில் ஆராய்ந்து ஆழ்ந்திருத்தல். Abstract thought."ஐன்ஷ்டைன்" நிலை.

5. சொப்பனத்தில் சாக்கிரம் - தூங்கிக் கனவு கண்டு, எழுந்த பின் கனவில் கண்டது அனைத்தையும் சொல்லமுடிவது.
வெள்ளையம்மாள் பாதர் வெள்ளையிடம் பாடிய,
"போகாதே! போகாதே! என் கணவா!
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"
என்ற பாட்டின் நிலை.

6. சொப்பனத்தில் சொப்பனம் - கண்ட கனவில் சிலவற்றை மட்டும் ஞாபகத்தில் வைத்து மற்றவற்றை மறந்து விடும் நிலை.

7. சொப்பனத்தில் சுழுத்தி - கண்ட கனவு முற்றாக மறத்தல்.

8. சொப்பனத்தில் து¡¢யம் - சொல்லத்தொ¢யவில்லை.

ஓர் உதாரணம் வேண்டுமானால் தருகிறேன்.

    Benzeze molecule இல் 6 Carbon, 6 Hydrogen அணுக்கள் இருப்பது வாசகர்களுக்குத் தொ¢ந்ததே! (தினத்தந்தி பாஷை). Hydrogen valency 1; Carbon valency 6. ஆக கார்பனின் 24 + ஹைட்ரஜனின் 6 ஆக மொத்தம் 30 கொக்கி களையும் இணைத்து கார்பனுடன் ஹைட்ரஜன் அணுக்களை சா¢யான அமைப்பில் இணைக்கவேண்டும். ஆனால் இது எப்படி என்பதுதான் பு¡¢யவில்லை.
    இதில் ஆய்வுகள் நிகழ்த்தி வந்த Dr.Kekule பல நாட்கள் போராடியும் இணைப்பை சா¢யாக உருவகப்படுத்த முடியவில்லை. எப்படியும் சில வேலன்ஸி கொக்கிகள் சும்மா தொங்கின. என்னும்பொழுது பென்ஸீன் மாலிக்கியூல் எப்படியிருக்கும் என்பதுவும் தொ¢யமுடியாமல் இருந்தது.
    ஒரு நாள். கெக்கூலே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விசித்திரமான கனவு. ஒரு பாம்பு நெளிந்து ஆடி வந்தது.பின்னணியில் நாகின் மெட்டு கேட்டதா என்பது தொ¢யாது. அந்தப் பாம்பு அப்படியே சுருண்டு தன்னுடைய வாலைச் சுருட்டித் தன்னுடைய வாயில் திணித்துக் கொண்டது. அப்படியே ஓர் அறுமுனைச் சதுக்க வடிவில் தோன்றியது.
கெக்கூலே விழித்தெழுந்ததும் அந்த Hexagon வடிவத்தை வரைந்து ஓவ்வொரு முனையிலும் ஒவ்வொரு கார்பன் அணுவை வைத்து ஒவ்வொரு கார்பனுடனும் பக்கவாட்டில் ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவைக் கொக்கி போட்டு இணைத்தார்.
    அந்த Hexagon வடிவில் Benzene molecule-இன் structural formulaவை ஏற்படுத்திவிட்டார், கெக்கூலே. இதுதான் அந்த famous Benzene Ring. Steroids போன்றவற்றின் ஆய்வுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் Benzene Ring தான் அடிப்படை. (கெக்கூலேயை "Lord of the Rings" என்றோ "Ring-master" என்றோ அழைக்கலாமோ?)

9. சுழுத்தியில் சாக்கிரம் - தூங்கிய தூக்கத்தின் தன்மையை விழித்ததன்பின் உணர்ந்திருத்தல்.

10. சுழுத்தியில் சொப்பனம் - தூங்கினோமா, தூங்கவில்லையா என்ற ஐயப்பாடு உள்ள நிலை.

11. சுழுத்தியில் சுழுத்தி - தூங்கியதுகூட தொ¢யாத நிலை.

12. சுழுத்தியில் து¡¢யம் - Hypnosis, Mesmerism செய்வதெல்லாம் இந்த மாதி¡¢ மனமுறங்கிய நிலையில்தான்.

    அந்த அளவிற்குப் பண்டைய கால சித்தர்கள் ஆராய்ச்சி செய்து உணர்ந்திருக்கிறார்கள்.

    Biofeedback கருவிகளின் உதவியோடு இந்த நிலைகளை ஆராயலாம்.

    இதனால் மனதைப்பற்றிய ஆய்வுகளில் புதிய எல்லைகளைக் கண்டறிய முடியும். இதனால் ஏற்படும் லாபமோ அளவிடப்பட முடியாததாக இருக்கும்.

    சித்தர்கள் நூல்களைப் பு¡¢ந்து கொள்ள முடியாத குப்பைகள் என்று நினைக்கப்படும் கருத்தை அகற்றி, அவற்றைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கும்.

    இதனால் நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் விஷயங்களை நாம் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.

    அந்தந்த நிலைகளை வெளிக்கருவிகளினாலோ அல்லது மருந்துகளினாலோ செயற்கையாக ஏற்படுத்த முடியுமா?

    எப்படிச் செய்யலாம்?
    மனோதத்துவ ¡£தியில் இதற்கு என்னென்ன applications உண்டு?
    மனோவியாதிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படுமா?
    ஓர் உதாரணம் சொல்கிறேனே?
    REM Sleep இல் இருக்கும்போதெல்லாம் தூக்கத்தைக் கலைத்துவிட்டோமானால் தற்காலிக புத்திமாறாட்டம் ஏற்படும்.
    Relaxation Response போல இந்த நிலைகளை develope செய்யமுடியுமா?...etc.
Gentlemen! The sky is the limit!

    சும்மா இருத்தலுக்கு என்ன செய்யவேண்டும்?
    நம் மனதில் ஓடும் எண்ணங்களை trace பண்ணவேண்டும்.
    எங்கிருந்து தோன்றுகின்றன?
    எங்கே செல்கின்றன?
    என்ன sequence of thought ஏற்படுகிறது?
என்பனவற்றையெல்லாம் impartial observer ஆக இருந்து கவனிக்கவேண்டும். வேற்றுப் புலனுணர்வுத் தூண்டுதல்கள் sensory stimulations குறைக்கப் பட வேண்டும்.

    கண்களை லேசாக மூடிக்கொள்ளலாம். வெளி ஓசைகள் கேளா வண்ணம் தடைசெய்ய ஏதாவது மெல்லிசையைக் கேட்கலாம். சில Kitaro pieces, Enigma, Gregorian Chants, Baroque music போன்றவற்றைக் கேட்கலாம்.
    நம் பக்கத்து இசையானால் குழல், வீணை, போன்ற கருவிகளில் இசைக்கப் படும் வசந்தா, நீலாம்பா¢, மோஹனம், கானடா, தன்யாசி போன்ற ராகங்களைக் கேட்கலாம்.
அல்லது வெறும் தம்பூராவை மீட்டிக்கொண்டு அதன் சுருதியில் லயிக்கலாம்.
ஊதுவர்த்தியைப் பற்ற வைத்துக்கொள்வதால் நுகர்வு உணர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். சில வகையான வாசனைகள் மனச்சாந்தியை ஏற்படுத்தும். சந்தனஎண்ணெய், அரகஜா, ஜவ்வாது, ரோஜா போன்றவை.

    இதுதான் ஆரம்ப நிலை.
    ஒரு காலத்தில் சும்மா இருக்கும் நிலையை அடையலாம்.

( இந்தக் கட்டுரை என்னுடைய சொந்த அனுபவங்கள், சிந்தனைகள், பதினெட்டு ஆண்டுக்காலப் பயிற்சி, பல நூல்களில் கண்ட அறிவு, சில பெரும் சித்தர்களின் தந்த விளக்கம் , காட்டிய வழி ஆகியவற்றின் Distilled essence என்று கூறலாம்).


சும்மா - 3

சும்மா
#3


வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 

எண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.

உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டேஇருக்கின்றன.

ஒன்று, நினைப்பு.

இன்னொன்று, மறப்பு.

மனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது. ஆனால், வேறொன்று வந்து விடுகிறது. இருந்தாலும், மனது வெற்றிடமாக இருப்பதேயில்லை. மனதில் எந்தவொரு நினைப்புமே இல்லாமலோ, மறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக இருக்கிறது.

நினைப்பு" என்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே மறப்பு என்பதுவும் ஒரு active processதான்.

ஒன்றை நாம் உணருகிறோம்.

இன்னொன்றை நாம் உணருவதில்லை.

மறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்தான்.

"நினைக்கத் தொ¢ந்த மனமே!
உனக்கு மறக்கத் தொ¢யாதா?"

நினைவையெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா பிடித்துவிடும்!

பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை "வாக்" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வாக்குகளில் நான்கு உண்டு. பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகா¢ ஆகியவை.

வைகா¢யும் இரண்டாக இருக்கிறது.
சொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான் "வைகா¢" என்கிறோம். அது பேச்சாக வெளியில் பா¢ணமிக்கும்போது அதை "தூல வைகா¢" என்றும், வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை "சூட்சும வைகா¢" என்றும் கூறுகிறோம். இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்தி, ஆங்கிலம் என்று.
வைகா¢ வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக விளங்கும். இதனை "மத்யமா" வாக் நிலை என்போம்.

Instinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.

இதைப்போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும். இதை யோக நூல்கள் மயில் முட்டையுடன் ஒப்பிடும். மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறது. அதனுள்ளே வெண் கரு, மஞ்சள் கரு எல்லாம் இருக்கின்றன.
அதற்குள் மயிலின் அனைத்துக்கூறுகளும் விளங்குகின்றன.
இதுவேதான் முழு மயிலாகப் பா¢ணமிக்கிறது. மயிலை வைகா¢ என்றால் முட்டைதான் மத்யமா.
மத்யமா நிலையில் இருக்கும் எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், வைகா¢ நிலையில் உணரலாம். யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.

இதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டு. அதை "பஸ்யந்தி" என்று கூறுவார்கள்.
மத்யமா நிலையில் பா¢ணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில் விளங்கும்.
இந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்று.
விதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.

இதற்கும் அடிப்படையான ஆதார நிலையை "பரா" வாக் என்பார்கள். முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அது. யோக நூல்கள் பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும். ஆலவிதையிலிருந்து முளை தோன்றி, அது செடியாகி, அதன் பின்னர் தண்டு, கிளை, கொப்பு, காம்பு, இலை, விழுது, என்ற முழு ஆலமரமாகப் பா¢ணமிக்கின்றது அல்லவா?

ஆலவிதை - பரா
முளை - பஸ்யந்தி
செடி - மத்யமா
ஆலமரம் - வைகா¢

இப்படியாகத்தான் எண்ணம், பேச்சு, எழுத்து எல்லாம் தோன்றுகிறது. மாபெரும் யோகியரே பஸ்யந்தி, பரா வரைக்கும் சென்று வாக், எண்ணங்களை உணரமுடியும். அப்படிப்பட்டவர்கள் பரா நிலையிலேயே எண்ணத்தின் பிறப்பை நிறுத்தி விடுவார்கள்.

இந்த நிலைதான் "சும்மா" இருக்கும் நிலை.

"சொல் அற; சும்மா இரு!" என்பது அருணகி¡¢யாருக்கு முருகன் கூறிய உபதேசம். அந்த மாபெரும் பொருள் அறியமுடியவில்லை என்று அருணகி¡¢யார் கூறுகிறார்.

எண்ணங்களை அற்றுப்போகச் செய்ய வேண்டுமானால், முதலில் வைகா¢யை அடக்கி, மத்யமாவை அடக்கி, பஸ்யந்தியையும் அடக்கி, முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.

இவ்வாறு செய்யும் அதே நேரத்தில் "மனஸ்" எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கி விடும். ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும் நிலவ மாட்டா. புத்தி, சித்தம், அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும்.

மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட இருக்கமாட்டாதே? ஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாது, பதிப்பிக்கப்படவும் மாட்டாது.

இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.

நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?

இதைத்தான் "சும்மா" இருத்தல் என்பார்கள்.

"தி¡¢புடி ஞானம்" என்று ஒரு விஷயம் இருக்கிறது. காண்பான், காணும் செயல், காட்சிப்பொருள், இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்; இதைத்தான் தி¡¢புடி என்பது.

சும்மா இருக்கும்போது தி¡¢புடி ஞானம் அற்றுப் போய்விடும்.

மனசு இயங்கும்போது உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். உணர்வு இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும்.

ஆனால், உணர்வு, மனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும் நிலை ஏற்படமாட்டாது. சும்மா இருக்கும்போதோ மனசு, உணர்வுகள் இரா.

ஆகவேதான் சும்மா இருக்கும் தன்மை எப்படியிருக்கும் என்பதனைச் சொல்ல முடியாது.

"கண்டவர் விண்டதில்லை;
விண்டவர் கண்டதில்லை"

நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை;
வாக்கும் இல்லை, மனமும் இல்லை;
இரவும் இல்லை, பகலும் இஇல்லை.

அது ஒரு Twilight Zone.

"வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே
எந்தன் உள்ளம் தெளிவித்து"
ஒளவையார்

ஒளவையார் "விநாயகர் அகவ"லில் மேற்கூறியவாறு சொன்னவாக்கும் மனமும் இல்லாத நிலைதான் "சும்மா இருப்பது".

"ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச்சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?"

                =பத்திரகி¡¢யார்

அந்தத் தூங்காமல் தூங்கும் நிலையும் அதுதான். ஐம்புலன்களின் செயல் பாட்டினை நிறுத்தினால் ஆங்காரமாகிய "தான்" என்னும் உணர்வு இருக்கமுடியாது அல்லவா?

"வேட்டை பொ¢தென்றே, வெறி நாய் துணை கொண்டு,
காட்டில் புகுவேனோ? கண்ணே, ரகுமானே!"
                - குணங்குடி மஸ்தான்

ஐம்புலன்களை மஸ்தான் சாகிபு வெறிநாய்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். இதனை "ரகுமான் கண்ணி" என்னும் பகுதியில் காணலாம்.

அவர்கள் யோகியராக இருக்கட்டும்; Sufiக்களாக இருக்கட்டும்; யூத Essenes ஆக இருக்கட்டும்; Augustine, St.Theresa போன்ற Christian Mystics ஆகவோ, சீன Taoist ஆகவோ, Zen பெளத்தராகவோ, அல்லது நம் தமிழ் சித்தர்களாகவோ இருக்கட்டும். யாராகவே இருந்தாலும் அவர்களுடையது ஒரு common மொழி.

அதுதான் "சும்மா இருக்கும்" மொழி.

"மோனம் என்பது ஞானவரம்பு".



சும்மா - 2

சும்மா
#2
வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

இந்த “சும்மா” என்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது?
ஒரு பொ¢ய விசேஷம் உண்டு.
உண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது.
இதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும், எண்ணங்களின் பிறப்பையும் சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.
முதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.
பண்டைய இந்திய வல்லுனர்கள், உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக் கண்டனர். மனசு, சித்தம், புத்தி, அஹம்காரம் எனபவையே அவை.
மனசு:
“மனசு” – புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும் இது வாங்கி, உடலின் இயக்கங்களோடு தொடர்பு படுத்தும். அதனிடம் வந்து சேரும் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும். பல நூற்றுக்கணக்கான தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டேயிருப்பதால் அது சதா சலனத்திலேயே இருக்கும்.
நினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்து, மனசில்தான் பரவி, விரவி, மின்னி, மறையும். அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை. முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாது. மனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான் மனசு எடுத்துக்கொள்ளும்.
ஏதோ ஒரு நல்லது,கெட்டது, இன்பமானது, ஆபத்தானது, துன்பமானது என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ளும். மூளையின் Reptilian Brain பகுதியும் ஓரளவிற்கு இந்த மாதி¡¢தான்.
மனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன். அங்குதான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தொ¢யும். நாம் முழு உணர்வுடன் விளங்கும் full-conscious stateஐ மனசு manifest செய்கிறது.
மனசு, உணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும், உதைக்கப்படவும் கூடியது.
“சித்தம்” என்பது சற்று சிக்கலானது. உணர்வுகள், நினைவுகள், ஞாபகம், போன்றவற்றின் அடித்தளம். இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும். ஆற்றின் அடிமட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைதான் சித்தம் என்று கொண்டோமானால், அதன்மேல் ஓடும் ஆற்று நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள், சுழற்சிகள், அலைகள், குமிழிகள் போன்றவை மற்ற அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.
This is a huge pool of sensory impressions and data.
உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ண எழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு வரும்.
அதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போது, தன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல் நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற்கனவுகளையும் மேலே அனுப்பும். அவை மனசின் மேற்பரப்பில் குமிழிகளாகத் தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.
சில சமயங்களில்,
“அந்த நாள் ஞாபகம் இந்த நாள் வந்ததே!
நண்பனே!
நண்பனே!
நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே?
அது ஏன்? ஏன்? ஏன்?
நண்பனே!”
என்று சிம்மக்குரலெடுத்துப் பாட வைக்கும்.
“அஹம்காரம்”-
சாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள். ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும். அவ்வாறல்ல.
“நான்” என்னும் தன்மைதான் அஹம்காரம்.
நம்முடைய ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது அல்லவா? ஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல், தொடர்புகள், உறவுகள், விருப்புகள்,வெறுப்புகள், அடையாளங்கள் முதலியவற்றை வைத்துத் தன்னையே “தான்”, “நான்”,”எனது” என்று தன்னிலைப்படுத்திக் கொள்ளும். அந்தப் பிறவியில் அந்தக் குறிப்பிட்ட தன்மைகளே சாஸ்வதமானவையாகவும் நிச்சயமானவையாகவும் தோன்றும். ஆனால் அதன் முற்பிறவியில் முற்றிலும் வேறு தன்மைகளையும் அடையாளங்களையும் கொண்டதாக விளங்கியிருக்கும். மனிதனாகவே பிறந்தாலும் கூட ஊர், பேர், உறவு, சொந்தபந்தம், விருப்புவெறுப்பு, ஆற்றல், படிப்பு, இனம், மொழி,என்றவாறு முற்றிலும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டதாக அந்தப் பிறவி விளங்கக்கூடுமல்லவா?
அடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம்.
ஆனால், ஒரே ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த ஆன்மா உணரமாட்டாது. அதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும். இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.
“அதாண்டா, இதாண்டா, அருணாசலம் நான்தாண்டா”
என்று தன்னையே எல்லாமாக அறிந்து, எல்லாவற்றிலும் தன்னையும், தன்னில் எல்லாவற்றையும் கண்டு, தானே அந்த அருணாசல பரசிவமான பிரம்மம் என்ற பிரம்மஞானமெல்லாம் ரஜினியைப் போன்ற SUPERMANனுக்கே தோன்றக்கூடும்.
“புத்தி” என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது/கெட்டது, நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள், தீர்மானங்கள், தர்க்கங்கள், நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும். நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பது, அளவெடுப்பது, கவனிப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும். நம்முடைய சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும். அழகுணர்வு, இசை ரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.
சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும். சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும், ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
இதையெல்லாம் யோக சாத்திரத்தில் காணலாம். ஆனால், பதஞ்சலி முனிவர், தன்னுடைய அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லை. அவர் ஒட்டுமொத்தத்தில் “சித்தம்” என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.
“யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ”,
என்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.
பல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், “சித்தம், “மனது” என்பனவற்றுக்குப் பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)
ஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.
எண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.

சும்மா -1

சும்மா
#1


வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
கடாரத் தமிழ்ப் பேரரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 

    ஒரு குறிப்பிட்ட ஆதீனத்திற்குட்பட்டு கோயிலொன்று இருந்தது. அந்தக் கோயிலின் கணக்குகளைப் பா¢சோதிப்பதற்காக ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் அங்கு வந்தார். கணக்குச் சுவடிகளைப் பார்க்கும்போது, அன்றாடப் படித்தரக் கணக்கு ஏடு வந்தது. அதில் கோயிலில் தினப்படிதரமாக வழங்கப்படும் பட்டைச் சோறு பெறுபவர்களின் பட்டியலும் இருந்தது. அதில் ஓ¡¢டத்தில்,

"சும்மா இருக்கும் சோற்றுப்பண்டாரத்துக்குப் படிதரம் பட்டை ஒன்று" என்று இருந்தது.

    கட்டளைப் பண்டாரத்துக்குக் கோபம்.

    "ஏனய்யா? அதென்னைய்யா அது? 'சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரம்'? அப்படி என்னைய்யா அந்தப் பண்டாரம் செய்கிறான்?" என்று கேட்டார்.

    "அவர் ஒன்றும் செய்வதில்லை. சும்மாதான் இருப்பார். படிதரம் கொடுக்கச் சொன்னது பொ¢ய சந்நிதானம்." என்றார் கோயிலின் கா¡¢யஸ்தர்.

    மிக ஆத்திரமாக வெளியேறிக் கட்டளைத்தம்பிரான் நேரே பொ¢ய சந்நிதானமாகிய ஆதீனகர்த்தா¢டம் சென்று முறையிட்டார்.

    முடிவில்,
    "இதென்ன அக்கிரமமாயிருக்கிறது? சும்மாயிருக்கிறவனுக்கெல்லாம் சோறு போட இங்கென்ன கொட்டியா கிடக்கிறது?" என்றார்.

    ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் ஒருவித மர்மப்புன்னகையுடன் அவரைப் பார்த்தார்.

    மெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,
    "வாரும். இவ்விடம் இரும்.ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே சிந்திக்காமல், எண்ணமிடாமலிரும். எதையும் நினைக்கவும் கூடாது. இரண்டு மணி நேரம். இது என் கட்டளை."

    ஐந்து நிமிடம்.... பத்து நிமிடம்.... இருபது நிமிடம்..... எழுந்தார் கட்டளைத் தம்பிரான். கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடி கீழே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்.

    எழுந்தார்....
    ஓடினார்....
    ஓடினார்.....
    புலம்பிக்கொண்டே ஓடினார்.....
    "பேய்மனம்... பாழும் மனம்.... மனக்குரங்கு...."

    நேரே கோயிலுக்குச் சென்றார்.

    கணக்குச் சுவடியை எடுத்தார்.

    திருத்தி எழுதினார்.

    "சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரத்திற்குப் படிதரம் பட்டை இரண்டு!"


    சும்மா#2

    அது சா¢.

    சும்மா இருப்பதில் அப்படியென்ன சிறப்பு?

    இந்த "சும்மா" என்ற சொல்லை நாம் பல பொருள்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த சொல்லை எனக்குத் தொ¢ந்து முதன்முதலில் பயன்படுத்திய பட்டினத்தாரும் அவரைத் தொடந்து வந்தவர்களும் யோகியரும் ஞானிகளும் முற்றிலும் வேறான பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    இறைவனே குருவாக வந்து உபதேசம் தரும் பேறு பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் கண்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனன், ஸ்ரீமன்நாராயணனிடம் அஷ்டாட்சரத்தை உபதேசமாகப் பெற்ற திருமங்கையாழ்வார்("தாயினமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்"); சிவனிடமிருந்து வாங்கிய மாணிக்க வாசகர்; வினாயகா¢டமிருந்து பெற்றுக்கொண்ட ஒளவையார் போன்றவர்கள். முருகனிடமிருந்து உபதேசம் பெற்றவர்களில் ஒருவர் அருணகி¡¢நாதர்.

    இளமையில் playboy ஆக விளங்கிய அருணகி¡¢, தொழுநோயால் அவதியுற்று, மனம் வெறுத்து, திருவண்ணாமலைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்தார்.

    அப்போது முருகன் ஓர் ஆண்டிக்கோலத்தோடு வந்து அவரை ஏந்தித் தாங்கிக் கொண்டார்.

    உயிரை வெறுத்திருந்த அருணகி¡¢ தாம் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். முருகன் சொன்னது.....

    சுருக்கமான இரண்டே வா¢கள்....,

    "சொல்லற!
    சும்மா இரு!"

    அவ்வளவே.

    அதன் பொருளை அவரால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டார். அவருடைய வாழ்க்கையில் அவரால் இயற்றப்பட்டவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, மயில்விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்பு. இறுதியாக அவர் பாடியது கந்தர் அனுபூதி.

    அதில் அவருடைய ஆத்மானுபவங்களை 51 பாடல்களாக அப்படியே வடித்திருக்கிறார். ஐம்பத்தோராவது பாடலில் தம்முடைய குருவாகிய முருகனை நாடி,

    "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"

என்றவாறு பறந்து சென்று விட்டார்.

    பன்னிரண்டாம் பாடலில் அவர் பெற்ற உபதேசத்தைக் குறிப்பிடுகிறார்.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளன்றும் அறிந்திலனே!"

இது அருணகியார்.

    "சும்மாயிரு. சொல்லற" என்ற சொல்லின் பொருளை அறிந்துகொள்ளவே முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.

    அவர் மட்டுமா?
    பட்டினத்தாரும்தான்.

"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"

                - பட்டினத்தார்

    சும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.

"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்!
சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவா¡¢யே!"

    சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா?
    அதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!

                - தாயுமானவர்

    மதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

    ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!

    அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!

    ஆளை விடு.


DISCUSSION REGARDING MUKTHI AND SIDDHI



Dear sir 

If we are able to reach the point where body conscious is lost then we can experience the all about the truth. unarvuru unarvellam kadantha arutperumjothi as said by vallalar. everythings arises from nothing and settles in nothing. The sound starts from the silence and settles in the silence. The light starts from the darkness and settles in darkness. Likewise thought starts from thoughtless area. Which one is permenent is the sound or silence. is the light or darkness.is the thought or thoughtless area. The silence The darkness The thoughtless area are the permenant structures others are all temperory structures. If you are in thoughtless area will you able to feel the body and what is happening in the world?. So what we are talking about the events occuring in this world are temperory not permenant. If we are able to stay in that silent, dark, thoughtless area we are there in the ether. 


We the souls are always in the ether but the ignorance (ARIYAMAI ) that we are this body only pulls you from that state of ether to this body conscious and towards the bonds between the body and this world. If we are able to remove this ignorance that is this body consciousness is not us we are soul we will not die or destroyed there is nothing morethan this soul. then only we can attain siddhi. Here anatomy or physciology of body will not workout to any extent. If we are able to see without this eyes and hear without this ears and tasting without this tongue and feel the pleasure (ANANDHAM) without this mind is the state of soul consciousness and if you go beyond this we can reach the truth. The ignorance(ARIYAMAI) of the athma (soul) not the ignorance of mindconsciousness should be washed out by ARIVU ( THE SUPREME) then this body disappears completely and the soul will reach SIDDHI. 

In samadhinilai the the body will be detached and soul will go off. But samadhi is prior step to SIDDHI. Thatis why we can see many samadhis for one single person in different places. That person will take different bodies and gets samadhi in different places till he reaches SIDDHI.

Till the ignorance of the soul is completely washed. After that they wont comeback. That type of persons are called SIDDHARS ( one who attained siddhi) before that we should not call persons as siddhars.

So even the prasatham (viboothi or kunguman ) comes from any person is not to be considered as precious one. All person will be protected only by the supreme sitting inside the soul not in the mind and so he will not protected by any sami or any asami. If death comes to any person it cannot be controlled by any sami or any asami. Please why i am trying to stress this word this is the point where we are slipping we will have wrong faith that the person has enormous power so that he can safeguard ourself from the sorrows and sufferings. Why all superior persons giving viboothi why not a bag of cash. Why they are collecting money for charity.they are superior powers why not they give money or goldcoin to all who ever comes to see him always. They cannot run all charity homes without the help of these silly humanbeings. Why this is not happening anywhere. Please realize the truth what is happening around us. Dont go behind any persons or worship any persons photo as god. The supreme is sitting inside us and also around us. It has no necessity for him to come in the name of samiyar, gurus, and siddhars. The siddhan is sitting inside us and also around us. We should have the faith and unbreakable wish towards that siddhan then only we can reach him.

Soul is the common word for all livingbeings. Is there any special name for the soul of bird,pig or humanbeing. Be good and do good to others. Dont giveway to any persons to lute our wealth,health, and precious time in the name of charity or in the name of god or in the name of guru. If we want to do something to others do it by yourself directly. It will give you more worthfull effect towards our karma. If for a big organisation, be sure that they are doing it in proper structure.

WITH REGARDS,
UYIR.


Mind works at three levels - instinct, intellect and intuition.

The human mind works at three levels: instinct, intellect and intuition. When you work through instinct, your mind decides subconsciously or unconsciously, as in the case of an animal. However, this is the nature of a human being and it makes you unhappy. This instinctive response from the unconscious is very much faster than the conscious mind response, and can be very useful when we are in dangerous situations. Most other times, these responses are negative and based on embedded memories that drive us into irrational decisions. We respond as animals. Most such responses result in actions that leave us drained.



From the days of Descartes, we believe in working through our intellects. But when we work through the intellect, we work at a conscious level but not energetically, not enthusiastically; we work mechanically; like a programmed robot, a computer.

When you work at the third level, at the level of intuition, however, you suddenly know what is right though you may not know how; more importantly you feel energised. You are presented with many choices, and suddenly one pops up. Intuition gives you the power to decide and the energy to implement. You are presented with many choices, and suddenly one pops up. Intuition gives you the power to decide and the energy to implement.




Be very clear, if you feel guilty about a decision that you have just made you have operated out of instinct; if you are confused about that decision, you have operated at intellect level. Intuition alone will help you to be clear and also provide you the energy to go ahead. The benchmark of intuition is happiness, satisfaction inside as well as outside.

How to awaken this intuition? All you need to do is to give your conscious mind a rest. You may ask, how. There is a state of mind in which we are self-aware but exist without thoughts. Western science or psychology has no term for this. This is what Hindu sages called the turiya or samadhi state, which is one of deep meditation. You live here intuitively.

Whenever you find time, give appointment to yourself; some part of your being wants to express itself more. Give yourself 30 minutes everyday to meditate. It takes only two or three days of meditation to tune you into this higher energy of intuition and creativity.

Thank : https://awarenessforwisdom.blogspot.com


Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Wednesday, May 28, 2014

Himalaya Guru's wellcome HIM

 Sorry to say my periyappa Swami Gangandapuri pass away today morning ( 28/5/2014 ) at Uttarkasi - Himalayas, from where the holy river Ganga flowing 

We all pray spiritual Guru's in Himalaya for him ....... 

About him... Blissful-son-of-himalaya 




Monday, May 26, 2014

How can I find a spiritual master (guru) ?

How can I find a spiritual master (guru)?

Finding a spiritual teacher is serious business, but it’s not impossible. Every human being is supposed to have a spiritual master. It’s said that when the student is ready, Krishna gives a teacher, and then the teacher gives him Krishna.
Bhagavad-gita courseTo find a teacher, it helps to know what the qualifications of a teacher are. It also helps to know what the qualifications of a student are, since, if you’re not really interested in doing what it takes to pursue a path of spiritual knowledge, better to be honest and wait until you are before you seriously accept a guru.
Finding and accepting the guidance of a spiritual teacher requires that you be serious about learning, and willing to make that learning a priority.
There are many kinds of spiritual teachers. In one sense, there’s something we can learn from everyone, so everyone is our guru.
In another sense, there are people whom we deeply respect and trust, who amplify the voice of Krishna within our heart. For a successful spiritual life, we need people who help us understand Krishna's teachings, which come down throughout history from master to disciple. The person most responsible for translating and distributing Krishna's teachings in the present day is Srila Prabhupada. The better we understand his writings, the more likely it is we’ll be able to see how to apply Krishna conscious principles in our life.
Bhagavad-gita course
To find a spiritual teacher, it can help to have recommendations from trusted devotees, and testimonials (if available) from other students and disciples. Accepting a spiritual master is a lifelong commitment, and the more we know a person, the better we’ll be equipped to make a choice about entering such a relationship with them.
In general, it is very helpful to have relationships with our spiritual elders, especially people whom we are inspired by and whose advice we naturally seek. It’s very helpful to offer service to our respected superiors and seek their good wishes. It is by the good wishes of Krishna’s devotees that we are able to make any progress at all in our spiritual lives.
If we ourselves are following the process of Krishna consciousness, learning as much as possible about the qualifications of a spiritual master, and what’s expected of us as students, over time we will develop relationships with a healthy variety of spiritual teachers. From these relationships it will eventually become clear who inspires us the most in our spiritual practice.
thank: https://www.krishna.com/


Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்


                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Saturday, May 24, 2014

Mystic Selvam aanmiga Tip

Book: Aanmiga payanam Vol 2 page197...

நமது ஆன்மீக வழிகாட்டி  - திரு.மிஸ்டிக் செல்வம் 
[ Mystic Selvam ]

https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html

Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Friday, May 23, 2014

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள்



சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள கல்லூரி மாணவர்களே! பெற்றோர்களே!


ஆண்டுதோறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்...கிவரும் மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் அதற்கான விண்ணப்பங்களை வழங்கிட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒருநாள் மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும்


சென்னை மற்றும் அருகாமை மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வழங்குகின்றது. விண்ணப்பம் நிரப்பி திரும்ப ஒப்படைத்து பதிவு செய்துகொள்ளும் அனைத்து மாணவர்களும் கல்லூரிப் படிப்பு முடியும் வரை இலவசமாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளல்லாம்.


ஒருநாள் மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்
நாள் ; 01-06-2014 ஞாயிற்றுக் கிழமை
நேரம் ; மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மட்டும்


SSDA புத்தக வங்கி
மாணவர் திறன் மேம்பாட்டுக்கழகம்
44 சீனிவாசப் பெருமாள் கோவில் 3 - வது தெரு
திருவொற்றியூர்
சென்னை 6000019


(வெள்ளையன் செட்டியார் பள்ளி எதிரில்)


முன்பதிவு செய்ய மாணவர் பெயர் தந்தை பெயர் முகவரி sms மூலம் அனுபிட 9941357720, 9444124519


முன் பதிவு செய்து விட்டு வரும் அனைவருக்கும் விண்ணப்பம் கிடைக்கும்.


விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைத்து பதிவு செய்துகொள்ளும் அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் படிப்பு முடியும் வரை புத்தகங்கள் வழங்கப்படும்
உங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் யாருடைய பிள்ளைகளுக்கும் தகவலை பரப்புரை செய்யுங்கள்


பாலசுப்ரமணியன் 9444305581
தலைவர்
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம்





Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Wednesday, May 21, 2014

ஆச்சார்யன் - குரு

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? இந்த பதிவுல குரு உம்மாச்சியை பத்தி நாம எல்லாரும் கொஞ்சம் பாக்கலாமா?

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.



குரு - அப்படின்னா ஆசிரியர், ஆசான் அப்படின்னு பல வார்த்தை ப்ரயோகங்கள் இருக்கு. எந்த ஒரு கார்யமானாலும் கணபதிக்கு அடுத்தபடியா நாம ப்ரார்த்தனை பண்ண வேண்டிய ஒரு உம்மாச்சி இந்த குரு. ‘உம்மாச்சியே உலகத்துல கிடையாதே!’னு வாய் வலிக்காம சொல்லிக்கர சில மனுஷா கூட தான் இன்னாருடைய சித்தாந்தத்தை பின்பற்றி நடக்கறேனாக்கும்!னு தன்னுடைய குருவின் பெருமையை சொல்லாம இருக்கமாட்டா. அப்பேற்பட்ட மஹாத்மியம் உள்ள உம்மாச்சி இந்த குரு. 

குரு-ங்கர சப்தத்துக்கு பக்கத்தில் அழைச்சுண்டு போறவர்நு ஒரு அர்த்தம் உண்டு. எதோட பக்கத்தில் அழைச்சுண்டு போவார்?னு நாம திருப்பி கேட்டோம்னா, அது நமக்கு வாய்ச்ச குருவை பொறுத்து வித்யாசப்படும். நாம போகும் போதே ஐஸ்வர்யங்களை நினைச்சுண்டு போறோம், நிறையா காசு பணம் வரனும், அழகு சுந்தரியா ஆத்துக்காரி வரனும், லட்டு மாதிரி குழந்தேள் பொறக்கனும், அரண்மனை மாதிரி வீடு கட்டனும்(முக்கியமா பக்கத்தாத்தை விட அழகா இருக்கனும்),படிச்ச படிப்பை விட பெரீய உத்யோகம் கிட்டனும் இப்படியெல்லாம் நம்ம ப்ரார்தனை இருக்கர்துனால அதுக்கு செளகர்யமா உள்ள குருவா நாம தேட வேண்டி இருக்கு, யாராவது பிரம்மத்தை தெரிஞ்சுக்கனும், நல்ல சித்தாந்த ஞானம் வரனும், திருப்தியான மனசு வேணும்! அப்படியெல்லாம் யோசிக்கரோமா? ஒரு கதை உண்டு, 

சுப்புணி மாமா நு ஒரு மாமா இருந்தாராம், அவருக்கு குடும்பம், பந்த பாசம் எல்லாம் விட்டுட்டு காட்டுக்கு போய் தபஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருந்துதாம். ஒரு நாள் மத்யானம் நன்னா சுகமா அவாத்து மாமி சமையலை சாப்டுட்டு ஈச்சர் சேர்ல தாச்சுண்டு இருக்கும் போது, தனக்கு தானே சொல்லி பாத்துண்டாராம், ஏ சுப்புணி! உன்னோட பொறுப்பு எல்லாம் கழிஞ்சுருத்துடா! மூத்த பையனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியாச்சு, இளைய பொண்ணை MS படிச்ச ஒரு US மாப்பிள்ளை(இளிச்சவாயன்) தலைல கட்டியாச்சு, பாக்யத்துக்கும்(அவாத்து மாமியோட பேரு)கடைசி காலம் வரைக்கும் காணர மாதிரி ஸ்டேட் பாங்கல FD போட்டு வெச்சாச்சு, இனிமே தைரியமா நாம காட்டுக்கு போய் தபஸ் பண்ணலாம்!னு தனக்கு தானே சொல்லிண்டாராம். 

காட்டுல குளுருமே?னு யோசிச்சுட்டு நல்ல கம்பளி போர்வை மேலும் இன்ன பிற சாமான் செட்டெல்லாம் எடுத்துண்டு காட்டுக்கு போகர்துக்கு ரெடி ஆனாராம், எல்லாம் ரெடி பண்ணி முடிக்கும் போது மத்யானம் 3 மணி ஆயிடுத்தாம், யே பாக்யம்! நான் காட்டுக்கு போய் தபஸ் பண்ண போறேன்டி!னு பெருமையா சொன்னாராம். அரை தூக்கத்துல இருந்த பாக்யம் மாமி, 'எங்க வேணும்னாலும் போய்ட்டு வாங்கோ! என்னோட ப்ராணனை வாங்காம இருந்தா சரி!'னு சொல்லிட்டு அந்த பக்கமா திரும்பி படுத்துண்டாலாம். சுப்புணி மாமா விடாமா, 3 மணி பால்காரன் வர நேரம் ஆகர்து! ஒன்னோட கையால ஒரு காபியை போட்டு தந்தைனா தெம்பா குடுச்சுட்டு போவேன்!னு அவர் சொன்னதுக்கு மாமிடேந்து பதிலே வராததால சரி கிளம்புவோம்!னு கிளம்பி வெளில வந்தாராம். வாசல் வந்தவர் அங்க வெளில இருந்த வெண்கல சொம்பை பாத்துட்டு, யே பாக்யம்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன்டி! வெண்கல சொம்பை அச்ரத்தையா வெளில வெக்காதீங்கோ! வெக்காதீங்கோ!னு, வெண்கலம் விக்கர விலைல திருப்பி வாங்க முடியமா?னு சொல்லிட்டு, இப்படி போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு) இல்லாம இருக்கர இவாளை நம்பி நான் எப்படி காட்டுக்கு போக முடியும்!னு சொல்லிண்டே ஆத்துக்குள்ள போய்ட்டாராம். இந்த மாதிரி சுப்புணிகள் அவாளுக்கு ஏத்த மாதிரியான குருவைதான் செலக்ட் பண்ணிப்பா.


குருங்கப்பட்டவருக்கு வயசு வரையறை எல்லாம் கிடையாது, தன்னோட கைல இருக்கர நல்ல சாமானை அடுத்தவாளுக்கு சிரிச்ச முகத்தோட ஒரு குழந்தை கொடுக்கர்தை நாம பாத்துட்டு நாமளும் அந்த குணத்தை கத்துண்டோம்னா அந்த குழந்தை நமக்கு குருதான். ஊருக்கு வெளில 3 கிலோமீட்டர் இடத்துல ஒரு ஆசிரமும், 4 அடிக்கு தலைல முடியும், வெண்ணையா ஒரு முகமும் இருந்துட்டா அவர்கள் எல்லாரும் ஆச்சார்யன் ஆகிட முடியாது, அதுக்கு ஒரு பாரம்பர்யம், பல வித்யைகளில் தேர்ச்சி, 'தான்' என்னும் எண்ணம் கிஞ்சித் அளவும் இல்லாத உயர்ந்த அறிவு உள்ளவரா இருக்கனும். அந்த மாதிரி ஒரு நல்ல குரு கிடைக்கர்துக்கும் யோகம் இருந்தாதான் கிடைக்கும். 

ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆச்சார்யன்! ஆச்சார்யன்!னு ரொம்ப சிலாகிப்பார்கள். ஸ்ரீவித்யா உபாசனையிலும் குருவுக்கு மகத்தான ஒரு இடம் உண்டு. முக்கியமா சொல்லனும்னா சீக்கியர்களுக்கு அபாரமான குருபக்தி உண்டு. எது கிடைச்சாலும் குருவின் கருணை!னு நினைக்கும் மனோபாவம் அவாளுக்கு உண்டு. ஸிம்மம் மாதிரியான வீரம், ஆக்ரோஷம் உள்ளவாளா இருந்தாலும் குருவிடம் அவர்களை போல ஒரு பவ்யம் பாக்க முடியாது. 

சில குருமார்களோட பெருமையை பாத்தேள்னா அது அவாளோட சித்தாந்தத்தால மட்டும் இருக்காது, அந்த ஆச்சார்ய புருஷர்களோட உயர்ந்த சீலத்தால பல நூற்றாண்டுகளுக்கு அவாளோட கீர்த்தி நிலைச்சு இருக்கு. உதாரணத்துக்கு ஸ்ரீஆதிசங்கரர்,ஸ்ரீராமானுஜர்,ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்,ஸ்ரீ ஷீரடி சாய்பாபானு பல அவதார புருஷாளை சொல்லிண்டே போகலாம். சரி ஒரு குரு உம்மாச்சி ஸ்லோகம் பாப்போமா இப்போ?



குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!

(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)

thank : https://ummachikappathu.blogspot.com