Thursday, August 21, 2025

மந்திரத்தை எண்ணுவதற்கு ...

காயத்ரி மந்திரத்தை எண்ணுவதற்கு, வலது கையின் மோதிர விரலின் இரண்டாம் கணுவில் தொடங்கி, சுண்டு விரலின் முதல் கணு வரை எண்ணி, பின் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதி வரை எண்ணுவார்கள். இவ்வாறு ஒரு சுற்றில் 10 முறை எண்ணலாம். ஒரு கையை பத்தாக பயன்படுத்தி, மறு கையை கொண்டு பத்து பத்துகளாக எண்ணி 100 வரை எண்ணலாம். பிறகு 100ஐ ஒரு குறியீடாக வைத்து, 1000 வரை எண்ணலாம், என்று ஒரு இணைய பக்கம் கூறுகிறது. 
வலது கை:
மோதிர விரலின் இரண்டாம் கணுவில் இருந்து எண்ணத் தொடங்குங்கள். 
சுற்று:
சுண்டு விரலின் முதல் கணு வரை எண்ணி, பின்னர் ஆள்காட்டி விரலின் அடி வரை செல்லவும். இது ஒரு சுற்று (10 எண்ணிக்கை) ஆகும். 
100 வரை எண்ணுதல்:
வலது கையில் 10ஐ எண்ணிய பிறகு, இடது கையை பயன்படுத்தி, பத்து பத்துகளாக எண்ணி 100 வரை எண்ணலாம். 
1000 வரை எண்ணுதல்:
100ஐ ஒரு அடையாளமாக வைத்து, 1000 வரை எண்ணலாம். 
கைகளை மறைத்தல்:
எண்ணும்போது, கைகளை மேலாடையால் மறைப்பது நல்லது, என்று ஒரு இணைய பக்கம் கூறுகிறது. 
சகஸ்ர காயத்ரி ஜபம்:
ஜபமாலை இல்லாமல், காயத்ரி மந்திரத்தை 1000 முறை எண்ணுவதற்கு இந்த முறை

Saturday, August 2, 2025

The Man who Transformed a wedding Feast into a Movement.... Dr crs ( Chellamuthu Trust and Research Foundation)

Faith in Action: The Man Who Transformed a Wedding Feast into a Movement Dr. CRS

When culture, tradition, and devotion (Bhakti) converge, miracles unfold. Every year, as summer approaches, the city of Madurai prepares for the Meenakshi Sundareshwarar Tirukalyanam, a grand celebration of the celestial wedding of Meenakshi and Sundareshwarar. And where there is a wedding, there is a feast.

For the past twenty-five years, on the day of this fervently celebrated wedding, over a hundred thousand people in and around Madurai are served food as part of the festivities. This year, for example, a bustling community kitchen was set up at Sethupathy High School in Madurai, managed by a dedicated team of volunteers. Some volunteers contribute their time, chopping vegetables, cooking, serving, and cleaning, while others donate food items. The entire process adheres to the highest standards of hygiene and cleanliness.

Despite the scale of this massive operation, it runs seamlessly. The kitchen receives around 5,000 kg of rice, 12,000 kg of vegetables, 120 cans of oil, 1,000 kg of sugar, 300 kg of garlic, 1,000 kg of onions, and 4,000 kg of ghee. The feast includes a variety of mixed rice, vegetable side dishes, chutneys, and sweet Pongal, creating an atmosphere of joy and festivity. As the lines of people outside grow, food is swiftly transported to the dining area.
However, the behind-the-scenes story of Thiru Chamundi Vivekanandan, whose vision, generosity, and charitable spirit drive this effort, is less known. Vivekanandan, however, insists that this is a wedding feast (Kalyana Virundhu) and not charity (anna danam). This event has even set a world record for a community feast.

I first met Vivekanandan twenty-five years ago when he sought my professional help for a family member with a mental health condition, who has since recovered. Our relationship grew and deepened through numerous interactions over the years.

He established a betel nut business near the Meenakshi temple. He initially offered food to a small group of people during the Meenakshi wedding, but his efforts faced strong opposition from those who resented an "outsider" taking such initiatives. Undeterred, Vivekanandan pursued legal action and won the case. A deeply religious man, he had made the annual pilgrimage to the Ayyappan temple since 1967.

During the COVID-19 pandemic, Vivekanandan generously provided food to patients and staff at hospitals, as well as residents at Bodhi and Trishul, units of the MS Chellamuthu Trust and Research Foundation. When he was diagnosed with COVID-19, he chose to be admitted to Ahana Hospitals, the clinical services wing of MSCT&RF, rather than more prominent hospitals. Even while on a ventilator, his concern for ensuring that food reached Bodhi and Trishul on time deeply touched me.
Vivekanandan passed away due to COVID-related complications at Ahana Hospitals. His legacy is now being carried forward by his son, an IT professional who has dedicated his life to his father's sacred cause.

Chamundi Vivekanandan's life was his message. He embodied the principle of being the change one wants to see in the world. His remarkable blend of religion, charity, and social commitment sets a standard worthy of emulation. 

Tuesday, July 22, 2025

ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 24/07/2025

ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 24/07/2025 ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து..
அன்படையீர் .. அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 24/7/25 ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் இராமகிருஷ்ண மடத்தில் நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் சிறப்பு விருந்து மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பணி சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். " பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை " Regd.No 32/16 C/o சாமுண்டி பாக்கு New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு மதுரை -625 001 cell: 9442408009

Thursday, July 17, 2025

நாக சதுர்த்தி பற்றிய

நாக சதுர்த்தி பற்றிய ரகசியங்கள்
        
நம்முடைய சித்த ரிஷிகளை போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் ரிஷிகள்.

தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் வாங்குவது என்பதை பல வடிவங்களில் சொல்லிக் கொடுத்தார்கள்.

நம்முடைய யோக கலாச்சாரம் எப்போதும் சூட்சும வடிவங்களை மானிடரை அண்டியிருக்கும் சில உயிர்களோடு, அதன் தன்மையோடு சுட்டிக்காட்டி இந்த வடிவில் வணங்க சொல்லுவது. காரணம், மனிதனுக்கு சில விஷயங்கள் புரியாது, உதாரணமாக, இன்றுள்ள மின்சக்திக்கோ, மின் காந்த அலை சக்திக்கோ அவனால் உருவம் கொடுக்க முடியாது. அதுவே சிரமம்; அப்படிக் கொடுத்தாலும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. மானிட வாழ்விலும் அதனால் லவுகீக பலன் இல்லை.

இதனாலே எப்போதும் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத சூட்சும சக்திகளுக்கு வடிவம் கொடுக்கும் போது, மானிட லவுகீக உயிர்கள் ஒன்றின் இயக்கமும் அந்த சக்தியின் இயல்பும் பொருந்திப் போவதை கண்டு மிக நுணுக்கமாக அதற்கு அச்சக்தியின் பெயரைச் சுட்டிக்காட்டினார்கள். இதனால் மானிடருக்கு சூட்சும சக்திகளின் ஆசியும் கிடைத்தது, அப்படியே லவுகீக காரியங்களும் செழித்தன‌.
உதாரணமாக, அது காளையினை சிவ வாகனம் நந்தி "தேவர்" என்றது, பசுவினை கோ "மாதா" என்றது. இதனால் மானிடர் காளையினை தெய்வமாக வணங்கி தங்கள் மனோசக்தியால் சிவ அருள் பெற்றனர். அப்படியே அது காக்கப்பட்டு காளையினம் வலுவானதாக உருவாக்கப்பட்டு வண்டி, உழவு, விவசாயப்பணி என காளைகள் மானிடருக்கு உதவின‌. பசுவும் அவ்வாறே....

இப்படித்தான் காகம், சேவல், யானை என எல்லாவற்றையும் குறிப்பிட்ட சக்திகளின் பெயராகச் சொல்லி அந்த சக்திகளின் அருளையும் அப்படியே லவுகீக பூலோக நலன்களையும் காத்துக்கொண்டது. காகத்தால் பித்ருக்கள் ஆசி கிடைத்தது. அப்படியே சுற்றுச்சூழல் சீரானது, யானையினால் காடுகள் பெருகின, இன்னும் பலன்களும் அதிகரித்தன‌. இன்னும் இம்மாதிரி விலங்குகள் பறவைகளின் தன்மை பல அந்த சூட்சும சக்திகளின் குணங்களை ஒத்திருப்பதால், அவைகளே இதனுள் இறங்கி வரவும் வாய்ப்பு உண்டு என்பதை இந்துமதம் சொல்லிற்று. இன்னும் இவைகள் வடிவில் அந்த சக்திகளை வணங்கி அருள்பெறவும் சித்தர்கள் வழிகாட்டினார்கள்.

அப்படி சொன்ன ஒரு யோக வழிபாடுதான் நாக வழிபாடு, நாகங்கள் என பூலோக சர்ப்பத்தை காட்டி இன்னொரு சூட்சும உலகின் சக்திகளின் பலனைப் பெறும் பெரும் வழிபாடு. இந்தப் பிரபஞ்சத்தை ஆழ கவனித்த ரிஷிகள் 108 அண்டங்கள் இருப்பதைச் சொன்னது, அப்படியே 20 வகையான சக்தி மிக்க இனம் இருப்பதைச் சொன்னது. யக்ஷர்கள், ராக்ஷசர்கள் தொடங்கி தேவர்கள், மானிடர்கள் என இருபது பேரை அது சொன்னது. இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பதுதான் நாகசக்தி எனும் நாக உலகம். அது ஒரு தனி சக்தி.

இந்த சக்தியிடம் பல சூட்சும வரங்கள் உண்டு, பெரும் சக்தி உண்டு, இவைகளின் ஆசி மானிடருக்கு அவசியம், அந்த ஆசி இல்லையென்றால் பெரும் குழப்பம் மானிட வாழ்வில் வரும். அதே நேரம் இவர்கள் ஆசீர்வாதம் இருந்தால் மாபெரும் வாழ்வினை வாழலாம்.

இந்த சக்தி பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கின்றது. எல்லா உலகையும் ஆட்டிவைக்கின்றது. மானிட வாழ்விலும் அது அரூபமாக சூட்சுமமாக நிற்கின்றது, கோள்கள், சஞ்சாரம் என பல வகையில் அது ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை அறிந்தார்கள் ரிஷிகள். இன்னும் ஆழமாகச் சொன்னால் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு; அமுதும் உண்டு, விஷமும் உண்டு; வெளிச்சமும் உண்டு, பகலும் உண்டு; வெப்பமும் உண்டு, குளிர்ச்சியும் உண்டு. இந்த சமநிலை சரியாக இருத்தல் அவசியம்; இந்த சமநிலை தவறினால் ஏதோ ஒன்று மிக அதிகமாகி குழப்பம் அதிகரிக்கும். இவை சரியாக தராசின் முள்போல இருந்தால்தான் தெளிவும், ஞானமும், அமைதியும் வாய்க்கும். இது பிரபஞ்ச இயக்கத்தில் உண்டு, பூமியில் உண்டு, மானிட மனதில் உண்டு, உடலிலும் உண்டு.

உதாரணமாக, ஒவ்வொருவர் உடலிலும் ஒரு விஷத்தன்மை உணவிலோ, இல்லை இதர வடிவிலோ உருவாகும். இந்த விஷம் மிஞ்சிப் போகும்போது அது நோயாகின்றது. மனதின் விஷமான கவலை உள்ளிட்டவை முற்றும்போது, அது மன சஞ்சலமாகின்றது. இது இன்னும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மாறும்போது தீமையோ விஷத்தன்மையோ அதிகரிக்கும்போது குழப்பமே உண்டாகின்றது.

இதனால், இவற்றை எல்லாம் சீர்ப்படுத்தவும், இந்த விஷத்தன்மை எனும் எதிர்தன்மையினை தன்னுள் வாங்கி, தன்னை வணங்கும் உயிர்களைக் காக்கும் பணியினைச் செய்யவும் ஒரு மகா சக்தியினை பரம்பொருள் உருவாக்கியது. அவர்களுக்கென தனி உலகமும், தனி பலமும் வரமும் உண்டு, அவர்கள்தான் நாக தேவதைகள். இவர்கள் அரசன் நாகராஜா. இவர்கள் வாழும் உலகம் நாகலோகம். இது ஒரு சக்தி, தனி சக்தி, யாரும் காணமுடியாத அரூப சக்தி, இந்த உலகின் சமநிலை குறையாமல் காக்கும் ஒரு சக்தி, எதுவும் மிதமிஞ்சி போகும் போது கட்டுப்படுத்தும் சக்தி.

(விஞ்ஞானம் இதனை நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி என வகுக்கும். இந்த சமநிலை சரியாக இருந்தாலே சக்தி கிடைக்கும், அந்த சக்தி மனம் முதல் அண்டவெளிவரை பரவியிருக்கின்றது என்கின்றது விஞ்ஞானம்.

நமது கலாச்சாரதில் இதனை தேவர், அசுரர் என்றார்கள். இன்னும் கருடன், நாகம் என்றார்கள், இந்த இரு சக்திகளின் சமநிலைதான் சரியான இயக்கத்துக்கு அவசியம்.

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பதுபடி மனதையும், உடலையும் காக்கும் சக்தி. இந்த சக்தி, பூமியில் உள்ள எந்த உயிர்களோடு சரிவரும்? எதனைச் சுட்டிகாட்டமுடியும்? எனத் தேடிய ஞானிகள், சர்ப்பம் எனும் பாம்பின் வடிவினைக் கண்டார்கள். அது பல வகைகளில் ஒரு பலனைக் கொடுத்தது.

முதலில் பாம்பு விவசாயிகளின் நண்பன்; அது செய்யும் பலன்கள் ஏராளம். வயலில் எலிகளை கட்டுப்பாடாய் வைப்பது, புற்றுமண் என வளமான மண்ணைக் கொடுப்பது. இன்னும் அதன் விஷம் ஒரு மருந்து, நாகரத்தினம் ஒரு மருந்து என அதன் பலன்கள் ஏராளம். சூட்சும சக்தி கொண்ட பாம்புகள் ஏகப்பட்ட பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தன. அதனால் அவை மானிடர் வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்தார்கள். இன்னும் அதன் வடிவம் பல சூட்சும உண்மைகளை சொன்னது, அண்டவெளி முதல் மானிட மரபணு வரை பல வகைகளில் ஒரு குறியீட்டு ஒற்றுமை இருந்தது

சித்தர்கள் உடலில் மறைந்திருக்கும் மகா சக்திக்கும், மண்ணில் மறைந்திருக்கும் நாகத்திற்கும் பெரும் தொடர்பினை உருவகமாகக் கண்டார்கள். விரைவாகச் செல்லும் தன்மை. உடன் தோன்றுவதும் உடன் மறைவதுமான வேகம், இடுகாடு, சுடுகாடு, பொந்துள்ள மரங்கள், பழைய சுவர்கள், கரையான் புற்று ஆகிய இடங்களில் வாழும் தத்துவக் குறியீடு, மலைப்பாம்பு போல் வளைத்து சுருட்டும் ஆற்றல், பல்வேறு வகை வண்ணங்கள், வண்ணக்கலப்புக்கள், கடுங்குளிரையும் கடும் வெயிலையும் தாங்கும் ஆற்றல், நிலத்தில் விரைந்து ஓடுவதும் நீரில் விரைந்து நீந்துதலும் என நிறைய அதன் சிறப்பான தனித்துவம் உண்டு

பாம்பிற்குள்ள இமையா விழிகளும் தொலைநோக்கும் மிக சிறப்பானவை விழித்திருத்தலுக்கு அவை எக்காலமும் எடுத்துகாட்டு, பின்னிக்கொண்டு இனப்பெருக்கம் செய்தல் என்பதில் அப்படியே பாம்புக்கும் மானுட சாதிக்கும் ஒற்றுமை அதிகம், அந்த பிணைப்பு மனிதனுக்கும் பாம்புக்கும் அடிப்படை ஒற்றுமை. முக்கியமாக அழகாகப் படம் விரித்து ஆடுதல் என்பது நாகத்தின் சிறப்பு.

மண்ணில் சுருண்டிருக்கும் பாம்பு சட்டென 90 பாகை நேர்கோட்டில் மேல் நோக்கி எழும்புவதை அவதானித்தார்கள், அந்த சக்தி மண்ணில் எந்த விலங்குக்குமில்லை. ஒரு நாகத்தால் 90 பாகை மேல் எழமுடியும், அப்படியே நிற்க முடியும், தன் தலையினை வேல் போல மாற்ற முடியும்.

நமது மரபில் நாக வடிவம் முக்கியமானது, அதாவது வேல், தீபம் போன்றவையின் அந்த உருவம் மகத்துவமானது. ஒரே நேர்கோட்டில் வரும் சக்தி ஒரு பிரிவாக பிரிந்து அகன்று பின் மேலே கூடும் தத்துவம் அது. இன்னும் ஆழமாகச் சொன்னால் இடகலை பிங்கலை என இரு மூச்சுக்கள் அகன்று ஓடி கடைசியில் சுழுமுனை நாடி எனும் நெற்றியில் இணைவதைச் சொல்லும் தத்துவம் அது. வேல் தத்துவம், தீப தத்துவம், நாக படமெடுக்கும் தத்துவமெல்லாம் அதுதான்.

இதனால் குண்டலினி சக்தியின் அடையாளமாக நாகத்தை சொன்னார்கள், இன்னும் மானுட உயிரின் மரபணு மூலமும், பிரபஞ்ச பல வடிவமும் நாகத்தின் சாயலில் இருப்பதைச் சொன்னார்கள் இதனால் வெகு ஞானமாக பூலோக நாகத்தைக் காட்டி நாகலோக நாகங்களை வழிபடச் சொன்னார்கள். இதனால் பிரபஞ்ச சூட்சும சக்தியோடு புவியில் மானிடரின் லவுகீக பலன்களும் விவசாயம், மருத்துவம், காவல் என கிடைத்தன‌.

பாம்புக்கும் மனிதனுக்குமான பந்தம் இங்கிருந்துதான் உருவானது, ரிஷிகள் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பாம்பும் யானைபோல், மாடுபோல், மானுடருடன் நெருங்கும் சக்தி கொண்டது, அது விஷம் கொண்டதாயினும் மானுடர் மனமறியும் சூட்சுமம் கொண்டது. அதற்கும் பிரபஞ்சத்தின் மகா சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதை ஞானத்தால் அறிந்த ரிஷிகள் அந்த நாக வழிபாட்டை தோற்றுவித்தார்கள். இதனால் மானிடர் லவுகீக பலமும் பெற்றார்கள், பிரபஞ்ச சூட்சும பலமும் பெற்றார்கள்.

இன்னும் இதனை அழுத்திச் சொன்னது, இந்த வழிபாட்டை ஊக்குவிக்க தெய்வங்களையெல்லாம் நாகங்களோடே நிறுத்திற்று. சிவனுக்கு கழுத்தில் நாகம், விஷ்ணுவுக்கு அதனையே படுக்கை ஆக்கிற்று, முருகனோ , பிள்ளையாரோ, அம்மனோ எந்த தெய்வம் என்றாலும் பாம்போடுதான் நிறுத்திற்று. நாக வடிவங்களை அப்படி வழிபட சொன்னவர்கள் ரிஷிகள்.

உலகெல்லாம்  பரவியிருந்த காலத்தில் எல்லா இனத்தவரிடையேயும் அந்த நாக வழிபாடு இருந்தது. சீனாவில் அது டிராகன் என உண்டு, ஜப்பானில் உண்டு, எகிப்தில் இருந்தது ஐரோப்பாவில் இருந்தது. கம்போடியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்தது. இன்னும் பல இடங்களில் உண்டு. நாகத்தை வணங்குதல் அப்படி பெரும் வழிபாடாக இருந்தது, பின்னாளில் இந்தியாவிலும் சீனாவிலும் அது நிலைத்தது, சீனா நெருப்பை உமிழும் பாம்பை தன் தேசிய அடையாளமாக கொண்டிருப்பதும் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் அவர்களின் பாம்பு நடனம் நடப்பதும் உலகம் அறிந்தது.

வேதங்கள் பாம்பு பற்றி சொல்கின்றன. வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். யஜுர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது. பழங்கால பாஞ்சல தேசத்தின் தலைநகரம் அஹீசத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.

அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன.
நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும், புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.

பாம்புகளை பொறுத்த வரை என்றும் எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகைகளும் காட்டப்படுகிறார்கள். இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள். நாம் அதனை இன்றும் தொடர்கின்றது, பழமையான அம்மதம் அந்த பாரம்பரியத்தை கைவிடாமல் பற்றி வருகின்றது.

பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பணிப்பெண்ணாக கருதுகிறார்கள்.
மகாபாரதத்தில் அனுஷாசன பர்வத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.

கிரிஸ் நாட்டில் வணங்கப்பட்ட நாக தேவதையின் பெயர் மினோவான் என்பது. எகிப்தில் படமெடுத்தாடும் பாம்பு தலையுடன் கூடிய நாகம்மா தெய்வமாக உண்டு, அவளை சூரியக் கடவுளின் கண்களாகவும் போற்றினர். இத்தாலியில் நோயை சுகமாக்கும் கடவுளாக நாகம்மாவை வணங்கினர். அவளுக்கு அன்கிதியா என்று பெயர். ஜெர்மனியில் பல குடும்பங்களுக்கு நாகம் குல தெய்வமாக இருந்து அவர்களின் ஆடு மாடுகளைப் பாதுகாத்தது. நாகம் இங்கு ஆணும் பெண்ணும் என ஜோடியாக இருந்து தமது குடும்பங்களைக் காப்பதாக நம்பினர். ஜப்பானில் மத்சுரா யோஹிமே என்ற பெயரில் நாகம்மாவை வழிபட்டனர். கொரியாவில் இயோப்ஷின் என்ற நாகம்மா செல்வத்துக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டாள். இவள் காதுகளுடன் கூடிய பாம்பு ரூபத்தில் இருந்தாள். இவளுக்கு ஏழு மகள்கள் உண்டு. ஏழு பேரும் பாம்புகள். பைபிளில் கூட யூத தெய்வம் நோயுற்ற மக்களை காக்க பாம்பை வணங்க சொல்லிற்று. அந்த பாம்பு வடிவம்தான் இன்று உலக மருத்துவ அடையாளமாகவும் விளங்குகின்றது.

ஆம், நாக தத்துவம் இந்த உடலிலும் உண்டு, ஆரோக்கியத்திலும் உண்டு. இன்று உலகின் எல்லா இனத்திலும் பாம்பு வழிபாட்டின் தாக்கம் உண்டு. அதைத் தொடங்கி வைத்தது. உலகெல்லாம் அதன் நாக வழிபாடும் இருந்த காட்சியே இன்று உலகின் பல இடங்களில் காணபட்டாலும் அதன் மூலம் நமது மதமே. இப்படியான நாக வழிபாட்டைச் சொன்னவர்கள் ஏழு முக்கிய நாகங்கள் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதாகச் சொன்னார்கள். எட்டு வகையாக நாகங்களை பிரித்தார்கள், இவை அஷ்ட லக்ஷ்மி சாயலில் ஒவ்வொரு வளம் தருவதாக சொன்னார்கள். அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன் என எட்டுவகை நாகங்களைச் சொன்னார்கள்.

அனந்தன் என்பவன் ஆதிஷேஷன், பூமியினை தாங்கி நிற்பவன். திருமால் பள்ளி கொண்டிருப்பதும் இந்த அனந்தன் மேலே. சேஷன் என்றால் தொண்டன் எனப் பொருள், அனந்தனும் அதே பொருள். இப்படி அனந்தன் மேல் படுத்திருப்பதாலேயே, அவர் அனந்த சயனப் பெருமாள், திருவனந்தபுரம் எனும் பெயர் இப்படி வந்ததே. இவர் உலகை தாங்குவார், பிரபஞ்ச இயக்கத்தை தாங்குவார் என்பது நம்பிக்கை.

(இன்றும் பூமிக்கும் இதர கோள்களுக்கும், ஒரு அண்டத்துக்கும் இன்னொரு அண்டத்துக்கும் இடையே கண்ணுக்கு தெரியா நெளிந்த வளைந்து செல்லும் பாதை இருப்பதாக விஞ்ஞானம் சொல்கின்றது, இந்த நெளிவுமிக்க அந்த இணைப்பில்தான் இந்த பிரபஞ்சம் இயங்குவதாகவும் அது சொல்கின்றது. அதைத்தான் ஆதிஷேஷன் என்றார்கள் ரிஷிகள்)

வாசுகி என்பது அமிர்தம் கடைய பயன்பட்டது என்பது ஐதீகம், அதாவது அமிர்தம் எனும் ஞானம் தரும் நாகம் அது.
தக்கன் எனும் நாகம் எதிரிகளை அழிக்கும் வரம் தரும். பாகவத புராணத்தில் பரீக்ஷித் கதையில் இந்த பாம்பு வரும்.
கார்க்கோடகன் எனும் நாகம் சாபங்களை தீர்க்கும். நளன் கதையில் இதனைக் காணலாம்.
பதுமனும் சங்கபாலனும் குபேர சம்பத்து நாகங்கள். சங்கநிதி பதுமநிதி எல்லாம் இவர்கள் கொடுக்கும் வரம்.
சங்கபாலன் அரச யோகங்களைத் தரும், சோம்பலை ஒழிக்கும், பெரும் அறிவும் பொருளும் ஒருங்கே தரும்.
குளிகன் எனும் நாகம் நோய் தீர்க்கும், உடல், மன ஆரோக்கியத்தை தரும்.

இப்படி எட்டு நாகங்களைச் சொல்லி, இவை உலகையும் மானிட மனத்தையும் உடலையும் காக்கும் வரத்தைத் தரும் எனச் சொன்னவர்கள் ரிஷிகள்.

இந்த நாகங்களின் நச்சுத்தன்மை என்பது அழிவை தருவது அல்ல, மிதமிஞ்சிய தீமைகளை அவை எடுத்துக்கொள்ளும். ஒரு மனிதனுக்கு என்ன விழிப்பு நிலை அவசியமோ அதைத் தரும் என்பது. அதைத்தான் இங்கே குறியீடாக வைத்தார்கள்.

அப்படியே ஜோதிடத்தில் ராகு, கேது எனும் இரு கிரகங்களை வைத்தார்கள், இந்த இரு கிரகங்களின் அருள் இல்லாமல், அதாவது இந்த நாகங்களின் அருள் இல்லாமல் எந்த ஜாதகமும் இல்லை என்பதை சொல்லியும் வைத்தார்கள்.

பாம்புக்கும் மனிதனுக்குமான சூட்சும உறவை சித்தர்கள் ஞானக்கண்ணால் அறிந்தார்கள். பாம்புபோல் ஒரு சக்தி உடலில் உறங்குவதைக் கண்டார்கள். அது விழித்தெழ சில பயிற்சி அவசியம் என்றார்கள். அதை யோகக்கலை என்றார்கள். யோகத்தில் செய்யும் பல பயிற்சிகள் பாம்பின் அசைவை ஒத்திருப்பதை காணலாம். அதை செய்யச் செய்ய ஆரோக்கியம் கூடும், ஞானம் பெருகும்.

கிராமங்களில் அல்லது பெரும் திருவிழாக்களில் சாமியாடிகளின் உடல் அசைவினை கவனித்தால், அருள்வாக்கோ தெய்வ நிலைக்கு செல்லும் சாமான்ய மனிதர்களைக் கண்டால் பாம்பின் அசைவுகள், நெளிவுகள் அங்கே தெரிவதை எளிதாகக் காணமுடியும். ஆம், மானிடனில் ஒரு சக்தி எழுவதையும் அவர்கள் இன்னொரு பரிமாணத்துக்கு செல்வதையும் பாம்பின் அசைவினோடு பொருந்துவதை காணமுடியும். இதைத்தான் நாகவழிபாட்டின் அவசியம் என்றார்கள் சித்தர்கள்.

இந்தியாவின் பரதக் கலையிலும் பாம்பின் தத்துவம் இருந்தது, பாம்பின் அடிபாகம் போல் கால்கள் உறுதியாக இருத்தல் அவசியம், இடுப்புக்கு மேல் பாம்பு போல் பெண் நடனமாட வேண்டும் என்பதும் இலக்கணம். ஆம் இந்தியாவின் பரதம் ஒரு யோக நடனம், அந்த நடனம் யோக சக்தியினை அதிகரிக்கும். அதனாலே அதை பாம்பின் சாயலில் ஆடச் சொன்னார்கள்.

பதஞ்சலி முனிவர் பாதி பாம்பாக போன தத்துவம் அதுதான், பாம்பின் அசைவில் மானிடன் இறைவனை உணரமுடியும் என்பது. ஆம், நாகங்களை வழிபட்டால் எல்லா பலன்களும் சூட்சுமமாக, அரூபமாக வரும் என்றார்கள். இன்னும் முன்னோர்கள் காக வடிவில் வருவது போல, சித்தர்கள் பாம்புவடிவில் வருவார்கள் என்பது நம்பிக்கை. இதனாலே பாம்புகளைத் தொழச் சொன்னார்கள்.

உண்மையில் பாம்புகள் அறிவானவை, சூட்சுமமானவை. அவைகளை புரிந்துகொண்டு பழகினால் உரிய வகையில் மந்திரங்களோ இல்லை இதர வகையில் அவைகளை நெருங்கினால், யானை பாகனுக்கு கட்டுப்படுவது போல், அவைகளும் மானிடருக்கு கட்டுபட்டு நிற்பவை. ஒரு காலத்தில் இந்துஸ்தானின் காவலாக பாம்புகளே இருந்திருக்கின்றன, அலெக்ஸ்டாண்டர் இந்தியாவில் நுழையாமல் திரும்பிப் போக நாகங்களே காரணம். நாகங்களை பழக்கும் வித்தை இந்தியரிடையே உண்டு, அவர்கள் கட்டளையிட்டால் நாகங்கள் தாக்குகின்றன என கிரேக்கர்கள் அஞ்சியிருக்கின்றார்கள். இந்தியாவில் நாகங்களைப் பழக்கி காவல் வைப்பதும் அவற்றின் நஞ்சினில் சில ஆயுதங்கள் செய்வதும் வழமையாய் இருந்திருக்கின்றன, அம்பிலோ ஈட்டியிலோ நாக நஞ்சினை தடவி எறிந்தால் எதிராளி நிச்சயம் காலி.

நாகஙகள் விலை உயர்ந்த பொருளுக்கு காவலாக வைக்கப்பட்டிருக்கின்றன‌. பின்னாளில் பவுத்தத்தால் பல வகை சீரழிவுகள் வந்து, இவை எல்லாம் மறைந்தாலும் கேரளாவில் அது தொடர்ந்திருக்கின்றது, கடைசிவரை ஆப்கானியரால், மொகலாயரால் மலையாள பூமி ஆளப்படாமலே போக அவர்களை யாரும் வெற்றிகொள்ள முடியாமல் போக முக்கிய காரணம் இந்த நாகங்கள்.

கேரளத்தின் நாகங்கள் அப்படி காவல் இருந்திருக்கின்றன. எஜமானர்கள் உத்தரவிட்டால் மாபெரும் நாகங்கள் அணி திரண்டு தாக்கியிருக்கின்றன, இதெல்லாம் கண்டு அஞ்சித்தான் அங்கே ஆப்கானிகள் செல்லவில்லை.

மாலிக்காபூரோ, துக்ளக்கோ, மொகலாயரோ யாரும் நுழைய அஞ்சியிருக்கின்றார்கள், அப்படிப்பட்ட பூமியாய் இந்துஸ்தானம் இருந்திருக்கின்றது. இங்கு நாகவழிபாடு எக்காலமும் உண்டு, நாகவழிபாடு சிறந்திருந்த வரை இந்துமதம் சீரும் சிறப்புமாக இருந்தது, நாகங்களை வழிபடும் வரை இந்தியாவில் வளமைக்கும் செழுமைக்கும் குறைவில்லை. நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு.

நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய‌ சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் என்றோ அறிந்த ஒன்று. இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு.

இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு. நாகங்கள் மக்கட்வரம் மட்டுமல்ல, எல்லா வரங்களையும் அருளும், இந்தியாவின் நாக வழிபாடு உச்சத்தில் இருந்தவரை எல்லா வளமும் இருந்தது.

நாக வழிபாடு சரிய, குறைய எல்லாமும் குறைந்து போனது. நாம் வாழ, நமது கலாச்சாரம் வாழ, இந்துக்கள் இந்துக்களாய் வாழ, நாக வழிபாடு அவசியம். நாக வழிபாட்டால் எல்லா நலன்களையும் ஒருவன் பெறமுடியும். செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.

பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது. பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது. இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல‌.

மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை. ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது. இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்

இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன‌

(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும். இதுதான் நாகதத்துவம்)

இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள். மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள். இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள். அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள். இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள். சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள். எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்.

இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள். நம்முடைய கலாச்சாரதில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை. நாகங்களும் சூட்சுமமானவை, அவைகளும் தர்மத்துக்கு கட்டுபட்டவை.

யானைகளுடன் பேசமுடியும் என்பதை உணர்ந்து பேசிய மனிதன் நாகத்துடனும் உறவாடினான் நாகத்தை பழக்கும் வித்தையும் அவனுக்கு வந்தது மனிதனின் மனதை உணரும் சக்தி பாம்புக்கும் உண்டு. அது யாரையும் தேடி சென்று கொல்லாது அது ஒதுங்கித்தான் செல்லும் கர்மவினை இல்லாமல் யார் முன்னால் கூட வராது. மந்திரத்துக்கு அது கட்டுபடும் என்பது மந்திரத்தால் அல்ல, மனதை ஒருமுகபடுத்த தெரிந்தவனால் அதன் ஆழ்மனதை தொடமுடியும் பேசமுடியும் அந்த அலைவரிசைக்கு செல்லும்போது பாம்பின் மனமும் அவன் மனமும் ஒரே புள்ளிக்கு வரும்போது அவன் சொன்னதையெல்லாம் அது கேட்கும். மந்திரம் என்பது மனதை ஒருமுகபடுத்தும் விஷயமே.

அப்படி ரிஷிகள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள். மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள். பாரதம் முழுக்க, அதன் வரலாறு முழுக்க, அதன் ஆலய வழிபாடு முழுக்க, நாகத்தின் அடையாளமாக ஏகப்பட்ட இடங்களும் குறியீடுகளும் உண்டு. 

நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது.

பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌.
இந்துமதம் நாகத்தை  பிரதானமாக்கியது, அதற்கு மிக முக்கிய காரணங்களும் இருந்தன‌. அணுவுக்குள் துகள்கள் சுழல்வது போல, அண்டத்தில் கோள்கள் சுழல்கின்றன. இந்த இரண்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு, பொதுவிதி உண்டு என்பது விஞ்ஞானத்தின் கூற்று.  ஆனால் பொதுவிதி ஒன்றை வகுக்கமுடியாமல் இன்னும் வழி தேடிக்கொண்டிருக்கின்றது. பாம்பின் வடிவத்துக்கும் உடலின் முக்கிய நுணுக்கத்துக்கான தொடர்பை கண்டார்கள், அந்த பெரும் சக்தி பாம்பு வடிவில் உடலில் ஆடுவதை தங்கள் ஞானத்தால் உணர்ந்தார்கள்.

ஒரு உயிர் உருவாகக் காரணமான விந்துவின் உயிரணு பாம்பு வடிவில் இருப்பதை இன்றைய விஞ்ஞானம் சொல்கின்றது. அதனை ரிஷிகள் என்றோ உணர்ந்திருந்தார்கள். அனுதினமும் கோடிக்கணக்கான செல்கள் இறக்கும் உடல் இது, உடல் மாறிக்கொண்டே இருக்கின்றது, பாம்பு சட்டையினை கழற்றுவது என்பதை செல்களின் அழிவுக்கு சொன்னார்கள். பாம்பு சுருண்டிருப்பதை போல கருவில் உயிர் சுருண்டே இருக்கின்றது என்பதை சொன்னார்கள், பாம்பு தவழ்வதை போலவே மானிடனும் தவழ்ந்து வளர்கின்றான் என்பதை அனுமானத்தால் சொன்னார்கள். அதனாலே பாம்புக்கும் பாம்புக்குமான பொதுப் பொருளாய் பாலை வைத்தார்கள்

இன்று டி.என்.ஏ எனும் மரபணு பாம்பின் வடிவத்தில் நாகவடிவத்தில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது, இரு பாம்புகள் வடிவில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது. அந்த மரபணுவின் சக்தி இன்னொரு பெரும் சக்தியால் இயக்கப்படுகின்றது. அதுதான் நாகசக்தி என்பதை உணர்ந்து இரு நாகங்களை வணங்க சொன்னார்கள்.

இந்த வழிபாடு எல்லா இனத்திலும் இங்கே இருந்து சென்றது, அது ஐரோப்பாவில் இருந்தது, யூதர்களிடம் இருந்தது. பாம்பை வணங்கினால் நலமடையலாம் எனும் நம்பிக்கை எக்காலமும் உண்டு, இன்று நவீன உலகின் மருத்துவ அடையாளம் இணைந்த நாகங்களே. அதை கொடுத்தமதம் பாரதம் முழுக்க இந்த நாகவழிபாடு உண்டு.

நாகம் என்பது உயிரை எடுக்கமட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் செய்யும். உயிரைக் கொடுக்கும் சக்தி அதற்கு உண்டு என்பதால் வணங்கப்பட்டது. குறிப்பாக சந்ததிகள் பெருக, நோய் நீங்க அது வணங்கப்பட்டது. பாம்பின் நஞ்சில் இருந்து பெரும் மருந்துகளை சித்தர்கள் தயாரித்தார்கள், நாக பாஷாணம் சரியான முறையில் பல பொருட்களுடன் சேர்க்கப்பட்டபோது அது மருந்தானது. பாம்பை வணங்க வணங்க ஒரு உயிரின் தன்மை மாறும், அந்த உடல் நலமடையும் தெளிவடையும், பாம்பின் வடிவத்தில் ஒரு சிலையினை வணங்க வணங்க பல நன்மைகள் எங்கிருந்தோ பிரபஞ்சம் கொடுப்பதை இந்துக்கள் உணர்ந்தார்கள்.

பாம்பின் வழிபாட்டால் சந்ததி செழித்தது என்பதையும், நோய்கள் அகன்றது என்பதையும் அறிந்தார்கள்.
உடலில் நோய் ஏற்பட விஷத்தன்மையே காரணம். ஏதோ ஒரு வகையில் விஷம் உடலில் சேர்வதாலேயே நோய் உருவாகின்றது, இந்த விஷத்தை நாக வழிபாடு அகற்றும் என்பதை அனுபவத்தால் கண்டார்கள். இன்று உலகை மிரட்டும் புற்றுநோயினைக் கூட நாக வழிபாடு சரியாக்கும் எனும் நம்பிக்கை அன்றே இருந்தது,  புற்றுநோய் உலகில் புதிதல்ல; சித்தர்கள் காலத்திலே அது அடைப்பு நோய் என வழங்கப்பட்டிருக்கின்றது, உடலில் சேரும் விஷத்தால் அது உருவாகும் என்றார்கள் சித்தர்கள்.

அன்று வெகு அபூர்வமாக இருந்த நோய் இன்று ரசாயன உலகில் ரசாயான உணவுகளால் இயல்பாகிவிட்டது, மானிட தவறுகளும் அதிகம். இஞ்சி, பூண்டு உடலுக்கு நல்லது. ஆனால் தனித் தனியாக சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சமைத்தால் சிறிது விஷமாகும் என்பார்கள்.  இப்படி மானிட தவறுகள், ரசயானம் என பல வகைகளால் புற்றுநோய் பெருகிவிட்டது. அன்று புற்றுநோய்க்கு சர்ப்ப வழிபாடும், புற்றுமண்ணும் மருந்தாக இருந்தது. நாகத்தின் விஷத்தில் தயாரிக்கப்படும் நவபாஷாணம் போன்ற மருந்துகள் நோயினை தீர்த்தன என்கின்றன அக்காலக் குறிப்புகள்.ஆம், நாகவழிபாடு புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் என்பது அன்றே இருந்த வழமை. இப்படி நாகங்கள் கொண்டாடப்பட்டன, அவைகளுக்கான வழிபாடு எல்லா ஆலயங்களிலும் உண்டு.

ஷண் மதம் என ஆறுபிரிவுகள் இருந்தாலும், அந்த ஆறுபிரிவுகளிலும் நாகம் தனி அடையாளமாய் இருந்தது, நாகமே ஆதி தெய்வமாய் இருந்தது. அதன் அடையாளமாக இந்தியாவில் எல்லா ஆலயங்களிலும் நாகம் தனி இடம் பெற்றது, பல இடங்கள் ஆலயங்கள் நாகத்தின் பெயராலேயே அறியப்பட்டன‌.

நாகலாந்து முதல் நாகப்பட்டினம், நாகர்கோவில் என நாகத்தின் பெயர்களை பாரதம் முழுக்க காணமுடியும். திருவாரூரின் புற்றீசரும், வன்மீகநாதர் எனும் சிவனும் புற்றுவடிவில் வழிபட்ட சிவலிங்கங்களே, காளஹஸ்தி கூட நாகத்தின் பெயரில் உருவானதுதான், எல்லா தொடக்கமும் நாக வழிபாட்டில் இருந்தன‌. நாக வழிபாடு பாரதமெங்கும் இருந்தாலும், வேதம் வாழும் பரசுராமனின் பூமியான கேரளத்தில் உன்னதமாய் இருந்தது.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், ஷேச நாக், குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் கேரளாவில் உள்ள மன்னார்சாலா, திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நாகத்திற்கென முக்கிய கோவில்கள் உண்டு. திருநாகேஸ்வரம் முதல் நாகூர் வரையான பஞ்ச நாக ஷேத்திரங்கள் உண்டு. நாகலாந்து, நாகபட்டின, நாகர்கோவில் எல்லாம் அப்படி உருவான நகரங்களே. கர்நாடகா நாகதேவி கோவிலும், குக்கே சுப்ரமண்யா கோவிலும் பிரசித்தியானவை, அங்கும் நாகத்தின் ஆலயங்கள் நிறைய உண்டு. அங்கு நாகத்தை சுப்பிரமணி என்றே அழைக்கின்றார்கள்.

ஆந்திராவின் கர்னூலில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலும் நாகங்களுக்கு முக்கியமானது. நாகர்கோவில் எனும் நாகத்தை மூலவராக கொண்ட அந்த ஆலயம் கேரள ஆலயமாகத்தான் இருந்தது; பின்னாளில் தமிழகத்தோடு இணைந்தது. அதன் மூலம் மலையாளமே.

அந்த அளவு கேரளாவில் நாக வழிபாடு பிரசித்தியானது, ஏகப்பட்ட ஆலயங்கள் நாகத்துக்காக அங்கு உண்டு எனினும், மேக்கோடு நாக ஆலயமும், மன்னாரசாலை ஆலயமும் பிரசித்தியானது. அந்த மன்னாரசாலை ஆலயம் நாகவழிபாட்டுக்குத் தனி அடையாளமாய் பெரும் ஆச்சரியமாய், இன்றுவரை மாபெரும் அதிசயம் நிறைந்த ஆலயமாய், இந்துக்களின் நாக வழிபாட்டுக்கு பெரும் சாட்சியாய் நிற்கின்றது. அந்த ஆலயம் உருவான விதம் மிகத் தொன்மையானது, யுகங்களைக் கடந்தது. அவ்வகையில் பல்லாயிரம் வருடமாக யுகங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது. அதனைத் தொடங்கி வைத்தவர் பரசுராமர், பரசராமர் தன் அவதாரம் முடியும் போது, வேதங்கள் வாழ ஒரு பூமியினை உருவாக்க எண்ணி சிவனிடம் வரம் கேட்டார்.

அவர் கோடரி விழும் இடத்தில் இருந்து கடல் ஒதுங்கி வழிவிடும், அந்த நிலத்தை எடுத்துக்கொள் என்றார் சிவன். அப்படியே தன் கோடரி எனும் மழுவினை அவர் வீச அந்த கடல் நகர்ந்து மலைப்பாங்கான இடம் ஒன்று உருவானது. ஆனால் உப்புசுவையும் உவர் நிலமுமான அங்கு உயிர்கள் வாழமுடியாது, பரசுராமர் மறுபடியும் சிவனை வேண்டினார். உயிர்கள் பிறக்கவும், நிலம் செழிக்கவும், பசுமை நிலைக்கவும் நாகராஜனின் அருள் வேண்டும், நீ அவரை வேண்டினால் இந்த பூமி செழிக்கும் என பதில் கிடைத்தது.

பரசுராமன் தவமிருந்து நாகராஜாவினை அழைக்க நாகராஜா வந்து ஆசீர்வதித்தார், அந்த கேரளம் செழித்தது. அப்படி நாகராஜா வந்து அமர்ந்த இடம் பரசுராமனின் தீர்த்தசாலை, அந்த தீர்த்தசாலை, மந்திர சாலை என்றும் அழைக்கப்பட்டு மன்னார் சாலை என்றானது. இந்த மன்னார்சாலைதான் உலகிலேயே நாகங்களுக்கான மிகப்பெரிய ஆலயம், முதல் மாபெரும் ஆலயம்.
இங்கே நாகராஜாவின் அருளில் எக்காலமும் மாபெரும் நாகங்கள் உண்டு. அவை, ஆலயத்தின் உட்புறத்தில் உண்டு. ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் இதுவரை இழைத்ததில்லை. ஒரு சிறிய சலசலப்புக் கூட வந்ததில்லை.

ஆலப்புழா அருகே அமைந்திருக்கும் அந்த ஆலயம் பெரியது, அங்கிருக்கும் நாக சிற்பங்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம். விதவிதமான நாக வடிவங்கள் அங்கே அப்படி ஆயிரகணக்கில் உண்டு. ஏன் அப்படி அத்தனை ஆயிரம் வடிவங்களை ஸ்தாபித்தார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை, அங்கேதான் இருக்கின்றது நுணுக்கமான நாக வழிபாடு.

மனித உடல் சூட்சுமமானது. அதன் நோய்களும் பிணியும் மருந்தினால் மட்டும் குணமாவதில்லை. அதாவது வாய்வழி உள்ளே செல்லும் மருந்துகள் மட்டும் நோயினை குணமாக்குவதில்லை. உடலின் விஷமானது உள்ளே செல்லும் உணவினால் மட்டும் ஏற்படுவதில்லை. அது காற்று, கதிர்வீச்சு, சுற்றுப்புறம், பார்க்கும் விஷயத்தின் அதிர்வு என எல்லாவற்றிலும் உருவாகும். அதாவது ஒருவனை அவன் சுற்றுபுறமும், அதிர்வுகளும், காற்றும், பார்வையும் கூட நோயுற்றவனாக்கும்.
அப்படியே சில அதிர்வுகளாலும், பார்க்கும் விஷயங்களாலும் நோயினை குணப்படுத்தவும் முடியும்.
பாம்பின் வடிவங்கள் நோயினை தீர்க்கும் என்பது நம்பிக்கை, பாம்பின் வடிவம் மரபணு மற்றும் உடலை இயக்கும் செல்களின் வடிவினை ஒத்திருக்கும்.

இந்த வடிவங்களைக் காணும் போது உடலின் சில நுணுக்கமான செல்கள் அல்லது அணுக்கள் தங்கள் வடிவத்தை மாற்றும், அப்போது உடல் தானே சரியாகும். பாம்பின் வடிவத்தைக் காணும்போது, உடலின் செல்கள் தன்னை சரிசெய்யும், நோயுற்ற செல்கள் குணமாகும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

(யூதர்களின் தோரா இதை சொல்கின்றது, பாலை நிலத்தில் மக்கள் சாகும் போது அவர்கள் தெய்வம் ஒரு பாம்பை வெண்கலத்தில் செய்து உயர்த்தி பிடிக்க சொல்கின்றது. அதைக்காணும் மக்களெல்லாம் குணமடைந்தார்கள் என்கின்றது. இந்த பாம்பு வடிவம்தான் இன்று மருத்துவ அடையாளமாக மாறி நிற்கின்றது, நாம் மருத்துவரின் அடையாளமாக உலகளாவில் காணும் அந்த லச்சினை அதுதான், அந்த சாயல்தான்)

இந்த நுணுக்கத்தில்தான் 30 ஆயிரம் பாம்பு சிலைகள் வைக்கபட்டிருக்கின்றன‌. உண்மையில் பல பாம்பு வடிவங்களை இந்துக்கள் செய்ததெல்லாம் நோய் தீர்க்கும் மருத்துவமே, அப்படித்தான் வடித்து தீர்வுகளும் சொன்னார்கள். நாக மருத்துவ இலக்கணம் அதை தெளிவாகச் சொல்கின்றது.
புத்திர பாக்கியம் கிடைக்க அனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்க வேண்டும். பலப்ராப்தி  பெற தக்ஷன், குணப்ராப்தி  பெற பத்மா, சூட்டினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற  நாக ஷங்கபலா எனும் ஷங்ககர்னாவையும்  வணங்கிப் பூஜிக்க வேண்டும்.

பூர்வ ஜென்ம பாபம் அகல  கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும்  மோட்ஷப்ராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நோய் தீரவும், ஒவ்வொரு வரம் பெறவும், ஒவ்வொரு நாக வடிவம் அவசியம். இதனாலேயே 30 ஆயிரம் நாகங்கள் வடிவம் அங்கே உண்டு.

அங்கே தீரா நோயில்லை, கிடைக்கா வரமில்லை. எல்லா நோய்களும் அங்கே தீரும், எல்லா வரமும் அங்கே கிடைக்கும். நாக சிற்பங்களின் வலிமையும், அந்த ஆலயத்தில் அன்றாடம் நடக்கும் பூஜைகளின் சக்தியும் அப்படியானது. அந்தக் கோவிலில் எல்லா பிணியும் நோயும் தீர்ந்தாலும் மிக முக்கியமான ஒன்று குழந்தை வரம்.
அதற்கு அவர்கள் மிக வித்தியாசமான முறையினை தொன்றுதொட்டு, அதாவது பரசுராமர் காலத்தில் இருந்தே பின்பற்றுகின்றார்கள்.

அந்தக் கோவிலில் பெண்கள்தான் பூசாரிகள், முதிர்ந்த வயதுடன் பூசாரியாக வருவார்கள். இவர்கள் வாலியம்மா அல்லது வலியம்மா என, அதாவது சர்வ சக்திவாய்ந்தவர் எனும் பொருளில் அழைக்கபடுகின்றார்கள்.

பாம்புகள் அதுவும் ராஜநாகங்கள் நிறைந்த தலைமை பீடத்தில் இவர்கள்தான் பூஜை செய்வார்கள். நாகங்கள் அப்போது கோசாலை பசுக்கள் போல இவர்களை சுற்றிச் சுற்றி வரும். பசுக்களுக்கு கோசாலை போல, நாகங்களுக்கான நாகசாலை அந்த மன்னாரசாலை குழந்தைவரம் வேண்டுவோர் அங்கு சென்று தங்கள் வேண்டுதலை வைத்து உருளி எனும் சிறிய பாத்திரத்தை கவிழ்த்துவைப்பர், பின் மனமார வேண்டி நாக தரிசனம் செய்துவிட்டு கிளம்புவார்கள்.

உரியநாளில் அவர்களுக்கு பதில் கிடைக்கும். பின் குழந்தையோடு வந்து அந்த உருளியினை நிமிர்த்தி வைத்து வழிபட்டு வேண்டுதல் முடிப்பார்கள், அந்நேரம் ஆலயத்துக்கான சிறப்பு பிரார்த்தனைகளை அவர்கள் செய்ய வேண்டும்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம், பெரிய காணிக்கையோ, லட்சக்கணக்கான தட்சனையோ, பூஜையோ எதுவுமில்லை. எல்லாமே இலவசம். பலன் கிடைத்து குழந்தை வந்தபின், நாகங்களுக்கு அவர்கள் ஏதும் செய்யலாம் ஆலயத்துக்கு உதவலாம். பன்னெடுங்காலமாக நடக்கும் ஆச்சரியம் இது. இதுவரை அங்கு சென்று உருளி கவிழ்த்து ஏமாந்தவர் யாருமில்லை. எப்படி நாகர்கோவில் நாகராஜா கோவில் சுற்றுபுறங்களில் பாம்புகடித்து யாரும் இறக்கவில்லையோ, அப்படி இந்த நாக ஆலயமும் யாரையும் கைவிட்டதில்லை.

சாட்சிகள் கோடான கோடி. நாக வழிபாட்டின் சக்தியினை இந்த ஆலயம் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றது, என்றும் அது உண்டு. குழந்தை வரம் அங்கு பிரதானம். மற்றபடி எல்லா நோய்களுக்கும் அங்கு தீர்வு உண்டு. இறைவன் அருள் உங்களோடு இருந்தால், சரியான நாக சிற்பத்தை அடையாளம் கண்டு உங்கள் நோய் எவ்வளவு கொடியதாயினும் நாகத்தின் அருளால் அங்கு குணமாக்க முடியும். அப்படியான சக்தி கொண்டது நாக வழிபாடு. அதன் பெரும் சாட்சி இந்த ஆலயம்.

நாகம் என்பது மானுடரோடு பின்னிப் பிணைந்த இறை சக்தி. இன்னொரு லோகத்தில் வாழும் மாபெரும் சக்தியின் மிக மேம்பட்ட சக்தியினை, தேவர்கள், கிங்கணர்கள், கந்தர்வர்கள் எனப் பலரை விட மகா சக்தியான நாக சக்தியினை நமக்கு இங்கு பெற்றுத் தருபவை நாகங்கள்.
அந்த மகா சக்தியின் க்ஷேத்திர பாலகர்களாக நம்முன் நிற்பவை நாகங்கள். நாகங்களின் அருளாலே கேரளம் செழித்தது, நாகங்களின் அருளாலே இன்றும் மன்னாரசாலையில் அனுதினமும் அதிசயம் நடக்கின்றது.

நாக வழிபாட்டின் சக்தி அசாத்தியமானது, அதனால்தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவழியில் நாக தரிசனம் பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை செய்தது இந்துமதம்.

சிவனின் கழுத்திலோ, விஷ்ணுவின் படுக்கையிலோ, அம்மனின் தலையிலோ, முருகனின் காலடியிலோ, விநாயகன் பூனூலாகவோ , சூரியனின் குதிரையின் கயிறாகவோ பாம்பினை வைத்தார்கள் இந்துக்கள்.
அது போல எல்லா ஆலயங்களிலும் வழிபாட்டிலும் தனி இடம் கொடுத்தார்கள்.

ஜோதிடத்திலும் இரு நாகங்களை வைத்து குறியீடாய் சொன்னார்கள். அந்த நாகங்களுக்கான நாள் இந்த நாக பஞ்சமி. நாக சதுர்த்தி என அது சொல்லபட்டாலும், நாக பஞ்சமி என்றுதான் புராணங்கள் சொல்கின்றன. ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி நாகத்துக்கானது.

(நிலவை பிரதானமாக கொண்ட நாட்காட்டிப்படி ஆவணி வளர்பிறை பஞ்சமி நாகங்களுக்கானது, சூரிய அளவையினை கொண்ட நாள்காட்டிப்படி ஆடிமாத பஞ்சமி அமையும்.)

பாம்பு மானிடரைப் போல ஐந்து புலன்களின் ஆற்றல் மிக்கது, ஐம்புலன்களையும் மிக மிக விழிப்பான நிலையில் எப்போதும்  வைத்திருக்கும். அதன் விவேகத்துக்கும், நகர்வுக்கும், வேகத்துக்கும் அந்த விழிப்பு நிலைதான் காரணம். அப்படி மானிடரும் ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்பாக வைத்திருக்க வேண்டும் எனும் தத்துவப்படி, அந்த ஐந்தாம் நாள், பஞ்சமி நாள் நாகபஞ்சமி என்றானது. பொதுவாக பஞ்சமி என்பது சூட்சும சக்திகளுக்கு தோதான நாள் எனும் வகையில் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் நாளாக அமைந்தது.

அதனால் அந்நாளில் நாகத்துக்கான நாளாக அமைத்தார்கள், அன்று பூஜைகள் அவசியம், வழிபாடு அவசியம். நாக வழிபாட்டுக்கு பால் என்பதெல்லாம் அவை புற்றில் ஊற்ற வேண்டியவை, உயிருள்ள நாகத்துக்கு வழங்க வேண்டியவை. நாக சிலை என்றால் பழமும் வெற்றிலை பாக்கு வழிபாடு போதும். சில அர்ச்சனைகள், அலங்காரங்களும் அவசியம்.

நாகத் துதிகளைச் சொல்லி பாடலாம், வேண்டலாம்.

"ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ச கம்பலம் 
ஸங்கபாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் காளியம் ததா 
ஏதானி நவநாமானி நாகானாம் ச மகாத்மனாம் 
சாயங்காலே படேந்நித்யம் ப்ராத(ஹ்)கால விசேஷதஹ 
தஸ்மை விஷபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ நந்தஹ் ப்ரசோதயாத்"
                 எனச் சொல்லி வழிபடலாம்.....

நாக வழிபாடு என்பது மூட நம்பிக்கை அல்ல. ராகு கேது எனச் சொல்லி வைத்த வெறும் ஜாதகமும் அல்ல, அது பிரபஞ்ச சக்தியினை மானிடன் பெற்று நலமும் வளமும் ஆரோக்கியமும் பெற இந்து ஞானியர் ஏற்றிவைத்த ஜோதி. ஞானமாக அவர்கள் போதித்த சூட்சும வழிமுறை.

அதனை இந்துக்கள் உலகுக்கு கொடுத்தார்கள்; அவர்களும் பின்பற்றுகின்றார்கள். இன்று இந்துக்களின் அந்த வழிபாடுதான் மருத்துவ சின்னமாக, ஐநாவின் சுகாதார நிறுவனச் சின்னமாக நிற்கின்றது. அதை கொடுத்தவர்கள் இந்துக்கள்.

பாம்பு வடிவத்தின் மகத்துவம் அப்படியானது, அது ஞானமானது, புரிந்துகொள்ள முடியாத சூட்சும விஞ்ஞானம் அது. அந்த பாம்பு வடிவத்தை பார்த்து உடலில் வரும் மாறுதல், மானிட உடலிலும் அணுக்களிலும் ஏற்படும் மாறுதலை எல்லாம் விஞ்ஞானம் விளக்க, பலகாலம் ஆகும்.

பாம்பு என்பது உயிரை எடுக்க அல்ல, உயிரை உருவாக்கவும் உயிரின் வடிவாகவும், உடலை இயக்கும் வடிவாகவும், உயிரை வாழவைக்கும் வடிவாகவும் ஒரு அரூப சக்தியாய் உண்டு. அதைத்தான் ரிஷிகள் கண்டறிந்து எல்லா மக்களுக்கும் சொன்னார்கள், அந்த பலனை உலகம் கண்டும் வருகின்றது. சித்தர்கள் ரிஷிகள் வழியில் முன்னோர்கள் சொன்னபடி நாகத்தை வணங்கி எல்லா நலமும் பலமும் அடைய வாழ்த்துக்கள்.

நாக பஞ்சமி அன்று யாரும் ஏரோட்ட மாட்டார்கள், காரணம் வயலில் பாம்புகள் அடிபட்டுவிடலாம் எனும் அச்சம் இருந்தது. அந்த அளவு நாகத்தை வணங்கி, காத்த சமூகம் இது.

இந்நாடும் சமூகமும் மதமும் கண்ட வீழ்ச்சிக்கு, ஆரோக்கியமும் ஞானமும் கொண்ட இந்துமக்கள் நோயாளிகளாக அறியாமையில் மூழ்கியவர்களாக மாறிப்போக, நாக  வழிபாடு குறைந்ததும் ஒரு காரணம்.
அதனை மீட்டெடுப்போம்; எல்லா நலமும் அடைவோம்.

உங்களுக்கு எந்த குறைபாடும் உடலில் இருக்கலாம், தீரா நோய் இருக்கலாம், குழந்தை பாக்கியம் தள்ளிப் போகலாம். அவ்வாறு வேதனை இருப்பின், அந்த மன்னாரசாலை நாகராஜா ஆலயம் சென்றுவாருங்கள். எவ்வளவு பெரிய நோயோ குறையோ உடலில் இருந்தாலும், அந்த நாகராஜாவின் அருளால் எல்லாம் குணமாகும் அது சத்தியம், பாம்புகள் காக்கும் சத்தியம் போல, உறுதியான சத்தியம்!!!

வடக்கே காஷ்மீரத்து நாக ஆலயம், மேற்கே தட்சசீலம் (இன்று பாகிஸ்தானில் இருக்கும் அந்த இடம் தட்சன் எனும் நாகத்தால் உருவானது) , கிழக்கே நாகலாந்து தெற்கே நாகர்கோவில், நாகரத்தினத்தை மூக்குத்தியாக கொண்ட கன்னியாகுமரி அம்மன் ஆலயம் என நாற்புரற‌மும் நாகங்களின் அடையாளும் காவலும் கொண்ட தேசம் இது.

அந்த நாகங்களின் பெரும் அருளிலும் காவலிலும் தேசம் செழிக்கட்டும், நாகங்களினால் காக்கபடும் இத்தேசம் ஒவ்வொரு மக்களுக்கும் நல்ல அறிவும் ஆரோக்கியமும் தெளிவும் கொடுக்கட்டும்

அந்த பெரும் அருளில் தேசம் வாழட்டும், நாகத்தின் ரத்தினம் போல் தேசம் ஜொலிக்கட்டும்

நன்றி:பிரம்ம ரிஷியார் ஐயாவின் பதிவில் இருந்து.....
                    - சித்தர்களின் குரல்.

Saturday, July 12, 2025

சடைதரித்தல் தீக்கை

🙏🏻தந்தை_மகனுக்கு_ஆற்றும்ன நன்றி சடைதரித்தல்_தீக்கை
சைவசமய மரபுகளில் குருநாதனே சீடருக்கு தந்தையாவார், இம்மரபினை தவறாது பின்பற்றுபவர்கள் எமையாளும் தருமையாதீனத்து அடியவர்கள் ஆவார்கள்

தருமையாதீன குருபீடத்தில் எழுந்தருளியுள்ள குருமணிகளை அணுகி துறவறம் ஏற்க விரும்பும் அடியவர்களுக்கு சிவாகமத்துள் விதித்தபடி படிமுறையிலான தீக்கைகள் செய்து அவர்களை துறவறத்தில் வழிநடத்தி குருமகாசன்னிதானங்கள்  சிவஞானத் தெளிவை உண்டாக்குவார்கள்

இப்படி சீடருக்கு ஆச்சார்யர் வழங்கும் படிமுறையிலான தீக்கைகளில் ஒன்று சடைதரித்தல் தீக்கையாக தருமையாதீனத்தில் வழிவழியாக பின்பற்றப் படுகிறது

அண்டி வந்த அடியவருக்கு சிவகுருநாதர் காஷாயம், கௌபீனம், வேணுதண்டம், விபூதி பொக்கணம் முதலியவை வழங்கி சீடரின் சிரசை சிகையாகவோ, முண்டிதமாகவோ, சடையாகவோ செய்து, சிவஞான சாத்திரங்களை கைதந்து சிவஞானியாக்க வேண்டும் என்று சிவாகமத்தில் குறிக்கப் படுவதாக தருமையாதீனத்தின் வருணாசிரம சந்திரிகா குறிப்பிடுகிறது

மேலும் *"கவசமந்திரத்தால் சீடரின் சிரசை மறைத்து கொள்ள அவகுண்டம் என்ற வஸ்திரத்தையும் குருநாதர் தருவார்"* என்று சிவாகமம் கூறுகிறது

மேற்சொன்ன விசயங்களில் தருமையாதீன திருக்கூட்ட அடியவர்கள் வேணுதண்டம் தவிர மற்றையவற்றை குருநாதரிடம் பெற்றுவாழும் இயல்புடையவர்களாக இருப்பது காலங்காலமான மரபாகும்

தருமையாதீனத்தில் துறவறம் மேற்கொள்ள விரும்பும் அடியவருக்கு, முதலில் பக்குவத்திற்கு ஏற்ப ஆச்சார்யர் "யாத்திரை காஷாயம்" என்பதனை வழங்குவார்கள், இதன்பொழுது அடியவர் தமது சிகைகளைந்து காவிரியில் நீராடி ஆச்சார்யருக்கு முன்வரும்பொழுது உரிய ஆகமமுறையில் குருமகாசன்னிதானங்கள் அவருக்கு காவிஉடையை வழங்குவார்கள், தற்பொழுது அவர் தமது தாயாகவும் தந்தையாகவும் உடன்பிறந்தாராகவும் எல்லாமாகவும் இனி குருநாதரே இருப்பார் என்ற உறுதியை ஆச்சார்யருக்கு வழங்கவேண்டும் என்று ஆகமம் சாற்றுகிறது

யாத்திரை காஷாயம் பெற்ற அடியவர், அது முதல் பிக்ஷை ஏற்று உண்டு தேசாந்திரம் சென்று பக்குவம் அடைந்து குருநாதரை மீண்டும் அடைவது ஆகம மரபாகும், 

தருமையாதீனத்தில் யாத்திரை காஷாயம் பெற்ற அடியவர்கள் ஆதீனத்திலேயே தங்கியிருந்து, சன்னிதானத்தின் திருவுளப்படி யாத்திரைகள் செய்து குருமகா மகா சன்னிதானத்தின் பரிகலசேடத்தை உணவாக பெற்று உண்டு தருமையாதீன குருமூர்த்தங்களில் சரியாதி தொண்டுகள் செய்து பக்குவம் பெற்று வருவர்,

இந்நிலையில், காஷாயம் தரப்பட்டபோது களைந்த சிகை வளரத் தொடங்கும் போது அதனை மறைத்து கொள்வதற்காக மேற்சொன்னபடி குருமகாசன்னிதானத்தின் திருவுளப் படியான ஒரு நன்னாளில் குருமகாசன்னிதானம் சீடருக்கு *"கவசமந்திரத்தின் மூலம் அவகுண்டமான வஸ்திரத்தை வழங்குகிறார்கள்"*

இதனை தருமையாதீன வழக்கத்தில் *"ஜடபரிவட்டம்"* என்பார்கள், ஆச்சார்யரிடத்து ஜடபரிவட்டம் பெற்ற அடியவர் எப்பொழுதும் அதனை தமது சிரசில் அணிந்து கொள்ளுவது வழக்கமும் மரபுமாகும், 

பின்னாளில் என்றைக்கு அச்சீடருக்கு ஆச்சார்யத்துவம் கிடைக்குமோ அதுவரையிலும் அவர் ஜடபரிவட்டம் இல்லாது குருநாதருக்கு எதிரில் வருவதோ, சுவாமி சன்னதியில் பிரவேசிப்பதோ மரபில்லை!! அவகுண்டம் என்றாலே மூடுதல் என்று பொருள், "அனுட்டான கிரியைகளில் அவகுண்ட முத்திரையை எண்ணி கொள்ளுக", இதன்படி சீடர் தமது சிரசை மறைத்து கொண்டு தொண்டு செய்து வருங்காலத்தில் அவரது சிகையும் வளர்ந்து வரும்,

சிவகமத்தில் கூறிய துறவிகள் சிகைமுடிப்போ, முண்டிதமோ செய்யலாம், சடையும் தரிக்கலாம் என்ற மரபின்படி *"தருமையாதீனத்தின் சிறப்பு அடையாளமாகவே சடைதரித்தல் இருக்கிறது!!*

ஏனைய சைவாதீனங்களான துறைசை, வேளாக்குறிச்சி முதலியவற்றில் முண்டிதமாக செய்து கொள்வதனை பின்பற்றுகிறார்கள், *"தருமையாதீனமே சடை தரித்தலை வழக்கமாக கொண்டிருக்கிறது!!"*

இதன்படி, சீடருக்கு வளர்ந்துவிட்ட சிகையினை  சடையாக கட்டிக் கொள்வதற்கான வழிமுறையை குருநாதரே செய்வது சடைதரித்தல் தீக்கை எனப்படுகிறது

தேவாரத்தில் இறைவரது சடாபாரத்தை பற்றி, *"கந்தம் மல்கு கமழ்புன் சடையாரே!!"*, என்றும் *"நீட வல்ல வார்சடையான் மேய நெடுங்களம்"* என்பது முதலிய திருவாக்குகளால் நமையுடைய பெருமக்கள் கூறுகின்றனர்

இங்கு புன்சடை என்பது சிறிது சிறிதாக அள்ளிமுடிக்கப் பட்ட சடை என்றும், வார்சடை என்பது நீண்டு இருக்கும் சடை என்றும் பொருள் விளங்குகிறது,

*"மருந்து வேண்டில் இவை, மந்திரங்கள் இவை, புரிந்து கேட்கப் படும் புண்ணியங்கள் இவை, திருந்து தேவன்குடி தேவர் தேவு எய்திய அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!!"* என்று இறைவனது திருவேடத்தினை பற்றி பிள்ளையார் கூறுவதனை அப்படியே கைக்கொள்ளும் தருமையாதீன அடியவர்களுக்கு,

*ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானங்கள் தமது திருக்கரங்களாலேயே தமது சீடரது சிரசினை தீண்டி சீடரின் சிகையை புன்சடையாகவும் வார்சடையாகவும் செய்கிறார்கள், இதுவே சடை தரித்தல் தீக்கை எனப்படுகிறது"*

இதன்போது சீடரின் சிகையை சிறுசிறு பகுதியாக எடுத்து அதில் சாம்பிராணி தைலம் முதலிய முக்கிய பொருட்கள் கலந்த கலவையை தடவி சிறுநூல்கொண்டு குருமகாசன்னிதானம் கட்டிவிடுகிறார்கள், இதன் பிறகு சீடரது முழுசிகையும் *"கந்தம் மல்கு கமழ் புன் சடையாகவும் வார்சடையாகவும் தோன்றும்"* இதனை அவர்கள் தமது ஜடபரிவட்டத்தால் மூடி சுற்றி கட்டிகொள்வார்கள்

இப்படி சடையை சுற்றி கட்டி கொள்வதற்கான அனுமதியையும் குருநாதரே உரிய நன்னாளில் வழங்குகிறார்கள், இதன் மூலம் தருமையாதீன திருக்கூட்ட அடியவர்கள், *"அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்ட வார்சடையன்"* போல காட்சி தருவார்கள்

மேற் சொன்ன தேவாரம் *"வட்ட வார் சடையை உடைய இறைவனை அட்டமாசித்திகள் சென்று அடையும் என்று கூறுகிறது!!"* இது போலவே தருமையாதீன அடியவர்களும் தமது புன்சடையை வார்சடையை வட்டமாக கட்டிகொள்கிறார்கள், தருமையாதினத்திற்கே உரிய யோக அமைப்பான பதினாறொடுக்கத்தின் மூலம் அட்டமாசித்திகள் கைவரப்பெறும் யோகத்தையும் பயில்கிறார்கள்

ஆக!!, தேவரத்தில் காட்டப் பெறும் இறைவனது திருக்கோலத்தையே நினைப்பிக்கும் வல்லமை உடையவர்களாக தருமையாதீன குருமகாசன்னிதானங்களும் அவர்களது சீடர்களும் தோன்றுகிறார்கள் என்று இதன் மூலம் தெள்ளிதின் விளங்குகிறது!!

மேற்சொன்ன சடைதரித்தல் தீக்கை இன்று ஆதீனத்தின் திருச்சிராப்பள்ளி மௌனமடகட்டளை விசாரணை சுவாமிகளுக்கும் சீர்காழி சட்டநாதஸ்வாமி தேவஸ்தான கட்டளை விசாரணை சுவாமிகளுக்கும் எமையாளுடைய பெருமானார் 27வதுகுருமகா சன்னிதானங்கள் மூலம் செய்விக்கப் பெற்றுள்ளது

இவ்வரிய காட்சிகள் நாம்வாழும் காலத்திலும் நடக்கின்றது அதனை நாம் காணவும் முடிகிறது என்பதெல்லாம் நம்பால் ஸ்ரீலஸ்ரீ 27வது குருமகா சன்னிதானங்கள் கொண்ட கருணையே அன்றி வேறென்ன!?

*"அருட்குருவாகும் நின் திருக்கூட்டம் வாழ்க!!நற்கோநிரைகள் தெருவாழ் தருமை திருஞான சம்பந்த தேசிகனே!!"*

🔥சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார்  பொற் பாதங்கள் சரணம்🔥

**சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி*

*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*

🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹
🙇ஷிவானி  கௌரி 🙇

திருச்சிற்றம்பலம்🙏🏻❤️

நன்றி: சிவதீபன்

Monday, July 7, 2025

புனுகு என்றால் என்ன?

புனுகு என்றால் என்ன?


(புனுகுப் பூனையிலிருந்து பெறப்படும் அபூர்வ மருத்துவ பொக்கிஷமான புனுகின் மகத்துவங்கள், மருத்துவ ரகசியங்கள், பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கொடுத்த பதிலை தொகுத்து சிறப்பு பதிவாக இன்று சித்தர்களின் குரல்.  பதிவில் பதிவிடுகிறேன்.)

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் சித்த பெருமக்கள்..

புனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் பூனைகளிடம் இருந்து பெறப்படுவதாகும், இந்தப் பூனைகள் குறிப்பிடும் அளவில், ஆப்பிரிக்க தேசங்களில் காணப்படுகின்றன, நமது நாட்டில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள், அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவதே, புனுகுப் பூனைகளின் தனி அடையாளமாக விளங்குகிறது.

ஏனெனில் இதே போன்ற தோற்றத்தில் உள்ள சாதாரணப் பூனைகளையும் சிலர் புனுகுப் பூனைகள் என்று நினைத்து, அவற்றை பிறருக்குத் தெரியாமல் வளர்த்து வருவர். அரிய விலங்காகையால், வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி, குற்றமாகும். தற்காலங்களில் காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டுவதும், பாதைகள் அமைப்பதும், இவற்றின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்து அங்கிருந்து தப்பி, சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிடுகின்றன புனுகுப் பூனைகள். சமவெளிகளில், உள்ள அடர்ந்த முந்திரித் தோப்புகள் மற்றும் நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.

புனுகுப் பூனைகள்:-
----------------------------------

இரவில் விழித்திருந்து இரை தேடும் புனுகுப்பூனைகள், சின்னஞ்சிறு விலங்குகள், முட்டைகள் மற்றும் சில வேர்க் கிழங்குகளை உணவாக உண்பவை. தனிமை விரும்பிகளான இவை எதிரியைக் கண்டால் தாக்கும் இயல்புடையவை. வாசனை எண்ணை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக, புனுகுப் பூனைகளில் இருந்து கிடைக்கும் புனுகை எடுப்பதற்காக, புனுகுப் பூனைகளை வீடுகளில் வளர்க்க முடியாது, அவை மிகவும் கடினமான சிரமம் தரும் ஒரு செயலாகும்.
இவை, முட்டைகளை வேட்டையாடுவதால், இவற்றைக் கொல்ல பண்ணைகள் வைத்திருப்போர், வேட்டை நாய்களைப் பயன்படுத்துகின்றனர். ஆயினும் தனித்து வாழும் இயல்புடையதாக இருப்பதால், புனுகுப் பூனைகள் இனம், இன்னும் முற்றிலும் அழியாமல் இருந்தாலும், எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. புனுகு என்பது, இந்தப் பூனைகளின் சுரப்பிகளில் இருந்து பெறப்படும் ஒரு வாசனைமிக்க சுரப்பாகும். இவற்றை சேகரிக்க அடர்ந்த காடுகளில் வாழும் இந்தப் பூனைகளைப் பிடிப்பது, என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும்.

புனுகின் பயன்கள்:-
----------------------------------
                             வாசனை மிகுதியால், ஆன்மீகத்தில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் இடம்பெறுகிறது. இறைவனின் திருமேனிக்கு புனுகுக் காப்பிடுவது என்பது, மிகவும் விஷேசமான நற்பலன்களைத் தரவல்லது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. சித்த மருத்துவத்தில், உடலில் வியாதிகளைப் போக்குவதில் மற்றும் வாசனைத் திரவியங்கள், வாசனை மணமூட்டிகளில் சேர்க்கப்படுகிறது.

ஏழுமலையானுக்கு உகந்த புனுகு:
------------------------------------------------------------
                               திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில், செய்யப்படும் அபிஷேகத்தில், புனுகு எண்ணை முக்கியமாகப் பயன்படுத்தப்படும்.
தொடர்ந்த தேவைகளுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் புனுகைப் பெறுவதில், கால தாமதங்கள் ஏற்பட்டதால், சில புனுகுப் பூனைகள், திருமலை தேவஸ்தான வன விலங்குப் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அரிய வன விலங்குகளை, வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், தேசிய வன விலங்குத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று, புனுகுப் பூனைகளை, திருப்பதியில் வளர்த்து வருவது, குறிப்பிடத்தக்கது.

வைத்தீஸ்வரன் கோவில்:-
---------------------------------------------
                        திருமுருகனின் அற்புத ஆசி வழங்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி எனும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் பிரசாதமாக வழங்கப்படும் புனுகு எண்ணை உடல் கட்டிகள், பருக்கள் போன்ற சரும வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு உடல் வியாதிகளைப் போக்கும் அருமருந்தாக, தீராத வியாதிகளையும் தீர்க்கும் தன்மை மிக்கதாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.

மேலும் இக்கோவிலில், செல்வமுத்துக்குமார சுவாமி எனப்படும் முருகப் பெருமானுக்கு, அர்த்த ஜாம பூஜை எனும், இரவில் திருநடை அடைப்பிற்கு முன் செய்யப்படும் சிறப்பு பூஜையில், புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம் மற்றும் எலுமிச்சை கொண்டு காப்பிட்டு, பன்னீர் மலர்களால், அர்ச்சித்து, பால் சாதம் மற்றும் பால் நைவேத்தியம் செய்து, இரவில் தரிசித்து வணங்க, உடல் நலம் பெற்று மனம் அமைதியடையும், செல்வம் தளைக்கும் என்பது முருனகடியார்களின் பரிபூரண நம்பிக்கை ஆகும்.

மருத்துவத்தில் புனுகின் பயன்கள்:-
--------------------------------------------------------------
                              சுவாசப் பாதிப்புகள் நீங்க, புனுகை உபயோகித்து, மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள் நம் சித்த பெருமக்கள்.
                 புனுகு, கஸ்தூரி மஞ்சள், பூவரசன் வேர், வெள்ளெருக்கன் வேர், சிருநாகப் பூ மற்றும் வெடி உப்பு. இவற்றில் கஸ்தூரி மஞ்சள் இரு பங்கு கூடுதலாகச் சேர்த்து, பூவரசன் வேர் மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவற்றை புனுகைவிட ஒரு பங்கு கூடுதலாக எடுத்துக்கொண்டு, எல்லா பொருட்களையும் சேர்த்து, சற்று நீர் இட்டு, அம்மியில் வைத்து, நன்கு மையாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த புனுகுப் பசையை, ஒரு வெள்ளைத்துணியின் ஒரு பக்கத்தில் முழுவதுமாக நன்கு தடவி வைக்க வேண்டும், பின்னர் அதை வெயிலில் இட்டு, அவற்றிலுள்ள நீர் எல்லாம் ஆவியாகி, நன்கு காய்ந்ததும், மடித்து சுத்தமான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புனுகு மருந்துத் துணியை, சிறு அளவில் கத்தரித்து எடுத்துக் கொண்டு, அதை சுருட்டி, தீயில் காட்டி, வரும் புகையை, மூக்கில் நன்கு இழுத்து சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில், புனுகு மருந்துத் துணியை தினமும் இரண்டு வேளை, சுருட்டிக் கொண்டு, தீயில் இட்டு, புகையை சுவாசித்து வர, சுவாச பாதிப்புகள் யாவும், நீங்கி விடும். இதன் மூலம், மூச்சு விடுதலில் உள்ள குறைபாடுகள், மூக்கின் நுகர்தலில் உள்ள பாதிப்புகள் எல்லாம் விலகி, உடல் நலமாகும்.

முகப்பருக்கள், தழும்புகளை போக்க:-
-----------------------------------------------------------------
                     சிலருக்கு முகப்பருக்கள் வந்தது தெரியாமல், அவற்றை கை விரல்களால் கிள்ளி விடுவர், அதன் மூலம், அவற்றின் நச்சுக்கள் பரவி, தழும்பாகி முகத்தின் பொலிவை பாதிக்கும் படியாக அமையும்.

இதற்கு சிறந்த தீர்வாக, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி வந்து, இரவில் படுக்கப் போகும் முன், முகத்தை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு, பருக்கள், தழும்புகள் உள்ள இடங்களில் புனுகைத் தடவி, காலையில் எழுந்தவுடன், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர, அதுவரை மன வாட்டம் தந்து வந்த, முகப் பொலிவை பாதித்த பருக்கள் மற்றும் தழும்புகள் எல்லாம் விரைவில், மறைந்துவிடும். முகமும் புத்தெழில் பெரும்புனுகு, கிடைக்கவில்லை என்றால், புனுகு எண்ணையை உபயோகித்தும் பலன்களைப் பெறலாம்.

முகம் பொலிவாக:-
--------------------------------
                      சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து, முகம் களையிழந்து காணப்படும், அவர்கள் புனுகு, ரோஜா மலர்கள், வசம்பு, கஸ்தூரி மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, பூலாங்கிழங்கு மற்றும் சந்தனம் சேர்த்து, நன்கு இடித்து தூளாக்கி, அதை, சிறிது நீர்விட்டு எடுத்துக் கொண்டு, முகத்தில் தினமும் தடவி சற்று நேரம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை அலசிவர, முகத்தின் மாசுக்கள் மறைந்து, பளிங்கு போன்ற முகம், பொலிவாக அமையும்.

புனுகுக் குளியல்:-
-------------------------------
                            வாசனை திரவியங்களால் தண்ணீரை நிரப்பி, அந்த நீரில் நீராடுவது என்பது, உலக அழகிகளுக்கு மட்டும் உரியதல்ல, நமது தேசத்திலும் சிலர் அவ்வண்ணம் குளித்து, தேக பளபளப்பு, நறுமணம் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள்.

வாசனைப் பொருட்கள்:-
------------------------------------------
                              புனுகு, கஸ்தூரி மற்றும் சந்தனம் போன்றவற்றை நீரில் கலந்து, அந்த நீரில் குளித்து வர, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, வியாதிகளின் பாதிப்புகள் அகலும். உடலும் மனமும் புத்துணர்வடையும். மேலும், உடல் நறுமணத்துடன் திகழும். இந்தக் குளியல் குளித்து முடித்த பின்னர், உடலில் நன்கு பசி எடுக்கும்.

புனுகின் பிற பயன்பாடுகள்:-
--------------------------------------------------
                                  புனுகைக் கலந்து தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் மற்றும் புகைப்பான்கள் சிறந்த நறுமணமூட்டியாகவும், மனதை அமைதியாக்கும் தன்மையும் மிக்கதாகத் திகழ்கிறது. புனுகின் மூலம், தயாரிக்கப்படும் எண்ணை, பல்வேறு வாசனை திரவிய உற்பத்தியிலும், மூலிகை மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

பாசிட்டிவ் எண்ணத்தை பலப்படுத்தும்:-
--------------------------------------------------------------------
                             அந்த காலங்களில் நம் முன்னோர்களின் வாசனை திரவியங்களில் புனுகு முக்கியமான இடத்தை பெற்றிருந்தது. இது புனுகு பூனையிடமிருந்து கிடைக்கின்றது.இந்த வகை பூனைகள் சாம்பல் நிறத்தில், அடர்த்தியான வாலும், மேலே புள்ளிகளுடனும் இருக்கும். இவை ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும். இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா ஆகிய இடங்களில் இருக்கின்றன.

இவைகளை வீட்டில் வளர்க்க கூடாது. வீட்டில் வளர்க்க அரசின் அனுமதி பெற வேண்டும்.இந்த வகை பூனைகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை.ஆனால் எதிரிகளை தாக்கும் குணம் கொண்டவை.இவற்றின் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்திலிருந்தும், கழிவிலிருந்தும் புனுகு தயாரிக்கப்படுகிறது.

புனுகின் மனம் கஸ்தூரியின் வாசம் கொண்டிருக்கும்.தண்ணீரில் கரையாது . இது ஒரு நறுமணமூட்டி. புனுகினை சிறிது எடுத்து நெற்றியில் இட்டால் எதிரில் உள்ளவர்களின் எதிர்மறை எண்ணங்கள் மறையும்,திருஷ்டியும் கழியும், பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும், சிலர் இதை வசியம் என்பார்கள், ஆனால் இது உண்மையல்ல.

இதன் பலன்கள் பல, சித்த வைத்தியத்தில் அதிகம் பயன்படுகின்றது.சுவாச பாதிப்பு,  உடலில் கட்டிகள், சிரங்கு, பருக்கள், தழும்புகள் போன்றவற்றை போக்கும். இதை அழகு சாதனங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

புனுகு பற்றிய தெரியாத தகவல்கள்:-
-----------------------------------------------------------------

#புனுகுப்பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை "புனுகு" என்பார்கள். இதனுடன் சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். இதுதான் ஜவ்வாது.

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் முன்னோர்கள்.

வனத்துறைச் சட்டப்படி இத்தகையப் பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

புனுகுப்பூனைகள் காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது. இந்தக் கொட்டைகளைச் சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இது "சீவெட் காபி" (Civet coffee)  என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடனும், வாசனையுடனும் இருக்கும். இதனால் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்தேனிஸியா போன்ற நாடுகளில், புனுகுப் பூனைக் கழிவு காபி கொட்டை ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

மகிழ்வித்து மகிழுங்கள்..  ஆரோக்கியம் 

  இது அரிதான பொருள் என்பதால் கிடைப்பதும் கஷ்டம். விலையும் சற்று அதிகம் தான்.

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்.

        - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
         சித்தர்களின் குரல் shiva shangar

Tuesday, June 3, 2025

அனுஷ்டான மந்திரங்கள்

சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள் 

 ஆசன மந்திரம் :
1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா
2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா
3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா

பஞ்சகலா மந்திரம் :
1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:
2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:
3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம:
4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:
5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:

ஸம்ஹிதா மந்திரம் :
1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும்
2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.

பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :
1. ஈசானம்  : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:
2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம:
4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:

ஷடங்க மந்திரங்கள் :
1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம:
3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம:
4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம:
5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:
6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம:

காயத்ரீ :
1. அஸ்த்ர காயத்ரீ :
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி
தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
2. சிவ காயத்ரீ :
ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்

ஸப்தகோடி மஹாமந்திரம் : 

1. நம:  2. ஸ்வாஹா 3. ஸ்வதா
4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட்

3.9 கர ந்யாஸம் : 

3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள்  கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.

3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும்.

3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.

3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.

3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம்.

3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.
3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.

3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர்.
3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும்.

3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும்.
3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது.
3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.

3.10 அங்க ந்யாஸம் :
3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.

3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும்.
3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும்
3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.
3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.

3.13. விசேஷ அர்க்யம்: 

3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.
3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.

3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.

3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.

3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.

3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம்.
3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.

3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும்.
3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும்.

3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.

3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை
கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்

3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி.

3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.

3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல்.

3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான  உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.

3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.

3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம்

3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.
3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும்.

3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை.

3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்தல் சிறப்பு

3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும்

3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.
3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்; 

சிவாச்சாரியார்

 

.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.  ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ,

செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.

3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள்.