Wednesday, August 26, 2015

ஆனந்தம் -- இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்ன?



 ஆனந்தம் --  இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்ன?

ஒரு பொருள் வேண்டும் என்றால் என்ன?  அந்த பொருள் நம்மிடையே இல்லை என்றுதானே பொருள். இல்லைநிலை என்றால் துன்பநிலை  என்றுதானே பொருள். அந்த பொருள் வேண்டும் என்று நினைபதற்கு முன் நம்மிடையே இருந்தது என்ன?. வேண்டுதல் இல்லாநிலை தானே. அதுதானே ஆனந்தநிலை.  அது எப்போது காணமல் போகிறது?.  வேண்டும் என்ற ஆசை எண்ணம் தொன்றிய பின்னர் தானே.  பொருளினால் இன்பம் துன்பம் மட்டுமே ஏற்படும்.  ஆனால் ஆனந்தம் ஏற்படாது.  வேண்டும் என்ற ஆசை இல்லாவிட்டால் எல்லாம் நம்மிடமே இருக்கிறது என்றே அர்த்தமாகிறது.  இது விளங்க ---  நாம் ஆசைப்பட்டு வேண்டி தேடிய  ஒரு பொருள்  கிடைத்துவிட்டால் அதனால் மகிழ்ச்சி உண்டாகிறது.  அது கிடைகவிட்டால் துன்பம் உண்டாகிறது.  இது இரண்டும் தாண்டிய நிலை ஆனந்தநிலை ஆகும்.

                                      வேண்டும் என்ற ஆசை துடங்கி நிறைவேறி வேண்டாமை நிலையை அடைகிறது. பின்னர் வேறு ஒரு வேண்டும் என்ற ஆசை துடங்கி வேண்டாமை நிலையை அடைகிறது.  அப்படி பார்த்தல் வேண்டாமை நிலையே நிரந்தர உண்மையாக உள்ளது. அதுவே நாம் இயற்கை இயல்பாக உள்ளது.  நாம் இந்த உண்மை அறியாமையால் வேண்டும் என்ற நிரந்திரம் இல்லாத ஆசைநிலையில் துன்பநிலையில் அகப்பட்டு மாய்ந்து போகிறோம்.  வேண்டாம் என்ற ஆசையற்ற ஆனந்தநிலையே சுத்த அறிவுநிலை ஆகும். நாம் எப்போதும் ஆனந்தநிலயிலேயே இருக்கிறோம் என்பதை மறந்து அறியாமையால் நம்மிடையே உள்ள ஆனந்தத்தை வெளியே பொருள்கள் என்னும் மாயை மூலம் தேடி அடையமுடியாமல் சிக்கி ஆனந்தத்தை அறியாமையால் இழந்து தவிக்கிறோம்  ஜகம் அனைத்தும் மாயையே அதனால் இன்பதுன்பம் ஏற்படுமே தவிர ஆனந்தம் ஏற்படாது.  நாம் எப்போதும் ஆனந்த நிலையான சுத்தசிவநிலையில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்து ஆசைபடாமல்,
 மொவுனமாக, மொனமாக,  சும்மா இருப்பதே சுகம் . அதுவே நிரந்திர உண்மை அறிவுநிலை ஆகும்.  வேண்டாம் என்ற உண்மை அறிவே தத்துவங்களை உடைத்து சுத்த சிவநிலையாம் சித்திநிலையை அடைய உதவும்.   அதனால் தான் வள்ளல் பெருமானார் வேண்டுதல் வேண்டாமை வேண்டும் என்று பாடுகிறார்.

Uyir. 
8/11/2010

Tuesday, August 25, 2015

I’m Too Busyfor Spiritual Practice

Swami Sivananda: “An ignorant worldly-minded man says, ‘I have to do my duties. I have to educate my four sons and three daughters. I have to please my employer. I have heavy duties in the office. I have toremit money to my widowed sister. I have a large family. I have six brothers and five sisters. Where is the time for performing Sandhya and Japa and study of religious books? There is no time even to breathe. I have no leisure. Even during holidays I have to work. I bring office papers to my house and work at night till eleven o’clock. I do not want Sannyasa or any Yoga. The office work and the maintenance of my family is itself Yoga.’ ”

Do you really call this duty? It is mere slavery. It is bondage. The man is afraid of his superior at every moment. Even in his dreams he meets his office mates and superior and posts figures in the ledger. This is not sense of duty. This man cannot pray even for a second. He has no time to read a single verse of the Gita. There is not a single thought of God even in a month. He takes tea, has his food, sits at the table for writing, sleeps and procreates. Thus his whole life passes away like this. This is selfish workThis is not duty. This is work done for gain and satisfaction of the lower appetites. Anything done under compulsion and expectation is not duty. You must not interpret slavery as duty. You must not take selfish works that are done through attachment, greed and passion as duty. You will be doing a great injustice. This is self-created drudgery.
“An officer or clerk earns money by taking bribes, and when his conscience pricks, he feeds some Brahmins and says, ‘I have done my duty today. I have fed fifteen Brahmins and have given each twenty-five paise.’ This is his idea of duty. He adds, ‘Why should I take Sannyasa and practise Yoga? I will earn tons of money and do charity. This is the best kind of life.’ Poor deluded soul! May God give him good understanding!”
(The above article is an excerpt from Swami Sivananda’s “Kingly Science, Kingly Secret”: pg. 48)

Mata Amirtanandamayi“Sri Krishna was a householder. He had many responsbilities, but He was the embodiment of detachment. Sri Rama was also a householder and in addition to that a king. He was the embodiment of dharma. King Janaka (father of Sita, the holy consort of Lord Sri Rama) was a king and a householder. He, too, was a jivanmukta or liberated soul. They all found enough  time to do tapasand to lead a spiritual life even in the midst of all their court duties andf other problems.
“If we say that we have no time due to our problems andfamily responsibilities, that is simpply an escape. That means that we have no desire to follow the path of spirituality. We are lazy and want to avoid work. So immersed in maya, so trapped in its net, we do not even realise that there is a reality hgher than the body and the external world around us. We have no eyes to see it, no ears to hear it and no heart to feel it.
“If we want to be more honest and sincere with ourselves, it would be better if we were bold enough to admit, ‘I’m not interested in spiritual matters,’ rather than twisting the truth by saying,‘I have no time.’ When we really have the desire to do something, time and the proper conditions will be at our disposal. Time and circumstance follow desire.’ 
(The above article is an excerpt from Mata Amirtanandamayi’s “Awaken, Children!, Vol. 4: pg. 180) 




Wednesday, August 19, 2015

மிஸ்டிக் செல்வம் சித்தர் இருப்பிடம் 1






Ist Guru Pooja & Kumbabizeham

 


More ...https://www.mysticselvam.com/first.htm






more ... https://www.mysticselvam.com/fifth.htm







More: https://www.mysticselvam.com/sixth.htm


தொடர்புகள்

ஸ்ரீம் ராமையா ராஜா சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம் மஹா சித்தர் தவ பீடம்
ஓம் சிவசிவ ஓம் ஆதீனம்
கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட்,
தூத்துக்குடி மாவட்டம் - 628102
செல் : 9865891862, 9789212377
பஸ் ஸ்டாப் :
வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல்
தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து
தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம்
150, 87, 87A, ராஜா
ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146)
அடைக்கலாபுரம்   :   பஸ் எண் - 2
செபத்தையாபுரம்   :   பஸ் எண் - 52 A
முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்),
வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது.



Thank: https://www.mysticselvam.com
/

Friday, August 14, 2015

Vanni Tree-Shiva and Shani Eshwara .

Tree-Shiva and Shani Eshwara 

 Vanni Trees at the North West  Corner -bearing the Fruit -adjacent to the Naga stathala , at Marundeeshwar Temple Tiruvamiyur Chennai.( pic taken on 16th Jan 2010 Mattu Pongal day)
 Vanni Tree at the North West  Corner -at the Naga stathala 
Below-
The BILWA , trifoliate leaf to Lord Shiva -
TR/Dt 17th Jan 2011. 
Posted after  "Som Pradosh" at 8pm today.
The Vanni-(tamil) or Shammi (sanskrit) ,
Indian Mesquite (English)
WE attended the evening Darshan at Shree Shree Marundeeswar Temple -Tiruvanmiyur Chennai on  Sunday, 16th Jan 2011 on "Mattu Pongal" day and paid respects at all the shrines-inc. the Sarveshwara pooja conducted between 4-6pm.

The Vanni Tree  in north west corner of the temple is a wonderful sight to behold bearing fruits at this time of the year. This Tree is  mentioned in the annals of this temple and is linked to Lord Shiva’s anugraha kripa  with links to Agastya Muni in temple history.

This is an extremely  serene temple compound , which is lined with so many varieties of trees inc the Vanni- (Shammi) tree seen in the north west location. Entry into the main courtyard starts with Shree Tripura Sundari - Chockayanayaki on right side (North side), Shree Vinayaka, Shree Subramanya adjacent and in front and then the main Shiva sanctum sanctorum -
The gate at the western side has the Sthamba  and Nandi -vahaan of Lord Shiva facing the main deity.
The Pradakshina of the temple is so soothing as it has a quietude and peace that transcends all and impacts as the entire  boundary is  lined with so many  varieties of trees. The temple book by Shri M.Rajagopalan mentions the origin of "Sthala vriksha", when trees were indeed respected. In time, when cities took over from an agrarian and forest culture at least the main trees were carefully protected and so it is here. The Vanni trees in the North East area are worshipped in this beautiful ancient temple that exudes total Peace and Tranquility.
Shiva and Shani- Eshwara are linked in some our prayers quoted below-in our scriptures - Shiva Roopa & Rudra Roopa. Rudra means energy of heat-fire and so it is with this Vanni Tree which scholars have researched and state  has the capacity to store  heat energy. Thus it is prescribed for Vedic Homas. Also for other purposes inc. medicinal and takes special  place in the Panchavati group viz. meaning a group of 5 sacred trees.
Om Vrikhsha Naam - Pataye Namaha; Harikese byo as in Sri Rudram Chanting where the very hair (locks) of the Lord is compared to Trees dancing as in the symbolic Dance of Lord Shiva. The Bilwa Tree and Vanni Tree are both most associated with Lord Shiva. The sacred Bilwa trifoliate sees the bilwa stotra of Sri Adi Sankaracharaya dedicated to Lord Shiva.The  Vanni (Shammi tree)  is especially seen in Southern Temples in temples and associated with Lord Shiva, Lord Subramanya and to Shani deva.- the Navagraha Lord Shani-Eshwara,  the Karaka of discipline, removal of ego and ignorance as in  Rudra Roopa of lord Shiva to bring in Order and Justice especially in Kali yuga .

 

PRAYER TO SHANI DEVA

Namasthe Konasaunsthaya Pingalaya Namosthute
Namasthe Shiva Roopaya Bhairavaya
Namasthe Vishnu Roopaya Krishnaayacha
Namasthe Bhabru sadnaya Suryaputraya
Namasthe Rudra Dehaya
Namasthe Kaalakajaye Namasthe Yamasanjaya
Shanishwaraya Namosthute.
Naashayii twachaayacha,
Papani Tathani Rogani Prayaschattu,
Prasadam Kuru Devescha
Dinaisya Pranathaswayacha.


Shani Deva's names include.

Bhabruhu 'Reddish'  as in the Sri Rudram.

Roudraya has many meanings ; one is Destroyer of ills & remover of sorrows by strict discipline –when ignorance is removed.

*************************************************************************
From Mahabharat Epic
-During exile period the Pandava Arjuna 's weapons are kept hidden in a Shammi tree it—
Then in last part of the exile in Mahabharata on Vijayadasami day, when the exile period is over,  Arjuna takes out his Weapons & Divya Astras..

RGDS
TR
thank: https://prakruti-mothernature.blogspot.com/2011/01/vanni-tree-shiva-and-shani-eshwara.html

Thursday, August 13, 2015

நாகபஞ்சமி !

நாகபஞ்சமி ! 19/08/2015
---------------------

18 naga chathurti
19 naga panjami

Any milk powder offerings towards unfortunate children's will be good and any simple respects upon NAGA PRATHISTA area will be good too.
It is not just a reptile but more than that indeed...!
Symbolically it may representing Kundalini but mysteriously it has some other subjective hidden values...
Some may say it is superstition but our ancestors are not stupid...
Naga Logam , Naga DEvathai's or parallel dimensions are ever exists ...The world that we are living has a strong connections towards all these dimensions ; some are visible and some are invisibles... thank Shivabaraty Bairava 



நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை
வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி” அதென்ன திதி?

பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த
முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

பெளர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பெளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர்.

இவை முறையே...
1. பிரதமை.
2. துவி்தியை.
3. திருதியை.
4. சதுர்த்தி.
5. பஞ்சமி.
6. சஷ்டி.
7. சப்தமி.
8. அஷ்டமி.
9. நவமி.
10. தசமி.
11. ஏகாதசி.
12. துவாதசி.
13. திரயோதசி.
14. சதுர்தசி.
15. அமாவாசை அல்லது பெளர்ணமி.

சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப் படுகின்றன. அஷ்டமி, நவமி திதிகளில் நல்ல காரியங்கள் எதையும் செய்வது நற்பலனைத் தராது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே.. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது. 


போகர் அருளிய பரிகார விவரங்களை பார்ப்போம்.

நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே
உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல்
வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், அடுத்த சில நாட்களில் வர இருக்கும் ஆவனி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று, நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும்  சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்....

அபூர்வ ஷக்தி வாய்ந்த நாகம்மன் மந்திரம்.
--------------------------------------------------------------------
ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.

ஆடி மாதத்தில் நாகபஞ்சமி விரதம் பெண்களால் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறந்து போன 5 சகோதரர்களுக்காக, சகோதரிகள் நாகராஜன் பூஜை செய்து சகோதரர்களை உயிர் பெறுமாறு செய்தனர். ஆடி மாத வளர்பிறையில் பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைபிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் குறையின்றி வாழ்வார்கள்,
திருமணம் தடை , புத்திர தடை, கோர்ட் வழக்குகள் உள்ளிட்ட அனைத்துவிதமான  பிரச்னையும் நீங்க  எளிய பரிகாரம் 

அன்றைய தினம் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாகர் , புற்று உள்ள கோவிலில் நாகர் வழிபாடு செய்து நாகருக்கு பால் , பலம் நாகருக்கு சாத்தும் பூமாலை உள்ளிட்ட அபிஷேக சாமான்கள் வாங்கி தரும்போது நாக தோஷம் அனைத்தும் விலகும். 


அன்று வரும் நாக பஞ்சமி அன்று நாகர் வழிபடு செய்வோம் , நல் வாழ்வு பெறுவோம் ...

நாகபஞ்சமி ,கருட சதுர்த்தி சிறப்பு பதிவு
ஆடி அமாவாசை பண்டிகை கொண்டாட்டங்களை ஆரம்பித்துக் கொண்டு வருகிறது. ஆடி அமாவாசை அன்று நோன்பு நோர்ப்பது கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம் மக்களுக்காக.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்” தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்து எந்த வித
தோஷமும் இல்லாமல் வம்சம் தழைத்தோங்க பூஜை. இன்று துள்ளரிசியும், வெல்லமும் எள்ளும் சேர்த்தரைத்தபிரசாதம் நைவேத்யம் செய்து எறும்புகள் சாப்பிட
போட்டு விடுவோம். எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 
பிள்ளைகள் நலனுக்காக உப்பில்லாமல் சாப்பாடு. அடுத்த நாள் கருட பஞ்சமி. இது கிட்டத்தட்ட எங்களுக்கு (தெலுங்கர்களுக்கு) ரக்‌ஷா பந்தன் போல.

இந்த நோன்புக்கு ஒரு கதையும் உண்டு. ஒரு வீட்டில் 7 அண்ணன் தம்பிகள் அவர்களுக்கு கறிவேப்பிலை கொத்துப்போல ஒரே ஒரு தங்கை.
அம்மா, அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட தங்கையைக் கண்போல பார்த்தக்கொள்வது அண்ணன்கள் தான்.
அண்ணன்கள் காலையிலேயே வயலுக்கு சென்று விட வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கை அண்ணன்களுக்கு கஞ்சி எடுத்துச் செல்வாள்.

அன்றும் அப்படித்தான் கருட பஞ்சமி என்றுத் தெரியாமல் வீட்டை சுத்தம் செய்து, ஒட்டடை அடித்து துவாரங்களை எல்லாம் அடைத்துவிட்டு கஞ்சி கலயத்தை தலையில்
சுமந்துக்கொண்டு வயலுக்கு செல்கிறாள். அப்போது ஆகாய மார்கமாக கருடன் ஒன்று பாம்பை கவ்விக்கொண்டு செல்கிறது. இறுக்கமான பிடி தாளாமல் பாம்பு விஷத்தைக்
கக்க அது கஞ்சி கலயத்தில் விழுகிறது. அது தெரியாமல் அதை அவர்களுக்குகொடுத்துவிட அவர்களும் குடித்து இறக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக 7 அண்ணன்களும் 
இறந்துவிட தானும் அதைக் குடித்து இறக்க முற்படும் பொழுது ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வந்து அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் செய்வித்து அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காது, வலது புஜத்தில் வைக்கச்சொல்ல அவர்களும் உயிர்தெழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி நாங்களும் உடன் பிறந்தவர்களுக்காக வேண்டிக்கொண்டு 7 முடி போட்ட தோரம் அணிந்து புற்றுமண் கொண்டு வந்து உடன் பிறந்தவர்களின்
வலது காது, புஜத்தில் வைத்து பூஜை செய்து அவர்களுக்கு பரிசளித்து வேண்டி பூஜை செய்வது வழக்கம்.

நம்ம உடன்பிறப்புக்கள் எல்லாம் வெளி நாட்டில் வெளியூரில் தானே! அதனால் அவர்களுக்கெல்லாம் சேர்க்கும் படி சாமிக்கே வைத்து பூஜை செஞ்சாச்சு. அம்ருதா அண்ணனுக்கு
பூஜை செஞ்சு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்திட்டாங்க.

https://supertamilan.blogspot.com/2014/04/blog-post_7982.html#sthash.4EBUFUrG.dpuf

https://pudugaithendral.blogspot.com/2010/08/blog-post_14.html

தமிழக அமாவாசை தலங்கள

ஆடி அமாவாசை - Amavasai in Aadi Month - what is the significance? 

Why I'm. Posting this Audi  amavasi .. All my friends want to get blessing from there forefathers & friends through cow  .. ( giving food or fruits)



தமிழக அமாவாசை தலங்கள்!

ஆக.14ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும்,  அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.  இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று  ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573- 221 223.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம்  என்ற  பெயருண்டு.  அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து  தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம்
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,
தொலைபேசி: 04652- 246 223.

அழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர்.  அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.

ஆனைமலை மாசாணி அம்மன்:  பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை  சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி  வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில்  படுத்த நிலையில் காட்சி தருகிறாள்.  இவள்  நீதி தெ#வமாக விளங்குகிறாள்.
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253- 282 337, 283 173.

திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் .
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04369-250 238.

அனுமந்தபுரம் வீரபத்திரர்:  தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார்.  பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி  அமைதி பெற்றார்.  இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,            
தொலைபேசி: 044- 2746 4325.

பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர்.  ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,
தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.

தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர்.
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,
பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு  திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு  பாவம் நெருங்காது என்பது பொருள்.  அதனால்  இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு  பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை  முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ.,
அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192.

செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம்  இது.  திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன்  இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர். 
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து  4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள்  சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம்  இங்கு நடக்கிறது.   பழம், பட்டு, பூக்கள் என 108  திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி  சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும். 
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த  இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள  சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார்.  பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பா
Image result for ஆடி அமாவாசை
[8/12, 8:37 PM] harimanigandan v:
On 14/08/2015