Thursday, June 1, 2023

ஞான சர நூல் (பாகம் -1)------------------------




Thank to FB

ஞான சர நூல் (பாகம் -1)
-------------------------------------------
                         மகாதேவனாகிய சிவபெருமானே ஆதி யோகியாக வந்து அன்னை பார்வதி தேவிக்கு அளித்த இந்த சிவரகசியம் தான் சரசாஸ்திரம் என்று உயர்வாக சித்தர்களால் போற்றப்படும் "சர வித்தை" என்பது. நம் சித்தர்களின் குரல் அன்பர்களின் நலம் கருதி முழு ரகசியங்களையும் இரண்டு பாகங்களாக்கி உலக நன்மைக்காக பதிவிடுகிறேன். எங்கு நீங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷ ரகசியங்கள் இவை. சிவனருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும்....
பயன்படுத்தி கொள்ளுங்கள்......

சிவ ஸ்வரோதயம்.
--------------------------------

(01) ஸ்ரீசங்கரர், பார்வதி, கணபதி இவர்கள் அனைவரையும் வணங்கி சம்சாரதாரகராகிய சற்குருவையும் பரமாத்மாவையும் நான் பூஜிக்கிறேன். 

(02) அன்னை பார்வதி தேவி மஹாதேவனாகிய ஸ்ரீ சங்கரரைப் பார்த்து, ஹே... தேவாதி தேவனாகிய சங்கரரே? என்மேல் கருணை கூர்ந்து அனைத்து காரியங்களையும் சித்தியாக்கக் கூடிய ஞானத்தை எனக்குச் சொல்லுங்கள்.....

(03) ஹே.... தேவரே!
இந்த பிரம்மாண்டம் எப்படி உற்பத்தியாயிற்று?
இதனுடைய போஷணை எதனாலுண்டாகிறது?
பிறகு லயத்தை எப்படியடைகிறது?
இப்படியாயுள்ள இந்தப் பிரம்மாண்டத்தின் நிர்ணயத்தை எனக்குச் சொல்லும்?
         என்றார்.....

(04) ஈஸ்வரியைப் பார்த்து சங்கரர்-சொல்லுகிறார்.....
               ஹே.... தேவி! தத்துவத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தியாகிகிறது. தத்துவத்தினாலேயே இதனுடைய போஷணையும் லயமுமுண்டாகிறது. இந்தப் பிரம்மாண்டத்தின் நிர்ணயமும் தத்துவத்தினாலேயே அறியப்படுகிறது.

(05) உடனே பார்வதி தேவி கேட்கிறாள்.... தத்துவவாதிகளெல்லாம் பிரம்மாண்டத்திற்கு தத்துவமே மூலகாரணமென்று நிச்சயிக்கிறார்கள். ஆனால் தத்துவமென்பது என்ன? அதன் ஸ்வரூபமென்ன? இதை எனக்கு விளங்கச் சொல்லவேண்டும்.

(06) மாயைக்கு அன்னியமாயும் நிராகாரமாயும் சுயப்பிரகாசமாயும் ஏகமாயும் சர்வாந்தர்யாமியாயுமிருக்கிற பரமாத்மாவினிடத்திலிருந்து ஆகாசமுண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று.
         
(07) வாயுவிலிருந்து அக்கினி, அக்கினியிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பிருதிவி, இவ்விதமாயுண்டான இந்த ஐந்து தத்துவம் பிரத்தியேகம். ஐந்தைந்தாக விஸ்தாரமுண்டாயிற்று.

08) அந்தந்த தத்துவங்களினாலே இந்த பிரம்மாண்டம் உற்பத்தியாயிற்று. அவைகளினாலேயே போஷணையும், கடைசியில் அவைகளிலே லயத்தையுமடைந்து நிற்கின்றது.

(09) ஹே.... சுந்தரியே! இந்த ஐந்து தத்துவங்களினாலே உற்பத்தியாகிய தேகத்தில் இந்த ஐந்து தத்துவங்களும் சூட்சும ரூபமாயிருக்கின்றன. அதை யோகிகளே அறிகிறார்கள்....

(10) இப்பொழுது அகாராதி ஸ்வரங்களின் உச்சாரத்திற்கு மூல காரணமாகிய இந்த சரீர ஸ்தவ ஸ்வரமோ அதைப்பற்றி சொல்கிறேன். ஸ்வரஞானம் உண்டாயிருக்கையில் ஹம்ஸ சாரத்தின் (சுவாசம் வெளியே வரும்போது ஹம் என்றும், உள்ளே வாங்கும்போது ஸம் என்றும் உச்சாரமாகிறது) ஸ்வரூபத்தின் பேரில் யோகிகளுக்கு பூத பவிஷ்ஷிய வர்த்த மானம் எனப்பட்ட திரிகால ஞானமுண்டாகிறது.

(11) அத்தியந்த ரகசியமானதும் சர்வோபகாரமும், ஸாரபூதமானதுமான ஸ்வரோதயத்தின் ஞானம் எல்லா ஞானத்திலும் மேலான சிரோன்மணியாயிருக்கிறது.

(12) இந்த ஸ்வரஞானம் மிக்க சூக்ஷமமாயிருந்து அதிமேலான போதமாயும் சத்தியமாயும் விளங்கக்கூடியதாயிருக்கிறது. நாஸ்தீக ஜனங்கள் ஆச்சரியப்படுகிற இந்த ஞானமானது ஆஸ்தீக ஜனங்களுக்குப் பெரிய ஆதாரமாயிருக்கிறது.

சிஷ்யன் லக்ஷணம்.
------------------------------------

(13)  சாந்தன், சுத்தன், ஆசாரஸம்பன்னன், குருபக்தி தத்பரன், மனக்களங்கமற்றவன், கிருதஞ்ஞன் (அதாவது உபகாரத்தை மறவாதவன்) இப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு ஸ்வர ஞானத்தை உபதேசிக்கவேண்டும்.

(14) துஷ்டன், துர்ஜனன், குரோதி, அவிஸ்வாசி, குருபத்தினியை இச்சிக்கிறவன், தைரியமில்லாதவன், துராசாரன் இப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு ஸ்வரஞானம் கொடுக்கலாகாது.

(15) ஹே.... தேவி! நம்முடைய சரீரத்திலிருக்கப்பட்ட ஸ்வரத்தின் ஞானத்தை நான் உனக்குச் சொல்லுகிறேன் கேள்.... ஸ்வர ஞானத்தின் யோகத்தினால் எல்லா  ஞானமும் பிராப்தியாகிறது.

(16) சர்வவேதம், சாஸ்திரம், சங்கீதம் இவைகள் ஸ்வரத்தினுடைய ஆசிரயத்தினாலேயேயிருக்கின்றன. மூன்று உலகங்களும் ஸ்வரத்தினிடத்திலேயே இருக்கின்றன. ஸ்வரமானது ஜகத்தினுடைய ஸ்வரூபமாயிருக்கிறது.

(17)  புருஷனில்லா கிரகமும், சாஸ்திரப்பயிற்சி இல்லா முகமும், தலையில்லா சரீரமும் எப்படி சிறக்காதோ, அவ்விதம் ஸ்வர ஞானமில்லாதவன் சோதிடம் சிறக்காது.

(18) எல்லா நாடிகளுடைய பேதங்கள் பிராணதத்துவத்தின் பேதம், சுழுமுனையீறாக உள்ள நாடித்திரயங்களின் பேதங்களை யார் அறிகிறானோ அவனே முக்தியை அடைகிறான்.

(19) ஸ்வர ஞானத்தில் தேர்ந்த பண்டிதர்களில் அநேகருடைய மத வியவகாரத்திற்கும், நிராகார பரமார்த்தத்திற்கும் வாயுவினுடைய பலம் அவசியமென்றும், சிலர் பரமார்த்தத்திற்கு வாயுபலம் அவசியமில்லையென்றும் சொல்லுகிறார்கள்.

(20) சர்வ பிரம்மாண்டம்,  பிண்டம் இவைகள் ஸ்வரத்தினாலே நிர்மாணமாயிற்று. ஜகசிருஷ்டி சம்ஹார கர்த்தாவாகிய ஈஸ்வரனும் ஸ்வரரூபமே.

(21) ஸ்வரஞானத்தைப்போல ரகசியமானது வேறொன்றுமில்லை. ஸ்வாஞானமே முக்கியமான தனம். ஸ்வரஞானத்தைவிட சிரேஷ்ட ஞானம் வேறொன்றிருப்பதாக பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை.

(22) ஸ்வரஞானத்தின் பலத்தினால் சத்ரு நாசம், மித்ர ஸமாகமம், லட்சுமி பிராப்தி, கீர்த்தி, சுகம் இவைகள் பிராப்தமாகின்றன. 23 ஸ்வர பலத்தினால் ஸ்திரீ, புத்ராதி, சம்பதி பிராப்தி, ராஜதரிசனம், தேவதா சித்தி முதலியவைகளும், ராஜவசியமும் உண்டாகிறது.

(24) ஸ்வரbபலத்தின் பேரில் தேசயாத்திரை, போஜனம், மலமூத்திர விசர்ஜனம் செய்யவேண்டும்.

(25)  ஹே... தேவி! எல்லா சாஸ்திரங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், வேதாந்தங்கள் இவைகளில் ஸ்வரஞானத்தைவிட சிரேஷ்ட தத்துவம் வேறொன்றுமில்லை.

(26) நாமரூபமுள்ள சகல பதார்த்தங்களும் மாயை. எதுவரையில் ஸ்வர ரூபதத்துவஞானம் உண்டாகவில்லையோ, அது வரையில் இந்த ஜீவன் மாயையினால் மோகிக்கப்பட்டு மூடனாகிறான்.

(27) இந்த ஸ்வரோதய சாஸ்திரம் எல்லா சாஸ்திரத்திலும் உத்தமோத்தமமானது. ஆத்மா (பஞ்சகோசாத்மக ஜீவன்) இதுவே ஒரு கும்பமாயும், இதில் பிரகாசிக்கிற இந்த ஸ்வர சாஸ்திரம் மகா தீபத்தினுடைய சுவாலை போலிருக்கிறது.

(28) இந்த ஸ்வரோதய சாஸ்திரம் தனக்குத்தானே தெரிந்து கொள்ளவேண்டியதே தவிர, அன்னியர்களின் தர்க்கத்திற்காக ஏற்படவில்லை.

(29)  இந்த ஸ்வரோதய சாஸ்திரத்தில் விசேஷமாய் திதி, நக்ஷத்திரம், வாரம்,கிரஹம், தேவதை, முதலியவைகள் ஒன்றுமில்லை. இதில் பத்திரை, விதிபாதம், வைதிருதி, முதலிய கெட்ட யோகங்களின் தோஷங்களுமில்லை.

(30) ஹே... தேவி! இந்த ஸ்வர சாஸ்திரத்தில் எவ்விதமான கெட்ட  யோகங்களும் கிடையவே கிடையாது. இனி உண்டாகிறதுமில்லை. ஸ்வரத்தினுடைய பூர்த்தியான சித்தியுண்டானால் எல்லாமே சுபபலனாகவே முடிகிறது.

(31) அறிவாளிகள் முதலில் சவிஸ்தாரமாய் தேகத்திலிருக்கப்பட்ட நாடிகளின் அநேக ரூபங்களை அறிய வேண்டும். அப்படி அறிகிறபடியால் சாரீர ஞானமுண்டாக ஏதுவாகிறது.

(32) நாபிஸ்தானத்திலிருக்கப்பட்ட கர்ணிகையின் முனையிலிருந்து 72,000 நாடிகள் உத்பன்னமாயிருக்கிறது. இவைகளெல்லாம் சரீரத்திலிருக்கின்றன.

(33) இந்த நாடிகளில் பாம்பைப்போல் சயனித்துக்கொண்டிருகிற குண்டலினி என்னும் நாமத்தையுடைய ஒரு சக்தி இருக்கிறாள். அதன் மேல் பத்து நாடிகளும், கீழே பத்து நாடிகளுமிருக்கின்றன.

(34) இருபக்கங்களிலும் இரட்டை இரட்டையாய் சேர்ந்து நான்கு கோணலாகப் போகிற நாடிகளிருக்கின்றன. இதுவும் முதலில் சொல்லிய 20 நாடிகளும் சேர்ந்து 24 நாடிகளாகின்றன.

இவைகளில் பத்து வாயுக்களையும் நடத்தும் பத்து நாடிகள் முக்கியமானவை.

(35) கோணலாக மேலும் கீழுமிருக்கப்பட்ட எல்லா நாடிகளும் வாயுவுடன் தேகத்தில் சக்கிராகாரமாயிருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் பிராணனுடைய ஆஸிரயமிருக்கின்றன.

(36) மேலே கண்ட எல்லா நாடிகளிலும் பத்து முக்கியமானவை. அவைகளில் இடை, பிங்கலை, சுழுமுனையாகிய இம்மூன்றும் முக்கியமானவைகளேயாகும்.

(37) 4-வது காந்தாரி, 5-வது ஹஸ்தி ஜிவ்ஹா, 6-வது பூஷா, 7-வது எஷஸ்வினி, 8-வது அலம்புஷா, 9-வது கூஹு, 10-வது ஷங்கினி, இவ்விதமாக பத்து நாடிகளையறியவும்.

(38) இடை இடது பக்கத்திலும், பிங்கலை வலது பக்கத்திலும், சுழுமுனை மத்திய பாகத்திலும், காந்தாரி இடது நேத்திரத்திலுமிருக்கிறது.

(39) ஹஸ்தி ஜிவ்ஹா வலது நேத்திரத்திலும், புஷா வலது செவியிலும், எஷஸ்வினி இடது செவியிலும், அலம்புஷா முகத்திலுமிருக்கின்றன.

(40) கூஹு லிங்கத்தினிடத்தும், சங்கினி குதத்திலும், இவ்விதமாகப் பத்து நாடிகளும் சரீர துவாரங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன.

(41) இடை, பிங்களா, சுழுமுனை இந்த மூன்று நாடிகளும் பிராண மார்க்கத்தை தழுவிக்கொண்டிருக்கின்றன. இவ்விதமாகப் பத்துநாடிகள் சரீரத்தில் முக்கியமானவை.

(42) இப்பொழுது நாடிகளின் ஆஸிரயத்திலிருக்கிற சரீரத்தின் வாயுக்களின் பேர்களை சொல்லுகிறேன். பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற இந்த ஐந்து வாயுக்கள் முக்கியமானவை.

(43) நாகன், கூர்மன், கிருகதன், தேவதத்தன், தனஞ்சயன் இந்த ஐந்தும் உபபிராணங்கள். இப்பொழுது இந்தப் பத்து வாயுக்களின் ஸ்தானங்களை சொல்லுகிறேன். பிராணன் எப்பொழுதும் இருதயத்திலும், அபானன் குதஸ்தானத்திலுமிருக்கின்றது.

(44) சமானன் நாபிஸ்தானத்திலும், உதானன் கண்ட மத்தியத்திலும், வியானன் சர்வ அங்கத்திலுமிருக்கின்றது.

(45) பிராணன் முதல் ஐந்து வாயுக்களுடைய ஸ்தானங்களைச் சொன்னோம். இப்பொழுது நாகன் முதல் ஐந்து வாயுக்களுடைய ஸ்தானங்களைச் சொல்லுகிறேன்.

(46) நாகன் ஏப்பத்தையும், கூர்மன் நேத்திர உன்மீலனத்தையும், கிருகதன் தும்மலையும், தேவதத்தன் கொட்டாவியையும் உண்டாக்குகின்றன. இவைகள் வாயுஸ்தானத்திலிருந்து தங்கள் தங்களுடைய காரியங்களை நடத்துகின்றன.

(47) தனஞ்சயன் மாத்திரம் சர்வ அங்கத்திலும் வியாபித்துக் கொண்டு பிராணன் வெளிப்பட்ட பிறகும் சரீரத்தை விட்டுப் பிரிகிறதில்லை. இவ்விதமாக இந்த தச வாயுக்கள் ஜீவரூபமாய் சகல நாடிகளிலும் வியாபிக்கின்றது.

(48) புத்தியுள்ளவன் இடை, பிங்கலை, சுழுமுனை இந்த மூன்று நாடிகளின் பேரில் தேகத்தில் பிராணன் சஞ்சரிக்கிறதை அறியவேண்டும்.

(49) இடைநாடி வாம பாகத்திலும், பிங்கலை தக்ஷிண பாகத்திலுமிருக்கின்றது. இடது பக்கத்து நாடிகளெல்லாம் இடைகலை எனவும், வலது பக்கத்து நாடிகளெல்லாம் பிங்கலை எனப்படும்.

(50) இடைகலையில் சந்திரனும், பிங்கலையில் சூரியனுமிருக்கின் றன. சுழுமுனையில் ஹம், ஸ எனும் மிஸ்ர ரூபமாய் சாக்ஷத் சம்புவானவரிருக்கிறார்.

(51) ஸ்வரமானது வெளிப்படுக்கையில் ஹகார சப்தத்துடனும், உள்ளுக்குப்போகும்பொழுது ஸகார சப்தத்துடனும் செல்கின்றன. இதில் ஹகாரம் சிவரூபம். ஸகாரம் சக்திரூபமென்றறியவும்.

(52) வாமநாடியை செலுத்துகிற சந்திரன் சக்தி ரூபமாயும், தக்ஷிண நாடியை செலுத்துகிற சூரியன் சிவரூபமாயுமிருக்கின்றார்கள்.

(53) சுவாசமானது ஸகாரத்திலிருக்கும் பொழுது எந்த தானம் கொடுத்தாலும் இந்த லோகத்தில் கோடானு கோடி பலத்தை தருவதாயிருக்கின்றது.

(54) இந்தப்பிரகாரமாய் யோகியானவன் களங்கமற்ற சித்தத்துடனிருந்து சந்திர சூரிய நாடி மார்க்கமாய் சர்வத்தையுமாறியுவான்.

(55) ஜீவன் ஸ்திரமாயிருக்கும்பொழுது தத்துவசோதனை செய்யவேண்டும். ஸ்திரமில்லாதிருக்கும் பொழுது செய்யக் கூடாது. எவனொருவன் ஸ்வஸ்த சித்தத்துடன் தத்துவ சோதனை செய்கிறானோ, அவனுக்கு இஷ்டசித்தியும், மகா லாபமும், ஜயமும், பிராப்தமாகின்றது.

(56) எவனொருவன் சந்திர சூரியன் இவர்களின் சரியான அப்பியாசம் செய்கிறானோ, அவனுக்கு பூதபவிஷ்ஷிய ஞானம் ஹஸ்தகதமாகிறது.

(57) வாமபாகத்திலுள்ள இடை நாடியானது அமிர்த ரூபமாய் சர்வ ஜகத்தையும் புஷ்டி செய்கிறதாயிருக்கிறது. தக்ஷிணத்திலுள்ள பிங்களா நாடியானது சர்வ ஜகத்தையும் உத்பன்னம் செய்கிறது.

(58) நடுவிலிருக்கப்பட்ட சுழுமுனை நாடியானது சர்வ கர்மத்திற்கும் நிஷேதிக்கப்பட்டதும் குரூரமுமுள்ளது. வாமநாடி சர்வ சுபகாரியத்திலும் சித்தியுள்ளது.

(59) வீட்டிலிருந்து வெளியே போகும்போது வாமநாடி சுபம். உள்ளே போகும்பொழுது தக்ஷிண நாடி சுபம். சந்திரன் சமம் சூரியன் விஷமம்.

(60) சந்திரன் ஸ்திரீ, சூரியன் புருஷன். சந்திரன் வெண்மை நிறம், சூரியன் நீலவர்ணம். இதனாலே எல்லா சௌபாக்கிய காரியங்களும் சந்திர ஸ்வரத்தில் செய்யவும்.

(61) சூரிய நாடியில் உக்கிரமானக் காரியங்களையும், சுழுமுனையில் பக்தி முக்தி பலதாயகமான கர்மங்களையும் செய்யவும்.

(62) சுக்லபக்ஷம் ஆதியில் சந்திரன், கிருஷ்ணபக்ஷம் ஆதியில் சூரியன், இவ்விதக் கிரமமாய் பிரதிபதையிலிருந்து மும் மூன்று நாள் சந்திர சூரியர்களுடைய ஸ்வர உதய காலம் பலமானது.

(63) சந்திரன், சூரியன் இந்த ஸ்வரங்கள் கிரமமாய் சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் இதுகளில் தனித்தனி 2.5 நாழிகை நடக்கிறது. இவ்விதமாய் 24 ஆவர்த்தி (60 - நாழிகை) இரவும் பகலுமாகின்றது.

(64) தனித்தனி இந்த 21-நாழிகையில் ஐந்து தத்துவங்களும் நடக்கின்றன. எந்த பிரதிபதையில் முதலில் சந்திர உதயம் சொல்லியிருக்கிறதோ, அப்பொழுது சூரிய உதயமும் சூரிய உதய காலத்தில் சந்திர உதயமுமானால் அசுபம்.

(65) சுக்லபக்ஷம் பிரதிபதையில் முதலில் சந்திரனும், கிருஷ்ண பக்ஷம் பிரதிபதையில் முதலில் சூரியனும் சுபம். இதனாலே யோகியானவன் ஏகாகிரசித்தத்துடன் சந்திர சூரியர்களுடைய ஸ்வரத்தையறிய வேண்டும்.

(6)  இரவில் சந்திர ஸ்வரத்தை நடத்தக்கூடாது. பகலில் சூரிய ஸ்வரத்தை நடத்தக்கூடாது. இவ்விதமான அப்பியாசத்தை எவன் செய்கிறானோ அவன் தான் யோகி.

(67) சூரியனால் சூரியனும், சந்திரனால் சந்திரனும் கட்டுப்படுகிறது. சந்திரனை நிறுத்தவேண்டுமானால் இடது பக்கமாய்ப் படுக்க வேண்டும். அல்லது இடது கக்கத்தில் யோக தண்டத்தை அமுக்கிப்பிடிக்கவேண்டும். இவ்விதமாக சூரியனை நிறுத்த வலது பக்கமாய்ப் படுப்பதுடன் வலது கக்கத்தில் யோக தண்டத்தை அமுக்கிப் பிடிக்க வேண்டும். இக்கிரியையை யார் ஒருவன் அறிகிறானோ அவனுக்கு மூன்று உலகங்களும் வசியமாகிறது.

(68) சந்திர திதியில் சந்திரமார்க்கமாய் உதயமும், சூரியநாடி மார்க்கமாய் ஹஸ்தமனமுமானால், அப்பொழுது அநேக நல்ல குணங்கள் உத்பன்னமாகின்றன. இதற்கு நேர் விரோதம் எப்பொழுதாகிறதோ, அப்பொழுது அநேக தோஷங்கள் உண்டாகின்றன. இதனால் அது சுபகாரியங்களுக்குத் தள்ளப்பட்டது.

(69) வியாழன், வெள்ளி, புதன், திங்கள், இந்த வாரங்களில் இடைகலை சர்வ காரியங்களுக்கு சித்திதாயகமாயிருக்கிறது. அதிலும் சுக்கில பக்ஷமாயிருந்தால் ரொம்பவும் விசேஷம்.

(70) சிலர் புதன்கிழமை சுழுமுனை நாடி நல்லதென்கிறார்கள். ஞாயிறு, செவ்வாய், சனி, இந்த தினங்களில் தக்ஷிண நாடி பிங்கலை) சரகாரியத்திற்கு அதி உத்தமம். அதிலும் கிருஷ்ணபக்ஷமாயிருந்தால் மிக்க விசேஷம்.

(71) முதலில் வாயு தத்துவம், இரண்டாவது அக்கினி, மூன்றாவது பிருதிவி, நான்காவது அப்பு, ஐந்தாவது ஆகாசம், இவ்விதமாக ஒவ்வொரு 2.5 நாழிகையிலும் கிரமமாய் உதயமாகின்றது.

(72) ஒவ்வொரு 2.5நாழிகைகளிலும் ஐந்து தத்துவங்களும் உதயமாகின்றன. இவ்விதமாக இடை, பிங்கலை இரண்டிலும் ஐந்து தத்துவங்கள் உதயமாகின்றன.

(73) இரவும் பகலும் 60 நாழிகை. இதில் சந்திரனும் சூரியனும் சேருங்காலம் சங்கிரமணமெனப்படும். அவ்வாறு 12 சங்கிர மணம். இந்த பன்னிரண்டும் 12 லெக்கினமெனப்படும். இதில் ரிஷபம் ,கடகம், கன்னி,விருச்சிகம், மகரம், மீனம் இவைகள் சந்திரனுடையவை.

(74) மேஷம், சிங்கம், கும்பம், துலாம், மிதுனம், தனுசு, இவை சூரியனுடையவை. இவைகளினால் சுபா சுபங்களை நிர்ணயிக்கவும்.

(75) கிழக்கு, வடக்கு, இந்தத் திக்குகளில் சூரியனிருக்கிறான். சந்திரன் மேற்கு, தெற்கு திக்குகளிலிருக்கிறான். இதனாலே தக்ஷிண நாடியில் சூரிய ஸ்வரம் உதயமாயிருக்கையில் தெற்கு மேற்குத் திக்கில் போகலாகாது.

(76) வாம நாடியில் சந்திரஸ்வரம் உதயமாயிருக்கையில் கிழக்கு வடக்குத் திக்குகளில் போகலாகாது. மீறிப்போனால் அவனுக்குச் சத்ருபயம் தவிர, போனவன் திரும்பமாட்டான்.

77 அதனாலே ஹிதத்தை அபேக்ஷிக்கிறவன் மேலே நிஷேதிக்கப்பட்டிருக்கிற திசைகளில் போகலாகாது. எந்த ஸ்வரத்திற்கு எத்திசை நிஷேதிக்கப்பட்டிருக்கிறதோ அதில் போகிறவனுக்கு மரணம் சம்பவிக்குமென்றறியவும்.

(78) சுக்கில பக்ஷம் துதியையில் சூரியஸ்வரம் நடக்கும்பொழுது சந்திர தரிசனமானால், லாபகரமானதும் நல்ல விஷயத்தில் சுகமும் உண்டாகும்.

(79) எந்த நாளில் சூரிய ஸ்வர உதயம் சொல்லப்படுகிறதோ, அதில் சூரிய ஸ்வரமும், சந்திர ஸ்வர உதய நாளில் சந்திரனும் நடந்தால் எல்லாக் காரியங்களும் சித்தியாகிறது. காலமானது இரவாயிருந்தாலும் பகலாயிருந்தாலும் சரி.

(80) சந்திர ஸ்வர காலத்தில் சூரியனும், சூரிய ஸ்வர காலத்தில் சந்திரனும் நடந்தால் பயம், கலகம், ஹானி, சுபகாரியத்திற்கு தடை முதலியவைகள் உண்டாகும்.

81 சூரிய ஸ்வர காலத்தில் அர்த்தமாகாதவைகளும் நிச்சயமாய் அர்த்தமாகும். சந்திர ஸ்வரமாயிருந்தால் அர்த்த ஞானம் உண்டாகமாட்டாது.

விபரீத லக்ஷணம்.
---------------------------------

(82) சூரியோதய காலத்தில் ஸ்வர உதயம் விபரீதமானால் (சந்திரனுடைய இடத்தில் சூரியன், சூரியனுடைய இடத்தில்,

(83) சந்திரன்) அதன் விபரீத பலன் சொல்லுகிறேன். முதல் நாள் விபரீத ஸ்வரம் நடந்தால் மனக்கிலேசம், 2-ம் நாள்

(84) தனஹானி, 3-ம் நாள் பிரயாணம், 4-ம் நாள் இஷ்ட நாசம், 5-ம் நாள் ராஜவித்துவம்சம், 6-ம் நாள் சர்வ நாசம், 7-ம் நாள் வியாதி துக்கம், 8-ம் நாள் மரணம்.

(85) காலை மாலை சாயரக்ஷை இம்மூன்று காலத்திலும், மேல் சொன்ன 8 நாளும் ஸ்வரம் விபரீதமாய் நடந்தால் கெட்டபலன் என்றறியவும். யாதேனும் மாறுதலானால் சுபபலமென்றறியவும்.

(86) காலையிலும் மத்தியானத்திலும் சந்திரனும், சாயரக்ஷை சூரியனுமிருந்தால் அப்பொழுது ஐயமும் லாபமும் உண்டாகும். விபரீதமானால் அசுபமென்றறியவும்.

(87) வலது, இடது, இந்தப் பக்கங்களில் எந்தப் பக்கத்தில் ஸ்வரம் நடக்கிறதோ அந்தப் பக்கத்துக் காலை முதலில் வைத்து பிரயாணம் செய்தால் காரிய சித்தியாகும்.

(88) சந்திரக்கலை நடக்கும்போது முதலில் சம அடி 2, 4, 6-ம் சூரியக்கலை நடக்கும்போது 3, 5, 7, (விஷமம்) இவ்விதமாக அடிவைக்கவும். பூர்ணபாதத்தை முன்வைத்துப் பிரயாணம் செய்தால் சித்தியாகும்.

(89) தூங்கி எழும்பொழுது, எந்தப்பக்கத்தில் ஸ்வரம் நடக்கிறதோ அந்தப் பக்கத்துக் கையினால் முகத்தைத் தடவ, இச்சித்த பலன் கைகூடும.

(90) அன்னியருக்கு ஒரு வஸ்து கொடுக்கும்பொழுதும், அன்னியரிடமிருந்து வாங்கும்பொழுதும், வீட்டினின்று வெளியே போகும் பொழுதும், எந்த ஸ்வரம் நடக்கிறதோ அந்தப்பக்கத்துக் கை, காலை முதலில் உபயோகிக்கவும். இவ்விதம் செய்தால் காரியம் உத்தமமாகும்.

(91) இப்படி செய்தால் காரியத்தில் ஹானியும் கலகமும் உண்டாகிறதில்லை. சத்துருக்களினால் யாதொரு தீங்கும் நேரிடாது. பிரயாணத்தில் யாதொரு சங்கடமுமில்லாமல் வீட்டிற்கு சுகமாய்த் திருப்பலாம்.

(92) குரு, பந்து, ராஜன், மந்திரி, இவர்களிடத்தில் வேலையிருக்கும்பொழுது காரியத்தை பூர்ண பாகத்தினால் ஆரம்பிக்கவும். அப்படிச்செய்தால் காரியம் நம் இஷ்டம்போல் நடக்கும்.

(93) அக்கினி தாஹம், திருட்டுக்கொடுக்கிறது, அதர்ம கிருத்தியம், வாதி நிக்கிரஹம் இவைகளை சூன்னிய நாடியில் செய்யவும். இவ்விதம் செய்கிறவனுக்கு லாபம், ஜெயம், சுகம், இவைகள் உண்டாகின்றன.

(94) தூரதேசத்திற்குப் பிரயாணம் சந்திர ஸ்வரத்திலும், சமீப இடத்திற்குப் பிரயாணம் சூரிய ஸ்வரத்திலும் செய்யவேண்டுமென்பது சிலர் அபிப்பிராயம்.

(95) முதலில் சொல்லப்பட்டதும், லாபகாரியமும், யுத்தமும்,

(96) பூர்ண ஸ்வரத்தில் செய்தால் காரிய சித்தியும், சூன்னியத்தில் காரிய ஹானியும் உண்டாகுமென்று சர்வஞ்ஞராகிய ஸ்ரீ சங்கரருடைய வசனம்.

(97) விவகாரம், உச்சாடன கர்மம், வஞ்சகம் செய்கிறவர்கள், கோபித்துக்கொண்டிருக்கிற எஐமானன் தரிசனம், திருடர்களுக்கு எதிர்ப்படல், இச்சமயங்களைப் பூர்ண ஸ்வரம் பயங்கரத்தை யுண்டாக்கும். ஆதலால் அவர்களுக்கு முன் சூன்னிய நாடியை வைத்து நிற்கவேண்டும்.

(98) தூரதேசப் பிரயாணத்தில் சந்திர ஸ்வரம் நிர்விக்கினமாய் இஷ்ட சித்தியைக் கொடுக்கும். திரும்புகையில் சூரியநாடி மிகவும் நல்லது.

(99) ஸ்வர விசேஷத்தினால் அயோக்கியனுக்கு யோக்கியதையும், யோக்கியனுக்கு அயோக்கியதையும்,உண்டாகின்றபடியால் மனுஷனானவன் தன் காரியத்திற்கு யோக்கியமான நாடியை உபயோகிக்க வேண்டும். தவிரவும் எப்படி வாயு இருக்குமோ அப்படி நடக்கவேண்டும்.

(100) சந்திர ஸ்வரம் நடக்கும்பொழுது அன்னியர்கள் செய்த அபகாரத்தை சகிக்கிறான். சூரிய ஸ்வரத்தில் பலவானையும் வசியம் செய்கிறான். சுழுமுனை நாடி நடப்பு காலத்தில் மோக்ஷமுண்டாகிறது. இவ்விதமாக ஒரு தெய்வம் மூன்று விதமாயிருக்கிறது.

(101) பகலிலாவது, இரவிலாலது சுபம் அல்லது அசுபகாரியமிருந்தால் காரியத்திற்கு தகுந்த ஸ்வரத்தை நடத்திக் கொள்ளவும்.

இடைகலை:-
----------------------

(102) ஸ்திரமாகிய காரியங்கள், அலங்காரம், தூரதேச கமனம், ஆசிரம தருமம், கிரகம் வாங்கல், சாமான் வாங்கல், இதுகளுக்குச் சந்திரநாடி உத்தமம்.

(103) துறவு, கிணறு, குளம் வெட்டல், கால் நாட்டல், தேவதா பிரதிஷ்டை, யாத்திரை, தானம், கல்யாணம், வஸ்திர தாரணம், அலங்கார தாரணம் இவைகளுக்கு சந்திரநாடி உத்தமம்.

(104) சாந்தி கர்மம், பௌஷ்டி கர்மம், திவ்விய மருந்து, ரசாயனம், பந்துக்கள் எஜமானன் தரிசனம், சிநேகிதன் சேர்க்கை, வியாபாரம், தான்னிய சேர்க்கை இவைகள் சந்திர நாடியில் சுபம்.

(105) கிரகப்பிரவேசம், சேவை, கிருஷி, விரை தெளித்தல், இன்னும் சுபகாரியங்கள் சந்திர நாடியில் உத்தமம்.

(106) வித்தியாரம்பம், பந்து தரிசனம், உபநயனம்,

(107) மோக்ஷம், தர்மம், தீக்ஷை, மந்திரசித்தி, காலவிக்ஞானம், வேத பாராயணம், சதுஷ்பாதம் (ஆடு, மாடு, குதிரை) வீட்டிற்குக் கொண்டு வருதல், வியாதி சிகிக்ஷை, எஜமானனை அழைத்தல் முதலியவைகளுக்கு சந்திரநாடி சுபம்.

(108) முதல் முதல் யானை குதிரை ஏறுதல், அவைகளைவாங்கி கட்டுதல்,

(109) பரோபகாரம், நிதிஸ்தாபனம், சங்கீதம், வாத்தியம், கேளிக்கை, இவை ஆரம்பித்தல், சாஸ்திர விசாரம், பட்டணம் அல்லது கிராமம் இவைகளுள் பிரவேசித்தல், திலகதாரணம் நிலம் வாங்கல் இவைகளுக்கு சந்திர நாடி சுபம்.

(110) துக்கம், சோகம், விஷாதர், ஜூரம், மூர்ச்சை இவைகளும், ஸ்வஜன சேர்க்கை, எஜமானன் சேர்க்கை, அன்னபானாதிகளுக்கு வேண்டியவையும், விறகும், வாங்கல் இவைகள் சந்திர நாடியில் சுபம்.

111 ஸ்திரீகள் வளையல் முதலானது அணிதல், மழை ஆரம்பம்

(112) குருபூஜை, விஷமிறக்கல். யோகாப்பியாசம் இவைகள் சந்திரநாடியில் ஆரம்பித்தால் சித்தி. மேலும் இந்த நாடியில் வாயு, தேயு, ஆகாசம் இந்த மூன்று தத்துவமும் நிஷேதம்.

(113) மேலே சொன்னக் கிருத்தியங்களெல்லாம் பகல் இரவு எந்தக் காலத்தில் செய்தாலும் சித்தி. எல்லா சுபகாரியங்களும் சந்திர நாடியில் சுபம்.

பிங்கலை:-
------------------

(114) கடினமானதும், குரூரமானதும், வித்தையைப் படித்தலும்,

(115) படித்துவைப்பதும், ஸ்திரீ ஸங்கமம், வேசி கமனம்,

(116) கப்ப லில் ஏறுவது, துஷ்ட கிருத்தியம், மதுபானம், வீரமந்திரங்களின் உபாசகை, தேசவித்துவம்ஸம், விரோதிக்கு விஷம் கொடுத்தல், சாஸ்திர அப்பியாஸம், கமனம், வேட்டையாடல், மிருகங்களின் சண்டை.

(117) சூதாடல், குதிரை, யானை, இரதம் இவைகளை சித்தம் செய்கிறதாவது அல்லது அவைகளில் எறுதல்,

(118) திருடல், எந்திரம்

(119) தந்திரம்,கோட்டை, மலை, இவைகளின் மேல் ஏறுதல், சிலம்பம் பழகுதல், மாரண உச்சாடன முதலான ஷட் கர்மம், எட்சணி எட்சவேதாளம், பிசாசு, விஷப், இவைகளின் நிலாரணம், கழுதை, ஒட்டை, எருமை, யானை, குதிரை இவைகளில் ஏறுதல், ஆற்றைக் கடத்தல், தீவிரமான மருந்து, லிபி எழுதுதல் இதுகளுக்கெல்லாம் தக்ஷிணநாடி உத்தமம்.

(120) மாரணம், மோஹனம், ஸ்தம்பனம், வித்வேஷணம், உச்சாடனம்

(121) வசீகரணம், பிரேரணம், ஆகர்ஷணம், க்ஷோபம், தானம், கிரய விக்கிரயம், பிரேத ஹரணம், சத்துரு நிக்கிரஹம், போகம், ராஜ தரிசனம், போஜனம், ஸ்நானம், சத்துருவிடத்தில் சண்டை இவைகளுக்கு பிங்கலை நாடி உத்தமம்.

(122) போஜனத்தினால் அக்கினி மந்தம் ஏற்படுதல், ஸ்திரீ வசீகர ணம், சயனித்தல் இவைகள் சூரிய ஸ்வரத்தில் செய்யவும்.

(123) சாராம்சம் குரூரமானதும், சாமானதுமான காரியங்களெல்லாம் சூரிய ஸ்வரத்தில் செய்தால் சித்தி. இதில் யாதொரு சந்தேகமில்லை.

சுழுமுனை:-
--------------------

(124) ஸ்வரமானது க்ஷணநேரம் வலத்திலும் இடத்திலும் செல்லும் போது சுழுமுனையின் காலமென்றறியவும். இந்த சுழுமுனை எல்லா காரியத்தையும் நாசம் செய்கிறதாயிருக்கிறது.

(125) சுழுமுனை நாடியிடத்தில் பிரளயகால ரூபமாகிய அக்கினி எப்பொழுதுமிருந்துகொண்டிருக்கிறபடியால் அது விஷத்திற்கு சமானமாய் காரியாரம்பங்களுக்கு நிஷேதமாயிருக்கிறது. ஆகையால் அதில் யாதொரு காரியம் செய்தால் நாசமாகிறது.

(126) எப்பொழுது கிரமம் கப்பி இரண்டு நாடிகளும் சென்றுக ண்டிருக்கிறதோ அப்பொழுது அவனுக்கு அசுப பலனென்றறியவும்.

(127) யாருக்கு நாடியானது க்ஷணநேரம் வலதும் க்ஷண நேரம் இடதுமாய் செல்லுகிறதோ அவனுக்குச் சங்கடம் வந்ததென்றறியவும்.

(128) எப்பொழுது இரண்டு நாடிகளினுடைய சஞ்சாரம் உண்டாகிறதோ, அக்காலம் விஷத்திற்கு சமானமாயிருக்கிறபடியால் அவ்வித சுழுமுனை நாடியில் எப்பேர்ப்பட்ட குரூரமும் சாந்தமுமான காரியங்கள் செய்யலாகாது. அது நிஷ்பலனாய் முடியும்.

(129) ஜீவிதம், மாரணம், லாபம், நஷ்டம், பிரஷ்ணை, ஜெயம், அப ஜெயம், இவ்விதமான கேள்விகளை ஸ்வரம் விபரீதமாய் நடக்கும்பொழுது செய்யலாகாது. ஈஸ்வர ஸ்மரணை மாத்திரம் செய்யவும்.

(130) ஈஸ்வர ஸ்மரணை செய்த பிறகு யோகாப்பியாசம் முதலாகிய பரமார்த்தீக கிருத்தியங்கள் செய்யவும். ஜெயம், லாபம், சுகம், இவைகளில் இச்சையுடையவர்கள் பரமார்த்தீகத்தைத் தவிர வேறு காரியம் செய்.

(131) சூரிய ஸ்வரத்தில் சுழுமுனை நாடி செல்லும்பொழுது சாபம் அல்லது வரம் கொடுத்தால் அது நிஷ்பிரயோஜனமாகும்.

(132) நாடிகளினுடைய சங்கிரமண காலத்திலும், தத்துவங்களின் சலன காலத்திலும் தானம் முதலாகிய புண்ணிய கர்மங்கள் செய்யவேண்டும். சுபகாரியங்கள் செய்யலாகாது.

(133) எந்தக்காலத்தில் விஷம ஸ்வரத்தின் உதயமாயிருக்கிறதோ அப்பொழுது யாதொரு காரியத்தையும் மனதில் நினைக்கக் கூடாது. விஷம ஸ்வரத்தில் யாரொருவன் பிரயாணம் செய்கிறானோ அவனுக்கு மரணம் சம்பவிக்கிறது. அநேக விதமான கிலேசங்கள் பிராப்தமாகிறது. இதற்கு சந்தேகமில்லை.

(134) முன்னும், இடது பக்கமும், ஊர்த்துவமும் சந்திரன் பலவான். வலது பக்கமும், பின்னும் கீழும் சூரியன் பலவான். ஆகையால் வித்வான் பூர்ண சூன்னிய ஸ்தானங்களை விசாரணை செய்யவேண்டும்.

(135) சந்திர ஸ்வர காலத்தில் வருகிற தூதன் இடது பக்கம், மேல்பக்கம், அதே பாகத்தில் வந்தால் சுபம். அவ்விதமே சூரிய ஸ்வர காலத்தில் பின்னால் வலது பக்கம் கீழ் பாகத்தில் வந்தால் சுபயென்றறியவும்.

(136) அனாதியாயும் நிஷ்கிரியையாயும் நிட்சலமாயுமுள்ள சுழுமுனை

(137) விஷம சந்தியானது பரதத்துவமாகிய பிரம்மத்தில் லீனமாகிறது.

(138) அதை சாதுக்கள் சந்தியா என்று சொல்லுகிறார்கள். பிரசித்தமாகிய வேதத்தை வேதமென்று சொல்லுகிறதில்லை. காரணம் அதனிடத்தில் வேத தத்துவமில்லை. எதனாலே பரமாத்மாவை அறியப்படுகிறதோ அதற்குத்தான் வேதமென்று சாதுக்களால் சொல்லப்படுகிறது. பிராமணன் பகல் இரவு இவைகளின் சந்தியில் ஸந்தியாவந்தனம் செய்கிறான். இதற்கு சாதுக்கள் ஸந்தி என்று சொல்லுகிறதில்லை. ஆனால் சுழுமுனை நாடியிலிருக்கப்பட்ட பிராணனைத்தான் ஸந்தி என்பார்கள்.

நாடிபேதம்:-
-------------------

(139) ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றப்பட்ட தேவாதி தேவனே! உங்களுடைய இருதயத்திலிருக்கப்பட்ட ரகசியத்தை எனக்குச் சொல்லவேண்டும்.

(140) ஹே.... பார்வதி! அத்தியந்தம் ரகசியமாகிய ஸ்வா ஞானத்தைத் தவிர வேறு ரகசியமில்லை. இதுதான் நமது இஷ்ட தெய்வம். எந்த யோகியானவன் ஸ்வர அப்யாசியோ அவனே சிரேஷ்ட யோகி.

(141) பஞ்ச தத்துவத்திலிருந்து சிருஷ்டி, உத்பன்னமும் லயமுமாகிறது. இதனாலேயே பஞ்ச தத்துவம் முக்கியமானது. நிர்குணமாகிய பரமாத்மா இந்த ஐந்து தத்துவத்திலிருந்தும் வேறாக இருக்கிறார்.

(142) யோகியானவன் அப்பியாச யோகத்தினால் ஸ்வரத்திலுள்ள தத்துவங்களின் பெயரை அறியவேண்டும். யாரொருவனுக்கு தத்துவத்தினுடையதும் ஸ்வரத்தினுடையதும் பூர்ண ஞானமிருக்கிறதோ அப்பேர்ப்பட்ட யோகி பூதங்களினுடைய துஷ்ட கின்னங்களை சகஜமாய் அறிகிறான்.

(143) பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், இந்த ஐந்து பூதங்களே பஞ்ச தத்துவம் பஞ்ச பூதங்களே இந்த ஜகமாயிருக் கிறது. இந்தப் பஞ்ச தத்துவத்தை யார் அறிகிறானோ அவனே பூஜிக்கப்பட்டவன்.

(144) பூலோகம் முதல் சத்தியலோகம் வரையிலுள்ள சர்வலோகத்தின் ஜீவராசிகளின் தேகத்தில் தத்துவங்கள் வெவ்வேறுயில்லை. எல்லாவற்றிலும் பஞ்சபூதம் ஒரே மாதிரியாயிருக்கிறது. ஆனால் சரீரத்திலுள்ள நாடிகள் மாத்திரம் வெவ்வேறாயிருக்கின்றன.

(145) இடைகலை, பிங்கலையில் ஐந்து தத்துவங்களினுடைய உதயம் ஐந்தாயிருக்கிறது.
       ஹே.... சுந்தரியே! அந்த தத்துவத்தினுடைய ஞானத்தை எட்டுவிதமாய் உனக்குச் சொல்லுகிறேன்.

(146) முதலில் தத்துவத்தினுடைய சங்கை. 2-வது சுவாசத்தினுடைய ஸந்தி.

(147) 3-வது ஸ்வரத்தின் சின்னம். 4-வது ஸ்தானம். 5-வது தத்துவத்தின் நிறம். 6-வது பிராண நிலை. 7-வது வாசனை 8-வது சுவாசம் செல்லும் அளவின் லக்ஷ ணம், இந்த 8 விதமாய் சராசரத்தில் வியாபித்து நிற்கின்றது.
       ஹே..... பார்வதி! இந்த ஜகத்தில் ஸ்வர தத்துவ ஞானம் முக்கியம், மற்றது சிரேஷ்டமல்ல.

(149) யோகியானவன், பிரபாத காலமுதல் ஸ்வரத்தையும் அதன் தத்துவ உதய காலத்தையும் மிகவும் ஜாக்கிரதையாய் கவனிக்கவேண்டியது. எந்த காரியம் செய்தாலும் ஸ்வரத்த னுடைய அனுஸந்தானத்திலேயே இருக்கவேண்டும். ஸ்வர ஞானமுடைய யோகியானவன் கேவலம் காலக்ஷேப நிமித்தம் கர்மம் செய்கிறானே யொழிய அவனுடைய லக்ஷியமெல்லாம் ஸ்வரத்தினிடத்திலேயே இருக்கும்.

(150) தத்துவ ஞானம் உண்டாக வேண்டியதற்காக ஷண்முகி முத்திரையை அப்பியசிக்கவும். அது எவ்விதமென்றால், கைகளின் பெருவிரல் இரண்டினால் காதையும், நடுவிரல் இரண்டினால் நாசியையும், தர்ச்சினி இரண்டினால் கண்களையும், மற்ற விரல்களினால் வாயையும் அழுத்திக்கொண்டு இருப்பதற்கு ஷண்முகி யென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

(151) இவ்விதம் செய்வதினால் ஐந்து தத்துவங்களினுடைய ஞானமுண்டாகிறது. இதில் 5-விதமான நிறங்கள் காண்கின்றன. 1-மஞ்சள் 2-வெள்ளை 3 - சிவப்பு 4 - நீலம் 5-பலவர்ணம், இதில் பிருதிவி -மஞ்சள், அப்பு-வெள்ளை, தேயு - சிவப்பு, வாயு - நீலம், ஆகாசம் - சித்திர விசித்திர வர்ணம்.

(152) சுவாசத்தை இழுத்துக் கண்ணாடியின் மேல் சுவாசத்தை விட்டால், அதின்பேரில் என்ன ஆகிருதி, காணப்படுகிறதோ, அதைக்கொண்டு மனுஷனுடைய தத்துவத்தையறியவும்.

(153) பிருதிவி - சதுஷ்கோணம், அப்பு - அர்த்த சந்திரன், தேயு திரிகோணம், வாயு-சக்கிராகாரம், ஆகாயம்- அநேக பிந்துக்கள். இதைக்கொண்டு இன்ன தத்துவம் உதயமாயிருக்கிறதென்று அறியவும்.

(154) சுவாஸமானது செல்லும் பொழுது மூக்கில் மேலும் கீழும் படாமல் மத்தியில் சென்றால் பிருதிவி தத்துவம். மூக்கின் கீழ்பாகத்தை ஒட்டிச்சென்றால் அப்பு தத்துவம். மூக்கின் மேல் பாகத்தை ஒட்டிச்சென்றால் தேயு தத்துவம். கோணலாய் சென்று கொண்டிருந்தால் வாயு தத்துவம். இரண்டு ஸ்வரமும் வெளியில் வராமல் உள்ளேயிருந்தால் ஆகாச தத்துவ மென்றறியவும்.

(155) அப்பு-வெள்ளை, பிருதிவி-மஞ்சள், அக்னி-ரக்தவர் ணம், வாயு-நீல வர்ணம், ஆகாசம்-சித்திரவர்ண மென்றறியவும்.

(156) அக்னி இரண்டு தோள்களிலும், வாயு நாபி மூலம், பிருதிவி முழங்கால், அப்பு பாதத்தின் கடைசி, ஆகாசம் சிரசு.

(157) பிருதிவி -மதுரம், அப்பு - துவர்ப்பு வாயு-புளிப்பு, ஆகாசம்- கசப்பு, தேயு - உறைப்பு,

(158) வாயுவு 8-அங்குலம், அக்கினி 4-அங்குலம் பிருதிவி 12-அங்குலம், அப்பு 16-அங்குலம், ஆகாயம் அதேயிடத்தில்...

(159) அக்கினி மேலே செல்லுகிறபடியாலும் அது மிருத்துவானதாலும் அதில் மாரணக்கிரியையும், அப்பு கீழ்நோக்கி செல்கின்றபடியால் அதில் சாந்திகர்மமும், வாயு கோணலாய் செல்லுகிறபடியால் அதில் உச்சாடனக்கிரியையும், பிருதிவி மத்தியில் செல்லுகிறபடியால் ஸ்தம்பனக்கிரியையும் செய்யவும். ஆகாசம் எங்கும் வியாபித்திருக்கிறபடியால் அதில் யாதொன்றும் செய்யலாகாது.

(160) பிருதிவி தத்துவத்தில் ஸ்திர கர்மம், அப்புவில் சர கர்மம், தேயுவில் குரூரமான கர்மம், வாயுவில் மாரண உச்சாடன கர்மங்கள் செய்தால் சித்தி.

(161) யோக அப்பியாசத்தைத் தவிர ஆகாஸ தத்துவத்தில் யாதொரு கர்மமும் செய்யக்கூடாது. செய்தால் காரிய நாசம்.

(162) பிருதிவி, அப்பு இவை இரண்டும் சித்திப்பிரதம். அக்கினி மிருத்திகாரகம், வாயு க்ஷ்யகாரகம், ஆகாசம் நிஷ்பலம்.

(163) பிருதிவி தத்துவம் நீடித்த லாபத்தையும், அப்பு தத்சமய லாபத்தையும், அக்கினி வாயு ஹானியையும் கொடுக்கும். ஆகாசத்தில் சர்வமும் நிஷ்பலம்.

(164) மஞ்சள் வர்ணமும் மெதுவாய் செல்லக்கூடியதும்,மோவாய்க்கட்டை வரையில் கீழும் மேலும் படாமலும் நடுவில் செல்லுகிறதும், பெரிய சப்தமும் கொஞ்சம் உஷ்ணமுமுடைய எந்த சுவாசமோ, அது ஸ்திரகாரியத்தை சித்தி செய்யக் கூடியதுமான பிருதிவி சம்மந்தமான வாயு ஆகும்.

(165) கீழே செல்லக்கூடியதும், பெரிய சப்தமும், சீக்கிரமாய் செல்லக்கூடியதும், சீதளமும் 16-அங்குல பரிமாணமுடையதுமானது அப்பு சம்மந்தமானது. இது சுபகர்மம் சித்தி செய்யக்கூடியது.

(166) பம்பரம்போல் செல்லக்கூடியதும், அதி உஷ்ணமும் ரக்த வர்ணமும் 4-அங்குலம் மேல் செல்லக்கூடியதுமான வாயு தேயு சம்மந்தமானது. இது குரூரமான கர்ம சித்தி கொடுக்கக் கூடியது.

(167) சீதோஷ்ணம், கிருஷ்ணவர்ணம். கோணலாயும் 8-அங்குலம் செல்லக்கூடியதுமான சுவாசம் வாயு சம்மந்தமானது. இதானது சரகாரியசித்தி செய்யக்கூடியது.

(168) எந்த வாயுவானது, ஸமரசமாயும், எல்லா தத்துவங்களின் குணத்தையுமுடையதோ அது ஆகாச சம்மந்த வாயுவாகும். இதில் யோக சித்தியுண்டாகும்.

(169) பிருதிவி தத்துவம் நிறத்தில் மஞ்சளாயும், வடிவம் நாலு மூலையாயும், ருசி மதுரமாயும், நடுவில் செல்லக்கூடியதும் 12-அங்குலம் பரிணாமமுடையதும் அநேக காரியங்களுக்கு உபயோகமாயும் இருக்கிறது.

(170) அப்பு தத்துவம் வெள்ளை நிறம். வடிவம் அர்த்த சந்திரன் (பிறை), ருசி துவர்ப்பு, ஈரமும் 16-அங்குலம் பரிணாமமுடையது. இதனால் லாபமுண்டாகும்.

(171) தேயு தத்துவம் ரக்தவர்ணம். திரிகோணம். உவர்ப்பு. மேல் நோக்கிச் செல்லக்கூடியது. தேஜூஸுடையது. 4-அங்குல பரிணாமமுடையது.

(172) வாயு தத்துவம், நீலவர்ணம். சக்கிராகாரம். புளிப்பு. கோணலாய் செல்லக்கூடியது. சபலம். 8-அங்குல பரிணாமமுடையது.

(173) வர்ணம், வடிவம், ருசி, செல்லும் நிதானம் இந்த நாலும் ஸ்பஷ்டமில்லாதது ஆகாச தத்துவம். இது பிரவர்த்தி காரியங்களில் நிஷ்பலத்தை கொடுக்கக்கூடியது. மோக்ஷ மார்க்கத்திற்கு மாத்திரம் சாதகமுடையது.

(174) பிருதிவி, அப்பு-சுபம், தேயு மத்திமம். வாயுவு ஆகாசம், காரியஹானி மிருத்திவும் செய்யக்கூடியது. புருஷாளுக்கு அசுபம் கொடுக்கக்கூடியது.

(175) கிழக்கு முதல் மேற்கு பரியந்தம் பிருதிவி தத்துவம். தெற்கு தேயு. வடக்கு வாயு. மத்தியதிசை ஆகாசம். இவ்விதமாய் தத்துவங்களின் திசை வியாபித்து நிற்கின்றன.

(176) சந்திர ஸ்வரத்தில் பிருதிவி அப்புவும், சூரிய ஸ்வரத்தில் அக்கினி தத்துவமும் நடக்கையில் கிரமமாய் ஸௌமியமும், குரூர காரியமும் சித்தியுண்டாகும். இதில் சந்தேகமேயில்லை.

(177) பகலில் பிருதிவி தத்துவமும், இரவில் அப்பு தத்துவமும், லாபகரமானது. அக்கினி தத்துவத்தில் மிருத்துவும், வாயு தத்துவத்தில் க்ஷயமும் (ஹானி) ஆகாச தத்துவத்தில் ஸ்தானபேதமுமுண்டாகிறது.

(178) பிருதிவி தத்துவத்தில் நீடித்த காலம் ஜீவித்திருக்க உபாயம், ஜயம், லாபம், கிருஷி, தன கர்மம், மந்திரம், யுத்த கர்மம், ப்ரஷ்ணம், கமனம், ஆகமனம் இவைகள் செய்ய சுபம்.

(179) பிருதிவி, அப்பு தத்துவத்தில் சத்துரு வந்தால் சுபம். வாயு தத்துவத்தில் வந்தால் வேறிடம் போவான். ஆகாசம் தேயு தத்துவத்தில் சத்துரு வந்தால் ஹானியும், மிருத்துவுமுண்டாகும்.

(180) ப்ரஷ்ணம் கேட்க வந்தால் தத்துவத்தினாலறிந்து சொல்லவும். பிருதிவி தத்துவமாயிருந்தால் விருக்ஷங்களைப்பற்றி, அப்பு தத்துவமாயிருந்தால் ஜீவனைப்பற்றி, தேயு தத்துவ மாயிருந்தால் தாதுக்களைப்பற்றி, ஆகாச தத்துவமாயிருந்தால் ஒன்றுமில்லையென்றறிந்து சொல்லவும்.

(181) பிருதிவி தத்துவமாயிருந்தால் அநேகருடனும், அப்பு, வாயு, தத்துவத்தில் ஒருவராகவும், தேயு தத்துவத்தில் இருவராகவும் போகவேண்டும். ஆகாச தத்துவத்தில் போகவே கூடாது.

(182) தக்ஷிண நாடியில் அக்கினி தத்துவமாயிருந்தால் அது செவ்வாய், பிருதிவி தத்துவமாயிருந்தால் சூரியன், அப்பு-சனி, வாயு-இராகு.

(183) வாம நாடியில் (இடைகலை) அப்பு தத்துவம்-சந்திரன், பிருதிவி-புதன், வாயு-குரு தேயு-சுக்கிரன். இந்த கிரகங்கள் சந்திர ஸ்வரத்தில் சர்வ காரியங்களுக்கும் சுபம்.

(184) சுழிமுனை நாடியில் பிருதிவி தத்துவம்-புதன், அப்பு-சந்திரன், சுக்கிரன்-தேயு, சூரியன்-செவ்வாய், வாயு-இராகு சனி, ஆகாசம்-குரு.

(185) சூரிய ஸ்வரத்தில் யாரேனும் பிரயாணப்பட்டுவிட்டார்களாவென்று ப்ரஷ்ணம் கேட்டால், அந்தக் காலத்தில் ஸ்வாசத்தில் இராகு இருந்தால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு புறப்பட்டு விட்டார்களென்று சொல்லவும்.

(186) அப்பு தத்துவத்தில் கேள்வி கேட்டால் சீக்கிரம் வருவான். பிருதிவியில் போனவிடத்தில் அங்கேயே சுகமாயிருப்பான். வாயு தத்துவத்தில் அன்னிய இடங்களில் போயிருப்பான். தேயுவாயிருந்தால் மாணமடைந்திருப்பானென்று சொல்லவும்.

(187) பிருதிவி தத்துவத்தில் கேள்வி கேட்டால் விருக்ஷங்களைப் பற்றியென்றும், அப்பு தத்துவமாயிருந்தால் சுபகாரியத்தைப்பற்றியென்றும், அக்கினி தத்துவமாயிருந்தால் உலோகங்களைப் பற்றியென்றும், ஆகாச தத்துவமாயிருந்தால் சூன்யமென்றும் சொல்லவும்.

(188) பிருதிவி அப்பு இத்தத்துவங்கள் நடக்கும்போது கேள்வி கேட்டால் பிரயாணத்திலிருக்கப்பட்டவன் சந்தோஷமாயும், புஷ்டியாயும், பிரீதியாயும், கிரீடை இவைகளோடிருப்பானென்றும்; தேயு, வாயு, இவைகள் நடக்குங் காலங்களில் கேட்டால் பிரயாணத்திலிருக்கப்பட்டவன் முறையே நித்திரையிலும், ஜுவரத்திலுமிருப்பானென்று சொல்லவும்.

(189) ஆகாச தத்துவத்தில் கேள்வி கேட்டால் மரணமென்று சொல்லவும். இம்மாதிரி 12-கேள்வி தத்துவங்களையும் தெய்வ ஞானியானவன் பிரயத்தனத்தினாலேயறிவான்.

(190) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, இந்தத் தத்துவங்களுக்கு முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் பலனுண்டு.

(191) ஹே... சுந்தரி! பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், இந்த ஐம்பூதத்தினால் தேகமானது உண்டாயிருப்பதால் பஞ்ச பூதாத்மகமென்று சொல்லப்படும்.

(192) எலும்பு, மாமிசம், தோல், நாடி, உரோமம், இவைகளானது பிருதிவியின் கூறென்று வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

(193) வீரியம், இரத்தம், கொழுப்பு, மூத்திரம் சளி, எச்சில் அப்புவின் கூறு.

(194) பசி, தாகம், நித்திரை, தேஜஸ், சோம்பல், இவைகள் அக்கினியின் செய்கை.

(195) ஓடுதல், அசைதல், ஒடுங்கல், பூரித்தல், பரவுதல், இவைகள் வாயுவின் செய்கை.

(196) கோபம், துவேஷம், லஜ்ஜை, பயம், மோகம், இவைகள் ஆகாசத்தின் செய்கை.

(197) பிருதிவி 50 வினாடி, அப்பு 40, அக்கினி 30, வாயு 20, ஆகாசம் 10, இவ்விதமாக மேற்கண்ட  தத்துவங்களும் இரண்டரை நாழிகைக்குள் நடக்கின்றன.

(198) பிருதிவி தத்துவத்தில் எப்பொழுதும் லாபமுண்டாகிறது. அப்பு தத்துவத்தில் தாத்கால லாபமுண்டாகிறது. வாயு தத்துவத்தில் சுவல்ப லாபமுண்டாகிறது. அக்னி தத்துவத்தில் லாபம் சித்தமாயிருந்தாலும் சூன்யமாகும்.

(199) பிருதிவிக்கி ஐந்து குணம், அப்புவிற்கு 4, அக்கினிக்கு 3, வாயுவுக்கு 2, ஆகாசத்திற்கு 1.

(200) சீறுகிறதும், சிதரினதும், நாளடைவில் ஜீர்ணமானதும், விழுந்ததும் இவ்விதமான பிருதிவியானது எவ்விதக் காரியங்களிலேயும் தன்னுடைய அவஸ்தையைப் போல் பலனைக் கொடுக்கிறது.

(201) அவிட்டம், ரோகிணி, கேட்டை, அனுஷம், திருவோணம், உத்திராடம்,அபிஜித், இந்த நக்ஷத்திரங்கள் பிருதிவி தத்துவம்.

(202) பூராடம், ஆயில்யம், மூலம், திருவாதிரை, ரேவதி, உத்திரட்டாதி, சதயம், இவை அப்பு தத்துவம்.

(203) பரணி, கிருத்திசை, பூசம், மகம், பூரம், பூரட்டாதி, சுவாதி இவை தேயுவின் தத்துவம்.

(204) விசாகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, புனர்பூசம், அசுவதி, மிருகசீரிடம், இவை வாயுவின் தத்துவம்.

(205) நாடி நடக்கின்ற பக்கத்தில் அதாவது பூர்வாங்கத்தில் நின்று கொண்டு ஒருவன் கேள்வி கேட்பானாகில் சுபாசுபக்காரியங்கள் சர்வமும் சித்தியாகும். சூன்னியாங்கத்திலிருந்து கேட்பானாகில் காரிய நாசமென்று சொல்லவும்.

(206) சுவாசமானது சுபதத்துவத்தில் உதயமாயிருந்தாலும், அந்தச் சுவாசம் வெளிப்படுங்காலங்களில் ஒருவன் கேள்வி கேட்பானாகில் காரியம் சித்தி பெறாது. இவ்விதமாகவே சந்திர சூரிய ஸ்வரமும் உட்செல்லுங்காலமாயிருந்தால் சர்வ காரியமும் சித்தியாகும்.

(207) ஸ்ரீ இராமனும் அர்ச்சுனனும் இந்தத் தத்துவத்தினாலேயே ஜெயமடைந்தார்கள். கௌரவர்கள் தத்துவ விபரீதத்தினாலேயே நாசமடைந்தார்கள்.

(208) ஜன்மாந்திர சுகிர்தத்தினாலும், அல்லது குருவினுடைய கிருபையினாலும், சுத்தமான ஹிருதயமுடைய ஜனங்களுக்கு தத்துவ ஞானம் பிராப்தமாகும்.

(209) "லம்" பிருதிவி தத்துவத்தின் பீஜம் சதுஷ்கோணம். சுவர்ண நிறம், சுகந்தம், இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு தேகத்தில் சுவர்ணச் சாயை. சுகந்தம் லகுத்துவம் இவைகள் உண்டாகின்றன.

(210) ''வம்" அப்புவின் பீஜம். அர்த்த சந்திராகாரம். இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு பசி தாகம் அற்று விடுகிறது. தண்ணீருள் மூழ்கியிருத்தல் சாத்தியமாகிறது.

(211) "ரம்" அக்கினியின் பீஜம். திரிகோணம், ரக்த வர்ணம், இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவனுக்கு அதிக ஆகாரமும், ஜலமும் சீக்கிரம் ஜீர்ணமாகிவிடுகிறது. வெய்யலினுடைய தாபத்தையும், நெருப்பினுடைய சுடுகையையும் சகிக்கும்படியான சக்தியுண்டாகிறது.

(212) "யம்" வாயு தத்துவம். சக்கிராகாரம், நீலவர்ணம். இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு ஆகாய கமனமும் பக்ஷியைப் போல பறக்கும் சக்தியுமுண்டாகிறது.

(213) "ஹம்" ஆகாச தத்துவம், நிராகாரம், பலவர்ணம், இந்த தத்துவத்தை தியானிக்கிறவர்களுக்கு திரிகால ஞானமும் அணிமாதி அஷ்டசித்தியுமுண்டாகிறது.

(214) ஸ்வர ஞானத்தைப்போல் தனம் வேறு கிடையாது. இதையடைந்து எந்தக் காரியத்தை உத்தேசித்து சென்றாலும் பலனடையாமல் வரமாட்டான்.

     - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
       சித்தர்களின் குரல் shiva shangar


Bb

Tuesday, May 23, 2023

சுமங்கலி பிரார்த்தனை:

சுமங்கலி பிரார்த்தனை:(பகுதி:02)
( விரிவான செயல் முறை விளக்கம்).

(ஓர் வின்னப்பம் ஒவ்வெறு வீட்டிழும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை செய்யுங்களேன்.  நல்ல நாள் கிழமை பாத்துக்குங்க இரண்டு வருசத்துக்கு ஒரு தடவ செய்யுங்கள்.)

( ஒரு வருசத்தில் ஆனால் 1முறை தான் செய்யனும்.அதுவும் 1 பங்காளி வீட்டில் செய்தால் அடுத்தவர் அடுத்த வருசம் தான் பண்ணனும்.)

மங்களம் ,சுபிட்சத்தை வாரி வழங்கும் சுமங்கலி பிரார்த்தனை இது.. 





 
Thank FB

Monday, May 22, 2023

Story of the Ayyappan idol in Sabarimala from 1900.

Story of the Ayyappan idol in Sabarimala from 1900.

First of all the Sabarimala Ayyappan or rather to be more precise and correct the Dharmasastha idol that was destroyed by vandals and not fire as it was wrongly given publicity then,was not the one consecrated by Rishi Parasurama. 
This idol was crafted by Sri Velappan Achari of Parvathy Jewellers and was installed before 1903.In 1903 an accidental fire on account of bhaktas buring camphor on the holy eighteen steps on a Makaravilakku Deeparadhana day (the reverred steps that lead to the sanctum).The fire which blazed on the thrippadi accidentally leapt to the roof of the sreekovil resulting in the thatched covering on top of the roof of the sreekovil going up in flames. The Thiruvabharanam was just taken in when this ghastly incident happened and the then melshanti Brahmashree Raman Vasudevan Embrandiri sent out the unopened Thiruvabharanam box quickly so that it was not damaged.By the time the box was sent out,the flames became unmanageable and the melshanti in a fit of devotional trance pulled out the vigraham of Ayyappan single handedly and carrying it all alone ran away.
With people running helter-skelter and Sannidhanam in utter chaos and commotion,nobody knew where the melshanti had gone.The next morning all what the bhaktas who had bothered to stay saw was a fully charred sreekovil in which the Ayyappa vigraham was missing. Many thought that the vigraham had perished in the fire along with the melshanti. Later that day when somebody went to the old Bhasmakulam, he saw something protruding in a corner Gathering the remaining bhaktas,that person tried to find what it was.To their amazement it was the holy idol of Ayyan Ayyappan which they had earlier thought to have been destroyed by the fire. Amazingly the Melshanti was seen clinging to the idol barely alive.Ayyappan had saved the melshanti 's life and the idol was undamaged. 
Later the temple was rebuilt by the christian contractor of Mavelikara POLACHIRAKKAL KOCHUMMEN MUTHALALI. The work was fully finished only in 1909.Till then Ayyappaswamy 's idol was temporarily installed in the 'balalayam' at Kannimoola in the Thirumuttam or the reverred temple compound.
Today Kannimoola Ganapathy 's shrine stands in the place where the 'balalayam' stood for nearly 6 yrs.The punapratishta was done in 1909 by Kantararu Prabhakararu of Thazhamon Madom.The idol at Sabarimala was changed many, many times.The original idol consecrated by Rishi Parasurama is forever gone into some distant memory. 
Only the idol of Achenkovil Arasan has stood the test of time.The pre 1950 idol which when damaged was recast and made into a bell by the tantric samrat Kantararu Sankararu of Thazhamon Madom.

The present idol was crafted by thatan vilai family. Three idol were moulded and one in Haridwar other one in Dhil bhandeswar temple in Kasi.
The present idol was alround Tamilnadu and kerala before installation.
In stop gap arrangement in 1950 the alangadu samooga kolagam was taken inside and kept in front the old damaged idol and pooja was only to kolagam.
The present idol was kept tied in cloth and kept infront Kannimoola Ganapathi.
In 1951 thanthri Sankararu installed the idol.
©Lord Ayyappa group.

Tuesday, March 28, 2023

51 சக்தி பீடங்களை

51 சக்தி பீடங்களை பற்றி பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை திருவாவடுதுறை ஆய்வுமையத்தில் கூறப்பட்டவாறு காட்டப்பட்டுள்ளது.

Thank to fb

01) முதல் சக்திபீடம் ~ *அட்டஹாஸம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *கீழ்உதடு*

விழுந்தஇடம் ~ *அட்டஹாஸம் அஹ்மத்பூர் - காட்வா பாதையருகில் - லாப்பூர்*

தேவியின் பெயர் ~ *புல்லரா*

பைரவர் பெயர் ~ *விஸ்வேஸ பைரவர்*

02) இரண்டாம் சக்திபீடம் ~ *உத்கலம் பீஹார்*

விழுந்த அங்கம் ~ *தொப்புள்*

விழுந்த இடம் ~ *உத்கலபீடம் ஹவுரா - வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *ஜகந்நாத பைரவர்*

03)மூன்றாம் சக்திபீடம் ~ *உஜ்ஜெயின்*

விழுந்த அங்கம் ~ *இடது முழங்கை*

விழுந்த இடம் ~ *உஜ்ஜெயின் ஹரஸித்தி தேவி ஆலயம் - சிப்பரா நதிக்கரை - ( மத்தியப்பிரதேசம் )*

தேவியின் பெயர் ~ *மாங்கல்ய சண்டிகா*

பைரவர் பெயர் ~ *கபிலாம்ப பைரவர்*

04) நான்காம் சக்திபீடம் ~ *முக்திநாத்., நேபாளம்*

விழுந்த அங்கம் ~ *வலது கன்னம்*

விழுந்த இடம் ~ *கண்டகீ நதிக்கரை - முக்திநாத் - ( நேபாளம் )*

தேவியின் பெயர் ~ *கண்டகீ சண்டீ*

பைரவர் பெயர் ~ *சக்ரபாணி பைரவர்*

05) ஐந்தாம் சக்திபீடம் ~ *கன்னியாகுமரி., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *முதுகு*

விழுந்த இடம் ~ *கன்னியாகுமரி ( தமிழ்நாடு )*

தேவியின் பெயர் ~ *சர்வாணீ*

பைரவர் பெயர் ~ *நிமிஷ பைரவர்*

06) ஆறாம் சக்திபீடம் ~ *பவானிபூர்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *வலதுகால் பெருவிரல்*

விழுந்த இடம் ~ *பவானிபூர் பூதாத்ரீ ஆலயம் ( பங்களாதேஷ் )*

தேவியின் பெயர் ~ *அபர்ணா*

பைரவர் பெயர் ~ *க்ஷீரகண்ட பைரவர்*

07) ஏழாம் சக்திபீடம் ~ *கர்ணாட் (கோகர்ணம்., கர்நாடகா)*

விழுந்த அங்கம் ~ *காதுகள்*

விழுந்த இடம் ~ *கர்ணாட் (கோகர்ணம்., கர்நாடகா)*

தேவியின் பெயர் ~ *ஜயதுர்க்கா*

பைரவர் பெயர் ~ *அபீரு பைரவர்*

08) எட்டாம் சக்திபீடம் ~ *அமர்நாத்., ஜம்மு-காஷ்மீர்*

விழுந்த அங்கம் ~ *கழுத்தின் மேல்பகுதி*

விழுந்த இடம் ~ *அமர்நாத் குகை ( உள்ளே பனியிலான சக்திபீடம் ) ஜம்மு-காஷ்மீர்*

தேவியின் பெயர் ~ *மஹாமாயா*

பைரவர் பெயர் ~ *த்ரிஸந்த்யேஸ்வர பைரவர்*

09) ஒன்பதாம் சக்திபீடம் ~ *காமாக்யா.,கௌஹாத்தி., அஸ்ஸாம்*

விழுந்த அங்கம் ~ *யோனி*

விழுந்த இடம் ~ *காமாக்யா ( பிரம்மபுத்ரா நதிக்கரை ) கௌஹாத்தி - அஸ்ஸாம்*

தேவியின் பெயர் ~ *காமா*

பைரவர் பெயர் ~ *உமாநந்த பைரவர்*

10) பத்தாம் சக்திபீடம் ~ *கல்கத்தா., மேற்கு வங்கம்*

விழுந்த அங்கம் ~ *வலதுகால் விரல்கள் ( கட்டை விரலைத் தவிர )*

விழுந்த இடம் - *கல்கத்தா காளீ கோவில் ( மேற்கு வங்காளம் )*

தேவியின் பெயர் - *காளீகா தேவீ*

பைரவர் பெயர் - *நகுலீச பைரவர்*

11) பதினோராம் சக்திபீடம் ~ *காஞ்சிபுரம்., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *எலும்புகள்*

விழுந்த இடம் ~ *காமாக்ஷி கோவிலுக்கும் கந்தக்கோட்டத்திற்கும் இடையேயுள்ள மகாகாளீ கோவில் - காஞ்சிபுரம் - தமிழ்நாடு*

12) பனிரெண்டாம் சக்திபீடம் ~ *பூரி., ஒடிஸா*

விழுந்த அங்கம் ~ *இடுப்பின் வலதுபக்கம்*

விழுந்த இடம் ~ *நீலமாதவன் கோவில் ( பூரி ஜகந்நாதர் கோவில் அருகில் ) பூரி - ஒடிஸா*

தேவியின் பெயர் ~ *காலீ*

பைரவர் பெயர் ~ *அஸிதாங்க பைரவர்*

13) பதிமூன்றாம் சக்திபீடம் ~ *ஹவுரா., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் கிரீடம்*

விழுந்த இடம் ~ *ஹவுரா - பர்ஹர்வா பாதையில் அஜீம்கஞ்ச் என்ற இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் என்ற சிற்றூரில் கங்கைநதிக்கரை தேவி ஆலயம்*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *சம்வர்த்த பைரவர்*

14) பதினான்காம் சக்திபீடம் ~ *குருக்ஷேத்ரம்., ஹரியானா*

விழுந்த அங்கம் ~ *வலது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *குருக்ஷேத்ரம் ஸ்தாணு சிவன் ஆலயம் அருகிலுள்ள பத்ரகாளீ கோவில்*

தேவியின் பெயர் ~ *சாவித்ரீ*

பைரவர் பெயர் ~ *ஸ்தாணுநாத பைரவர்*

15) பதினைந்தாம் சக்திபீடம் ~ *குவ்வூர்., ஆந்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ இடது கன்னம்

விழுந்த இடம் ~ *ராஜமுந்திரி அருகேயுள்ள குவ்வூர் கோதாவரிக்கரை., ஆந்திர பிரதேசம்.*

தேவியின் பெயர் ~ *விஸ்வேஸீ*

பைரவர் பெயர் ~ *தண்டபாணி பைரவர்*

16) பதினாறாம் சக்திபீடம் ~ *கோலாப்பூர்., மகாராஷ்டிரா*

விழுந்த அங்கம் ~ *முக்கண்கள்*

விழுந்த இடம் ~ *கோலாப்பூர்., மஹாராஷ்ட்ரா*

தேவியின் பெயர் ~ *மஹாலக்ஷ்மீ*

பைரவர் பெயர் ~ *க்ரோதீச பைரவர்*

17) பதினேழாம் சக்திபீடம் ~ *சட்காவ்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *வலது முழங்கை*

விழுந்த இடம் ~ *பங்களாதேஷில் ஸீதாகுண்டம் அருகேயுள்ள சட்காவ் என்ற இடத்திலுள்ள சந்திரநாத் மலையிலுள்ள சந்திரசேகரர் ஆலயத்தில்*

தேவியின் பெயர் ~ *பவாநீ*

பைரவர் பெயர் ~ *சந்திரசேகர பைரவர்*

18) பதினெட்டாம் சக்திபீடம் ~ *ஸுநந்தா., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *மூக்கு*

விழுந்த இடம் ~  *ஸுநந்தா நதிக்கரையில் உள்ள உக்ரதாரா தேவீ ஆலயம் - சிகார்பூ கிராமம் - பங்களாதேஷ்*

தேவியின் பெயர் ~ *ஸுநந்தா*

பைரவர் பெயர் ~ *த்ரியம்பக பைரவர்*

19) பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸுஸீந்த்ரம்., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *மேல் பல்வரிசை*

விழுந்த இடம் ~ *தாணுமாலயன் கோவில் - சுசீந்தரம் - தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *நாராயணீ*

பைரவர் பெயர் ~ *ஸம்ஹார பைரவர்*

20) இருபதாம் சக்திபீடம் ~ *ஹவுரா., மேற்கு வங்காளம்.*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் ஹாரம்*

விழுந்த இடம் ~ ஹவுரா - க்யூல் வழியில் நல்ஹாடி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள ஆலயம்.

தேவியின் பெயர் ~ *காளீகா*

பைரவர் பெயர் ~ *யோகேச பைரவர்*

21) இருபத்தோராம் சக்திபீடம் ~ *அமர்கண்ட்., மத்திய பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *இடுப்பின் இடதுப் பக்கம்*

விழுந்த இடம் ~ *அமர்கண்ட் ( மத்திய பிரதேசம் ) நர்மதை உற்பத்தியாகும் குண்டம்*

தேவியின் பெயர் ~ *சோணா*

பைரவர் பெயர் ~ *சோணபத்ர பைரவர்*

22) இருபத்திரெண்டாம் சக்திபீடம் ~ *நந்திபூர்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *குடல்*

விழுந்த இடம் ~ *நந்திபூர் கிராமம் ஆலமரத்தடி கோவில் ( ஹவுரா - க்யூல் வழியில் சந்தியா இரயில் நிலையம் அருகில் )*

தேவியின் பெயர் ~ *காளீகா*

பைரவர் பெயர் ~ *யோகேச பைரவர்*

23) இருபத்திமூன்றாம் சக்திபீடம் ~ *பசுபதிநாத்., நேபாளம்*

விழுந்த அங்கம் ~ *முழங்கால்*

விழுந்த இடம் ~ *பசுபதிநாத் பாக்மதீ நதிக்கரையில் உள்ள குஹ்யேஸ்வரீ ஆலயம் - நேபாளம்*

24) இருபத்திநான்காம் சக்திபீடம் ~ *திரிபுரா., அஸ்ஸாம்*

விழுந்த அங்கம் ~ *வலது கால்*

விழுந்த இடம் ~ *திரிபுராவிலுள்ள ராதாக்ருஷ்ணபூர் கிராமத்தில் 2 கிமீ தொலைவிலுள்ள மலையில் - அஸ்ஸாம்*

தேவியின் பெயர் ~ *திரிபுரசுந்தரி*

பைரவர் பெயர் ~ *திரிபுரேச பைரவர்*

25) இருபத்தைந்தாம் சக்திபீடம் ~ *த்ரிஸ்ரோதா., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கால்*

விழுந்த இடம் ~‌ *மேற்கு வங்காளம் ஜல்பாகுரி ஜில்லா சால்வாடீ கிராமத்தில் உள்ள த்ரிஸ்ரோதா நதியின் கரையில்*

தேவியின் பெயர் ~ ‌ *ப்ராம்ஹீ*

பைரவர் பெயர் ~ *அம்பர பைரவர்*

26) இருபத்தாறாம் சக்திபீடம் ~ *பஞ்சசாகரம்., ஹரித்வார்., உத்ரகாண்ட்*

விழுந்த அங்கம் ~ *கீழ் பல்வரிசை*

விழுந்த இடம் - *பஞ்சசாகரம்., ஹரித்வார்., உத்ரகாண்ட்* 

தேவியின் பெயர் ~ *வராஹீ*

பைரவர் பெயர் ~ *மஹாருத்ர பைரவர்*

27) இருபத்தேழாம் சக்திபீடம் ~ *கேது ப்ரஹ்மம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கை*

விழுந்த இடம் ~ *அஹ்மத்பூர் கட்வா செல்லும் வழியில் கேதுப்ரஹ்மம் கிராமம்., மேற்கு வங்காளம்.*

தேவியின் பெயர் ~ *மஹீலா*

பைரவர் பெயர் ~ *பீருக பைரவர்*

28) இருப்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *அலோப்தேவீ., பிரயாகை., அலகாபாத்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ கை விரல்கள்

விழுந்த இடம் ~ *அலோப் தேவீ - ஆலயப் பிரயாகை., அலகாபாத்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *லலிதா*

பைரவர் பெயர் ~ *பவ பைரவர்*

29) இருபத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸோம்நாத்., குஜராத்*

விழுந்த அங்கம் ~ *வயிறு*

விழுந்த இடம் ~ *ஸோம்நாத் - குஜராத்*

தேவியின் பெயர் ~ *ஸந்த்ரபாஹா*

பைரவர் பெயர் ~ *வக்ரதுண்ட பைரவர்*

30) முப்பதாம் சக்திபீடம் ~ *மதுரா (பிருந்தாவனம்) ஆக்ரா அருகில்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் - கேசம்

விழுந்த இடம் - *மதுரா - பிருந்தாவன ரோட்டில் பூதேஸ்வர மஹாதேவர் ஆலயம் ( ப்ருந்தாவனத்தில் இருந்து 3 கிமீ ) மதுரா (பிருந்தாவனம்) ஆக்ரா அருகில்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *உமா*

பைரவர் பெயர் ~ *உமேச பைரவர்*

31) முப்பத்தோராம் சக்திபீடம் ~ *உஜ்ஜையினி., மத்தியபிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *மேல் உதடு*

விழுந்த இடம் ~ *சிப்ரா நதிக்கரை - உஜ்ஜையின் - மத்தியபிரதேசம்*

தேவியின் பெயர் ~ *அவநதீ*

பைரவர் பெயர் ~ *லம்பகர்ண பைரவர்*

32) முப்பத்திரெண்டாம் சக்திபீடம் ~ *புஷ்கர்., ராஜஸ்தான்.*

விழுந்த அங்கம் ~ *மணிக்கட்டு*

விழுந்த இடம் ~ *புஷ்கர் ( ராஜஸ்தான் )*

தேவியின் பெயர் ~ *காயத்ரீ*

பைரவர் பெயர் ~ *சர்வானந்த பைரவர்*

33) முப்பத்துமூன்றாம் சக்திபீடம் ~ *பாட்னா., பிஹார்*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *படீபடனேஸ்வரீ கோவில் - மகராஜ் கஞ்சி - பாட்னா*

தேவியின் பெயர் ~ *ஸர்வானந்தகிரீ*

பைரவர் பெயர் ~ *வ்யாமகேச பைரவர்*

34) முப்பத்திநான்காம் சக்திபீடம் ~ *மானசரோவர்., திபேத்*

விழுந்த அங்கம் ~ *வலது முன் கை*

விழுந்த இடம் ~ *மானஸரோவர் ஏரி - கைலாஷ் - திபெத்*

தேவியின் பெயர் ~ *தாக்ஷாயணீ தேவீ*

பைரவர் பெயர் ~ *அமர பைரவர்*

35) முப்பத்தைந்தாம் சக்திபீடம் ~ *உச்சய்த்., மதுபானி மாவட்டம்., பிஹார்* 

விழுந்த அங்கம் ~ *இடது தோள்*

விழுந்த இடம் ~ *நேபாள எல்லையிலுள்ள ஜனக்புரியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள உச்சய்த் ஊரிலுள்ள துர்க்கையின் ஆலயத்திலிருந்து 14 கிமீ தொலைவிலுள்ள வனதுர்க்கா ஆலயம்., மதுபானி மாவட்டம்., பிஹார்*

தேவியின் பெயர் ~ *உமா*

பைரவர் பெயர் ~ *மஹோதர பைரவர்*

36) முப்பத்தாறாம் சக்திபீடம் ~ *ஜெய்ஷோர்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *இடது முன் கை*

விழுந்த இடம் ~ *ஜெய்ஷோர் - பங்களாதேஷ்*

தேவியின் பெயர் ~ *யசோரேஸ்வரீ*

பைரவர் பெயர் ~ *சண்ட பைரவர்*

37) முப்பத்தேழாம் சக்திபீடம் ~ *குளித்தலை., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *வலது தோள்*

விழுந்த இடம் ~ *குளித்தலை ( அராளகேசி அம்மன் திருக்கோவில் ) தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *குமாரீ*

பைரவர் பெயர் ~ *சிவா பைரவர்*

38) முப்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *சித்ரகூடம்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *வலது மார்பு*

விழுந்த இடம் ~ *சித்ரகூடம் அருகிலுள்ள மைஹர்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *ஷிவானி*

பைரவர் பெயர் ~ *சண்ட பைரவர்*

39) முப்பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *திரிகோணமலை., ஸ்ரீலங்கா*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் கால் சலங்கை*

விழுந்த இடம் ~ *திரிகோணமலை., ஸ்ரீலங்கா*

தேவியின் பெயர் ~ *இந்த்ராக்ஷீ*

பைரவர் பெயர் ~ *ராக்ஷேஸேஸ்வர பைரவர்*

40) நாற்பதாம் சக்திபீடம் ~ *ஒண்டால் சந்தியா., பிர்பம் மாவட்டம்., துப்ராஜ்பூர்., மேற்கு வங்காளம்.* 

விழுந்த அங்கம் ~ *நெஞ்சு*

விழுந்த இடம் ~ *ஒண்டால் சந்தியா வழியில் துப்ராஜ்பூரிலிருந்து 10 கிமீ வடக்கே பாபஹரா என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகேயுள்ள மயானம்., ஒண்டால் சந்தியா., பிர்பம் மாவட்டம்., துப்ராஜ்பூர்., மேற்கு வங்காளம்.*

தேவியின் பெயர் ~ *மஹிஷாஸுர மர்த்தினி*

பைரவர் பெயர் ~ *வக்ரநாத பைரவர்*

41) நாற்பத்தோராம் சக்திபீடம் ~ *மணிகர்ணிகா., காசி/வாரணாசி., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் குண்டலங்கள்*

விழுந்த இடம் ~ *மணிகர்ணிகா கட்டிடத்தின் அருகேயுள்ள ஆலயத்தில்., காசி/வாரணாசி., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *விசாலாக்ஷி*

பைரவர் பெயர் ~ *கால பைரவர்*

42) நாற்பத்திரெண்டாம் சக்திபீடம் ~ *பஞ்சகுரா., மிட்னாபூர் மாவட்டம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *பஞ்சகுரா இரயில் நிலையத்திற்கருகே உள்ள விபாசநதிக் கரையிலுள்ள ஆலயம்., மிட்னாபூர் மாவட்டம்., மேற்கு வங்காளம்*

தேவியின் பெயர் ~ *கபாலினி*

பைரவர் பெயர் ~ *பீம பைரவர்*

43) நாற்பத்திமூன்றாம் சக்திபீடம் ~ *வைராட்., (ஜெய்பூர்)., ராஜஸ்தான்*

விழுந்த அங்கம் ~ *இடது கால் பெருவிரல்*

விழுந்த இடம் ~ *வைராட் - ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமம்., ராஜஸ்தான்*

தேவியின் பெயர் ~ *அம்பிகா*

பைரவர் பெயர் ~ *அம்ருதாக்ஷ பைரவர்*

44) நாற்பத்திநான்காம் சக்திபீடம் ~ *ஜஸிடீஹ்., டியோகர் மாவட்டம்., ஜார்கண்ட்*

விழுந்த அங்கம் ~ *இருதயம்*

விழுந்த இடம் ~ *ஹவுரா - பாட்னா வழியில் ஜஸ்டீஹ் வழியிலுள்ள வைத்யநாதர் ஆலயம்., டியோகர் மாவட்டம்., ஜார்கண்ட்*

தேவியின் பெயர் ~ *ஜெய துர்க்கா*

பைரவர் பெயர் ~ *வைத்யநாத பைரவர்*

45) நாற்பத்தைந்தாம் சக்திபீடம் ~ *பாஉர்பாக்., ஜயந்தியா மாவட்டம்., மெகாலயா*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *அஸ்ஸாமிலுள்ள ஷில்லாங்கிலிருந்து 52 கிமீ தொலைவிலுள்ள ஜயந்தியா மலையிலுள்ள பாஉர்பாக் என்ற கிராமம்., பாஉர்பாக்., ஜயந்தியா மாவட்டம்., மெகாலயா*

தேவியின் பெயர் ~ *ஜெயந்தீ*

பைரவர் பெயர் ~ *க்ரமதீஸ்வர பைரவர்*

46) நாற்பத்தாறாம் சக்திபீடம் ~ *திருவானைக்காவல் - திருச்சி மாவட்டம் - தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *முகவாய்க் கட்டை*

விழுந்த இடம் - *திருவானைக்காவல் - திருச்சி மாவட்டம் - தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *அகிலாண்டேஸ்வரீ*

பைரவர் பெயர் ~ *விக்ருதாக்ஷ பைரவர்*

47) நாற்பத்தேழாம் சக்திபீடம் ~ *ஜலந்தர்., பஞ்சாப்*

விழுந்த அங்கம் ~ *இடது மார்பு*

விழுந்த இடம் ~ *ஜலந்தர் - பஞ்சாப்*

தேவியின் பெயர் ~ *திரிபுர மாலினி*

பைரவர் பெயர் ~ *பீக்ஷண பைரவர்*

48) நாற்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *ஜ்வாலாமுகீ., கங்ரா மாவட்டம்., ஹிமாச்சலப் பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *நாக்கு*

விழுந்த இடம் ~ *ஜ்வாலாமுகீ ரோட்டிலிருந்து 21 கிமீ - கங்கா மாவட்டம் - ஹிமாச்சலப் பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *ஸித்திதா ( ஜ்வாலை வடிவில் )*

பைரவர் பெயர் ~ *உன்மத்த பைரவர்*

49) நாற்பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸ்ரீசைலம்., ஆந்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *கழுத்தின் கீழ்பகுதி*

விழுந்த இடம் ~ *மல்லிகார்ஜூனம் - ஸ்ரீசைலம் - ஆந்திரப் பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *பிரம்மராம்பிகாம்பாள்*

பைரவர் பெயர் ~ *சம்பராநந்த பைரவர்*

50) ஐம்பதாவது சக்திபீடம் ~ *ஸ்ரீ பர்வதம்., ஜம்மு-காஷ்மீர்*

விழுந்த அங்கம் ~ *வலது புட்டச்சதை*

விழுந்த இடம் ~ *காஷ்மீர் - லடாக் இடையேயுள்ள ஸ்ரீ பர்வதம் - ஜம்மு-காஷ்மீர்*

தேவியின் பெயர் ~ *சுந்தரி*

பைரவர் பெயர் ~ *சுந்தரானந்த பைரவர்*

51) ஐம்பத்தொன்றாம் சக்திபீடம் ~ *ஹிஸ்கோஸ்., பாகிஸ்தான்*

விழுந்த அங்கம் ~ *தலையின் உச்சிக்குழி*

விழுந்த இடம் ~ *பாகிஸ்தான் கராச்சியிலிருந்து வடமேற்கில் ஹிஸ்கோஸ் நதிக்கரையில் பலுசிஸ்தான் லாஸ்பேஸ்தானிலுள்ள ஹிங்க்லாஜ் என்னுமிடத்தில் ஜ்வாலை ( தீப்பிழம்பு ) வடிவில் உள்ளாள்.*

தேவியின் பெயர் ~ *கோடரீ*

பைரவரின் பெயர் ~ *பீமலோசன பைரவர்*

Thursday, February 2, 2023

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் :

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து பகிறவும்...

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

அஷ்ட பந்தனம்

அஷ்ட பந்தனம்:

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?
அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.
`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள். 

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'
இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். 

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

Friday, January 27, 2023

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்
-----------------------------

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.

மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ..

சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.

பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைபவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை.

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.

● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

● பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!

● எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.

● எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

● இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.

● நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

● உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

● மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

● அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

● இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.

● அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.

எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு.

 இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது.

சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.

இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழி பாட்டைச் செய்து மது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங் களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்
--------------------------------------------------------------

உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
அதுதான் மெலடோனின் (melatonin)!!
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது!

அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது. அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!