Friday, June 9, 2023

மாந்தி கிரகத்தை பற்றியும், மாந்தியுடன் இணையும் கிரகத்தைப் பற்றியும்


#மாந்தி கிரகத்தை பற்றியும், மாந்தியுடன் இணையும் கிரகத்தைப் பற்றியும் பார்ப்போம்.
Thank Fb
மாந்தி என்றால் குரங்கு என்று பொருள். சனிபகவானின் புத்திரர் ஆவார். சனிபகவானுக்கு இரண்டு புத்திரர்கள் ஒருவர் #குளிகன் (சுபர்) மற்றொருவர் #மாந்தி (அசுபர்) குரங்கு குணம் என்பது சேட்டைகள் செய்வதுதான். அதனால் தான் குரங்கு சேட்டை என்று பெயர் ஆனது.

மாந்தி ஒரு நொடியில் வெளிப்படக்கூடிய கிரகம். அதாவது கண் இமைக்கும் நேரத்தில் தோன்றி மறைய கூடிய தன்மை. ( உதாரணம் : மின்னல் எனலாம் ) மாந்தி மலைநாடு ஆன கேரளத்தில் கணித்து பலன் சொல்லப்படுவதாகும். 

மாந்தி இருக்கும் இடத்தை கெடுக்கும். அவ்வாறு கெடு பலன்களை தரக்கூடிய கிரகம் கால புருஷனின் 10, 11 ஆம் இடங்களில் இருந்தால் நற்பலன்களை தரும். ஏனெனில் 10, 11 ஆம் இடம் சனி பகவானின் வீடு அதனால் தந்தையிடம் மட்டும் அடங்கி செல்வார். மாந்தி மற்ற இடங்களில் அவர் தனது விளையாட்டை காட்டி விடுவார்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருக்க ஜாதகரின் செயல்பாடு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். ஒரே மனநிலையும், ஒரே நிலைபாட்டையும் இருக்க முடியாது. 

"மாந்தி + சூரியன்" இணைவது தந்தைக்கு ஆயுள் கண்டத்தை தரும். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அரசு விரோதமும் ஏற்படும். ஜாதகரின் தந்தைக்கு அவப் பெயர்கள் ஏற்படும்.

"மாந்தி + சந்திரன்" இணைவது தாயாரின் மனநிலையை பாதிக்கும். தாய்க்கு ஆயுள் கண்டம். தாயாரின் உடல்நிலை குறைபாடுகள் தரும். ஜாதகருக்கு சித்த பிரம்மை ஏற்படும்.

"மாந்தி + செவ்வாய்" இணைவது இளைய சகோதரருக்கு கெடு பலனை தரும். சகோதரனை புரிந்து கொள்ள முடியாது. ஜாதகருக்கு வெட்டு காயங்கள் ஏற்படும். அதேபோல கவனக்குறைவால் அடிக்கடி விபத்துகளையும் சந்திக்க நேரிடும்.

"மாந்தி + புதன்" இணைவது தாய் மாமாவுக்கு கண்டங்களும், கஷ்டங்களையும் தரும். திடீர் ஞாபகம்  மறதி ஏற்படும். நரம்பு துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தும். புத்தியை கடன் கொடுத்து பரிதவிக்கு செய்யும்.

"மாந்தி + குரு" இணைவது புத்திரர்களால் கஷ்டம் கவலைகள் ஏற்படும். புத்திர தோஷத்தையும் தரக்கூடியது. ஜாதகர் அடிக்கடி அவமானங்களை சந்திப்பார். நல்லது செய்தாலும் கெட்ட பெயர்கள் ஏற்படும்.

"மாந்தி + சுக்ரன்" இணைவது மனைவி சுறுசுறுப்புடன் இயங்கும் தன்மை. மனைவிக்கு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் பழக்கம் இருக்கும். ஆசைகளால் பணத்தை இழக்க கூடிய நிலை தரும். அஜாக்கிரதையால் பொருள் இழக்க கூடிய நிலையம் தரும்.

"மாந்தி + சனி" இணைவது தொழிலில் நல்ல நிலைப்பாட்டை தரும். தொழிலில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். கஞ்சத்தனமும், வியாபாரத்தில் கரார்ராகவும் செயல்படுவார். யாரையும் உபசரிக்கும் குணம் இருக்காது.

"மாந்தி + ராகு" இணைவது அவசரத்தால் எதையும் செய்து பின்னர் கவலைப்படுவார். பேச்சில் உண்மை இருக்காது. சொல்வதை நினைவில் வைக்க மாட்டார். சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடிய குணம் இருக்கும்.

"மாந்தி + கேது" இணைவது குடும்பம் வறுமை நிலையில் இருக்கும். பொறுப்புணர்வுகள் இருக்காது, விளையாட்டுத்தனமுடன் இருப்பார். தீய பழக்கங்கள் ஏற்படும். அடுத்தவர்களுக்காக உதவி செய்யப் போய் தான் தண்டனை அனுபவிக்கக்கூடிய நிலை தரும். 

மாந்தி வழிபாடுகள் :-

முறையான உடல் பயிற்சி, தியானம் செய்தல், தாய் தந்தைக்கு உதவிகள் செய்தல். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நன்மை தரும். குரங்குகளுக்கு உணவளிப்பது மூலமும் நன்மை தரும். நெற்றியில் செந்தூரம் வைப்பதன் மூலமும் மாந்தியின் கெடு பலன்கள் குறையும். எப்போதும் நேர்மறை எண்ணங்களை பின்பற்றுவதன் மூலம் மாந்தியின் கெடு பலன்களை குறைக்கும்

#ஆன்லைன்ஜோதிடம் #ஜோதிடர்சதாசிவன் #ஜோதிடம் #காரைக்குடிஜோதிடர்சதாசிவன் #karaikkudijothidar 

நன்றி!

ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம் 
காரைக்குடி.
 
Contact (or) WhatsApp : 6381453432

ஜோதிட சார்ந்த பதிவுகளும், கட்டுரைகளும் இந்த குரூப்பில் பதிவு செய்யப்படும். விருப்பம் உள்ள நண்பர்கள் இக்குரூப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

WhatsApp Group : https://chat.whatsapp.com/IxKFbfbfIFi0jNfiM3nRHX

தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய உங்களது பெயர் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் எனது "வாட்சப்" நம்பரில் அனுப்பவும். (ஜாதகம் பார்க்க கட்டணம் : ₹501/-)

[ குறிப்பு :- அடிப்படை மற்றும் உயர்நிலை தெரிந்தவர்களுக்கு ஜாதகம் பலன் சொல்லும் பயிற்சி நடைபெற்று வருகிறது விருப்பமுள்ள நண்பர்கள் எனது செல் நம்பரில் தொடர்பு கொண்டு பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ]

பூஜை_துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது


Thank fb
பூஜை_துவக்கத்தில் 

தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?

சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...

சங்கல்பம்

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.

இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.

“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர 
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”

என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். 

ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.

பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.

“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.

இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.

அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.

இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;

அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;

சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;

சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;

ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;

இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;

மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;

ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;

அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;

பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;

பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;

சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே; 

இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;

பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;

பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;

எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;

நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;

ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;

யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;

ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:

மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.

கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;

மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;

அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;

உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.

2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.

4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.

5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.

6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

Tuesday, June 6, 2023

நவாவரண பூஜை


நவாவரண பூஜை  பற்றி அறிந்து கொள்ளுங்கள்

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். 

பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். 

இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். 

இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. 
இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. 

ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 
9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. 

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். 

எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

ஓம் சக்தி பராசக்தி 🙏

Friday, June 2, 2023

தந்திர யோகம்

🥀 தந்திர யோகம்! 

மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஒன்றாகும்.

இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்த நிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வெவ்வேறு பெயர்களாலும் உணரப்பட்டது.

ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தான்.

அவ்வழிகள் யாதெனில் 
பக்தி மார்க்கம், 
ஞான மார்க்கம், 
கர்ம மார்க்கம், 
யோக மார்க்கம், 
தந்திர யோக மார்க்கம், 
என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்
**************
பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல். என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும். அடுத்து

ஞானமார்க்கம் 
***************
அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும்.

கர்ம மார்க்கம் 
**************
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜுனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடைந்து முக்தி பெற கடைபிடிக்கப்படுபதே கர்ம மார்க்கமாகும். 

யோக மார்க்கம் அறிக 
**********************
அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும். 

தந்திர மார்க்கம்
****************
தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும்.

புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும். மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும்.

இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது..

யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும். உதாரணமாக ஒன்றை அறியுங்கள்.

மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர்.

பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான்.

குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன.

இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன.

இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தாற் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது .
மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளும் நல்லது சரியானது என சில கலைகள் தான் உள்ளது. எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது, அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம், சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம், அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பிழையில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும்.

இங்கு  பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும். தந்திர யோகத்தின் வெற்றி மன ஈடுபாட்டில்தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

இயற்க்கையை எதிர்க்காமலும், தர்மத்தை மீறாமலும் , எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ, அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்ல முடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும். இதுவும் தந்திரகலையாகும் .

நம்மால் முடிக்கமுடியாத செயலை அதை முடிக்கும் தகுதியானவரை தேர்ந்தெடுத்து ஏவி செயல் படுத்துவதும் தந்திர கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் .ரகசியமாக இருந்தால் தான் எதிரியை எதிர்க்காமல் வெல்ல முடியும் .எதிர்ப்பை பகையாகாமல் பலனை நம் வசமாக்க முயல்வதும் தந்திரக்கலையாகும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகொள்வது வீரம். எதிரியை நண்பனாக்கி அன்பால் வெற்றிகொள்வது தந்திரமாகும் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திர அறிவாகும் .

நீங்கள் உங்களுடைய உழைப்பையும் பலத்தையும் நம்புவது அறிவு, இதன்கூடவே வெற்றி பெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முன்னுக்கு வர முயல்வது தந்திரம் .

முன்னோர்கள் நமக்கு கொடுத்துச்சென்றுள்ள புரானங்கள் , இதிகாசங்கள் யாவும் சாமான்யருக்கு கதையாக தோன்றுகிறது இதில் பல திருத்தங்களை கவிஞர்களும் தன் பங்கிற்க்கு செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். ஒருவிஷயத்தை நன்றாக கவனம் வையுங்கள் சாதாரனமாக பார்க்கும் கேட்கும் படிக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே பார்ப்பது சராசரி அறிவாகும். ஆனால் அதன் உள்நுழைந்து காரணங்களை தேடுவது பகுத்தறிவாகும். ஆனால் இதையும் கடந்து நடந்த நிகழ்வுகள் யாவும் வாழ்க்கை சூத்திரங்கள் என்றும் நம் வழிகாட்டி மரங்கள் என்றும் யார் எடுத்து கையாழ்கிறாறோ அவரே ஞான அறிவு பெற்றவராவர் .

மகாபாரதத்தை கேட்கும் போது சூது வாதம், வீரம், வேதனை, வெற்றி, பாசம், பிரிவு என்ற சம்பவங்களையே உணர்வோடு பார்த்து சலிப்பும், ஆர்வமும் கொள்கிறோம் . நம்மவர்களுக்கு  உணர்வுகளின் தாக்கம் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளதால் எல்லாவற்றையுமே தன் வாழ்க்கை சம்பவங்களோடு ஒற்றுமை படுத்தி உணர்ச்சி வசப்பட்டே பழகிவிட்டது. ஆனால் அதை கடந்து மகாபாரதத்தை ஆய்வு செய்தால், அதுவும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் பல அரிய தந்திர ரகசியங்கள் கிடைக்கும் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்னரும், கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையான்டது முழுக்க தந்திரம் தான். தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சிவசப்படுதலோ, கோபப்படுதலோ கூடாது. எதையும் எளிதில் நம்புதலும் கூடாது. இதை கடைசி நேரத்தில் சகுனியால் கடைபிடிக்க முடியாமல் போனாது. இதுதான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு அடித்தளம் போட்டது. ஸ்ரீகிருஷ்னன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெற்றியை பாண்டவருக்கு பெற்றுத்தந்தார். தர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் ஸ்ரீகிருஷ்னர். அதர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் சகுனி . 

ஆக தந்திரம் நல்லவனுக்கும் பலன் கொடுக்கும் கெட்டவனுக்கும் பலன் கொடுக்கும். தந்திரத்திற்க்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அருவடை செய்வோம். இதை மனதில் வைத்து தந்திரத்தை கையாள வேண்டும். கெட்டவருக்கு சகுனி போன்ற ஒருவர்தான் துணைக்கு தந்திரமாக வந்து இருதியில் தோல்வியை பெற்று தருவர். ஆனால் நல்லவனுக்கு ஸ்ரீகிருஷ்னரை போல தெய்வமே துனையாக வந்து இறுதி வரை உடனிருந்து வெற்றியை பெற்றுத்தரும். இதை மறவாதீர்கள் .

மூலிகையை பயன்படுத்துவது, யந்திரம், முத்திரை, ஆசனம், ஆசனவிரிப்பு, ஆடையின்வண்ணங்கள் , விருட்சங்கள், மந்திரம், தீட்சை, முகூர்த்தம், பட்சி, ஓரை பார்த்தல் , அஞ்சனம் இடுதல், எதிரியின் உடமையை கையாழுதல், அஷ்டகர்ம முறைகள், பலவித மலர்கள், யாகங்கள் செய்தல், மனதை அடக்குதல், உலோகம், நவரத்னம், பரிகாரமுறைகள், சமர்பணம் செய்தல், வணக்கம் செய்தல், முயற்ச்சித்தல் இன்னும் பல்வேறு செயல்களிலும் தந்திரங்கள் மறைந்துள்ளது . காரணகாரியம் இல்லாமல் முன்னோர்கள் எதையும் சொல்லிச்செல்லவில்லை எல்லாம் தந்திரமே .

தந்திரம் என்பது புத்தி யோசனை செயல் விவேகம் இவைகளோடு பின்னிபினைந்தது ஆகும். தந்திரம் என்பது எதிரியின் வலயில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று, எதிரியை தன் வலையில் விழவைப்பதும் தந்திரமாகும். ஆயிரம் பேரை எதிர்த்து சண்டை இடுவதை விட எதிரி கூட்டத்தின் தலைவன் ஒருவனை பிடித்து விட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம். இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும். எதிரியோடு மோதுவதை விட எதிரியை தன்வசப்படுத்த முயல்வதே தந்திரமாகும்.

நமக்கு தந்திரத்தை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அன்பு, உண்மை, தன்னம்பிக்கை, தர்மம் , விடாமுயற்ச்சி, புரிந்து செயல்படுதல், ஊக்கம் இவைகளை மட்டுமாவது பின்பற்றுங்கள் கூடவே ரகசியத்தை கடைபிடியுங்கள், மற்றவர் நம் மேல் அன்பாய் இருக்க என்ன அனுகுமுறை அவசியமோ அதை கடைபிடியுங்கள் போதும். இறை சக்தி உங்களை நாடிவர இதுவே போதும். இந்த அனுகுமுறையும் தந்திரக்கலைதான்.

-பைரவ கல்பம் என்னும் தந்திர யோக நூலில் இருந்து.....
Thank to FB.. 

Thursday, June 1, 2023

சிவபூஜைக்கு உரிய மலர்கள்

சிவபூஜைக்கு உரிய மலர்கள்

ஞான சர நூல் (பாகம் -2)

thank to Fb

ஞான சர நூல் (பாகம் -2)
-------------------------------------------
                         மகாதேவனாகிய சிவபெருமானே ஆதி யோகியாக வந்து அன்னை பார்வதி தேவிக்கு அளித்த இந்த சிவரகசியம் தான் சர வித்தை என்பது. நம் சித்தர்களின் குரல் அன்பர்களின் நலம் கருதி முழு ரகசியங்களையும் இரண்டு பாகங்களாக்கி உலக நன்மைக்காக பதிவிடுகிறேன். எங்கு நீங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷ ரகசியங்கள் இவை. சிவனருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும்....
பயன்படுத்தி கொள்ளுங்கள்......

(215) தேவி கேட்கிறாள் ஹே... தேவாதி தேவா! ஸ்வரத்தினாலே திரிகால ஞானம் எப்படியுண்டாகிறது.

(216) ஹே.... பார்வதி! பூதபவிஷ்ய வர்த்தமானம் இம் மூன்று காலங்கள் ஜெயம் முதலான சுபம், தோல்வி முதலான அசுபம், இதுகளினுடைய ஞானம் ஸ்வரத்தின் ஞானத்தினாலேயே யுண்டாகிறது. இதற்கு வேறு உபாயமில்லை.

(217) தத்துவத்தினாலேயே சுபா சுபகாரியம், ஜெயம், அபஜெயம், சுபீக்ஷம், துர்பிக்ஷம், இவைகள் உண்டாகின்றன. தத்துவம் காலத்திரயத்தையும் அனுசரித்திருக்கிறதென்று, ஞானிகன் சொல்லுகிறார்கள்.

(218) ஹே... தேவாதி தேவா! சம்சாரசாகரத்தில் மனிதனுக்கு சர்வ காரிய சித்தியையும் செய்யும்படியான சிநேகிதன் யார்? அதை எனக்குச் சொல்லவேண்டும்.

(219) ஹே.... தேவி! மனிதனுக்கு பிராணன், முக்கிய மித்திரனும் சகாவாயுமிருக்கின்றான். பிராணனைப்போல் பந்து வேறொருவருமில்லை.

(220) ஹே... சங்கா! வாயு பிராணணிடத்தில் எப்படியிருக்கிறது. தேகம் எப்படி பிராண ரூபமாயிருக்கிறது, தத்துவத்தினிடத்தில் சஞ்சாரம் செய்கின்ற பிராணனை எப்படி யோகியானவனறிகிறான். இதை எனக்குச் சொல்லவேண்டும்.

(221) சங்கரர்-சரீரம் என்பது ஒரு நகரம். இதில் வாயு, ரக்ஷகன். இவன் உட்செல்லும்போது 10 அங்குலமும், வெளிக்கிளம்பும்போது 12 அங்குலமுமாய்ச் செல்லுகிறான்.

(222) நடையில் 24 அங்குலம், ஒட்டத்தில் 42 அங்குலம்,  மைதுன காலத்தில் 65 அங்குலம், நித்திரையில் 100 அங்குலம். இவ்விதமாக பிராணனுடைய வேகம் உண்டாகிறது.

(223) பிராணனுடைய சுபாவமான வேகம் 12 அங்குலந்தான். ஆனால் போஜன காலத்திலும், பேசும்பொழுதும் 18-அங்குல வேகமுண்டாகிறது.

(224) பிராணனுடைய வேகம் 12 அங்குலமென்று சொல்லியிருக்கிறது.

(224) அதில் ஒரு அங்குலம் யோகாப்பியாசத்தான் குறைந்தால் அவனுக்கு நிஷ்காமியப் பிராப்தி யுண்டாகிறது. 2-இரண்டு அங்குலம் குறைத்தால் ஆனந்தமுண்டாகிறது. 3-மூன்று அங்குலம் குறைத்தால் கவித்துவ சக்தியுண்டாகிறது. 4-நான்கு அங்குலம் குறைத்தால் வாக்குப் பலிதமுண்டாகிறது. 5-ஐந்து அங்குலம் குறைத்தால் தூர திருஷ்டி ஏற்படுகிறது. 6-ஆறு அங்குலம் குறைத்தால் ஆகாய கமனம், 7-ஏழு அங்குலம் குறைத்தால் பிரசண்ட வேகமுண்டாகிறது.

(226) 8-எட்டு அங்குலம் குறைத்தால் சித்தி, 9-ஒன்பது அங்குலம் குறைத்தால் நவநிதிப் பிராப்தம்.

(227) 10-பத்து அங்குலம் குறைத்தால் தசமூர்த்தித்துவம் (அநேக ரூபம்). 11-பதினோறு அங்குலம் குறைத்தால் தன்னிழற்றுப் போகிறது. 12-பண்ணிரண்டு அங்குலம் குறைத்தால் அம்சகதி கங்காமிர்தா பிராசனம், இவ்விதமாக 12 அங்குலத்தையும் ஜெயித்தால் அந்த வாயுவாவது சுகசிகை பரியந்தம் பூர்ணமாய் வியாபிக்கிறது. பிறகு அவனுக்கு எப்பொழுதும் அமிர்த பானம் உண்டாகிக்கொண்டேயிருத்தலினால் ஆகாராதிகள் தேவையில்லை.

(228) எல்லாக் காரியத்திலும் பலத்தைக் கொடுக்கும்படியான இந்தப் பிராண விதியைச் சொன்னேன். பிராண வேகத்தினுடைய அப்பியாச் சாராம்சங்களை குருவைத் தவிர கோடி சாஸ்திரங்களினாலும் அறிய முடியாது. குருவாக்கியத்தினாலேயே அறியவேண்டும்.

(229) சூரிய உதயத்தில் சந்திரனும், அஸ்தமன காலத்தில் சூரியனுமிருந்தால் உத்தமம். பிராப்த யோகத்தினால் அவ்விதம் நடக்காவிட்டால் மத்தியானம் அல்லது மத்திய இரவில் அவ்விதமுண்டானால் அது சுபத்தை கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.

(230) தூர யுத்தத்தில் சந்திரனும், சமீப யுத்தத்தில் சூரியனும் ஜெயத்தைக் கொடுக்கிறார்கள். உதயமாயிருக்கப்பட்ட நாடியின் பக்கத்துக்காலை முதலில் வைத்து நடக்க சர்வ சித்தி.

(231) பிரயாணம், கல்வியாணம், நகரப்பிரவேசம் முதலான சுப காரியங்களுக்கு சந்திரநாடி எப்பொழுதும் சுபத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.

(232) அயனம், திதி, வாரம், இவைகட்குரிய ஸ்வரங்களும், தத்துவங்களும் சரியாய் நடக்கும்பொழுது ஒருவன் யுத்தத்திற்கு போனால் அவன் தன்னுடைய ஸ்வா ஸ்தம்பனத்தினால் சத்துருவை ஜெயிக்கிறான். அவனுக்கு வைகுண்ட லோகத்திலும் விக்கினம் கிடையாது.

(233) ஜீவாங்கத்தினிடத்தில் வஸ்திர பரிதானம் செய்துகொண்டு "ஜீவம் ரக்ஷ,ஜீவம் ரக்ஷ" யென்று யாரொருவன் ஜெபம் செய்கிறானோ அவன் யுத்தத்தில் உயிருடனிருந்து சர்வ பிருதிவியையும் ஜெயிக்கிறான்.

(234) பிருதிவி, அப்பு இந்த தத்துவத்தில் சாந்த கர்மத்தைச் செய்யவும். அக்கினி, வாயு, இந்த தத்துவத்தில் உக்கிர காரியங்களைச் செய்யவும். ஆகாச தத்துவத்தில் மேற்சொன்ன இரண்டு காரியங்கள் செய்ய புறப்படலாகாது.

(235) பூர்ணாங்கத்தினாலேயே ஆயுதங்களைத் தரிக்க வேண்டியது. அந்தப் பக்கத்து கைகளினாலேயே பிரயோகிக்கவும் வேண்டும். கீழே ஆயுதங்களை வைக்கும்பொழுதும் பூர்ணாங்க கையினலேயே வைக்கவேண்டும். இவ்விதம் செய்வானாகில் எப்பொழுதும் ஜெயமே யுண்டாகிறது.

(236) வாகனங்களில் ஏறும்போது பிராணவாயுவை ஆக்ரஷ்ணம் செய்து கொள்ளவேண்டியது. குதிரையின் இடது பாகத்தில் காலை வைத்து ஏறவேண்டியது. இவ்விதம் செய்தால் சர்வ காயமும் சித்தியாகிறது.

(237) சூன்யாங்கத்தில் சத்துருவினுடைய சைன்னியமும், பூர்ணாங்கத்தில் தன்னுடைய சைன்னியமுமிருக்கும்படி அமைத்துக்கொண்டு பூர்ண தத்துவத்தில் யார் யுத்தம் செய்கிறானா, அவன் தனியே சர்வ பிருதிவியையும் ஜெயிக்கிறான்.

(238) சரீரத்தில் எந்த நாடி நடக்கிறதோ அந்தப் பக்கம் தெய்வ வாசமிருக்கிறது. அந்தப்பக்கத்துக் காலை அதற்குரிய திசையில் முன் எடுத்து வைத்துப்போனால் சர்வ காரிய சித்தியுண்டாகும்.

239 முதலில் முத்திரையைச்செய்து பிறகு யுத்தம் செய்ய வேண்டியது. எவனொருவன் சர்ப்ப முத்திரையை செய்கிறானோ அவனுக்கு சந்தேகமற சித்தியுண்டாகிறது.

(240) சந்திரன் அல்லது சூரிய ஸ்வரம் நடக்கும்பொழுது யுத்தம் செய்யவேண்டுமென்கிற இச்சையுடன் வருகிற வீரனொருவன் சூன்ய பாகத்தில் நின்றால் தோல்வியும், பூர்ணாங்கத்தில் நின்றால் ஜெயமுமென்று ஸ்வர தத்துவத்தை யறிந்தவன் அறியவேண்டியது.

(241) எந்த திசையை நோக்கி வாயு நடக்கின்றதோ, அந்த திசையை நோக்கி நின்று, யுத்தம் செய்தால் இந்திரனே யுத்தத்திற்கு வந்தாலும் அவனை ஜெயிக்கிறான்.

(242) எந்த நாடியில் வாயு நடக்கிறதோ, அந்தப் பாகத்தின் பிராணனை காது வரையில் ஆகர்ஷ்ணம் செய்து யுத்தம் செய்தால் இந்திரனையும் ஜெயிக்கலாம்.

(243) எவனொருவன் சத்துருவினுடைய அடி விழாதபடி தன் பூர்ணாங்கத்தை காப்பாற்றிக்கொள்ளுகிறானோ, அவனைச் சத்துரு எவ்வளவு பலவானாயிருந்தாலும் வெல்ல முடியாது.

(244) கையினுடைய அங்குஷ்டம், தர்சனி இந்த விரல்களினாலும் காலின் அக்குஷ்டத்தினாலும் தொனிக்கவேண்டியது. இவ்விதம் செய்வதினால் லக்ஷக்கணக்கான ஜனங்களிடத்திலும் யுத்தம் செய்து ஜெயிக்கிறான்.

(245) சூரியன் அல்லது சந்திரன் நடக்கும்போது, இடையிலே வாயு நடந்து கொண்டிருந்தால் ஜெயத்தை இச்சித்த ஒருவன் திக் ரட்சனம் செய்யவேண்டியது.

(246) சுவாசமானது உள்ளே பிரவேசிக்கும்போது தூதன் தான் இச்சித்த வார்த்தையை சொல்வானாகில், அந்த காரியம் சித்தியடையும். சுவாசமானது வெளியே செல்லும்போது சொல்வானாகில் காரியம் ஒரு நாளும் முடியாது.

(247) லாபகரமான எந்த சுபகாரியமும் பூர்ணாங்கத்தில் ஒருவன் நின்று சுவாசம் உள்ளே பிரவேசிக்கும்போது கேட்டாலும் சொன்னாலும அப்படியே அந்தக்காரியம் சித்தியாகிறது. சுவாசம் வெளிப்படும்போது சொன்னாலும் கேட்டாலும் காரிய ஹானியுண்டாகிறது.

(248) புருஷர்களுக்கு சூரிய நாடியும் ஸ்திரீகளுக்குச் சந்திரனும், யுத்தகாலத்தில் கும்பகமும் சிலாக்யம். இவ்விதமாக மூன்று நாடிகளினுடைய மூன்று வேகத்தையும் அறியவேண்டியது.

(249) ஹகார ஸகாரத்தினுடைய பேதம் அறிந்தாலொழிய சுரக்கியானம் உண்டாகமாட்டாது. ஆகையால் ஹகார ஸகாரத்தி னுடைய சொரூபம் அறிய வேண்டியது அறிவானேயானால, ஜீவன் ஹம்ஸ ஸோகம் என்கிற பதத்தினால் மேலான எல்லாப் பதத்தையுமடைகிறது.

(250) சூன்யாங்கமாயிருப்பதை பூரணம் செய்து ஜீவாங்கத்தை காப்பாற்றவேண்டியது. இவ்விதம் செய்தால் ஜெயப்பிராப்த முண்டாகிறது. ஜீவாங்கத்தை காப்பாற்றாமல் சூன்யாங்கத்தை காப்பாற்றினால் அழிவு எற்படும்.

(251) வலது அல்லது இடது பக்கம் கேள்வி கேட்கிற ஒருவன் நின்று யுத்தத்தில் சென்றிருக்கிற ஒருவனைப்பற்றி கேட்டால் அவன் நின்ற பக்கம் உனக்கு பூரணமாயிருந்தால் கெடுதியுண்டாகாதென்றும், சூன்யமாயிருந்தால் கெடுதி யென்றும் சொல்லவும்.

(252) கேள்வி கேட்கிற காலத்தில் பிருதிவி தத்துவம் நடந்தால் வயிற்றில் அடி, அப்பு தத்துவமாயிருந்தால் காலிலடி, அக்கினி தத்துவமாயிருந்தால் தொடையிலடி, வாயு தத்துவமாயிருந்தால் கையிலடியென்று சொல்லவும்.

(253) ஆகரசதத்துவமாயிருந்தால் தலையிலடியென்றும் சொல்லவும். இவ்விதமான ஐந்து விதக் கெடுதியை ஸ்வரசாஸ்திரத்தில் சொல்லுகிறது.

(254) யுத்தகாலத்தில் யுத்தத்திற்கு போகிறவனுக்கு சந்திர ஸ்வமாயிருந்தால் இவனுக்கு ஜெயமும், சூரிய ஸ்வாமாயிருந்தால் எதிரிக்கு ஜெயமுமுண்டாகிறது.

(255) யுத்த ஜெய விஷயத்தில் சந்தேகமுண்டானால் நாடியினுடைய மத்திய பாகத்தை கவனிக்கவேண்டியது. பிராணன் சுழிமுனையில் நடந்து கொண்டிருந்தால் யுத்தகளத்தில் சத்துருவினால் சங்கடமுண்டாகிறதென்றறியவும்.

(256) எந்த நாடி நடக்கிறதோ, அந்த நாடிக்கு விரோதமான திசையை நோக்கி நின்று யுத்தம் செய்கிறவலுக்கு ஜெயமுண்டாகிறது நிச்சயம். உதாரணமாக சந்திரநாடி நடக்குமானால் சூரியதிசையாகிய கிழக்கும் வடக்கும், சூரியநாடி நடக்குமானால் சந்திரன் திசையாகிய தெற்கும் மேற்குமாகிய திசையை நோக்கி நின்று யுத்தம் செய்ய ஜெயமுண்டாகிறது.

(257) யுத்தகாலத்தில் தனக்கு சந்திர நாடி நடந்து கொண்டிருந்தால் ஜெயமுண்டாகிறது. சத்துரு வசியமாகிறான்.

(258) யுத்தகாலத்தில் சூரியஸ்வரம் நடந்தால் யுத்தம் செய்கிற னுக்கு (தெய்வம், இராக்ஷதாள், மனுஷியாள் இவர்கள் யுத்தத்தில்) ஜெய முண்டாகிறது.

(259) எவனொருவன் சந்திரநாடியில் யுத்தத்திற்குப் பிரயாணப்படுகிறானோ அவனை சத்துரு ஜெயிக்கிறான். சுழிமுனையில் பிரயாணம் செய்தால் யுத்தம் நடவாமல் எங்கேனும் சும்மாவிருக்கும்படி நேரிடும். சூரியநாடியில் புறப்பட்டால் நிச்சயமாய் ஜெயம் கிடைக்கும்.

(260) இரண்டு பேர்கள் வந்து யுத்த விஷயமாய் கேள்வி கேட்டால், எவனொருவன் பூர்ணாங்கத்திலிருந்து கேட்கிறானோ, அவன் ஜெயமடைவானென்றும், சூண்யாங்கத்தில் நின்று கேட்கிறவன் அபஜெயமடைவானென்றும் சொல்லவும்.

(261) பூர்ணாங்கத்தில் சத்துரு நின்றால் அவனைத் தனக்கு சூன்யாங்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது. சூன்யாங்கத்தில் எதிரி நின்றால் எதிரி நிச்சயமாய் மரணமடைகிறான்.

(262) கேள்வி கேட்பவன் சந்திரநாடியிலிருந்து கேட்டால், அவன் வாயிலிருந்து புறப்படுகிற கேள்வியின் அக்ஷரங்கள் அல்லது ஜெயவிஷயத்தைப் பற்றிய நாம அக்ஷரங்கள், ஒற்றையெழுத்துக்களா அல்லது இரட்டை எழுத்துக்களாவென்று எண்ணிப்பார்த்து, இரட்டையாயிருந்தால் ஜெயமும், ஒற்றையாயிருந்தால் அபஜெயமும்; அதே சூரியநாடியில் ஒற்றை எழுத்துக்கள் ஜெயமும், இரட்டை எழுத்துக்கள் அபஜெயமுமென்றறியவும்.

(263) கேள்வி கேட்பவன் சந்திரஸ்வரத்தின் பக்கமாய் நின்று கேட்டால் யுத்தம் ஆரம்பமென்றும், சூரியஸ்வரத்தின் பக்கமாய் நின்று கேட்டால் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதென்றும் சொல்லவும்.

(264) பிருதிவி தத்துவத்தில் யுத்தம் ஆரம்பித்தால் யுத்தம் சமமாக இருக்கும். அப்பு தத்துவத்தில் ஜெயமுண்டாகிறது. தேயு தத்துவத்தில் அபஜெயம் வாயு ஆகாச தத்துவத்தில் மரணமுண்டாகிறது. 

(265) எக்காரணத்தினாலாவது அல்லது திகிலினாலாவது இன்ன ஸ்வரம் நடக்கிறதென்பது நிக்ஷயிக்கமுடியாத காலத்தில் புத்திமான்களாயிருக்கப்பட்டவர்கள் கீழ் கண்டவாறு செய்யவும்.

(266) சலனமில்லா மனதுடன் தேகத்தைக் கோணலில்லாமல் சமமாய் வைத்துக்கொண்டு கையிலிருந்து ஒரு புஸ்பத்தை எதிரே பூமியில் போடவும். அது எந்தப்பக்கமாய் விழுகிறதோ அது பூர்ணாங்கமென்றும் மற்ற பாகம் சூன்யாங்கமென்றுமறியவும்.

(267) யாதொரு காரியத்தைச் செய்யும்பொழுது நின்றுகொண்டாவது அல்லது உட்கார்ந்து கொண்டாவது மன உற்சாகமாய் யாரொருவன் பிராண வாயுவை உள்ளே இழுக்கிறானோ  அவன் அந்தக் காரியத்தை சித்தி செய்கிறான்.

(268) காலன், சஸ்திரம், சர்ப்பம், சத்துரு, வியாதி, திருடன், இவைகள் சூன்யாங்கத்திலிருந்தால் அவனுக்கு மேற்கண்டவைகள் யாதொரு தீங்கும் செய்யமுடியாது.

(269) ஜீவ ஸ்வரத்தினாலேயே வாயுவை நிறுத்தவேண்டும். திரும்பவும் அதினாலேயே விடவேண்டும். தூது, கிரீடை, ஜீவ சுரத்தினுடைய அங்கத்தினால் செய்தால் ஜெயப்பிராப்தியுண்டாகிறது.

(270) ஸ்வரக்கியானம் யாரோருவனுக்கு இருக்கிறதோ, அவனை ஒருவராலும் ஜெயிக்க முடியாது. அவனுக்கு விரோதமாய் கோடிக்கணக்கான விரோதங்கள் செய்யினும் நிஷ்பலமாகிறது. ஸ்வர ஞானி இகத்திலும் பாத்திலும் பலிஷ்டனாகிருன்.

(271) சில அரசர்களுக்கு பத்து, நூறு, பதினாயிரம் லட்சக்கணக்கான வீரர்களுடைய பலமும் இந்திரன் பிரம்மாதி தேவர்களுக்கு கோடிக்கணக்கான வீரர்களுடைய பலமுமிருப்பதெல்லாம் ஸ்வர பலமே யென்றறியவும்.

(272) ஹே... சங்கரா! மனிதர்களின் யுத்தத்தில் ஜெயம் அபஜெயத்தைப்பற்றி சொன்னீர்கள். ஆனால் யமனோடு யுத்தம் செய்யும் படியான சமயம் மனிதனுக்கு எற்பட்டால் அவன் ஜெயத்தை எப்படியடைவான்?

(273) ஸ்திர மனத்துடனிருந்து ஈஸ்வரனைத்தியானம் செய்ய வேண்டியது. பிராணனைக் கும்பகத்தில் நிறுத்தி ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டியது, இவ்வாறு செய்கிற மனிதனுக்கு இஷ்டசித்தி, மகாலாபம், ஜெயம் இவையுண்டாகின்றன.

(274) பிரபஞ்சமானது நிராகாரத்திலிருந்து உண்டாயிருக்கிறது என்ற ஞானம் உண்டான பிறகு, பிரபஞ்சமே நிராகாரமாகிறது. ஆசையால் பிரபஞ்ச சிருஷ்டியினால் மனிதனுக்கும் யமனுக்கும் தாரதம்மியம் உண்டாயிருக்கிறது. ஆனால் நிராகார சிருஷ்டியினால் மனிதன், யமன், புழுக்கள் இவைகளெல்லாம் (சமமாக) ஆகிவிடுகின்றன.

வசீகரணப் பிரகரணம்:-
-----------------------------------------

(275) ஹே... சங்கமா! இதுவரையில் நர யுத்தம், இயம யுத்தம் இவைகளைச் சொன்னீர்கள். இப்பொழுது வசீகரணப் பிரகரணத்தைச் சொல்லவேண்டும்.

(276) தனது நாயகிக்கு சந்திரஸ்வரம் நடக்கும்பொழுது, தன்னுடைய சூரியஸ்வரத்தினாலே அந்தச் சந்திரனை ஆகர்ஷ்ணம் செய்து தன்னுடைய ஜீவஸ்வரத்தில் சேர்க்கவும். இவ்விதம் செய்தால் அந்த ஸ்திரீ, ஜென்மம் உள்ளவரையில் அவனுக்கு சுவாதீனமாகிறாளென்று தவத்தில் சிறந்த முனிவர்கள் சொல்லுகிறார்கள். பரஸ்திரீ விஷயத்தில் இவ்விதம் செய்தால் நாசமடைவான்.

(277) புருஷனானவன் தன்னுடைய ஜீவஸ்வரத்தினாலே ஸ்திரீயினுடைய ஜீவஸ்வரத்தை கிரஹணம் செய்து ஸ்திரீயினுடைய ஜீவஸ்வரத்தில் தன்னுடைய ஜீவஸ்வரத்தைக் கொடுக்கவும். இவ்விதமாக ஜீவஸ்வரத்தினுடைய சேர்க்கை செய்தால் அந்த ஸ்திரீக்கு அந்தப்புருஷன் ஜென்ம பரியந்தம் பிரியமுள்ளவனாகிறான்.

(278) இராக்காலங்களில் கடைசி ஜாமத்தில் ஸ்திரீயானவள் அயர்ந்து தூங்கும் பொழுது அவளுடைய சுழிமுனை நாடியை புருஷனானவன் உட்கொள்ள வேண்டியது. இவ்வாறு செய்தால் பிராணனுள்ள வரையில் புருஷனுக்கு  வசியமாகிறாள்.

(279) பிறகு சுழிமுனை ஸ்வரத்தின் கால அளவு சென்றதின் பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜெபித்துத் தன்னுடைய சந்திர ஸ்வரத்தை ஸ்திரீக்கு கொடுக்கவும். இவ்வாறு கொடுத்தால் தக்ஷணமே அவன் மோகத்தையடைந்து வசியமாகிறான்.

(280) சயனகாலத்தில் ஆலிங்கன சமயத்தில், அல்லது வேறு எந்த சமயத்திலாவது எவனொருவன் தன்னுடைய சூரியஸ்வரத்தினால் தன் நாயகியின் சந்திர ஸ்வரத்தை இழுத்து உட்கொள்ளுகிறானோ அவன் மன்மதனைப் போல் அவளுக்கு மோகனகாரகனாகிறான்.

(281)சிவத்தினால் சக்தியையும், சக்தியினால் சிவத்தையும் யாரொருவன் சேர்க்கிறானோ, அவன் அந்த ஷணத்தில் நூறு ஸ்திரீகளுக்கும் மோகத்தை உண்டாக்குகிறான். (சிவம்-சூரியன், சக்தி-சந்திரன்.)

(282) ஸ்திரீயினுடைய சூரிய ஸ்வரத்தில் புருஷனுடைய சந்திர ஸ்வரத்தை கொடுக்கவேண்டியதாயிருந்தால் (3,5,7,9,) தடவைகளாகக் கொடுக்கவும். அவளுடைய சந்திர ஸ்வரத்தில் புருஷனுடைய சூரிய ஸ்வரம் கொடுக்க வேண்டியிருந்தால் (2,4,6) தடவைகளாகக் கொடுக்கவேண்டியது. இவ்விதம் செய்தால் அந்த நாயகி வசியமாகிறாள்.

(283) சூரியனையோ, சந்திரனையோ, சர்ப்பகதியாக ஆகர்ஷணம் செய்து ஒரு தாமரை புஷ்பத்தை நாயகன், நாயகி இருவரும் உதடுகளில் ஒற்றவும். பிறகு அந்த புஷ்பத்தை முகத்தில் ஒற்றிக்கொண்டு உடனே ஸ்வரத்தை அந்தப் புஷ்பத்தில் சேர்க்கவும். இவ்விதமாக மேலே சொல்லியிருக்கிற கணக்குப்பிரகாரம் செய்யவும்.

(284) மேலே சொல்லியபடி நாயகியானவன் நித்திரை செய்கிற வரையில் செய்யவும். பிறகு அவள் விழித்துக்கொண்டபின் அவளுடைய நேத்திரம், கழுத்து இவைகளை சும்பனம் செய்யவும்.

(285) இவ்விதமாகப் புருஷன், பெண்களின் வ்வரத்தோடு கலந்திருந்தால் பெண்களை வசியப்படுத்துகிறான். அனால் இந்தப் பிரகரணத்தை ஸ்திரீலோலனாயிருக்கப்பட்டவனுக்கு சொல்லக்கூடாதென்று ஸ்ரீ சங்கரருடைய கட்டளை....

கர்ப்பப் பிரகரணம்:-
-----------------------------------

(286) ருதுஸ்நானமான ஐந்தாம் நாள் ஸ்திரீயானவன் பதியுடன் கூடும்போது அவளுக்குச் சந்திர ஸ்வரமும் புருஷனுக்கு சூரிய ஸ்வரமும் நடக்குமானால் அதே புத்ர உற்பத்தியாகி திவ்விய புத்திரன் உற்பத்தியாகிறான்.

(287) ருதுஸ்நானமான ஸ்திரீயானவள் தனக்கு பிருதிவி அல்லது அப்பு தத்துவம் நடக்கும்போது, பசும்பாலில் சங்கவல்லிப் பிராசனம் செய்து தனக்கு சம்போகத்தைக் கொடுக்கும்படி திரிவாரம் புருடனைப் பிரார்த்திக்கவும்.

(288) ருதுஸ்நானம் செய்த ஸ்திரீக்கு மேற்சொன்ன ஒளஷதத்தைக் கொடுத்து புருஷனானவன் சம்போகம் செய்தால், ரூப வானும் பராக்கிரம சாலியுமான புத்திரன் ஜனிக்கிறான்.

(289) சூரிய ஸ்வரத்தோடு சுழுமுனை கலந்து தோன்றும்போது ருது காலத்தில் ஸ்திரீயை அணைத்தால், அங்கஹீனம், குரூபியான குழந்தைகள் பிறக்கும்.

(290) ருதுவான நான்கு நாட்களுக்கு பிறகு விஷம நாளில் (ஒற்றைப்படை நாட்களில்) சூரிய ஸ்வரத்தில் பிருதுவி, அப்பு, அக்கினி இந்தத் தத்துவங்களில் புருஷனானவன் கர்ப்பதானம் கொடுத்தால், மலட்டு ஸ்திரீக்கும் குழந்தை பிறக்கும்.

(291) புருடனுக்கு சூரியனும் ஸ்திரீக்கு சந்திரனும் நடக்கும் போது, இருவரும் அணைந்தால் மலடிக்கும் புத்திர உற்பத்தியுண்டாகிறது.

(292) புருஷனானவன் அணையும்போது சூரியஸ்வரம் நடந்து காம இச்சை முடிந்த பிறகு சந்திரன் நடக்க ஆரம்பிக்குமானால், மகா யோகமென்றறியவும். தெய்வ ஹீனமுள்ளவனுக்கு இந்தப்பாக்கியம் கிடைக்காது.

(293) கேள்வி காலத்தில் சந்திர ஸ்வரமாயிருந்தால் பெண் கர்ப்பமென்றும், சூரியனாயிருந்தால் ஆண் கர்ப்பமென்றும், சுழிமுனையாவிருந்தால் கர்ப்ப நாசமென்றுமறியவும்.

(294) கேள்வி காலத்தின் பிருதியி தத்துவமாயிருந்தால் பெண்னென்றும், அப்பு தத்துவமாயிருந்தால் புத்திரனென்றும், வாயு தத்துவமாயிருந்தால் பெண்ணென்றும், தேயு தத்துவமாயிருந்தால் கர்ப்ப அழிவென்றும், ஆகாசமாயிருந்தால் அலியென்றும் சொல்லவும்.

(295) சக்திர ஸ்வரகாலத்தில் கர்ப்பத்தைபற்றி கேள்வி கேட்டால் பெண்ணென்றும், சூரிய ஸ்வரத்தில் ஆணென்றும்,சுழிமுனையில் அலியென்றும் சொல்லவும். கேள்வி கேட்கிறவன் பூர்ணாங்கத்திலிருந்து கேட்டால் குழந்தையுண்டாகுமென்று சொல்லவும்.

(296) சூன்யாங்கத்திலிருந்து கேட்டால் சூன்யமென்றறியவும். இரண்டு ஸ்வரமும் நடக்கும்போது கேட்டால் இரட்டையுண்டாகும். சங்கிரமத்தில் அதாவது சுழிமுனையிலாவது அல்லது ஸ்வரம் பேதிக்கும் சமயத்திலாவது கேட்டால் கர்ப்ப அழிவு உண்டாகுமென்று தத்துவப் பிரக்ஞையுள்ளவனறியவும்.

(297) வாயு தத்துவத்தில் கர்ப்பம் தரித்தால் அக்குழந்தை எக்காலத்தும் துக்கியாகும். அப்பு தத்துவத்தில் சுகமுடையவனாயும் பிரசித்திப்பெற்றவனுமாயிருப்பான். அக்கினி தத்துவத்தில் கர்ப்ப அழிவு உண்டாகும். அல்லது அற்ப ஆயுளென்று அறியவும். பிருதிவியில் யோகியாயும், தனிகனாயும் கம்பீரமுடையவனாயுமிருப்பான்.

(298) வருணதத்துவம் அதாவது அப்பு தத்துவத்தில் கர்ப்பம் தரித்தால், தனவானாயும், சுகியாயும், போக போக்கியமுடையவனாயுமிருப்பான். ஆகாசத்திலோ கர்ப்பநாசம்.

(299) பிருதிவி தத்துவத்தில் உத்தம புத்திரனுண்டாகிறான். அப்பு தத்துவத்தில் சுகுணமாகிய கன்னிகையுண்டாகிறாள். இதர தத்துவங்களில் கர்ப்ப அழிவு அல்லது பிறந்தவுடன் இறந்துவிடும்.

(300) சூரிய ஸ்வரம் நடக்கும் பொழுது சந்திர ஸ்வரம் நடக்கிறதையும் சந்திரஸ்வரம் நடக்கும்பொழுது சூரியஸ்வரம் நடக்கிறதையும் நல்ல பிரக்ஞையோடு சந்தேகமற குருமுகமாய் தெரிந்து கொள்ளவேண்டியது. காரணம் குருவைத்தவிர கோடி சாஸ்திரங்களினாலும், வேதாத்யாயனம் செய்ததினாலும் அறிவது துர்லபம்,

வருஷ பலன்:-
-------------------------

(301) சித்திரை மாதம் முதல் தேதி (சைத்ர சுத்தப் பிரதமை) தக்ஷணாயணம், உத்திராயணம் இந்த தினங்களில் நடக்கிற தத்துவ பேதத்தினால் வருச பலனையறியவும்,

(302) பிராத காலத்தில் சந்திர ஸ்வரம் நடந்துக்கொண்டிருந்தால் அதில் பிருதிவி, அப்பு, வாயு, இந்தத் தத்துவங்களும் நடந்தால் சர்வதானியங்களும், நன்றாய் விளைந்து சுபீட்சமாயிருக்கும்.

(303) தேயு, ஆகாசம் இந்த தத்துவங்களாயிருந்தால் துர்ப்பிஷம் உண்டாகும். இதே மாதிரியாக வருடம், மாதம், நாள் இவைகளின் பேரிலும் தத்துவ பலனையறியவும்

(304) சுழிமுனையானது குரூரமாயும் சர்வ காரியங்களுக்கு கெடுதலாயுமிருக்கிறது. இதானது மேற்சொல்லிய சைத்ர சுத்தப் பிரதமையில் நடந்துகொண்டிருந்தால் தேச பீடை, மஹா ரோகம், சிரமம், கஷ்டம், இத்தியாதி துக்கங்கள் தேசத்திலுண்டாகின்றன.

(305) மேஷ சங்கரமண சமயத்தில் சுரபேதத்தை கவனிக்கவும், அதிலுள்ள தத்துவ பேதங்களைக் கொண்டு வருஷ பலனைச் சொல்லவும்.

(306) பிருதிவி முதலிய தத்துவங்களினால் தினம், மாதம், வருடம் இவைகளின் பலனையறியவும். இதில் பிருதிவி, அப்பு தத்துவம் நடந்தால் சுபபலன். அக்கினி, வாயு, ஆகாசம் இவைகளில் குரூர பலன்.

(307) மேஷ சங்கரமண காலத்தில் முதலில் பிருதிவி தத்துவம் நடந்தால் நல்ல விளைவு, தேச விருத்தி, ஏராளமான மழை சௌகரியம்,ஏராளமான தானியங்கள் இவைகளுண்டாகின்றன.

(308) அப்பு தத்துவமாயிருந்தால் அதிக மழை, சுபீக்ஷம், ஆரோக்கியம், சௌகரியம், ஏராளமான தானிய உற்பத்தி யென்றறியவும்.

(309) அக்னி தத்துவமாயிருந்தால் துர்ப்பிஷம்,தேச பீடை, சந்ததி நாசம், தானிய நாசம், அற்ப மழை, இந்த பலன்கனென்றறியவும்.

(310) வாயு தத்துவமாயிருந்தால், அற்ப மழை, அதிக மழையினால் பயம், முதலிய அறுவடை விக்னம் பயிருக்குண்டாகும்.

(311) ஆகாச தத்துவமாயிருந்தால், தானிய ஹானி, சுக ஹானி ஏற்படும்.

(312) பூரணமாயும், சுவாசம் உள்ளே பிரவேசிக்கிற சமயமுமாயிருந்தால் மேலே சொல்லப்பட்ட தத்துவங்களினால் தானிய சித்தியுண்டாகிறது. ஆனால் தத்துவோதய வேளையில், சூரியன் அல்லது சந்திர ஸ்வரம் விபரீதமானால் அதாவது சந்திரன் நடக்க வேண்டிய காலத்தில் சூரியனும், சூரியன் நடக்கவேண்டிய காலத்தில் சந்திரனும் நடந்தால் மாத்திரம் தானிய சங்கிரகம் செய்தால் சுகம்.

(313) விஷம நாடி (தக்ஷிண நாடியில்) முதலில் அக்கினி தத்துவமாயிருந்து பிறகு ஆகாச தத்துவம் உதயமானால் சர்வ வஸ்துக்களையும் சேர்க்கவும். காரணம் யாதெனில் இரண்டு மாதத்திற்குள் சகல வஸ்துக்களின் விருத்தியுண்டாகும்.

(314) இராக்கால முடிவில் சந்திர ஸ்வரம் நடந்து பிராதக் காலத்தில் சூரியன் கடக்குமானால் அந்த நாடியிலேயே ஆகாசம், வாயு, அக்கினி , உதயமானால் பூமியில் அநேக அனர்த்தங்களுண்டாகி ஜனங்களுக்கு யாதனை யுண்டாகிறது.

ரோகப் பிரகரணம்:-
----------------------------------

(315) பிருதிவி தத்துவத்தில் கேள்வி கேட்டால் சரீர ரோகமென்றும், அப்பு தத்துவத்தில் ஜல சம்மந்தமான வியாதியென்றும், தேயு தத்துவமாயிருந்தால், கிராமாத்திரங்களிலுள்ள துஷ்ட தெய்வங்கள், பிதுர்க்கள் தோஷமென்றும் கூறவும்.

(316) கேள்வி கேட்கிறவன் முதலில் சூன்யாங்கத்திலிருந்து, பிறகு பூர்ணாங்கத்திற்கு வந்தால் வியாதியஸ்தன் மூர்ச்சையடைந்திருந்தாலும் உயிருக்கு அபாயமில்லையென்று சொல்லவும்.

(317) பூரணாங்கத்திலிருந்து கேள்வி கேட்டால் அந்த மனிதன் அநேக ரோகங்களிலிருந்து துன்பப்பட்டாலும் இறக்கமாட்டானென்று சொல்லவும்.

(318) சூரியனில் வாயு நடக்கும்போது தூதுவன் வந்து குரூரமான அக்ஷரங்களை உச்சரித்து கேள்வி கேட்பானாகில் ரோகியானவன் பிழைப்பான், சந்திரன் நடக்கும்போது குரூர அக்ஷரங்களை உச்சரித்து கேள்வி கேட்டானும் அதே பலன் உ உண்டாகிறது.

(319) பூரணாங்கத்தில் நின்று உயிருள்ன வஸ்துக்களை கையிற் பிடித்துக்கொண்டாவது, அல்லது அதைப் பார்த்துக் கொண்டாவது, உயிருடனிருப்பவனைப்பற்றி கேள்வி கேட்டால் அது சுபம்.

(320) இடை அல்லது பிங்கலையில் வாயு நடக்கும்போது, அல்லது பிரவேசம் செய்யும்பொழுது, தூதன் பூரணாங்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அவனுக்கு இஷ்ட சித்தியுண்டாகிறது. இதில் சந்தேகமேயில்லை.

(321) கேள்வி கேட்கும்பொழுது, தாழ்ந்த இடத்திலிருந்து கேட்பானாகில், அவன் உயிருடனிருப்பான். உயர்ந்த இடத்திலிருந்து கேட்பானாகில் யமலோகத்திற்கு செல்வானென்று சொல்லவும்.

(322) கேள்வி கேட்பவன் விபரீத அக்ஷரத்தினால் கேள்வி கேட்டு சூன்யாங்கத்தில் நின்றாலும், அதே நேரத்தில் சுழிமுனை உதயமானாலும் விபரீத பலனென்று சொல்லவும். 

(323) சந்திர ஸ்வரம் நடக்கும்போது, சூன்யாங்கத்தில் நின்று வியாதியஸ்தனைப்பற்றி கேள்வி கேட்டால், அவன் நூறு வைத்தியர்களிடம் மருந்து சாப்பிட்டாலும் கடைசியில் மரணமடைவான்.

(324) சூரிய ஸ்வரம் நடக்கும்போது சந்திரனிலிருந்து அதாவது சூன்யாங்கத்திலிருந்து கேள்வி கேட்டால், சாக்ஷாத் சங்கரனே அவனைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருந்தாலும் அவன் பிழைக்கமாட்டான்.

(325) ஒரு பூதம் மிதமிஞ்சினால் ரோகம். அதிக உபத்திரவப்படுத்துகிறது. இரண்டு பூதம் மிதமிஞ்சினால் பந்து அல்லது இஷ்ட மித்திராளுடைய நாசம் உண்டாகிறது. ரோகஸ்தன் மரணத்தையடைகிறான்.

(326) மாசம், பக்ஷம், வருடம், இவைகளின் ஆரம்பத்தில் ஸ்வரத்தினுடைய சஞ்சாரத்தின்மேல் ஸ்வர ஞானியானவன் க்ஷய காலத்தையறியவும்.

(327) பஞ்ச பூதமயமாகிய தீபமானது சிவசொரூபத்தோடு கலந்திருக்கிறது. சூரிய ரூபமாகிய வாயுவினால் பாதுகாக்கவேண்டியது. இவ்விதம் செய்தால் ஜீவன் ஸ்திரமாயிருக்கிறது.

(328) பகலில் சந்திர ஸ்வரத்தையும், சூரியன் அஸ்தமித்த உடன் அதாவது இராக்காலங்களில் சூரிய ஸ்வரத்தையும், நடக்கும் படி ஒருவன் செய்வானாகில் அநேக நாள் உயிர் பெற்றிருப்பான்.

(329) பிரம்மாண்டத்திலுள்ள ஆகாசத்திலிருந்து அமிர்த தாரையுண்டாகிறது. அப்போது சரீர ரூபமாகிய தாமரை மலர்ந்து பிரகாசிக்கிறது. இதனால் கர்ம யோகத்தை அப்பியசிக்கிறவன் சந்திரனை ஆஸ்ஸிரயித்தால், அவன் மரணமற்றிருக்கிறான்.

(330) பகலில் சூரிய ஸ்வரத்தையும் இரவில் சந்திர ஸ்வரத்தையும் நீக்க வேண்டியது. இவ்விதம் அப்பியாசம் செய்கிறவன் யோகியாகிறான், இதில் சந்தேகமேயில்லை.

(331) ஒருவனுக்கு இரவும் பகலும் ஒரே ஸ்வரம் கடந்துகொண்டி ருந்தால், அவன் மூன்று வருஷங்களின் மரணமடைகிறன்.

332 இரண்டு இராப்பகல் ஒருவனுக்குச் சூரியகலை நடந்தால் அவன் இரண்டு வருடங்கள் உயிர் பெற்றிருப்பானென்று ஸ்வர தத்துவத்தையறிந்த ஞானிகள் சொல்லுகிறார்கள்.

333 ஒருவனுக்கு இராப்பகல் மூன்று நாள் ஒரே ஸ்வரம் நடக்குமானால் அவன் ஒரு வருஷம் ஜீவித்திருப்பான்.

(334) ஒருவலுக்கு சந்திர ஸ்வரம் இரவிலும், சூரிய ஸ்வரம் பகவிலும் இடைவிடாது கடக்குமானால், அவனுக்கு ஆறு மாதத்தில் மரணமென்று சொல்லவும்,

(335) திறந்த வெளியில் ஓர் பாத்திரத்தில் ஜலத்தை வைத்து, அதில் சூரியனுடைய பிரதி பிம்பத்தைப் பார்க்கும்போது தெற்கே குறைந்திருந்தால் ஆறு மாதத்தில் மரணம், மேற்கே மூன்று மாதம், வடக்கே இரண்டு மாதம், கிழக்கே ஒரு மாதத்தில் மரணம், மத்தியில் துவாரங்கள் கண்டால் பத்து நாளில் மரணம், அந்தப் பிரதி பிம்பம் முழுவதும் புகையடைந்ததுபோல் தோன்றினால் அதே தினத்தில் மரணமென்று அறியவும். இவ்வாது சர்வக்ஞ முனிவர் ஆயுட் பிரமாணத்தைக் கூறுகிறார்.

(336) தூதுவன் அல்லது வியாதியஸ்தன் சிவப்பு, கறுப்பு, காவி இந்நிற வஸ்திரங்களை உடுத்திக்கொண்டும், எண்ணெய்த்தலையோடும், பல்லில்லாதவனும், தலை முண்டிதமுள்ளவனும், அசுக்தமுள்ளவனும், இவ்வகையுள்ளவன் பூரணாங்கத்தில் வந்து கேள்வி கேட்டாலும் வியர்த்தம். விபூதி, அக்கினி, கப்பரை, கயிறு, உலக்கை, இவைகளுடன் சூரிய அஸ்தமன காலத்தில் சூன்யாங்கத்தில் தூதாக வருவானானால் வியாதியாளன் மரணமடைகிறானென்று சொல்லவும்.

(337) திடீரென்று சித்தம் விகாரத்தையடைந்தாலும், தேகத்தில் மாறுதல் உண்டானாலும், நிஷ்காரணமாய் இந்திரியங்களில் துர்ச்சின்னமுண்டானாறும், இவை சன்னி பாதத்தின் இவைகள் லக்ஷணங்கலென்றறியவும்.

(338) சரீரம் திடீரென்று சில்லிட்டுப்போய் விலக்ஷண விகாரத்தையடைந்தால் அரிஷ்டமென்றறியவும். இவ்விதமாய் அரிஷ்டங்களை சுருக்கமாகச் சொன்னேன். இனி விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.

(339) எவனொருவன் துஷ்ட சப்தத்தில் சந்தோஷமும், நல்ல சப்தத்தில் பச்சாதாபமுமடைகிறானோ, அவன் மாணத்தருவாயிலிருக்கிறானென்றறியவும்.

(840) நாசியிலிருந்து வருகிற சுவாசம் சில்லிட்டும் வாயிலிருந்து வருகிற காற்று நெருப்பைப்போல் சுடுகையாயுமிருந்தால், அவனுக்கு மகா பண்டிதன் சிகிச்சை செய்தாலும் மரணமடைகிறான்.

(341) எவனொருவனுக்கு நாக்கு, ஆகாசம், துருவம், தேவ மார்க்கம், மாதுருகை, அருந்ததி, சந்திரன், சுக்கிரன், அசஸ்தி நக்ஷத்திரம் இவைகளில் யாதொன்று தன் எதிரிலிருந்தும் வியத்தமாய் தெரியவில்லையோ, அவன் அவசியமாய் ஒரு வருஷத்தில் மரணமடைகிறான்.

(342) எவனொருவனுக்கு சூரியன், சந்திரன், அக்னி, இவைகள் கிரணங்களின்றி காணப்படுகிறதோ அவனுக்கு பதினொரு மாதம் ஆயுனென் சொல்லவும். 

(343) சொர்ப்பனத்தில் அல்லது ஜாக்கிரதையில் மல மூத்திர விசர்ஜனம் செய்யும்போது அந்த இடத்தில் பொன் அல்லது வெள்ளி, கண்ணுக்குப் புலப்பட்டால் அவன் பத்து மாதத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டான்.

(344) தீபம் சில சமயங்களில் பொன்னைப்போல மஞ்சளாயும், சில சமயங்களில் கருமையாகத் தெரிந்தாலும், சர்வ பூதங்களும் விபரீதமாய் காணப்பட்டாலும், அவன் ஒன்பது மாதத்திற்குமேல் பிழைத்திருக்கமாட்டான்.

(345) ஸ்தூல தேகியாயுள்ள ஒருவன் தீடீரென்று மெலிந்தாலும், மெலிவாயிருப்பவன் திடீரென்று ஸ்தூலித்தாலும், குரூரமும் கருப்பாயுமிருக்கப்பட்டவன் திடீரென்று பொன்னிறமானாலும், சூரனாயிருந்து பயங்காளியானாலும், தர்மிஷ்டனாயிருந்து அதர்மிஷ்டனானாலும், சாந்தமாயிருந்து சஞ்சலமடைந்தாலும், அவன் எட்டு மாதத்திற்கு மேலிருக்க மாட்டான்.

(346) ஒருவனுக்கு உள்ளங்கையிலும், நாக்கின் நுனியிலும் பீடை அல்லது நோயுண்டானாலும், இரத்தம் கருப்பாயும் குத்தினால் இரத்தம் சொட்டாமலிருந்தாலும் அவனுக்கு எழு மாதமும்,

(347) கைகளில் நடு மூன்று விரல்கள் மடக்க முடியாமலும், கழுத்து, ரோகங்களொன்று மில்லாமலே மெலிந்து வந்தாலும், பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி மறதி காரணமாய் கேட்ட சங்கதிகளையே திரும்பக் கேட்டாலும், பிரக் ஞபகங்கமுண்டானாலும் ஆறு மாதத்திற்கு மேலிருக்க மாட்டான்.

(348) நெஞ்சு குளிர்ந்து சுருங்கிப்போனாலும் பிரக்ஞாபகங்கமுண்டானாலும், ஐந்து மாதங்களில் இறப்பான்.

(349) சூரியப் பிரகாசம் (தேஜஸ்) பார்வையில்லாமலிருந்தாலும், நேத்திரத்தில் பீடையுண்டானாலும், நான்கு மாதத்தில் மரணம் நிஷயமாயுண்டாகிறது.

(350) பல்லிலும், விருஷ்ணத்திலும் ஸ்மரணையில்லாமலிருந்தால் மூன்று மாதத்திற்குமேல் மரணத்தையடைகிறான்.

(351) மரண காலம் தூரமென்றும் சமீபமென்றும் எந்த உபாயத்தினால் அறிய முடியுமோ, அதை சிவாகமத்தில் சொல்லிய பிரகாரம் சுருக்கமாய் சொல்லுகிறேன்.

(352) நிர்மானுஷ்யமான ஆரண்ணியத்தில் ஏகாந்தமாய்ச் சென்று சூரியனைப் பிருஷ்ட பாகத்தில் வைத்துத் தன்னுடைய நிழலின் கண்டத்தில் நிர்ச்சலமாய்ப் பார்க்கவும்.

(353) பிறகு ஆகாயத்தைப் பார்க்கவும். பார்த்து "ஓம் ஹ்ரீம் பரப் பிரம்மணே நம" என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் ஸ்ரீ சங்கரனுடைய தரிசனமுண்டாகும்.

(354) ஜெய முடிவில் சுத்த ஸ்படிகத்தைப்போல் வெண்ணிற முடையவரும், நானா ரூபத்தைத் தாரணை செய்யும்படியான ஸ்ரீசங்கரர் கட்புலனுக்குத் தோன்றுவார். இவ்விதமாக ஆறு மாதம் அப்பியாசம் செய்தால் அவன் சர்வ பூசரப் பிராணிகளுடைய அரசனாகிறான். இரண்டு வருடம் அப்பியசித்தால் சிருஷ்டி கர்த்தாவாயும், சம்ஹார கர்த்தாவாயுமாகிருன்.

(355) இவ்விதமாக எப்பொழுதும் அப்பியாசம் செய்து கொண்டிருந்தால் திரிகால ஞானமுண்டாகி, பரம ஆனந்தத்தில் சதா காலமுமிருக்கிறான். அவனுக்கு யாதொருகாரியமும் துர்லபமல்ல.

(356) மேற்சொல்லிய ரூபமானது நிர்மலமாகிய ஆகாசத்தில் கிருஷ்ண வர்ணமாய் எவனுக்கு புலப்படுகிறதோ, அப்பேர்ப்பட்ட யோகியானவன் சந்தேகமின்றி ஆறுமாதத்தில் மரணமடைகிறான்.

(357) மஞ்சள் நிறமாய் புலப்பட்டால் வியாதி, சிவப்பு நிறமாய் காணப்பட்டால் பயம், நீல நிறமானால் ஹானி யுண்டாகும். பலவர்ணமான சித்திர ரூபம் தோன்றினால் சித்திப் பிராப்தமாகும்.

(358) சாயா புருஷனுடைய பாதம், கால், வயிறு, இவைகள் கிரமமாய் கட்புலனுக்குத் தெரியாமலிருந்து பிறகு புயங்கள் மறையுமானால் யோகி மரணமடைகிறான்.

(359) இடது கை மறையுமானால் பாரியை நாசம், வலதுகை மறைந்தால், பந்து நாசமாகி அவனுக்கும் மரணமென்றறியவும்.

(360) சாயையானது தலையில்லாமலிருந்தால், ஒரு மாதத்திலும் துடையில்லாமலிருந்தாலும், தோளில்லாமலிருந்தாலும் எட்டு தினத்திலும், சாயையே முழுவதும் மறையுமானால் அந்த க்ஷணமே மரணமடைகிறான்.

(361) பிராதக் காலத்தின் சூரியன் பின்னாலிருக்கும்போது, சாயா புருஷனுடைய விரலும் உதடும் தெரியுமானால் ஒரே நிமிடத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுக்கும் இவனுக்கும்

தூரமின்றி சமீபமாயிருந்தால் அரை நிமிடத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுடைய காது, தோள், கை, முகம், விலா, ஹிருதயம் இவைகள் ஒரே தடனையில் திடீரென்று தெரியாமலிருந்தால் அரை கணத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுடைய தலையில்லாமல் காணப்பட்டு, திக்பிரமை கொள்வானாகில் அவன் ஆறுமாதம் வரையில் பிழைத்திருப்பான்.

(362) விடாமல் பதினாறு நாள் வரையில் சூரிய ஸ்வரமே நடந்தால், ஒருவன் ஒரு மாதத்திற்குள் மரணமடைவான்.

(363) ஒரு மாதம் வரையில், ஒருவனுக்கு சந்திர ஸ்வர உதயமேயில்லாமல், சூரிய ஸ்வரமே நடந்தால் பதினைந்து நாளில் மரணமேற்படுமென்று கால ஞானிகள் சொல்லுகிறார்கள்.

(364) மலம், மூத்திரம், அபான வாயு, இவை மூன்றும் ஒரே காலத்தில் உண்டானால் பிராணனானது சஞ்சலத்தையடைந்திருக்கிறதென்று தெரிந்து கொள்ளவும். அப்பேர்ப்பட்ட மனிதன் பத்து நாட்களில் மாணமடைகிறான்.

(365) சதா காலமும் சந்திரனே நடந்து கொண்டிருந்து சூரிய ஸ்வரமே சற்றேனும் நடவாமலிருந்தால், அவன் ஒரு மாதத்திற்குள் மரணமடைகிறானென்று காலஞானிகள் சொல்லுகிறார்கள்.

(366) எவனொருவனுக்கு ஆயுள் ஷணமாயிருக்கிறதோ, அவன் அருந்ததி, துருவம், விஷ்ணுபதம், மாதுருமண்டலம் இவைகளைப்பார்க்கமாட்டான்.

(367) அருந்ததியென்றால் நாக்கு, துருவமென்றால் நாசி நுனி. விஷ்ணுபதமென்றால் புருவம். மாதுரு மண்டலமென்றால் தாரகம் (தாரகமென்பது கண்ணுக்குள்ளிருக்கும் பாவை)

(368) புருவம் தெரியாமலிருந்த நாள் முதற்கொண்டு ஒன்பது நாளில் மரணமடைகிறான். காதில் சப்தம் கேட்காமலிருந்த நாள் முதற்கொண்டு எழுநாளில் மரணமடைகிறான். கண்ணிலுள்ள தாரகம் (பாவை) தெரியாமல் போனால் ஐந்து நாளில் மாணமடைகிறான். நாசி நுனித்தெரியாமல் போனால் மூன்று நாளில் மாணமடைகிறாள். நாக்குந் தெரியாவிட்டால் ஒரே நாளில் மரணமடைகிறான்.

(369) கண்களில் கடைக்கண்ணில் விரல்களினால் அமுக்கிப்பார்க்க பிந்து தெரியாமல் போனால் பத்து நாட்களில் மரணமடைகிறான்.

(370) தீர்த்தஸ்நானம், தானம், ஜெபம், தியானம், யோகம் போன்ற இத்தியாதி புண்ணிய கர்மங்களினால் யமனை ஜெயிக்கலாம்.

(371) அநேக துராச்சாரங்களினாலேயும், தாதுக்களிலிருக்கிற மலங்களினாலேயும் இந்த சரீரம் நாசமாகிறது. வாயுவானது சரீரத்தில் எப்பொழுதும் இருக்கிறதினால் பலம், தேஜஸ் இவைகளை விருத்தியாக்குகிறது.

(372) தேகமானது தர்மார்த்த காம மோக்ஷங்களுக்குக் காரணமாயிருப்பதால் சரீரத்தை சவரக்ஷணை செய்ய வேண்டியது. இதற்கு முந்திய சுலோகங்களில் சொல்லப்பட்ட தோஷங்கள் யோகாப்பியாசத்தினால் நாசமடைகிறபடியால், யோகத்தை அவசியம் செய்ய வேண்டியது. செய்தால் மேற்கண்டவைகள் சாத்தியமாகிறது. மேற்கண்ட தோஷங்கள் அசாத்தியமாயிருப்பதால் பிராணனின் நாசத்தைச் செய்கிறது. இதற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது.

(873) எவனுடைய ஹிருதயத்தில் அஞ்ஞானக் கூட்டத்தை நாசம் செய்யும்படியான, அநாதியானதும் ஒப்பு உவமையில்லாததும் அத்தியந்த ரகசியமானதுமாகிய இந்தச் சிவஸ்வரோதய ஞானம் நிரந்தரமாயிருக்கிறதோ, அவனுடைய சரீர காந்தியானது பூரண சந்திரனைப்போல் உல்லாசமாய் நிறைந்திருக்கிறது. சொர்ப்பனத்திலும் கூட காலனால் அவனுக்குப் பயமுண்டாகமாட்டாது என்பது திண்ணம்.

(374) இடைகலையாகிய வாம நாடியானது கங்கையென்றும், பிங்கலையாகிய நாடி யமுனையென்றும், சுழி முனை சரஸ்வதியென்றும் அறியவும். இந்த நாடித்திரயங்களுடைய சங்கமமானது பிரயாகைக்குச் சமமாயிருக்கிறது.

(375) ஆதியில் தாத்காலம் சுவாசத்தை உத்பன்னம் செய்யும்படியான சாதனம் சொல்லியிருக்கிறது. அதாவது யோகியானவன் பத்மாசனத்தைப் போட்டுக்கொண்டு ஒட்டியாண பந்தனம் சாதிக்கவும்.

(376) பிறகு தேக சுத்தியுண்டாக வேண்டியதற்காக யோகியானவன் பூரகம், கும்பகம், ரேசகம் என்று சொல்லப்பட்ட பிரணாயாமத்தைச் செய்யவேண்டியது.

(377) பூரகம் (வெளியே இருக்கப்பட்ட சுவாசத்தை உள்ளே இழுத்தல்) செய்வதினால் தேகத்தினுடைய தாதுக்களை சமப்படுத்துகிறது. கும்பகம் (வெளியேயும் உள்ளேயும் வாயுவை சலனப்படாமல் கட்டுப்படுத்தல்) செய்வதினால் ஜீவனை எப்பொழுதும் ரஷிக்கிறது.

(378) ரேசகம் (கும்பித்திருந்த வாயுவை வெளியில் விடுதல்) செய்வதால் பாவம் நாசமடைகிறது. இவ்விதமாய் முக் குணங்களையுடைய பிரணாயாமம் செய்தால் யோகத்தில் ஸ்திரம் ஏற்படுகிறது. பிறகு யுத்தகளத்தில் நின்ற வீரனைப் போலிருந்து லய பந்தம் செய்யவும்.

(379) வாயு ஸ்தம்பனம் அதாவது கும்பகம் சகஜமாய் ஏற்படுகிற அளவு சக்திக்கேற்ப செய்யவும். ரேசகம் சந்திர நாடியில் செய்யவும். பூரகம் சூரிய நாடியில் செய்யவும்.

(380) சந்திர ஸ்வரம் சூரியனோடு லயப்படுகிறதும், சூரிய ஸ்வரம் சந்திரனோடு லயப்படுகிறதுமான அப்பியாசத்தை செய்கிற யோகியானவன் சூரிய சந்திரனுள்ள வரையில் ஜீவித்திருப்பான்.

(381) எந்த ஸ்வரம் நடக்கின்றதோ அதை உள்ளேயிழுத்து வாயின் வழியாய் வெளியே செல்லவொட்டாமல் பந்தனம் செய்து வருகிற யோகியானவன் யெளவன பருவத்தையடைகிறாள்.

(382) வாய், நாசி, கேந்திரம், காது இவைகளை விரலினால் அமுக்கிக்கொண்டு தத்துவ உதயத்தையறியவும். இந்த முத்திரைக்கு ஷண்முகி கரணம் என்று பெயர்.

(383) ஷண்முகி முத்திரையின் மார்க்கத்தை யறிந்த யோகியானவன் அதன் வழியாக ரூபம், கதி, ருசி, மண்டலம் இந்த லக்ஷணங்களை அடைகிறான்.

(384) நிஷ்பிரகமாயும், சுசியாயும் யாதொரு சிந்தனையுமில்லாமல் மேற்கண்ட முத்திரையை அனுஷ்டிக்க வேண்டியது. இன்விதம் அனுஷ்டிக்கிற யோகியானவன் யமனையும் ஜெயிக்கிறான்.

(385) சர்வ ஜெகத்தையுமறியும் படியான சக்தி கேத்திரத்திலிருந்து வெளிப்படுகிறது.

(386) அந்த சக்தியினிடத்தில் எவனுடைய மனதானது ஒரு பிரகரம் ஸ்திரமாய் நிற்கிறதோ அவனுடைய ஆயுள் நாளொன்றுக்கு மூன்று கடிகைப்பிரமாணம் வளர்கிறதென் ஸ்ரீ சங்கர தந்திரத்தில் சித்தர்களுடைய குணத்தை வர்ணிக்கும்போது ஸ்ரீ சங்கரர் சொல்லியிருக்கிறார்.

(387) யோகியானவன் பத்மாசனத்திருந்துகொண்டு குய்யத்திலிருக்கப்பட்ட அபானவாயுவை பிராண சக்தியினுடைய உதவியினால் மேலிழுத்து ஒரு ரூபமாக்கி பிறகு சுழிமுனை

வழியாக அந்த வாயுவை பிரம்மரந்திரத்தினிடத்தின் கொண்டு போய் ஆகாசமார்க்கத்தில் வைத்து சிவசரணத்தில் சேர்க்கவும். எந்த யோகியானவன் இந்த ஸ்திதியிலிருந்து பிரணோத்கிரமணம் செய்கிறானோ அவன் தன்யனாகிறான்.

(388) யாரொருவன் இந்த ஸ்வர சாஸ்திரத்தை அப்பியசித்தாலும், பாராயணம் செய்தாலும் சர்வதுக்கத்திளிலுமிருந்து முத்தனாகி இச்சித்த பலனையடைகிறான்.

(389) ஸ்வரக்கியானம் அறிந்த ஞானிகளிடத்தில் இலக்குமியானவள் ஸ்திரமாய் வாசம் செய்வாள். அவன் அதிக சுகத்தை யடைவான்.

(390) சர்வ வேதங்களிலும் பிரணவமானது எப்படி பூஜ்யமானதோ, பிராமணர்களுக்கு சூரியன் எப்படி பூஜ்யனோ, அவ்வாறு ஸ்வரக்யானியானவன் இப்பூவுலகில் பூஜ்யனாகிறான்.

(391) யாரொருவனுக்கு மூன்று நாடிகளிலும், தத்துவங்களிலும், ஞானமிருக்கிறதோ அவனுக்குக் கோடி ரசாயனமும் ஈடல்ல.

(392) ஏகாக்ஷரத்தை எவனொருவன் உபதேசிக்கிறானோ, நாடிககளின் பேதங்களை எவனொருவன் விபரித்துரைக்கிறானோ, அப்பேர்ப்பட்டவனுக்கு எந்த திரவியத்தைக்கொடுத்தாலும் சிஷ்யன் ருணமுக்தனாகிறான். அத்தகைய திரவியம் இப் பூவுலகிலே இல்லை.

(393) ஹே.... பார்வதி! இந்த சாஸ்திரத்தில், ஸ்வரம், தத்துவம், யுத்தம், ஸ்திரீ வசீகரணம், கர்ப்பதானம், ரோகம், இவ் விஷயங்களின் நிர்ணயத்தை ஒரு பாதி கலையில் செய்யக்கூடும்.

(394) இவ்விதமான இந்த சாஸ்திரத்தை இந்த லோகத்தில் சித்த யோகிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இதை சந்திர சூரிய கிரகண காலங்களில் பாராயணம் செய்தால், சித்திப்பிராப்தமாகிறது.

(395) தன் சொந்த ஸ்தலத்தில் ஸ்திரமாய் உட்கார்ந்து நித்திரை ஆகாரம், இவைகளை மிதமாய் வைத்துக்கொண்டு ஹிருதயத்தில் ஸ்வர ரூபமாகிய பரமாத்மாவை ஒருவன் சிந்தனை செய்தால் அவனுக்கு ஸ்வரக்ஞானமுண்டாகி மேலான பதவியுண்டாகும்.

சுபம் 
          (முற்றிற்று.)

நன்றி : வாசன் அச்சுக்கூடம், தஞ்சை

     - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
       சித்தர்களின் குரல் shiva shangar
G

ஞான சர நூல் (பாகம் -1)------------------------




Thank to FB

ஞான சர நூல் (பாகம் -1)
-------------------------------------------
                         மகாதேவனாகிய சிவபெருமானே ஆதி யோகியாக வந்து அன்னை பார்வதி தேவிக்கு அளித்த இந்த சிவரகசியம் தான் சரசாஸ்திரம் என்று உயர்வாக சித்தர்களால் போற்றப்படும் "சர வித்தை" என்பது. நம் சித்தர்களின் குரல் அன்பர்களின் நலம் கருதி முழு ரகசியங்களையும் இரண்டு பாகங்களாக்கி உலக நன்மைக்காக பதிவிடுகிறேன். எங்கு நீங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷ ரகசியங்கள் இவை. சிவனருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும்....
பயன்படுத்தி கொள்ளுங்கள்......

சிவ ஸ்வரோதயம்.
--------------------------------

(01) ஸ்ரீசங்கரர், பார்வதி, கணபதி இவர்கள் அனைவரையும் வணங்கி சம்சாரதாரகராகிய சற்குருவையும் பரமாத்மாவையும் நான் பூஜிக்கிறேன். 

(02) அன்னை பார்வதி தேவி மஹாதேவனாகிய ஸ்ரீ சங்கரரைப் பார்த்து, ஹே... தேவாதி தேவனாகிய சங்கரரே? என்மேல் கருணை கூர்ந்து அனைத்து காரியங்களையும் சித்தியாக்கக் கூடிய ஞானத்தை எனக்குச் சொல்லுங்கள்.....

(03) ஹே.... தேவரே!
இந்த பிரம்மாண்டம் எப்படி உற்பத்தியாயிற்று?
இதனுடைய போஷணை எதனாலுண்டாகிறது?
பிறகு லயத்தை எப்படியடைகிறது?
இப்படியாயுள்ள இந்தப் பிரம்மாண்டத்தின் நிர்ணயத்தை எனக்குச் சொல்லும்?
         என்றார்.....

(04) ஈஸ்வரியைப் பார்த்து சங்கரர்-சொல்லுகிறார்.....
               ஹே.... தேவி! தத்துவத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தியாகிகிறது. தத்துவத்தினாலேயே இதனுடைய போஷணையும் லயமுமுண்டாகிறது. இந்தப் பிரம்மாண்டத்தின் நிர்ணயமும் தத்துவத்தினாலேயே அறியப்படுகிறது.

(05) உடனே பார்வதி தேவி கேட்கிறாள்.... தத்துவவாதிகளெல்லாம் பிரம்மாண்டத்திற்கு தத்துவமே மூலகாரணமென்று நிச்சயிக்கிறார்கள். ஆனால் தத்துவமென்பது என்ன? அதன் ஸ்வரூபமென்ன? இதை எனக்கு விளங்கச் சொல்லவேண்டும்.

(06) மாயைக்கு அன்னியமாயும் நிராகாரமாயும் சுயப்பிரகாசமாயும் ஏகமாயும் சர்வாந்தர்யாமியாயுமிருக்கிற பரமாத்மாவினிடத்திலிருந்து ஆகாசமுண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று.
         
(07) வாயுவிலிருந்து அக்கினி, அக்கினியிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பிருதிவி, இவ்விதமாயுண்டான இந்த ஐந்து தத்துவம் பிரத்தியேகம். ஐந்தைந்தாக விஸ்தாரமுண்டாயிற்று.

08) அந்தந்த தத்துவங்களினாலே இந்த பிரம்மாண்டம் உற்பத்தியாயிற்று. அவைகளினாலேயே போஷணையும், கடைசியில் அவைகளிலே லயத்தையுமடைந்து நிற்கின்றது.

(09) ஹே.... சுந்தரியே! இந்த ஐந்து தத்துவங்களினாலே உற்பத்தியாகிய தேகத்தில் இந்த ஐந்து தத்துவங்களும் சூட்சும ரூபமாயிருக்கின்றன. அதை யோகிகளே அறிகிறார்கள்....

(10) இப்பொழுது அகாராதி ஸ்வரங்களின் உச்சாரத்திற்கு மூல காரணமாகிய இந்த சரீர ஸ்தவ ஸ்வரமோ அதைப்பற்றி சொல்கிறேன். ஸ்வரஞானம் உண்டாயிருக்கையில் ஹம்ஸ சாரத்தின் (சுவாசம் வெளியே வரும்போது ஹம் என்றும், உள்ளே வாங்கும்போது ஸம் என்றும் உச்சாரமாகிறது) ஸ்வரூபத்தின் பேரில் யோகிகளுக்கு பூத பவிஷ்ஷிய வர்த்த மானம் எனப்பட்ட திரிகால ஞானமுண்டாகிறது.

(11) அத்தியந்த ரகசியமானதும் சர்வோபகாரமும், ஸாரபூதமானதுமான ஸ்வரோதயத்தின் ஞானம் எல்லா ஞானத்திலும் மேலான சிரோன்மணியாயிருக்கிறது.

(12) இந்த ஸ்வரஞானம் மிக்க சூக்ஷமமாயிருந்து அதிமேலான போதமாயும் சத்தியமாயும் விளங்கக்கூடியதாயிருக்கிறது. நாஸ்தீக ஜனங்கள் ஆச்சரியப்படுகிற இந்த ஞானமானது ஆஸ்தீக ஜனங்களுக்குப் பெரிய ஆதாரமாயிருக்கிறது.

சிஷ்யன் லக்ஷணம்.
------------------------------------

(13)  சாந்தன், சுத்தன், ஆசாரஸம்பன்னன், குருபக்தி தத்பரன், மனக்களங்கமற்றவன், கிருதஞ்ஞன் (அதாவது உபகாரத்தை மறவாதவன்) இப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு ஸ்வர ஞானத்தை உபதேசிக்கவேண்டும்.

(14) துஷ்டன், துர்ஜனன், குரோதி, அவிஸ்வாசி, குருபத்தினியை இச்சிக்கிறவன், தைரியமில்லாதவன், துராசாரன் இப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு ஸ்வரஞானம் கொடுக்கலாகாது.

(15) ஹே.... தேவி! நம்முடைய சரீரத்திலிருக்கப்பட்ட ஸ்வரத்தின் ஞானத்தை நான் உனக்குச் சொல்லுகிறேன் கேள்.... ஸ்வர ஞானத்தின் யோகத்தினால் எல்லா  ஞானமும் பிராப்தியாகிறது.

(16) சர்வவேதம், சாஸ்திரம், சங்கீதம் இவைகள் ஸ்வரத்தினுடைய ஆசிரயத்தினாலேயேயிருக்கின்றன. மூன்று உலகங்களும் ஸ்வரத்தினிடத்திலேயே இருக்கின்றன. ஸ்வரமானது ஜகத்தினுடைய ஸ்வரூபமாயிருக்கிறது.

(17)  புருஷனில்லா கிரகமும், சாஸ்திரப்பயிற்சி இல்லா முகமும், தலையில்லா சரீரமும் எப்படி சிறக்காதோ, அவ்விதம் ஸ்வர ஞானமில்லாதவன் சோதிடம் சிறக்காது.

(18) எல்லா நாடிகளுடைய பேதங்கள் பிராணதத்துவத்தின் பேதம், சுழுமுனையீறாக உள்ள நாடித்திரயங்களின் பேதங்களை யார் அறிகிறானோ அவனே முக்தியை அடைகிறான்.

(19) ஸ்வர ஞானத்தில் தேர்ந்த பண்டிதர்களில் அநேகருடைய மத வியவகாரத்திற்கும், நிராகார பரமார்த்தத்திற்கும் வாயுவினுடைய பலம் அவசியமென்றும், சிலர் பரமார்த்தத்திற்கு வாயுபலம் அவசியமில்லையென்றும் சொல்லுகிறார்கள்.

(20) சர்வ பிரம்மாண்டம்,  பிண்டம் இவைகள் ஸ்வரத்தினாலே நிர்மாணமாயிற்று. ஜகசிருஷ்டி சம்ஹார கர்த்தாவாகிய ஈஸ்வரனும் ஸ்வரரூபமே.

(21) ஸ்வரஞானத்தைப்போல ரகசியமானது வேறொன்றுமில்லை. ஸ்வாஞானமே முக்கியமான தனம். ஸ்வரஞானத்தைவிட சிரேஷ்ட ஞானம் வேறொன்றிருப்பதாக பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை.

(22) ஸ்வரஞானத்தின் பலத்தினால் சத்ரு நாசம், மித்ர ஸமாகமம், லட்சுமி பிராப்தி, கீர்த்தி, சுகம் இவைகள் பிராப்தமாகின்றன. 23 ஸ்வர பலத்தினால் ஸ்திரீ, புத்ராதி, சம்பதி பிராப்தி, ராஜதரிசனம், தேவதா சித்தி முதலியவைகளும், ராஜவசியமும் உண்டாகிறது.

(24) ஸ்வரbபலத்தின் பேரில் தேசயாத்திரை, போஜனம், மலமூத்திர விசர்ஜனம் செய்யவேண்டும்.

(25)  ஹே... தேவி! எல்லா சாஸ்திரங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், வேதாந்தங்கள் இவைகளில் ஸ்வரஞானத்தைவிட சிரேஷ்ட தத்துவம் வேறொன்றுமில்லை.

(26) நாமரூபமுள்ள சகல பதார்த்தங்களும் மாயை. எதுவரையில் ஸ்வர ரூபதத்துவஞானம் உண்டாகவில்லையோ, அது வரையில் இந்த ஜீவன் மாயையினால் மோகிக்கப்பட்டு மூடனாகிறான்.

(27) இந்த ஸ்வரோதய சாஸ்திரம் எல்லா சாஸ்திரத்திலும் உத்தமோத்தமமானது. ஆத்மா (பஞ்சகோசாத்மக ஜீவன்) இதுவே ஒரு கும்பமாயும், இதில் பிரகாசிக்கிற இந்த ஸ்வர சாஸ்திரம் மகா தீபத்தினுடைய சுவாலை போலிருக்கிறது.

(28) இந்த ஸ்வரோதய சாஸ்திரம் தனக்குத்தானே தெரிந்து கொள்ளவேண்டியதே தவிர, அன்னியர்களின் தர்க்கத்திற்காக ஏற்படவில்லை.

(29)  இந்த ஸ்வரோதய சாஸ்திரத்தில் விசேஷமாய் திதி, நக்ஷத்திரம், வாரம்,கிரஹம், தேவதை, முதலியவைகள் ஒன்றுமில்லை. இதில் பத்திரை, விதிபாதம், வைதிருதி, முதலிய கெட்ட யோகங்களின் தோஷங்களுமில்லை.

(30) ஹே... தேவி! இந்த ஸ்வர சாஸ்திரத்தில் எவ்விதமான கெட்ட  யோகங்களும் கிடையவே கிடையாது. இனி உண்டாகிறதுமில்லை. ஸ்வரத்தினுடைய பூர்த்தியான சித்தியுண்டானால் எல்லாமே சுபபலனாகவே முடிகிறது.

(31) அறிவாளிகள் முதலில் சவிஸ்தாரமாய் தேகத்திலிருக்கப்பட்ட நாடிகளின் அநேக ரூபங்களை அறிய வேண்டும். அப்படி அறிகிறபடியால் சாரீர ஞானமுண்டாக ஏதுவாகிறது.

(32) நாபிஸ்தானத்திலிருக்கப்பட்ட கர்ணிகையின் முனையிலிருந்து 72,000 நாடிகள் உத்பன்னமாயிருக்கிறது. இவைகளெல்லாம் சரீரத்திலிருக்கின்றன.

(33) இந்த நாடிகளில் பாம்பைப்போல் சயனித்துக்கொண்டிருகிற குண்டலினி என்னும் நாமத்தையுடைய ஒரு சக்தி இருக்கிறாள். அதன் மேல் பத்து நாடிகளும், கீழே பத்து நாடிகளுமிருக்கின்றன.

(34) இருபக்கங்களிலும் இரட்டை இரட்டையாய் சேர்ந்து நான்கு கோணலாகப் போகிற நாடிகளிருக்கின்றன. இதுவும் முதலில் சொல்லிய 20 நாடிகளும் சேர்ந்து 24 நாடிகளாகின்றன.

இவைகளில் பத்து வாயுக்களையும் நடத்தும் பத்து நாடிகள் முக்கியமானவை.

(35) கோணலாக மேலும் கீழுமிருக்கப்பட்ட எல்லா நாடிகளும் வாயுவுடன் தேகத்தில் சக்கிராகாரமாயிருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் பிராணனுடைய ஆஸிரயமிருக்கின்றன.

(36) மேலே கண்ட எல்லா நாடிகளிலும் பத்து முக்கியமானவை. அவைகளில் இடை, பிங்கலை, சுழுமுனையாகிய இம்மூன்றும் முக்கியமானவைகளேயாகும்.

(37) 4-வது காந்தாரி, 5-வது ஹஸ்தி ஜிவ்ஹா, 6-வது பூஷா, 7-வது எஷஸ்வினி, 8-வது அலம்புஷா, 9-வது கூஹு, 10-வது ஷங்கினி, இவ்விதமாக பத்து நாடிகளையறியவும்.

(38) இடை இடது பக்கத்திலும், பிங்கலை வலது பக்கத்திலும், சுழுமுனை மத்திய பாகத்திலும், காந்தாரி இடது நேத்திரத்திலுமிருக்கிறது.

(39) ஹஸ்தி ஜிவ்ஹா வலது நேத்திரத்திலும், புஷா வலது செவியிலும், எஷஸ்வினி இடது செவியிலும், அலம்புஷா முகத்திலுமிருக்கின்றன.

(40) கூஹு லிங்கத்தினிடத்தும், சங்கினி குதத்திலும், இவ்விதமாகப் பத்து நாடிகளும் சரீர துவாரங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன.

(41) இடை, பிங்களா, சுழுமுனை இந்த மூன்று நாடிகளும் பிராண மார்க்கத்தை தழுவிக்கொண்டிருக்கின்றன. இவ்விதமாகப் பத்துநாடிகள் சரீரத்தில் முக்கியமானவை.

(42) இப்பொழுது நாடிகளின் ஆஸிரயத்திலிருக்கிற சரீரத்தின் வாயுக்களின் பேர்களை சொல்லுகிறேன். பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற இந்த ஐந்து வாயுக்கள் முக்கியமானவை.

(43) நாகன், கூர்மன், கிருகதன், தேவதத்தன், தனஞ்சயன் இந்த ஐந்தும் உபபிராணங்கள். இப்பொழுது இந்தப் பத்து வாயுக்களின் ஸ்தானங்களை சொல்லுகிறேன். பிராணன் எப்பொழுதும் இருதயத்திலும், அபானன் குதஸ்தானத்திலுமிருக்கின்றது.

(44) சமானன் நாபிஸ்தானத்திலும், உதானன் கண்ட மத்தியத்திலும், வியானன் சர்வ அங்கத்திலுமிருக்கின்றது.

(45) பிராணன் முதல் ஐந்து வாயுக்களுடைய ஸ்தானங்களைச் சொன்னோம். இப்பொழுது நாகன் முதல் ஐந்து வாயுக்களுடைய ஸ்தானங்களைச் சொல்லுகிறேன்.

(46) நாகன் ஏப்பத்தையும், கூர்மன் நேத்திர உன்மீலனத்தையும், கிருகதன் தும்மலையும், தேவதத்தன் கொட்டாவியையும் உண்டாக்குகின்றன. இவைகள் வாயுஸ்தானத்திலிருந்து தங்கள் தங்களுடைய காரியங்களை நடத்துகின்றன.

(47) தனஞ்சயன் மாத்திரம் சர்வ அங்கத்திலும் வியாபித்துக் கொண்டு பிராணன் வெளிப்பட்ட பிறகும் சரீரத்தை விட்டுப் பிரிகிறதில்லை. இவ்விதமாக இந்த தச வாயுக்கள் ஜீவரூபமாய் சகல நாடிகளிலும் வியாபிக்கின்றது.

(48) புத்தியுள்ளவன் இடை, பிங்கலை, சுழுமுனை இந்த மூன்று நாடிகளின் பேரில் தேகத்தில் பிராணன் சஞ்சரிக்கிறதை அறியவேண்டும்.

(49) இடைநாடி வாம பாகத்திலும், பிங்கலை தக்ஷிண பாகத்திலுமிருக்கின்றது. இடது பக்கத்து நாடிகளெல்லாம் இடைகலை எனவும், வலது பக்கத்து நாடிகளெல்லாம் பிங்கலை எனப்படும்.

(50) இடைகலையில் சந்திரனும், பிங்கலையில் சூரியனுமிருக்கின் றன. சுழுமுனையில் ஹம், ஸ எனும் மிஸ்ர ரூபமாய் சாக்ஷத் சம்புவானவரிருக்கிறார்.

(51) ஸ்வரமானது வெளிப்படுக்கையில் ஹகார சப்தத்துடனும், உள்ளுக்குப்போகும்பொழுது ஸகார சப்தத்துடனும் செல்கின்றன. இதில் ஹகாரம் சிவரூபம். ஸகாரம் சக்திரூபமென்றறியவும்.

(52) வாமநாடியை செலுத்துகிற சந்திரன் சக்தி ரூபமாயும், தக்ஷிண நாடியை செலுத்துகிற சூரியன் சிவரூபமாயுமிருக்கின்றார்கள்.

(53) சுவாசமானது ஸகாரத்திலிருக்கும் பொழுது எந்த தானம் கொடுத்தாலும் இந்த லோகத்தில் கோடானு கோடி பலத்தை தருவதாயிருக்கின்றது.

(54) இந்தப்பிரகாரமாய் யோகியானவன் களங்கமற்ற சித்தத்துடனிருந்து சந்திர சூரிய நாடி மார்க்கமாய் சர்வத்தையுமாறியுவான்.

(55) ஜீவன் ஸ்திரமாயிருக்கும்பொழுது தத்துவசோதனை செய்யவேண்டும். ஸ்திரமில்லாதிருக்கும் பொழுது செய்யக் கூடாது. எவனொருவன் ஸ்வஸ்த சித்தத்துடன் தத்துவ சோதனை செய்கிறானோ, அவனுக்கு இஷ்டசித்தியும், மகா லாபமும், ஜயமும், பிராப்தமாகின்றது.

(56) எவனொருவன் சந்திர சூரியன் இவர்களின் சரியான அப்பியாசம் செய்கிறானோ, அவனுக்கு பூதபவிஷ்ஷிய ஞானம் ஹஸ்தகதமாகிறது.

(57) வாமபாகத்திலுள்ள இடை நாடியானது அமிர்த ரூபமாய் சர்வ ஜகத்தையும் புஷ்டி செய்கிறதாயிருக்கிறது. தக்ஷிணத்திலுள்ள பிங்களா நாடியானது சர்வ ஜகத்தையும் உத்பன்னம் செய்கிறது.

(58) நடுவிலிருக்கப்பட்ட சுழுமுனை நாடியானது சர்வ கர்மத்திற்கும் நிஷேதிக்கப்பட்டதும் குரூரமுமுள்ளது. வாமநாடி சர்வ சுபகாரியத்திலும் சித்தியுள்ளது.

(59) வீட்டிலிருந்து வெளியே போகும்போது வாமநாடி சுபம். உள்ளே போகும்பொழுது தக்ஷிண நாடி சுபம். சந்திரன் சமம் சூரியன் விஷமம்.

(60) சந்திரன் ஸ்திரீ, சூரியன் புருஷன். சந்திரன் வெண்மை நிறம், சூரியன் நீலவர்ணம். இதனாலே எல்லா சௌபாக்கிய காரியங்களும் சந்திர ஸ்வரத்தில் செய்யவும்.

(61) சூரிய நாடியில் உக்கிரமானக் காரியங்களையும், சுழுமுனையில் பக்தி முக்தி பலதாயகமான கர்மங்களையும் செய்யவும்.

(62) சுக்லபக்ஷம் ஆதியில் சந்திரன், கிருஷ்ணபக்ஷம் ஆதியில் சூரியன், இவ்விதக் கிரமமாய் பிரதிபதையிலிருந்து மும் மூன்று நாள் சந்திர சூரியர்களுடைய ஸ்வர உதய காலம் பலமானது.

(63) சந்திரன், சூரியன் இந்த ஸ்வரங்கள் கிரமமாய் சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் இதுகளில் தனித்தனி 2.5 நாழிகை நடக்கிறது. இவ்விதமாய் 24 ஆவர்த்தி (60 - நாழிகை) இரவும் பகலுமாகின்றது.

(64) தனித்தனி இந்த 21-நாழிகையில் ஐந்து தத்துவங்களும் நடக்கின்றன. எந்த பிரதிபதையில் முதலில் சந்திர உதயம் சொல்லியிருக்கிறதோ, அப்பொழுது சூரிய உதயமும் சூரிய உதய காலத்தில் சந்திர உதயமுமானால் அசுபம்.

(65) சுக்லபக்ஷம் பிரதிபதையில் முதலில் சந்திரனும், கிருஷ்ண பக்ஷம் பிரதிபதையில் முதலில் சூரியனும் சுபம். இதனாலே யோகியானவன் ஏகாகிரசித்தத்துடன் சந்திர சூரியர்களுடைய ஸ்வரத்தையறிய வேண்டும்.

(6)  இரவில் சந்திர ஸ்வரத்தை நடத்தக்கூடாது. பகலில் சூரிய ஸ்வரத்தை நடத்தக்கூடாது. இவ்விதமான அப்பியாசத்தை எவன் செய்கிறானோ அவன் தான் யோகி.

(67) சூரியனால் சூரியனும், சந்திரனால் சந்திரனும் கட்டுப்படுகிறது. சந்திரனை நிறுத்தவேண்டுமானால் இடது பக்கமாய்ப் படுக்க வேண்டும். அல்லது இடது கக்கத்தில் யோக தண்டத்தை அமுக்கிப்பிடிக்கவேண்டும். இவ்விதமாக சூரியனை நிறுத்த வலது பக்கமாய்ப் படுப்பதுடன் வலது கக்கத்தில் யோக தண்டத்தை அமுக்கிப் பிடிக்க வேண்டும். இக்கிரியையை யார் ஒருவன் அறிகிறானோ அவனுக்கு மூன்று உலகங்களும் வசியமாகிறது.

(68) சந்திர திதியில் சந்திரமார்க்கமாய் உதயமும், சூரியநாடி மார்க்கமாய் ஹஸ்தமனமுமானால், அப்பொழுது அநேக நல்ல குணங்கள் உத்பன்னமாகின்றன. இதற்கு நேர் விரோதம் எப்பொழுதாகிறதோ, அப்பொழுது அநேக தோஷங்கள் உண்டாகின்றன. இதனால் அது சுபகாரியங்களுக்குத் தள்ளப்பட்டது.

(69) வியாழன், வெள்ளி, புதன், திங்கள், இந்த வாரங்களில் இடைகலை சர்வ காரியங்களுக்கு சித்திதாயகமாயிருக்கிறது. அதிலும் சுக்கில பக்ஷமாயிருந்தால் ரொம்பவும் விசேஷம்.

(70) சிலர் புதன்கிழமை சுழுமுனை நாடி நல்லதென்கிறார்கள். ஞாயிறு, செவ்வாய், சனி, இந்த தினங்களில் தக்ஷிண நாடி பிங்கலை) சரகாரியத்திற்கு அதி உத்தமம். அதிலும் கிருஷ்ணபக்ஷமாயிருந்தால் மிக்க விசேஷம்.

(71) முதலில் வாயு தத்துவம், இரண்டாவது அக்கினி, மூன்றாவது பிருதிவி, நான்காவது அப்பு, ஐந்தாவது ஆகாசம், இவ்விதமாக ஒவ்வொரு 2.5 நாழிகையிலும் கிரமமாய் உதயமாகின்றது.

(72) ஒவ்வொரு 2.5நாழிகைகளிலும் ஐந்து தத்துவங்களும் உதயமாகின்றன. இவ்விதமாக இடை, பிங்கலை இரண்டிலும் ஐந்து தத்துவங்கள் உதயமாகின்றன.

(73) இரவும் பகலும் 60 நாழிகை. இதில் சந்திரனும் சூரியனும் சேருங்காலம் சங்கிரமணமெனப்படும். அவ்வாறு 12 சங்கிர மணம். இந்த பன்னிரண்டும் 12 லெக்கினமெனப்படும். இதில் ரிஷபம் ,கடகம், கன்னி,விருச்சிகம், மகரம், மீனம் இவைகள் சந்திரனுடையவை.

(74) மேஷம், சிங்கம், கும்பம், துலாம், மிதுனம், தனுசு, இவை சூரியனுடையவை. இவைகளினால் சுபா சுபங்களை நிர்ணயிக்கவும்.

(75) கிழக்கு, வடக்கு, இந்தத் திக்குகளில் சூரியனிருக்கிறான். சந்திரன் மேற்கு, தெற்கு திக்குகளிலிருக்கிறான். இதனாலே தக்ஷிண நாடியில் சூரிய ஸ்வரம் உதயமாயிருக்கையில் தெற்கு மேற்குத் திக்கில் போகலாகாது.

(76) வாம நாடியில் சந்திரஸ்வரம் உதயமாயிருக்கையில் கிழக்கு வடக்குத் திக்குகளில் போகலாகாது. மீறிப்போனால் அவனுக்குச் சத்ருபயம் தவிர, போனவன் திரும்பமாட்டான்.

77 அதனாலே ஹிதத்தை அபேக்ஷிக்கிறவன் மேலே நிஷேதிக்கப்பட்டிருக்கிற திசைகளில் போகலாகாது. எந்த ஸ்வரத்திற்கு எத்திசை நிஷேதிக்கப்பட்டிருக்கிறதோ அதில் போகிறவனுக்கு மரணம் சம்பவிக்குமென்றறியவும்.

(78) சுக்கில பக்ஷம் துதியையில் சூரியஸ்வரம் நடக்கும்பொழுது சந்திர தரிசனமானால், லாபகரமானதும் நல்ல விஷயத்தில் சுகமும் உண்டாகும்.

(79) எந்த நாளில் சூரிய ஸ்வர உதயம் சொல்லப்படுகிறதோ, அதில் சூரிய ஸ்வரமும், சந்திர ஸ்வர உதய நாளில் சந்திரனும் நடந்தால் எல்லாக் காரியங்களும் சித்தியாகிறது. காலமானது இரவாயிருந்தாலும் பகலாயிருந்தாலும் சரி.

(80) சந்திர ஸ்வர காலத்தில் சூரியனும், சூரிய ஸ்வர காலத்தில் சந்திரனும் நடந்தால் பயம், கலகம், ஹானி, சுபகாரியத்திற்கு தடை முதலியவைகள் உண்டாகும்.

81 சூரிய ஸ்வர காலத்தில் அர்த்தமாகாதவைகளும் நிச்சயமாய் அர்த்தமாகும். சந்திர ஸ்வரமாயிருந்தால் அர்த்த ஞானம் உண்டாகமாட்டாது.

விபரீத லக்ஷணம்.
---------------------------------

(82) சூரியோதய காலத்தில் ஸ்வர உதயம் விபரீதமானால் (சந்திரனுடைய இடத்தில் சூரியன், சூரியனுடைய இடத்தில்,

(83) சந்திரன்) அதன் விபரீத பலன் சொல்லுகிறேன். முதல் நாள் விபரீத ஸ்வரம் நடந்தால் மனக்கிலேசம், 2-ம் நாள்

(84) தனஹானி, 3-ம் நாள் பிரயாணம், 4-ம் நாள் இஷ்ட நாசம், 5-ம் நாள் ராஜவித்துவம்சம், 6-ம் நாள் சர்வ நாசம், 7-ம் நாள் வியாதி துக்கம், 8-ம் நாள் மரணம்.

(85) காலை மாலை சாயரக்ஷை இம்மூன்று காலத்திலும், மேல் சொன்ன 8 நாளும் ஸ்வரம் விபரீதமாய் நடந்தால் கெட்டபலன் என்றறியவும். யாதேனும் மாறுதலானால் சுபபலமென்றறியவும்.

(86) காலையிலும் மத்தியானத்திலும் சந்திரனும், சாயரக்ஷை சூரியனுமிருந்தால் அப்பொழுது ஐயமும் லாபமும் உண்டாகும். விபரீதமானால் அசுபமென்றறியவும்.

(87) வலது, இடது, இந்தப் பக்கங்களில் எந்தப் பக்கத்தில் ஸ்வரம் நடக்கிறதோ அந்தப் பக்கத்துக் காலை முதலில் வைத்து பிரயாணம் செய்தால் காரிய சித்தியாகும்.

(88) சந்திரக்கலை நடக்கும்போது முதலில் சம அடி 2, 4, 6-ம் சூரியக்கலை நடக்கும்போது 3, 5, 7, (விஷமம்) இவ்விதமாக அடிவைக்கவும். பூர்ணபாதத்தை முன்வைத்துப் பிரயாணம் செய்தால் சித்தியாகும்.

(89) தூங்கி எழும்பொழுது, எந்தப்பக்கத்தில் ஸ்வரம் நடக்கிறதோ அந்தப் பக்கத்துக் கையினால் முகத்தைத் தடவ, இச்சித்த பலன் கைகூடும.

(90) அன்னியருக்கு ஒரு வஸ்து கொடுக்கும்பொழுதும், அன்னியரிடமிருந்து வாங்கும்பொழுதும், வீட்டினின்று வெளியே போகும் பொழுதும், எந்த ஸ்வரம் நடக்கிறதோ அந்தப்பக்கத்துக் கை, காலை முதலில் உபயோகிக்கவும். இவ்விதம் செய்தால் காரியம் உத்தமமாகும்.

(91) இப்படி செய்தால் காரியத்தில் ஹானியும் கலகமும் உண்டாகிறதில்லை. சத்துருக்களினால் யாதொரு தீங்கும் நேரிடாது. பிரயாணத்தில் யாதொரு சங்கடமுமில்லாமல் வீட்டிற்கு சுகமாய்த் திருப்பலாம்.

(92) குரு, பந்து, ராஜன், மந்திரி, இவர்களிடத்தில் வேலையிருக்கும்பொழுது காரியத்தை பூர்ண பாகத்தினால் ஆரம்பிக்கவும். அப்படிச்செய்தால் காரியம் நம் இஷ்டம்போல் நடக்கும்.

(93) அக்கினி தாஹம், திருட்டுக்கொடுக்கிறது, அதர்ம கிருத்தியம், வாதி நிக்கிரஹம் இவைகளை சூன்னிய நாடியில் செய்யவும். இவ்விதம் செய்கிறவனுக்கு லாபம், ஜெயம், சுகம், இவைகள் உண்டாகின்றன.

(94) தூரதேசத்திற்குப் பிரயாணம் சந்திர ஸ்வரத்திலும், சமீப இடத்திற்குப் பிரயாணம் சூரிய ஸ்வரத்திலும் செய்யவேண்டுமென்பது சிலர் அபிப்பிராயம்.

(95) முதலில் சொல்லப்பட்டதும், லாபகாரியமும், யுத்தமும்,

(96) பூர்ண ஸ்வரத்தில் செய்தால் காரிய சித்தியும், சூன்னியத்தில் காரிய ஹானியும் உண்டாகுமென்று சர்வஞ்ஞராகிய ஸ்ரீ சங்கரருடைய வசனம்.

(97) விவகாரம், உச்சாடன கர்மம், வஞ்சகம் செய்கிறவர்கள், கோபித்துக்கொண்டிருக்கிற எஐமானன் தரிசனம், திருடர்களுக்கு எதிர்ப்படல், இச்சமயங்களைப் பூர்ண ஸ்வரம் பயங்கரத்தை யுண்டாக்கும். ஆதலால் அவர்களுக்கு முன் சூன்னிய நாடியை வைத்து நிற்கவேண்டும்.

(98) தூரதேசப் பிரயாணத்தில் சந்திர ஸ்வரம் நிர்விக்கினமாய் இஷ்ட சித்தியைக் கொடுக்கும். திரும்புகையில் சூரியநாடி மிகவும் நல்லது.

(99) ஸ்வர விசேஷத்தினால் அயோக்கியனுக்கு யோக்கியதையும், யோக்கியனுக்கு அயோக்கியதையும்,உண்டாகின்றபடியால் மனுஷனானவன் தன் காரியத்திற்கு யோக்கியமான நாடியை உபயோகிக்க வேண்டும். தவிரவும் எப்படி வாயு இருக்குமோ அப்படி நடக்கவேண்டும்.

(100) சந்திர ஸ்வரம் நடக்கும்பொழுது அன்னியர்கள் செய்த அபகாரத்தை சகிக்கிறான். சூரிய ஸ்வரத்தில் பலவானையும் வசியம் செய்கிறான். சுழுமுனை நாடி நடப்பு காலத்தில் மோக்ஷமுண்டாகிறது. இவ்விதமாக ஒரு தெய்வம் மூன்று விதமாயிருக்கிறது.

(101) பகலிலாவது, இரவிலாலது சுபம் அல்லது அசுபகாரியமிருந்தால் காரியத்திற்கு தகுந்த ஸ்வரத்தை நடத்திக் கொள்ளவும்.

இடைகலை:-
----------------------

(102) ஸ்திரமாகிய காரியங்கள், அலங்காரம், தூரதேச கமனம், ஆசிரம தருமம், கிரகம் வாங்கல், சாமான் வாங்கல், இதுகளுக்குச் சந்திரநாடி உத்தமம்.

(103) துறவு, கிணறு, குளம் வெட்டல், கால் நாட்டல், தேவதா பிரதிஷ்டை, யாத்திரை, தானம், கல்யாணம், வஸ்திர தாரணம், அலங்கார தாரணம் இவைகளுக்கு சந்திரநாடி உத்தமம்.

(104) சாந்தி கர்மம், பௌஷ்டி கர்மம், திவ்விய மருந்து, ரசாயனம், பந்துக்கள் எஜமானன் தரிசனம், சிநேகிதன் சேர்க்கை, வியாபாரம், தான்னிய சேர்க்கை இவைகள் சந்திர நாடியில் சுபம்.

(105) கிரகப்பிரவேசம், சேவை, கிருஷி, விரை தெளித்தல், இன்னும் சுபகாரியங்கள் சந்திர நாடியில் உத்தமம்.

(106) வித்தியாரம்பம், பந்து தரிசனம், உபநயனம்,

(107) மோக்ஷம், தர்மம், தீக்ஷை, மந்திரசித்தி, காலவிக்ஞானம், வேத பாராயணம், சதுஷ்பாதம் (ஆடு, மாடு, குதிரை) வீட்டிற்குக் கொண்டு வருதல், வியாதி சிகிக்ஷை, எஜமானனை அழைத்தல் முதலியவைகளுக்கு சந்திரநாடி சுபம்.

(108) முதல் முதல் யானை குதிரை ஏறுதல், அவைகளைவாங்கி கட்டுதல்,

(109) பரோபகாரம், நிதிஸ்தாபனம், சங்கீதம், வாத்தியம், கேளிக்கை, இவை ஆரம்பித்தல், சாஸ்திர விசாரம், பட்டணம் அல்லது கிராமம் இவைகளுள் பிரவேசித்தல், திலகதாரணம் நிலம் வாங்கல் இவைகளுக்கு சந்திர நாடி சுபம்.

(110) துக்கம், சோகம், விஷாதர், ஜூரம், மூர்ச்சை இவைகளும், ஸ்வஜன சேர்க்கை, எஜமானன் சேர்க்கை, அன்னபானாதிகளுக்கு வேண்டியவையும், விறகும், வாங்கல் இவைகள் சந்திர நாடியில் சுபம்.

111 ஸ்திரீகள் வளையல் முதலானது அணிதல், மழை ஆரம்பம்

(112) குருபூஜை, விஷமிறக்கல். யோகாப்பியாசம் இவைகள் சந்திரநாடியில் ஆரம்பித்தால் சித்தி. மேலும் இந்த நாடியில் வாயு, தேயு, ஆகாசம் இந்த மூன்று தத்துவமும் நிஷேதம்.

(113) மேலே சொன்னக் கிருத்தியங்களெல்லாம் பகல் இரவு எந்தக் காலத்தில் செய்தாலும் சித்தி. எல்லா சுபகாரியங்களும் சந்திர நாடியில் சுபம்.

பிங்கலை:-
------------------

(114) கடினமானதும், குரூரமானதும், வித்தையைப் படித்தலும்,

(115) படித்துவைப்பதும், ஸ்திரீ ஸங்கமம், வேசி கமனம்,

(116) கப்ப லில் ஏறுவது, துஷ்ட கிருத்தியம், மதுபானம், வீரமந்திரங்களின் உபாசகை, தேசவித்துவம்ஸம், விரோதிக்கு விஷம் கொடுத்தல், சாஸ்திர அப்பியாஸம், கமனம், வேட்டையாடல், மிருகங்களின் சண்டை.

(117) சூதாடல், குதிரை, யானை, இரதம் இவைகளை சித்தம் செய்கிறதாவது அல்லது அவைகளில் எறுதல்,

(118) திருடல், எந்திரம்

(119) தந்திரம்,கோட்டை, மலை, இவைகளின் மேல் ஏறுதல், சிலம்பம் பழகுதல், மாரண உச்சாடன முதலான ஷட் கர்மம், எட்சணி எட்சவேதாளம், பிசாசு, விஷப், இவைகளின் நிலாரணம், கழுதை, ஒட்டை, எருமை, யானை, குதிரை இவைகளில் ஏறுதல், ஆற்றைக் கடத்தல், தீவிரமான மருந்து, லிபி எழுதுதல் இதுகளுக்கெல்லாம் தக்ஷிணநாடி உத்தமம்.

(120) மாரணம், மோஹனம், ஸ்தம்பனம், வித்வேஷணம், உச்சாடனம்

(121) வசீகரணம், பிரேரணம், ஆகர்ஷணம், க்ஷோபம், தானம், கிரய விக்கிரயம், பிரேத ஹரணம், சத்துரு நிக்கிரஹம், போகம், ராஜ தரிசனம், போஜனம், ஸ்நானம், சத்துருவிடத்தில் சண்டை இவைகளுக்கு பிங்கலை நாடி உத்தமம்.

(122) போஜனத்தினால் அக்கினி மந்தம் ஏற்படுதல், ஸ்திரீ வசீகர ணம், சயனித்தல் இவைகள் சூரிய ஸ்வரத்தில் செய்யவும்.

(123) சாராம்சம் குரூரமானதும், சாமானதுமான காரியங்களெல்லாம் சூரிய ஸ்வரத்தில் செய்தால் சித்தி. இதில் யாதொரு சந்தேகமில்லை.

சுழுமுனை:-
--------------------

(124) ஸ்வரமானது க்ஷணநேரம் வலத்திலும் இடத்திலும் செல்லும் போது சுழுமுனையின் காலமென்றறியவும். இந்த சுழுமுனை எல்லா காரியத்தையும் நாசம் செய்கிறதாயிருக்கிறது.

(125) சுழுமுனை நாடியிடத்தில் பிரளயகால ரூபமாகிய அக்கினி எப்பொழுதுமிருந்துகொண்டிருக்கிறபடியால் அது விஷத்திற்கு சமானமாய் காரியாரம்பங்களுக்கு நிஷேதமாயிருக்கிறது. ஆகையால் அதில் யாதொரு காரியம் செய்தால் நாசமாகிறது.

(126) எப்பொழுது கிரமம் கப்பி இரண்டு நாடிகளும் சென்றுக ண்டிருக்கிறதோ அப்பொழுது அவனுக்கு அசுப பலனென்றறியவும்.

(127) யாருக்கு நாடியானது க்ஷணநேரம் வலதும் க்ஷண நேரம் இடதுமாய் செல்லுகிறதோ அவனுக்குச் சங்கடம் வந்ததென்றறியவும்.

(128) எப்பொழுது இரண்டு நாடிகளினுடைய சஞ்சாரம் உண்டாகிறதோ, அக்காலம் விஷத்திற்கு சமானமாயிருக்கிறபடியால் அவ்வித சுழுமுனை நாடியில் எப்பேர்ப்பட்ட குரூரமும் சாந்தமுமான காரியங்கள் செய்யலாகாது. அது நிஷ்பலனாய் முடியும்.

(129) ஜீவிதம், மாரணம், லாபம், நஷ்டம், பிரஷ்ணை, ஜெயம், அப ஜெயம், இவ்விதமான கேள்விகளை ஸ்வரம் விபரீதமாய் நடக்கும்பொழுது செய்யலாகாது. ஈஸ்வர ஸ்மரணை மாத்திரம் செய்யவும்.

(130) ஈஸ்வர ஸ்மரணை செய்த பிறகு யோகாப்பியாசம் முதலாகிய பரமார்த்தீக கிருத்தியங்கள் செய்யவும். ஜெயம், லாபம், சுகம், இவைகளில் இச்சையுடையவர்கள் பரமார்த்தீகத்தைத் தவிர வேறு காரியம் செய்.

(131) சூரிய ஸ்வரத்தில் சுழுமுனை நாடி செல்லும்பொழுது சாபம் அல்லது வரம் கொடுத்தால் அது நிஷ்பிரயோஜனமாகும்.

(132) நாடிகளினுடைய சங்கிரமண காலத்திலும், தத்துவங்களின் சலன காலத்திலும் தானம் முதலாகிய புண்ணிய கர்மங்கள் செய்யவேண்டும். சுபகாரியங்கள் செய்யலாகாது.

(133) எந்தக்காலத்தில் விஷம ஸ்வரத்தின் உதயமாயிருக்கிறதோ அப்பொழுது யாதொரு காரியத்தையும் மனதில் நினைக்கக் கூடாது. விஷம ஸ்வரத்தில் யாரொருவன் பிரயாணம் செய்கிறானோ அவனுக்கு மரணம் சம்பவிக்கிறது. அநேக விதமான கிலேசங்கள் பிராப்தமாகிறது. இதற்கு சந்தேகமில்லை.

(134) முன்னும், இடது பக்கமும், ஊர்த்துவமும் சந்திரன் பலவான். வலது பக்கமும், பின்னும் கீழும் சூரியன் பலவான். ஆகையால் வித்வான் பூர்ண சூன்னிய ஸ்தானங்களை விசாரணை செய்யவேண்டும்.

(135) சந்திர ஸ்வர காலத்தில் வருகிற தூதன் இடது பக்கம், மேல்பக்கம், அதே பாகத்தில் வந்தால் சுபம். அவ்விதமே சூரிய ஸ்வர காலத்தில் பின்னால் வலது பக்கம் கீழ் பாகத்தில் வந்தால் சுபயென்றறியவும்.

(136) அனாதியாயும் நிஷ்கிரியையாயும் நிட்சலமாயுமுள்ள சுழுமுனை

(137) விஷம சந்தியானது பரதத்துவமாகிய பிரம்மத்தில் லீனமாகிறது.

(138) அதை சாதுக்கள் சந்தியா என்று சொல்லுகிறார்கள். பிரசித்தமாகிய வேதத்தை வேதமென்று சொல்லுகிறதில்லை. காரணம் அதனிடத்தில் வேத தத்துவமில்லை. எதனாலே பரமாத்மாவை அறியப்படுகிறதோ அதற்குத்தான் வேதமென்று சாதுக்களால் சொல்லப்படுகிறது. பிராமணன் பகல் இரவு இவைகளின் சந்தியில் ஸந்தியாவந்தனம் செய்கிறான். இதற்கு சாதுக்கள் ஸந்தி என்று சொல்லுகிறதில்லை. ஆனால் சுழுமுனை நாடியிலிருக்கப்பட்ட பிராணனைத்தான் ஸந்தி என்பார்கள்.

நாடிபேதம்:-
-------------------

(139) ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றப்பட்ட தேவாதி தேவனே! உங்களுடைய இருதயத்திலிருக்கப்பட்ட ரகசியத்தை எனக்குச் சொல்லவேண்டும்.

(140) ஹே.... பார்வதி! அத்தியந்தம் ரகசியமாகிய ஸ்வா ஞானத்தைத் தவிர வேறு ரகசியமில்லை. இதுதான் நமது இஷ்ட தெய்வம். எந்த யோகியானவன் ஸ்வர அப்யாசியோ அவனே சிரேஷ்ட யோகி.

(141) பஞ்ச தத்துவத்திலிருந்து சிருஷ்டி, உத்பன்னமும் லயமுமாகிறது. இதனாலேயே பஞ்ச தத்துவம் முக்கியமானது. நிர்குணமாகிய பரமாத்மா இந்த ஐந்து தத்துவத்திலிருந்தும் வேறாக இருக்கிறார்.

(142) யோகியானவன் அப்பியாச யோகத்தினால் ஸ்வரத்திலுள்ள தத்துவங்களின் பெயரை அறியவேண்டும். யாரொருவனுக்கு தத்துவத்தினுடையதும் ஸ்வரத்தினுடையதும் பூர்ண ஞானமிருக்கிறதோ அப்பேர்ப்பட்ட யோகி பூதங்களினுடைய துஷ்ட கின்னங்களை சகஜமாய் அறிகிறான்.

(143) பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், இந்த ஐந்து பூதங்களே பஞ்ச தத்துவம் பஞ்ச பூதங்களே இந்த ஜகமாயிருக் கிறது. இந்தப் பஞ்ச தத்துவத்தை யார் அறிகிறானோ அவனே பூஜிக்கப்பட்டவன்.

(144) பூலோகம் முதல் சத்தியலோகம் வரையிலுள்ள சர்வலோகத்தின் ஜீவராசிகளின் தேகத்தில் தத்துவங்கள் வெவ்வேறுயில்லை. எல்லாவற்றிலும் பஞ்சபூதம் ஒரே மாதிரியாயிருக்கிறது. ஆனால் சரீரத்திலுள்ள நாடிகள் மாத்திரம் வெவ்வேறாயிருக்கின்றன.

(145) இடைகலை, பிங்கலையில் ஐந்து தத்துவங்களினுடைய உதயம் ஐந்தாயிருக்கிறது.
       ஹே.... சுந்தரியே! அந்த தத்துவத்தினுடைய ஞானத்தை எட்டுவிதமாய் உனக்குச் சொல்லுகிறேன்.

(146) முதலில் தத்துவத்தினுடைய சங்கை. 2-வது சுவாசத்தினுடைய ஸந்தி.

(147) 3-வது ஸ்வரத்தின் சின்னம். 4-வது ஸ்தானம். 5-வது தத்துவத்தின் நிறம். 6-வது பிராண நிலை. 7-வது வாசனை 8-வது சுவாசம் செல்லும் அளவின் லக்ஷ ணம், இந்த 8 விதமாய் சராசரத்தில் வியாபித்து நிற்கின்றது.
       ஹே..... பார்வதி! இந்த ஜகத்தில் ஸ்வர தத்துவ ஞானம் முக்கியம், மற்றது சிரேஷ்டமல்ல.

(149) யோகியானவன், பிரபாத காலமுதல் ஸ்வரத்தையும் அதன் தத்துவ உதய காலத்தையும் மிகவும் ஜாக்கிரதையாய் கவனிக்கவேண்டியது. எந்த காரியம் செய்தாலும் ஸ்வரத்த னுடைய அனுஸந்தானத்திலேயே இருக்கவேண்டும். ஸ்வர ஞானமுடைய யோகியானவன் கேவலம் காலக்ஷேப நிமித்தம் கர்மம் செய்கிறானே யொழிய அவனுடைய லக்ஷியமெல்லாம் ஸ்வரத்தினிடத்திலேயே இருக்கும்.

(150) தத்துவ ஞானம் உண்டாக வேண்டியதற்காக ஷண்முகி முத்திரையை அப்பியசிக்கவும். அது எவ்விதமென்றால், கைகளின் பெருவிரல் இரண்டினால் காதையும், நடுவிரல் இரண்டினால் நாசியையும், தர்ச்சினி இரண்டினால் கண்களையும், மற்ற விரல்களினால் வாயையும் அழுத்திக்கொண்டு இருப்பதற்கு ஷண்முகி யென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

(151) இவ்விதம் செய்வதினால் ஐந்து தத்துவங்களினுடைய ஞானமுண்டாகிறது. இதில் 5-விதமான நிறங்கள் காண்கின்றன. 1-மஞ்சள் 2-வெள்ளை 3 - சிவப்பு 4 - நீலம் 5-பலவர்ணம், இதில் பிருதிவி -மஞ்சள், அப்பு-வெள்ளை, தேயு - சிவப்பு, வாயு - நீலம், ஆகாசம் - சித்திர விசித்திர வர்ணம்.

(152) சுவாசத்தை இழுத்துக் கண்ணாடியின் மேல் சுவாசத்தை விட்டால், அதின்பேரில் என்ன ஆகிருதி, காணப்படுகிறதோ, அதைக்கொண்டு மனுஷனுடைய தத்துவத்தையறியவும்.

(153) பிருதிவி - சதுஷ்கோணம், அப்பு - அர்த்த சந்திரன், தேயு திரிகோணம், வாயு-சக்கிராகாரம், ஆகாயம்- அநேக பிந்துக்கள். இதைக்கொண்டு இன்ன தத்துவம் உதயமாயிருக்கிறதென்று அறியவும்.

(154) சுவாஸமானது செல்லும் பொழுது மூக்கில் மேலும் கீழும் படாமல் மத்தியில் சென்றால் பிருதிவி தத்துவம். மூக்கின் கீழ்பாகத்தை ஒட்டிச்சென்றால் அப்பு தத்துவம். மூக்கின் மேல் பாகத்தை ஒட்டிச்சென்றால் தேயு தத்துவம். கோணலாய் சென்று கொண்டிருந்தால் வாயு தத்துவம். இரண்டு ஸ்வரமும் வெளியில் வராமல் உள்ளேயிருந்தால் ஆகாச தத்துவ மென்றறியவும்.

(155) அப்பு-வெள்ளை, பிருதிவி-மஞ்சள், அக்னி-ரக்தவர் ணம், வாயு-நீல வர்ணம், ஆகாசம்-சித்திரவர்ண மென்றறியவும்.

(156) அக்னி இரண்டு தோள்களிலும், வாயு நாபி மூலம், பிருதிவி முழங்கால், அப்பு பாதத்தின் கடைசி, ஆகாசம் சிரசு.

(157) பிருதிவி -மதுரம், அப்பு - துவர்ப்பு வாயு-புளிப்பு, ஆகாசம்- கசப்பு, தேயு - உறைப்பு,

(158) வாயுவு 8-அங்குலம், அக்கினி 4-அங்குலம் பிருதிவி 12-அங்குலம், அப்பு 16-அங்குலம், ஆகாயம் அதேயிடத்தில்...

(159) அக்கினி மேலே செல்லுகிறபடியாலும் அது மிருத்துவானதாலும் அதில் மாரணக்கிரியையும், அப்பு கீழ்நோக்கி செல்கின்றபடியால் அதில் சாந்திகர்மமும், வாயு கோணலாய் செல்லுகிறபடியால் அதில் உச்சாடனக்கிரியையும், பிருதிவி மத்தியில் செல்லுகிறபடியால் ஸ்தம்பனக்கிரியையும் செய்யவும். ஆகாசம் எங்கும் வியாபித்திருக்கிறபடியால் அதில் யாதொன்றும் செய்யலாகாது.

(160) பிருதிவி தத்துவத்தில் ஸ்திர கர்மம், அப்புவில் சர கர்மம், தேயுவில் குரூரமான கர்மம், வாயுவில் மாரண உச்சாடன கர்மங்கள் செய்தால் சித்தி.

(161) யோக அப்பியாசத்தைத் தவிர ஆகாஸ தத்துவத்தில் யாதொரு கர்மமும் செய்யக்கூடாது. செய்தால் காரிய நாசம்.

(162) பிருதிவி, அப்பு இவை இரண்டும் சித்திப்பிரதம். அக்கினி மிருத்திகாரகம், வாயு க்ஷ்யகாரகம், ஆகாசம் நிஷ்பலம்.

(163) பிருதிவி தத்துவம் நீடித்த லாபத்தையும், அப்பு தத்சமய லாபத்தையும், அக்கினி வாயு ஹானியையும் கொடுக்கும். ஆகாசத்தில் சர்வமும் நிஷ்பலம்.

(164) மஞ்சள் வர்ணமும் மெதுவாய் செல்லக்கூடியதும்,மோவாய்க்கட்டை வரையில் கீழும் மேலும் படாமலும் நடுவில் செல்லுகிறதும், பெரிய சப்தமும் கொஞ்சம் உஷ்ணமுமுடைய எந்த சுவாசமோ, அது ஸ்திரகாரியத்தை சித்தி செய்யக் கூடியதுமான பிருதிவி சம்மந்தமான வாயு ஆகும்.

(165) கீழே செல்லக்கூடியதும், பெரிய சப்தமும், சீக்கிரமாய் செல்லக்கூடியதும், சீதளமும் 16-அங்குல பரிமாணமுடையதுமானது அப்பு சம்மந்தமானது. இது சுபகர்மம் சித்தி செய்யக்கூடியது.

(166) பம்பரம்போல் செல்லக்கூடியதும், அதி உஷ்ணமும் ரக்த வர்ணமும் 4-அங்குலம் மேல் செல்லக்கூடியதுமான வாயு தேயு சம்மந்தமானது. இது குரூரமான கர்ம சித்தி கொடுக்கக் கூடியது.

(167) சீதோஷ்ணம், கிருஷ்ணவர்ணம். கோணலாயும் 8-அங்குலம் செல்லக்கூடியதுமான சுவாசம் வாயு சம்மந்தமானது. இதானது சரகாரியசித்தி செய்யக்கூடியது.

(168) எந்த வாயுவானது, ஸமரசமாயும், எல்லா தத்துவங்களின் குணத்தையுமுடையதோ அது ஆகாச சம்மந்த வாயுவாகும். இதில் யோக சித்தியுண்டாகும்.

(169) பிருதிவி தத்துவம் நிறத்தில் மஞ்சளாயும், வடிவம் நாலு மூலையாயும், ருசி மதுரமாயும், நடுவில் செல்லக்கூடியதும் 12-அங்குலம் பரிணாமமுடையதும் அநேக காரியங்களுக்கு உபயோகமாயும் இருக்கிறது.

(170) அப்பு தத்துவம் வெள்ளை நிறம். வடிவம் அர்த்த சந்திரன் (பிறை), ருசி துவர்ப்பு, ஈரமும் 16-அங்குலம் பரிணாமமுடையது. இதனால் லாபமுண்டாகும்.

(171) தேயு தத்துவம் ரக்தவர்ணம். திரிகோணம். உவர்ப்பு. மேல் நோக்கிச் செல்லக்கூடியது. தேஜூஸுடையது. 4-அங்குல பரிணாமமுடையது.

(172) வாயு தத்துவம், நீலவர்ணம். சக்கிராகாரம். புளிப்பு. கோணலாய் செல்லக்கூடியது. சபலம். 8-அங்குல பரிணாமமுடையது.

(173) வர்ணம், வடிவம், ருசி, செல்லும் நிதானம் இந்த நாலும் ஸ்பஷ்டமில்லாதது ஆகாச தத்துவம். இது பிரவர்த்தி காரியங்களில் நிஷ்பலத்தை கொடுக்கக்கூடியது. மோக்ஷ மார்க்கத்திற்கு மாத்திரம் சாதகமுடையது.

(174) பிருதிவி, அப்பு-சுபம், தேயு மத்திமம். வாயுவு ஆகாசம், காரியஹானி மிருத்திவும் செய்யக்கூடியது. புருஷாளுக்கு அசுபம் கொடுக்கக்கூடியது.

(175) கிழக்கு முதல் மேற்கு பரியந்தம் பிருதிவி தத்துவம். தெற்கு தேயு. வடக்கு வாயு. மத்தியதிசை ஆகாசம். இவ்விதமாய் தத்துவங்களின் திசை வியாபித்து நிற்கின்றன.

(176) சந்திர ஸ்வரத்தில் பிருதிவி அப்புவும், சூரிய ஸ்வரத்தில் அக்கினி தத்துவமும் நடக்கையில் கிரமமாய் ஸௌமியமும், குரூர காரியமும் சித்தியுண்டாகும். இதில் சந்தேகமேயில்லை.

(177) பகலில் பிருதிவி தத்துவமும், இரவில் அப்பு தத்துவமும், லாபகரமானது. அக்கினி தத்துவத்தில் மிருத்துவும், வாயு தத்துவத்தில் க்ஷயமும் (ஹானி) ஆகாச தத்துவத்தில் ஸ்தானபேதமுமுண்டாகிறது.

(178) பிருதிவி தத்துவத்தில் நீடித்த காலம் ஜீவித்திருக்க உபாயம், ஜயம், லாபம், கிருஷி, தன கர்மம், மந்திரம், யுத்த கர்மம், ப்ரஷ்ணம், கமனம், ஆகமனம் இவைகள் செய்ய சுபம்.

(179) பிருதிவி, அப்பு தத்துவத்தில் சத்துரு வந்தால் சுபம். வாயு தத்துவத்தில் வந்தால் வேறிடம் போவான். ஆகாசம் தேயு தத்துவத்தில் சத்துரு வந்தால் ஹானியும், மிருத்துவுமுண்டாகும்.

(180) ப்ரஷ்ணம் கேட்க வந்தால் தத்துவத்தினாலறிந்து சொல்லவும். பிருதிவி தத்துவமாயிருந்தால் விருக்ஷங்களைப்பற்றி, அப்பு தத்துவமாயிருந்தால் ஜீவனைப்பற்றி, தேயு தத்துவ மாயிருந்தால் தாதுக்களைப்பற்றி, ஆகாச தத்துவமாயிருந்தால் ஒன்றுமில்லையென்றறிந்து சொல்லவும்.

(181) பிருதிவி தத்துவமாயிருந்தால் அநேகருடனும், அப்பு, வாயு, தத்துவத்தில் ஒருவராகவும், தேயு தத்துவத்தில் இருவராகவும் போகவேண்டும். ஆகாச தத்துவத்தில் போகவே கூடாது.

(182) தக்ஷிண நாடியில் அக்கினி தத்துவமாயிருந்தால் அது செவ்வாய், பிருதிவி தத்துவமாயிருந்தால் சூரியன், அப்பு-சனி, வாயு-இராகு.

(183) வாம நாடியில் (இடைகலை) அப்பு தத்துவம்-சந்திரன், பிருதிவி-புதன், வாயு-குரு தேயு-சுக்கிரன். இந்த கிரகங்கள் சந்திர ஸ்வரத்தில் சர்வ காரியங்களுக்கும் சுபம்.

(184) சுழிமுனை நாடியில் பிருதிவி தத்துவம்-புதன், அப்பு-சந்திரன், சுக்கிரன்-தேயு, சூரியன்-செவ்வாய், வாயு-இராகு சனி, ஆகாசம்-குரு.

(185) சூரிய ஸ்வரத்தில் யாரேனும் பிரயாணப்பட்டுவிட்டார்களாவென்று ப்ரஷ்ணம் கேட்டால், அந்தக் காலத்தில் ஸ்வாசத்தில் இராகு இருந்தால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு புறப்பட்டு விட்டார்களென்று சொல்லவும்.

(186) அப்பு தத்துவத்தில் கேள்வி கேட்டால் சீக்கிரம் வருவான். பிருதிவியில் போனவிடத்தில் அங்கேயே சுகமாயிருப்பான். வாயு தத்துவத்தில் அன்னிய இடங்களில் போயிருப்பான். தேயுவாயிருந்தால் மாணமடைந்திருப்பானென்று சொல்லவும்.

(187) பிருதிவி தத்துவத்தில் கேள்வி கேட்டால் விருக்ஷங்களைப் பற்றியென்றும், அப்பு தத்துவமாயிருந்தால் சுபகாரியத்தைப்பற்றியென்றும், அக்கினி தத்துவமாயிருந்தால் உலோகங்களைப் பற்றியென்றும், ஆகாச தத்துவமாயிருந்தால் சூன்யமென்றும் சொல்லவும்.

(188) பிருதிவி அப்பு இத்தத்துவங்கள் நடக்கும்போது கேள்வி கேட்டால் பிரயாணத்திலிருக்கப்பட்டவன் சந்தோஷமாயும், புஷ்டியாயும், பிரீதியாயும், கிரீடை இவைகளோடிருப்பானென்றும்; தேயு, வாயு, இவைகள் நடக்குங் காலங்களில் கேட்டால் பிரயாணத்திலிருக்கப்பட்டவன் முறையே நித்திரையிலும், ஜுவரத்திலுமிருப்பானென்று சொல்லவும்.

(189) ஆகாச தத்துவத்தில் கேள்வி கேட்டால் மரணமென்று சொல்லவும். இம்மாதிரி 12-கேள்வி தத்துவங்களையும் தெய்வ ஞானியானவன் பிரயத்தனத்தினாலேயறிவான்.

(190) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, இந்தத் தத்துவங்களுக்கு முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் பலனுண்டு.

(191) ஹே... சுந்தரி! பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், இந்த ஐம்பூதத்தினால் தேகமானது உண்டாயிருப்பதால் பஞ்ச பூதாத்மகமென்று சொல்லப்படும்.

(192) எலும்பு, மாமிசம், தோல், நாடி, உரோமம், இவைகளானது பிருதிவியின் கூறென்று வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

(193) வீரியம், இரத்தம், கொழுப்பு, மூத்திரம் சளி, எச்சில் அப்புவின் கூறு.

(194) பசி, தாகம், நித்திரை, தேஜஸ், சோம்பல், இவைகள் அக்கினியின் செய்கை.

(195) ஓடுதல், அசைதல், ஒடுங்கல், பூரித்தல், பரவுதல், இவைகள் வாயுவின் செய்கை.

(196) கோபம், துவேஷம், லஜ்ஜை, பயம், மோகம், இவைகள் ஆகாசத்தின் செய்கை.

(197) பிருதிவி 50 வினாடி, அப்பு 40, அக்கினி 30, வாயு 20, ஆகாசம் 10, இவ்விதமாக மேற்கண்ட  தத்துவங்களும் இரண்டரை நாழிகைக்குள் நடக்கின்றன.

(198) பிருதிவி தத்துவத்தில் எப்பொழுதும் லாபமுண்டாகிறது. அப்பு தத்துவத்தில் தாத்கால லாபமுண்டாகிறது. வாயு தத்துவத்தில் சுவல்ப லாபமுண்டாகிறது. அக்னி தத்துவத்தில் லாபம் சித்தமாயிருந்தாலும் சூன்யமாகும்.

(199) பிருதிவிக்கி ஐந்து குணம், அப்புவிற்கு 4, அக்கினிக்கு 3, வாயுவுக்கு 2, ஆகாசத்திற்கு 1.

(200) சீறுகிறதும், சிதரினதும், நாளடைவில் ஜீர்ணமானதும், விழுந்ததும் இவ்விதமான பிருதிவியானது எவ்விதக் காரியங்களிலேயும் தன்னுடைய அவஸ்தையைப் போல் பலனைக் கொடுக்கிறது.

(201) அவிட்டம், ரோகிணி, கேட்டை, அனுஷம், திருவோணம், உத்திராடம்,அபிஜித், இந்த நக்ஷத்திரங்கள் பிருதிவி தத்துவம்.

(202) பூராடம், ஆயில்யம், மூலம், திருவாதிரை, ரேவதி, உத்திரட்டாதி, சதயம், இவை அப்பு தத்துவம்.

(203) பரணி, கிருத்திசை, பூசம், மகம், பூரம், பூரட்டாதி, சுவாதி இவை தேயுவின் தத்துவம்.

(204) விசாகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, புனர்பூசம், அசுவதி, மிருகசீரிடம், இவை வாயுவின் தத்துவம்.

(205) நாடி நடக்கின்ற பக்கத்தில் அதாவது பூர்வாங்கத்தில் நின்று கொண்டு ஒருவன் கேள்வி கேட்பானாகில் சுபாசுபக்காரியங்கள் சர்வமும் சித்தியாகும். சூன்னியாங்கத்திலிருந்து கேட்பானாகில் காரிய நாசமென்று சொல்லவும்.

(206) சுவாசமானது சுபதத்துவத்தில் உதயமாயிருந்தாலும், அந்தச் சுவாசம் வெளிப்படுங்காலங்களில் ஒருவன் கேள்வி கேட்பானாகில் காரியம் சித்தி பெறாது. இவ்விதமாகவே சந்திர சூரிய ஸ்வரமும் உட்செல்லுங்காலமாயிருந்தால் சர்வ காரியமும் சித்தியாகும்.

(207) ஸ்ரீ இராமனும் அர்ச்சுனனும் இந்தத் தத்துவத்தினாலேயே ஜெயமடைந்தார்கள். கௌரவர்கள் தத்துவ விபரீதத்தினாலேயே நாசமடைந்தார்கள்.

(208) ஜன்மாந்திர சுகிர்தத்தினாலும், அல்லது குருவினுடைய கிருபையினாலும், சுத்தமான ஹிருதயமுடைய ஜனங்களுக்கு தத்துவ ஞானம் பிராப்தமாகும்.

(209) "லம்" பிருதிவி தத்துவத்தின் பீஜம் சதுஷ்கோணம். சுவர்ண நிறம், சுகந்தம், இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு தேகத்தில் சுவர்ணச் சாயை. சுகந்தம் லகுத்துவம் இவைகள் உண்டாகின்றன.

(210) ''வம்" அப்புவின் பீஜம். அர்த்த சந்திராகாரம். இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு பசி தாகம் அற்று விடுகிறது. தண்ணீருள் மூழ்கியிருத்தல் சாத்தியமாகிறது.

(211) "ரம்" அக்கினியின் பீஜம். திரிகோணம், ரக்த வர்ணம், இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவனுக்கு அதிக ஆகாரமும், ஜலமும் சீக்கிரம் ஜீர்ணமாகிவிடுகிறது. வெய்யலினுடைய தாபத்தையும், நெருப்பினுடைய சுடுகையையும் சகிக்கும்படியான சக்தியுண்டாகிறது.

(212) "யம்" வாயு தத்துவம். சக்கிராகாரம், நீலவர்ணம். இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு ஆகாய கமனமும் பக்ஷியைப் போல பறக்கும் சக்தியுமுண்டாகிறது.

(213) "ஹம்" ஆகாச தத்துவம், நிராகாரம், பலவர்ணம், இந்த தத்துவத்தை தியானிக்கிறவர்களுக்கு திரிகால ஞானமும் அணிமாதி அஷ்டசித்தியுமுண்டாகிறது.

(214) ஸ்வர ஞானத்தைப்போல் தனம் வேறு கிடையாது. இதையடைந்து எந்தக் காரியத்தை உத்தேசித்து சென்றாலும் பலனடையாமல் வரமாட்டான்.

     - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
       சித்தர்களின் குரல் shiva shangar


Bb