Tuesday, December 30, 2025

பரமபத சோபனம் !

பரமபத சோபனம் !

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு.

இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள்.

தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது)

பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது.

ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும், எழுபத்தெட்டாம் இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

நாற்பத்தொன்றாம் கட்டத்தில் கீழ்ப்படியாமை, நாற்பத்து நான்காம் கட்டம் அகந்தை, நாற்பது ஒன்பதாம் கட்டம் ஈனம், ஐம்பத்து இரண்டாம் இடம் களவு/திருட்டு, ஐம்பத்து எட்டாம் இடம் பொய்/புரட்டு, அறுபத்து இரண்டு மதுபானம் அருந்துதல், அறுபத்து ஒன்பது கடன், எழுபத்து மூன்று கொலை, எண்பத்து நான்கு கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், தொண்ணூற்று இரண்டு கர்வம், தொண்ணூற்று ஐந்து பெருமை, தொண்ணூற்று ஒன்பது காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க 'தாயம்' அதாவது 'ஒன்று' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார்.
நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப் பட்டது.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே 
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம். 
3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.
4.இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
5.பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும்.
6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது. 
7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.

அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். (இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை)

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

மனதின்  குணங்கள் பதின்மூன்று

1 -          ராகம்
2 -          துவேஷம்
3 -          காமம்
4 -          குரோதம்
5 -          உலோபம்
6 -          மோகம்
7 -          மதம்
8 -          மச்ச்சரம்
9 -          ஈரிஷை
10-          அசூயை
11-          டம்பம்
12-          தர்பம்
13-          அஹங்காரம்

குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்

1 -          சகுனம்
2 -          ஸ்தோத்திரம்
3 -          தியானம்
4 -          யாகம்
5 -          மெளனம்
6 -          பக்தி
7 -          சித்தி
8 -          சிரத்தை
9 -          ஞானம்
10-          வைராக்கியம் .

இந்த  பதின்மூன்று குணங்களையும் ,அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும்,உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம்.பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம் .

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம். 
1.அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று… 
2.மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று… 
3.இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4.மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம். 
5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…
1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று 
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து 
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான் 
4.அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம்.

*ஓம் நமோ நாராயணாய...*

Saturday, December 20, 2025

சபரிமலை பாதயாத்திரை விபரம் 2025. 🚶🚶🚶

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சபரிமலை 57 ஆண்டு பாதயாத்திரை விபரம் 2025. 🚶🚶🚶

22.12.2025 காலை 7 மணி அளவில் மீனாட்சியம்மன் திருக்கோவில் வன்னி மரத்து விநாயகர் கோவிலில் காப்பு கட்டுதல்.

 23.12.2025 காலை 6:30 மணிக்கு தெற்கு கோபுரம் எதிரே உள்ள பைராகி மடம் ஆஞ்சநேயர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலைக்கு பாதயாத்திரை புறப்படுதல்🚶🚶🚶
மதியம்:தென்பரங்குன்றம் ராமகிருஷ்ணா சேவாஸ்ரமத்தில் மதிய உணவு
 இரவு: திருமங்கலம் துளசி மணி ஐயப்பன் கோவில் சென்று ஓய்வு எடுத்தல்.

24.12.2025 
காலை:குன்னத்தூரில்  மதியம்: T.கல்லுப்பட்டி PWD பங்களாவில் ஓய்வு இரவு: பாறைப்பட்டி முருகன் கோவிலில்  தங்கல்.

25 12 2025 காலை: கிருஷ்ணன் கோவில் சிற்றுண்டி மதியம்: பிள்ளையார் நத்தம் சென்று  ஓய்வு  இரவு: ராஜபாளையம் சித்தி விநாயகர் கோவில் தங்கல்.

26.12.2025 காலை: சேத்தூரில் 
மதியம்: சிவகிரிக்கு முன்னாடி உள்ள கருப்பசாமி கோவில் மதிய  ஓய்வு  இரவு: வாசுதேவநல்லூர் விநாயகர் கோவில் தங்கல்.

27.12.2025 காலை: புளியங்குடி தாண்டி சிங்கிலிபட்டி மாரியம்மன் கோவில் 
மதியம்:  கிருஷ்ணா புரம் பிரத்தியங்கிரா கோவில் சென்று  ஓய்வு  இரவு: பன்பொழில் சிவன் கோவில் தங்கல்.

28.12.2025 காலை: மணலாற்றின் 
மதியம்:  அச்சன் கோவில் சென்று  ஓய்வு  இரவு: அச்சன் கோவில் தங்கல்.

29.12.2025 காலை: காட்டுவழிபாதையில் துரைபங்களாவில் 
மதியம்:  காட்டு வழிபாதையில் மதிய உணவு  உண்டு தொடர்பயணம்
இரவு: கல்லூளி எஸ்டேட் மாரியம்மன் கோவில் தங்கல்.

30.12.2025 காலை: கோணி அருகே சிற்றுண்டி , மதியம்:  கும்ளா மாதவன் நாயர் வீட்டில் மதிய உணவு உண்டு ஓய்வு  இரவு: ராணி கிருஷ்ணன் கோவில் தங்கல்.

31.12.2025 காலை:மக்கப்புலா ஆரியபவன் சிற்றுண்டி  மதியம்: எருமேலி தர்மசாஸ்தா தரிசித்து பின் BSNL ஆபிஸ் எதிரே உள்ள தர்மசாஸ்தா அன்னதான டிரஸ்ட் சென்று தங்கல்.
மாலை: பேட்டை துள்ளல்.

01.01.2026 அதிகாலை எருமேலியிலிருந்து பம்பை நோக்கி பெரியபாதையில் பயணம் ஆரம்பம்.
இரவு: கரிவலந்தோடு தங்கல்.

02.01.2026 அதிகாலை பம்பை சென்று பம்பையில் நீராடிவிட்டு மலையேறுதல்.
இரவு: ஐயப்ப சுவாமி தரிசனம் செய்து சன்னிதானத்தில் மாகுண்ட ஐயப்ப நிலையத்தில் தங்கல்.

03.01.2026 அதிகாலை நெய்யபிஷேகம் செய்து பிரசாதம் மற்றும் ஐயனின் அருளை பெற்று மதுரை புறப்பட்டு சுகமாக இரவு வந்தடைதல்.

பாதயாத்திரை குருநாதர் சாஸ்தா மாரி +91 78670 09008 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai Trust -
C/o Chamundi,  West tower Street, Madurai 
Cell: 9442408009

Sunday, December 7, 2025

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 56ஆண்டு

    பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 56ஆண்டு




"வரும் 14.12.2024 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 56 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு  அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வரும் 14.12.2025 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் விருந்து வழங்கப்படுகிறது"

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 

Chamundi Supari 
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 
chamundihari@gmail.com

Thursday, September 18, 2025

அமுது பாறை ..

இன்று காலை Kaalachakram Narasimmaa Tan அண்ணா பல சமையல் அறை விஷயங்களை எழுதி வருகிறார் .. 

நான் ஸ்ரீரங்கத்தில் 1980 களில் - பழைய பெரிய வசதியான வீடுகளில் கண்ட விஷயம் - 

அமுது பாறை .. 
இதை படை கல் என்றும் அழைக்கிறார்கள் - சுட சுட அரிசியை வேக வைத்து - சாதமாக வடித்த பின்னர் - அதை இந்த கல்லில் பரப்பி - சூடு ஆற்றி - அது கட்டி ஆகாமல் உதிர்த்து விட்டு அதில் புளியோதரை சாற்றை ஊற்றி - கலப்பார்கள் .. 

நான் ஒரு வயதான கோவில் சமையல்காரரிடம் கேட்ட பொது - சாதத்தை - இப்படி சூடான ஆவியை நீக்கி - கட்டி இல்லாமல் - பாறையில் இட்டு - மிதமான சூட்டில்  பின்னரே சாப்பிட வேண்டும் - அதை போலவே எல்லா கோவில்களிலும் தெய்வ மூர்த்தங்கள் முன்பும் இப்படி துணியை விரித்து - அதில் உணவை பரப்பி படைப்பார்கள் என்று சொன்னார் .. 

இன்று இருக்கும் அவசர உலகில் குக்கர் விசில் போவதற்கு முன்பாக மூடியை திறக்க எத்தனிக்கு நிலை !!! - அந்த சமயல் காரர் சொன்ன விஷயம் - சாதத்தை மட்டும் சாப்பிடாமல் அதை வேகவைக்கும் ஆவியையும் சேர்த்து வயற்றின் உள்ளே அனுப்பினால் என்ன ஆகும் ?? 

கருங்களில் பெரிய நீர் தொட்டிகள் பல பாத்திரங்கள் இருந்தும் ஏன் உணவு சமைக்க கல்லு டேங்க் ??  - இந்த அமுது பாறைகள் இல்லாத கோவில்கள் தமிழகத்தில் இல்லை - இவைகளின் பயன்பாடுகள் பற்றிய அறிவு தற்சமயம் இல்லை !!! 

விஜயராகவன் கிருஷ்ணன்

Wednesday, September 17, 2025

அரகஜா எளிமையான முறையில் தயாரிக்க



அரகஜா எதற்கு பயன்படும்?




ஒரு குறிப்பிட்ட ஒரு மைய புள்ளியை மையமாக கொண்டு தான் எல்லா சக்திகளும் செயல்படுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனையோ அல்லது பொருட்களையோ உற்று பார்க்கும் போது அந்த மனிதனின் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் magnetic vibrations அந்த பொருளை தாக்கும். இதுவே கண்தீருஷ்டி என்று சொல்கிறோம்.

உதாரணமாக, ஒருவர் புது வீடு கட்டி வருவார் அவ்வழியே செல்லும் நல்லவர் கெட்டவர் என்று அந்த வீட்டை உற்று பார்த்து சென்று வருவார்கள் அவ்வாறு நல்ல எண்ணங்கள் கொண்டவர் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் தீய எண்ணம் கொண்ட வயிதெறிச்சல் கொண்டவன் பார்க்கும் போது அவனின் கொருற எண்ணத்தின் அதிர்வுகள் vibrations அந்த வீட்டை தாக்கும் அல்லது அந்த வீட்டின் உரிமையாளர்களைமோ உடல் நல பாதிப்புகள் உருவாகும். இதுவும் ஒரு எண்ண சக்தியின் வெளிப்பாடே. இதற்காக அந்த காலத்தில் இந்த மாதிரி புது வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டின் மேல் ஒரு ஆள் உயர வைக்கோல் பொம்மை செய்து வைப்பார். அவ்வாறு அந்த புதியதாக வீட்டை பார்க்கும் போது வீட்டின் மேல் கண் பார்வை செல்லாது மாறாக புதியதாக அந்த வீட்டின் மேல் வைக்கபட்டுள் வித்தியாசமான பொம்மையை நோக்கி தான் செல்லும். அதோபோல் அந்த பொம்மையினை பார்பவர்களின் எண்ணம் அந்த பொம்மையை தீயசக்தி தாக்கும். பிறகு ஒருநாள் அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவின் முன் நாள் நள்ளிரவில் அந்த பொம்மையை எவரும் பார்க்காத வண்ணம் தீயிட்டு கொளுத்துவார்கள். அந்த தீய சக்திகள் தீயில் கருகும்.

அதேபோல் தான் கோவிலில் உற்சவம் போது சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்துவிட்டு இறுதியில் ஒரு சாமியின் முகத்தில் ஒரு சிறிய கருப்பு நிற பொட்டு கண்ணத்தில் வைப்பார்கள். இதுவும் சாமியின் அலங்காரத்தை கெடாமலும் சாமிக்கு கண்தீருஷ்டி ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்துவது மரபு.

இதே போல் திருமண அலங்காரம் போது மணமகன் மணமகள் கன்னத்தில் தீருஷ்டி பொட்டு வைப்பார்கள் இதுவும் ஒருவித தோஷம் குறைப்பே....

எந்தவொரு ஆலயத்தில் ஒரு சக்தி இருக்கும் அந்த இறை சக்தியை நாம் பெற, உள்வாங்க பெண்கள் கண் புருவத்தில் அல்லது ஆண்கள் சுழி மற்றும் நெற்றியில் அரகஜா வைத்து கொண்டு பிரார்த்தனை செய்தால் போதும் உங்கள் வேண்டுதால் விரைவாக நடக்கும். தினமும் நெற்றியில் வைத்து கொள்ளலாம் இதனால் எல்லாவிதமான நன்மைகள் வந்து சேரும்.

ஆகவே ஒருவரின் நல்வாழ்வு மேம்படவும் கண்தீருஷ்டி தோஷம் இல்லாமல் வாழ்வும். இறைவழிபாடுபோது இறை சக்தியை முழுவதும் பெற இந்த அரகஜா உதவும். அரகஜா பயன்படுத்தி பலனடைந்தவர்கள் ஏராளம். அரகஜா அனைவரும் வைப்பது என்பது புதிய முறை இல்லை. இது காலகாலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் முறைதான். நாம்தான் அதை பயன்படுத்த வில்லை. இன்று முதல் தொடர்ந்து 27 நாட்கள் இந்த அரகஜா பயன்படுத்தி வாருங்கள் உங்களுக்கு உண்டாகும் சிறு பிரச்சினை கண்தீருஷ்டி, காரியதடை, வியாபாரம் சரிவு, திருமண தடை, திருமணம் தள்ளிப் போகுதல், அனைத்து கைகூடும்.
         ஆகவே அரகஜா என்பது அருமையான நல்ல பலன் தரும் பொருள். உங்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் தேடி தூய அரகஜா வாங்கி பயன்படுத்துங்கள்.

(எளிமையான முறையில் தயாரிக்க வசம்பு, தர்ப்பை, வெட்டிவேர், பச்சை கற்பூரம், விரல் மஞ்சள், பூனுகு இவற்றை கொஞ்சமாக நெய் தடவி காமாட்சி விளக்கில் எரிந்து கலக்கினால் ரெடி. இது ஒருவகை. இன்னொரு வகை குப்பை மேனி, தொட்டாசுருங்கி போன்ற மூலிகைகளின் வேரை சாபநிவர்த்தி செய்து எடுத்து அதை எரிந்து செய்யும் முறை, இப்படி பல வகை உண்டு.

          - சித்தர்களின் குரல்.

Thursday, August 21, 2025

மந்திரத்தை எண்ணுவதற்கு ...

காயத்ரி மந்திரத்தை எண்ணுவதற்கு, வலது கையின் மோதிர விரலின் இரண்டாம் கணுவில் தொடங்கி, சுண்டு விரலின் முதல் கணு வரை எண்ணி, பின் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதி வரை எண்ணுவார்கள். இவ்வாறு ஒரு சுற்றில் 10 முறை எண்ணலாம். ஒரு கையை பத்தாக பயன்படுத்தி, மறு கையை கொண்டு பத்து பத்துகளாக எண்ணி 100 வரை எண்ணலாம். பிறகு 100ஐ ஒரு குறியீடாக வைத்து, 1000 வரை எண்ணலாம், என்று ஒரு இணைய பக்கம் கூறுகிறது. 
வலது கை:
மோதிர விரலின் இரண்டாம் கணுவில் இருந்து எண்ணத் தொடங்குங்கள். 
சுற்று:
சுண்டு விரலின் முதல் கணு வரை எண்ணி, பின்னர் ஆள்காட்டி விரலின் அடி வரை செல்லவும். இது ஒரு சுற்று (10 எண்ணிக்கை) ஆகும். 
100 வரை எண்ணுதல்:
வலது கையில் 10ஐ எண்ணிய பிறகு, இடது கையை பயன்படுத்தி, பத்து பத்துகளாக எண்ணி 100 வரை எண்ணலாம். 
1000 வரை எண்ணுதல்:
100ஐ ஒரு அடையாளமாக வைத்து, 1000 வரை எண்ணலாம். 
கைகளை மறைத்தல்:
எண்ணும்போது, கைகளை மேலாடையால் மறைப்பது நல்லது, என்று ஒரு இணைய பக்கம் கூறுகிறது. 
சகஸ்ர காயத்ரி ஜபம்:
ஜபமாலை இல்லாமல், காயத்ரி மந்திரத்தை 1000 முறை எண்ணுவதற்கு இந்த முறை

Saturday, August 2, 2025

The Man who Transformed a wedding Feast into a Movement.... Dr crs ( Chellamuthu Trust and Research Foundation)

Faith in Action: The Man Who Transformed a Wedding Feast into a Movement Dr. CRS

When culture, tradition, and devotion (Bhakti) converge, miracles unfold. Every year, as summer approaches, the city of Madurai prepares for the Meenakshi Sundareshwarar Tirukalyanam, a grand celebration of the celestial wedding of Meenakshi and Sundareshwarar. And where there is a wedding, there is a feast.

For the past twenty-five years, on the day of this fervently celebrated wedding, over a hundred thousand people in and around Madurai are served food as part of the festivities. This year, for example, a bustling community kitchen was set up at Sethupathy High School in Madurai, managed by a dedicated team of volunteers. Some volunteers contribute their time, chopping vegetables, cooking, serving, and cleaning, while others donate food items. The entire process adheres to the highest standards of hygiene and cleanliness.

Despite the scale of this massive operation, it runs seamlessly. The kitchen receives around 5,000 kg of rice, 12,000 kg of vegetables, 120 cans of oil, 1,000 kg of sugar, 300 kg of garlic, 1,000 kg of onions, and 4,000 kg of ghee. The feast includes a variety of mixed rice, vegetable side dishes, chutneys, and sweet Pongal, creating an atmosphere of joy and festivity. As the lines of people outside grow, food is swiftly transported to the dining area.
However, the behind-the-scenes story of Thiru Chamundi Vivekanandan, whose vision, generosity, and charitable spirit drive this effort, is less known. Vivekanandan, however, insists that this is a wedding feast (Kalyana Virundhu) and not charity (anna danam). This event has even set a world record for a community feast.

I first met Vivekanandan twenty-five years ago when he sought my professional help for a family member with a mental health condition, who has since recovered. Our relationship grew and deepened through numerous interactions over the years.

He established a betel nut business near the Meenakshi temple. He initially offered food to a small group of people during the Meenakshi wedding, but his efforts faced strong opposition from those who resented an "outsider" taking such initiatives. Undeterred, Vivekanandan pursued legal action and won the case. A deeply religious man, he had made the annual pilgrimage to the Ayyappan temple since 1967.

During the COVID-19 pandemic, Vivekanandan generously provided food to patients and staff at hospitals, as well as residents at Bodhi and Trishul, units of the MS Chellamuthu Trust and Research Foundation. When he was diagnosed with COVID-19, he chose to be admitted to Ahana Hospitals, the clinical services wing of MSCT&RF, rather than more prominent hospitals. Even while on a ventilator, his concern for ensuring that food reached Bodhi and Trishul on time deeply touched me.
Vivekanandan passed away due to COVID-related complications at Ahana Hospitals. His legacy is now being carried forward by his son, an IT professional who has dedicated his life to his father's sacred cause.

Chamundi Vivekanandan's life was his message. He embodied the principle of being the change one wants to see in the world. His remarkable blend of religion, charity, and social commitment sets a standard worthy of emulation.