Wednesday, March 28, 2018

வேதங்கள்


Thank  : 🌺அகாரப்பள்ளி அறக்கட்டளை🌺 Whatapp group


ஓம் நமச்சிவாய.......  சிவாய நம ஓம் .......
☘☘☘☘☘☘☘☘☘☘☘

வேதங்கள்
☘☘☘☘

📚வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும்.

📚காலத்தால் முற்பட்டதும் ஆகும்.

📚வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

📚கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்

📚இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித்என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது.

📚வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும்.

📚வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.

📚 வேதங்களின் வகைகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📚இந்து சமயத்துக்கு அடிப்படையானவை மூன்று வேதங்கள் ஆகும்.

📚ரிக், யஜூர், சாம வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன.

📚அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள்.

📚பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது.

📚இவை தமிழில்  நான்மறை என்றும் கூறப்படும்.

📚என்றாலும் தமிழில்  நான்மறை  என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்).

🌹ரிக் வேதம்,

🌹யசூர் வேதம்

🌹சாம வேதம்

🌹அதர்வண வேதம்
என்பனவாகும்.

✍வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர்.

✍வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.

🌺வேதங்களின் நான்கு பாகங்கள்

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.

அவையானவை:

1. சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)

2. பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்

3. ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்

4பநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.

நான்கு வேதங்கள்
☘☘☘☘☘☘☘

பொதுவாக வேதங்களை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம் ( அவற்றின் கால அடிப்படையில் )
✍ 1. முற்கால வேதம்
✍  2. பிற்கால வேதம்

1. முற்கால வேதம்
☘☘☘☘☘☘☘

✍ ரிக் வேதம்
(அகாரப் பள்ளி அறக்கட்டளை  சிவனடியார்களே...... தாங்கள் ஆறாம் வகுப்பு முதல்.... உயர் கல்வி வரை.... வேதங்களில் மிகவும் பழமையானது எது என்ற கேள்விக்கு இந்த பதிலை அளித்தது நினைவு இருக்கிறதா...😳😳😳 )

📚இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

📚இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும்.

📚ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

📚ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

📚இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது.

📚மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும்.

📚ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர்.

📚மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன.

📚மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன.

📚ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.

பிற்கால வேதங்கள்
☘☘☘☘☘☘☘

பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். ( அதாவது கங்கை சமவெளி....)

🌹இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

🌹பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன.

🌹முந்தைய வேத காலங்களில்  கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.

📚2. யசுர் வேதம்
☘☘☘☘☘☘

🌹இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.

🌹இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.

📚3. சாம வேதம்

🌹இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.

🌹சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும்.

🌹சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.

📚 4.அதர்வண வேதம்

📚அதர்வண வேதம் இறுதியான வேதமாகும்.

📚இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர்.

📚அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.


🌺 அகாரப்பள்ளி அறக்கட்டளை சிவனடியார்களே..... நன்றாக சிந்தியுங்கள்.... வேத காலத்தில்.... வேதங்களைத் தழுவி.... அதன்.... பாடல்களைக் கொண்டு  இயற்றப்பட்ட இலக்கியங்களை வேத இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகிறது.

வேத இலக்கியங்கள்
☘☘☘☘☘☘☘

நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும்.

📚வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் 🌺பிராமணங்களில்🌺 கூறப்பட்டுள்ளன( ஆதலால் வேதங்கள் @ பிராமணங்கள் ஓதுபவரை பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்).

 📚ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை 🌺உபநிடதங்கள்🌺 கூறுகின்றன

📚ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின்முப்பெரும் பிரிவுகளான

✍சைவம்,

✍வைணவம்,

✍சாக்தம்

ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும்

✍✍✍✍✍✍✍✍✍✍

அன்பிற்கினிய அகாரப்பள்ளி அறக்கட்டளை அடியார்களே.... நான் ஏற்கனவே பகிர்ந்த @உபநிடதங்கள்@ பற்றிய பகிர்வும் இந்த வேத கால இலக்கியங்களில் ஒன்று ஆகும்.
☘☘☘☘☘☘☘☘☘☘

விரைவில் நமது குழுவின் சிவ வாக்கியர் அய்யா  மேற்கோள் காட்டிய தைத்திரிய உபநிடதம் பற்றி பகிர்வு செய்தேன்....

மீண்டும் அந்த.... முக்கியமான பிற .... ஒன்பது..... உபநிடதங்களையும் கூடிய விரைவில் விளக்குகிறேன்.....

ஓம் நமச்சிவாய..... சிவாய நம ஓம் ......


☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

🌹 அன்புடன் பகிர்வது
🌹சி. மதியழகன்
🌹 பட்டதாரி ஆசிரியர்
🌹 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
🌹 வாழப்பாடி
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘



Wednesday, March 21, 2018

உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா? Upanishads


Thank  : 🌺அகாரப்பள்ளி அறக்கட்டளை🌺 Whatapp group



உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா?
☘☘☘☘☘☘☘☘☘☘
Image result for உபநிடதங்கள்



உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள்.

குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது.

உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது.

அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை

1. ஈசாவாஸ்யம்,

2. கேனம்,

3. கடம்,

4. பிரச்சினம்,

5. முண்டகம்,

6. மாண்டுக்யம்,

7. தைத்தரீயம்,

8. ஐதரேயம்,

9. சாந்தோக்யம்,

10. பிரகதாரணியகம் எனப்படும்.

உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை.

அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன.

வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.

1. ஈசாவஸ்யம் :
🍀🍀🍀🍀🍀🍀

இதை ஈசோபநிடதம் என்பர்.

இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது.

ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ..... ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி.

முதல் சுலோகம்

ஈசா வாஸ்யம்........  எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.

2. கேன வாஸ்யம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀

உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது.

உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது.

சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார்.

முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.

3. கடோப நிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀

வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது.

மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.

4. பிரசின உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀

ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர்.
அதுவே பிரசின உபநிடதம்.

5. முண்டக உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀

துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.

6. மாண்டுக்ய உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

 உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.

7. தைத்திரிய உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல்.

குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.

8. ஐதரேய உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀

நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது.

இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.

9. சாந்தோக்கிய உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது.

ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.

10. பிரக தாரணியகம் உபநிடதம் :
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

ஆறு அத்தியாயங்களைக் கொண்டது.

முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும்.

உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.

✍ சிவ வாக்கியர் அய்யா கூறியதைப் போல @தைத்ரிய உபநிடதம்@ பற்றி இப்போது விரிவாக விளக்கம் அளிக்கிறேன்.... மேலும் படியுங்கள்....

7. தைத்திரேய உபநிடதம்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

"சிறின் வந்து விஸ்வே அமிர்தளிய புத்திரா"

உளநலம் தூய்மையானதாக இருந்தால் சிந்தனைகளும் தூய்மையானதாகும்.

தூய்மை இல்லாமல் போனால் உள்ளத்தில் தெய்வீக தன்மை தென்படாது.

வேத கால சிந்தனைகளில் மணி மகுடமாக திகழ்வன உபநிடதங்களாகும்.

அவை பலவாக இருந்தாலும் 108 பிரதானமானவை.

யசுர் வேதத்தில் சுக்கில யசுர், கிருஷ்ண யசுர் என இரு வகை உண்டு.

கிருஷ்ண யசுர் வேதத்தில் ஆரணியத்தில் 7 ம், 8 ம் பிரிவில் தைத்திரிய உபநிடதத்தில் வாழ்க்கை கல்வி பற்றி கூறப்பட்டுள்ளது.

இது உரையாடல் வடிவில் அமைந்துள்ளது.

மனிதன், கடவுள், கல்வி என்னும் 3 பகுதிகள் உள்ளது.

முதல் பகுதியில் நாம் எவ்வாறு வாழ்வோம்என ஆராய்கின்றது.

மனிதன் என்பவன் யார்? என்பதற்கான ஒரு விளக்கம் தருவது 2ம் பகுதி வாழ்கையின் அடிப்படையாக ஆராய்கின்றது.

மனிதன் என்பவன் யார்? சமுதாயத்தில் நல்ல அங்கத்தவனாக விளங்குதல் போன்ற நல்ல அம்சங்கள் ஆராயப்படுகின்றது.

வாழ்கையை வெறுக்கவோ, வாழ்கையில் இருந்து விலகி ஓடவோ வேண்டாம் என்பதை வலியுறுத்துவதுடன் வளமான இன்பமான வாழ்க்கை வாழ்வதற்கு இறைவனின் மகிமையை வெளிப்படுத்துகின்றது.

இவ் உபநிடதத்தில் உள்ள ' ரிதம்' என்பது பிரபஞ்ச இயக்கத்தின் ஒழுங்கு முறை, அதற்கு அடிப்படையான உண்மையே சத்தியம் பிரபஞ்சம் இயங்குகின்றது.

ஏனெனில் இறைவன் அதனை பின் நின்று இயக்குகின்றான்.

பிரபஞ்சம் என்பது இயற்கை சக்திகளின் ஒட்டு மொத்தம்.

இவ்வாறு இயற்கை சக்தியாகவும் அவற்றை பின் நின்று இயக்குபவரான கடவுள் ஆசிரியரையும் மாணவரையும் காப்பற்றட்டும். மன ஒருமைப்பாடே எல்லாவற்றின் சாரமாகும்.

மனம் குவியாமல் ஒரு செயற்பாட்டையும் செய்ய முடியாது.

வாழ்வில் உயர்ந்த எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

'ரிதம்':-
🌷🌷🌷🌷
பிரபஞ்சம் மாறாத ஒழுங்கு முறையில் இயங்கிகொண்டுஇருக்கின்றது.

இந்த ஒழுங்கு முறையே ரிதம்.

இதனை புரிந்துகொண்டு வாழும் போது இயற்கை நமக்கு அனுகூலமாக அமைகின்றது.

உண்மை:- "
🌷🌷🌷🌷

யாருக்கும் தீமை சொல்லாத சொல்"தவம் :- " புலன்களின் வேகத்தை கட்டுபடுத்தல்

"தமம் :- "
🌷🌷🌷🌷

புலக்கட்டுப்பாடு.

புலன்களை அலையவிட்டு அதற்கு பின்னால் செல்பவன் அழிகின்றான்.

"சமம்:-
🌷🌷🌷

" மனம் பதபதப்பின்றி அமைதியாக இருத்தல்"

வேள்விகள் :-
🌷🌷🌷🌷🌷

" பிரபஞ்சத்தில் இருந்து நாம் திருப்பி கொடுக்கும் வண்ணம் தமது வாழ்க்கையை அமைத்துகொள்ளல்.

1 . தேவயக்ஞம் :- தேவர்களுக்கு கொடுத்தல்

2 . ரிஷியக்ஞம் :- முனிவர்களுக்கு கொடுத்தல்.

3 . பித்துருயக்ஞம் :- இறந்தவர்களுக்கு கொடுத்தல்

4 . நரயக்ஞம்:- மனிதர்களுக்கு கொடுத்தல்

5 . பூதயக்ஞம்:- மிருகங்களுக்கு கொடுத்தல்

ஸத்யம் வத தர்மம் சர ஸத்யான ப்ரமதி தவ்யம், தர்மான்ன ப்ரமதிதவ்யம், ஸ்வாதய நப்ரமதிதவ்யம் மாத்ருதேவா பவ"

என்னும் உபநிடத கருத்து வெளிப்படுத்தும் விழுமியக் கருத்துக்களவான....

உண்மை பேசுக,

ஆறாம் செய்க,

சத்தியத்திலிருந்தும், தர்மத்திலிருந்தும் நல்லதிலிருந்தும், நல்ல செயல்களிலிருந்தும் விலகி செல்லற்க.

தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் தெய்வமாக கருதுக.

குற்றமற்ற செயல்களை செய்வதாக,

தகாதவற்றை செய்யற்க.

உங்களுக்கான நல்ல செயல்களை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

அல்லாதவற்றை ஒதுக்குதல் வேண்டும்.

மேலும் பெரியோர்களும், ஆசிரியர்களும் செய்யும் செயல்களில் நன்மையையும், தீமையையும் விமர்சித்து நல்லதே செய்ய வேண்டும்.

நல்லசிந்தனையாளர்களும், அனுபவசாலிகளும், சுதந்திரமானவர்களும்,அமைதியானவர்களும், அறச்சார்புடையோர்களும் ஆன அந்தணர்கள் செய்வதை முனைப்புடன் செய்வது நல்லது எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வித்தியாசப்பியாசம் செய்து நல்லொழுக்க சீலனாக உருவாகும் நபர் பிரம்ம வித்தையை பெறுவதற்கு தகுதியானவராகிவிடுவார்.

பிரம்மத்தை அடைகின்றவன் பரமபதத்தை அடைகின்றான்.

( ப்ரஹமவிதாப்னோதிபரம் ) " ஸத்யம் ஞான மனர்த்தம் ப்ரஹம்" பிரம்மம் என்பது சத்தியமும் ஞானமும்,முடிவுற்றதும் ஆகும்.

பிரம்மம் அல்லாதது எதுவுமில்லை என்பதால் அதுதான் வாழ்கையின் அடித்தளம்.

✍ நன்றி..... சிவ வாக்கியர் அய்யா.... நன்றி

✍ என்னுள் உறங்கிக் கொண்டிருந்த..... உபநிடத @ களஞ்சியக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்ததற்காக.... மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.... நன்றி அய்யா...


☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

🌹 அன்புடன் பகிர்வது
🌹சி. மதியழகன் [ cemaharvestar@gmail.com ]
🌹 பட்டதாரி ஆசிரியர்
🌹 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
🌹 வாழப்பாடி
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

Tuesday, March 20, 2018

பஞ்ச அங்கம் (பஞ்சாங்கம் ) நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!


நண்பர்களே! பஞ்ச அங்கம் (பஞ்சாங்கம் ) பார்க்க வேறு எங்கும் செல்ல வேண்டாம். 
Image result for பஞ்சாங்கம்Image result for பஞ்சாங்கம்

இதோ தங்களுக்கு எனது மறு பகிர்வு 

☘☘☘☘☘☘☘☘☘☘

நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

☘☘☘☘☘☘☘☘☘☘

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் 

🌷புதுமனை புகுதல்,

🌷காதுகுத்துதல், 

🌷திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். 

அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். 

ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். 

மேல்நோக்கு நாள்,அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?
☘☘☘☘☘☘☘☘

1.நாள் (வாரம்), 

2. திதி, 

3. நட்சத்திரம், 

4. யோகம், 

5. கர்ணம் 

என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். 

இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். 

பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். 

ஞாயிறு, திங்கள்,புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம்,சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. 

செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. 

சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்குஉரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை: 
☘☘☘☘☘☘☘

சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். 

அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். 

வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். 

அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.

திங்கட்கிழமை: 

தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். 

கிருகப் பிரவேசம் நடத்தலாம். 

காதுகுத்துதல், 

பெண் பார்த்தல், 

ருது சாந்திசெய்தல் (சாந்தி முகூர்த்தம்), 

சீமந்தம், 

விருந்து உண்ணல் 

போன்ற விசேஷங்களை செய்யலாம். 

ஆடுமாடு வாங்குதல், 

விதையிடுதல்,

உரமிடல், 

வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: 
☘☘☘☘☘☘☘☘

கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். 

வாங்கிய கடனை அடைத்தல், 

வயலுக்கு உரமிடல், 

செங்கல் சூளைக்குநெருப்பிடுதல் 

ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. 

செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். 

அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

புதன் கிழமை: 
☘☘☘☘☘☘

மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். 

புதிய ஆராய்ச்சி, 

எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். 

வழக்குகள் சம்பந்தமாகவழக்கறிஞரை சந்தித்தல், 

புதுமனை புகுதுல், 

குளம், ஏரி, கிணறு வெட்டுதல், 

நிலத்தை உழுதல், விதையிடுதல், 

அறுவடை செய்தல், 

காது குத்துதல், 

சீமந்தம்,

 விருந்து உண்ணல் 

போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். 

கல்வி, 

கலை 

போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.

வியாழக்கிழமை: 
☘☘☘☘☘☘☘

மேற்குதிசையில் பயணிக்கலாம். 

புதிய பணியில் சேரலாம். 

வங்கிப் பணிகள் கவனித்தல், 

பெரிய மனிதர்களை சந்தித்தல்,

சீமந்தம், 

ருது சாந்தி, 

காது குத்துதல், 

கிருகப் பிரவேசம், 

விவசாயம்சம்பந்தப்பட்ட பணிகள் 

இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.

வெள்ளிக்கிழமை: 
☘☘☘☘☘☘☘

வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். 

பெண்பார்க்கச் செல்லலாம். 

காது குத்துதல், 

சாந்தி முகூர்த்தம், 

புதிய வாகனங்கள் வாங்குதல், 

நிலத்தினை உழுதல், 

உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.

சனிக்கிழமை: 
☘☘☘☘☘☘

தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். 

பூமிதொடர்பான விஷயங்கள் அதாவது 

வீடு, 

நிலம், 

மனை வாங்குதல்,

விற்றல் போன்ற செயல்களுக்கும், 

இயந்திரங்கள் வாங்குதல் 

போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்;

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். 

சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. 

சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு
☘☘☘☘

பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம்,கேட்டை, பூரட்டாதி

திங்கள்
☘☘☘☘☘

சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம்,பூரட்டாதி

செவ்வாய் 
☘☘☘☘

உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம்,சதயம்

புதன்
☘☘☘☘

அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம்,அவிட்டம்


வியாழன்
☘☘☘☘

கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி


வெள்ளி
☘☘☘☘

பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம்,அனுஷம், அவிட்டம்


சனி
☘☘☘☘

ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி

ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.

திதிகள்: 
☘☘☘☘

திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம்.

குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

1. பிரதமை, 

2. துவிதியை, 

3. திருதியை, 

4. சதுர்த்தி, 

5. பஞ்சமி, 

6. சஷ்டி, 

7.சப்தமி, 

8. அஷ்டமி, 

9. நவமி, 

10. தசமி, 

11. ஏகாதசி, 

12. துவாதசி, 

13.திரயோதசி, 

14. சதுர்த்தசி, 

15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம்15 திதிகள் உள்ளன. 

அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். 

அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள்: 
☘☘☘☘☘☘☘☘☘

ஞாயிறு - அஷ்டமி, 

திங்கள்-நவமி, 

செவ்வாய்-சஷ்டி, 

புதன்-திரிதியை; 

வியாழன்-ஏகாதசி, 

வெள்ளி-திரயோதசி, 

சனி-சதுர்த்தசி திதி. 

இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்லகாரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.

சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:
☘☘☘☘☘☘☘☘☘☘

ஞாயிறு-சதுர்த்தசி, 

திங்கள்-சஷ்டி, 

செவ்வாய்-சப்தமி, 

புதன்-துவிதியை, 

வியாழன்-அஷ்டமி, 

வெள்ளி-நவமி, 

சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். 

ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள்பலன் அளிக்காது. 

வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. 

இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.

வளர்பிறை காலம் : 
☘☘☘☘☘☘☘

அஷ்டமி, 

நவமி, 

தசமி, 

ஏகாதசி, 

துவாதசி,

திரயோதசி திதிகள்.

தேய்பிறை காலம் : 
☘☘☘☘☘☘☘

துவிதியை,

திரிதியை, 

சதுர்த்தி, 

பஞ்சமி, 

சஷ்டி,

சப்தமி திதிகள்.

ஒரு கண்ணுள்ள திதிகள்: 
☘☘☘☘☘☘☘☘☘☘

வளர்பிறை, 

தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. 

அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. 

எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. 

அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
☘☘☘☘☘☘☘☘☘

வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி .....

பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்:
☘☘☘☘☘☘☘☘☘☘

வளர்பிறை, 

தேய்பிறை 

ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர்.

அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும்,அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். 

இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.

நட்சத்திர பலன்கள்: 
☘☘☘☘☘☘☘☘

பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். 

காரணம், ஜோதிடரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். 

அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. 

தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. 

திருவாதிரை,

 பரணி,

கார்த்திகை, 

ஆயில்யம், 

பூரம், 

பூராடம், 

பூரட்டாதி, 

கேட்டை, 

விசாகம்,

சுவாதி, 

சித்திரை, 

மகம் 

ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

அதே நாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. 

கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.

யோகங்கள்: 
☘☘☘☘☘☘☘☘

பொதுவாக பலருக்கும் தெரிந்தது 

அமிர்தயோகம்,

சித்தயோகம், 

மரணயோகம் 

எனும் மூன்று யோகங்கள். 

இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. 

பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும். 

அசுவினி-புதன்,

மிருகசீரிஷம்-வியாழன், 

பூசம்-வெள்ளி, 

சித்திரை-சனி, 

அனுஷம்-ஞாயிறு,

மூலம்-புதன், 

உத்திராடம்-திங்கள், 

திருவோணம்-வெள்ளி 

இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

ராகுகாலம்: 
☘☘☘☘☘


சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள்.

ஒவ்வொரு நாளிலும் சுமார்ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. 

ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். 

கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ராகுகாலம் என்று எப்போது?
☘☘☘☘☘☘☘☘☘☘

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை

திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை

செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை

புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.

வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை

வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை

சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்
☘☘☘☘☘

எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. 

எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும்.

இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். 

பகலில் வரும் எமகண்டநேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். 

இங்கே ஒவ்வொரு நாளிலும் இருவேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...

கிழமை பகல் நேரம் இரவு நேரம்
☘☘☘☘☘☘☘☘☘☘

ஞாயிறு 12.00-1.30 6.00-7.30

திங்கள் 10.30-12.00 3.00-4.30

செவ்வாய் 9.00-10.30 1.30-3.00

புதன் 7.30-9.00 12.00-1.30

வியாழ 6.00-7.30 10.30-12.00

வெள்ளி 3.00-4.30 9.00-10.30

சனி 1.30-3.00 7.30-9.00

குளிகன் அல்லது குளிகை காலம்: 
☘☘☘☘☘☘☘☘☘☘

குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். 

அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். 

தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். 

குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். 

ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. 

எனவே அசுபகாரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.

கரிநாள்: 
☘☘☘☘

ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். 

இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்
☘☘☘☘☘☘

சித்திரை 6, 15

வைகாசி 7, 16, 17

ஆனி 1, 6

ஆடி 2, 10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 10, 17

மார்கழி 6, 9, 11

தை 1, 2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 5, 19

வாரசூலை: 
☘☘☘☘☘

வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். 

வாரசூலையை 

நிருவாணி சூலம் என்றும் 

களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. 

பகலில்வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. 

வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. 

அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். 

வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். 

சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.

தின ஓரையில் பயன்கள்: 
☘☘☘☘☘☘☘☘☘

ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். 

அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். 

எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. 

உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. 

அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. 

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. 

இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. 

ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. 

மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.

சூரிய ஓரை: 
☘☘☘☘☘☘

விண்ணப்பம் செய்ய, 

அதிகாரிகளை சந்தித்தல்,

மருந்துண்ணல், 

சொத்துப் பிரிவினை செய்தல், 

வேலைக்கு முயற்சித்தல்,

அரசு அனுமதி பெறுதல், 

பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.

சந்திர ஓரை: 

திருமணத்துக்கு நாள் குறித்தல், 

பெண் பார்த்தல், 

ஆடை ஆபரணம் அணிதல், 

கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், 

தொலைதூரப்பயணம் தொடங்குதல், 

கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஓரை: 

போர்க்கருவிகள் செய்தல், 

வாகனங்கள் பழுது பார்த்தல், 

போர் தொடுத்தால், 

வீடு மனை நிலம் வாங்குதல், 
விற்றல்,

மருந்துண்ணல், 

ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். 

சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

புதன் ஓரை: 

ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல்,

தேர்வு எழுதுதல்,

போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், 

கடிதத் தொடர்பு கொள்ளுதல், 

புதிய பொருள்களை வாங்குதல், 

புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.

குரு ஓரை: 
☘☘☘☘☘☘

புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், 

சேமிக்கத் தொடங்குதல், 

வர்த்தகக் கொள்முதல் செய்தல், 

விதை விதைத்தல்,

நாற்று நடுதல், 

குரு உபதேசம் செய்தல், 

பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஓரை: 

கலைகளைக் கற்கத் தொடங்குதல், 

திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், 

காதல் புரிதல், 

மருந்துண்ணல்,

பொருள் சேர்த்தல், 

கடன் வசூல் செய்தல், 

புதிய ஆடை ஆபரணம்அணிதல் செய்யலாம்.

சனி ஓரை: 

உழுதல், 

எருவிடுதல், 

இரும்பு, 

மின்சாதனங்களை வாங்குதல்,

தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், 

பயணம் செய்தல் 


போன்றவை செய்யலாம்.

சந்திராஷ்டமம்: 

நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. 

அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. 

கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். 

சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். 

அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. 

திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.

(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)

2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும்,திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. 

அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். 

இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18வருடங்களுக்கு ஒரு முறையே வரும். 

மல மாதத்தினை மட்டுமல்லாமல்,மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. 

ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. 

ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.

கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?

1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)


2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.


3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.


4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது4வது விதி.


5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு,மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.


6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.


7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.


8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.


9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமணலக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.


10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.


11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.


12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்துசுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர்குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌷 அன்புடன் பகிர்வது 
🌷சி.மதியழகன் [ cemaharvestar@gmail.com ]
🌷பட்டதாரி ஆசிரியர் 
🌷 அ.ம.மே.நி.பள்ளி, வாழப்பாடி 
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀