Tuesday, May 31, 2016

நேரடி வழிபாடு

தேவாரங்களில் சில வகைகள் உண்டு.

Late Jaybee ayya ...
https://jaybeesnotebook.blogspot.com/2012/01/personal-worship-1.html

நேரடி வழிபாடு
ஐயம் தெளிதல்

 2003-ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பல.
அவற்றிற்கு ஏற்ற பதில்களை நானும் தனிப்பட எழுதியனுப்பினேன்.
 பார்க்கும்போது அவை எல்லாருக்குமே பொருந்தும், பயன்படும் என்று நிச்சயமாகத்
தோன்றுவதால் அவற்றில் இரண்டு மடல்களில் கண்டுள்ள சாராம்சத்தை இங்கே இட்டிருக்கிறேன்.
 இது முதல் மடல்.....


  கிரகங்களின் விஷேச கூட்டமைப்புக் கொண்ட நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யலாம்.
 ஆனாலும் பொதுவாக எந்த நேரத்திலும் வழிபாடு செய்யலாம். அதில் சில நேரங்களில்
செய்வது இன்னும் ஆற்றல்வாய்ந்த வழிபாடாக இருக்கும். மந்திர வழிபாட்டில் இது முக்கியமாகக் கருதப்பட்டிருக்கிறது.
 உங்களுக்கென்று  சொந்த வழிபாட்டுக்குத் தேவாரப் பாடல்களைத்
தேர்ந்தெடுக்கலாம்.
 கந்தர் ஷஷ்டி கவசத்துக்கு மிகுந்த ஆற்றல் இருக்கிறது. காரியசித்தி மாலைக்கும் சில
பிரயோக முறைகள் இருக்கின்றன.

தேவாரங்களில் சில வகைகள் உண்டு.

சரணாகதி தேவாரம்.
இறைவனை வழுத்தும் தேவாரம்
வரம் கேட்கும் தேவாரம்
துயர்தீர்க்கும் தேவாரம்
இறைவனுடன் நேரடியாகப் பேசும் தேவாரம்
பயம் தீர்க்கும் தேவாரம்
கோபம் தீர்க்கும் தேவாரம்
பாவம் தீர்க்கும் தேவாரம்
பழிதீர்க்கும் தேவாரம்
தோஷம் தீர்க்கும் தேவாரம்
பகைவெல்லும் தேவாரம்
பகைதீர்க்கும் தேவாரம்

இப்படி இருக்கின்றன.

 பணம் வேண்டுமானால் இடரினும் தளரினும் படிப்பார்கள். நெடுங்களத் திருப்பதிகம்
இடர்தீர்க்கும் தேவாரம்.
 அர்ச்சனைக்குரிய தேவாரம் - போற்றித் திருத்தாண்டகம்.

 நேரடி வழிபாடு என்னும் மடலின் இரண்டாம் பாகம் இது.  கேள்வி பதிலாக அமைந்துள்ளது.

Date: Thu, 01 May 2003 18:58:26 +0000
From: jaybee

At 09:19 AM 4/30/2003 -0700, you wrote:
கேள்வி: சரணாகதி தேவாரம் எவையெவை?

பதில்: நான் எழுதியிருக்கும் நான்கும் சரணாகதி வகையைச் சேர்ந்தவைதாம். 'ப்ரபத்தி' என்றும் சொல்வார்கள். இதே போன்றவை நிறைய இருக்கின்றன.

கேள்வி: அதே போல இறைவனுடன் நேரடியாகப் பேசும் தேவாரம் எவை?

பதில்: இந்த வகையிலும் பல இருக்கின்றன. அப்பருடைய தேவாரங்களில் பலவற்றில் அவர் நேரடியாக இறைவனுடன் பேசுவதைக் காணலாம்.

கேள்வி: ஆனால் இறைவனுடன் நேரடியாகப்பேசும் தேவாரம் பாடுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா?

பதில்: இறைவனுடன் நேரடியாக எல்லாருமே பேசவேண்டும் என்பதால்தான் அந்தப் பாடல்களை அப்பர் போன்றவர்கள் பாடியிருக்கிறார்கள். பாடவேண்டும் என்று நினைக்கும்போதே அந்தத் தகுதி ஏற்பட்டுவிடுகிறது.

"Our Father which art in Heaven
Hallowed be Thy Name"....

என்னும் பொழுது இறைவனுடன் நேரடியாகப் பேசவில்லையா?
'Sermon of Mount' என்னும் மலைப் பிரசங்கத்தின்போது ஓர் ஆள், ஏசு பெருமானிடம் 'எப்படி இறைவனைத் தொழுவது?' என்று கேட்டதற்கு அவர் இந்த 'Lord's Paryer'-ஐச் சொல்லிக்
கொடுப்பார். 'தம்பிரான் வணக்கம்' என்று தமிழில் சொல்வார்கள்.

 Doa Selamat போன்ற பிரார்த்தனைகள் இறைவனிடம் நேரடியாகப் பேசுவதாய் அமைந்தவைதாம்.

கேள்வி: >எதாவது ஆச்சாரங்களை நான் கடைப்பிடிக்க வேண்டுமா?

பதில்: மனதில் நினைப்பதே ஒரு நல்லாசாரம்தான். அதைவிட ஆசாரம் என்ன இருக்கப்போகிறது?
 அப்பர் தேவாரத்திலுள்ள 'காயமே கோயிலாக' போன்ற பாடல்கள் மனதிலேயே இறைவனை
ஆவாஹணம் செய்து ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதைக் குறிப்பவைதாம்.

திருமூலர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்:

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்

 வேதத்தின் சாரமெல்லாம் என்ன?

சத்யம் வச: தர்மம் சர!

சத்தியத்தைப்பேசு; தர்மத்தில் நட!

 அதுதான் ஆசாரம் அனுஷ்டானமெல்லாம்:-)
>
கேள்வி: கந்த சஷ்டி கவசம் சொல்லுவதற்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டும்.

பதில்: முருகனை நினைத்துக்கொண்டு ஷடாட்சரத்தைச் சொல்லிக்கொண்டு பாராயணம் பண்ண வேண்டியதுதான்.
 செவ்வாய்க்கிழமை மாலை, வள்ளிதெய்வயானையுடன் ஆறுமுகம் பன்னிருகையுடன் மயில்மீது வீற்றிருக்கும் படத்தை வைத்து வழிபடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் தேன் வைத்து, மலர்கள் போட்டு, கவச பாராயணம் செய்யலாம். இது ஒரு சுலபமான வழிபாடு.

 இதுவும் அதற்குரிய படம்தான் -

என்னுடைய ·பேஸ்புக்கில் அந்தப் படம் உண்டு.

கேள்வி: >அதே போல காரிய சித்தி >மாலையை பாடுவதென்றால் என்ன செய்ய வேண்டும். என்ன மாதிரியான முறைகளை செய்ய வேண்டும்.

பதில்: ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் எட்டு நாளைக்கு மூன்று வேளை படிக்கவேண்டும்.
சதுர்த்தியன்று எட்டுமுறை படிக்கலாம். இதுவும் பலன் பெறவேண்டி, செய்யும்முறைதான்.
 சும்மாவும் படிக்கலாம்.

>கேள்வி: கடவுளிடம், அதைத்தா, இதை செய் என்று கேட்பது நல்லதா என்று தெரியவில்லை.

பதில்: அதற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

"Give us this day, our daily bread"
"Ask and it shall be given unto you"

"இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளுமாறு,
ஈவதொன்று எமக்கில்லையேல்?
அதுவோ உனது இன்னருள்,
ஆவடுதுறை அரனே?"

   -திருஞானசம்பந்தர்

கேள்வி: >கூடவே, எனக்கு எதெல்லாம் நல்லது என்று தெரியாது. நல்லதை செய்யும் பொறுப்பை அவரிடமே விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். :)

பதில்: அதுவும் நல்லதுதான்.

மாணிக்கவாசகர் சொல்வது போல்:

அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே!
நன்றே பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே?

>கேள்வி: அதனால்தான், கோவிலில் கடவுளை வணங்கி வேண்டுதல் விடுப்பது சரிதானா? Is it advisable என்ற கேள்விகள் எழுகின்றன.

பதில்: கேட்கவேண்டியதைக் கேட்டும் பெறலாம்.

 அம்பாளிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்ட அபிராமி பட்டர், 'கலையாத கல்வியும் குலையாத செல்வமும் கபடு வராத நட்பும்' என்று பதினாறு பேற்றையும் பட்டியலிட்டுக் கேட்கிறார்:-)
 அவர்களே பாதையையும் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

Monday, May 30, 2016

தச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்

தச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்


தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் – அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் “நானே” காரணம் என்றார். ‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்க வைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும்  நிறைந்தவள்.

3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள்.  மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள்.  அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடப்படுவதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில்  வரிசைப்படுத்தியுள்ளேன்.

மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளியவடிவமே இது.

தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.  இந்த நவதானியங்களில் அரிசி, கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

–குருவிற்கு நன்றி

Thursday, May 26, 2016

தோப்புக்கரணம் [ Super Brain Yoga ]

தோப்புக்கரணம்.....

நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்....,

படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் “தோப்புக்கரணம்”


தோப்புக்கரணத்தின் பயன்கள்.. மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன நாடிகள் சுத்தம் பெறுகின்றன.


நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.

தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும். தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை
விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
 இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் –  மூலாதாரத்தில் - சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை

செய்முறை:
.

முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்கவேண்டும்.

இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு..

மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு..

பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.

இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்..
இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம்.

இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான்.......

சந்தேகமெனில் youtube- ல் super brain yoga என்று தேடிப்பாருங்கள் விடயம்
உங்களுக்கே புரியும






There are doing , Why can we start Now ....

Wednesday, May 25, 2016

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார் ?

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

bala

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 9

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி***

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார்? என்ற கேள்விக்கு முதலில் எளியோன் அறிந்தவரை பதிலளிக்க விரும்புகிறேன்!

ஷோடசி மஹாமந்த்ரா எனும் 16 பீஜங்களுடைய மந்திரம் பதினாறு வயதினளாம் திரிபுரசுந்தரி எனும் முப்புர அழகிக்கும், நவாக்ஷரி எனும் 9 பீஜ மந்திரம் அழகிய வாலை எனும் பாலா திரிபுரசுந்தரிக்கும் உறியது ஆகும். அப்படியானால் அம்பிகையின் வயதுக்கு ஒரு பீஜமோ!

தச மஹாவித்யை தேவியர்கள் 1. காலீ(ளீ) 2. தாராதேவி, 3. திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி தேவி, 4. புவனேஸ்வரி தேவி, 5. பைரவி தேவி, 6. சின்னமாஸ்தா தேவி, 7. தூமவதி தேவி, 8.பகளாமுகி தேவி, 9. மாதங்கி தேவி மற்றும் 10. கமலா தேவி என க்ரந்தங்கள் விளக்குகின்றன!

இவற்றில் மூன்றாவதாக குறிப்பிட்ட திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி, ஆதி-பரா-சக்தி, மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீ லலிதாம்பா, ராஜராஜேஸ்வரிதேவி, மற்றும் தந்த்ர பார்வதிதேவி எனவும் அறியப்படுகிறது.

குஹ்ய-அதிகுஹ்ய தந்திரம் எனும் நூலில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மூலாதாரமே இந்த தச மஹா வித்யை தேவியர் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஷோடஸியாக 16 வயதினளாகவும், 16 பீஜங்கள் கொண்ட மந்திரத்தின் ஸ்வரூபமாகவும், 16 குணமுடையவளாகவும் விளக்கப்படுகிறது.  இந்த தேவியை ஆராதிக்கும் முறைக்கே ஸ்ரீவித்யா எனவும், ஆராதிப்பவர் சிவனாக மட்டுமே இருக்கமுடியும் என்றும், அதுவே அம்மனிதரின் கடைசி பிறப்பாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி ஒரு க்ரந்தத்தில், காமாட்சி அம்மனே சுகுணாத்மிக த்ரிசக்தியாக அவதரித்து தனது திருவாயால் ‘க’ என உச்சரித்து தனது இடது கண்ணிலிருந்து ப்ரம்மனையும், ‘ஆ’ என உச்சரித்து வலது கண்ணிலிருந்து விஷ்ணுவையும், ‘ம’ என உச்சரித்து தனது நெற்றிக்கண்ணிலிருந்து மஹாதேவனையும் குழந்தைகளாக உருவாக்கினாள் என்றும், குழந்தை ப்ரம்மனுக்கு “ஷ்ருஷ்டி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை விஷ்ணுவிற்கு “ஸ்திதி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை மஹாதேவனுக்கு “லய வித்யாத்மிக” க்ஷீரத்தையும் புகட்டினாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கண் என்பதையும், காம என்பதையும் சேர்த்து காமாட்சி என அழைத்தனரோ!

இதே க்ரந்தத்தில் கன்யகா பரமேஸ்வரி தேவியான காமாட்சி, திரிபுரசுந்தரியாக அவதரித்து பந்தகாசுரனை கண்டவுடன் கோபம் கொண்டு அஷ்டதஸ புஜ அல்லது 18 கைகளும் சக்ரம் முதலிய ஆயுதங்களும் தரித்து மும்மூர்த்திகள், தேவர்கள் முன்னிலையில் தனது ஒரு காலை அசுரனின் இதயத்திலும், மற்றொரு காலை அசுரனின் களுத்தினிலும் வைத்து அவனை மிதித்து அவனது தலையை இருகைகளினாலும் பிடித்து க்ஷணத்தில் அவனை அழித்தாள் எனவும், அவனது மகன்கள், உறவுகள் அனைத்தயும் நிர்மூலமாக்கியபின், அசுரனின் உடலை பாலாம்பிகா ரூபத்தில் சர்வாலங்கிருதளாய், இழுத்து வந்தாள் என்கிறது.

இன்னொரு க்ரந்தத்திலோ, அன்னையை நோக்கி பல ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் செய்தபொழுது, ஹோம அக்னியிலிருந்து பாலா ரூபத்தில் “ஆதிபரை” தர்சனம் கொடுத்து, என்ன வரம் வேண்டும் என கேட்க, ரிஷிகளானவர்கள், அம்பிகையை பலவாரு துதித்து, எங்களுக்கு சம்பூரண அஷ்ட மஹா சித்திகளை அருளவேண்டும் என்றும், அம்பிகையே உன்னை இந்த ரூபத்தில் வழிபடும் யாவர்க்கும் அவர் அவர் கோரியதை அனுக்ரஹிக்க வேண்டும் என வேண்டினராம். “அவ்வாரே” என்று அம்பிகை அருளினாளாம்!

லலிதா ரஹஸ்ய சஹஸ்ரமோ, தனது 965 வது நாமத்தில் “பாலா” எனவும், தனது 966 வது நாமத்தில் லீலாவினோதினி எனவும் பரப்ரம்ம ஸ்வரூபிணியை குழந்தையாக சொல்கிறது. இதன் 74 ஆவது வரியில், பண்டாசுரனின் 30 மகன்களையும் பாலாம்பிகா அழித்தாள் (பண்டபுத்ர வதோத்யுக்தா பாலா விக்ரம நந்திதா) என தெரிவிக்கிறது

 இன்னும் பல க்ரந்தங்களில் பாலாம்பிகை வ்ருத்தங்கள் உளது.

இங்கு காரணமாகவே க்ரந்தங்களின் பெயர் வெளியிடவில்லை. இவை எல்லம் விட ஒரு முக்கிய விஷயம் நினைவில் நிற்க!

அன்னை பாலாம்பிகையின் மந்திர சித்தி இல்லாமல், ஸ்ரீ சக்ர உபாஸனை செய்யக்கூடாது என்பது விதியாகும்.

அம்பிகை பாலாவின் மந்திரங்கள் எப்படி வின்யாசம் செய்யப்பட்டுள்ளது க்ரந்தங்களில் என்றும், அந்த மந்திரங்களின் மகிமைகளையும் அம்பிகையின் ஆராதனை முறைகளையும் அடுத்தபதிவில்.



|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்***

இவ்வெளியோன் அறிந்தவரையில் இந்த மந்திரம் மிக பலமானது மிக சுகமானது! இதை இவ்வெளியோனுக்கு தங்கவண்ண கும்பமுனி பலகாலங்களுக்கு முன் கருணையுற்று அருளியதாகும். இதன் பயனோ என்னவோ ஆதிபரையின் பேருளால் பல பல நன்மைகள் இவ்வெளியோனுக்கு சித்தித்தது. இதை அவர்தம் பொற்பாதம் பணிந்து, அவர் அனுமதியின் காண் இங்கு வெளியிடுகிறேன் அனுஷ்டித்து நலம் பெருவீரே!

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ: ஆகச்ச ஆகச்ச பாலே, புவனே, பரமேஸ்வரி, பஞ்சாக்ஷரி, ஆனந்தரூபி நம: / ஸ்வாஹ: ||”

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ:” இது மந்த்ரமஹார்ணவாவிலும், மந்த்ர மஹோததியிலும் காணக்கிட்டும் பாலா மந்திரமாகும்.

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ” இப்படி ஒரு மந்த்ர ஸம்புடீகரணத்தை க்ரந்தங்களில் எளியோன் காணவில்லை!

“ஆகச்ச ஆகச்ச” என்றால் வருக வருக (இதய கமலத்தில் அமர்க)

“பாலே” எனும்பொழுது, பாலாம்பிகை தேவியையும்,

“புவனே” எனும்பொழுது, த்ரிபுவன அரசியாம் திரிபுரசுந்தரியையும்,

“பரமேஸ்வரி” எனும்பொழுது ஆதிபரையையும்,

“பஞ்சாட்சரி” எனும்பொழுது தந்த்ர பார்வதியாம் ஆதிசக்தியையும்,

“ஆனந்தரூபி” எனும்பொழுது ஸ்ரீ லலிதாம்பிகையும் குறிக்கிறது.

உருவிடும்பொழுது நம: என்றும், ஹோமிக்கும்போது ஸ்வாஹ: என்றும் சொல்லவும்.

ஆக ஓரே மந்திரத்தின் மூலம் அம்பிகையின் எல்லா ஸ்வரூபங்களையும் சித்தித்து கொள்கிறோம் அல்லவா! கும்பமுனியின் கருணைக்கு அளவேது! (கும்பமுனி – அகத்தியர்)

இம்மந்திரத்தை தேகசுத்தியுடன், செம்பட்டுடுத்தி, நீரு பூண்டு காலையும் மாலையும் தீபமேற்றி, கிழக்கு முகமாக அமர்ந்து 1008 முறை உருவிட, பின்னர், பாலும், கல்கண்டு, பேரீச்சம்பழம் நிவேதனம் செய்து நிவேதித்த. ப்ரசாதத்தை உட்கொள்ள. சித்தியாகும் வரை நிஷ்டையுடன் அனுஷ்டிக்க.

இந்த வழிபாட்டுக்கு தேவையான மாத்ருகா ந்யாசம்,யந்திரம்யந்திர பூஜா, ஆவரண பூஜா விதானமும்,விரிவான வழிபாடு, புரஸ்சரண விதியும், முறையும்தொடர்புகொள்பவர்க்குவழங்கப்படும் என்பதைபணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்


“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 11

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2***

பரமேஸ்வரன், பரமேஸ்வரியுடன் தனிமையிலிருக்கையில், பரமேஸ்வரிக்கு கீழ்க்கண்டவண்ணம் அருள்கிறார்.

இப்பொழுது ஸ்ரீ பாலா வித்யை பற்றி சொல்கிறேன்! இந்த மந்திரத்தை ஸேவை செய்யும் உபாஸகன், வித்யையில் ப்ரஹஸ்பதிக்கு சமமானவாகவும், தன சம்பத்தில் குபேரனுக்கு சமமானவனாகவும் ஆகிறான்!

இந்த மந்திரமானது “ஐம் க்லீம் சௌ:” எனும் முப்பீஜ மந்திரமாகும். இதற்கு பராசக்தி தேவியின் சாபம் மற்றும் கீலனம் உளது. அதுகாண் இது சித்தியாகாது. இதை சாபோத்தாரணம் மற்றும் உத்கீலனம் செய்தே உபயோகிக்கவேண்டும்.

இப்பொழுது சாப விமோசனா மந்திரத்தை விவரிக்கிறேன்!

“ஐம் ஐம் சௌ: க்லீம் க்லீம் ஐம் சௌ: சௌ: க்லீம்”. இது ஒன்பது பீஜங்களை கொண்டது ஆகும், இதை 108 முறை உச்சரிக்க, பாலா திரிபுரசுந்தரி மந்திரம் சாப விமோசனம் அடைகிறது.

இனி உத்கீலனா மந்திரத்தை கவனிப்போம்! “ஓம் க்லீம் நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க, மந்திரம் உத்கீலனமாகிறது.

சாபம் மற்றும் கீலனத்தால் ப்ரகாஸமிழந்த மந்திரத்தை ப்ரகாசிக்க செய்யவேண்டிய தீபான மந்திரமும் விதியும் உபதேஸிக்கிறேன்.

“ஐம்” எனும் பீஜத்தை ப்ரகாஸிக்க “வத வத வாக்வாதினி ஐம்” எனும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.

“க்லின்னே க்லேதினி மஹாக்ஷோபம் குரு” எனும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து “க்லீம்” எனும் காமராஜ பீஜத்தை தீபானம் செய்யவும்.

“ஓம் மோக்ஷம் குரு” என 108 முறை ஜெபித்து “சௌ:” எனும் பீஜத்தை ப்ரகாசிக்க செய்யவும்.

இப்படியாக சாப மோக்ஷம், உத்கீலனம் தீபானம் செய்தபின் புரஸ்சரணம் செய்துகொள்ளவும்

அடுத்த பதிவில் வினியோகம், ந்யாசங்கள், த்யானங்கள் இத்யாதி!


***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 3***

*** வாலை வணக்கம்***

முப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும், ஸ்ரீ பாலாதேவிக்குமுள்ள
அபேதம் கூறப்படுகின்றது:-

1.ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்
       
உந்தனித யத்திலுயர
   
இந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென
       
இருபுருவ நடுவில்வளர
   
சந்திரனின் பாலொளிச் சௌமியத் தண்சுடர்
       
சுந்தரிநின் சிரசில்விரிய
   
வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு
       
வாலைதிரி புரையழகியே!

ஐந்தரி – அழகுற்றவள், முந்துரவி – உதயசூரியன்; இந்திரவில் – வானவில்; சௌமிய – சாந்தமான.
ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியின் மந்த்ர மஹிமை இம்முதற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. உதய சூரியனின் சிவந்த காந்தியோடு அநாஹத பத்மம் எனும்ஹ்ருதயத்தில் “ ஐம் ” என்ற ஒலி வடிவத்தோடும், நெற்றி நடுவில் இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஜ்ஞா சக்ரத்தில் பல வண்ணங்களோடு தோன்றும் வானவில்லின் ஒளியோடு “ க்லீம் ” என்ற ஒலி வடிவத்தோடும்,த்வாதசாந்த பத்மம் என்கின்ற சிரஸின் உச்சியில் சந்திரிகையின் வெண்மையான தேஜஸை பரவச்செய்யும் “ ஸௌ” என்ற ஒலி வடிவத்தோடும் கூடிய த்ர்யக்ஷரி மந்த்ரமாகும் மூன்று பீஜங்களின் வடிவாக விளங்குகின்ற ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரி தேவியே நீ அருள்புரிவாயாக.

[கோடி சூரியனின் அருணப் பிரகாசத்தோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையில் வாக்பவ பீஜமாகின்ற முதல் பீஜமும், அநாஹதம் முதல் ஆஜ்ஞை வரையில் வானவில்லையொத்த பல வர்ணங்களோடு கூடிய காமராஜ பீஜமாகின்ற இரண்டாவது பீஜமும்,ஆஜ்ஞையிலிருந்து ஸஹஸ்ராரம் வரையில் பூர்ணசந்திரனின் வெண்காந்தியோடு கூடிய சக்தி பீஜமாகின்ற மூன்றாவது பீஜமும் வ்யாபித்துவிளங்குகிறது என்பதும் இப்பாவின் கருத்தாகும்.]

****

அஷ்டகோண யந்த்ரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாதேவியிடம் வரமருள விண்ணப்பம்:-

2.அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை
       
ஆதிபரைகோணமொன்றின்
   
நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக
       
நங்கைசிவ மங்கைபரையே
   
மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்
       
மங்கலை சிவானந்தியே
   
இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு
       
வாலைதிரி புரையழகியே!

அட்டவிதழ் முளரி – எட்டு இதழ்கள் உள்ள தாமரை; எண்கோண வலயம் – அஷ்டகோண சக்கரம்; ஆதிபரைகோணம் – ஒற்றைக் கோணம் கீழ் நோக்கியுள்ள சக்தி முக்கோணம்; யோக நங்கை – யோகினி; மட்டு – தேன்; அவிழ் – சிந்துகின்ற; கந்தமிகு – மணமுற்ற, இட்டமுடன் – விருப்பமுடன், சிட்டருக்கெளிய – அடியார்களால் எளிதில் அடையப்பெறும்.

இப்பாவில் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் யந்த்ரம் கூறப்பட்டிருப்பதோடு, அடியார்களால் எளிதில் அடையப்பெறும் பாலாதேவி நாட்டமோடு அருள் பாலிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.

****

சோணகமலாசனையான ஸ்ரீ பாலாதேவியின் வர்ணனை:-

 3.மேனியிற்செவ்வாடை வேணியிலிளந்திங்கள்
       
பானுவின்செக்கர்வண்ணம்
   
மோனநகையுலவுசம் மோகனமுகத்திலகு
       
ஞானநயனங்கள்மூன்றும்
   
பாணிநான்கில்அக்க மாலைஏடும்அபய
       
தானகுறிகளுமணிந்த
   
சோணகமலாசனையை பேணினேன்மனதில்திரு
       
வாலைதிரிபுரையழகியே!

பாணி – கரம்; அக்கமாலை – ஸ்படிகாக்ஷமாலை; குறி – முத்திரை; சோணகமலாசனை – செந்தாமரையில் வீற்றிருப்பவள்.

சிவந்த ஆடையை அணிந்து, பிறைச்சந்திரனை முடியிற்சூடி, உதிக்கின்ற சூரியனின் அருணகிரணத்தை வீசுகின்ற உடலழகோடு மூன்றுகண்களும்,ஸ்படிகமாலை, புஸ்தகம், அபய, வர முத்திரைகளைத்தரித்த நான்கு கைகளோடும்கூடிசெந்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியை த்யானிக்கின்றேன்.

****

ஆதி அந்தமிலா ஜ்யோதிர்மயியும், அருணப்ரபை வீசுகின்ற
சிவயோகினியுமான ஸ்ரீ பாலாம்பிகை:-

4.நூதனைநலந்தருச னாதனிபுரந்தரைநி
       
ராமயிபுராரிமெய்யின்
   
பாதிபரசாம்பவிப வானிசிவயோகினிவி
       
நோதினிநிதாந்தகலிகை
   
சோதிமயிசெங்கதிர்க் கோதைபரதேவியாம்
       
ஆதியந்தமிலிவிமலை
   
தீதறுபராபரை வேதமாமுதல்விதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

நூதனி – என்றும் புதியதானவள்: புரந்தரை – கங்கை; நிராமயி – வாதனைகளற்றவள்; புராரி – சிவபெருமான்; நிதாந்தகலிகை – மேன்மையான இளம்பூவரும்பு போன்ற குமரிப்பெண்; செங்கதிர்க்கோதை – அருணப்ப்ரகாசம் வீசும் பாலிகை; ஆதியந்தமிலி – முதலும், முடிவுமற்றவள்.

****

பாலையை வணங்குபவர்கட்கு அஷ்டமா சித்திகளும்
எளிதாகக் கைகூடுவது:-

5.மூலபதுமத்திலொரு முகமாய்மனம்கட்டி
       
முழுசிரத்தையொடுநின்னை
   
சீலமாய்ப்பாவிக்கும் யோகசாதகருக்கு
       
சிரசரோசத்தினின்று
   
கோலநின்மலசுகா தீதபியூடமழை
       
கொட்ட, வாய்க்காதுபோமோ
   
சாலசித்திகளெட்டும்? சாலீனையானதிரு
       
வாலைதிரிபுரையழகியே

மூலபதுமம் – மூலாதாரம்; சீலமாய் – நல்லொழுக்கத்தோடு; சிரசரோசம் – ஸஹஸ்ரார கமலம்; நின்மலசுகாதீத பியூடமழை – குறையிலா பேரின்ப அமுதமழை;
சாலீனை – நாணம் மிகுந்த குமரிப்பெண்.

மூலாதாரத்தில் வாசியையடக்கி ஏகாக்ரமான பாவனையுடன் ஸ்ரீபாலாம்பிகையான உன்னை நல்லொழுக்கம் கைவிடாமல் முழுசிரத்தையோடு த்யானம் செய்கின்ற யோகசாதகர்களுக்குக் குண்டலியின் ஏற்றத்தினால் ஸஹஸ்ரார சக்ரத்திலிருந்து குறையற்ற பேரின்பமயமான அம்ருதமழை கொட்டும்போது எங்ஙனம் அஷ்டமாசித்திகளும் கிடைக்கப்பெறாமல் போகும்?

****

மும்மூன்றாக உள்ளவை அனைத்தும் மூவெழுத்து மந்திரத்தின்
பரிணாமமே என்பது:-

6.முப்பாதமுற்றகா யத்திரியுமுத்தீயும்
       
முத்தேவர்முச்சக்தியும்
   
தப்பாதமூன்றுபுரு டார்த்தமும்வருணமும்
       
முக்காலமுந்நாடியும்
   
முப்பாருமுக்குணமுமூவேதமுச்சுரமும்
       
மும்மூன்றெனானவையெலாம்
   
முப்புரைஅநாதீத தற்பரையுன்வடிவுதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

முப்பாதமுற்ற காயத்திரி – மூன்று வரிகளைக்கொண்ட காயத்ரி மந்த்ரம்
முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற மூன்றுவகை அக்நிகள்.
முத்தேவர் – ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரர்.
முச்சக்தி – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.
மூன்று புருடார்த்தங்கள் – அறம், பொருள், இன்பம்.
வருணங்கள் – ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்கள்.
முந்நாடி – இடை, பிங்களை, சுழுமுனை.
முப்பார் – பூமி, ஸ்வர்கம், பாதாளம்.
முக்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ்.
முச்சுரம் – ஓங்காரத்தின் வடிவங்களான அகாரம், உகாரம், மகாரம்.

இவ்வுலகில் எவையெல்லாம் மும்மூன்றாகத்தோற்றமளிக்கின்றனவோ, அவையெல்லாம் அம்பிகையின் ‘த்ரிபுரை’ என்ற பெயரை அனுசரித்தே விளங்குகின்றன எனும் கருத்தே இப்பாவில் அமைந்திருப்பது.

****

தேவாதிகள் போற்றும் அன்னை தேகாதிகட்குற்ற துன்பங்களை
நீக்கவேண்டும் என்று வேண்டுகோள்:-

7.ஓராதசித்தியொடு மூவாததேசுற்ற
       
யோகாதிவீரர்குழுவும்
   
தேவாதிகளும்முனிவர் ஏகாந்ததவசிகளும்
       
தேடியுனையேத்திமகிழ்வார்
   
தேகாதிகட்குற்ற தீராதவாதனைகள்
       
தானாயுடைந்துபொடிய
   
வைகாதெனைக்காக்க வருவாய்கனிந்துதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

யோகாப்பியாசத்தால் எண்ணற்ற சித்திகளைப்பெற்று மூப்பு, நரை இல்லாத பொலிவுற்ற சித்தர்குழாமும்,தேவாதி பதினெண்கணங்களும், முனிவர்களும்,ஏகாந்தமான நிட்டையில் ஈடுபட்டுள்ள குருமார்களும்உனைத்தேடியடைந்து துதித்து மகிழ்கின்றனர். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படக்கூடிய தீராத வாதனைகளும் தானாகவே அழிந்துவிலகிப்போகும்வண்ணம், சற்றும் தாமதம்செய்யாது எனைக்காக்க மனம் கனிந்து வருவாயாக.

****

அம்பிகையை த்யானிப்பது ஸர்வமங்களங்களையும் அருளும் என்பது:-

8.ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்
       
அருளொளிருமழகுமுகமும்
   
தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்
       
தெளிவொடுன்னுபவர்வாழ்வில்
   
நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி
       
ஞானமும்நலமும்வளரும்
   
ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

ஆயி – அன்னை; மூவெழுத்து ஆதிமந்திரம் – த்ரியக்ஷரி என்ற பாலா மந்த்ரம்; நிட்களை – எங்கும் நிரம்பியிருப்பதால் கூறுபடாதவள்; உன்னுதல் – த்யானித்தல்.

****

(நன்றி: உ.இரா.கிரிதரன்.)

Part 11 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2 , Part 10, Part 9, Part 8, Part 7, Part 6, Part 5, Part 4, Part 3, Part 2, Part 1. தஸ மஹாவித்யா, ஸான்னித்ய ஸ்தவம்,