Thursday, April 28, 2016

சீர்காழி அருகில் 11 ரிஷபவாகன சேவை 11-6-2016

ஶ்ரீ ஆனந்தாஸ்ரம அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ...

மல்லிகார்ஜுன சேவா டிரஸ்ட் மூலம் புராதன சிவதலங்கள் புனரமைப்பு மற்றும் உதவிகள் செய்து வருகிரார்கள். 

இப்போது சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூர் என்னு தலத்தில் 11 ரிஷபவாகன சேவை செய்ய உள்ளார்கள் .






இதற்க்கு நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்களால்  முடிந்த பொருளதவி செய்து இந்த விழாவை சிறப்பிக்க வேணுமாய் கேட்டு கொள்கிறோம்.

இது சம்மந்தமாக தொடர்பு கொள்ள நமது ஶ்ரீ ஞானதாஸன் அவர்களை அனுகவும்.எண் 9840660435.



Wednesday, April 27, 2016

மந்திரம் வகை

மந்திரம்:
மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பலவகை
1 மூல மந்திரம்,
 2. பீச மந்திரம்
 3. பஞ்ச மந்திரம் 
4. சடங்க மந்திரம்,
 5. சங்கிதா மந்திரம், 
6. பத மந்திரம்
7. மாலா மந்திரம், 
8. சம்மேளன மந்திரம்,
 9. காயத்திரி மந்திரம்
10. அசபா மந்திரம்,
 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம் 
12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம், 
14. சாத்திய மந்திரம், 
5. நாம மந்திரம்
16. பிரயோக மந்திரம், 
17. அத்திர மந்திரம்,
 18. விஞ்சை மந்திரம்
19. பசிநீக்கு மந்திரம், 
20. விண்ணியக்க மந்திரம், 
21. வேற்றுரு மந்திரம்
22. துயில் மந்திரம், 
23. திரஸ்கரிணீ மந்திரம், 
24. சட்கர்ம மந்திரம், 
25. அஷ்ட கர்ம மந்திரம்,
 26. பஞ்சகிருத்திய மந்திரம், 
27. அகமருடண மந்திரம்,
28.எகாஷர மந்திரம், 
29. திரயஷரி மந்திரம்,
 30. பட்சாஷார மந்திரம், 
31. சடஷர மந்திரம், 
32. அஷ்டாஷர மந்திரம், 
33. நவாக்கரி மந்திரம், 
34. தசாஷர மந்திரம்,
 35. துவாதசநாம மந்திரம், 
36. பஞ்சதசாக்கரி மந்திரம்
37. சோடஷாஷரி மந்திரம், 
38. தடை மந்திரம்,
 39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம்,
 41. உருத்திர மந்திரம்,
 42. சூக்த மந்திரம்
43. ஆயுள் மந்திரம்,
 44. இருதய மந்திரம்,
 45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம், 
47. துதி மந்திரம்,
 48. உபதேச மந்திரம், 
49. தாரக மந்திரம், 
50. ஜெபசமர்பண மந்திரம்,
 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி 
52. நீலகண்ட மந்திரம் , 
53. மிருத்யுஞ்சய மந்திரம் ,
 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 
55. சரப மந்திரம் , 
56. வீரபத்ர மந்திரம் , 
57. பைரவ மந்திரம் , 
58. விநாயக மந்திரம் , 
59. சண்முக மந்திரம் , 
60. நரசிங்க மந்திரம் ,
61. நவகிரக மந்திரம் , 
62. வாலை மந்திரம் , 
63. புவனை மந்திரம் , 
64. திரிபுரை மந்திரம் , 
65. துர்க்கை மந்திரம், 
66. அசுவாரூடி மந்திரம், 
67. சப்தமாதர் மந்திரம், 
68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 
69. பதினெண் கண மந்திரம், 
70. யோகினியர் மந்திரம், 
71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.


Thank to created in whatapp

Monday, April 25, 2016

கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள் .. !!


Thank to ayya 
கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..!!

இந்த உலகத்தில் பல்வேறு சொற்கள் பல்வேறு உருவங்களில் பல்வேறு நிலைகளில் உலவிக் கொண்டு வருகிறது.
மனிதன் பல்வேறு சொற்களின் அர்த்தங்களை அறிந்தும் - அறியாமலும் பயன்படுத்தி வருகிறான்.
பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.
கடவுளின் பல்வேறு பெயர்கள்:
1. ஆதி
2. பகவன்
3. ஆண்டவன்
4. கடவுள்
5. இறைவன்
6. தெய்வம்
7. அநாதி
8. பிரம்மம்
9. பரம்
10. பூரணம்
இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் முடிந்த அளவு பார்ப்போம்.
══════════════
1. ஆதி
ஆதி என்றால்
முதல் நிலை
மூல நிலை
இருப்பு நிலை
என்று பொருள்.
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,
இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் - ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.

2. பகவன் :
இலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன
இலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள்
பகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள்
பகு + அவன் = பகவன்
அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.
உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள்
அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
══════════════
3. ஆண்டவன் :
ஆண்டு + அவன் = ஆண்டவன்
ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்
ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.
ஆண்டவன் என்றால் விரிந்தவன் எல்லையில்லாதவன் என்று பொருள்.
அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.
ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.
══════════════
4. கடவுள் :
உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி,
உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.
கட + வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.
மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = கடவுள் என்பதாகும்.
5. இறைவன்
இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள்.
அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து - இயக்க நிலை மாறாமல் - இயக்க ஒழுங்கு மாறாமல் - இயக்க விதிப்படி - ஆண்டு கொண்டிருப்பவன் - என்று பொருள்.
══════════════
6.தெய்வம்
உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது
ஒன்று நிகழ்ச்சி நிலை
இரண்டு பொருள் நிலை
1. எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.
2. அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.
உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது.
தேய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.
══════════════
7. அநாதி
அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்
புத்தகம் மேசை மீது இருக்கிறது - மேசை பூமி மீது இருக்கிறது - பூமி வெட்டவெளியில் இருக்கிறது.
புத்தகத்திற்கு மேசை ஆதாரம் - மேசைக்கு பூமி ஆதாரம் - பூமிக்கு வெட்டவெளி ஆதாரம் - வெட்டவெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் - அது அநாதி ஆயிற்று.
அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது.
அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.
கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய் தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
..
8. பிரம்மம் :
பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற பொருள்.
அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.
கடவுள் அழிவில்லாதவர் என்றால் கடவுளைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் அழியக் கூடியது என்று அர்த்தம்.
அதனால் இந்த உலகையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மாயை என்று சொல்லால் குறிப்பிடுகின்றனர். மாயை என்றால் அழியக் கூடியது என்று அர்த்தம்.
══════════════
9. பரம் :
பரம் என்றால் நேர் இல்லாதது, உவமை இல்லாதது, அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது, அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது, என்று பொருள்.
இந்து மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றமடைகிறது.
பரம் + சிவன் = பரமசிவன்
பரம் + சக்தி = பராசக்தி
சிவன் என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலைக்கு மேல் வேறு ஒன்றும் (கடவுள்) இல்லாத காரணத்தினால், பரம் + சிவன் = பரமசிவன், அதாவது பரமசிவனுக்கு மேல் வேறு இருப்பு நிலை (கடவுள்) இல்லை என்று பொருள்.
சக்தி என்றால் இயக்க நிலை என்று பொருள்.
அதாவது இருப்பு நிலை அசைந்து, இயக்க நிலை உருவாகிய அந்த நிலையே முதல் இயக்கநிலை. அதற்கு முன்பு இயக்க நிலை கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + சக்தி =பராசக்தி என்பதாகும்.
கிறிஸ்தவ மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றம் அடைகிறது.
பரம் + பிதா = பரம பிதா
பரம் + மண்டலம் = பர மண்டலம்
பரம் + லோகம் + ராஜ்யம் = பரலோக ராஜ்யம்
பிதா என்றால் தந்தை என்று பொருள்.
குடும்ப அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வருபவர் என்று பொருள்.
உலக அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வரும் பரம பிதாவுக்கு மேல் வேறு யாரும் கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + பிதா = பரம பிதா என்பதாகும்.
══════════════
10. பூரணம் :
இவைகள் - என்று சொற்களில் எடுத்துக் கூற முடியாத,
இவைகள் - என்று வார்த்தைகளில் எழுதிக் காட்ட முடியாத,
அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலம் வரும் பொழுது தானாகவே பரிணமித்து வெளிப்படும்.
அதாவது இன்னதென்று தெரியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் காலம் வரும் பொழுது வெளிப்படும், அதுவே பூரணம் எனப்படும்.
══════════════
பல்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படும் கடவுள் என்ற சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்றால்,
கடவுள் என்றால் என்ன?
கடவுளை அடையக் கூடிய வழிகள் எவை?
என்பன போன்ற அதி சூட்சும கேள்விகளுக்குள் எவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கும்? என்பதைப் பற்றி சிந்திப்போம் தெளிவு பெறுவோம்.
..
நன்றி: பாலாவின் பார்வையில் சித்தர்கள்



Saturday, April 23, 2016

மரணம் பற்றிய மா்மங்கள்


உடலும் உயிரும்.
Thank: https://www.adhiparasakthi.co.uk
---------------------------
நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன. அவற்றை
1. தூல சரீரம்
2.சூக்கும சரீரம்
3. குண சரீரம்
4. கஞ்சுக சரீரம்
5. காரண சரீரம் என்பா்.

இவற்றை 1. அன்னமயகோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமயகோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும்சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள்.
1. அன்னமய கோசம்
நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூலசரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது! பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள்.

2. பிராணமய கோசம் வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம்.

3. மனோமய கோசம் ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும்.

பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும்.

4. விஞ்ஞானமய கோசம் ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும்.

5. ஆனந்தமய கோசம் பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும்.

யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள்.

வேதாந்திகள் சொல்வது...
---------------------------------------
மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து.

தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம் காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம்.

விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை.

மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது.

உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை!

அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு!

இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம்.

எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம்.

மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம்.

மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான்.

கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான்.

ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான்.

கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது. காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா்.

சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா். தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா்

மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது.

அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது.

சூக்கும சரீரம் – விளக்கம்
----------------------------------------
தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலைஅடிகள். ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது.

அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அவா்.

அருள்திரு அடிகளார் அனுபவம் ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள்.

அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன.

சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது.

இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு.

புலவா் சொக்கலிங்கம் அனுபவம்
ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார்.

“ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்தபோத என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது.

எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான்.

அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது.

இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி! இது சற்றே வித்தியாசமான அனுபவம்” என்றார்.

பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும்.

இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார்.

இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள்.

இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள்.

உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள்.

இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.

சர்வம் சிவமயம்



Thursday, April 21, 2016

அருள்மிகு கொங்கணர் சித்தர் விழா (மருதேரி )-29th April-Uthiradam

அருள்மிகு கொங்கணர்  சித்தர் விழா (மருதேரி )




1) ஓங்கார ஒளியுருவே வணங்கி உன்னை
    ஒதிடுவேன் பிருகுயான் சீவ வாக்கு
    பாங்குடன் ************  அறியமேலாய்
    பற்றி வரும் சன்மார்க்க குடிலம் தொட்டு



2)தொட்டுவரும் கயல் திங்கள் இருபானை பாகை
   தக்கவே பூசைவிழா விளக்கம் கூற
   சூட்சமமாய் கதிருட்சம் காலம் தன்னில்
   சித்தர்களை வரவேற்கும் பொருட்டுமே தான்

    In this day of Kayal month on 25th
    The apt Pooja for the day is
    Sotchma during the Sun’s peak period
    To welcome the great Siddhas





3)தானுயர்வாய் நின்றதொரு சீவ சித்தன்
   தரணியிலே அயகலைகள் கற்றோன் தான்
   மேன்மைப்பட போகனுடைய பூரண சீடன்
   மனமழகாய் கொங்கணரின் சோதி கொள்வீர்



    Is the one who stood high as Seeva Siddha
    Is the one who specializes in Iron (Metal)
    Is a best and Complete Disciple of Great Bhogar Siddhar
    With pleasant mind have Konganar on Jyothi





4) சோதியது சித்திரையாம் திங்கள் தன்னில்
    சிறப்புடைய உத்திராடம் பளிங்கன் வாரம்
    ஆதியந்தம் இல்லாத அருணை தலத்தான்
    அற்புதமாய் கௌதமனின் ஆசி கொண்டான்
  
    Jothi on the month of Chitirai
    On the star of Uthiradam on Friday (April 29th- 2016)
    From the place of Arunachalam who has no start and end
    Was Gowthamar (Gowthama Rishi) who blessed and guided him





5) கொண்டதொரு தவனிஷ்டை சித்தி கொண்டான்
    குருபக்தி மேலோங்கிய சித்து தானே
    பின்னமில்லா அரிவிட்னு மலையானும் தானும்
    பூரணமாய் கிரிகாப்பு கொண்டோன் தானே
  


    Based on that guidance Konganar took dhyana Nistai and Siddhi
    Who had higher level of guru bhakthi
    The flawless Hari Vishnu’s and Thirumal
    is the 7 Giri (Tirumala) that has complete protection by him





6) தானென்ற அகந்தையது மயக்கம் தொட்டு
    தர்கித்து நின்றோர்க்கு அகந்தை நீக்கி
    ஊனமில்லா அருள்ஞானம் அளிக்க வல்ல
    உயர்கதியாம் வருவோர்க்கு அருள் பொருளும்

     The one’s who are deep in arrogance and ego
    And debated where relieved from their arrogance
    The one who is capable of blessing without fault
    Blesses people with Wealth and Holiness
  


7) பொருளான விக்கினத்தை விலக்கி வைத்து
     பூஷணங்கள் தான் அளித்து அலங்காரமாய்
     விருத்தியதை தானளிக்க வல்லதாய் இருக்க
     வகையான சுகந்தநீர் துளசி கூட்டி
                                                                                 


     He is the remover of obstacles for Money/Materialistic life
     With ornaments and beautiful decorations
     Proliferates due to his higher blessings
     With Sugandha Water added with Thulasi (Plant)
  


8) கூட்டியே ரசிதமதில் நீர்பாத்திரம் கொண்டு
     சுகமான நீர்பாத்திரம் வைத்து ஆசி
    மாட்சிமையாய் தனம்பொருளும் விருத்தி காண
    மங்களமாய் தாமரை திரி கொண்டு ஏற்றி



    In a silver metal glass serve it
    A silver metal water glass after taking his blessings
    With Majesty to multiply Money and Goods
    Use the wick of Lotus for his Jyothi



9) ஏற்றியுமே நெய்யதுவால் வேங்கடேசன் நாமம்கூறி
    இயம்பினோம் முத்தேவர் ஆசி யுடன்
    குற்றமற அன்னஔஷத தர்மம் நிலைக்க
    குறைவாரா சதபேர்க்கு குன்றா அன்னம்
  


    In ghee with the nama of Lord Venkatesa
    With the blessings of Trimurthi
   The dharma of Annam and Medicine @Maruderi
    Ensure Annam for Sadham people
  


10) அன்னமது சித்திரஅன்னம் வகையிலே
      அருள்நிலையில் இணைந்துமே ஆசி ஈய
      உன்னதமாய் வாலையுடன் பராபரை ஆசி
      ஒருசேர வாய்க்கும்அப்போ சீவம் முற்றே
  


      Annam in the type of chitranam
      With Arul and Blessing on the day
      Is by the Unnadha Valai and Paraparai
      Will together bless-all; seevam ends

 Location : Maruderi, Singaperumal Koil / மருதேரி, சிங்கபெருமாள் கோவில்