Thursday, August 24, 2017

கணபதிக்கு பிரியமான 21.Vinayagar 80 tips




No automatic alt text available.

*Pillayarpatti Karpaga Vinayagar Sandal*

The 9th day 80 kilograms of sandal paste is made-up to cover Lord Karpaga Vinayagar. This decoration of sandal covering takes place only once in a year. [ Old image ] ..


#கணபதிக்கு_பிரியமான21

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்...ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, , மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.ஜன்பகப்பூ

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்



விநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்!* தெரிந்து கொள்வோம்!

1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.
10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. 

22. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும். 

33. சாதூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவிலில் தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை.நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ்செயலில் உங்களுக்குத்துணையாக இந்தக்கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.

50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



...



Saturday, August 19, 2017

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள்


Image result for பிரம்ம முஹூர்த்தம்

சுப முஹூர்த்தம்
பலமுஹூர்த்தங்கள் இருப்பினும் அவற்றில் முக்கியமாக:

1. பிரம்ம முஹூர்த்தம்
2. அபிஜித் முஹூர்த்தம்
3. கோதுளி முஹூர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பு வாய்ந்தவை.

பிரம்ம முஹூர்த்தம் பற்றி திரு சபரி பஞ்சாங்க கணிதர் அவர்களின்  கருத்துப்படி:

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்
பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்மமுகூர்த்தமாகும். இவற்றுள் 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும்.


1. ருத்ர முஹுர்த்தம்---------------06.00AM – 06.48AM
2. ஆஹி முஹுர்த்தம்--------- 06.48am –07.36am
3. மித்ர முஹுர்த்தம்------------------- 07.36am – 08.24am
4. பித்ரு முஹுர்த்தம்----------------- 08.24am – 09.12am
5. வசு முஹுர்த்தம்-------------------- 09.12am – 10.00am
6. வராஹ முஹுர்த்தம்------------- 10.00am – 10.48am
7.விச்வேதேவாமுஹுர்த்தம்---- 10.48am – 11.36am
8.விதி முஹுர்த்தம்------------------- 11.36am – 12.24pm
9. சுதாமுகீ முஹுர்த்தம்------------ 12.24pm – 01.12pm
10. புருஹூத முஹுர்த்தம்---------- 01.12pm – 02.00pm
11. வாஹிநீ முஹுர்த்தம்------------ 02.00pm – 02.48pm
12.நக்தனகரா முஹுர்த்தம்------ 02.48pm – 03.36pm
13. வருண முஹுர்த்தம்-------------- 03.36pm – 04.24pm
14. அர்யமன் முஹுர்த்தம்---------- 04.24pm – 05.12pm
15.பக முஹுர்த்தம்--------------------- 05.12pm – 06.00pm
16. கிரீச முஹுர்த்தம்----------------- 06.00pm – 06.48pm
17. அஜபாத முஹுர்த்தம்------------ 06.48pm – 07.36pm
18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm
19.புஷ்ய முஹுர்த்தம்-------------- 08.24pm – 09.12pm
20.அச்விநீ முஹுர்த்தம்------------ 09.12pm – 10.00pm
21.யம முஹுர்த்தம்------------------ 10.00pm – 10.48pm
22.அக்னி முஹுர்த்தம்------------- 10.48pm – 11.36pm
23.விதாத்ரு முஹுர்த்தம்-------- 11.36pm – 12.24am
24.கண்ட முஹுர்த்தம்------------- 12.24am – 01.12am 
25.அதிதி முஹுர்த்தம்-------------- 01.12am – 02.00am
26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம்--- 02.00am – 02.48am
27.விஷ்ணு முஹுர்த்தம்------------ 02.48am – 03.36am
28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-- 03.36am – 04.24am
29.பிரம்ம முஹுர்த்தம்--------------- 04.24am – 05.12am
30.சமுத்ரம் முஹுர்த்தம்------------ 05.12am – 06.00am

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது

Thursday, August 17, 2017

ஸ்ரீரமணாச்ரமத் தமிழ்ப் பாராயணத்திரட்டு



ஸ்ரீரமணாச்ரமத்

தமிழ்ப் பாராயணத்திரட்டு

pdf  mp3 Tamil & English
பாடல்கள் மட்டும்
முன்னுரை
தமிழ்ப் பாராயணத்தின் வரலாறு
திங்கட்கிழமை - பாடல்கள் வரலாறு
திங்கட்கிழமை (அருணாசல ஸ்துதிபஞ்சகம்)
1.அருணாசல தீபதர்சன தத்துவம்
2.அருணாசல மாகாத்மியம்
3.அருணாசல அக்ஷரமணமாலை
4.அருணாசல நவமணிமாலை
5.அருணாசல பதிகம்
6.அருணாசல அஷ்டகம்
7.அருணாசல பஞ்சரத்னம்

செவ்வாய்க்கிழமை - பாடல்கள் வரலாறு
செவ்வாய்க்கிழமை (உபதேச நூன்மாலை)
1.உபதேசவுந்தியார் - கலிவெண்பா
2.உள்ளது நாற்பது - அனுபந்தம்

புதன் கிழமை - பாடல்கள் வரலாறு

புதன் கிழமை ( I.உபதேச நூன்மாலை)
1.ஏகான்ம விவேகம்
2. அப்பளப்பாட்டு
3.ஆன்மவித்தை
II.அனுவாத நூன்மாலை

வியாழக்கிழமை - பாடல்கள் வரலாறு

வியாழக்கிழமை (அநுவாத நூன்மாலை )

வெள்ளிக்கிழமை - பாடல்கள் வரலாறு

வெள்ளிக்கிழமை (அநுவாத நூன்மாலை )

சனிக்கிழமை - பாடல்கள் வரலாறு

சனிக்கிழமை (ஸ்ரீ ரமண ஸ்துதிபஞ்சகம்)

Saturday, August 12, 2017

அம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் !


thank: Neeraja Neeraja [FB]

இந்தியாவில் அம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் !
தேவியின் புகழைப் பாருக்குப் பறைசாற்றும் பல முக்கிய க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே இடம் பெறுகின்றன.

பரசுராம க்ஷேத்திரத்தில் செங்கனூர் பகவதி கோயில் விசேஷமாக உள்ளது. நீலாசலத்து காமரூப நாயகி போலவே தேவிக்கு தாய்மைக்கு உரிய நீர்மைக்கசிவு ஏற்படும் வியக்கத் தகும் தலம் இது. அவ்வப்போது நிகழும் இத்தெய்விக நிகழ்ச்சியின் போது இங்கு மகோற்சவம்தான்.
அடுத்து கொடுங்கல்லூர் காளி தேவி மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி க்ஷேத்திரம். திருச்சூரிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து மைல் உள்ள இத்தலத்து தேவியின் உக்கிரம் குறைய ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. பெரிய உருவத்தோடு உட்கார்ந்த நிலையில் காட்சியருளுவாள் அன்னை.சோட்டானிக்கரை பகவதியைத் தெரியாதவர்கள் மலையாளத்தில் இருக்கமாட்டார்கள். இது ஒரு பிரார்த்தனை தலம். ஜேஜே என்று எப்போதும் சந்நிதியில் கூட்டம்.
Image may contain: one or more people
பழையனூர் பகவதியும் இப்படியே மிகவும் பிரபலமானவள்: தேவியின் மிக உக்கிர’ப்ரத்யுங்கரை’ அம்சங்களே இந்த க்ஷேத்ரங்களில் இருக்கின்றன என்பர். அடுத்து ஹேமாம்பிகை என்னும் தேவி உறையும் ஒலவக்கோடும் பகவதி க்ஷேத்திரத்தில் புராதனமானது. அன்னையின் இரு கைகளை மட்டுமே இங்கு தரிசிக்கிறோம்.

வெயிலுகந்தம்மன்
திருச்செந்தூரில் உள்ள அம்மன் கோவில். முருகனுக்கு சக்திவேல் அளித்து, பாண்டிய ராஜகுமாரிக்கு குதிரை முகமும் நீக்கிய சக்தி. அன்னையின் அருளொளி பரப்பும் தோற்றம் ஆனந்தமயமாக இருக்கும். வேல் உவந்தாள் என்பதே இப்படி மருவியுள்ளது.

சங்கரநாராயணர் - கோமதி
ஹரிஹர க்ஷேத்திரமாக புகழுடன் விளங்கும் தலம் சங்கரநாராயணர் கோவில். இங்கு கோவில் கொண்டிருப்பவள் கோமதி அன்னை. அம்பாள் தவக்கோலம் பூண்ட தலங்கள் சில. அவற்றில் இதுவும் ஒன்று. ‘ஆடித்தபஸ், உற்சவத்தில் லட்சோப லட்ச ஜனங்கள் கலந்து கொள்கிறார்கள்’

வேதாரண்யம்
‘சுந்தரி பீடம்’ என்று தேவி பீடங்களில் சிறப்பு கொண்டது, வேதாரண்யம். பரமசிவனின் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. நால்வராலும் தேவாரப் பாடல் பெற்றது இத்தலம். இங்கு அன்னை வேதநாயகி என்று புகழப்படுகிறாள்.

திருக்கடவூர் அபிராமி
காலனையே தன் பக்தன் மார்க்கண்டேயருக்காகக் கடிந்த காலசம்ஹாரரும் அபிராமியும் வதியும் அழகு கொழிக்கும் கோவிலிது. அன்புடன் ஆராதித்த அபிராமிபட்டர் அன்னையின் அருள் பெற்ற தலம். அமாவாசையிலும் பூர்ண நிலவு காட்டி அபிராமி பட்டரை ஆண்டு கொண்டாள் இங்கு. அன்னையின் பேரில் பட்டர் அந்தாதி பாடினார். பிரசித்தமாக விளங்குபவள் தேவி அபிராமி.

அம்பர் மாகாளம்
சோமாசி என்ற நாயனாரின் சோம யாகத்துக்கு இறைவன் சண்டாள உருவத்தோடு எழுந்தருளி நேரிலே அவியைப் பெற்ற புனிதத்தலம். காளிதேவி அம்பன், அம்பராசுரன் என்ற அரக்கர்களைக் கொன்ற தோஷம் நீங்க இறைவனைப் பூசித்தாள். இங்குள்ள மோஹினி அம்மை மிக விசேமுடையவள். பூஜிப்பவர்கூட கையினால் தொடாது தூரத்திலிருந்து கோலால் ஆடை, மாலை முதலியன அணிவிப்பார். ‘பயக்ஷயாம்பிகை’ பயம் போக்கு பவளாக நின்ற கோலமாகத் யாசனத்தில் கருணையோடு அருள் பாலிப்பாள். இத்தலம் பூந்தோட்டம் (மாயவரம் - அறந்தாங்கி மார்க்கம்) ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது.
No automatic alt text available.Image may contain: 1 person
சமயபுரத்தாள்
இது திருச்சி அருகில் உள்ள தமிழகத்து முக்கிய மாரியம்மன் ஆலயம். பிரசித்தி பெற்றவள். தசரத சக்ரவர்த்தி பூஜித்த விக்கிரகம் என்று கூறப்படுகிறது. கண் கண்ட தெய்வம் இவ்வன்னை. உபாசனாசக்தியின் பலனை உடனுக்குடன் உணர்த்தும் கருணை முகில்.
சிறந்த பக்தரான ஒருவர் தர்மகர்த்தாவாக இருந்த காலம். உற்சவம் சிறப்பாக நடக்கும். யானை மட்டும் கோவிலுக்கு அப்போது இல்லை. ஆகவே பக்கத்து ஊர்களிலிருந்து வரவழைப்பது வழக்கம். என்ன காரணமோ அந்த வருடம் யானை வராது என்று கூறிவிட்டனர். பக்தர் தவித்தார். திருச்சி தெப்பக்குளத்து வீதியில் மேலும் கீழும் நடந்து கொண்டே கவலை தோய்ந்து காணப்பட்டார். ஒரு வியாபாரியான நண்பர், இதைக் கண்டவர் தாமே வாங்கித் தருவதாகக் கூறினாராம். அதற்கேற்றாற்போல் ஆச்சர்யமாக குறைந்த விலையில் கிடைத்ததாம் ஒரு யானைக்குட்டி.
கோவிலுக்கு மேளதாளத்தோடு யானையை அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. புதிதாகையால் திடீரென்று மிரண்டால் என்ன செய்வது என்று இரண்டு தேங்காய்களை எடுத்துவரச் சொன்னான் பாகன். ஆனால் எடுத்துவர மறந்து விட்டனர். ஊர்வலம் தொடங்கி காவிரிப்பாலம் தாண்டியதும், யானை மிரளுவதைக் கண்ட பாகன் தேங்காய் கேட்டான். தேங்காய் இல்லை. அன்னையின் அருளால் உடனே சாலை ஓரத்திலிருந்த மரத்திலிருந்து இரண்டு தேங்காகள் விழுந்தன. யானைக்கு அதைக் கொடுத்தான். ஆயினும் அது அடங்காமல் குறுக்கே இறங்கி ஓடிவிட்டது. கடைசியில் யாவரும் வியக்கும் வண்ணம் அன்னையின் சந்நிதியில் கொடி மரத்திற்கு அருகில் போய் நின்றதாம். முன்பின் தெரியாத புது யானை தானே கோவில் முன் வந்து நின்றதைக் கண்டவர் மெய்சிலிர்த்தனராம்.
இதைப் போலவே மற்றொரு பக்தர் (திருச்சி மளிகைக்காரர்) வருடம் தோறும் வைகாசி 1ஆம் தேதி சிறப்பாக அபிஷேகம் செய்து அன்னதானம் முதலியனவும் செய்வது வழக்கம். கோவிலுக்கு எதிரேயுள்ள வாய்க்காலில் தண்ணீர் விட எவ்வளவோ கேட்டும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பக்தர்கள் சிரமப்படுவார்களே என்று வருந்தினார் அப்பக்தர். அன்னையின் அருளால் அன்று மழை விடாது பெய்து வாய்க்கால் நிரம்பி ஓடியதாம். குறையின்றி அன்னதானம் செய்தாராம். இன்றும் தொடர்ந்து இத்தருமத்தை நடத்தி வருகிறார். இப்படி ஏராளமான அனுபவ அதிசயங்கள். பிரார்த்தனைக்குரிய சிறந்த தலம். சமயபுரத்தாளுக்கு கும்பாபிஷேகம் என்றால், பணம் வேண்டுமே என்று கவலைப்படாமல் நடக்கும் கோயில் இது. அப்படி குவியும் நிதி. அன்பினால் கருணையினால் அடியார்களை ஆட்கொள்ளுபவள் ஆதிமகமாயி அம்மை சமயபுர நாயகி.

மாகாளிக்குடி
சமயபுரத்து மாரியம்மன் கோவிலுக்கு வெகு அருகில் ‘மாகாளிக்குடி’ என்ற தலம் உள்ளது. இது விக்ரமாதித்தனால் பூஜிக்கப்பட்ட விக்ரஹம் என்று கூறுகின்றனர். அமைதி யான கிராமிய சூழ்நிலையில் அருமையான கோவில் இன்று சிதிலமாக உள்ளது. இராஜராஜேச்வரியின் கோவில் இது என்று கூறுகின்றனர்.

சிறுவாச்சூர்
திருச்சி - பெரம்பலூர் பாதையில் உள்ள பிரசித்தமான பிரார்த்தனைத் தலமிது. இங்கு முடியிறக்க வரும் குடும்பங்கள் அநேகம். பலருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறாள் அன்னை. இக்கோவில் திங்கள், வெள்ளி இரண்டு தினங்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாள்களில் மூடியே இருக்கின்றது.இங்கு வந்து நீராடி இங்கேயே மாவு இடித்து மாவிளக்கு போடுவார்கள். மாவு இடிப்பதற்கு என்று ஆட்கள் இங்கு இருக்கின்றனர். தேவியின் சக்தி மிளிரும் சிறப்பான கோவில் இது.

கோனியம்மன் (கோவை)
ஒவ்வோர் ஊரிலும் கிராமதேவதை என்றும், எல்லைப்பிடாரி என்றும் சக்தியே வழிபடும் தெய்வமாயிருக்கிறாள். சில ஊர்களில் சிறப்புற்றும், பல இடங்களில் சாதாரணமாகவும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது. அக்காலத்தில் கோவை மாநகர் ‘கோவன் புதூர்’என்ற கிராமமாக இருந்தது. அக்கிராம தேவதையாக கோனியம்மன் அமர்ந்து ஊரைக் காப்பாற்றினாள். இன்றும் காப்பாற்றி வருகிறாள். ஊர் ஜனங்களும் நன்றிப் பெருக்கோடு இவ்வன்னைக்கு பொங்கல் இடுவதும் அபிஷேகம் செய்வதும் வழக்கமாகியது. ஆரவார மிகுந்ததான கோவையின் மத்தியில் அமைதியே உருவாக, காண்பவர் கருத்தை ஈர்க்கும் வண்ணம் ‘அஞ்சேல்’ என அபயம் கொடுத்து வீற்றிருக்கும் இத்திருக்கோலம் மனத்தை விட்டகலாது. கோவையின் பாக்கியமே கோனியம்மன்.
Image may contain: 1 person
கருவாழைக்கரை
மாயவரத்துக்கு அருகில் வனதுர்க்கை கோவில் உள்ளது. ஒரு சமயம் மிகவும் உக்கிரமாக இருந்தது இக்கோவில். உக்கிரத்தைக் குறைக்க சந்நிதிக்கு எதிரே குளம் ஒன்றை வெட்டச் சொல்லி காமகோடி பீட கருணைக்கு ஆக்ஞாபித்தார். உக்கிரச்சக்தி, இன்று அனுக்கிரஹ சக்தியுடன் செயல்படுகிறது. இதைத் தாண்டி சுமார் நான்கு மைலில் ‘கருவாழைக்கரை’ என்ற சிற்றூரில் உள்ள இம்மாரிக்கு ‘காமாட்சி’ என்று பெயர். எழிலும் துடிப்பும் கொண்ட அன்புருவான அன்னை. ‘இவளை’ ஆராதிக்கும் குடும்பங்கள் பல. தினம் உச்சியில் சரியான 12 மணிக்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். யார் வந்தாலும் இந்நேரத்தில் மாற்றம் இல்லை. குறிசொல்லும் வழக்கம் இங்கு உள்ளது. சிறிது தொலைவில் காவிரி அமைதியாக சிறு வாய்க்கால் போல கடலாடச் செல்கிறாள். இங்கு ‘காவிரியிலிருந்து நீர் சுமந்து வந்து அபிஷேகம் செய்கிறேன். தண்ணீர் (கிணற்றிலிருந்து) எடுத்து வைக்கிறேன்’ என்று பெரும்பாலும் பிரார்த்தித்துக் கொண்டு பக்தி சிரத்தையுடன் அதை நிறைவேற்றுகின்றனர்.

தஞ்சாவூர் மாரி
தஞ்சையின் பெரிய கோவிலும் ப்ரும்மாண்டமான லிங்கத்திருவுருவும் பெரிய நாயகியும், ஷண்முகசுந்தரன் முதலியவர்களும் நந்தியம் பெருமானும் உலகிலுள்ள கலைரசனை, பக்தி ரசனை, மிக்கோரை இழுக்கின்றனர் எனில் மாரியம்மன் பயம் காட்டி அடியாரைத் தன்னிடம் ஈர்த்துக் கொள்கிறாள். பெரியம்மை போடப் பெற்றவர்கள் வரிசையாக பிராகாரம் முழுவதும் இருப்பார்கள். அவ்வளவும் அன்னையின் அருட்சக்தியால் சமனமாகிறது. அஷ்டகம் படித்து வைசூரி குணமாவதைப் போல், அன்னை தஞ்சை மாரியைப் பிரார்த்தித்துக் குணம் கண்டவர் பலர். கண் பார்வை இழந்தவர்களுக்குக்கூட, பார்வை கிடைக்கச் செய்த கண்கண்ட தெய்வம், அன்னையின் அருளாலும் பிரபலத்தாலும், ஊரே மாரியம்மன் கோயில் என்று வழங்கலாயிற்று. (முன்பு புன்னைநல்லூர் என்று கூறப் பட்டது) ஆவணிமாதத் திருவிழாவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும்.

அலங்காரவல்லி
மூர்த்தி,தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பாக விளங்கும் தலம் ஹரித்துவாரமங்கலம். ‘அரதைப் பெரும் பாழி’ என்று அன்று விளங்கிய இப்பதி, இன்று ‘ஹரித்துவார மங்கலமாக’ மருவி வந்துள்ளது.
பக்தர் ஒருவர் சிவத்தை அனவரதம் சிந்திப்பார். சந்தனக் கட்டையை பொதி ஏற்றி வியாபாரம் செய்வார். வன்னிக்காடுகளின் வழியே செல்வார். ஆதவன் அரைவழி வந்து, உச்சி வேளையில் பெரிய குட்டை ஒன்றில் நீராடினார். விபூதியைக் காணோமே என்று சந்தனக் கட்டையை எடுத்து அருகிலிருந்த பாறையில் தேய்க்கிறார். கல்லிலிருந்து ரத்தம் பீரிடவே துணுக்குற்றார். ஆட்களை அழைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்: அருமையான சிவலிங்கம் வெளிப் பட்டது . பாதாளேச்வரர் என்று திருநாமம் சூட்டி அன்புடன் அழைத்தார். அழகிய கோவில் ஒன்றை உருவாக்கினார். நால்வரில் ஞானசம்பந்தப் பெருமான் காலினால் நடக்கவும் அஞ்சி, பரண் ஒன்று கட்டி அதிலிருந்து ‘பைத்த பாம்போடரைக் கோவணம் பாய் புலி’ என்று பதிகம் பாடிய தலம் இது. நீடாமங்கலத்துக்கு ஏழாவது மைலில் உள்ள தலம் இது. இங்கு அம்மை அலங்காரவல்லி அருள்பாலிக்கிறாள்.

திருவாமாத்தூர் வட்டப்பாறையம்மன்:
விழுப்புரத்துக்கு அருகில் செஞ்சி ரோட்டில் 4 மைல் தூரத்தில உள்ளது. இரட்டைப் புலவரால் பாடப்பெற்ற தலம் இது. மாடுகளுக்குக் கொம்பு முளைக்க அருளியதாக புராண வரலாறு கூறும். இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி கோவில் எதிரெதிரே உள்ளது. அம்பிகை ‘முத்தை வென்ற முறுவலாள்’ கோவிலுக்குத் தென்பக்கம் வட்டப்பாறையம்மன் சந்நிதி உள்ளது. சிக்கலான வழக்குகளில் மக்கள் அன்னையின் சந்நிதியில் சத்தியம் செய்யச் சொல்லி தீர்ப்பு காண்பார்களாம். பொய்ச் சத்தியம் செய்தால் பாறையிலிருந்து பாம்பு வந்து கடித்துவிடும் என்பது மக்கள் நம்பிக்கை.

கோலியனூர் பிட்லாயம்மன்
விழுப்புரம் - பாண்டி ரோட்டில் உள்ள கோயில் இது. இந்த வட்டாரத்து மக்களின் பிரார்த்தனைத் தலம் கோலியனூர். சக்தி வாய்ந்த மாரியம்மன் இவள். ஆள் உயரத்துக்கு பாம்புப் புற்று கோவிலினுள் உள்ளது. அதில் பெரிய நாகங்கள் இருந்து பக்தர்கள் வைக்கும் பால், முதலியவற்றை அருந்துமாம். ஆடிவெள்ளி, தைவெள்ளி என்றால் அக்கம்பக்கத்து ஜனங்கள் திரண்டு வந்து தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

செங்கழுநீர் அம்மன் (புதுவை)
பாண்டிச்சேரியில் வீராம்பட்டணத்து கடற்கரையோரம் கொலு வீற்றிருக்கும் இச் சக்தியும் சமயபுரத்தாள் போல பக்தர்களைக் கவருபவள். மாசி மகம் உற்சவம் என்றால் மக்கள் வீராம்பட்டினம் செல்லாமல் இரார். அழகிய புராதனமான ஆலயம் ஆழியின் கரையிலே உள்ளது.

பட்டீச்வரம்
பிறப்பில் வேதியனாகவும், பதவியில் அமைச்சராகவும், குணத்தில் உயர்ந்தவராகவும், தவத்தில் சிறந்தவராகவும், தர்மத்திற்கு இருப்பிடமாகவும் விளங்கிய உத்தமர் ஐயன் என்று மக்கள் உணர்ந்த ஸ்ரீகோவிந்த தீக்ஷிதர். பக்தியில் ஆழ்ந்து திளைத்த தலம் பட்டீச்வரம். கும்பகோணத்துக்குத் தென்மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ள அழகு கொழிக்கும் அம்பிகைப் படிவம் இது. கும்பகோணத்து (மங்களாம்பிகை) மந்திர பீடேச்வரியிடம் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், பட்டீச்வரத்தில் பற்று மிகுந்து அன்னையின் அருளிலே மூழ்கினார். அன்னை ஞானாம்பிகையாக தவமிருந்து கருணைக்கடலான பரமசிவத்தை மணாளனாக அடைந்த பதி இது.

திருமயிலை கற்பகம் (சென்னை)
இறைவி மயிலுருக் கொண்டு இறைவனை வழிபட்ட தலம் திருமயிலை என்னும் மயிலாப்பூர். கற்பகாம்பாள் கடைக்கண் நோக்கிற்கு ஆளாகும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இறந்த பூங்கோதையையே உயிர் பெற்றுவரத் துணை செய்த கடைக்கண்ணையுடையவள் இவ்வன்னை. பாடல் பெற்ற பழம் பெரும்பதி.

மாங்காடு
சென்னை பூந்தமல்லிக்கு அருகேயுள்ள அற்புதமான சக்தித்தலம் இது. ஆதிசங்கரரே ‘அர்த்த மேருவை’இங்கு பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர். தவத்தின் பயனாக எந்தப் பராசக்தி அடையப்படுகிறதாக வேத உபநிஷதங்கள் கூறுகின்றனவோ, அந்தத் தவப்பயனான அன்னையே இங்கு ஐந்து பக்கமும் அக்னி சூழ ஒற்றைக் காலில் நின்று தவமியற்றுகிறாள். ‘ஒற்றைக் காலில் நின்று சாதிக்கிறாள்’ என்பது வழக்கு. அன்னை இவ்வாறு உலகம் உய்ய தவக் கோலம் பூண்டிருக்கிறாள். பக்தர்களுக்கு விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கிறாள்.

திருவேற்காடு
கருமாரியம்மன் கோயில் சமீப காலத்தில் பிரபலமாகி ஞாயிறுதோறும் மக்கள் திரள் திரளாகக் கூடுகின்ற அருள் விளங்கும் அற்புதத் தலம் இது. பலன் கண்டவர் மீண்டும் மீண்டும் செல்வது இயல்புதானே? சென்னையைத் தலமோங்கு க்ஷேத்ரமாக்கும் பதிகளில் இதுவும் ஒன்று.

பெரியபாளையத்தாள்
‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை’ என்று அபிராமி பட்டர் கூறியதுபோல், அகில உலகத்தாய் ஊருக்கு ஆத்தாளாக இருப்பதில் என்ன வியப்பு உள்ளது? பெரிய பாளையம் என்னும் ஊரைத் தெரியாத சென்னையும் அதன் சுற்றுப்புரத்து வாசிகளும் இல்லை எனலாம். “மகமாயி! தாயே!” பெரியபாளையத்தாளே! ‘பாடைக்கட்டி’ எடுத்து வந்து போடுகிறேன். பொங்கலிடுகிறேன். இளநீர் கண்திறக்கிறேன்” என்று பலவிதமாக பிரார்த்தனைகள் செய்யும் தலம் இது. எது பொய்த்தாலும் பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது.

கனகதுர்க்கை
விஜயவாடாவில் கிருஷ்ணா நதி ஸ்நானமும், கனக துர்க்கையின் தரிசனமும் பரம பாவனம். சண்டிகாதேவியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். அன்னைக்கு பிரார்த்தனை செய்து கொண்டு வஸ்திரங்கள் ஏராளமாகப் அளிக்கின்றனர். அவற்றை ஏலத்தில் எடுத்து அன்னையின் நினைவாக உடுத்துவோரும் உண்டு. சிறு குன்றில் ரமணீயமான சூழ்நிலையோடு விளங்குகிறது துர்க்கை க்ஷேத்திரம்.

ஸ்ரீ சாரதாதேவி
சிருங்கேரியின் ப்ரதான தேவி அன்னை சாரதாம்பாள். ஷண்மத ஸ்தாபனம் செய்த ஸ்ரீசங்கரர் மண்டனமிச்ரரை வாதில் வென்று அன்னை ஸரஸ்வதியின் அவதாரமான சரஸவாணி பின் தொடர வந்து கொண்டிருந்தாள். திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை ஸ்ரீசங்கரருக்கு விதித்தாள் வாணி. கேட்டுக் கொண்டே வந்தவர் நூபுரத்து ஓசை நிற்கவே திரும்பினார். அன்னை வாணி அங்கேயே நின்று விட்டாள். கர்ப்பமுற்றுத் திணறும் தவளையொன்று வெயிலின் தாபம் தாங்காமல் தவித்தது. அதை, இயல்பாக பகைக் குணம் கொண்ட பாம்பொன்று படமெடுத்து நிழலளித்துக் காத்ததைக் கண்டார். ஆனந்தமான துல்லிய படிக நீரோடும் துங்காவின் கரையில் வெள்ளைத் தாமரையில் வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளை உள்ளம் கொண்டோர் உள்ளத்தே விளங்கும் வாணிக்கு பீடம் அமைத்தார். புகழ் ஓங்கு பெரும் பீடமாக சிருங்கேரி ஆல்போல் தழைத்து இன்று விழுது விட்டு வளர்ந்து ஞானதாகம், வேதாந்தப் பசி, தவவேட்கை கொண்டோரைத் தன் நிழலில் அருளுடன் அணைக்கிறது.
சுற்றிலும் இயற்கை, வனாந்தரமும் மலையும், ஆறும் அன்னையின் ஆலயமும், வித்யாரண்யர் என்ற வித்தகப் பேரருளாளரின் கோயிலும் கண்ணையும் கருத்தையும் கவரும்.

குருக்ஷேத்திரம்
குருக்ஷேத்திரம் மலைவாச ஸ்தலமாகிய சிம்லாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் மார்க்கத்தில் ‘அம்பாலா’ சந்திப்பின் வழியாக 112 கி.மீ. தொலைவில் உள்ளது. புராதனச் சிறப்பும் பெருமையும் கொண்டது இத்தலம். பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மகா பாரத யுத்தம் இங்குதான் நடந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வூரில் அநேக நீர்நிலைகள் உள்ளன. அந்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான அழகிய செந்தாமரைப் பூக்களும் வெண் தாமரைப் பூக்களும் பூத்து நிரம்பிக் கிடக்கின்றன. இது காண வேண்டிய காட்சிகளில் அருமையான ஒன்றாகும். யுத்தத்தில் ஈடுபட்டு மாண்ட போர் வீரர்களே இப்படி மலர்களாக மலர்ந்திருப்பதாக அழகான கலா ரசனையோடு கூறப்படுகிறது.
இங்கு நீராட வேண்டிய முக்கிய தடாகமாகிய புஷ்கரம் தாமரை மலர்கள் நிறைந்து தாமரைக்குளமாகக் காட்சியளிக்கிறது. தரிசிக்க வேண்டிய இறைவர் “தானேச்வர மகாதேவ்” இறைவி ஸ்தாணுப் பிரியை. இது ஒரு சக்தி பீடமாக விளங்குகிறது.

சோமநாதம்:
பன்னிரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாதம் பிரபாச க்ஷேத்திரம் என தேவிக்குரிய படிவத்தில் புகழ் பெற்றது. சந்திரபாகா என்றும் இத்தேவியைக் கூறுவர். தக்ஷனால் ஏற்பட்ட சாபம் நீங்க சந்திரன் உபாசித்த தலமாகக் கருதப்படுகிறது.

ஜ்வாலாமுகி: 
பஞ்சாப் அம்பிகையின் நாக்கு விழுந்த இடமாகக் கூறப்படும் இத் தலத்து தேவி அருவுருவாக அக்னி ரூபமாக விளங்குகிறாள். எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும், அது அப்பொருளைத் தன்மயமாக்கிவிடுகிறது. இது இன்றும் காணும் உண்மை. எப்பொருளையும் தன்மயமாக்கும் அக்னி வடிவம். அன்னையும் எவ்வுயிரையும் தன் மயமாக்குகிறாள் என்று கூறாமல் விளக்குகிறது இப்பதி. அக்னியின் ஜ்வாலைக்கு (தீநாக்குகள்) பூஜை நடக்கிறது. கர்ப்பக் கிருஹத்தின் பல இடத்தில் சுடர்விட்டு எரியும் தீயை இன்றும் காணலாம். தங்கக் கூரை வேய்ந்த இத்தலம் காங்கரா ஜில்லாவில் மலைகளின் இடையே விளங்கி பாரதத்தின் ஆன்மிகச் சுடர் இன்றும் கொழுந்து விட்டு இன்றும் எரிகிறது என்பதை நினைவூட்டுகிறது.
இங்கேயேதான் வஜ்ரேச்வரியின் ஆலயமும் இருக்கிறது. பதான் கோட்டிலிருந்து பஸ்கள் இக்கோயில் வரை செல்லும்.
காச்மீரம் விவேகானந்தரை மிகவும் கவர்ந்தவள் அன்னை க்ஷீர பவானி. காச்மீரத்து ஸ்ரீநகரிலிருந்து பத்து, பதினைந்து மைல்கள் சென்று ‘துலாமுலா’ என்ற இடத்தை அடையலாம். நான்கு புறமும் ஜலத்தால் சூழப்பட்ட தீவின் மத்தியில் மரத்தடியில் உள்ளது ஒரு குளம். இங்குள்ள மண்டபத்திலே ஸ்ரீ சங்கரரும், பவானியும் அமைந்துள்ளனர். இத்தீர்த்தத்தையே தேவியாகக் கருதி பூஜை செய்கின்றனர்.

சிவப்பு, பச்சை, வெண்மை என்று இக்குளத்து நீர் தன் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் என்கின்றனர்.
கருமையாகக் காணப்பட்டால் சம்பவிக்க இருக்கும் கெடுதலைக் குறிக்கும் என்று நம்புகின்றனர்.

வைஷ்ணவி ஜம்முவிலிருந்து ‘காட்ரா’ வரை பஸ் செல்லும். பிறகு நடந்து சுமார் 15கி.மீ. மலை ஏற்றம், பாணகங்கை என்ற சிற்றாறு ஓடுகிறது. குகைவாசியாக வைஷ்ணவி தேவி இங்கு உயர்ந்த இடத்திலிருந்து பாரதத்தைக் கண்காணிக்கிறாள்.

சிறுவாயிலாக இருக்கின்ற நுழைவாயிலானதால் முதலில் தவழ்ந்துதான் உள்ளே செல்லமுடியும். நல்ல ஐதீகம். அன்னையிடம் மண்டியிட்டுத் தவழ்ந்து குழந்தை உள்ளத்தோடுதான் வரவேண்டும் என்பதற்குத் தகுந்த அத்தாட்சியுடன் கொலுவிருக்கிறாள். தனக்கு அளிக்கப்படும் காணிக்கையில் ஒரு பகுதியைப் பிரசாதமாக அளித்து அருளுடன் பொருளும் பெருக பக்தனை ஆசீர்வதிக்கிறாள் அன்னை.

ஹரித்வாரம் மோக்ஷபுரிகளில் ஒன்றான மாயாபுரி என்னும் ஹரித்வார் யாத்திரிகர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குகிறது. அன்னை கங்காதேவியின் அரவணைப்பினால் அது பேராதவு பெற்றிருக்கிறது. மாலை நேரத்தில் அன்னை கங்கைக்கு இலையிலே கப்பல் போல் செய்து ‘ஹாரதி’ பாடி தண்ணீரில் மிதக்க விடுவது இங்கு கண்கொள்ளாக் காட்சி. எளிய பிச்சைக்காரன் முதல் பெரும் தனவந்தர் வரை இதை சக்திக்குத் தகுந்தவாறு செய்யாமல் இருப்பதில்லை. கரையிலே ஆங்காங்கே புராணங்கள், கதை முதலியனவற்றைப் பிரசாரம் செய்வதைக் கேட்கக் கூடியிருக்கும் ஜனங்களைப் பார்த்தால் இது பூலோகமா கயிலாயமா என ஐயம் தோன்றும்.
கேதாரம்கேதாரத்தின் அன்னை உலகுக்கு வழிகாட்டும் அன்னையாக ‘மார்க்க தாயினி’ என்ற பெயருடன் விளங்குகிறாள். ஆறுமாதம் பனியினால் மூடியிருக்கும் கோயில். எளிதில் அடையமுடியாத ஒரு படிவம். சிலரே இதைக் காணும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
பத்ரிநாத்நர - நாராயணர் தவமிருந்த புனிதமான பத்ரிகாச்ரமம் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் பிரதானமாக விளங்குகிறது.
நர - நாரணர்களின் தவத்தைக் கெடுக்க இந்திரனால் தேவமாதர் பலர் அனுப்பப்பட்டனர். ஆனால் தெய்விகத் தவச்ரேஷ்டர் துடையைத் தட்டினாராம். அதிலிருந்து அதிஸௌந்தர்யமான பெண் தோன்றினாளாம். வந்த அரம்பையர் வெட்கிச் சென்றனராம். அப்பெண் ‘ஊரு’ (தொடை)விலிருந்து தோன்றியதால் ஊர்வசி என்று போற்றப்படுகிறாள்.
இப்படியே நேபாளத்திலும் இன்னும் பல பிரதேசங்களிலும் பராசக்தியானவள் பிரசித்தமாக விளங்கி அருள் பாலிக்கிறாள்.



Thursday, August 10, 2017

மதுரை அழகர்கோயில் 18ம் படி திறக்கும்



மதுரை  அழகர்கோயில் 18ம் படி திறக்கும் அற்புதக் காட்சி. 7/8/2017 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கபடும் ...
https://www.youtube.com/watch?v=Iy_6lmJWn-g 🙏
No automatic alt text available.

Thank : Raja

Wednesday, August 9, 2017

மந்திராலய ராகவேந்திரர் ஆராதனை 10.08.2017




மந்திராலய ராகவேந்திரர் ஆராதனை 10.08.2017
No automatic alt text available.
இந்த உலகம் தோன்றிய பின் பல்வேறு கால கட்டங்களில் ரிஷிகள், சாதுக்கள், புனிதர்கள், சரணர்கள், மடாதிபதிகள் பிறந்து பாரத மண்ணில் பல்வேறு ஆன்மிக திருப்பணிகளுடன் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். இப்படி பிறந்த மகான்களில் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டு வணங்கப்பட்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் கடந்த 15ம் நூற்றாண்டில் பிறந்து கலியுக காமதேனு பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீராகவேந்திர தீர்த்த சுவாமிகளும் ஒருவராக உள்ளார். கிருஷ்ணர் மீது அளவு கடந்த பக்தி கொண்டதினால் கிருஷ்ணரின் மறு உருவமாகவே இந்தக் கலியுகத்தில் பிறந்து மக்கள் தேவைகளை ராகவேந்திரர் பூர்த்தி செய்ததாக வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
வரலாறு:
கடந்த 1595ம் ஆண்டு திம்மண்ணா பக்துவா கோபிகாம்பாள் தம்பதியரின் மகனாக தமிழகத்தில் புவனகிரி என்ற குக்கிராமத்தில் ராகவேந்திரர் (வெங்கட்ராமன்) பிறந்தார். இவரது பெற்றோர் வைணவக் கோட்பாடுகளை போற்றி வளர்த்ததுடன் மிகுந்த ஆசார பண்பாடுகளை போற்றிக் காப்பாற்றி வந்த குடும்பமாக இருந்தது. தந்தை வழியில் வெங்கட்ராமன், பகவான் கிருஷ்ணன் மீது மிகுந்த பக்தி கொண்டு வேண்டினார். அதன் காரணமாக சிறு வயதிலேயே அவர் புத்திசாலியாக போற்றப்பட்டார். அவர், சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோரை இழந்து அவரது அண்ணன் குருராஜருடைய பராமரிப்பில் இருந்தார். அவரது தாய் மாமனான மதுரையைச் சேர்ந்த லஷ்மி நரசிம்ம ஆச்சார்யாவிடம் ஆரம்பக் கல்வியை முடித்தார். வாலிப வயது வந்தபோது சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். கும்பகோணத்திற்கு வந்து ஸ்ரீசுதீந்திர தீர்த்தரிடம் வேத ஆராய்ச்சிக்கான பயிற்சிகளை முடித்தார்.
சுதீந்திர தீர்த்த சுவாமிகள் கனவில் தோன்றிய கலியுகக் கண்ணன் ஸ்ரீகிருஷ்ணன், மடத்தை வழிநடத்த ராகவேந்திர தீர்த்தர் சரியான நபர் என்று உணர்த்தினார். மறுநாள் தூங்கி எழுந்த பின் பகவான் கிருஷ்ணன் கனவில் கூறியதை ராகவேந்திரரிடம் சுதீந்திர தீர்த்தர் கூறி எனக்குப் பின் இந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதன்பின் பிருந்தாவன் மடத்தின் 55 வது தீர்த்தராக பொறுப்பேற்றார்.
ராகவேந்திரர் ஆராதனை விழா
ஆண்டுதோறும் ஆவணி மாதம் ராகவேந்திரர் ஆராதனை விழா கொண்டாடப்படுகிறது. பூர்வ ஆராதனை, மத்திய ஆராதனை, உத்ர ஆராதனை என்ற பெயரில் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ராகவேந்திரின் 346வது ஆராதனை விழா 10.08.2017 அன்று நடைபெறுகிறது. கர்நாடக-ஆந்திரா மாநில எல்லையில் உள்ள மந்தராலயாவில் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஸ்ரீராகவேந்திரன் மடாலயத்தின் சார்பில் ஆராதனை நடக்கிறது.