Sunday, June 25, 2023

ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 17/07/2023


ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 17/07/2023

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து..





" பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009

வாஸ்து சாந்தி விதி படல சந்த்ரிகை.

Thanks FB🙏🙏

வாஸ்து சாந்தி விதி படல சந்த்ரிகை.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

Friday, June 23, 2023

கும்பாபிஷேகம்

Thanks FB... 

#கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் என்றால் என்ன?

கும்பாபிஷேகம் என்பது குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், சம்பந்தப்பட்ட தெய்வ திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வது ‘கும்பாபிஷேகம்’ ஆகும். அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.

ஆவர்த்தம்

ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

அனாவர்த்தம்

பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

புனராவர்த்தம்

கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

அந்தரிதம்

கோவில் உள்ளே ஏதேனும் தகாதது நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்.

அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை. பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.

கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல். துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்.

மிருத்சங்கிரஹணம் – (மண் எடுத்தல்) அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்

அங்குரார்ப்பணம் – முளையிடுதல் எடுத்த மண்ணில் விதைகளை யிட்டு முளை வளர செய்தல் இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் – காப்புக்கட்டுதல் பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு கட்டுதல்.

கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் – விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.

மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்.

விசேஷ சந்தி – 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.

பூத சுத்தி – இந்த பூத உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல் இதை மருந்து சாத்துதல் என்பர்.

பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் –  யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 45 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்

பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்

நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்

உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. ஆலயங்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

Wednesday, June 21, 2023

கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.

 1650க்கு முன்பு வரை #கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.


#சோழவந்தான் அருகிலுள்ள #தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளி வந்தார்.


1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ, வைணவத்தை ஒன்றினைக்கும் விதமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் 

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவையும் இனைத்து மதுரைக்கு மாற்றினார்.


அதற்கு முன்பு வரை கள்ளழகர், அழகர் மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர், சோழவந்தான், #திருவேடகம் வழியாக தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார்.


இவ்விழா மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு கள்ளழகர் தல்லாகுளம் வழியாக வரத் தொடங்கினார்.


இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது.


ஆனால் உண்மையில் மண்டூக மகரிசிக்கும், நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.


திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டதை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை, 


(இதை ஏற்காமல் இன்றுவரை தேனூரில் ஒரு சமூகத்தினர் அழகர்கோயில் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது)


இதைத் தொடர்ந்து தான் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக மதுரை வைகையாற்றில் அழகர் இறங்குமிடத்தில் #தேனூர் பெயரில் மண்டபம் அமைத்து மரியாதை செய்ததுடன், மற்றொரு நாளில் தேனூர் அழகுமலையான் கோவிலிலிருந்து தேனூர் வைகையாற்றில் இறங்க ஏற்பாடு செய்தும்,


கள்ளழகர் மதுரையில் இறங்கும் அதே தினத்தில் பாண்டியர் கால பழங்கோவிலான #சோழவந்தான் #ஜெனகைநாராயணப்பெருமாள் கள்ளழகராக #சோழவந்தான் வைகையாற்றில் இறங்கும் விழாவும் ஏற்படுத்தப்பட்டது.


அன்றிலிருந்து இன்றுவரை 370 ஆண்டுகளுக்கும் மேலாக சோழவந்தான் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இதற்கு பின்னர் சிவகங்கை மக்களின் வேண்டுகோளை ஏற்று #மானாமதுரை மற்றும் #பரமக்குடி யிலும் அழகர் இறங்கும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


#படித்ததைப்பகிர்ந்தேன்

#வேகவதி நன்றி 🌿


புருஷா என்கிற புருஷ மிருகம்


Thanks FB


அவனே இவன்
ஹரியும் சிவனும் ஒன்றே 3a
புருஷா என்கிற  புருஷ மிருகம் 

தருமர் ராஜகுரு யாகம் செய்ய விரும்பினார்.

அந்த யாகம் நடத்த புருஷா மிருகத்தின் பால் தேவைபட்டது.

புருஷா மிருகம்
மனித முகத்தையும் சிங்க உடலையும் 
கொண்ட மிருகம்.

இந்த புருஷா மிருகம் சிவனின் மேல் அதீத பக்தி கொண்டது.
ஸ்ரீ மகாவிஷ்ணுவை அதற்கு பிடிக்காது.

குபர வனத்தினை பாதுகாக்கும் வேலையை இந்த புருஷா மிருகம் செய்கின்றது.

சிவன் விழாக்காலங்களில்
இந்த புருஷா மிருகத்தின் வாகனத்தின் மீது அமர்ந்து வீதியுலா வருவதை காணலாம்.

பதினாறு வகையான தீப வழிபாடுகளில் 
இந்த புருஷா மிருக தீப வழிபாடும் உள்ளது.

மூன்று கதைகள் புருஷா மிருகத்தினை
மையமாக வைத்து இருக்கிறது.

கதை 1

காசியில் புருஷ மிருகம் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தது.

மதுரைக்கு அருகே திருவாதவூரில் கடும் வறட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் வறட்சியை போக்கி மழை பெய்ய வைக்க வேண்டினர்.

காசியில் இருக்கும் புருஷ மிருகத்தை அழைத்து வந்து யாகம் செய்தால் மழை பெய்யும்,
புருஷா மிருகத்தினை பீமன் அழைத்தால் வரும் என கூறினார் ஸ்ரீமகாவிஷ்ணு.

மக்கள் பீமனிடம் வேண்டினர்.

பீமன் புருஷா மிருகத்தினை திருவாதவூர் அழைத்து வந்து யாகம் செய்தார்.

மழை பொழிந்தது. 

வறட்சி நீங்கியது.

தான் வந்த வேலை முடிந்து விட்டது 
நான் திரும்ப காசி போகிறேன் என்று சொன்ன புருஷா மிருகத்திடம்
நீ இந்த ஊரின் காவல் தெய்வமாக இரு என்றார் ஸ்ரீ மகாவிஷ்ணு.

அதன்படி இந்த ஊரின் காவல் தெய்வம் ஆனது.

திருவாதவூரில் உள்ள சிவபெருமானை 
பிரம்மாவின்  சத்திய லோகத்தில் இருந்து புருஷா மிருகம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாக தலபுராணம் தெரிவிக்கின்றது.

அந்த கோவில் தீர்த்தம் 
புருஷா தீர்த்தம்
புருஷா மிருகத்தினால் உருவாக்கப்பட்டது..

புருஷா மிருகம் இந்த ஊர் கண்மாயின்
கரையில் உள்ள இரண்டு பெரிய கல் தூண் மேல் இருந்து இந்த ஊரை காக்கிறார். 

பீமனும் புருஷா மிருகமும் நண்பர்களான கதையும்,
சிவபெருமான் தவிர்த்து மற்றவர்களை வணங்காத புருஷா மிருகம்  மகாவிஷ்ணுவை வணங்கியவை  அடுத்த பதிவுகளில்...

தொடருவோம்...

Thursday, June 15, 2023

அறுபது 60 வயதில் என்ன விசேஷம்


#அறுபது_வயதில்_என்ன_விசேஷம்

ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.

“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”

என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்
தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.

இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.

ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.

ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).

முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.

60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.

ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||

இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.

எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:

சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.

சாஸ்த்ரக் கணக்கு:

விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.

“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”

ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.

“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||

மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).

விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.

துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.

(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்தி
லிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)

சதாபிஷேகச் சிறப்பு:

த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ

வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||

நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.

தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.

வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்

மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.

பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.

இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.

சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:

1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.
18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!!
19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம்.
26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம்.

கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:

81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.

சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||

ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||

சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||

நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்

இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

நன்றி : சீனிவாசன் வைத்தியலிங்கம்

Friday, June 9, 2023

மாந்தி கிரகத்தை பற்றியும், மாந்தியுடன் இணையும் கிரகத்தைப் பற்றியும்


#மாந்தி கிரகத்தை பற்றியும், மாந்தியுடன் இணையும் கிரகத்தைப் பற்றியும் பார்ப்போம்.
Thank Fb
மாந்தி என்றால் குரங்கு என்று பொருள். சனிபகவானின் புத்திரர் ஆவார். சனிபகவானுக்கு இரண்டு புத்திரர்கள் ஒருவர் #குளிகன் (சுபர்) மற்றொருவர் #மாந்தி (அசுபர்) குரங்கு குணம் என்பது சேட்டைகள் செய்வதுதான். அதனால் தான் குரங்கு சேட்டை என்று பெயர் ஆனது.

மாந்தி ஒரு நொடியில் வெளிப்படக்கூடிய கிரகம். அதாவது கண் இமைக்கும் நேரத்தில் தோன்றி மறைய கூடிய தன்மை. ( உதாரணம் : மின்னல் எனலாம் ) மாந்தி மலைநாடு ஆன கேரளத்தில் கணித்து பலன் சொல்லப்படுவதாகும். 

மாந்தி இருக்கும் இடத்தை கெடுக்கும். அவ்வாறு கெடு பலன்களை தரக்கூடிய கிரகம் கால புருஷனின் 10, 11 ஆம் இடங்களில் இருந்தால் நற்பலன்களை தரும். ஏனெனில் 10, 11 ஆம் இடம் சனி பகவானின் வீடு அதனால் தந்தையிடம் மட்டும் அடங்கி செல்வார். மாந்தி மற்ற இடங்களில் அவர் தனது விளையாட்டை காட்டி விடுவார்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருக்க ஜாதகரின் செயல்பாடு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். ஒரே மனநிலையும், ஒரே நிலைபாட்டையும் இருக்க முடியாது. 

"மாந்தி + சூரியன்" இணைவது தந்தைக்கு ஆயுள் கண்டத்தை தரும். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அரசு விரோதமும் ஏற்படும். ஜாதகரின் தந்தைக்கு அவப் பெயர்கள் ஏற்படும்.

"மாந்தி + சந்திரன்" இணைவது தாயாரின் மனநிலையை பாதிக்கும். தாய்க்கு ஆயுள் கண்டம். தாயாரின் உடல்நிலை குறைபாடுகள் தரும். ஜாதகருக்கு சித்த பிரம்மை ஏற்படும்.

"மாந்தி + செவ்வாய்" இணைவது இளைய சகோதரருக்கு கெடு பலனை தரும். சகோதரனை புரிந்து கொள்ள முடியாது. ஜாதகருக்கு வெட்டு காயங்கள் ஏற்படும். அதேபோல கவனக்குறைவால் அடிக்கடி விபத்துகளையும் சந்திக்க நேரிடும்.

"மாந்தி + புதன்" இணைவது தாய் மாமாவுக்கு கண்டங்களும், கஷ்டங்களையும் தரும். திடீர் ஞாபகம்  மறதி ஏற்படும். நரம்பு துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தும். புத்தியை கடன் கொடுத்து பரிதவிக்கு செய்யும்.

"மாந்தி + குரு" இணைவது புத்திரர்களால் கஷ்டம் கவலைகள் ஏற்படும். புத்திர தோஷத்தையும் தரக்கூடியது. ஜாதகர் அடிக்கடி அவமானங்களை சந்திப்பார். நல்லது செய்தாலும் கெட்ட பெயர்கள் ஏற்படும்.

"மாந்தி + சுக்ரன்" இணைவது மனைவி சுறுசுறுப்புடன் இயங்கும் தன்மை. மனைவிக்கு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் பழக்கம் இருக்கும். ஆசைகளால் பணத்தை இழக்க கூடிய நிலை தரும். அஜாக்கிரதையால் பொருள் இழக்க கூடிய நிலையம் தரும்.

"மாந்தி + சனி" இணைவது தொழிலில் நல்ல நிலைப்பாட்டை தரும். தொழிலில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். கஞ்சத்தனமும், வியாபாரத்தில் கரார்ராகவும் செயல்படுவார். யாரையும் உபசரிக்கும் குணம் இருக்காது.

"மாந்தி + ராகு" இணைவது அவசரத்தால் எதையும் செய்து பின்னர் கவலைப்படுவார். பேச்சில் உண்மை இருக்காது. சொல்வதை நினைவில் வைக்க மாட்டார். சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடிய குணம் இருக்கும்.

"மாந்தி + கேது" இணைவது குடும்பம் வறுமை நிலையில் இருக்கும். பொறுப்புணர்வுகள் இருக்காது, விளையாட்டுத்தனமுடன் இருப்பார். தீய பழக்கங்கள் ஏற்படும். அடுத்தவர்களுக்காக உதவி செய்யப் போய் தான் தண்டனை அனுபவிக்கக்கூடிய நிலை தரும். 

மாந்தி வழிபாடுகள் :-

முறையான உடல் பயிற்சி, தியானம் செய்தல், தாய் தந்தைக்கு உதவிகள் செய்தல். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நன்மை தரும். குரங்குகளுக்கு உணவளிப்பது மூலமும் நன்மை தரும். நெற்றியில் செந்தூரம் வைப்பதன் மூலமும் மாந்தியின் கெடு பலன்கள் குறையும். எப்போதும் நேர்மறை எண்ணங்களை பின்பற்றுவதன் மூலம் மாந்தியின் கெடு பலன்களை குறைக்கும்

#ஆன்லைன்ஜோதிடம் #ஜோதிடர்சதாசிவன் #ஜோதிடம் #காரைக்குடிஜோதிடர்சதாசிவன் #karaikkudijothidar 

நன்றி!

ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம் 
காரைக்குடி.
 
Contact (or) WhatsApp : 6381453432

ஜோதிட சார்ந்த பதிவுகளும், கட்டுரைகளும் இந்த குரூப்பில் பதிவு செய்யப்படும். விருப்பம் உள்ள நண்பர்கள் இக்குரூப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

WhatsApp Group : https://chat.whatsapp.com/IxKFbfbfIFi0jNfiM3nRHX

தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய உங்களது பெயர் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் எனது "வாட்சப்" நம்பரில் அனுப்பவும். (ஜாதகம் பார்க்க கட்டணம் : ₹501/-)

[ குறிப்பு :- அடிப்படை மற்றும் உயர்நிலை தெரிந்தவர்களுக்கு ஜாதகம் பலன் சொல்லும் பயிற்சி நடைபெற்று வருகிறது விருப்பமுள்ள நண்பர்கள் எனது செல் நம்பரில் தொடர்பு கொண்டு பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ]

பூஜை_துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது


Thank fb
பூஜை_துவக்கத்தில் 

தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?

சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...

சங்கல்பம்

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.

இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.

“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர 
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”

என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். 

ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.

பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.

“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.

இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.

அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.

இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;

அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;

சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;

சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;

ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;

இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;

மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;

ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;

அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;

பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;

பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;

சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே; 

இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;

பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;

பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;

எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;

நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;

ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;

யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;

ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:

மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.

கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;

மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;

அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;

உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.

2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.

4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.

5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.

6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

Tuesday, June 6, 2023

நவாவரண பூஜை


நவாவரண பூஜை  பற்றி அறிந்து கொள்ளுங்கள்

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். 

பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். 

இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். 

இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. 
இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. 

ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 
9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. 

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். 

எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

ஓம் சக்தி பராசக்தி 🙏

Friday, June 2, 2023

தந்திர யோகம்

🥀 தந்திர யோகம்! 

மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஒன்றாகும்.

இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்த நிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வெவ்வேறு பெயர்களாலும் உணரப்பட்டது.

ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தான்.

அவ்வழிகள் யாதெனில் 
பக்தி மார்க்கம், 
ஞான மார்க்கம், 
கர்ம மார்க்கம், 
யோக மார்க்கம், 
தந்திர யோக மார்க்கம், 
என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்
**************
பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல். என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும். அடுத்து

ஞானமார்க்கம் 
***************
அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும்.

கர்ம மார்க்கம் 
**************
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜுனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடைந்து முக்தி பெற கடைபிடிக்கப்படுபதே கர்ம மார்க்கமாகும். 

யோக மார்க்கம் அறிக 
**********************
அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும். 

தந்திர மார்க்கம்
****************
தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும்.

புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும். மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும்.

இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது..

யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும். உதாரணமாக ஒன்றை அறியுங்கள்.

மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர்.

பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான்.

குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன.

இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன.

இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தாற் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது .
மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளும் நல்லது சரியானது என சில கலைகள் தான் உள்ளது. எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது, அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம், சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம், அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பிழையில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும்.

இங்கு  பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும். தந்திர யோகத்தின் வெற்றி மன ஈடுபாட்டில்தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

இயற்க்கையை எதிர்க்காமலும், தர்மத்தை மீறாமலும் , எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ, அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்ல முடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும். இதுவும் தந்திரகலையாகும் .

நம்மால் முடிக்கமுடியாத செயலை அதை முடிக்கும் தகுதியானவரை தேர்ந்தெடுத்து ஏவி செயல் படுத்துவதும் தந்திர கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் .ரகசியமாக இருந்தால் தான் எதிரியை எதிர்க்காமல் வெல்ல முடியும் .எதிர்ப்பை பகையாகாமல் பலனை நம் வசமாக்க முயல்வதும் தந்திரக்கலையாகும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகொள்வது வீரம். எதிரியை நண்பனாக்கி அன்பால் வெற்றிகொள்வது தந்திரமாகும் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திர அறிவாகும் .

நீங்கள் உங்களுடைய உழைப்பையும் பலத்தையும் நம்புவது அறிவு, இதன்கூடவே வெற்றி பெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முன்னுக்கு வர முயல்வது தந்திரம் .

முன்னோர்கள் நமக்கு கொடுத்துச்சென்றுள்ள புரானங்கள் , இதிகாசங்கள் யாவும் சாமான்யருக்கு கதையாக தோன்றுகிறது இதில் பல திருத்தங்களை கவிஞர்களும் தன் பங்கிற்க்கு செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். ஒருவிஷயத்தை நன்றாக கவனம் வையுங்கள் சாதாரனமாக பார்க்கும் கேட்கும் படிக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே பார்ப்பது சராசரி அறிவாகும். ஆனால் அதன் உள்நுழைந்து காரணங்களை தேடுவது பகுத்தறிவாகும். ஆனால் இதையும் கடந்து நடந்த நிகழ்வுகள் யாவும் வாழ்க்கை சூத்திரங்கள் என்றும் நம் வழிகாட்டி மரங்கள் என்றும் யார் எடுத்து கையாழ்கிறாறோ அவரே ஞான அறிவு பெற்றவராவர் .

மகாபாரதத்தை கேட்கும் போது சூது வாதம், வீரம், வேதனை, வெற்றி, பாசம், பிரிவு என்ற சம்பவங்களையே உணர்வோடு பார்த்து சலிப்பும், ஆர்வமும் கொள்கிறோம் . நம்மவர்களுக்கு  உணர்வுகளின் தாக்கம் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளதால் எல்லாவற்றையுமே தன் வாழ்க்கை சம்பவங்களோடு ஒற்றுமை படுத்தி உணர்ச்சி வசப்பட்டே பழகிவிட்டது. ஆனால் அதை கடந்து மகாபாரதத்தை ஆய்வு செய்தால், அதுவும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் பல அரிய தந்திர ரகசியங்கள் கிடைக்கும் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்னரும், கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையான்டது முழுக்க தந்திரம் தான். தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சிவசப்படுதலோ, கோபப்படுதலோ கூடாது. எதையும் எளிதில் நம்புதலும் கூடாது. இதை கடைசி நேரத்தில் சகுனியால் கடைபிடிக்க முடியாமல் போனாது. இதுதான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு அடித்தளம் போட்டது. ஸ்ரீகிருஷ்னன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெற்றியை பாண்டவருக்கு பெற்றுத்தந்தார். தர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் ஸ்ரீகிருஷ்னர். அதர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் சகுனி . 

ஆக தந்திரம் நல்லவனுக்கும் பலன் கொடுக்கும் கெட்டவனுக்கும் பலன் கொடுக்கும். தந்திரத்திற்க்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அருவடை செய்வோம். இதை மனதில் வைத்து தந்திரத்தை கையாள வேண்டும். கெட்டவருக்கு சகுனி போன்ற ஒருவர்தான் துணைக்கு தந்திரமாக வந்து இருதியில் தோல்வியை பெற்று தருவர். ஆனால் நல்லவனுக்கு ஸ்ரீகிருஷ்னரை போல தெய்வமே துனையாக வந்து இறுதி வரை உடனிருந்து வெற்றியை பெற்றுத்தரும். இதை மறவாதீர்கள் .

மூலிகையை பயன்படுத்துவது, யந்திரம், முத்திரை, ஆசனம், ஆசனவிரிப்பு, ஆடையின்வண்ணங்கள் , விருட்சங்கள், மந்திரம், தீட்சை, முகூர்த்தம், பட்சி, ஓரை பார்த்தல் , அஞ்சனம் இடுதல், எதிரியின் உடமையை கையாழுதல், அஷ்டகர்ம முறைகள், பலவித மலர்கள், யாகங்கள் செய்தல், மனதை அடக்குதல், உலோகம், நவரத்னம், பரிகாரமுறைகள், சமர்பணம் செய்தல், வணக்கம் செய்தல், முயற்ச்சித்தல் இன்னும் பல்வேறு செயல்களிலும் தந்திரங்கள் மறைந்துள்ளது . காரணகாரியம் இல்லாமல் முன்னோர்கள் எதையும் சொல்லிச்செல்லவில்லை எல்லாம் தந்திரமே .

தந்திரம் என்பது புத்தி யோசனை செயல் விவேகம் இவைகளோடு பின்னிபினைந்தது ஆகும். தந்திரம் என்பது எதிரியின் வலயில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று, எதிரியை தன் வலையில் விழவைப்பதும் தந்திரமாகும். ஆயிரம் பேரை எதிர்த்து சண்டை இடுவதை விட எதிரி கூட்டத்தின் தலைவன் ஒருவனை பிடித்து விட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம். இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும். எதிரியோடு மோதுவதை விட எதிரியை தன்வசப்படுத்த முயல்வதே தந்திரமாகும்.

நமக்கு தந்திரத்தை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அன்பு, உண்மை, தன்னம்பிக்கை, தர்மம் , விடாமுயற்ச்சி, புரிந்து செயல்படுதல், ஊக்கம் இவைகளை மட்டுமாவது பின்பற்றுங்கள் கூடவே ரகசியத்தை கடைபிடியுங்கள், மற்றவர் நம் மேல் அன்பாய் இருக்க என்ன அனுகுமுறை அவசியமோ அதை கடைபிடியுங்கள் போதும். இறை சக்தி உங்களை நாடிவர இதுவே போதும். இந்த அனுகுமுறையும் தந்திரக்கலைதான்.

-பைரவ கல்பம் என்னும் தந்திர யோக நூலில் இருந்து.....
Thank to FB.. 

Thursday, June 1, 2023

சிவபூஜைக்கு உரிய மலர்கள்

சிவபூஜைக்கு உரிய மலர்கள்

ஞான சர நூல் (பாகம் -2)

thank to Fb

ஞான சர நூல் (பாகம் -2)
-------------------------------------------
                         மகாதேவனாகிய சிவபெருமானே ஆதி யோகியாக வந்து அன்னை பார்வதி தேவிக்கு அளித்த இந்த சிவரகசியம் தான் சர வித்தை என்பது. நம் சித்தர்களின் குரல் அன்பர்களின் நலம் கருதி முழு ரகசியங்களையும் இரண்டு பாகங்களாக்கி உலக நன்மைக்காக பதிவிடுகிறேன். எங்கு நீங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷ ரகசியங்கள் இவை. சிவனருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும்....
பயன்படுத்தி கொள்ளுங்கள்......

(215) தேவி கேட்கிறாள் ஹே... தேவாதி தேவா! ஸ்வரத்தினாலே திரிகால ஞானம் எப்படியுண்டாகிறது.

(216) ஹே.... பார்வதி! பூதபவிஷ்ய வர்த்தமானம் இம் மூன்று காலங்கள் ஜெயம் முதலான சுபம், தோல்வி முதலான அசுபம், இதுகளினுடைய ஞானம் ஸ்வரத்தின் ஞானத்தினாலேயே யுண்டாகிறது. இதற்கு வேறு உபாயமில்லை.

(217) தத்துவத்தினாலேயே சுபா சுபகாரியம், ஜெயம், அபஜெயம், சுபீக்ஷம், துர்பிக்ஷம், இவைகள் உண்டாகின்றன. தத்துவம் காலத்திரயத்தையும் அனுசரித்திருக்கிறதென்று, ஞானிகன் சொல்லுகிறார்கள்.

(218) ஹே... தேவாதி தேவா! சம்சாரசாகரத்தில் மனிதனுக்கு சர்வ காரிய சித்தியையும் செய்யும்படியான சிநேகிதன் யார்? அதை எனக்குச் சொல்லவேண்டும்.

(219) ஹே.... தேவி! மனிதனுக்கு பிராணன், முக்கிய மித்திரனும் சகாவாயுமிருக்கின்றான். பிராணனைப்போல் பந்து வேறொருவருமில்லை.

(220) ஹே... சங்கா! வாயு பிராணணிடத்தில் எப்படியிருக்கிறது. தேகம் எப்படி பிராண ரூபமாயிருக்கிறது, தத்துவத்தினிடத்தில் சஞ்சாரம் செய்கின்ற பிராணனை எப்படி யோகியானவனறிகிறான். இதை எனக்குச் சொல்லவேண்டும்.

(221) சங்கரர்-சரீரம் என்பது ஒரு நகரம். இதில் வாயு, ரக்ஷகன். இவன் உட்செல்லும்போது 10 அங்குலமும், வெளிக்கிளம்பும்போது 12 அங்குலமுமாய்ச் செல்லுகிறான்.

(222) நடையில் 24 அங்குலம், ஒட்டத்தில் 42 அங்குலம்,  மைதுன காலத்தில் 65 அங்குலம், நித்திரையில் 100 அங்குலம். இவ்விதமாக பிராணனுடைய வேகம் உண்டாகிறது.

(223) பிராணனுடைய சுபாவமான வேகம் 12 அங்குலந்தான். ஆனால் போஜன காலத்திலும், பேசும்பொழுதும் 18-அங்குல வேகமுண்டாகிறது.

(224) பிராணனுடைய வேகம் 12 அங்குலமென்று சொல்லியிருக்கிறது.

(224) அதில் ஒரு அங்குலம் யோகாப்பியாசத்தான் குறைந்தால் அவனுக்கு நிஷ்காமியப் பிராப்தி யுண்டாகிறது. 2-இரண்டு அங்குலம் குறைத்தால் ஆனந்தமுண்டாகிறது. 3-மூன்று அங்குலம் குறைத்தால் கவித்துவ சக்தியுண்டாகிறது. 4-நான்கு அங்குலம் குறைத்தால் வாக்குப் பலிதமுண்டாகிறது. 5-ஐந்து அங்குலம் குறைத்தால் தூர திருஷ்டி ஏற்படுகிறது. 6-ஆறு அங்குலம் குறைத்தால் ஆகாய கமனம், 7-ஏழு அங்குலம் குறைத்தால் பிரசண்ட வேகமுண்டாகிறது.

(226) 8-எட்டு அங்குலம் குறைத்தால் சித்தி, 9-ஒன்பது அங்குலம் குறைத்தால் நவநிதிப் பிராப்தம்.

(227) 10-பத்து அங்குலம் குறைத்தால் தசமூர்த்தித்துவம் (அநேக ரூபம்). 11-பதினோறு அங்குலம் குறைத்தால் தன்னிழற்றுப் போகிறது. 12-பண்ணிரண்டு அங்குலம் குறைத்தால் அம்சகதி கங்காமிர்தா பிராசனம், இவ்விதமாக 12 அங்குலத்தையும் ஜெயித்தால் அந்த வாயுவாவது சுகசிகை பரியந்தம் பூர்ணமாய் வியாபிக்கிறது. பிறகு அவனுக்கு எப்பொழுதும் அமிர்த பானம் உண்டாகிக்கொண்டேயிருத்தலினால் ஆகாராதிகள் தேவையில்லை.

(228) எல்லாக் காரியத்திலும் பலத்தைக் கொடுக்கும்படியான இந்தப் பிராண விதியைச் சொன்னேன். பிராண வேகத்தினுடைய அப்பியாச் சாராம்சங்களை குருவைத் தவிர கோடி சாஸ்திரங்களினாலும் அறிய முடியாது. குருவாக்கியத்தினாலேயே அறியவேண்டும்.

(229) சூரிய உதயத்தில் சந்திரனும், அஸ்தமன காலத்தில் சூரியனுமிருந்தால் உத்தமம். பிராப்த யோகத்தினால் அவ்விதம் நடக்காவிட்டால் மத்தியானம் அல்லது மத்திய இரவில் அவ்விதமுண்டானால் அது சுபத்தை கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.

(230) தூர யுத்தத்தில் சந்திரனும், சமீப யுத்தத்தில் சூரியனும் ஜெயத்தைக் கொடுக்கிறார்கள். உதயமாயிருக்கப்பட்ட நாடியின் பக்கத்துக்காலை முதலில் வைத்து நடக்க சர்வ சித்தி.

(231) பிரயாணம், கல்வியாணம், நகரப்பிரவேசம் முதலான சுப காரியங்களுக்கு சந்திரநாடி எப்பொழுதும் சுபத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.

(232) அயனம், திதி, வாரம், இவைகட்குரிய ஸ்வரங்களும், தத்துவங்களும் சரியாய் நடக்கும்பொழுது ஒருவன் யுத்தத்திற்கு போனால் அவன் தன்னுடைய ஸ்வா ஸ்தம்பனத்தினால் சத்துருவை ஜெயிக்கிறான். அவனுக்கு வைகுண்ட லோகத்திலும் விக்கினம் கிடையாது.

(233) ஜீவாங்கத்தினிடத்தில் வஸ்திர பரிதானம் செய்துகொண்டு "ஜீவம் ரக்ஷ,ஜீவம் ரக்ஷ" யென்று யாரொருவன் ஜெபம் செய்கிறானோ அவன் யுத்தத்தில் உயிருடனிருந்து சர்வ பிருதிவியையும் ஜெயிக்கிறான்.

(234) பிருதிவி, அப்பு இந்த தத்துவத்தில் சாந்த கர்மத்தைச் செய்யவும். அக்கினி, வாயு, இந்த தத்துவத்தில் உக்கிர காரியங்களைச் செய்யவும். ஆகாச தத்துவத்தில் மேற்சொன்ன இரண்டு காரியங்கள் செய்ய புறப்படலாகாது.

(235) பூர்ணாங்கத்தினாலேயே ஆயுதங்களைத் தரிக்க வேண்டியது. அந்தப் பக்கத்து கைகளினாலேயே பிரயோகிக்கவும் வேண்டும். கீழே ஆயுதங்களை வைக்கும்பொழுதும் பூர்ணாங்க கையினலேயே வைக்கவேண்டும். இவ்விதம் செய்வானாகில் எப்பொழுதும் ஜெயமே யுண்டாகிறது.

(236) வாகனங்களில் ஏறும்போது பிராணவாயுவை ஆக்ரஷ்ணம் செய்து கொள்ளவேண்டியது. குதிரையின் இடது பாகத்தில் காலை வைத்து ஏறவேண்டியது. இவ்விதம் செய்தால் சர்வ காயமும் சித்தியாகிறது.

(237) சூன்யாங்கத்தில் சத்துருவினுடைய சைன்னியமும், பூர்ணாங்கத்தில் தன்னுடைய சைன்னியமுமிருக்கும்படி அமைத்துக்கொண்டு பூர்ண தத்துவத்தில் யார் யுத்தம் செய்கிறானா, அவன் தனியே சர்வ பிருதிவியையும் ஜெயிக்கிறான்.

(238) சரீரத்தில் எந்த நாடி நடக்கிறதோ அந்தப் பக்கம் தெய்வ வாசமிருக்கிறது. அந்தப்பக்கத்துக் காலை அதற்குரிய திசையில் முன் எடுத்து வைத்துப்போனால் சர்வ காரிய சித்தியுண்டாகும்.

239 முதலில் முத்திரையைச்செய்து பிறகு யுத்தம் செய்ய வேண்டியது. எவனொருவன் சர்ப்ப முத்திரையை செய்கிறானோ அவனுக்கு சந்தேகமற சித்தியுண்டாகிறது.

(240) சந்திரன் அல்லது சூரிய ஸ்வரம் நடக்கும்பொழுது யுத்தம் செய்யவேண்டுமென்கிற இச்சையுடன் வருகிற வீரனொருவன் சூன்ய பாகத்தில் நின்றால் தோல்வியும், பூர்ணாங்கத்தில் நின்றால் ஜெயமுமென்று ஸ்வர தத்துவத்தை யறிந்தவன் அறியவேண்டியது.

(241) எந்த திசையை நோக்கி வாயு நடக்கின்றதோ, அந்த திசையை நோக்கி நின்று, யுத்தம் செய்தால் இந்திரனே யுத்தத்திற்கு வந்தாலும் அவனை ஜெயிக்கிறான்.

(242) எந்த நாடியில் வாயு நடக்கிறதோ, அந்தப் பாகத்தின் பிராணனை காது வரையில் ஆகர்ஷ்ணம் செய்து யுத்தம் செய்தால் இந்திரனையும் ஜெயிக்கலாம்.

(243) எவனொருவன் சத்துருவினுடைய அடி விழாதபடி தன் பூர்ணாங்கத்தை காப்பாற்றிக்கொள்ளுகிறானோ, அவனைச் சத்துரு எவ்வளவு பலவானாயிருந்தாலும் வெல்ல முடியாது.

(244) கையினுடைய அங்குஷ்டம், தர்சனி இந்த விரல்களினாலும் காலின் அக்குஷ்டத்தினாலும் தொனிக்கவேண்டியது. இவ்விதம் செய்வதினால் லக்ஷக்கணக்கான ஜனங்களிடத்திலும் யுத்தம் செய்து ஜெயிக்கிறான்.

(245) சூரியன் அல்லது சந்திரன் நடக்கும்போது, இடையிலே வாயு நடந்து கொண்டிருந்தால் ஜெயத்தை இச்சித்த ஒருவன் திக் ரட்சனம் செய்யவேண்டியது.

(246) சுவாசமானது உள்ளே பிரவேசிக்கும்போது தூதன் தான் இச்சித்த வார்த்தையை சொல்வானாகில், அந்த காரியம் சித்தியடையும். சுவாசமானது வெளியே செல்லும்போது சொல்வானாகில் காரியம் ஒரு நாளும் முடியாது.

(247) லாபகரமான எந்த சுபகாரியமும் பூர்ணாங்கத்தில் ஒருவன் நின்று சுவாசம் உள்ளே பிரவேசிக்கும்போது கேட்டாலும் சொன்னாலும அப்படியே அந்தக்காரியம் சித்தியாகிறது. சுவாசம் வெளிப்படும்போது சொன்னாலும் கேட்டாலும் காரிய ஹானியுண்டாகிறது.

(248) புருஷர்களுக்கு சூரிய நாடியும் ஸ்திரீகளுக்குச் சந்திரனும், யுத்தகாலத்தில் கும்பகமும் சிலாக்யம். இவ்விதமாக மூன்று நாடிகளினுடைய மூன்று வேகத்தையும் அறியவேண்டியது.

(249) ஹகார ஸகாரத்தினுடைய பேதம் அறிந்தாலொழிய சுரக்கியானம் உண்டாகமாட்டாது. ஆகையால் ஹகார ஸகாரத்தி னுடைய சொரூபம் அறிய வேண்டியது அறிவானேயானால, ஜீவன் ஹம்ஸ ஸோகம் என்கிற பதத்தினால் மேலான எல்லாப் பதத்தையுமடைகிறது.

(250) சூன்யாங்கமாயிருப்பதை பூரணம் செய்து ஜீவாங்கத்தை காப்பாற்றவேண்டியது. இவ்விதம் செய்தால் ஜெயப்பிராப்த முண்டாகிறது. ஜீவாங்கத்தை காப்பாற்றாமல் சூன்யாங்கத்தை காப்பாற்றினால் அழிவு எற்படும்.

(251) வலது அல்லது இடது பக்கம் கேள்வி கேட்கிற ஒருவன் நின்று யுத்தத்தில் சென்றிருக்கிற ஒருவனைப்பற்றி கேட்டால் அவன் நின்ற பக்கம் உனக்கு பூரணமாயிருந்தால் கெடுதியுண்டாகாதென்றும், சூன்யமாயிருந்தால் கெடுதி யென்றும் சொல்லவும்.

(252) கேள்வி கேட்கிற காலத்தில் பிருதிவி தத்துவம் நடந்தால் வயிற்றில் அடி, அப்பு தத்துவமாயிருந்தால் காலிலடி, அக்கினி தத்துவமாயிருந்தால் தொடையிலடி, வாயு தத்துவமாயிருந்தால் கையிலடியென்று சொல்லவும்.

(253) ஆகரசதத்துவமாயிருந்தால் தலையிலடியென்றும் சொல்லவும். இவ்விதமான ஐந்து விதக் கெடுதியை ஸ்வரசாஸ்திரத்தில் சொல்லுகிறது.

(254) யுத்தகாலத்தில் யுத்தத்திற்கு போகிறவனுக்கு சந்திர ஸ்வமாயிருந்தால் இவனுக்கு ஜெயமும், சூரிய ஸ்வாமாயிருந்தால் எதிரிக்கு ஜெயமுமுண்டாகிறது.

(255) யுத்த ஜெய விஷயத்தில் சந்தேகமுண்டானால் நாடியினுடைய மத்திய பாகத்தை கவனிக்கவேண்டியது. பிராணன் சுழிமுனையில் நடந்து கொண்டிருந்தால் யுத்தகளத்தில் சத்துருவினால் சங்கடமுண்டாகிறதென்றறியவும்.

(256) எந்த நாடி நடக்கிறதோ, அந்த நாடிக்கு விரோதமான திசையை நோக்கி நின்று யுத்தம் செய்கிறவலுக்கு ஜெயமுண்டாகிறது நிச்சயம். உதாரணமாக சந்திரநாடி நடக்குமானால் சூரியதிசையாகிய கிழக்கும் வடக்கும், சூரியநாடி நடக்குமானால் சந்திரன் திசையாகிய தெற்கும் மேற்குமாகிய திசையை நோக்கி நின்று யுத்தம் செய்ய ஜெயமுண்டாகிறது.

(257) யுத்தகாலத்தில் தனக்கு சந்திர நாடி நடந்து கொண்டிருந்தால் ஜெயமுண்டாகிறது. சத்துரு வசியமாகிறான்.

(258) யுத்தகாலத்தில் சூரியஸ்வரம் நடந்தால் யுத்தம் செய்கிற னுக்கு (தெய்வம், இராக்ஷதாள், மனுஷியாள் இவர்கள் யுத்தத்தில்) ஜெய முண்டாகிறது.

(259) எவனொருவன் சந்திரநாடியில் யுத்தத்திற்குப் பிரயாணப்படுகிறானோ அவனை சத்துரு ஜெயிக்கிறான். சுழிமுனையில் பிரயாணம் செய்தால் யுத்தம் நடவாமல் எங்கேனும் சும்மாவிருக்கும்படி நேரிடும். சூரியநாடியில் புறப்பட்டால் நிச்சயமாய் ஜெயம் கிடைக்கும்.

(260) இரண்டு பேர்கள் வந்து யுத்த விஷயமாய் கேள்வி கேட்டால், எவனொருவன் பூர்ணாங்கத்திலிருந்து கேட்கிறானோ, அவன் ஜெயமடைவானென்றும், சூண்யாங்கத்தில் நின்று கேட்கிறவன் அபஜெயமடைவானென்றும் சொல்லவும்.

(261) பூர்ணாங்கத்தில் சத்துரு நின்றால் அவனைத் தனக்கு சூன்யாங்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது. சூன்யாங்கத்தில் எதிரி நின்றால் எதிரி நிச்சயமாய் மரணமடைகிறான்.

(262) கேள்வி கேட்பவன் சந்திரநாடியிலிருந்து கேட்டால், அவன் வாயிலிருந்து புறப்படுகிற கேள்வியின் அக்ஷரங்கள் அல்லது ஜெயவிஷயத்தைப் பற்றிய நாம அக்ஷரங்கள், ஒற்றையெழுத்துக்களா அல்லது இரட்டை எழுத்துக்களாவென்று எண்ணிப்பார்த்து, இரட்டையாயிருந்தால் ஜெயமும், ஒற்றையாயிருந்தால் அபஜெயமும்; அதே சூரியநாடியில் ஒற்றை எழுத்துக்கள் ஜெயமும், இரட்டை எழுத்துக்கள் அபஜெயமுமென்றறியவும்.

(263) கேள்வி கேட்பவன் சந்திரஸ்வரத்தின் பக்கமாய் நின்று கேட்டால் யுத்தம் ஆரம்பமென்றும், சூரியஸ்வரத்தின் பக்கமாய் நின்று கேட்டால் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதென்றும் சொல்லவும்.

(264) பிருதிவி தத்துவத்தில் யுத்தம் ஆரம்பித்தால் யுத்தம் சமமாக இருக்கும். அப்பு தத்துவத்தில் ஜெயமுண்டாகிறது. தேயு தத்துவத்தில் அபஜெயம் வாயு ஆகாச தத்துவத்தில் மரணமுண்டாகிறது. 

(265) எக்காரணத்தினாலாவது அல்லது திகிலினாலாவது இன்ன ஸ்வரம் நடக்கிறதென்பது நிக்ஷயிக்கமுடியாத காலத்தில் புத்திமான்களாயிருக்கப்பட்டவர்கள் கீழ் கண்டவாறு செய்யவும்.

(266) சலனமில்லா மனதுடன் தேகத்தைக் கோணலில்லாமல் சமமாய் வைத்துக்கொண்டு கையிலிருந்து ஒரு புஸ்பத்தை எதிரே பூமியில் போடவும். அது எந்தப்பக்கமாய் விழுகிறதோ அது பூர்ணாங்கமென்றும் மற்ற பாகம் சூன்யாங்கமென்றுமறியவும்.

(267) யாதொரு காரியத்தைச் செய்யும்பொழுது நின்றுகொண்டாவது அல்லது உட்கார்ந்து கொண்டாவது மன உற்சாகமாய் யாரொருவன் பிராண வாயுவை உள்ளே இழுக்கிறானோ  அவன் அந்தக் காரியத்தை சித்தி செய்கிறான்.

(268) காலன், சஸ்திரம், சர்ப்பம், சத்துரு, வியாதி, திருடன், இவைகள் சூன்யாங்கத்திலிருந்தால் அவனுக்கு மேற்கண்டவைகள் யாதொரு தீங்கும் செய்யமுடியாது.

(269) ஜீவ ஸ்வரத்தினாலேயே வாயுவை நிறுத்தவேண்டும். திரும்பவும் அதினாலேயே விடவேண்டும். தூது, கிரீடை, ஜீவ சுரத்தினுடைய அங்கத்தினால் செய்தால் ஜெயப்பிராப்தியுண்டாகிறது.

(270) ஸ்வரக்கியானம் யாரோருவனுக்கு இருக்கிறதோ, அவனை ஒருவராலும் ஜெயிக்க முடியாது. அவனுக்கு விரோதமாய் கோடிக்கணக்கான விரோதங்கள் செய்யினும் நிஷ்பலமாகிறது. ஸ்வர ஞானி இகத்திலும் பாத்திலும் பலிஷ்டனாகிருன்.

(271) சில அரசர்களுக்கு பத்து, நூறு, பதினாயிரம் லட்சக்கணக்கான வீரர்களுடைய பலமும் இந்திரன் பிரம்மாதி தேவர்களுக்கு கோடிக்கணக்கான வீரர்களுடைய பலமுமிருப்பதெல்லாம் ஸ்வர பலமே யென்றறியவும்.

(272) ஹே... சங்கரா! மனிதர்களின் யுத்தத்தில் ஜெயம் அபஜெயத்தைப்பற்றி சொன்னீர்கள். ஆனால் யமனோடு யுத்தம் செய்யும் படியான சமயம் மனிதனுக்கு எற்பட்டால் அவன் ஜெயத்தை எப்படியடைவான்?

(273) ஸ்திர மனத்துடனிருந்து ஈஸ்வரனைத்தியானம் செய்ய வேண்டியது. பிராணனைக் கும்பகத்தில் நிறுத்தி ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டியது, இவ்வாறு செய்கிற மனிதனுக்கு இஷ்டசித்தி, மகாலாபம், ஜெயம் இவையுண்டாகின்றன.

(274) பிரபஞ்சமானது நிராகாரத்திலிருந்து உண்டாயிருக்கிறது என்ற ஞானம் உண்டான பிறகு, பிரபஞ்சமே நிராகாரமாகிறது. ஆசையால் பிரபஞ்ச சிருஷ்டியினால் மனிதனுக்கும் யமனுக்கும் தாரதம்மியம் உண்டாயிருக்கிறது. ஆனால் நிராகார சிருஷ்டியினால் மனிதன், யமன், புழுக்கள் இவைகளெல்லாம் (சமமாக) ஆகிவிடுகின்றன.

வசீகரணப் பிரகரணம்:-
-----------------------------------------

(275) ஹே... சங்கமா! இதுவரையில் நர யுத்தம், இயம யுத்தம் இவைகளைச் சொன்னீர்கள். இப்பொழுது வசீகரணப் பிரகரணத்தைச் சொல்லவேண்டும்.

(276) தனது நாயகிக்கு சந்திரஸ்வரம் நடக்கும்பொழுது, தன்னுடைய சூரியஸ்வரத்தினாலே அந்தச் சந்திரனை ஆகர்ஷ்ணம் செய்து தன்னுடைய ஜீவஸ்வரத்தில் சேர்க்கவும். இவ்விதம் செய்தால் அந்த ஸ்திரீ, ஜென்மம் உள்ளவரையில் அவனுக்கு சுவாதீனமாகிறாளென்று தவத்தில் சிறந்த முனிவர்கள் சொல்லுகிறார்கள். பரஸ்திரீ விஷயத்தில் இவ்விதம் செய்தால் நாசமடைவான்.

(277) புருஷனானவன் தன்னுடைய ஜீவஸ்வரத்தினாலே ஸ்திரீயினுடைய ஜீவஸ்வரத்தை கிரஹணம் செய்து ஸ்திரீயினுடைய ஜீவஸ்வரத்தில் தன்னுடைய ஜீவஸ்வரத்தைக் கொடுக்கவும். இவ்விதமாக ஜீவஸ்வரத்தினுடைய சேர்க்கை செய்தால் அந்த ஸ்திரீக்கு அந்தப்புருஷன் ஜென்ம பரியந்தம் பிரியமுள்ளவனாகிறான்.

(278) இராக்காலங்களில் கடைசி ஜாமத்தில் ஸ்திரீயானவள் அயர்ந்து தூங்கும் பொழுது அவளுடைய சுழிமுனை நாடியை புருஷனானவன் உட்கொள்ள வேண்டியது. இவ்வாறு செய்தால் பிராணனுள்ள வரையில் புருஷனுக்கு  வசியமாகிறாள்.

(279) பிறகு சுழிமுனை ஸ்வரத்தின் கால அளவு சென்றதின் பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜெபித்துத் தன்னுடைய சந்திர ஸ்வரத்தை ஸ்திரீக்கு கொடுக்கவும். இவ்வாறு கொடுத்தால் தக்ஷணமே அவன் மோகத்தையடைந்து வசியமாகிறான்.

(280) சயனகாலத்தில் ஆலிங்கன சமயத்தில், அல்லது வேறு எந்த சமயத்திலாவது எவனொருவன் தன்னுடைய சூரியஸ்வரத்தினால் தன் நாயகியின் சந்திர ஸ்வரத்தை இழுத்து உட்கொள்ளுகிறானோ அவன் மன்மதனைப் போல் அவளுக்கு மோகனகாரகனாகிறான்.

(281)சிவத்தினால் சக்தியையும், சக்தியினால் சிவத்தையும் யாரொருவன் சேர்க்கிறானோ, அவன் அந்த ஷணத்தில் நூறு ஸ்திரீகளுக்கும் மோகத்தை உண்டாக்குகிறான். (சிவம்-சூரியன், சக்தி-சந்திரன்.)

(282) ஸ்திரீயினுடைய சூரிய ஸ்வரத்தில் புருஷனுடைய சந்திர ஸ்வரத்தை கொடுக்கவேண்டியதாயிருந்தால் (3,5,7,9,) தடவைகளாகக் கொடுக்கவும். அவளுடைய சந்திர ஸ்வரத்தில் புருஷனுடைய சூரிய ஸ்வரம் கொடுக்க வேண்டியிருந்தால் (2,4,6) தடவைகளாகக் கொடுக்கவேண்டியது. இவ்விதம் செய்தால் அந்த நாயகி வசியமாகிறாள்.

(283) சூரியனையோ, சந்திரனையோ, சர்ப்பகதியாக ஆகர்ஷணம் செய்து ஒரு தாமரை புஷ்பத்தை நாயகன், நாயகி இருவரும் உதடுகளில் ஒற்றவும். பிறகு அந்த புஷ்பத்தை முகத்தில் ஒற்றிக்கொண்டு உடனே ஸ்வரத்தை அந்தப் புஷ்பத்தில் சேர்க்கவும். இவ்விதமாக மேலே சொல்லியிருக்கிற கணக்குப்பிரகாரம் செய்யவும்.

(284) மேலே சொல்லியபடி நாயகியானவன் நித்திரை செய்கிற வரையில் செய்யவும். பிறகு அவள் விழித்துக்கொண்டபின் அவளுடைய நேத்திரம், கழுத்து இவைகளை சும்பனம் செய்யவும்.

(285) இவ்விதமாகப் புருஷன், பெண்களின் வ்வரத்தோடு கலந்திருந்தால் பெண்களை வசியப்படுத்துகிறான். அனால் இந்தப் பிரகரணத்தை ஸ்திரீலோலனாயிருக்கப்பட்டவனுக்கு சொல்லக்கூடாதென்று ஸ்ரீ சங்கரருடைய கட்டளை....

கர்ப்பப் பிரகரணம்:-
-----------------------------------

(286) ருதுஸ்நானமான ஐந்தாம் நாள் ஸ்திரீயானவன் பதியுடன் கூடும்போது அவளுக்குச் சந்திர ஸ்வரமும் புருஷனுக்கு சூரிய ஸ்வரமும் நடக்குமானால் அதே புத்ர உற்பத்தியாகி திவ்விய புத்திரன் உற்பத்தியாகிறான்.

(287) ருதுஸ்நானமான ஸ்திரீயானவள் தனக்கு பிருதிவி அல்லது அப்பு தத்துவம் நடக்கும்போது, பசும்பாலில் சங்கவல்லிப் பிராசனம் செய்து தனக்கு சம்போகத்தைக் கொடுக்கும்படி திரிவாரம் புருடனைப் பிரார்த்திக்கவும்.

(288) ருதுஸ்நானம் செய்த ஸ்திரீக்கு மேற்சொன்ன ஒளஷதத்தைக் கொடுத்து புருஷனானவன் சம்போகம் செய்தால், ரூப வானும் பராக்கிரம சாலியுமான புத்திரன் ஜனிக்கிறான்.

(289) சூரிய ஸ்வரத்தோடு சுழுமுனை கலந்து தோன்றும்போது ருது காலத்தில் ஸ்திரீயை அணைத்தால், அங்கஹீனம், குரூபியான குழந்தைகள் பிறக்கும்.

(290) ருதுவான நான்கு நாட்களுக்கு பிறகு விஷம நாளில் (ஒற்றைப்படை நாட்களில்) சூரிய ஸ்வரத்தில் பிருதுவி, அப்பு, அக்கினி இந்தத் தத்துவங்களில் புருஷனானவன் கர்ப்பதானம் கொடுத்தால், மலட்டு ஸ்திரீக்கும் குழந்தை பிறக்கும்.

(291) புருடனுக்கு சூரியனும் ஸ்திரீக்கு சந்திரனும் நடக்கும் போது, இருவரும் அணைந்தால் மலடிக்கும் புத்திர உற்பத்தியுண்டாகிறது.

(292) புருஷனானவன் அணையும்போது சூரியஸ்வரம் நடந்து காம இச்சை முடிந்த பிறகு சந்திரன் நடக்க ஆரம்பிக்குமானால், மகா யோகமென்றறியவும். தெய்வ ஹீனமுள்ளவனுக்கு இந்தப்பாக்கியம் கிடைக்காது.

(293) கேள்வி காலத்தில் சந்திர ஸ்வரமாயிருந்தால் பெண் கர்ப்பமென்றும், சூரியனாயிருந்தால் ஆண் கர்ப்பமென்றும், சுழிமுனையாவிருந்தால் கர்ப்ப நாசமென்றுமறியவும்.

(294) கேள்வி காலத்தின் பிருதியி தத்துவமாயிருந்தால் பெண்னென்றும், அப்பு தத்துவமாயிருந்தால் புத்திரனென்றும், வாயு தத்துவமாயிருந்தால் பெண்ணென்றும், தேயு தத்துவமாயிருந்தால் கர்ப்ப அழிவென்றும், ஆகாசமாயிருந்தால் அலியென்றும் சொல்லவும்.

(295) சக்திர ஸ்வரகாலத்தில் கர்ப்பத்தைபற்றி கேள்வி கேட்டால் பெண்ணென்றும், சூரிய ஸ்வரத்தில் ஆணென்றும்,சுழிமுனையில் அலியென்றும் சொல்லவும். கேள்வி கேட்கிறவன் பூர்ணாங்கத்திலிருந்து கேட்டால் குழந்தையுண்டாகுமென்று சொல்லவும்.

(296) சூன்யாங்கத்திலிருந்து கேட்டால் சூன்யமென்றறியவும். இரண்டு ஸ்வரமும் நடக்கும்போது கேட்டால் இரட்டையுண்டாகும். சங்கிரமத்தில் அதாவது சுழிமுனையிலாவது அல்லது ஸ்வரம் பேதிக்கும் சமயத்திலாவது கேட்டால் கர்ப்ப அழிவு உண்டாகுமென்று தத்துவப் பிரக்ஞையுள்ளவனறியவும்.

(297) வாயு தத்துவத்தில் கர்ப்பம் தரித்தால் அக்குழந்தை எக்காலத்தும் துக்கியாகும். அப்பு தத்துவத்தில் சுகமுடையவனாயும் பிரசித்திப்பெற்றவனுமாயிருப்பான். அக்கினி தத்துவத்தில் கர்ப்ப அழிவு உண்டாகும். அல்லது அற்ப ஆயுளென்று அறியவும். பிருதிவியில் யோகியாயும், தனிகனாயும் கம்பீரமுடையவனாயுமிருப்பான்.

(298) வருணதத்துவம் அதாவது அப்பு தத்துவத்தில் கர்ப்பம் தரித்தால், தனவானாயும், சுகியாயும், போக போக்கியமுடையவனாயுமிருப்பான். ஆகாசத்திலோ கர்ப்பநாசம்.

(299) பிருதிவி தத்துவத்தில் உத்தம புத்திரனுண்டாகிறான். அப்பு தத்துவத்தில் சுகுணமாகிய கன்னிகையுண்டாகிறாள். இதர தத்துவங்களில் கர்ப்ப அழிவு அல்லது பிறந்தவுடன் இறந்துவிடும்.

(300) சூரிய ஸ்வரம் நடக்கும் பொழுது சந்திர ஸ்வரம் நடக்கிறதையும் சந்திரஸ்வரம் நடக்கும்பொழுது சூரியஸ்வரம் நடக்கிறதையும் நல்ல பிரக்ஞையோடு சந்தேகமற குருமுகமாய் தெரிந்து கொள்ளவேண்டியது. காரணம் குருவைத்தவிர கோடி சாஸ்திரங்களினாலும், வேதாத்யாயனம் செய்ததினாலும் அறிவது துர்லபம்,

வருஷ பலன்:-
-------------------------

(301) சித்திரை மாதம் முதல் தேதி (சைத்ர சுத்தப் பிரதமை) தக்ஷணாயணம், உத்திராயணம் இந்த தினங்களில் நடக்கிற தத்துவ பேதத்தினால் வருச பலனையறியவும்,

(302) பிராத காலத்தில் சந்திர ஸ்வரம் நடந்துக்கொண்டிருந்தால் அதில் பிருதிவி, அப்பு, வாயு, இந்தத் தத்துவங்களும் நடந்தால் சர்வதானியங்களும், நன்றாய் விளைந்து சுபீட்சமாயிருக்கும்.

(303) தேயு, ஆகாசம் இந்த தத்துவங்களாயிருந்தால் துர்ப்பிஷம் உண்டாகும். இதே மாதிரியாக வருடம், மாதம், நாள் இவைகளின் பேரிலும் தத்துவ பலனையறியவும்

(304) சுழிமுனையானது குரூரமாயும் சர்வ காரியங்களுக்கு கெடுதலாயுமிருக்கிறது. இதானது மேற்சொல்லிய சைத்ர சுத்தப் பிரதமையில் நடந்துகொண்டிருந்தால் தேச பீடை, மஹா ரோகம், சிரமம், கஷ்டம், இத்தியாதி துக்கங்கள் தேசத்திலுண்டாகின்றன.

(305) மேஷ சங்கரமண சமயத்தில் சுரபேதத்தை கவனிக்கவும், அதிலுள்ள தத்துவ பேதங்களைக் கொண்டு வருஷ பலனைச் சொல்லவும்.

(306) பிருதிவி முதலிய தத்துவங்களினால் தினம், மாதம், வருடம் இவைகளின் பலனையறியவும். இதில் பிருதிவி, அப்பு தத்துவம் நடந்தால் சுபபலன். அக்கினி, வாயு, ஆகாசம் இவைகளில் குரூர பலன்.

(307) மேஷ சங்கரமண காலத்தில் முதலில் பிருதிவி தத்துவம் நடந்தால் நல்ல விளைவு, தேச விருத்தி, ஏராளமான மழை சௌகரியம்,ஏராளமான தானியங்கள் இவைகளுண்டாகின்றன.

(308) அப்பு தத்துவமாயிருந்தால் அதிக மழை, சுபீக்ஷம், ஆரோக்கியம், சௌகரியம், ஏராளமான தானிய உற்பத்தி யென்றறியவும்.

(309) அக்னி தத்துவமாயிருந்தால் துர்ப்பிஷம்,தேச பீடை, சந்ததி நாசம், தானிய நாசம், அற்ப மழை, இந்த பலன்கனென்றறியவும்.

(310) வாயு தத்துவமாயிருந்தால், அற்ப மழை, அதிக மழையினால் பயம், முதலிய அறுவடை விக்னம் பயிருக்குண்டாகும்.

(311) ஆகாச தத்துவமாயிருந்தால், தானிய ஹானி, சுக ஹானி ஏற்படும்.

(312) பூரணமாயும், சுவாசம் உள்ளே பிரவேசிக்கிற சமயமுமாயிருந்தால் மேலே சொல்லப்பட்ட தத்துவங்களினால் தானிய சித்தியுண்டாகிறது. ஆனால் தத்துவோதய வேளையில், சூரியன் அல்லது சந்திர ஸ்வரம் விபரீதமானால் அதாவது சந்திரன் நடக்க வேண்டிய காலத்தில் சூரியனும், சூரியன் நடக்கவேண்டிய காலத்தில் சந்திரனும் நடந்தால் மாத்திரம் தானிய சங்கிரகம் செய்தால் சுகம்.

(313) விஷம நாடி (தக்ஷிண நாடியில்) முதலில் அக்கினி தத்துவமாயிருந்து பிறகு ஆகாச தத்துவம் உதயமானால் சர்வ வஸ்துக்களையும் சேர்க்கவும். காரணம் யாதெனில் இரண்டு மாதத்திற்குள் சகல வஸ்துக்களின் விருத்தியுண்டாகும்.

(314) இராக்கால முடிவில் சந்திர ஸ்வரம் நடந்து பிராதக் காலத்தில் சூரியன் கடக்குமானால் அந்த நாடியிலேயே ஆகாசம், வாயு, அக்கினி , உதயமானால் பூமியில் அநேக அனர்த்தங்களுண்டாகி ஜனங்களுக்கு யாதனை யுண்டாகிறது.

ரோகப் பிரகரணம்:-
----------------------------------

(315) பிருதிவி தத்துவத்தில் கேள்வி கேட்டால் சரீர ரோகமென்றும், அப்பு தத்துவத்தில் ஜல சம்மந்தமான வியாதியென்றும், தேயு தத்துவமாயிருந்தால், கிராமாத்திரங்களிலுள்ள துஷ்ட தெய்வங்கள், பிதுர்க்கள் தோஷமென்றும் கூறவும்.

(316) கேள்வி கேட்கிறவன் முதலில் சூன்யாங்கத்திலிருந்து, பிறகு பூர்ணாங்கத்திற்கு வந்தால் வியாதியஸ்தன் மூர்ச்சையடைந்திருந்தாலும் உயிருக்கு அபாயமில்லையென்று சொல்லவும்.

(317) பூரணாங்கத்திலிருந்து கேள்வி கேட்டால் அந்த மனிதன் அநேக ரோகங்களிலிருந்து துன்பப்பட்டாலும் இறக்கமாட்டானென்று சொல்லவும்.

(318) சூரியனில் வாயு நடக்கும்போது தூதுவன் வந்து குரூரமான அக்ஷரங்களை உச்சரித்து கேள்வி கேட்பானாகில் ரோகியானவன் பிழைப்பான், சந்திரன் நடக்கும்போது குரூர அக்ஷரங்களை உச்சரித்து கேள்வி கேட்டானும் அதே பலன் உ உண்டாகிறது.

(319) பூரணாங்கத்தில் நின்று உயிருள்ன வஸ்துக்களை கையிற் பிடித்துக்கொண்டாவது, அல்லது அதைப் பார்த்துக் கொண்டாவது, உயிருடனிருப்பவனைப்பற்றி கேள்வி கேட்டால் அது சுபம்.

(320) இடை அல்லது பிங்கலையில் வாயு நடக்கும்போது, அல்லது பிரவேசம் செய்யும்பொழுது, தூதன் பூரணாங்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அவனுக்கு இஷ்ட சித்தியுண்டாகிறது. இதில் சந்தேகமேயில்லை.

(321) கேள்வி கேட்கும்பொழுது, தாழ்ந்த இடத்திலிருந்து கேட்பானாகில், அவன் உயிருடனிருப்பான். உயர்ந்த இடத்திலிருந்து கேட்பானாகில் யமலோகத்திற்கு செல்வானென்று சொல்லவும்.

(322) கேள்வி கேட்பவன் விபரீத அக்ஷரத்தினால் கேள்வி கேட்டு சூன்யாங்கத்தில் நின்றாலும், அதே நேரத்தில் சுழிமுனை உதயமானாலும் விபரீத பலனென்று சொல்லவும். 

(323) சந்திர ஸ்வரம் நடக்கும்போது, சூன்யாங்கத்தில் நின்று வியாதியஸ்தனைப்பற்றி கேள்வி கேட்டால், அவன் நூறு வைத்தியர்களிடம் மருந்து சாப்பிட்டாலும் கடைசியில் மரணமடைவான்.

(324) சூரிய ஸ்வரம் நடக்கும்போது சந்திரனிலிருந்து அதாவது சூன்யாங்கத்திலிருந்து கேள்வி கேட்டால், சாக்ஷாத் சங்கரனே அவனைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருந்தாலும் அவன் பிழைக்கமாட்டான்.

(325) ஒரு பூதம் மிதமிஞ்சினால் ரோகம். அதிக உபத்திரவப்படுத்துகிறது. இரண்டு பூதம் மிதமிஞ்சினால் பந்து அல்லது இஷ்ட மித்திராளுடைய நாசம் உண்டாகிறது. ரோகஸ்தன் மரணத்தையடைகிறான்.

(326) மாசம், பக்ஷம், வருடம், இவைகளின் ஆரம்பத்தில் ஸ்வரத்தினுடைய சஞ்சாரத்தின்மேல் ஸ்வர ஞானியானவன் க்ஷய காலத்தையறியவும்.

(327) பஞ்ச பூதமயமாகிய தீபமானது சிவசொரூபத்தோடு கலந்திருக்கிறது. சூரிய ரூபமாகிய வாயுவினால் பாதுகாக்கவேண்டியது. இவ்விதம் செய்தால் ஜீவன் ஸ்திரமாயிருக்கிறது.

(328) பகலில் சந்திர ஸ்வரத்தையும், சூரியன் அஸ்தமித்த உடன் அதாவது இராக்காலங்களில் சூரிய ஸ்வரத்தையும், நடக்கும் படி ஒருவன் செய்வானாகில் அநேக நாள் உயிர் பெற்றிருப்பான்.

(329) பிரம்மாண்டத்திலுள்ள ஆகாசத்திலிருந்து அமிர்த தாரையுண்டாகிறது. அப்போது சரீர ரூபமாகிய தாமரை மலர்ந்து பிரகாசிக்கிறது. இதனால் கர்ம யோகத்தை அப்பியசிக்கிறவன் சந்திரனை ஆஸ்ஸிரயித்தால், அவன் மரணமற்றிருக்கிறான்.

(330) பகலில் சூரிய ஸ்வரத்தையும் இரவில் சந்திர ஸ்வரத்தையும் நீக்க வேண்டியது. இவ்விதம் அப்பியாசம் செய்கிறவன் யோகியாகிறான், இதில் சந்தேகமேயில்லை.

(331) ஒருவனுக்கு இரவும் பகலும் ஒரே ஸ்வரம் கடந்துகொண்டி ருந்தால், அவன் மூன்று வருஷங்களின் மரணமடைகிறன்.

332 இரண்டு இராப்பகல் ஒருவனுக்குச் சூரியகலை நடந்தால் அவன் இரண்டு வருடங்கள் உயிர் பெற்றிருப்பானென்று ஸ்வர தத்துவத்தையறிந்த ஞானிகள் சொல்லுகிறார்கள்.

333 ஒருவனுக்கு இராப்பகல் மூன்று நாள் ஒரே ஸ்வரம் நடக்குமானால் அவன் ஒரு வருஷம் ஜீவித்திருப்பான்.

(334) ஒருவலுக்கு சந்திர ஸ்வரம் இரவிலும், சூரிய ஸ்வரம் பகவிலும் இடைவிடாது கடக்குமானால், அவனுக்கு ஆறு மாதத்தில் மரணமென்று சொல்லவும்,

(335) திறந்த வெளியில் ஓர் பாத்திரத்தில் ஜலத்தை வைத்து, அதில் சூரியனுடைய பிரதி பிம்பத்தைப் பார்க்கும்போது தெற்கே குறைந்திருந்தால் ஆறு மாதத்தில் மரணம், மேற்கே மூன்று மாதம், வடக்கே இரண்டு மாதம், கிழக்கே ஒரு மாதத்தில் மரணம், மத்தியில் துவாரங்கள் கண்டால் பத்து நாளில் மரணம், அந்தப் பிரதி பிம்பம் முழுவதும் புகையடைந்ததுபோல் தோன்றினால் அதே தினத்தில் மரணமென்று அறியவும். இவ்வாது சர்வக்ஞ முனிவர் ஆயுட் பிரமாணத்தைக் கூறுகிறார்.

(336) தூதுவன் அல்லது வியாதியஸ்தன் சிவப்பு, கறுப்பு, காவி இந்நிற வஸ்திரங்களை உடுத்திக்கொண்டும், எண்ணெய்த்தலையோடும், பல்லில்லாதவனும், தலை முண்டிதமுள்ளவனும், அசுக்தமுள்ளவனும், இவ்வகையுள்ளவன் பூரணாங்கத்தில் வந்து கேள்வி கேட்டாலும் வியர்த்தம். விபூதி, அக்கினி, கப்பரை, கயிறு, உலக்கை, இவைகளுடன் சூரிய அஸ்தமன காலத்தில் சூன்யாங்கத்தில் தூதாக வருவானானால் வியாதியாளன் மரணமடைகிறானென்று சொல்லவும்.

(337) திடீரென்று சித்தம் விகாரத்தையடைந்தாலும், தேகத்தில் மாறுதல் உண்டானாலும், நிஷ்காரணமாய் இந்திரியங்களில் துர்ச்சின்னமுண்டானாறும், இவை சன்னி பாதத்தின் இவைகள் லக்ஷணங்கலென்றறியவும்.

(338) சரீரம் திடீரென்று சில்லிட்டுப்போய் விலக்ஷண விகாரத்தையடைந்தால் அரிஷ்டமென்றறியவும். இவ்விதமாய் அரிஷ்டங்களை சுருக்கமாகச் சொன்னேன். இனி விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.

(339) எவனொருவன் துஷ்ட சப்தத்தில் சந்தோஷமும், நல்ல சப்தத்தில் பச்சாதாபமுமடைகிறானோ, அவன் மாணத்தருவாயிலிருக்கிறானென்றறியவும்.

(840) நாசியிலிருந்து வருகிற சுவாசம் சில்லிட்டும் வாயிலிருந்து வருகிற காற்று நெருப்பைப்போல் சுடுகையாயுமிருந்தால், அவனுக்கு மகா பண்டிதன் சிகிச்சை செய்தாலும் மரணமடைகிறான்.

(341) எவனொருவனுக்கு நாக்கு, ஆகாசம், துருவம், தேவ மார்க்கம், மாதுருகை, அருந்ததி, சந்திரன், சுக்கிரன், அசஸ்தி நக்ஷத்திரம் இவைகளில் யாதொன்று தன் எதிரிலிருந்தும் வியத்தமாய் தெரியவில்லையோ, அவன் அவசியமாய் ஒரு வருஷத்தில் மரணமடைகிறான்.

(342) எவனொருவனுக்கு சூரியன், சந்திரன், அக்னி, இவைகள் கிரணங்களின்றி காணப்படுகிறதோ அவனுக்கு பதினொரு மாதம் ஆயுனென் சொல்லவும். 

(343) சொர்ப்பனத்தில் அல்லது ஜாக்கிரதையில் மல மூத்திர விசர்ஜனம் செய்யும்போது அந்த இடத்தில் பொன் அல்லது வெள்ளி, கண்ணுக்குப் புலப்பட்டால் அவன் பத்து மாதத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டான்.

(344) தீபம் சில சமயங்களில் பொன்னைப்போல மஞ்சளாயும், சில சமயங்களில் கருமையாகத் தெரிந்தாலும், சர்வ பூதங்களும் விபரீதமாய் காணப்பட்டாலும், அவன் ஒன்பது மாதத்திற்குமேல் பிழைத்திருக்கமாட்டான்.

(345) ஸ்தூல தேகியாயுள்ள ஒருவன் தீடீரென்று மெலிந்தாலும், மெலிவாயிருப்பவன் திடீரென்று ஸ்தூலித்தாலும், குரூரமும் கருப்பாயுமிருக்கப்பட்டவன் திடீரென்று பொன்னிறமானாலும், சூரனாயிருந்து பயங்காளியானாலும், தர்மிஷ்டனாயிருந்து அதர்மிஷ்டனானாலும், சாந்தமாயிருந்து சஞ்சலமடைந்தாலும், அவன் எட்டு மாதத்திற்கு மேலிருக்க மாட்டான்.

(346) ஒருவனுக்கு உள்ளங்கையிலும், நாக்கின் நுனியிலும் பீடை அல்லது நோயுண்டானாலும், இரத்தம் கருப்பாயும் குத்தினால் இரத்தம் சொட்டாமலிருந்தாலும் அவனுக்கு எழு மாதமும்,

(347) கைகளில் நடு மூன்று விரல்கள் மடக்க முடியாமலும், கழுத்து, ரோகங்களொன்று மில்லாமலே மெலிந்து வந்தாலும், பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி மறதி காரணமாய் கேட்ட சங்கதிகளையே திரும்பக் கேட்டாலும், பிரக் ஞபகங்கமுண்டானாலும் ஆறு மாதத்திற்கு மேலிருக்க மாட்டான்.

(348) நெஞ்சு குளிர்ந்து சுருங்கிப்போனாலும் பிரக்ஞாபகங்கமுண்டானாலும், ஐந்து மாதங்களில் இறப்பான்.

(349) சூரியப் பிரகாசம் (தேஜஸ்) பார்வையில்லாமலிருந்தாலும், நேத்திரத்தில் பீடையுண்டானாலும், நான்கு மாதத்தில் மரணம் நிஷயமாயுண்டாகிறது.

(350) பல்லிலும், விருஷ்ணத்திலும் ஸ்மரணையில்லாமலிருந்தால் மூன்று மாதத்திற்குமேல் மரணத்தையடைகிறான்.

(351) மரண காலம் தூரமென்றும் சமீபமென்றும் எந்த உபாயத்தினால் அறிய முடியுமோ, அதை சிவாகமத்தில் சொல்லிய பிரகாரம் சுருக்கமாய் சொல்லுகிறேன்.

(352) நிர்மானுஷ்யமான ஆரண்ணியத்தில் ஏகாந்தமாய்ச் சென்று சூரியனைப் பிருஷ்ட பாகத்தில் வைத்துத் தன்னுடைய நிழலின் கண்டத்தில் நிர்ச்சலமாய்ப் பார்க்கவும்.

(353) பிறகு ஆகாயத்தைப் பார்க்கவும். பார்த்து "ஓம் ஹ்ரீம் பரப் பிரம்மணே நம" என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் ஸ்ரீ சங்கரனுடைய தரிசனமுண்டாகும்.

(354) ஜெய முடிவில் சுத்த ஸ்படிகத்தைப்போல் வெண்ணிற முடையவரும், நானா ரூபத்தைத் தாரணை செய்யும்படியான ஸ்ரீசங்கரர் கட்புலனுக்குத் தோன்றுவார். இவ்விதமாக ஆறு மாதம் அப்பியாசம் செய்தால் அவன் சர்வ பூசரப் பிராணிகளுடைய அரசனாகிறான். இரண்டு வருடம் அப்பியசித்தால் சிருஷ்டி கர்த்தாவாயும், சம்ஹார கர்த்தாவாயுமாகிருன்.

(355) இவ்விதமாக எப்பொழுதும் அப்பியாசம் செய்து கொண்டிருந்தால் திரிகால ஞானமுண்டாகி, பரம ஆனந்தத்தில் சதா காலமுமிருக்கிறான். அவனுக்கு யாதொருகாரியமும் துர்லபமல்ல.

(356) மேற்சொல்லிய ரூபமானது நிர்மலமாகிய ஆகாசத்தில் கிருஷ்ண வர்ணமாய் எவனுக்கு புலப்படுகிறதோ, அப்பேர்ப்பட்ட யோகியானவன் சந்தேகமின்றி ஆறுமாதத்தில் மரணமடைகிறான்.

(357) மஞ்சள் நிறமாய் புலப்பட்டால் வியாதி, சிவப்பு நிறமாய் காணப்பட்டால் பயம், நீல நிறமானால் ஹானி யுண்டாகும். பலவர்ணமான சித்திர ரூபம் தோன்றினால் சித்திப் பிராப்தமாகும்.

(358) சாயா புருஷனுடைய பாதம், கால், வயிறு, இவைகள் கிரமமாய் கட்புலனுக்குத் தெரியாமலிருந்து பிறகு புயங்கள் மறையுமானால் யோகி மரணமடைகிறான்.

(359) இடது கை மறையுமானால் பாரியை நாசம், வலதுகை மறைந்தால், பந்து நாசமாகி அவனுக்கும் மரணமென்றறியவும்.

(360) சாயையானது தலையில்லாமலிருந்தால், ஒரு மாதத்திலும் துடையில்லாமலிருந்தாலும், தோளில்லாமலிருந்தாலும் எட்டு தினத்திலும், சாயையே முழுவதும் மறையுமானால் அந்த க்ஷணமே மரணமடைகிறான்.

(361) பிராதக் காலத்தின் சூரியன் பின்னாலிருக்கும்போது, சாயா புருஷனுடைய விரலும் உதடும் தெரியுமானால் ஒரே நிமிடத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுக்கும் இவனுக்கும்

தூரமின்றி சமீபமாயிருந்தால் அரை நிமிடத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுடைய காது, தோள், கை, முகம், விலா, ஹிருதயம் இவைகள் ஒரே தடனையில் திடீரென்று தெரியாமலிருந்தால் அரை கணத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுடைய தலையில்லாமல் காணப்பட்டு, திக்பிரமை கொள்வானாகில் அவன் ஆறுமாதம் வரையில் பிழைத்திருப்பான்.

(362) விடாமல் பதினாறு நாள் வரையில் சூரிய ஸ்வரமே நடந்தால், ஒருவன் ஒரு மாதத்திற்குள் மரணமடைவான்.

(363) ஒரு மாதம் வரையில், ஒருவனுக்கு சந்திர ஸ்வர உதயமேயில்லாமல், சூரிய ஸ்வரமே நடந்தால் பதினைந்து நாளில் மரணமேற்படுமென்று கால ஞானிகள் சொல்லுகிறார்கள்.

(364) மலம், மூத்திரம், அபான வாயு, இவை மூன்றும் ஒரே காலத்தில் உண்டானால் பிராணனானது சஞ்சலத்தையடைந்திருக்கிறதென்று தெரிந்து கொள்ளவும். அப்பேர்ப்பட்ட மனிதன் பத்து நாட்களில் மாணமடைகிறான்.

(365) சதா காலமும் சந்திரனே நடந்து கொண்டிருந்து சூரிய ஸ்வரமே சற்றேனும் நடவாமலிருந்தால், அவன் ஒரு மாதத்திற்குள் மரணமடைகிறானென்று காலஞானிகள் சொல்லுகிறார்கள்.

(366) எவனொருவனுக்கு ஆயுள் ஷணமாயிருக்கிறதோ, அவன் அருந்ததி, துருவம், விஷ்ணுபதம், மாதுருமண்டலம் இவைகளைப்பார்க்கமாட்டான்.

(367) அருந்ததியென்றால் நாக்கு, துருவமென்றால் நாசி நுனி. விஷ்ணுபதமென்றால் புருவம். மாதுரு மண்டலமென்றால் தாரகம் (தாரகமென்பது கண்ணுக்குள்ளிருக்கும் பாவை)

(368) புருவம் தெரியாமலிருந்த நாள் முதற்கொண்டு ஒன்பது நாளில் மரணமடைகிறான். காதில் சப்தம் கேட்காமலிருந்த நாள் முதற்கொண்டு எழுநாளில் மரணமடைகிறான். கண்ணிலுள்ள தாரகம் (பாவை) தெரியாமல் போனால் ஐந்து நாளில் மாணமடைகிறான். நாசி நுனித்தெரியாமல் போனால் மூன்று நாளில் மாணமடைகிறாள். நாக்குந் தெரியாவிட்டால் ஒரே நாளில் மரணமடைகிறான்.

(369) கண்களில் கடைக்கண்ணில் விரல்களினால் அமுக்கிப்பார்க்க பிந்து தெரியாமல் போனால் பத்து நாட்களில் மரணமடைகிறான்.

(370) தீர்த்தஸ்நானம், தானம், ஜெபம், தியானம், யோகம் போன்ற இத்தியாதி புண்ணிய கர்மங்களினால் யமனை ஜெயிக்கலாம்.

(371) அநேக துராச்சாரங்களினாலேயும், தாதுக்களிலிருக்கிற மலங்களினாலேயும் இந்த சரீரம் நாசமாகிறது. வாயுவானது சரீரத்தில் எப்பொழுதும் இருக்கிறதினால் பலம், தேஜஸ் இவைகளை விருத்தியாக்குகிறது.

(372) தேகமானது தர்மார்த்த காம மோக்ஷங்களுக்குக் காரணமாயிருப்பதால் சரீரத்தை சவரக்ஷணை செய்ய வேண்டியது. இதற்கு முந்திய சுலோகங்களில் சொல்லப்பட்ட தோஷங்கள் யோகாப்பியாசத்தினால் நாசமடைகிறபடியால், யோகத்தை அவசியம் செய்ய வேண்டியது. செய்தால் மேற்கண்டவைகள் சாத்தியமாகிறது. மேற்கண்ட தோஷங்கள் அசாத்தியமாயிருப்பதால் பிராணனின் நாசத்தைச் செய்கிறது. இதற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது.

(873) எவனுடைய ஹிருதயத்தில் அஞ்ஞானக் கூட்டத்தை நாசம் செய்யும்படியான, அநாதியானதும் ஒப்பு உவமையில்லாததும் அத்தியந்த ரகசியமானதுமாகிய இந்தச் சிவஸ்வரோதய ஞானம் நிரந்தரமாயிருக்கிறதோ, அவனுடைய சரீர காந்தியானது பூரண சந்திரனைப்போல் உல்லாசமாய் நிறைந்திருக்கிறது. சொர்ப்பனத்திலும் கூட காலனால் அவனுக்குப் பயமுண்டாகமாட்டாது என்பது திண்ணம்.

(374) இடைகலையாகிய வாம நாடியானது கங்கையென்றும், பிங்கலையாகிய நாடி யமுனையென்றும், சுழி முனை சரஸ்வதியென்றும் அறியவும். இந்த நாடித்திரயங்களுடைய சங்கமமானது பிரயாகைக்குச் சமமாயிருக்கிறது.

(375) ஆதியில் தாத்காலம் சுவாசத்தை உத்பன்னம் செய்யும்படியான சாதனம் சொல்லியிருக்கிறது. அதாவது யோகியானவன் பத்மாசனத்தைப் போட்டுக்கொண்டு ஒட்டியாண பந்தனம் சாதிக்கவும்.

(376) பிறகு தேக சுத்தியுண்டாக வேண்டியதற்காக யோகியானவன் பூரகம், கும்பகம், ரேசகம் என்று சொல்லப்பட்ட பிரணாயாமத்தைச் செய்யவேண்டியது.

(377) பூரகம் (வெளியே இருக்கப்பட்ட சுவாசத்தை உள்ளே இழுத்தல்) செய்வதினால் தேகத்தினுடைய தாதுக்களை சமப்படுத்துகிறது. கும்பகம் (வெளியேயும் உள்ளேயும் வாயுவை சலனப்படாமல் கட்டுப்படுத்தல்) செய்வதினால் ஜீவனை எப்பொழுதும் ரஷிக்கிறது.

(378) ரேசகம் (கும்பித்திருந்த வாயுவை வெளியில் விடுதல்) செய்வதால் பாவம் நாசமடைகிறது. இவ்விதமாய் முக் குணங்களையுடைய பிரணாயாமம் செய்தால் யோகத்தில் ஸ்திரம் ஏற்படுகிறது. பிறகு யுத்தகளத்தில் நின்ற வீரனைப் போலிருந்து லய பந்தம் செய்யவும்.

(379) வாயு ஸ்தம்பனம் அதாவது கும்பகம் சகஜமாய் ஏற்படுகிற அளவு சக்திக்கேற்ப செய்யவும். ரேசகம் சந்திர நாடியில் செய்யவும். பூரகம் சூரிய நாடியில் செய்யவும்.

(380) சந்திர ஸ்வரம் சூரியனோடு லயப்படுகிறதும், சூரிய ஸ்வரம் சந்திரனோடு லயப்படுகிறதுமான அப்பியாசத்தை செய்கிற யோகியானவன் சூரிய சந்திரனுள்ள வரையில் ஜீவித்திருப்பான்.

(381) எந்த ஸ்வரம் நடக்கின்றதோ அதை உள்ளேயிழுத்து வாயின் வழியாய் வெளியே செல்லவொட்டாமல் பந்தனம் செய்து வருகிற யோகியானவன் யெளவன பருவத்தையடைகிறாள்.

(382) வாய், நாசி, கேந்திரம், காது இவைகளை விரலினால் அமுக்கிக்கொண்டு தத்துவ உதயத்தையறியவும். இந்த முத்திரைக்கு ஷண்முகி கரணம் என்று பெயர்.

(383) ஷண்முகி முத்திரையின் மார்க்கத்தை யறிந்த யோகியானவன் அதன் வழியாக ரூபம், கதி, ருசி, மண்டலம் இந்த லக்ஷணங்களை அடைகிறான்.

(384) நிஷ்பிரகமாயும், சுசியாயும் யாதொரு சிந்தனையுமில்லாமல் மேற்கண்ட முத்திரையை அனுஷ்டிக்க வேண்டியது. இன்விதம் அனுஷ்டிக்கிற யோகியானவன் யமனையும் ஜெயிக்கிறான்.

(385) சர்வ ஜெகத்தையுமறியும் படியான சக்தி கேத்திரத்திலிருந்து வெளிப்படுகிறது.

(386) அந்த சக்தியினிடத்தில் எவனுடைய மனதானது ஒரு பிரகரம் ஸ்திரமாய் நிற்கிறதோ அவனுடைய ஆயுள் நாளொன்றுக்கு மூன்று கடிகைப்பிரமாணம் வளர்கிறதென் ஸ்ரீ சங்கர தந்திரத்தில் சித்தர்களுடைய குணத்தை வர்ணிக்கும்போது ஸ்ரீ சங்கரர் சொல்லியிருக்கிறார்.

(387) யோகியானவன் பத்மாசனத்திருந்துகொண்டு குய்யத்திலிருக்கப்பட்ட அபானவாயுவை பிராண சக்தியினுடைய உதவியினால் மேலிழுத்து ஒரு ரூபமாக்கி பிறகு சுழிமுனை

வழியாக அந்த வாயுவை பிரம்மரந்திரத்தினிடத்தின் கொண்டு போய் ஆகாசமார்க்கத்தில் வைத்து சிவசரணத்தில் சேர்க்கவும். எந்த யோகியானவன் இந்த ஸ்திதியிலிருந்து பிரணோத்கிரமணம் செய்கிறானோ அவன் தன்யனாகிறான்.

(388) யாரொருவன் இந்த ஸ்வர சாஸ்திரத்தை அப்பியசித்தாலும், பாராயணம் செய்தாலும் சர்வதுக்கத்திளிலுமிருந்து முத்தனாகி இச்சித்த பலனையடைகிறான்.

(389) ஸ்வரக்கியானம் அறிந்த ஞானிகளிடத்தில் இலக்குமியானவள் ஸ்திரமாய் வாசம் செய்வாள். அவன் அதிக சுகத்தை யடைவான்.

(390) சர்வ வேதங்களிலும் பிரணவமானது எப்படி பூஜ்யமானதோ, பிராமணர்களுக்கு சூரியன் எப்படி பூஜ்யனோ, அவ்வாறு ஸ்வரக்யானியானவன் இப்பூவுலகில் பூஜ்யனாகிறான்.

(391) யாரொருவனுக்கு மூன்று நாடிகளிலும், தத்துவங்களிலும், ஞானமிருக்கிறதோ அவனுக்குக் கோடி ரசாயனமும் ஈடல்ல.

(392) ஏகாக்ஷரத்தை எவனொருவன் உபதேசிக்கிறானோ, நாடிககளின் பேதங்களை எவனொருவன் விபரித்துரைக்கிறானோ, அப்பேர்ப்பட்டவனுக்கு எந்த திரவியத்தைக்கொடுத்தாலும் சிஷ்யன் ருணமுக்தனாகிறான். அத்தகைய திரவியம் இப் பூவுலகிலே இல்லை.

(393) ஹே.... பார்வதி! இந்த சாஸ்திரத்தில், ஸ்வரம், தத்துவம், யுத்தம், ஸ்திரீ வசீகரணம், கர்ப்பதானம், ரோகம், இவ் விஷயங்களின் நிர்ணயத்தை ஒரு பாதி கலையில் செய்யக்கூடும்.

(394) இவ்விதமான இந்த சாஸ்திரத்தை இந்த லோகத்தில் சித்த யோகிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இதை சந்திர சூரிய கிரகண காலங்களில் பாராயணம் செய்தால், சித்திப்பிராப்தமாகிறது.

(395) தன் சொந்த ஸ்தலத்தில் ஸ்திரமாய் உட்கார்ந்து நித்திரை ஆகாரம், இவைகளை மிதமாய் வைத்துக்கொண்டு ஹிருதயத்தில் ஸ்வர ரூபமாகிய பரமாத்மாவை ஒருவன் சிந்தனை செய்தால் அவனுக்கு ஸ்வரக்ஞானமுண்டாகி மேலான பதவியுண்டாகும்.

சுபம் 
          (முற்றிற்று.)

நன்றி : வாசன் அச்சுக்கூடம், தஞ்சை

     - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
       சித்தர்களின் குரல் shiva shangar
G