Friday, March 31, 2017

கவுமாரி

சப்த கன்னியர்..!

Image may contain: 1 person
🌺 தேவி பெயர்: கவுமாரி
🌺 அம்சம்: முருகப் பெருமான்
🌺 நிறம்: குங்கும நிறமுடையவள்
🌺 வாகனம்: மயில்
🌺 கோடி: சேவல் கோடி
🌺 கவுமாரி வழிபட்ட ஸ்தலம்:
மூலவர்: பஞ்சவடீசுவரர்
அம்பிகை: கல்யாண சுந்தரி,
பெரியநாயகி

🌺 தோற்றம்:
தமிழ் கடவுள் என புராணங்களால் புகழப்படும் குமரக் கடவுளின் சக்தியே கவுமாரியாகும்.
மயில் வாகனமாக கொண்டு அதன் மீது அமர்ந்து, சேவல் கொடியாகவும் கொண்டு அஷ்ட திக்கிற்கும் அதிபதியாக அருளாட்சி புரிகிறார் அன்னை.
ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என
ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது.
பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க
மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி,  தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை திருகரங்களில் தரித்திருப்பார்
என விவரிக்கின்றன.
அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில்
அன்னைக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது.
அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல்,சேவல் என்பனவற்றினை
தரித்திருப்பார் என விவரிக்கின்றன.

🌺 கவுமாரி வழிபட்ட ஸ்தலம்:
சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம்
அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும்.
இத்தலத்தில் கல்யாண சுந்தரி,பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள்
தனித் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம்.
மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

🌺 வழிபடுவதால் ஏற்படும் பலன்:

குமரக் கடவுலை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும் அன்னை கட்டளைக்கு காத்திருப்பர். ஆதலால் அன்னை உபாசித்தால் வேண்டியது கிட்டும். பதவியடையலாம்,திருமண தடைகள் நீங்கும், குழந்தை செல்வம் உண்டாகும். முக்கியமாக பல கிராமங்களில் ஆடி மாதத்தில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் அகல வழிபடுகிறார்கள்.

🌺 மந்திரம்:
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

🌺 காயத்ரி மந்திரம்:
ஓம் சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

🌺 தியான ஸ்லோகம்:
சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

****** சர்வமும் சக்தி மயம் ******
thank: FB post ...

ஸ்ரீ வித்யா

ஸ்ரீ வித்யா

Thank to My Friend Mr.Suman - Srilanka ( Sithhavidya@gmail.com ) allowed Publish 
Reposting
ஸ்ரீ ஜோதியில் எமது வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் முறை




கீழ்வரும் இணைப்புகளை முதலில் பார்வையிடவும்;

1.      ஸ்ரீ வித்யா பற்றிய முழுமையான விளக்கம் : Page1
2.       ஸ்ரீ ஜோதியில் இணைவதற்கான அறிவுறுத்தல்கள் : Doc formet
3.       ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவம்: Doc formet


இது செயற்படும் முறை: 

முதலில் நீங்கள் உங்கள் பூஜை அறை அல்லது வசதியான இடத்தில் கீழே அறிவுறுத்தப்பட்ட படி ஒரு ஸ்ரீ சக்கரமும்எண்ணை விளக்கும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் இங்கு தரப்பட்ட எளிய யோகப்பயிற்சியினை சில வட்டங்கள் செய்து அமைதியான நிலையில் இருந்து கொண்டு உங்கள் பிரார்த்தனையினை செய்து வர வேண்டும்.

 மறுமுனையில் எமது குருமண்டலத்தில் உள்ள குருமார்களால் வாராந்திரம் (ஒவ்வொரு ஞாயிறும்) நீங்கள் தியானிக்கும் போது ஸ்ரீ சக்கரத்தில் செலுத்தும் ஆன்ம சக்தியிற்கு ஸ்ரீ வித்யா மந்திரங்களால் சக்தி ஏற்றப்படும்.




இந்த செயல்முறையினை நீங்கள் விட்டிற்கு மின்சாரம் பெறும் முறையுடன் ஒப்பிட்டு மேலும் விளங்கி கொள்ளலாம். அதாவது பெரும் அணைக்கட்டில்/உலையில் உற்பத்தி செய்யப்படும் பல்லாயிரம் கிலோ வோட் மின்சாரம்குறித்த வாரியத்தின் மூலம் நீங்கள் உங்களுக்கு வேண்டும் என விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் ஏற்று தகுந்த இணைப்பினை கொடுத்து உங்களுக்கான மின்சாரத்தினை பெறுவது போன்றது. மின்சாரம் இணைப்பு கொடுத்தாலும் அதனை பாவித்து பலன் பெறுவதற்கான ஸ்விட்ச் உங்கள் கையில் இருப்பது போல இதில் பரிபூரண பலன் பெற உங்களது சிறு முயற்சியும் அவசியம்!

இதை நீங்கள் சரியாக செய்துவர உங்கள் வாழ்வில் ஸ்ரீ தத்தும் எனும் போகமும் மோக்ஷமும் பெறும் பாதையில் முன்னேற ஆரம்பிப்பிர்கள்.

இந்த ஸ்ரீ ஜோதியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முன் ஆயுத்தங்கள் கீழே பகுதி ௦1  இல் தரப்பட்டுள்ளது. 

பகுதி ௦1

1.     ஸ்ரீ சக்கரம் படம் ஒன்று (வர்ண படம் சென்னையில் ஆத்மா ஞான யோக சபாவில் கிடைக்கும்தொடர்பு கொண்டால் தபாலில் அனுப்பி வைப்பார்கள். முடியாதவர்கள் இந்த இணைப்பில் உள்ள  படத்தினை போட்டோ பிரிண்டு போட்டு லேமினேட் செய்து பிரேம் செய்து கொள்ளவும்.

2.     எண்ணை விளக்கு : நெய் விளக்கு உத்தமம்அல்லாவிடில் தேங்காய் எண்ணை விளக்கு வைத்துக் கொள்ளலாம்.

3.     இடம்: பூஜை அறை அல்லது வசதியான சுத்தமான இடத்தில் ஒரு சிறிய மேசையில் கிழ்வரும் அமைப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

4.     இந்த இணைப்பில் உள்ள படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி எமக்கு தபாலில் அனுப்பி வைக்கவும்.


பகுதி - ௦2
இந்த பகுதியில் மேலே கூறிய ஒவ்வொன்றினதும் அவசியமும் முக்கியத்துவமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரம்
இதுவே அனைவரையும் இணைக்கும் சிம் காட் (Sim card), ஸ்ரீ சக்கரத்திலுள்ள கேத்திர கணித அமைப்புகள் பிரபஞ்ச சக்திகளை சரியான விகிதத்தில் ஆகர்ஷித்து குவிக்கும் செயலை செய்விக்கும். அத்துடன் குரு மண்டலத்தில் இருந்து அனுப்பும் சக்தியினை சேர்த்து நீங்கள் பிரார்த்திக்கும் வேளையில் உங்களிற்கு தரும்.
விளக்கு
இது அக்னிபிரபஞ்சத்தில் எந்த சக்தியினையும் இணைப்பது அக்னிஇதனாலேயே அனைத்து விடயங்களிலும் அக்நியிற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. தற்கால நடைமுறையில் கூறுவதானால் செல்போனிற்கு பற்றரி மாதிரி!
இடம்
குறித்த ஒரு இடம் இந்த சக்தி பரிமாற்றத்திற்கு ஒதுக்குவதால் அந்த இடத்தில் சக்தி தேங்கி உங்கள் பிரார்த்தனைமனவிருப்பங்கள் நிறைவேறும்.  
படிவம்
இதுவே மூல சக்தியுடன் உங்களை இணைக்கும் இணைப்புஇந்த படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஐந்து பேர் இதனால் பலன் பெற வேண்டுமெனில் அவர்கள் ஐந்து பெரும் தனித்தனி படிவம் நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த படிவங்கள் நவாவரண பூஜை நடக்கும் மகா மேருவிற்கு கீழே வைக்கப்படுவதால் அந்த நபர்களுக்கு ஸ்ரீ யந்திரத்தின்  சக்தி எப்போதும் செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்.


 பகுதி ௦3
தியான முறை

நீங்கள் அனுப்பிய படிவம் எம்மை அடைந்தவுடன் அதன் முலம் உங்களது ஆத்மா சக்தியிற்கு சித்தர்களின் சில இரகசிய முறைகள் முலம் குரு மந்திரமான ஓம்” கார தீட்சையும்தேவியின் மூல மந்திரமான ஹ்ரீம்” கார மந்திரமும் உங்கள் சூஷ்ம உடலில் பதிவிக்கப்படும். இதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரத்தின் முன்னாள் அமர்ந்து தியானிக்க தொடங்கும் போது மூல சக்தியுடன் தொடர்பினை பெறுவீர்கள்!
தினசரி குறித்த நேரத்தில் குரு மந்திரமான ஓம்” தேவியின் மந்திரமான ஹ்ரீம்” இரண்டையும் கீழே கூறப்பட்ட முறைப்படி அப்பியாசித்து தரப்பட்ட பிரார்த்தனையினை செய்யவும்.


1.    முதலில் விளக்கை ஏற்றி சற்று நேரம் ஆழமாக மூச்சினை எடுத்து மனதினை அமைதிப்படுத்தவும். பின்னர் உள்முச்சு எடுக்கும் போது ஓம்” எனும் மந்திரத்தினை ஓம் ம் ம் என்று ம் சப்தம் முன்று தடவை வரும் அளவிற்கு உச்சரிக்கவும். வெளிமுச்சுடன் ஹ்ரீம்” என்ற மந்திரத்தினை உச்சரிக்கவும். இப்படி இயலுமான அளவு மூன்று தொடக்கம் ஐந்து நிமிடம் செய்யவும். இதன் போது உங்கள் உடல்மனம் என்பன சக்தியினை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் உரிய வகையில் அமைதியடையும்.

2. உங்கள் தாய்தந்தைகுருவினை, குலதெய்வம், கிராம தெய்ய்வத்தினை  வணங்கவும். பின்னர் மூலாதாரத்தில் இருக்கும் கணபதியினை மனதில் வணங்கவும்.
3.     இரண்டாவது அமைதியாக கண்ணை திறந்து எரியும் விளக்கின் ஜோதி யினை சில வினாடிகள் பார்த்துவிட்டு அத்தகைய ஜோதி உங்களது மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கண் வரை பயணித்து வெளிவந்து உங்கள் முன்னாள் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருக்கும் புள்ளி” “பிந்து” வில் வந்து இணைவதாக பாவிக்கவும். இந்த பாவனையின் நடுவில் மனதில்அல்லது வாயினை அசைத்த வண்ணம் ஓம் ஹ்ரீம் ஓம்” என்ற மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் இருக்க வேண்டும்.
4.     பின்னர் சில வினாடிகள் ஸ்ரீ சக்கரத்த்தின் பிந்துவினை கண்களால் உற்றுப்பார்த்து ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரத்தினை உச்சரித்தவண்ணம் பிந்துவிலிருந்து ஜோதி வந்து உங்கள் உடலில் சேர்வதாக பாவிக்கவும். இந்த ஜோதி நீங்கள் முதலில் செலுத்திய ஜோதியிலும் பார்க்க பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஏனெனில் முதலில் செலுத்திய ஜோதியில் உங்கள் ஆத்ம சக்தி மாத்திரம் இருந்ததுஇப்போது நீங்கள் பெறும் ஜோதியில் இந்த வட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து ஆன்மாக்களது சக்தியும்குருமண்டல சக்தியும் சேர்ந்து வரும். இதனை பெற்றவுடன் உங்களால் உங்கள் இன்ப வாழ்க்கைக்கு தேவையான வற்றை பெறும் சக்தி பெற்றவர்கள் ஆவீர்கள்.
5.     பின்னர் இந்த பிரார்த்தனையினை மனதில் மூன்று முறை உச்சரித்து அமைதியாக தியானிக்கவும்.

a     அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திட செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
ஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்
கழிந்தன வினைகள் எல்லாம் காய்ந்தன பாப்பம் எல்லாம்
இன்பமும் சுகமும் பெறும் இருந்திடும் பாக்கியங்கள்
நன்மையையும் செல்வம் கீர்த்தி நல்கிடும் அருளும் ஞானம் நாடிய பொருள் கைகூடும் நலிவெல்லாம் அகன்று ஓடும்
தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

இதன் பின்னர் ஸ்ரீ சக்கரத்தினை பார்த்த வண்ணம் உங்களால் இயன்ற அளவு ஓம் ஹ்ரீம் ஓம்" மந்திரம் ஜெபம் செய்யவும். 




Thursday, March 30, 2017

Siva temple in & around chennai தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி

🌼🌼🌼🌼🙏🌼🌼🌼🌼 
தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி
Siva temple in & around chennai
thank : https://www.saivasamayam.in/


சென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி. 
https://www.google.com/maps/link



உலகின் மிகப் பெரிய ஞானிகள் எண்ணற்றவர் வாழ்ந்து செழித்தது நம் பாரத பூமி. ஞானத்தின் விளைநிலமாகவும் மனித வாழ்கை இனிதாக அமைவதற்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் வகுத்து கோடி கோடி கோடி உயிர்களை இன்பமாக வாழ வைத்தும், வைத்துக் கொண்டிருப்பதுமாகியது நம் புண்ணிய பாதர பூமி. இந்த பூமியில் விளைந்த ஞான முத்துக்ளும் கோவில்களும் உலகெங்கும் பரவி நின்றது என்று வரலாறு தெரிவிக்கிறது.  அத்தகைய புண்ணிய பாரத பூமியில் தமிழ்நாட்டின் தொண்டை மண்டலமும் சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. தற்போதைய சென்னையின் தெற்கு பகுதியாகிய தென்சென்னை சித்தர்களின் இருப்பிடமாகவும், புண்ணிய சிவபூமியாகவும்  தொன்று தொட்டு நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. சித்தர்களின் இருப்பிடமாக இருந்தமையாலேயே அருகிலுள்ள ஊர் சித்தார்பாக்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்டு இன்று சித்தாலபாக்கமாக மருவி நிற்கிறது. சித்தர்கள் பக்கம் பக்கமாக இருந்தமையால் சித்தர் பக்கம் என்ற ஊர் இன்று சிட்லபாக்கமாக மருவி நிற்கிறது. இந்த சித்தர்களும் ஞானிகளும் சிவபூசை செய்ய பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், இந்த ஊர் சோலையூர் என்று அழைக்கப்பெற்று, இன்று சேலையூராக மருவி நிற்கிறது. கபில முனிவர் பூசித்த தேணுபுரீஸ்வரர் அருகிலுள்ள மாடம்பாக்கத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இதனருகிலேயே 18 சித்தர்களுக்கும் சித்தர் கோவில் உள்ளது. மாமுனி அகத்தியர் வழிபட்ட சிவலிங்கமாகிய அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் சித்தாலபாக்கத்தில் இருந்து அருள்புரிகிறார். தென்சென்னை முழுவதும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றியுள்ள கோவில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முழுமதி மலைவலம்

இந்த சித்தர் மலையைச் சுற்றி ஒவ்வொரு முழுமதி (பௌர்ணமி) தோறும் மலைவலம் (கிரிவலம்) சில ஆண்டுகளாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பகுதியில் இருக்கும் அனைவரும், மேலும் சென்னையில் உள்ளோரும், சென்னையைச் சுற்றியுள்ளோரும் தவறாமல் இந்த கோவில்களைச் சென்று தரிசனஞ்செய்து, நிறைமதி தோறும் மலைவலம் வந்தும் பிறப்பு இறப்பு அற்றவனாகிய மாபெரும் கருணைக்கடலாம் சிவபெருமானின் பேரருளைப் பெற்று துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வீர்காள். தென்சென்னையாகிய இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஆன்மீக அதிர்வுகள் எழுந்தருளட்டும். அனைத்து மக்களின் ஒற்றுமை சிறந்து ஓங்கட்டும். வறுமை, பஞ்சம் அனைத்தும் நீங்கி செல்வச்செழிப்போடு திகழட்டும்.

சித்தர்மலை மலைவல பாதையில் உள்ள கோவில்கள்

1. கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், அரசன்கழனி
2. வரசக்தி விநாயகர் கோவில், இந்திராநகர், பெரும்பாக்கம்.
3. அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில், நூக்கம்பாளையம்
4. பெரியபாளையத்தம்மன் கோவில், போலினேனி

சித்தர்மலை அருகில் உள்ள சில சிவன் கோவில்கள்

1. அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் – அகத்தியர் வழிபட்ட தலம் – சித்தாலபாக்கம். – சித்தாலபாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது.
2. ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் திருக்கோவில், ஒட்டியம்பாக்கம்
3. தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர், மாடம்பாக்கம். கபில முனிவர் பசுவாக சிவபெருமானை வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல்பெற்ற தலம்.
4. ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோவில், பள்ளிக்கரணை – பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் வழிபட்ட தலம்.
5. கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவில் (கங்கையம்மன் கோவில்), காரப்பாக்கம்.
6. சுவாமிநாத சுவாமி திருக்கோவில், கந்தாஸ்ரமம், கிழக்கு தாம்பரம்.
7. சந்திரசூடேசுவரர் திருக்கோவில், கோவிலஞ்சேரி
8. கைலாசநாதர் திருக்கோவில், அகரம்தென்
9. ஸ்ரீ முருகநாதேஸ்வரர் திருக்கோவில், மாம்பாக்கம்
10. சக்திபுரீஸ்வரர் கோவில், பொன்மார்-நாவலூர் சாலை
11. ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை பொழிச்சலீசுவரர் திருக்கோவில், அகரம்தென்
12. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கட்டளை
13. ஆழிகண்டேஸ்வரர் திருக்கோவில், ஒக்கியம் துரைப்பாக்கம்.
14. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், நீலாங்கரை
15. வேதபுரீஸ்வரர் கோவில், பெருங்குடி
16. மரகதஈஸ்வரர் திருக்கோவில், சுண்ணாம்புகுளத்தூர்.
17. அமிர்தகடேஸ்வரர், அக்னீஸ்வரர், அகத்தீஸ்வரர் – மூன்று கோவில்கள், வேங்கடமங்கலம்.
18. நாவலூர் சிவாலயம், நாவலூர், OMR
சென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.
சிவாலயம் செல்லுங்கள். திருமுறை ஓதுங்கள். சங்கநாதம் முழங்கிடுங்கள். எல்லாத் துன்பங்களும் விலகி இனிமையான வாழ்வு பெற்று சிவகதி பெறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



சென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.

https://www.google.com/maps/d/viewer?mid=1xVk8govA1-yg1R8KfIYBpnFnkr4&hl=en&ll=12.829374614094764%2C80.19199571824265&z=13


Monday, March 20, 2017

அக்னிஹோத்ரம் agnihomam by Yourself!

Thank to https://blaufraustein.wordpress.com/
https://www.vedicastrologer.org/homam/index.htm
* * *

you can do agnihomam [ Homam ] Yourself  ..

“அக்னி ஹோத்ரம்”

எனக்குள் சில நாட்களாகவே ஒரு நெருடல். “ஏன் இப்படி புதிய புதிய நோய்கள் அவதாரம் எடுக்கின்றன?” என்று. அப்போது போபால் விஷவாயு சம்பவமும், அதிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்ததும்  பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்தி நினைவுக்கு வந்தது. வேதம்,  இதிகாசம், புராணம் இதிலெல்லாம் நம்பிக்கை கொள்வது அல்லது விட்டுவிடுவது என்பது தனிமனித விஷயம்.

ஆனால், சில பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில பாரம்பரிய நம்பிக்கைகள் அது ஆன்மீகம் என்பதை விட அறிவியலாக இருந்திருக்கிறது என்பதை அது நினைவுபடுத்தியது. போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்!

இப்படி கொடுமையான விஷவாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த ஈ, எலி, பன்றி, பறவை, கொசுக் காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? அதற்கும் பதில் சொல்லியிருக்கிறது அதர்வணம். சுற்றுப்புறக் காற்றில் உள்ள நோய்க் கிருமிகளையும், அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு ‘அக்னிஹோத்ரம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

நல்ல சுற்றுப்புறத்தை ஐந்து எளிமையான அடிப்படையான மூலாதரமான விதிகளின் படி வேள்வித் “தீ” மூலம் உண்டாக்கலாம் என்கிறது சில பழங்கால வேதங்கள். அதில் ஒன்று தான் அக்னிஹோத்ரம். அதாவது வேள்வித்தீயின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தலாம் என்கிறது வேதங்கள்.

இந்த அக்னிஹோத்ரம் பற்றி ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு….

 காற்றில் ஒரு ஊசி மருந்து

“நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அதுபோல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொளள முடியும்.

உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்த அக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.

அக்னி ஹோத்ரம் என்பது….

இயற்கை சமன்பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர் பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின் அடிப்படையிலான செயல்முறை.

சுற்றுப்புறக் காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்த சுற்றுப்புறக் காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.

அக்னி ஹோத்ரம் செய்ய அடிப்படை தேவைகள்

1. நிச்சயமான நேரங்கள்

2. தீ (அக்னி) பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.

3. குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.

4. சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி

5. மந்திரங்கள்.

இதில் நிச்சயமான நேரங்கள் என்பது, இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனம்.

(சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள், ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள் எல்லா வழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது. மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது. சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகி அழிக்கும் சக்தியாக செயல்படும். எனவே அக்னிஹோத்ரம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கும்)

அக்னி (தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்

பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. (பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)

தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.  யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம் (Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.
Image result for agni homam
செய்முறை

பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் அக்னி ஹோத்ர நேரத்தில் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகை உண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையான பச்சரிசி – கைக்குத்தல் அரிசியை ஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும். சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக  விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்காத பதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத சுத்தமான பசு நெய்யாக இருப்பது  முக்கியம். இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் முறையே இரு தடவை செய்ய வேண்டும்.

இப்படி உருவாக்கும் வேள்வித் தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

1 எத்திலின் ஆக்சைடு

2, புரேப்பலின் ஆக்சைடு

3. பார்மால்டிஹைடு

4. ப்யூட்டோ பயோலேக்டோன்.

இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில் சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

மந்திரங்கள்

அதிகாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நம: |
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||

மாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் நம: |
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||

இந்த வேள்வி தீ எரியும்  போது நாம் அதன் அருகில் அமர்ந்து மந்திரங்களை சொல்லலாம். இந்த அக்னியானது தாமிரப்பாத்திரத்தில் எரியும் போது முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களுடன் இந்த மந்திரங்களை உச்சரித்து தியானம் செய்யுங்கள். மன இறுக்கத்திலிருந்து மீண்டு ஓய்வாக இருப்பதை உணர்வீர்கள்.

என்ன  நடக்கிறது?

இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க அக்னிஹோத்ரத்தை செய்து வரலாம்.

பொது  இடங்களில் செய்யலாம்

இந்த செயலை பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் குவிந்து வரும் அரசு மருத்துவமனைகள், மிக அதிக மக்கள் குழுமும் இடங்களில் எல்லாம் கடைப்பிடித்தால் அந்த இடங்களில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்பட்டு சுற்றுப்புறக்காற்று சுத்தமானதாக மாறிவிடும். நோயாளிகளை பார்க்க வரும் நல்ல ஆரோக்கியமுள்ள பலர் இந்த நோய்க்கிருமிகளால் பாதிப்புள்ளாகாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த யாகத்தீ அமையக்கூடும். மேலும் நோயாளிகளின் நோய்க்கிருமிகளும் எளிதில் அவர்களை விட்டு விலகி குணமடைய வாய்ப்பிருக்கிறது. முயற்சிக்கலாமே!

அக்னி ஹோத்ரத்தின் நன்மைகள்

ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.

அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.

முன்தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.

பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியை அடைகிறார்கள்.

பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.

இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கப்பட்டிருக்கிறது.

Do Homam by Yourself!

click : https://www.vedicastrologer.org/homam/index.htm

Fire ritual is found in many ancient religions, including Hinduism, Zoroastrianism, Buddhism, ancient Greco-Roman religions, American Indian religions, Incan traditions etc. Fire is a representative of god on earth. Spending time worshipping god through fire purifies one's subtle consciousness. That happens because the internal fire responsible for purifying one's consciousness resonates to the external fire.

  • Importance of Homam!

    Title
    Read a white paper on the relevance and importance of homam as a spiritual sadhana. It addresses many questions, concerns and misconceptions.
    Click to read more
  • Mahaganapathi Homam

    Title
    Mahaganathi removes obstacles in material life and enables spiritual progress. Detailed homam manual, audio MP3 and video are available.
    Click to read more
  • Sri Mahalakshmi Homam

    Title
    Sri Mahalakshmi gives prosperity in various aspects of life, including spiritual life. Detailed homam manual is available.
    Click to read more
  • Vishnu Homam

    Title
    Vishnu protects one's sustenance and dharma and gives spiritual progress. Detailed homam manual is available.
    Click to read more
  • Sri Krishna Homam

    Title
    Sri Krishna is an incarnation of Vishnu on earth with the fullest manifestation of the abilities of Supreme Cosmic Being. Detailed homam manual is available.
    Click to read more
  • Narasimha Homam

    Title
    Narasimha is a lion-headed incarnation of Vishnu, who protected great devotee Prahlada. He gives bravery, strength and victory over internal & external enemies.
    Click to read more
  • Hanuman Homam

    Title
    Hanuman removes all fears and other mental shackles and makes one absolutely detached and blissful. Detailed homam manual is available.
    Click to read more
  • Shiva Homam

    Title
    Shiva gives highest detachment, contentment and bliss. Detailed homam manual is available.
    Click to read more
  • Kaala Bhairava Homam

    Title
    Bhairava removes all fears and other mental shackles and makes one absolutely detached and blissful. Detailed homam manual is available.
    Click to read more
  • Chandi Homam

    Title
    Chandi makes one fiercely and ruthlessly destroy subtle internal demons of pride, egosense, desires and attachments. Detailed homam manual is available.
    Click to read more
  • Sani (Saturn) Homam

    Title
    Sani gives discipline, patience, humility, perseverance and hones one's handling of the results of previous karmas. Detailed homam manual is available.
    Click to read more
  • Kuja (Mars) Homam

    Title
    Kuja (Mars) gives initiative, lands, properties and fighting ability and removes debts. Detailed homam manual is available.
    Click to read more