Sunday, July 30, 2017

60 month (5 yrs) துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் !!!

With our Guru Wish ....


  Annamalaiyane allow us to do Our 60 month (5 yrs) Dwadashi Annadanam to Sadhus who living in siddhar bhoomi Thiruvannamalai  hill side on 4/8/2017 at Thavathiru thiru padha swamigal "Sathguru Chadaiswamy Ashram ' at Palamaram cave , near  Mulaipal Theertham ,  Pay Gopuram 6th street  ,Thiruvannamalai ....  


Our first annadanam start on September 26,2012 with my Guru Wish “ Srimat Sadhananda Swamigal “ and Mystic Selvam Ayya , our Group stated  first Dvadashi Tithi Annadanam to Sadhus who living in girivalam way at Thiruvannamalai   .

On 26/9/12 at 7 am we served our Breakfast for 173 Sadhu in girivalam way. Lunch at 12.45 pm about 228 Sadhu and while raining too we served 146 Dinner at 7.30 pm  With Truthful Siva adiyar from Chennai, Kanchipuram , Erode , Thirukalukundram ,Pondicherry and other city.
With lord Annamalaiyar wish we want to do this service regularly thisThiruvannamalai Dvadashi Annadanam (துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் )

 Harimanikandan 

chamundihari@gmail.com 

9841267823


Thiruvannamalai Dwadashi Annadanam 
(துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் )

Why we want to do “Dvadashi Tithi Annadanam” ?
1. MysticSelvam Ayya - ‘SivaMahapuranam‘
2. AdiSankara - 'Kanakadhara Stotram'
3, How Annamalai call me to do this Dvadashi Annadanam ?



துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் 


1. ஆதிசங்கரர் "கனகதாரா ஸ்தோத்திர"

ஒரு துவாதசி நாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று ஆதிசங்கரர், "பவதி பிக்ஷ¡ந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பி¨க்ஷ போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான். அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிக்க்ஷை போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார். அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்.

ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பி¨க்ஷயாகப் போடுவது என்று தெரியாமல் திகைத்தாள். இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும். ஆகவே நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்குப் போட்டுவிட்டாள். இதனைக் கண்ட ஆதிசங்கரர், 

அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார். உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார்.இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார்.அது மட்டுமில்லாமல், 

இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உறுதி மொழிகிறார் முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.



2 . மிஸ்டிக் செல்வம் ஐயா "சிவமஹாபுராணம்(சிவபுராணம்)"


முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் 

நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு என்ற ஆன்மீகப் பேருண்மையை ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளாகிய நீங்கள், உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்; துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா? ,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)


திரு அண்ணாமலையில் துவாதசி திதியன்று மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்பதை ஒரு துறவி எனக்கு உபதேசித்தார்.இதை ஒரே ஒரு முறை அண்ணாமலையில் பரிசோதித்துப் பார்த்ததில் உண்மை என்பது மட்டுமல்ல;பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.எனவே எனது சகோதர,சகோதரிகளுக்காக இந்த ஜோதிடக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது;மாற்ற முடியாது;பூஜைகள்,பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும்,அந்த பூஜைகள்,பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையத்துவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள்,பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். 

சனியும்,செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது.நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்;இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை.

மேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள்.அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும்.அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள்.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால்,அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்;அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும்.


Now our Annadanam at Thavathiru thiru padha swamigal "Sathguru Chadaiswamy Ashram 'Palamaram cave , near  Mulaipal Theertham ,  Pay Gopuram 6th street  ,Thiruvannamalai ....  


Start with Mahadeva pooja All Sadhus are see like GOD ,We Decorated with flowers  on their head and offer food with kanikkai [ money ] and do puja to all Sadhu and we asked them to take food... ] 



Sathguru Chadaiswamy Ashram



5th Head Thavathiru Thirupatha Swamigal 

Old Palamaram cave

All Sadhus waiting for feast 


 Daily Annadanam for Sadhus and old people


 Annapoorani Feast hall


  Decorated with flowers on sadhu head 

 offer food with kanikkai [ money ]

 we asked them to take food... 




Wednesday, July 26, 2017

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் பைரவ பூசை


Thank : 
Siva A Vijay Periaswamy [FB] 

No automatic alt text available.


"உன் பாதம் போகும் பாதை,நானும் போக வந்தேனே".....''பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை": 26-7-17..''வலங்கைமான் பாடகச்சேரி பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் திருக்கோயில் திருமடம்''..கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பாடைக்கட்டி மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் பாடகச்சேரி உள்ளது.இங்கு தான் பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் பல ஆண்டுகள் தங்கி இருந்தார்.இங்கு பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் விந்தையான பைரவ பூசையை நடத்துவார்.நூற்றுக்கணக்கான இலைகளில் விருந்தைப் படைக்கச் செய்து வெளியே சென்று அவர் விளித்தவுடன் திடீரென்று நூற்றுக்கணக்கான நாய்கள் எங்கிருந்தோ மந்தையாக வரும்.அவர் கட்டளைப்படி குளத்தில் மூழ்கி எழுந்து அமைதியாக தனித் தனி இலைகளில் விருந்து உண்டுவிட்டு வந்தவழியே மாயமாய் மறைந்து போய்விடும். போடப்பட்ட இலைக்கு கூடவோ குறையவோ இல்லாமல் நாய்கள் வந்து போவது தான் விந்தை.இந்த விருந்தை சேலம் ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகளும் வியந்து பாராட்டியுள்ளார்.பாடகச்சேரியில் இன்றும் பௌர்ணமி நாட்களில் ஒன்பது நாய்களுக்கு விருந்தளிக்கும் தொண்டு நடைபெற்று வருகிறது. இப்படி நாய்களுக்கு விருந்தளிப்பதால் பூர்வ ஜென்ம தீவினைகளிலிருந்து விடுபடலாம் என்பது சுவாமிகளின் சித்தம்."கரும நோய் தீருவதற்கு தருமந்தான் நல்ல வழி'' என்று உணர்த்தி, செயல்படுத்திக்காட்டிய இந்த மகானின் குரு பூஜை வைபவத்தில், ஆன்மீக அன்பர்கள் அவசியம் பங்கேற்கவேண்டும்..பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் குரு பூஜை வைபவம் வருகிற ஆடிப் பூர தினத்தில் கும்பகோணம் அருகில் உள்ள பாடகச்சேரி கிராமத்தில்அவரது மடத்தில் [ 9443075837,9841718839]
No automatic alt text available.


சிறப்பாக நடைபெற உள்ளது. இங்கே சுவாமிகள் பயன் படுத்திய பிரம்பு
நாற்காலி,ருத்ராட்சம்,நாய் முகம் கொண்ட கைத்தடிகள், சுரைக்காய் கமண்ட லங்கள்,சங்குகள், மருந்துபுட்டி களை இன்றும் காணலாம்."உன் பாதம் போகும்பாதை,நானும் போக வந்தேனே".ஆம்!பாடகச்சேரி ஸ்வாமிகளை மானசீகமாக குருவாக ஏற்று அவர் வழியில் பைரவர் பூசனை செய்து,சிவத்தை நினைத்து வாழ்வில் நற்கதி பெறுவோம்.. பைரவசித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அடிமை "நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள்மணக்கும் முருகன் மலரடி நிழலில்"

No automatic alt text available.


Tuesday, July 25, 2017

பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை":26-7-17

Thank to FB

'‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா''.....
Image may contain: 1 person, sitting

"பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை":26-7-17.
'''சென்னை கிண்டி மங்களாம்பிகை உடனுறை பாடாலீஸ்வரர் திருக்கோயில்''.இங்கு 26-7-17

Image may contain: outdoor
அன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் உண்டு...சென்னை கிண்டியில் பாடகசேரி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த பாடாலீஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயில் சென்னை கிண்டி ரயில் நிலையம் சுரங்கபாதை அருகில் உள்ளது.அங்கு ஆலய விமானத்தின் அருகில் பாடகசேரி சுவாமிகள் சுதை சிற்பம் உள்ளது..நோய் வாய்ப்பட்ட மக்களுக்கு 
Image may contain: house, tree and outdoor
"ஆபத் சகாயம் "எனகூறி,சிவாயநம சொல்லி திருநீறு பூசிவிடுவார் பாடகச்சேரி ஸ்வாமிகள்....உடனே சில நாட்களிலேயே மக்கள் அந்த கொடிய நோய்களில் இருந்து முற்றிலும் விடுபடுவர்.தன்னை நம்பிய பக்தனை பாம்பு கடித்தபோது, ஒன்றும் ஆகாமல் இருக்க, மறுநாள் பைரவ சித்தருக்கு கால் வீங்கியிருந்தது. காரணம் கேட்டபோது, “ஒன்றுமில்லை. என் பக்தனின் பாம்புக் கடியை நான் வாங்கிக்கொண்டேன். குடும்பஸ்தன் பாவம் அவன் தாங்கமாட்டான் ”என்றாராம்.“என்னை நம்பியிருப்பவர்களுக்கு என்றும் நான் துணையாக உடனிருப்பேன். நம்பாதவர்களுக்கும் என்மீது நம்பிக்கை வரும்பொருட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வருவேன்” என்பார் பாடகச்சேரி இராமலிங்க  வாமிகள்.'‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா'''...ஆம்!பதைபதைக்கும் நெஞ்சுடன் உங்கள் வாழ்வில் ஒரே போராட்டமா?!...கவலையை விடுங்கள்..உங்கள் வீட்டில் உங்கள் சொந்த அண்ணனைபோல உங்களை வாழ்வில் பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் அரவணைப்பான் என்பது உண்மை.
No automatic alt text available.
பைரவசித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அடிமை "நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...
கட்டுரையாக்கம்:அன்பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்,
9787443462.....

Sunday, July 16, 2017

ஐயப்பன் அறுபடைவீடு



தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல், அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை ”அய்யப்பனின் அறுபடை வீடுகள்” என்றே சொல்லலாம்.
Image result for பந்தளம்

சபரிமலை
Image result for சபரிமலை
கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.

எருமேலி
Image result for எருமேலி
இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

ஆரியங்காவு
Image result for ஆரியங்காவு
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.

அச்சன்கோவில்
Image result for அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

பந்தளம்
Image result for பந்தளம்
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

குளத்துப்புழா
Image result for குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

- சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Posted 19th December 2010 by tamilvirumbi