Wednesday, January 24, 2024

பௌத்த (புத்தன் ) அவதராம் ??

 அயோத்யா, இராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் திருக்கோயில் கருவறையில், பிரதிஷ்டையான ஸ்ரீ பாலராமர் திருமேனித் திருவாசியில் பௌத்த அவதராம் அமைக்கப்பட்டுள்ளது.



இதுபற்றிய கருத்துகள், பதிவுகள் சமூக வலை தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.அதுபற்றிய விளக்கந்தரவே இப்பதிவு.
முதற்கண், ஸ்ரீ பாலராமர் திருமேனி பற்றிய சிறுவிளக்கம்:
தற்போது அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளஸ்ரீ பால ராமர் விக்ரகமானது, சுமார் 300 கோடி ஆண்டுகள் பழைமையான கருமை நிறக்கல்லால் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ஸ்ரீ பால ராமர் விக்ரகம் செய்யப்பட்டுள்ளது.ஏழு வயது நிரம்பிய ராமரின் திருவுருவாகவே இந்தத் திருமேனி வடிக்கப்பட்டுள்ளது. இந்த விக்ரகத்தின் எடை சுமார் 200 கிலோ. உயரம் 4.24 அடி. அகலம் 3 அடி. நவகிரகங்கள் திருமேனியின் அடிப்பகுதியில் உள்ளன. அதற்கு மேலாக தாமரைப் பீடம் அமைந்துள்ளது. திருமேனியைச் சுற்றிக் கல்லால் ஆன திருவாசியும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திருவாசியில் அனுமன், வசுதேவர், பிரம்மா, ஓம், பத்மம், சக்கரம், கதை, சுவஸ்திக், ருத்ரன், கருடன் போன்ற திருவடிவங்களுடன் தசாவதாரத் திருவுருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. தசாவதாரத் திருக்கோலங்களான மத்சயர், கூர்மர், வராகர், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியனவும் வடிக்கப்பட்டுள்ளன.
திருமாலின் பௌத்த அவதாரம். -- சனாதனதர்மத்தைச் சார்ந்த செய்திகள்.
இப்பதிவில் குறிப்பிடப்படும் பௌத்த அவதாரம், புத்தமதத்தைத் தோற்றுவித்த புத்தர் அல்லர்;ஆயினும் அவருக்குச் சம்பந்தம் உடையவர். இதனை இப்பதிவில் விளக்கமாகக் காண்போம்.
சற்று நீண்ட பதிவு; பொருத்தருளுக.
முதற்கண் தசாவதாரம் பற்றிய சுருக்கமானப் பார்வை =
தசாவதாரம் :
மச்சம் ---என்னும் மச்சாவதாரம்
கூர்மம் ---என்னும் கூர்மாவதாரம்
வராகம்என்னும் வராகாவதாரம்
நரசிங்கம்என்னும் நரசிங்காவதாரம்
வாமனன்என்னும் வாமனாவதாரம்
பரசுராமன்என்னும் பரசுராமாவதாரம்
இராமன்என்னும் இராமாவதாரம்
பலராமன்/புத்தன்...பலராமன் என்றால் எட்டாவது பலராமாவதாரம்,அல்லது புத்தன் என்றால் ஒன்பதாவது பௌத்தாவதாரம் ஆகும்
கிருட்டிணன் என்னும் கிருஷ்ணாவதாரம்
கல்கி-- திருமால் இனி எடுக்கப்போகும் அவதாரம்---கல்கியவதாரம்
திருமாலின் பிரதானமான பத்து அவதாரங்கள் எவை என்பதில் பலவேறு கருத்துகள் நிலவுகின்றன..சில நூல்கள் கிருட்டிணனை எட்டாவதாகவும், புத்தனை ஒன்பதாகவும் கொள்கின்றன...ஆனால் 17- ஆம் நூற்றாண்டின் 'யதீந்திரமததீபிகா' என்னும் வைணவக் கொள்கையை விவரிக்கும் நூலின்படி, பலராமன் எட்டாவதாகவும், கிருட்டிணன் ஒன்பதாவதாகவும் கொள்ளப்படுகின்றனர்.
சில தீவிர வைணவர்கள் புத்தனை திருமாலின் அவதாரமாகவே ஒப்புக்கொள்வதில்லை...அவர்களுக்குப் பலராமன் மட்டுமே திருமாலின் எட்டாவது மற்றும் கிருட்டிணன் ஒன்பதாவது அவதாரங்களாகும்.
மராத்தி, கோவா சம்பிரதாயத்தில் இறைவன் பாண்டுரங்க விட்டலனையும், ஒரிசாவில் இறைவன் ஜகன்னாதனும் புத்தனுக்கு மாற்றான திருமாலின் அவதாரமாக சில சிற்ப, சோதிட மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தில் கருதப்படுகிறார்கள்.
கீத கோவிந்தம் இயற்றிய ஜெயதேவர், பலராமன், புத்தன் இருவரையுமே அவதாரங்களாக்கி, கிருட்டிணனை ஓர் அவதாரமாகவேக் கருதாமல், நேரடியாக திருமாலாகவே அதாவது முழுமுதற் கடவுளாகவே உருவகப்படுத்திப் பாடியுள்ளார்.(கீதகோவிந்தம் பற்றிய நடுவணரசு வெளியிட்ட அஞ்சல் தலைகளில் இஃது பதிவாகியுள்ளது. )
விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத் குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர், பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன், பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான இலிங்க புராணத்தில் திரிபுர சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை ஸ்ரீமத்வ சம்பிரதாயத்தின் இரண்டாவது குருவாக விளங்கிய ஸ்ரீவாதிராஜர், தனது தசாவதாரஸ்துதியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீமத்வர் தமது தந்த்ரசார சங்க்ரஹம் மற்றும் இதர சர்வமூல கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ள திருமாலின் அவதாரங்கள் பற்றிய செய்திகளில் ,பௌத்த அவதாரம் திருமாலின் ஒரு அவதாரமாகவே கூறப்பட்டுள்ளது.
அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.
24 அவதாரங்கள்
பாகவத புராணம் என்பது குப்தர் காலத்தில் –(3,4 ஆம் நூற்றாண்டு) –இப்போதைய வடிவை எட்டியது. அதில் உள்ள அவதாரப் பட்டியல்:
1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ராம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).
இதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும்.
தசம கிரந்த (குருகோவிந்தர்) பட்டியலில், பிரம்மா, ருத்ரர், சூரியர், சந்திரர், மனு, சேஷசாயி, ஜலந்தர முதலிய புதுமுகங்கள் காணப்படுவர். வேறு சில பழைய அவதாரங்கள் விடுபட்டு இருக்கும்.
சரி,பௌத்த அவதாரம் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம்.
" ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் " என்னும் நூலில் இருந்து...
கன்னட மூலத்தை எழுதியவர்:
பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி பதில் வடிவில் அமைந்த புத்தகம்.
படிக்க மிகவும் எளிதானது
ஸ்ரீமத்வர் தமது தந்த்ரசார சங்க்ரஹம் மற்றும் இதர சர்வமூல கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ள அவதாரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
புத்தாவதாரத்தை ஸ்ரீவாதிராஜர் தனது தசாவதாரஸ்துதியில் இப்படி வர்ணித்திருக்கிறார்=
" புத்தாவதாரகவி புத்தானுகம்பகுரு பத்தாஞ்சலௌ மயி தயாம்
ஷௌத்தோதனிப்ரமுக ஸைத்தாதிகாசுகம பௌத்தாகம ப்ரணயன |
க்ருத்தாஹிதாஸுஹ்ருதி ஸித்தாஸிகேடதர ஷுத்தாஷ்வயான கமலா
ஷுத்தாந்தயாம்ருசிபி னத்தாகிலாங்க நிஜமத்தாSவ கல்க்யபித போ: || 32 ||
முன்னர் உலகத்தில் பல அசுரர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் வைதிக தத்வஞானத்தையே பின்பற்றினர். அதனால் பாலில் விஷம் கலந்ததுபோல், தத்வஞானமே அழியும் நிலை ஏற்பட்டது.
அப்போது சுத்தோதனன் என்னும் ராஜனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தையை மாற்றிவிட்டு, ஸ்ரீஹரி குழந்தையாக அவதாரம் எடுத்து அங்கு படுத்துக்கொண்டான்.
உலகத்தில் சூன்யம், அனைத்தும் தற்காலிகமானவை / அழியக்கூடியவை மற்றும் பொய் என்று உபதேசித்தார். தாம் உபதேசித்த அனைத்தும் உண்மையே என்று அனைவரையும் நம்பவைத்தார்.
தேவர்களுடன் போர் புரிந்து அவர்கள் எய்த பாணங்களை முழுங்கினார். சுத்தோதனன் முதலானோர் இந்த குழந்தை சொல்லும் மதமே உண்மை என்று நம்பி, வைதிக மார்க்கத்தை விட்டுவிட்டனர். சொர்க்கத்தில் இந்த புத்தன் தேவர்களுக்கு உண்மையான ஞானத்தை உபதேசித்தார்.
அதுவே பிரஷாந்த வித்யா என்று பெயர்கொண்டு புகழ்பெற்றது. பூலோகத்தில் உபதேசித்த பொய்யான ஞானமே புத்தமதம் என்று பரவிற்று. ஞானிகளில் சிறந்தவனே, கருணையுடையவனே, புத்தாவதாரியான ஸ்ரீஹரியே, நான் கை கூப்பி உன்னை வேண்டுகிறேன்.
இப்படியாக ஸ்ரீவாதிராஜ குருசார்வபௌமர் புத்தாவதாரியான ஸ்ரீஹரியை மனமுருகி வேண்டுகிறார்.
ஸ்ரீமத்வ சம்பிரதாயத்தில் பௌத்த அவதாரம் =
" புத்தோ நாம்னா ஜனசுத: கேகடேஷு பவிஷ்யதி "
என்னும் பாகவதத்தின் வாக்கியத்திற்கேற்ப த்ரிபுராசுரர்களில் முதலாமவன் சுத்தோதன என்னும் பெயரில் பிறந்தான். அவனின் மகனாக ஸ்ரீஹரி அவதரித்தார்.( பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான இலிங்க புராணத்தில் திரிபுர சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்)
( இந்த சுத்தோதனன், யார்?
நாவலந்தீவு என்றும் கூறப்படுகிற பரதகண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய நாட்டில் கபிலவஸத்து என்னும் நகரை ஆண்டு வந்த வேதகால மன்னன்.இவனுடைய மற்றொரு மகனே,பின்னாளில் புத்தரான சித்தார்த்தர். )
சுத்தோதனின் மகனின் இடத்தில் குழந்தையாக காண்பித்துக்கொண்ட விஷ்ணுவின் ரூபமே, தசாவதாரத்தில் சேர்ந்திருக்கும் புத்தன். சுத்தோதனின் நிஜமான குழந்தையாக இருந்தவரே கௌதம புத்தர். இருவரையும் ஒருவரே என்று நினைப்பது தவறு. இந்த விஷயத்தில் ஸ்ரீமத்வாச்சார்யார் தெளிவாக கூறுகிறார். ‘சுத்தோதனனேத்யேவ ஜெனேஸ்பி ஜோக்த:’ என்று தாத்பர்ய நிர்ணயத்தில் 32வது அத்தியாயத்தில் கூறுகிறார். புத்தனாகி அவதரித்த விஷ்ணு பூலோகத்தில் அதிக காலம் இருக்கவில்லை. தன் வேலை முடிந்ததும், சுவர்க்கத்தில் தேவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டி புறப்பட்டுவிட்டார். பிறகு சுத்தோதனன் ஜினன் என்று அழைக்கப்பட்டதாக பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
பௌத்த அவதார உபதேசம்=
அனைத்தும் அழியக்கூடியவையே. அனைத்தும் தற்காலிகமானவையே. அனைத்தும் அசத்யமானவையே என்று உபதேசித்தார்.
தேவர்கள் பௌத்த அவதாரத்துடன் போர் புரிந்தது=
இது ஒரு நாடகம். அங்கிருந்த அசுரர்களுக்கு தன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. விஷ்ணுவும் புத்தனிடம் தோற்றுப் போனதாக நாடகம் ஆடினார்.
சுதர்சன சக்ரத்தின் மேல் பௌத்த அவதாரம் அமர்ந்திருக்கிறது என்கிற கதையின் பின்புலம் =
தேவர்கள் புத்தன் மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தபோது, புத்தன் அவற்றை விழுங்கிவிட்டார். சுதர்சன சக்ரத்தை விஷ்ணு ஏவியபோது, அதையும் உடனே பிடித்து, ஆசனம் போல் செய்து அதன் மேல் அமர்ந்தார். ‘நீயே சர்வோத்தமன்’ என்று தேவர்கள் அனைவரும் கூறி, தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். ஜினன் முதலான தைத்யர்கள் புத்தனின் பேச்சுகளை உண்மையென்று நம்பினர்.
புத்தரூபியான விஷ்ணு ஜடமான இந்த உலகத்தை ஞானம் என்று கூறினார். இது எப்படி?=
‘ஞா’ - அனைத்தையும் அறிந்த ஸ்ரீஹரியிடமிருந்து ‘அன’ - உலகம் ஊக்கத்துடன் வளர்கிறது. ஆகையால் இந்த உலகமானது ஞானரூபம் என்றே பொருளாகுமே தவிர ஜடஸ்வரூபம் என்று பொருளல்ல.
அனைத்து உலகமும் சூன்யம் என்று புத்தன் கூறினார். இதன் பொருள் =
சூன்யன் என்று பெயர் கொண்ட ஸ்ரீஹரியிடமிருந்து தோன்றி வளர்வதால், இந்த உலகத்திற்கு சூன்யம் என்று பெயர். இதுவே இதன் நிஜமான பொருள்.
’அசத்’ மற்றும் ‘அபாவ’ என்பவையின் பொருள் =
அ என்றால் ஸ்ரீஹரி. அவனால் அழியக்கூடியதாக இருப்பதால் இந்த உலகம் அசத் எனப்படுகிறது. அ என்னும் ஸ்ரீஹரியிடமிருந்து உலகம் தோன்றியதால், அபாவ எனப்படுகிறது.
இராமானுஜ மதத்தவரும் புத்தரை ஸ்ரீஹரியின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளாமல், தசாவதாரத்தில் சேர்க்காமல், பலராமனை தசாவதாரத்தில் சேர்த்து, தமக்கென்று ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ஹ, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ண, புத்த, கல்கி - இவையே தசாவதாரங்கள் என்று தெரிந்திருக்கிறோம். இதில் வேறு எதுவும் பிரச்னை இருக்கிறதா?
ஆம். வங்காள தேசத்தில் கிருஷ்ணனை தசாவதாரத்தில் சேர்ப்பதில்லை.
" கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் " என்ற வாக்கியப்படி கிருஷ்ணன் மூலரூபியானவன்.
மத்ஸ்ய, கூர்ம, வராகன் ஆகியன கிருஷ்ணனின் அவதாரங்கள் என்கின்றனர். இப்படியாக தசாவதாரங்களில் பல குழப்பங்கள் உள்ளன. ஆனால் ஸ்ரீமத்வாச்சார்யார், புராணங்களின் ஆதாரங்களின்படி தசாவதாரத்தைத் தெளிவாக, பௌத்த அவதாரத்தையம் சேர்ந்து, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ( இங்கு,இலிங்கபுரணம் கூறும் செய்திகளை ஒப்புநோக்கவேண்டும்)
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் " என்னும் நூலில் உள்ள " பௌத்த அவதாரம் "கட்டுரை இணைப்பு =
ஒரு ஆங்கிலக் கட்டுரையில் திருமாலின் பௌத்த அவதாரம், ஆதி புத்தா என்றிருப்பதைக் கண்டேன்.
Gautama Buddha is not avatar of Vishnu. Avatar of Vishnu is Adi Buddha.
Adi Buddha
Adi Buddha is avatar of Vishnu was born on 1887 BCE to Mother Anjana in Kikata (Bodh Gaya).
The Adi Buddha Established the Philosophy of Ahimsa, Non Violence. He preached against ritual Animal Sacrifices that has crept into Vedic Hinduism. He emphasized the divine in all beings and divinity of all souls arousing compassion for all.
Siddhartha was was born around 560 BCE
கட்டுரை கீழே =
அன்பர்களே,அடியேனுக்குக் கிடைத்தத் தரவுகளைக் கொண்டு இக்கட்டுரையைத் தந்துள்ளேன். வேறு கருதுகோள்கள் இருப்பின் ஆன்றோர் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
சனாதனதர்மம் மிகவும் தொன்மையான ஒன்று;புத்த மதம், சமண மதம் போன்ற மதங்கள் சனாதனதர்மத்திற்குப் பிந்தியவை. அதனால், மற்ற மதங்கள் தாம் சனாதனதர்மத்தின் கோட்பாடுகளைக் கொண்டனவையேயல்லால், சனாதனதர்மம் அவற்றின் கோட்பாடுகளைக் கொண்டது என்பது பொருத்தமற்ற வாதம்.
புகைப்படங்கள் =



திருமாலின் பௌத்த அவதாரச் சிற்பங்கள் நம் பாரத தேசத்தில் பலவிடங்களில் காணக்கிடைக்கின்றன.( நின்றத் திருக்கோலத்திலும் அமர்ந்தத் திருக்கோலத்திலும் ) அவற்றுள் சில அன்பர்களின் பார்வைக்கு.
அயோத்யா, இராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் திருக்கோயில் கருவறையில், பிரதிஷ்டையான ஸ்ரீ பாலராமர் திருமேனி.
சேலம், ஆத்தூர் ஆறகளூர்
திருக்கோயிலில் உள்ள திருமாலின் பௌத்த அவதாரச் சுதை சிற்பம்.


திருமாலின் பௌத்த அவதாரம், அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்,தாராசுரம்.
( Buddha as an avatara at Airavatesvara Temple.,Tamil Nadu.)




திருமாலின் பௌத்த அவதாரம், திருமலை,துவரகா திருக்கோயில், ஆந்திரா
(Buddha as an avatar at Dwaraka Tirumala temple, Andhra Pradesh)



திருமாலின் பௌத்த அவதாரம், சென்னகேசவன் திருக்கோயில், சோமநாதபுரா,கர்நாடகா.
(Buddha as Vishnu at Chennakesava Temple, Somanathapura, Karnataka)


திருமாலின் பௌத்த அவதாரம்,குஜராத் பதன் இராணி கி வாவ் ( நூறு ரூபாய் பணத்தாளில் உள்ள இராணியின் கிணறு)


திருமாலின் பௌத்த அவதாரம்,ஓவியம், Buddha as an avatar of Vishnu in a Persian-style


திருமாலின் பௌத்த அவதாரம்- லோட்டஸ் அருங்காட்சியகம், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.




தசாவதாரம்:
இறைவன் திருமாலின் பத்து அவதாரங்கள்-- இடதுபுற தலைப்பகுதியிலிருந்து கீழ்ப்பக்கமாக மச்சம் அவதாரத்திலிருந்து தொடக்கம்.பலராமனுக்குப் பதிலாக புத்தன் காட்சி தருகிறார்...ஒரு மாற்றுக் கருத்தின்படி புத்தாவதாரம் கிருட்டிணனுக்கு அடுத்தபடியாக வந்த அவதாரமாகக் கருதப்படுகிறது.Jayadeva, in his Pralaya Payodhi Jale from the Gita Govinda, includes Balarama and Buddha where Krishna is equated with Vishnu and the source of all avatars.



திருமாலின் அவதாரம் - பூரி ஜெகநாதர் இணைத்து. ஓவியம்.
தசாவதாரம்:
பாண்டுரங்க விட்டலனை திருமாலின் அவதாரமாகக் காட்டும் கோவா (மராத்தி) கலாசாரம்...இடதுபுறம் மேலிருந்துக் கீழாக நான்காவது திருவுருவம்.Temple door depicting Dashavatar with Vithoba, at Sree Balaji Temple, Goa. From leftmost upper corner, clock wise: Matsya, Narasimha, Parashurama, Rama, Krishna, Kalki, Vamana, Vithoba, Varaha and Kurma,Krishna.

பௌத்த அவதாரம் திபெத்திய சிற்பம்.


கீதகோவிந்தம் தசவதார அஞ்சல் தலைகள்,பௌத்த அவதாரம்










Monday, January 22, 2024

புத்தன் சபரிமலை தடியூர்

புத்தன் சபரிமலை தடியூர்
கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம். இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.   


சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

Sunday, January 14, 2024

பொங்கல் காப்பு கட்டுதல் என்றால் என்ன ?


காப்பு கட்டுதல் என்றால் என்ன ?

Thank Fb
பொங்கல் என்பது நம் மண்ணிற்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஒருபுறம் இருந்தாலும், அது நம் உடலுக்கும் மனதிற்கும் மறைமுகமாக ஆரோக்கியம் தரும் நாள். பொங்கல் கொண்டாடும் நாள்கள் மழைக்காலம் தணிந்து, குளிர்காலத்தின் ஒருபகுதியில் நடைபெறுவதால், உடலின் அதிக உஷ்ணசக்திகள் மாறிமாறி வெளியேறி, மக்களிடையே பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களை உருவாக்கிவிடும்.

அதுமட்டுமின்றி மழைக்காலம் முடிந்தவுடன் பல நச்சுப்பூச்சிகள் வீட்டினை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிடும் என்பது நாம் அறிந்த விஷயம். இதனைத் தவிர்க்கவே பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள அனைத்துப்பொருட்களையும் சுத்தம் செய்து, சுண்ணாம்பினால் வெள்ளையடித்து, பரண்களில் மாட்டுச்சாணம் கொண்டு மெழுகுவர். [ சுண்ணாம்பு மற்றும் மாட்டுச்சாணத்தின் காரத்தன்மையால், பூச்சிகள் வராது என்பது  அறிவியல் உண்மை.] மேலும் வெள்ளையடிப்பதினால் சுவர்களில் வெயிலினால் ஏற்படும் தாக்கம், வீட்டைத் தாக்காமல் பாதுகாக்கும், இதனால் வெயில் சார்ந்த அம்மை, வயிற்றுப்போக்கு நோய்கள் நம்மை அண்டாது.

பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முதல்நாள்,--  சங்கராந்தி வழிபாடு துவங்குவதற்கு முன்பு--போகி அன்று -- பண்டிகைக் காலங்களில் வீட்டினரை நோய் அண்டி விடக்கூடாது என எண்ணி, “காப்பு கட்டுதல்” எனும்  சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம்பூ, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவர், [ இவற்றில் ஏதேனும் ஐந்து அல்லது மூன்று.] இதில், நோய் தாக்கும் பூச்சிகள் வருவதில்லை என்ற உண்மை பொதிந்துள்ளது.

அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்த பிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் அடுத்த ஒரு  ஆண்டிற்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப் போகாமல் பத்திரமாக இருந்து அந்த வீட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே வீடுகளில் காப்பு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள் தமிழாய்வாளர்கள். ‘' விளைகிற நிலங்களும் அதில் விவசாயிகளுடன் சேர்ந்து பாடுபடும் கால்நடைகளும்கூட பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்ற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துக் கொள்கிறோம்’' என்கிறார்கள் இவர்கள்.

இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே 'பொங்கலோ பொங்கல்'. காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கைத் திருவிழா. 

இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.
உணவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது. 

பொங்கல் நமக்கு உணவு. வீட்டு வாசலில் சொருகும் காப்புக் கட்டு, மருந்து. உடல் நலத்தைப் பேணவே பொங்கல் பண்டிகையில் 'காப்பு கட்டுதல்' கலந்துள்ளது.

பொங்கல் காப்புக் கட்டில் பயன்படுத்தப்படும் சிறுபீளை(கூரைப்பூ), ஆவாரம்பூ, பிரண்டை, வேப்பிலை, மஞ்சள் கொத்து இவற்றைத்தான் பஞ்ச மூலிகைகள் என்கிறோம்.

ஆவாரம்பூவைப் பொன் மூலிகை என்று நமது சித்தர்கள் கொண்டாடுவர். வேர், இலை, பூ, காய், கட்டை, பிசின் என்று எல்லாமே மூலிகை குணம் உடையதுதான். தங்கச் சத்து நிறைந்தது. நரம்பு தளர்ச்சியைப் போக்கும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சர்க்கரைக்  கொல்லி, சிறுநீர் கல்லைக்  கரைக்கும். சிறுநீரகக்  கோளாறுகள் நீங்கும். உடல் குளிர்ச்சி, கருங்கூந்தல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீக்கும். குடிநீரில் குடிநீரில் ஆவாரம்பூவைச் சேர்த்து பருகலாம். 'ஆவாரை பூத்திருக்க சாவாரைக்  கண்டது உண்டோ' என்பது பழமொழி. எமனை விரட்டும் எளிய மூலிகை.

பிரண்டைக்குச் சஞ்சீவி, வஜ்ரவல்லி என்ற வேறு பெயர்கள், ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்ற வகைப்பாடு உண்டு. ஓலை பிரண்டை, முப்பிரண்டை, உருட்டு பிரண்டை, தட்டை பிரண்டை, களிப் பிரண்டை, புளிப்பிரண்டை என்று இதன் வகைகள் நீளும். முப்பிரண்டை காண கிடைப்பது அரிது. வீடு முதல் 'சுடு' காடு வரை இதன்பயன்பாடு உண்டு.
பிரண்டையின் துவையல், பிஞ்சு பொரியல், ரசம், வடகம் எல்லாம் உடலுக்கு ஊட்டம் தருபவை. உடல் பருமனைக் குறைப்பவை. தளர்ச்சியை நீக்கி, ஆண்மையைப் பெருக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பவை. முறிந்த எலும்புகளையும் எளிதில் ஒட்ட வைக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை 'வஜ்ரவல்லி' என்பர். எனவே பிரண்டையை இப்பொங்கல் முதல் நம் 'பிரண்டா'க்கிக் கொள்வோம்.

நறுமணம், சமையல் பொருள், கிருமி நாசினி, புனித பொருள் என்று மஞ்சள் பயன்பாடு அதிகம். பண்பாட்டிலும், பயன்பாட்டிலும், இதற்கு ஈடு இணை இல்லை. முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என்ற வகைகள் உண்டு. சளித் தொல்லை, வயிற்று உபாதைகள், தோல் நோய்கள், வெப்பு நோய்கள், ரத்தத்தை சுத்தம் செய்தல் என்று இதன் மருத்துவ பயன்களின் பட்டியல் தொடரும். மஞ்சள் இல்லா வீடு மணக்குமா?

பேய்க்கு மட்டுமல்ல நோய்க்கும் எதிரி வேப்பிலை. அந்த அளவிற்கு கோடைக்கால கொடையாக இருப்பது வேம்பு. பித்தம், நீரிழிவு, தொழுநோய், தோல் நோய், பூச்சிக் கொல்லி, அம்மை நோய்களுக்கு அருமருந்து. நோய் எதிர்ப்பு சக்தி, குடல் நோய்கள் என்று வெப்ப காலத்தில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும். சர்வ நிவாரணி, மாத விலக்கை தூண்டும், மஞ்சள் காமாலையை குறைக்கும்'வேம்பு நமக்கெல்லாம் தெம்பு'.

சிறுபீளை (கூரைப்பூ), என்பது காப்புக்  கட்டில் சிறப்பிடம் பெறும் மூலிகை இது என்றே சொல்லலாம். ஈரப்பாங்கான இடங்களில் மார்கழி குளிரில் ஏராளமாக விளைந்து கிடக்கும். இதன் அனைத்து பாகங்களும் அருமைதான். சிறுநீரைப் பெருக்குதல், சிறுநீர் கட்டிகளைக் கரைத்தல், சிறுநீர் பாதை அடைப்பு என்று சிறுநீரக பிரச்னைகள் அனைத்தும் போக்கும் அரிய மூலிகை.கர்ப்பிணிகளுக்கு உடல் வலுவைக் கொடுக்கும். வெள்ளைப் படுதலைத் தடுக்கும். 

இவை அடியேனின் சிறுவயது நினைவுகள்......
போகிக்கு  முந்தைய நாள் மதியம்    காப்புச்செடி பிடுங்குவதற்காக காட்டுப்பக்கம்  கிளம்பிவிடுவோம். அடர்ந்த காடு என்பதால்  துணைக்குப் பலரைச்  சேர்த்துக்கொண்டு  போவோம். மூன்று அல்லது ஐந்து  செடிகளில்  ஏதேனும்  ஒன்று குறைந்தாலும் மனம் ஒப்பாது; தேடி அலைந்து, கொண்டுவந்து,இரவே சிறு சிறு கட்டுகளாக்கி, தயாராக வைத்திருப்போம்.சங்கராந்தி அன்று,மாலை ,குளித்துவிட்டு, வீட்டில் காப்பு கட்டுவது ஆண்களின் கடமை.சங்கராந்தி சமையலை வீட்டுப் பெண்டிர் கவனிப்பர்;போகியன்று இரவு சங்கராந்தி வழிபாடு நடைபெறும்.

இனி இத்தகு நாள்கள் வருமோ?தற்பொழுது,காப்பு கட்டுவதற்குரிய பொருள்கள் வீட்டு வாசலுக்கே வந்து விடுகின்றன.அடியேன் வாழும் சேலம் மாவட்டம் பேளூரில்  மேனிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் இவற்றைச் சேகரித்து விற்பனை செய்கின்றனர்;அவர்களிடம் வாங்குவதும் மனதிற்கு மகிழ்வைத்தருகிறது.

அடியேன்  பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டியில்,பீளைப்பூ,வேப்பிலை,துளசி ஆகியவற்றைக்  காப்பாகக் காட்டுவர்; அடியேன் இப்பொழுது வதியும் பேளூரில் துளசிக்குப் பதிலாக ஆவாரம் பூவினைப் பயன்படுத்துகின்றனர்;சில இடங்களில்,பண்ணைக்கீரையின் பூவினைப் பயன்படுத்துவதுண்டு.வேப்பிலைக்குப் பதிலாக மாவிலை பயன்பாடும் உண்டு;எது எப்படியாகிலும்,சிறுபீளைப்பூ நிச்சயம் இடம்பெறும்.

கூடுதல் தகவல்  ஒன்று. 

கோயில் விசேஷங்களில் காப்பு கட்டுதல் என்பது என்ன?

ரக்ஷை என்றாலே காப்பு என்றுதான் பொருள். ரக்ஷாபந்தனம் என்றால், காப்பு கட்டுதல் என்று அர்த்தம். ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்வதற்கு ரக்ஷாபந்தனம் என்று பெயர். நாம் செய்வது ஒரு நாள் பூஜையாகவும் இருக்கலாம் அல்லது பத்துநாள் பூஜையாகவும் இருக்கலாம். அதுமாதிரி செய்யக்கூடிய காரியங்களில் ரக்ஷாபந்தனம் செய்து கொண்டால், ஊர் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது. உபவாசம் இருக்கவேண்டும், பிரமசரிய நியமத்துடன் இருக்கவேண்டும் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அம்மாதிரி நியமத்துடன் இருந்து மேற்கொண்டால், அந்தக் காப்பு நம்மைக் காப்பாற்றும்.

கூடுதல் தகவல் இரண்டு..

கிராமக் கோவில்களில், காப்பு கட்டுதல் என்றால் வைக்கோல் புரியில் வேப்பிலைக் கொம்பு, மாவிலைக் கொம்புகளைச் செருகிக்கட்டி ஒரு நீண்ட மாலை போல் ஆக்கி கோவில் கூரையைச் சுற்றிக் கட்டுவார்கள். வீதிகளிலும் குறுக்கே கட்டுவார்கள். சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும், கரகம் சுமப்பவர்களும் மஞ்சள் அல்லது காவி உடையணிந்து, கோவில் பூசாரியால் அர்ச்சிக்கப்பட்ட ஒரு விரலி மஞ்சளை நூலில் கட்டி, தங்கள் வலது கை மணிக்கட்டில் அணிந்து கொள்வார்கள்.

கூடுதல் தகவல் மூன்று. 

நம் பாரத கண்டத்தில் பல்வேறு பகுதிகளில் சங்கராந்திக் காலத்தில்  நெற்கதிர் தோரணம், கோதுமைக்கதிர் தோரணம் கட்டும் வழமையும் உண்டு.

Saturday, January 6, 2024

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

 

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

ஆசிரியர் குழு

17 Sep 2010 | அச்சிட அச்சிட

ayodhyaஅயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.

இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.

மூவாயிரம் ஆண்டுகள்

பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.

‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.

இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ayodhya-kushan-age-artifactsஇதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.

சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.

இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.

குப்தர் காலம்

ayodhya-comwall

இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.

இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே  காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக  எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.

இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும்,  கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ayodhya-pillar-with-vishnu-imageஇவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.

இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்கமுடிகிறது. இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.  இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.

பாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக்கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.

பாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும்  முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.

பிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.

ayodha-evidence-gallery

பத்தாம் நூற்றாண்டில்

ayodhya-collapse-of-the-structure-11-300x206ஆனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன. இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.

இந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.

Art Gallery 165டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர்.  தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர்.  தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர்.  தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர்.  பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர்.  வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.

நன்றி : விஜயபாரதம் (10-9-2010) இதழ்

திருமறைக்காடு:-------ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்-

 "நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம் வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய"

"இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்"

                     ஆறாம் திருமுறை

                                                                          

023 திருமறைக்காடு
  
  

  பாடல் எண் : 5

 

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.



 பொழிப்புரை :

 

மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.
 
 
 
 
 
 

பாடல் எண் : 6

 

ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்
    அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
    குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
    நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.


.

பொழிப்புரை :

 

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான்பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்.
 
 
  
 
 
 
 
பாடல் எண் : 7
 
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
    விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
    அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
    பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.



பொழிப்புரை :
 
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன். சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத் தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன்.