Monday, November 22, 2021

நீலகண்ட சமுத்திரம்

• புது மண்டபம் கட்டியபோது நடந்ததாக கூறப்படும் மற்றொரு செவி வழிச்செய்தியாக ஓர் கதை உள்ளது. அது பின்வருமாறு:-நன்றிகள் புதுமண்டபம் பற்றிய கட்டுரை எழுதிய அன்புடன்  ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் E.P.I. இராம சுப்பிரமணியன் அவர்கள் பதிவு செய்த தகவலையும்   படமும் அவருக்கு நன்றிகள் கூறி பதிவு செய்துள்ளேன் )

சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையும் தமது துணைவியார் சிலைகளையும் வடிக்க நிவந்தமளித்து அவற்றையும் கோவில்களில் நிறுவது வழக்கம். [நாயக்கர் தம் மனைவிகளுடன் இருப்பது போன்ற சிலையை திருப்பரங்குன்றம், அழகர்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார் வளாகம் போன்ற திருத்தலங்களிலும் காணலாம்.] இவ்வாறாக புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க திருமலை மன்னர் உத்தரவிடுகிறார் .  அரச உத்தரவுக் கேற்ப, தலைமை சிற்பி சுமந்திர மூர்த்தி தானே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் இடது முழங்காலுக்கு 
மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது.

அரசரது கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். அப்போது அங்கே மேற்பார்வையிட வந்த அரசனது பிரதம மந்திரி நீலகண்ட தீக்ஷதர் [இவரே அப்பய்ய தீக்ஷதரது தம்பி மகன்] சிற்பியின் கவலையை அறிந்து கொண்டு சற்று உள்ளார்ந்து இருந்துவிட்டு, பின்னர் அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். 
அரசர் சிலைகளைப் பார்வையிட வருகையில் அரசியின் சிலை பற்றி 'நீலகண்ட தீட்க்ஷிதர்' சொன்ன கருத்து அரசரிடம் சொல்லப்படுகிறது. பிரதம மந்திரிக்கு அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு அழைத்துவர உத்தரவிடுகிறார்.
சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, பூஜையில் இறைவனுக்கு காண்பிக்கப்பட்ட கர்ப்பூர ஆரத்தியின் உதவியால் தன் கண்களை தாமே அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களிடம், அரசர் தர இருந்த தண்டனையை தாமே விதித்துக் கொண்டுவிட்டது பற்றி அரசருக்குத் தெரிவித்துவிடச் சொல்லுகிறார்..
தர்பாருக்குத் திரும்பிய சேவகர்கள் நீலகண்டரது செயலையும், செய்தியையும் மன்னரிடம் கூறுகின்றனர். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக மன்னனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட திருமலை மன்னர், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறார். தனது தவறை நினைத்து வருந்திய மன்னர், நீலகண்டரைத் கண்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டு, அவரது கண் பார்வை திரும்ப என்ன செய்வதென்று வினவுகிறார். அப்போது நீலகண்ட தீட்க்ஷிதர் அன்னை மீனாக்ஷியை வணங்கிப் பாடியதுதான் 'ஆனந்தஸாகர ஸ்தவம்' இந்த ஸ்லோகங்களைப் பாடி முடித்ததும் நீலகண்டரது கண்பார்வை திரும்பியதாகச் சொல்லப் படுகிறது.

  பின்னர் அரச சேவையை உதறித்தள்ளிவிட்டு திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையிலுள்ள 'பாலாமடை' கிராமத்தில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். (அவருடைய சமாதியும் அவ்வூரில் இருக்கிறது. )
திருமலை மன்னன்  நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக பாலாமடை கிராமத்தை அளித்தார். நாயக்க அரசின் ஆவணங்களில் பாலாமடை கிராமம் "நீலகண்ட சமுத்திரம்" என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).
அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

Thursday, November 18, 2021

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 52 ஆண்டு

 

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 52 ஆண்டு

வரும் 12.12.21 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு



 11.12.21 மாலை 6.30 மணிக்கு பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நமது சபை சார்பில் தங்கரதம் இழுக்க உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வரும் 12.12.21 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது

Chamundi Harimanikandan 

9442408009

Wednesday, November 17, 2021

"அய்யப்பன் வரலாறு" திரு. அரவிந்த் சுப்ரமணியம் (Aravind Subramanyam) அவர்கள் எழுதிய

 


Thank FB 

சபரிமலையில் மகிமை , ஐயப்ப கடவுளின் சக்தி பற்றி அறிய அவசியம் அனைவரும் படிக்கவும்...

எங்கள் அன்பு நண்பர் திரு. அரவிந்த் சுப்ரமணியம் (Aravind Subramanyam) அவர்கள் எழுதிய "அய்யப்பன் வரலாறு" என்ற நூலில் இருந்து இன்று  உங்களுக்காக சித்தர்களின் குரலில்.....

அதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன், வாவர் சுவாமி பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள் வரக்கூடாததற்கான விளக்கங்கள் விரிவாக  கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை உங்களுக்காக கீழே முழுமையாக பதிவிடுகிறேன்.

இதற்காக நேரம் ஒதுக்கி இதை படித்து தெளிவுபெறுவீராக.

நன்றி :- சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

Also more article about Shreekoil

Aiyanar and Aiyappan in Tamil Nadu Change and Continuity in South Indian Hinduism

https://sadhanandaswamigal.blogspot.com/2017/02/aiyanar-and-aiyappan-in-tamil-nadu.html?m=1 

Swami Ayyappan: The Reality and the Asianet Myth  https://sadhanandaswamigal.blogspot.com/2018/01/swami-ayyappan-reality-and-asianet-myth.html

Behind  Pathinettapadi (18 steps) in Sabarimala.. https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/behind-pathinettapadi-18-steps.html



சபரிமலைக் கோவிலின் புராண சரிதம்:

----------------------------------------------------------------------

மஹாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவ விஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்பவாசம் புரியாமல் சங்கல்ப மாத்திரத்தில் அவதரித்தவர் மஹாசாஸ்தா. இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் சிவ விஷ்ணு சங்கமம் என்பது சக்திகளின் சேர்க்கையே. உடல் சேர்க்கை அல்ல.

சாஸ்தாவின் ஆவிர்பாவம் ஆனதும் அவர் கைலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் இரு தேவியரை மணந்து அவ்வுலகிலிருந்து அருளாட்சி நடத்தலானார்.

மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்து, ஆகாய கங்கைவழியாக பம்பையாற்றங்கரையில் ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமசிவன் கொடுத்த நவரத்தின மணிமாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால் - மணிகண்டன் என்று பெயரிடப்பட்டார், (எல்லோரும் கருதுவது போல, அடிக்கும் கோவில் மணியல்ல – சம்ஸ்க்ருதத்தில் அதற்கு கண்டா என்று பெயர். மணி என்றால் நவரத்தின மணி என்றே பொருள். மணிப்பூர் என்றொரு மாநிலம் உள்ளதும் இங்ஙனமே. Land of Jewel என்றே அதற்குப்பெயர்.)

கழுத்தில் நவரத்தினமணிகள் ஜொலித்த காரணத்தால் மணிகண்டன் என்று பெயரிட்டு ராஜசேகர பாண்டியன் வளர்த்து வந்தான். அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த மணிகண்டன் – மஹிஷியை சம்ஹாரம் செய்து, கலியுக வரதனாக கோவில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரிபர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன் வருடத்தில் ஒருநாள் மகர சங்க்ரமத்தன்று கண்விழித்து பக்தர்களை அனுக்ரகிப்பேன் என்று வாக்களித்தார்.

பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரிமலைக்கான விரத வழிமுறைகளைக் கொடுத்தவர். ஒரு மண்டல பிரம்மச்சர்யாதி விரதங்களை மேற்கொள்ளுவோரே சபரிமலை செல்லத் தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார்.

சபரிமலைக் கோவிலின் ஸ்தலபுராணம் இதுவே. பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரளகல்பப் பகுதியில் நமக்குக் கிட்டும் புராண சரிதம்.

புராண காலம் தொட்டே சபரிமலை ஆலயம் உண்டென்றாலும் – வருடம் ஒருநாள் மட்டுமே வழிபாடு என்பதால் வந்து செல்லும் பக்தர் கூட்டம் மிகக் குறைவு. விரத அனுஷ்டானங்கள் பெண்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாத காரணங்களால் ஆண்கள் மட்டுமே சபரிமலை சென்றார்கள். (இன்றைக்குமே பெண்கள் செல்லவே முடியாத, ஆண்களுமே 15-16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் பல சாஸ்தா ஆலயங்கள் உண்டு.)

வரலாற்று நாயகன் ஐயப்பன்:

-----------------------------------------------------

புராண சரிதம் கடந்து பல நூற்றாண்டுகள் தாண்டி, பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் கேரளத்தில் புலம் பெயர்ந்து, பூஞ்சார், பந்தளம் எனக் கிளைகளாகப் பிரிந்தது. சபரிமலைக் கோவிலை பந்தள வம்சம் பராமரித்து வந்தது. அப்போதைய சபரிமலைப் பகுதி காட்டில் எல்லையாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்தது. வணிகர்கள் மிகுந்ததால் ஒரு காலகட்டத்தில் அப்பகுதி கொள்ளையர் வசமானது.

கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன் சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கி அழித்தான். பாண்டிய வம்சமான பந்தள ராஜ குடும்பத்தில், ராஜகுமாரிக்கு தெய்வாம்சத்துடன் ஆர்ய கேரள வர்மன் என்ற ஓர் மகன் பிறந்து, சபரிமலைக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்து மீண்டும் அங்கே சாஸ்தாவின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்கிறான். ஆர்ய கேரள வர்மன் என்ற அந்த ராஜகுமாரனின் செல்லப்பெயரும் ஐயப்பன். சபரிமலையின் தேவதையான மணிகண்ட சாஸ்தாவின் பெயரே கேரள வர்மனுக்கும் இருந்ததால் பின்னாளில் சிலபல குழப்பங்கள் உண்டாயின.

இஸ்லாமியரான வாவர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். அது புராணக் கதை அல்ல.


யாத்திரையின் நடைமுறை:

-------------------------------------------------

இது இப்படி இருக்க, கேரள மக்கள் சபரிமலை தர்மசாஸ்தாவை தங்கள் ரட்சக தேவதையாக ஆராதித்து சபரிமலை யாத்திரை செல்வது தொடர்ந்தது. ஆண்கள் மட்டுமே யாத்திரை மேற்கொண்டார்கள். சபரிமலை யாத்திரைக் கிரமங்களில் பண்டைய கால நடைமுறை – இருமுடி கட்டி அவரவர் வீட்டிலிருந்தே நடந்தே செல்வது. பகவான் மணிகண்டன் கட்டிக்கொண்டு போன இருமுடி போல, யோகத்தில் இருக்கும் பகவானுக்காக காராம்பசுவின் நெய்யை இருமுடியில் அடைத்து அவனுக்காக ஆத்ம சமர்ப்பணமாகக் கொண்டு சென்றார்கள்.

நடைபாதையாக வரும் பக்தர்கள் சென்றடையும் முதல் கேந்திரம் எருமேலி. பண்டைய கால நடைமுறை பற்றிக் கேட்டால் வியப்பு உண்டாகிறது. காளார்க்காடு அப்பு ஐயர் என்ற பக்தர் 1850களில் சபரிமலை வெளிச்சப்பாடு ஸ்தானம் வகித்து வந்தார். அவரே எருமேலி வரும் பக்தர்களின் விரதத்தை அங்கீகரித்து பெரியபாதைக்குள் செல்ல அனுமதிப்பார். அனுமதி இல்லாதோர் மீண்டும் வீடு திரும்பித்தான் வேண்டும். இதுவே அப்போதைய நடைமுறை.

பகவான் மணிகண்டன் பயணப்பட்ட வழியே பெரிய பாதை எனப்படும் பாரம்பரியப் பாதை. இதனையே பகவானின் பூங்காவனம் என்பார்கள். எருமேலி துவங்கி கரிமலை கடந்து சன்னிதானம் அடையும் கிட்டத்தட்ட 41 மைல் கொண்ட பாதை. பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் வணங்கி, பெரியபாதை வழியே வந்து, பதினெட்டாம் படி ஏறி சாஸ்தாவை வணங்கி, மீண்டும் பெரியபாதை வழியே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப் பாதை வழியே எறி, வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. சபரிமலை யாத்திரை என்பது பெரிய பாதையில் மட்டும் 7-8 நாட்கள் இருக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் ஐயப்பன்மார்கள் வீடு திரும்ப குறைந்தது 15-20 நாட்கள் ஆகும்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு ஒன்றிணைந்த தமிழக-கேரளத்தில், கேரள மக்களும், நெல்லை, குமரி பகுதி மக்களும், கோவை பாலக்காட்டு மக்களும் சபரிமலை யாத்திரையை சகஜமாக மேற்கொண்டவர்களே. என்னுடைய சிறிய பாட்டனார் ஸ்ரீ CV.கிருஷ்ண ஐயர் 1920-30களிலேயே சபரிமலை யாத்திரை மேற்கொண்டவர். அவருடைய டைரிக் குறிப்புகளில் கையில் அரிவாளுடன் பாதையை செப்பனிட்டுக்கொண்டு சென்ற சபரிமலைப் பயணம் பற்றி விவரித்திருக்கிறார். மற்ற தமிழகப் பகுதி மக்களுக்கு, நியமங்களுடன் கூடிய சபரிமலை யாத்திரை என்பது புதிய ஒன்றாக இருந்தது.


ஸ்வாமி ஐயப்பன் நாடகம்:

-----------------------------------------------

இப்படி இருந்த சூழ்நிலையில், கிட்டத்தட்ட 1940களில் ஒருமுறை கேரள மாநிலம் ஆலப்புழையில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகம் போட தன் குழுவுடன் வந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தொடர்புகொண்டு ஐயப்பன் கதையை நாடகமாகப் போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய ராஜமாணிக்கம் பிள்ளை, ஐயப்ப சரிதத்தைக் கேட்டவுடன் மனம் உருகி சபரிமலைக்குப் பயணப்பட்டார். அவருடன் நாடகக் குழுவில் பயணப்பட்ட நடிகர் மஞ்சேரி நாராயணன் என்பவரே பிற்காலத்தில் நம்பியார் குருசுவாமியாக அறியப்பட்ட எம்.என்.நம்பியார்.

முதன்முதலில் தமிழகத்தில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் ஸ்வாமி ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகம் மக்கள் மனதை ஈர்த்து தமிழகம் எங்கும் மக்கள் சபரிமலையை நாட ஆரம்பித்தார்கள். நாடகம் போட்ட நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தான் கேட்ட கதைகள் பலதையும் திரைக்கதையில் இணைத்து விட்டார். அதன் நம்பகத்தன்மையை முழுமையாக அவர் ஆராயவில்லை. முடிவாக : புராண காலத்து ஐயப்பனும் வரலாற்று ஐயப்பனும் குழப்பப்பட்டு விட்டார்கள். நாடகத்தில் இடைவேளைக் காட்சியில் மேடையில் கடல், கடலில் கப்பல், கப்பலில் வாவர் என ஜனங்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். அதுவே மனதில் நின்றுவிட்டது. இன்று ஏதோ வாவர் பள்ளிக்குப் போனால்தான் சபரிமலைக்குப் போன பலன் கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு அது வளர்ந்து விட்டது. பின்னாளில் வந்த புத்தகங்களும் இதே கதைகளையே சொல்ல ஆரம்பித்துவிட்டன.

புனலூர் சுப்ரமண்ய ஐயர், என்னுடைய தாத்தா CV ஸ்ரீநிவாஸ ஐயர், தளிப்பறம்பா நீலகண்ட ஐயர் முதலான பண்டைய குருமார்கள் தொட்டு தாணுலிங்க நாடார், எம்.என்.நம்பியார் வரை யாருமே வாவர் பள்ளிக்குச் செல்வதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்றே அடுத்த குழப்பம் – மாளிக்கைப்புறத்தம்மன் ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படும் வரலாறு. இதெல்லாம் நாடகத்தில் சுவைக்காகச் சேர்க்கப்பட்ட சம்பவங்கள். புராண ஆதாரம் ஏதும் கிடையாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு உருவம் கிடையாது. பல கேரள ஆலய பகவதி ஸங்கல்பம் போலவே கண்ணாடி பிம்பமாகவே இன்றும் பூஜிக்கப்படுகிறாள். மேலே கவசமே சார்த்தப்படுகிறது. அவள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமாகவே பூஜிக்கப்படுகிறாள். பாண்டிய குல தேவதையான மீனாக்ஷி ஸங்கல்பம் என்பதே பந்தள அரண்மனையின் நம்பிக்கை. அவள் ஐயப்பனுக்கு தாய் ஸ்தானமே அல்லாது, இணையாக புராணத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. மகரவிளக்கு உற்சவத்தில் யானை மீது சரங்குத்திக்கு பவனிவருவது மாளிகைப்புறத்து அம்மன் என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மையில் பவனி வருவது ஐயப்பனே- அந்த பிம்பத்தில் தெள்ளத் தெளிவாக மீசை உள்ளதைக் காணலாம்.

சபரிமலையும் திருவிதாங்கூர் அரசும்:

--------------------------------------------------------------------

1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில் திப்புவின் கேரள ஆக்ரமிப்பு துவங்கியபோது, போர்ச் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசரிடம் அடைமானம் வைத்தது. அடைமானத்தை மீட்க முடியாத நிலை உருவாகி, சபரிமலைக் கோவில் உட்பட மொத்தமும் திருவிதாங்கூர் அரசர் வசமானது. சபரிமலை ஆலயம் திருவிதாங்கூர் ஆளுகைக்குச் சென்றது இப்படித்தான்.

வழக்கமாக ஆலயத்தைக் கையகப்படுத்தும்போது அதன் நகைகளையும் எடுத்துக்கொள்ளும் அரசு, சபரிமலை விஷயத்தில் திருவாபரணத்தை பந்தள அரசரிடமே இருக்கும்படியும், அவரே மகர ஸங்க்ரமத்துக்குக் கொண்டு வரும் சம்பிரதாயத்தைத் தொடரும்படியும் சொல்லியது.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் பாலராமவர்மா தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவில்களை தனி அமைப்புடன் இணைத்தார். அதுவே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு. இப்படித்தான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் போர்டு கையில் சென்றது. தேவஸ்வம் போர்டு கேரள அரசின் ஒரு அங்கம் ஆனது.

சபரிமலையில் புனர் பிரதிஷ்டை:

------------------------------------------------------------

சபரிமலையில் பகவானின் யோகாக்னி காரணமாக ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்திக்கும் என்பது பெரியோர் நம்பிக்கை. அதே போல ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்தித்துள்ளது. பல முறை விக்ரஹமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்ரஹம், பஞ்சலோகம் எனப் பலமுறை மாற்றப்பட்டது. 1800களில் பல வருடங்கள் தாரு சிலை என்று சொல்லப்படும் மரவிக்ரஹம் கூட இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், மர விக்ரஹத்தில் நெய் அபிஷேகம் நேரடியாகச் செய்ய முடியாமல் இருமுடி நெய்யை நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் உண்டானது. அன்று பெரும்பாலும் வந்தவர்கள் கேரளத்தவர்களே. இன்றும் அந்தக் குறிப்பிட்ட சில ஊர்க்காரர்கள், இருமுடி நெய்யைக் கருவறையில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. நெய்த்தோணியிலேயே நெய்யைக் கொட்டி அதிலிருந்து சிறிதளவு பிரசாதம் எடுத்துச் செல்கிறார்கள்.

பின்னர் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1902ல் ஒரு தீவிபத்து ஏற்பட்டு, மேல்சாந்தியின் முயற்சியால் விக்ரஹம் காப்பாற்றப்பட்டு, 1904ல் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழு ஆலயமும் சீரமைக்கப்பட்டது. அப்போது வேறு பாதை இல்லை. எல்லாக் கட்டுமானப்பொருட்களும் பெரிய பாதை வழியாகவே சன்னிதானம் வந்தடைய வேண்டும்.

பந்தளம் அரண்மனையிலிருந்து திருப்பணிக்காக மரங்கள் எருமேலிக்குக் கொண்டு வரப்பட்டன. அழுதைவரை மரங்களைக் கொண்டுவந்துவிட்ட தொழிலாளர்கள் கல்தூண் போல கனத்த மரங்களை இனி மலையேற்ற முடியாது என்று பிரமித்துக் கைவிரித்தார்கள்.

திடீரென எங்கிருந்தோ அங்கே வந்து சேர்ந்த ஒரு பக்தர், உரத்த குரல் கொடுத்தார். ஆவேசம் வந்தவர் போல ஒரு பரவச நிலையில் காணப்பட்ட அவர், கட்டளை போல ஒரு வாக்கினைச் சொன்னார் : “இனி இந்தத் தூண்களை சுமப்பவர்கள், சன்னிதானம் அடையும் வரை எந்தச் சுமையையும் உணரவே மாட்டார்கள்.”

இவரது ஆவேசத்தால் உந்தப்பட்ட தொழிலாளர்கள் அவரது சத்திய வாக்குக்கு ஏற்ப சுமையே இல்லாமல் மயிலிறகு போலச் சுமந்து சென்றார்கள்.

சன்னிதானம் அடைந்து எல்லாவற்றையும் கீழே வைக்கும் வரை அதே ஆவேசத்துடன் உடன் இருந்த அந்த பக்தர், அடுத்த நொடி யார் கண்ணிலும் காணாமல் மறைந்து விட்டார். அப்படி உருவாக்கப்பட்டதே இன்று நாம் காணும் சபரிமலை அமைப்பு.

சபரிமலையின் புகழ் நாளுக்கு நாள் அதிகமானது அங்கிருந்த சில ஆசாமிகளுக்குப் பொறுக்கவில்லை. கோவிலின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி அப்போதே நடந்தது. 1950ல் சதியின் காரணமாக சபரிமலையில் பெரு நெருப்பு உண்டாக்கப்பட்டு திருக்கோவில் சாம்பலானது. ஐயப்பனின் விக்ரஹமும் மூன்றாக உடைந்து சேதமடைந்தது. ஆனால் ஐயனின் திருவுள்ளம் வேறுவகையில் இருந்தது. எந்தக் காரணத்துக்காக இந்தச் சதிச்செயல் அரங்கேறியதோ அதற்கு நேர் எதிராக, மிகச்சிலர் மட்டுமே அறிந்திருந்த சபரிமலைக் கோவில் பார் முழுவதும் அறிய இந்த நெருப்பு காரணமாகி விட்டது. இதன் பின்னர் சில மாதங்கள் பின்னப்பட்ட விக்ரஹமே பூஜையை ஏற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் - தீவிபத்து குறித்து கேள்விப்பட்டு வந்த போலீஸும், தீயணைப்புத்துறை வீரர்களும் பம்பையில் பரிதவித்து நின்றார்கள். விரதமில்லாத நாம் எப்படி சபரிமலை ஏறுவது, அதனால் ஏதும் தெய்வதோஷம் உண்டாகுமோ என்ற பயம் அவர்களை ஏறவிடாமல் தடுத்தது. அப்போது என்னுடைய பாட்டனார் உட்பட அங்கிருந்த குருமார்கள் அவர்களுக்கு விபூதி கொடுத்துக் கடமையைச் செய்யுங்கள் என்று ஆசி கூறி மலையேறச் சொன்னதாக அவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.

இன்றைய ஐயப்ப பிரதிஷ்டை:

------------------------------------------------------

இதன் பின்னர் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய புதிய விக்ரஹம் உருவாக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தா என்பவர் ஒரு விக்ரஹத்தையும், தமிழகத்தின் பிடி.ராஜனும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை இருவரும் சேர்ந்து ஒரு விக்ரஹத்தையும், என்னுடைய பாட்டனார் CVஸ்ரீநிவாஸ ஐயர் ஒரு விக்ரஹத்தையும் தயார் செய்தார்கள். 1952ல் இன்று நாம் காணும் ஐயப்பனின் விக்ரஹம், பிடி.ராஜன், ராஜமாணிக்கம் பிள்ளை கொணர்ந்த விக்ரஹம் தேவ ப்ரச்னத்தின் மூலம் ஏற்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தப் பிரதிஷ்டையை நடத்தியது கண்டரரு சங்கரரு. (பின்னர் ஐயப்பனைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, பிடிராஜன் தலைமையில் தென்னகம் எங்கும் எடுத்துச் செல்லப்பட்ட மற்றொரு விக்ரஹமும் உண்டு. அது ஹரித்வாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்வாமி விமோசனானந்தா உருவாக்கிய விக்ரஹம் காசியில் 18 படிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனது பாட்டனார் உருவாக்கிய விக்ரஹம், இன்றும் பாலக்காட்டில் எங்கள் பூர்வீக வீட்டில் உள்ளது.)

பின்னம் அடைந்த பழைய ஐயப்ப விக்ரஹம் மணியாக்கப்பட்டு சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப்பட்டது. மணி ரூபத்தில் காட்சி தரும் மணிகண்ட ஸ்வாமி, ஒலி ரூபமாகவும் அதாவது சப்தமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார். இதன் பிறகுதான் சபரிமலையின் ஒலி, உலகெங்கும் இன்னும் பிரவாகமெடுத்துப் பரவியது.


சின்னப்பாதை:

---------------------------

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்சக் கொஞ்சமாக சபரிமலைக்கு பக்தர் கூட்டம் வரத்துவங்கியது. 1960களில் திரு விவி.கிரி கேரள மாநில கவர்னராகப் பணியாற்றினார். கவர்னருக்கு சபரிமலை செல்லும் ஆசை உண்டானது. ஆனால் பெரிய பாதையில் செல்ல அவரால் முடியாது. கவர்னர் விவி.கிரிக்காக சாலக்காயம் பாதை உருவானது. அதிலிருந்துதான் சின்னப்பாதை என்று சொல்லப்படும் பம்பை பாதை பிரபலமானது. இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம், ராமர் சன்னிதி போன்றவையெல்லாம் இதன் பின்னர் உருவானதே. பழமலைக்காரர்களைப் பொருத்தவரை பகவான் குழந்தையாக வந்திறங்கிய பம்பை என்பது பெரியானவட்டம் பகுதியில் ஓடும் பம்பைக்கரையே.

ஆக, அரசியல் தலையீடே பெரியபாதையை சுருக்கி சின்னபாதையை உருவாக்கிய காரணம். அதே போல டோலி முறை உருவாகவும் விவி.கிரியே காரணம். சின்னப்பாதையிலும் நடந்து ஏற முடியாத விவி.கிரி தன்னை நாற்காலியில் அமர்த்திச் சுமந்து செல்லும்படிக் கேட்டுக் கொண்டார். சபரிமலை விதிகளை மீறி அப்படி சுமந்து செல்ல எல்லோருமே பயப்பட்டார்கள். தன்னைச் சுமந்து செல்ல முன்வருபவர்கள் நால்வருக்கும், குடும்பத்துக்கு ஒரு ஆளுக்கு அரசு வேலை தருவதாக விவி.கிரி சொன்னார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி டோலி முறையும் சபரிமலைக்குள் வந்தது.

பெண்களுக்கான நிலை:

---------------------------------------------

சில விஷயங்கள் சட்டம் போட்டுத்தான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை. பாரம்பரிய நம்பிக்கை என்பது நம் பாரத மக்கள் உணர்விலேயே கலந்தது. ஆலயத்துக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்பது போர்டு எழுதி தெரிவிக்க வேண்டிய நிலை இந்தியாவில் இல்லை. ஆனால் அதை அறியாதவர்களுக்கே விதிகளை எடுத்துச் சொல்லவேண்டும்.

1820ல் வெளியான ஒரு கேரள அரசு சர்வே குறிப்பு சபரிமலை பற்றிப் பேசுகிறது. Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட அரசு வெளியீடு, பூப்படைந்த பெண்களும் மாதவிடாய் நிற்காத பெண்களும் சபரிமலை ஏறத் தடை இருப்பதைத் தெளிவாக உரைக்கிறது. ஆங்கிலேயர்களும் கூட அதற்கு மதிப்பளித்து அந்த ஆலய சம்பிரதாயத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

ஆனாலும் 1950கள் வரை ஒன்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு வந்தது கூடக் கேள்விப்பட்டது இல்லை. அது யோகபீடம் என்ற காரணத்தால், மாதவிடாய் சுழற்சி இருக்கும் பெண்களின் உடற்கூறுக்கு அந்த க்ஷேத்ரத்தின் யோக நிலை ஏற்றது இல்லை, அதனால் பாதிப்பு உண்டாகும் என்பதை பக்தர்கள் நம்பி, அதற்கு மதிப்பளித்தே இருந்தார்கள்.

திருவிதாங்கூர் அரசுக்கே அப்போது சபரிமலைக் கோவில் சொந்தமாக இருந்தது. ஆனால் திருவிதாங்கூர் மஹாராணி, ராணி பார்வதி பாய், கோவில் விதிகளை அனுசரித்து, 1942ல், தனது கருப்பை நீக்கப்பட்ட பின்பே சபரிமலை வந்து ஐயப்பனை தரிசித்தார்.

பம்பை கணபதி கோவில் உருவாக்கப்பட்டு, சின்னப்பாதையும் வந்த பிற்பாடே அதாவது 1960களுக்குப் பிறகே பெண்கள் சபரிமலைக்கு வரத்தலைப்பட்டார்கள். அப்போதும் இளம் வயதுப் பெண்கள் மலைக்கு வரவில்லை. யாரும் அழைத்து வரவும் இல்லை. தனது 50வது வயதுக்குப் பிறகு சபரிமலை யாத்திரை துவங்கி 40 மலை யாத்திரை முடித்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா மிகவும் பிரபலம். பஜனைப்பாடகியான பெங்களூர் ரமணியம்மாளும் தனது 55 வயதுக்குப் பின்னர் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு பெரும் குழுக்களையும் அழைத்துச் சென்றார். சபரிமலையுடனும் ஐயப்பனுடனும் தொடர்புடைய குடும்பங்களான தாழமன் இல்லம், கம்பங்குடியார், பந்தளம் ராஜ குடும்பம், ஆலங்காடு, அம்பலப்புழை சங்கம் என இவர்கள் குடும்பங்களில் யாரும் விதியை மீறித் தங்கள் குடும்பப்பெண்களைக் கூட மலைக்கு அழைத்து வருவதில்லை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

1900களில் வருடம் ஒருமுறை திறந்த சபரிமலை நடை, பின்னர் மண்டல பூஜைக்குத் திறக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, 1960க்குள் மாதா மாதம் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் பம்பா வழிப்பாதை உருவான காரணத்தால், வசதிகள் அதிகமாயின. பெண்கள் அதிகம் வரத்துவங்கினார்கள். 1975-80களுக்குப் பின் ஆந்திர கர்நாடக மாநில பக்தர்கள் அதிகம் வருவதும், அவர்கள் குடும்பத்துடன் வந்து, பம்பையில் பெண்களை விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் மேலே சென்று தரிசனம் கண்டு வரும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மாத பூஜைகளில் பலநாட்களில் ஆளே இல்லாத நிலை இருப்பதைக் கண்டு இந்தப்பெண்களில் சிலர் தன்னிச்சையாக மேலே வரத் துவங்கினார்கள்.

அதிகாரிகள் சிலரும் இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வந்தார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். 2017ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டி, பழைய கொடிமரம் பிரிக்கப்பட்டபோது ஒரு குட்டு வெளிப்பட்டது. 1965-66களில் சபரிமலைக்குக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தக் காலத்திலேயே வெறும் காங்க்ரீட் சிமெண்ட்டைக் கொண்டு கொடிமரம் போலக் கட்டி அதற்கு மேலே பித்தளைத் தகடுகளால் மூடும் அளவுக்கு அரசு அதிகாரிகள் ஜித்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் விதிகளை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களை அனுமதித்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இந்நிலையில், இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல எம்.என்,நம்பியார் நடித்த ‘நம்பினார் கெடுவதில்லை’ திரைப்படத்தை சபரிமலையிலேயே படமாக்க எண்ணினார்கள். 1986ல் சுதாசந்திரன், ஜெயஸ்ரீ போன்ற இளம் நடிகைகளுடன் படக்குழுவினர் அங்கே வந்து நடிக்க, படம் எடுக்கப்பட்டது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

கேரள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 1991ல் (பூப்பெய்திய பெண்கள், மாதவிடாய் நிற்காத பெண்கள் என்றெல்லாம் விதியில் எழுத முடியாத காரணத்தால், நாகரீகமாக) 10 வயதுக்கும் குறைவாகவும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி அமலானது.

1972ல் பரணீதரன் ஆனந்த விகடனில் கேரள விஜயம் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினார். அதில் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்: சபரிமலையில் ஒரு பெரியவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்த தகவல் பலகையைச் சுட்டிக் காட்டி, “இங்கே குழந்தைகளுக்கு அன்னப்ராஸனம் நடத்த கட்டணம் என்று போட்டிருக்கிறீர்களே, அம்மா இல்லாமல் கைக்குழந்தை எப்படி வரும்? நீங்களே இங்கே இளம் பெண்கள் வருவதை ஊக்குவிக்கிறீர்களா?” என்று சண்டை போட்ட சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

1994ல் இதே போல வத்ஸலா குமாரி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது 42வது வயதில், பணி நிமித்தமாக சபரிமலை செல்ல அனுமதி வேண்டி நீதிமன்றத்தை அணுகினார். பணிநிமித்தமாக மேலே செல்ல அனுமதி அளித்த நீதிமன்றம், ஆலய சம்ப்ரதாயத்தில் தலையிடக்கூடாது என்ற காரணத்தால் பதினெட்டாம்படி ஏறவோ, சன்னிதானம் செல்லவோ அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வத்ஸலா குமாரியும் 50 வயது வரை காத்திருந்தே ஐயப்பனை தரிசனம் செய்தார்.

அப்போதுமே பக்தர்கள் இது ஆலய ஸம்ப்ரதாயத்துக்கு எதிரானது என்று உணர்ந்து அதை கடைப்பிடிக்கவே செய்தார்கள், அதை மீற நினைத்தவர்களை எதிர்த்தும் இருக்கிறார்கள்.


இன்றைய நிலை:

--------------------------------

இன்று சபரிமலை மாறிவிட்டது; பழைய ஆசாரங்கள் பலதும் பலரும் கடைப்பிடிப்பது இல்லை. மண்டல விரதம் இன்ஸ்டண்ட் விரதம் ஆகிவிட்டது. பெண்கள் மட்டும் வந்தால் தவறா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இன்றைக்கும் மண்டல விரதத்தை திரிகரண சுத்தியோடு கடைப்பிடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 40 வருடம் ஆனாலும் ஒரே குருநாதருடன் அவர் கட்டளையை ஏற்றே மலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால் தவறு நியாயம் ஆகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐயப்பனைப் பக்தி பூர்வமாக நம்புபவர்கள் ஐயப்பன் வாக்கை மீற மாட்டார்கள். மீறி வர நினைப்பவர்கள் ஐயப்பனை முழுமையாக நம்பவில்லை என்றே பொருள்.

சபரிமலை ஆலயம் தனித்தன்மை கொண்டது. பகவான் சாஸ்தா மனிதனாக பூமியில் தோன்றி, நமக்காக தவக்கோலம் பூண்டு நைஷ்டீக பிரம்மச்சரியத்தில் தனியோகம் புரியும் மஹா யோக பீடம்.

இன்னும் அங்கே மணிகண்டன் ஜீவனோடுதான் இருக்கிறான். அதனாலேயே எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு விரத நியமம் இல்லை;

எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு பதினெட்டுப் படியும் அதற்கான பூஜையும் இல்லை;

எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு ஆத்ம சமர்ப்பண தத்துவமான இருமுடியும் நெய் அபிஷேகமும் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயத்தைதின் ஒரு பகுதியைத்தான் இன்று நீதிமன்ற ஆணை மூலம் தகர்த்துவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் இது ஒரு சோதனைக் காலம் என்றே பக்தர்கள் கருதுகிறார்கள். தீ விபத்தைக் காரணமாக்கி ஐயப்ப தர்மத்தை உலகறியச் செய்த பகவானின் லீலை போல, இந்தச் சோதனையை சாதனையாக்கி இன்னும் லீலைகள் நடத்துவான் ஹரிஹரசுதன்.

க்ஷத்ரிய தர்மத்தைக் கைவிடாமல், நீதிமன்றத் தலையீட்டை ஏற்காமல், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க குரல் கொடுக்க பந்தள ராஜா கூட்டிய கூட்டத்துக்கு 1 லட்சம் பக்தர்கள் – பெண் பக்தைகள் கூடி இருக்கிறார்கள். உண்மை பக்தர்கள் இருக்கும் வரை ஆலயத்தின் சம்பிரதாயங்கள் காக்கப்படும்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா:

---------------------------------------------------

குறிப்பு: கட்டுரையாசிரியர் கடந்த 22 வருடங்களாக ஐயப்பனைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சபரிமலையில் பங்குனி உத்திரத் திருநாளை துவங்கி நடத்திய கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயரின் பேரன் என்ற முறையில், இவரது குடும்பத்துக்கும் சபரிமலைக்குமான தொடர்பு நூறாண்டுகளுக்கும் மேலானது. இவர் ஐயப்பனைக் குறித்து மஹா சாஸ்தா விஜயம் என்ற 1000 பக்க நூலை இயற்றியுள்ளார்.


குறிப்பு :- 1950இல் உடைக்கப்பட்ட ஐயப்பன் விக்ரகஹம் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, November 15, 2021

Sunday, November 14, 2021

ஜோதிடக் கலை அபூர்வ நக்ஷத்திரங்கள்

 ஜோதிடக் கலை

அபூர்வ ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட உலகமே தேடி கொண்டிருக்கும்  அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thank FB mamomani

            ஒரு மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய நீண்ட நாட்களாக தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன். நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.


            ஒரு குறிப்பிட்ட   நேரத்தில்  ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.

            நட்சத்திர  மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27  நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.


நட்சத்திர  பெயர்கள்:-

-------------------------------------


1.அஸ்வினி     2. பரணி      3.கிருத்திகை    4.ரோஹிணி       5.மிருகசீரிடம்    6.திருவாதிரை    7.புனர்பூசம்        8.பூசம்         9.ஆயில்யம்     

          

10.மகம்               11.பூரம்              12.உத்திரம்        13.ஹஸ்தம்       14.சித்திரை       15.ஸ்வாதி           16.விசாகம்        17.அனுசம்         18. கேட்டை

                 

19.மூலம்        20.பூராடம்       21.உத்திராடம்      22.திருவோணம்    23.அவிட்டம்    24.சதயம்       25.பூரட்டாதி     26.உத்திரட்டாதி     27. ரேவதி


நட்சத்திர  வடிவம்:-

--------------------------------

                           

அஸ்வினி                 - குதிரைத்தலை

பரணி                       - யோனி, அடுப்பு,                              

                                     முக்கோணம்

கிருத்திகை               - கத்தி, கற்றை, வாள்,                

                                        தீஜ்வாலை

ரோஹிணி               - தேர், வண்டி, கோயில்,       

                                ஆலமரம், ஊற்றால், சகடம்

மிருகசீரிடம்             - மான் தலை,                          

                                      தேங்கைக்கண்

திருவாதிரை             - மனித தலை, வைரம்,      

                                       கண்ணீர்துளி

புனர்பூசம்                 - வில்

பூசம்                           - புடலம்பூ, அம்புக்கூடு,       

                                       பசுவின்மடி

ஆயில்யம்                 - சர்ப்பம்,அம்மி

மகம்                          - வீடு,பல்லக்கு,நுகம்

பூரம்                          - கட்டில்கால், கண்கள்,        

                              அத்திமரம், சதுரம், மெத்தை

உத்திரம்                   - கட்டில்கால், கம்பு, குச்சி,    

                                     மெத்தை

ஹஸ்தம்                   - கை

சித்திரை                   - முத்து,புலிக்கண்

ஸ்வாதி                     - பவளம்,தீபம்

விசாகம்                    - முறம், தோரணம், குயவன் சக்கரம்

அனுசம்                     - குடை, முடப்பனை,            

                                       தாமரை, வில்வளசல்

கேட்டை                   - குடை,குண்டலம்,ஈட்டி

மூலம்                        - அங்குசம்,சிங்கத்தின்         

                                    வால், பொற்காளம்,

                                    யானையின் துதிக்கை

பூராடம்                     - கட்டில்கால்

உத்திராடம்              - கட்டில்கால்

திருவோணம்            - முழக்கோல், மூன்று.     

                                        பாதச்சுவடு,அம்பு

அவிட்டம்                 - மிருதங்கம், உடுக்கை

சதயம்                        - பூங்கொத்து,                    

                                      மூலிகை கொத்து

பூரட்டாதி                  - கட்டில்கால்

உத்திரட்டாதி          - கட்டில்கால்

ரேவதி                       - மீன் படகு


நட்சத்திர பெயர்களின் தமிழ் அர்த்தம்:-

-------------------------------------------------------------------

                           

அஸ்வினி                 - குதிரைத்தலை

பரணி                       - தாங்கிப்பிடிப்பது

கிருத்திகை               - வெட்டுவது

ரோஹிணி               - சிவப்பானது

மிருகசீரிடம்             - மான் தலை

திருவாதிரை             - ஈரமானது

புனர்பூசம்                 - திரும்ப கிடைத்த ஒளி

பூசம்                           - வளம் பெருக்குவது

ஆயில்யம்                 - தழுவிக்கொள்வது

மகம்                          - மகத்தானது

பூரம்                          - பாராட்ட த்தகுந்தது

உத்திரம்                   - சிறப்பானது

ஹஸ்தம்                   - கை

சித்திரை                   - ஒளி வீசுவது

ஸ்வாதி                     - சுதந்தரமானது

விசாகம்                    - பிளவுபட்டது

அனுசம்                     - வெற்றி

கேட்டை                   - மூத்தது

மூலம்                        - வேர்

பூராடம்                     - முந்தைய வெற்றி

உத்திராடம்              - பிந்தைய வெற்றி

திருவோணம்            - படிப்பறிவு உடையது,      

                                         காது

அவிட்டம்                 - பணக்காரன்

சதயம்                        - நூறு மருத்துவர்கள்

பூரட்டாதி                  - முன் மங்கள பாதம்

உத்திரட்டாதி           - பின் மங்கள பாதம்

ரேவதி                       - செல்வம் மிகுந்தது


நட்சத்திர  அதிபதிகள்:-

----------------------------------------

                           

அஸ்வினி                 - கேது

பரணி                       - சுக்கிரன்

கிருத்திகை               - சூரியன்

ரோஹிணி               - சந்திரன்

மிருகசீரிடம்             - செவ்வாய்

திருவாதிரை             - ராஹு

புனர்பூசம்                 - குரு

பூசம்                           - சனி

ஆயில்யம்                 - புதன்

மகம்                          - கேது

பூரம்                          - சுக்கிரன்

உத்திரம்                   - சூரியன்

ஹஸ்தம்                   - சந்திரன்

சித்திரை                   - செவ்வாய்

ஸ்வாதி                     - ராஹு

விசாகம்                    - குரு

அனுசம்                     - சனி

கேட்டை                   - புதன்

மூலம்                        - கேது

பூராடம்                     - சுக்கிரன்

உத்திராடம்              - சூரியன்

திருவோணம்            - சந்திரன்

அவிட்டம்                 - செவ்வாய்

சதயம்                        - ராஹு

பூரட்டாதி                  - குரு

உத்திரட்டாதி           - சனி

ரேவதி                       - புதன்


சராதி நட்சத்திரப்பிரிவுகள்:-         

-------------------------------------------------

                 

அஸ்வினி                 - சரம்

பரணி                       - ஸ்திரம்

கிருத்திகை               - உபயம்

ரோஹிணி               - சரம்

மிருகசீரிடம்             - ஸ்திரம்

திருவாதிரை             - உபயம்

புனர்பூசம்                  - சரம்

பூசம்                           - ஸ்திரம்

ஆயில்யம்                 - உபயம்

மகம்                          - சரம்

பூரம்                          - ஸ்திரம்

உத்திரம்                   - உபயம்

ஹஸ்தம்                   - சரம்

சித்திரை                   - ஸ்திரம்

ஸ்வாதி                     - உபயம்

விசாகம்                    - சரம்

அனுசம்                     - ஸ்திரம்

கேட்டை                   - உபயம்

மூலம்                        - சரம்

பூராடம்                     - ஸ்திரம்

உத்திராடம்              - உபயம்

திருவோணம்            - சரம்

அவிட்டம்                 - ஸ்திரம்

சதயம்                        - உபயம்

பூரட்டாதி                  - சரம்

உத்திரட்டாதி          - ஸ்திரம்

ரேவதி                       - உபயம்


மூலாதி நட்சத்திரப் பிரிவுகள்:-

-----------------------------------------------------

                           

அஸ்வினி                 - தாது

பரணி                       - மூலம்

கிருத்திகை               - ஜீவன்

ரோஹிணி               - தாது

மிருகசீரிடம்             - மூலம்

திருவாதிரை             - ஜீவன்

புனர்பூசம்                 - தாது

பூசம்                          - மூலம்

ஆயில்யம்                 - ஜீவன்

மகம்                          - தாது

பூரம்                          - மூலம்

உத்திரம்                    - ஜீவன்

ஹஸ்தம்                    - தாது

சித்திரை                    - மூலம்

ஸ்வாதி                      - ஜீவன்

விசாகம்                     - தாது

அனுசம்                      - மூலம்

கேட்டை                    - ஜீவன்

மூலம்                         - தாது

பூராடம்                      - மூலம்

உத்திராடம்               - ஜீவன்

திருவோணம்             - தாது

அவிட்டம்                  - மூலம்

சதயம்                        - ஜீவன்

பூரட்டாதி                  - தாது

உத்திரட்டாதி            - மூலம்

ரேவதி                       - ஜீவன்


பிரம்மாதி நட்சத்திரப் பிரிவுகள்:-

--------------------------------------------------------

                           

அஸ்வினி                 - பிரம்மா

பரணி                       - சிவன்

கிருத்திகை               - விஷ்ணு

ரோஹிணி               - பிரம்மா

மிருகசீரிடம்             - சிவன்

திருவாதிரை             - விஷ்ணு

புனர்பூசம்                 - பிரம்மா

பூசம்                           - சிவன்

ஆயில்யம்                 - விஷ்ணு

மகம்                          - பிரம்மா

பூரம்                          - சிவன்

உத்திரம்                   - விஷ்ணு

ஹஸ்தம்                   - பிரம்மா

சித்திரை                   - சிவன்

ஸ்வாதி                     - விஷ்ணு

விசாகம்                    - பிரம்மா

அனுசம்                     - சிவன்

கேட்டை                   - விஷ்ணு

மூலம்                        - பிரம்மா

பூராடம்                     - சிவன்

உத்திராடம்              - விஷ்ணு

திருவோணம்            - பிரம்மா

அவிட்டம்                 - சிவன்

சதயம்                        - விஷ்ணு

பூரட்டாதி                  - பிரம்மா

உத்திரட்டாதி            - சிவன்

ரேவதி                       - விஷ்ணு


நட்சத்திர  திரிதோஷம்:-

------------------------------------------

                           

அஸ்வினி                 - வாதம்

பரணி                       - பித்தம்

கிருத்திகை               - கபம்

ரோஹிணி               - கபம்

மிருகசீரிடம்             - பித்தம்

திருவாதிரை             - வாதம்

புனர்பூசம்                 - வாதம்

பூசம்                           - பித்தம்

ஆயில்யம்                 - கபம்

மகம்                          - கபம்

பூரம்                          - பித்தம்

உத்திரம்                   - வாதம்

ஹஸ்தம்                   - வாதம்

சித்திரை                   - பித்தம்

ஸ்வாதி                     - கபம்

விசாகம்                    - கபம்

அனுசம்                     - பித்தம்

கேட்டை                   - வாதம்

மூலம்                        - வாதம்

பூராடம்                     - பித்தம்

உத்திராடம்              - கபம்

திருவோணம்            - கபம்

அவிட்டம்                 - பித்தம்

சதயம்                        - வாதம்

பூரட்டாதி                  - வாதம்

உத்திரட்டாதி          - பித்தம்

ரேவதி                       - கபம்


புருஷார்த்த நட்சத்திரப் பிரிவுகள்:-

------------------------------------------------------------

                            

அஸ்வினி                  - தர்மம்

பரணி                        - ஆர்த்தம்

கிருத்திகை                - காமம்

ரோஹிணி                - மோட்சம்

மிருகசீரிடம்             - மோட்சம்

திருவாதிரை             - காமம்

புனர்பூசம்                 - ஆர்த்தம்

பூசம்                          -  தர்மம்

ஆயில்யம்                 -  தர்மம்

மகம்                          - ஆர்த்தம்

பூரம்                          - காமம்

உத்திரம்                   - மோட்சம்

ஹஸ்தம்                   - மோட்சம்

சித்திரை                    - காமம்

ஸ்வாதி                     - ஆர்த்தம்

விசாகம்                    -  தர்மம்

அனுசம்                     - தர்மம்

கேட்டை                   - ஆர்த்தம்

மூலம்                         - காமம்

பூராடம்                     - மோட்சம்

உத்திராடம்              - மோட்சம்

அபிஜித்                     - காமம்

திருவோணம்            - ஆர்த்தம்

அவிட்டம்                 - தர்மம்

சதயம்                        - தர்மம்

பூரட்டாதி                  - ஆர்த்தம்

உத்திரட்டாதி            - காமம்

ரேவதி                       - மோட்சம்


நட்சத்திர  தேவதைகள்:-

------------------------------------------

                           

அஸ்வினி                 - அஸ்வினி குமாரர்

பரணி                       - யமன்

கிருத்திகை               - அக்னி

ரோஹிணி               - பிரஜாபதி

மிருகசீரிடம்             - சோமன்

திருவாதிரை             - ருத்ரன்

புனர்பூசம்                 - அதிதி

பூசம்                           - பிரஹஸ்பதி

ஆயில்யம்                 - அஹி

மகம்                          - பித்ருக்கள்

பூரம்                          - பகன்

உத்திரம்                   - ஆர்யமான்

ஹஸ்தம்                   - அர்க்கன்/சாவித்ரி

சித்திரை                   - விஸ்வகர்மா

ஸ்வாதி                     - வாயு

விசாகம்                    - சக்ராக்னி

அனுசம்                     - மித்ரன்

கேட்டை                   - இந்திரன்

மூலம்                        - நைருதி

பூராடம்                     - அபா

உத்திராடம்              - விஸ்வதேவன்

திருவோணம்            - விஷ்ணு

அவிட்டம்                 - வாசுதேவன்

சதயம்                        - வருணன்

பூரட்டாதி                  - அஜைகபாதன்

உத்திரட்டாதி          - அஹிர்புத்தன்யன்

ரேவதி                       - பூசன்


நட்சத்திர  ரிஷிகள்:-

-----------------------------------

                           

அஸ்வினி                 - காத்யாயனா

பரணி                       - ரிஷிபத்தன்யா

கிருத்திகை               - அக்னிவேஷா

ரோஹிணி               - அனுரோஹி

மிருகசீரிடம்             - ஸ்வேதயி

திருவாதிரை             - பார்கவா

புனர்பூசம்                 - வாத்ஸாயனா

பூசம்                           - பரத்வாஜா

ஆயில்யம்                 - ஜடுகர்ணா

மகம்                          - வ்யாக்ரபாதா

பூரம்                          - பராசரா

உத்திரம்                   - உபசிவா

ஹஸ்தம்                   - மாண்டவ்யா

சித்திரை                   - கௌதமா

ஸ்வாதி                     - கௌண்டின்யா

விசாகம்                    - கபி

அனுசம்                     - மைத்ரேயா

கேட்டை                   - கௌசிகா

மூலம்                        - குட்சா

பூராடம்                     - ஹரிதா

உத்திராடம்              - கஸ்யபா

அபிஜித்                    - சௌனகா

திருவோணம்            - அத்ரி

அவிட்டம்                 - கர்கா

சதயம்                        - தாக்ஷாயணா

பூரட்டாதி                  - வத்ஸா

உத்திரட்டாதி          - அகஸ்தியா

ரேவதி                       - சந்தாயணா


நட்சத்திர  கோத்திரங்கள்:-

---------------------------------------------

                           

அஸ்வினி                 - அகஸ்தியா

பரணி                       - வஷிஷ்டா

கிருத்திகை               - அத்ரி

ரோஹிணி               - ஆங்கீரஸா

மிருகசீரிடம்             - புலஸ்தியா

திருவாதிரை             - புலஹா

புனர்பூசம்                 - க்ரது

பூசம்                           - அகஸ்தியா

ஆயில்யம்                 - வஷிஷ்டா

மகம்                          - அத்ரி

பூரம்                          - ஆங்கீரஸா

உத்திரம்                   - புலஸ்தியா

ஹஸ்தம்                   - புலஹா

சித்திரை                   - க்ரது

ஸ்வாதி                     - அகஸ்தியா

விசாகம்                    - வஷிஷ்டா

அனுசம்                     - அத்ரி

கேட்டை                   - ஆங்கீரஸா

மூலம்                        - புலஸ்தியா

பூராடம்                     - புலஹா

உத்திராடம்              - க்ரது

அபிஜித்                     - அகஸ்தியா

திருவோணம்            - வஷிஷ்டா

அவிட்டம்                 - அத்ரி

சதயம்                        - ஆங்கீரஸா

பூரட்டாதி                  - புலஸ்தியா

உத்திரட்டாதி          - புலஹா

ரேவதி                       - க்ரது


அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்:-

------------------------------------------------------------------

                           

அஸ்வினி                 - பஹிரங்கம்

பரணி                       - பஹிரங்கம்

கிருத்திகை               - அந்தரங்கம்

ரோஹிணி               - அந்தரங்கம்

மிருகசீரிடம்             - அந்தரங்கம்

திருவாதிரை             - அந்தரங்கம்

புனர்பூசம்                 - பஹிரங்கம்

பூசம்                           - பஹிரங்கம்

ஆயில்யம்                 - பஹிரங்கம்

மகம்                          - அந்தரங்கம்

பூரம்                          - அந்தரங்கம்

உத்திரம்                   - அந்தரங்கம்

ஹஸ்தம்                   - அந்தரங்கம்

சித்திரை                   - பஹிரங்கம்

ஸ்வாதி                     - பஹிரங்கம்

விசாகம்                    - பஹிரங்கம்

அனுசம்                     - அந்தரங்கம்

கேட்டை                   - அந்தரங்கம்

மூலம்                        - அந்தரங்கம்

பூராடம்                     - அந்தரங்கம்

உத்திராடம்              - பஹிரங்கம்

திருவோணம்            - பஹிரங்கம்

அவிட்டம்                 - அந்தரங்கம்

சதயம்                        - அந்தரங்கம்

பூரட்டாதி                  - அந்தரங்கம்

உத்திரட்டாதி          - அந்தரங்கம்

ரேவதி                       - பஹிரங்கம்


நட்சத்திரங்களூம் தானங்களும்:-

---------------------------------------------------------

                            

அஸ்வினி                 - பொன் தானம்

பரணி                       - எள் தானம்

கிருத்திகை               - அன்ன தானம்

ரோஹிணி               - பால் தானம்

மிருகசீரிடம்             - கோதானம்

திருவாதிரை             - எள் தானம்

புனர்பூசம்                 - அன்ன தானம்

பூசம்                           - சந்தன தானம்

ஆயில்யம்                 - காளைமாடு தானம்

மகம்                          - எள் தானம்

பூரம்                          - பொன் தானம்

உத்திரம்                   - எள் தானம்

ஹஸ்தம்                   - வாகன தானம்

சித்திரை                   - வஸ்திர தானம்

ஸ்வாதி                     - பணம் தானம்

விசாகம்                    - அன்ன தானம்

அனுசம்                     - வஸ்திர தானம்

கேட்டை                   - கோ தானம்

மூலம்                        - எருமை தானம்

பூராடம்                     - அன்ன தானம்

உத்திராடம்              - நெய் தானம்

திருவோணம்            - வஸ்திர தானம்

அவிட்டம்                 - வஸ்திர தானம்

சதயம்                        - சந்தன தானம்

பூரட்டாதி                  - பொன் தானம்

உத்திரட்டாதி          - வெள்ளாடு தானம்

ரேவதி                       - பொன் தானம்


நட்சத்திர  வீதி:-

---------------------------

                           

அஸ்வினி                 - நாக வீதி

பரணி                       - நாக வீதி

கிருத்திகை               - நாக வீதி

ரோஹிணி               - கஜ வீதி

மிருகசீரிடம்             - கஜ வீதி

திருவாதிரை             - கஜ வீதி

புனர்பூசம்                 - ஐராவத வீதி

பூசம்                           - ஐராவத வீதி

ஆயில்யம்                 - ஐராவத வீதி

மகம்                          - ஆர்ஷப வீதி

பூரம்                          - ஆர்ஷப வீதி

உத்திரம்                   - ஆர்ஷப வீதி

ஹஸ்தம்                   - கோ வீதி

சித்திரை                   - கோ வீதி

ஸ்வாதி                     - கோ வீதி

விசாகம்                    - ஜாரத்கவீ வீதி

அனுசம்                     - ஜாரத்கவீ வீதி

கேட்டை                   - ஜாரத்கவீ வீதி

மூலம்                        - அஜ வீதி

பூராடம்                     - அஜ வீதி

உத்திராடம்              - அஜ வீதி

திருவோணம்            - மிருக வீதி

அவிட்டம்                 - மிருக வீதி

சதயம்                        - மிருக வீதி

பூரட்டாதி                  - வைஷ்வானரீ வீதி

உத்திரட்டாதி          - வைஷ்வானரீ வீதி

ரேவதி                       - வைஷ்வானரீ வீதி


நட்சத்திர  வீதி(வேறு):-

--------------------------------------

                           

அஸ்வினி                 - பசு வீதி

பரணி                       - நாக வீதி

கிருத்திகை               - நாக வீதி

ரோஹிணி               - யானை வீதி

மிருகசீரிடம்             - யானை வீதி

திருவாதிரை             - யானை வீதி

புனர்பூசம்                 - ஐராவத வீதி

பூசம்                           - ஐராவத வீதி

ஆயில்யம்                 - ஐராவத வீதி

மகம்                          - வ்ரிஷப வீதி

பூரம்                          - வ்ரிஷப வீதி

உத்திரம்                   - வ்ரிஷப வீதி

ஹஸ்தம்                   - ஆடு வீதி

சித்திரை                   - ஆடு வீதி

ஸ்வாதி                     - நாக வீதி

விசாகம்                    - ஆடு வீதி

அனுசம்                     - மான் வீதி

கேட்டை                   - மான் வீதி

மூலம்                        - மான் வீதி

பூராடம்                     - தகன வீதி

உத்திராடம்              - தகன வீதி

திருவோணம்            - கன்றுகுட்டி வீதி

அவிட்டம்                 - கன்றுகுட்டி வீதி

சதயம்                        - கன்றுகுட்டி வீதி

பூரட்டாதி                  - பசு வீதி

உத்திரட்டாதி           - தகன வீதி

ரேவதி                       - பசு வீதி


நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்:-

---------------------------------------------------------------------

                       

அஸ்வினி                 - ஸ்வர்ண பாதம்

பரணி                       - ஸ்வர்ண பாதம்

கிருத்திகை               - இரும்பு பாதம்

ரோஹிணி               - இரும்பு பாதம்

மிருகசீரிடம்             - இரும்பு பாதம்

திருவாதிரை             - வெள்ளி பாதம்

புனர்பூசம்                 - வெள்ளி பாதம்

பூசம்                          - வெள்ளி பாதம்

ஆயில்யம்                 - வெள்ளி பாதம்

மகம்                          - வெள்ளி பாதம்

பூரம்                          - வெள்ளி பாதம்

உத்திரம்                   - வெள்ளி பாதம்

ஹஸ்தம்                   - வெள்ளி பாதம்

சித்திரை                   - வெள்ளி பாதம்

ஸ்வாதி                     - வெள்ளி பாதம்

விசாகம்                    - வெள்ளி பாதம்

அனுசம்                    - வெள்ளி பாதம்

கேட்டை                   - தாமிர பாதம்

மூலம்                        - தாமிர பாதம்

பூராடம்                     - தாமிர பாதம்

உத்திராடம்              - தாமிர பாதம்

திருவோணம்            - தாமிர பாதம்

அவிட்டம்                 - தாமிர பாதம்

சதயம்                        - தாமிர பாதம்

பூரட்டாதி                  - தாமிர பாதம்

உத்திரட்டாதி            - தாமிர பாதம்

ரேவதி                       - ஸ்வர்ண பாதம்


நட்சத்திர  குணம்:-

--------------------------------

                           

அஸ்வினி                 - க்ஷிப்ரம்/லகு

பரணி                       - உக்கிரம்/குரூரம்

கிருத்திகை               - மிஸ்ரம்/சாதாரணம்

ரோஹிணி               - ஸ்திரம்/துருவம்

மிருகசீரிடம்             - மிருது/மைத்ரம்

திருவாதிரை             - தாருணம்/தீக்ஷணம்

புனர்பூசம்                 - சரம்/சலனம்

பூசம்                           - க்ஷிப்ரம்/லகு

ஆயில்யம்                 - தாருணம்/தீக்ஷணம்

மகம்                          - உக்கிரம்/குரூரம்

பூரம்                          - உக்கிரம்/குரூரம்

உத்திரம்                   - ஸ்திரம்/துருவம்

ஹஸ்தம்                   - க்ஷிப்ரம்/லகு

சித்திரை                   - மிருது/மைத்ரம்

ஸ்வாதி                     - சரம்/சலனம்

விசாகம்                    - மிஸ்ரம்/சாதாரணம்

அனுசம்                     - மிருது/மைத்ரம்

கேட்டை                   - தீக்ஷணம்/தாருணம்

மூலம்                        - தீக்ஷணம்/தாருணம்

பூராடம்                     - உக்கிரம்/குரூரம்

உத்திராடம்              - ஸ்திரம்/துருவம்

திருவோணம்            - சரம்/சலனம்

அவிட்டம்                 - சரம்/சலனம்

சதயம்                        - சரம்/சலனம்

பூரட்டாதி                  - உக்கிரம்/குரூரம்

உத்திரட்டாதி            - ஸ்திரம்/துருவம்

ரேவதி                       - மிருது/மைத்ரம்


(க்ஷிப்ரம்-துரிதமானது)   (உக்கிரம்,குரூரம்-கொடியது)     

 (சரம், சலனம்-அசைகின்றது)

(ஸ்திரம்,துருவம்- அசையாதது)  (தாருணம்-கொடூரமானது)  (லகு-கனமில்லாதது,சிறியது)

(தீக்ஷணம்-கூர்மையானது)


நட்சத்திர  கணம்:-

-------------------------------

                            

அஸ்வினி                 - தேவம்

பரணி                       - மனுசம்

கிருத்திகை               - ராக்ஷசம்

ரோஹிணி               - மனுசம்

மிருகசீரிடம்             - தேவம்

திருவாதிரை             - மனுசம்

புனர்பூசம்                 - தேவம்

பூசம்                           - தேவம்

ஆயில்யம்                 - ராக்ஷசம்

மகம்                          - ராக்ஷசம்

பூரம்                          - மனுசம்

உத்திரம்                   - மனுசம்

ஹஸ்தம்                   - தேவம்

சித்திரை                   - ராக்ஷசம்

ஸ்வாதி                     - தேவம்

விசாகம்                    - ராக்ஷசம்

அனுசம்                     - தேவம்

கேட்டை                   - ராக்ஷசம்

மூலம்                        - ராக்ஷசம்

பூராடம்                     - மனுசம்

உத்திராடம்              - மனுசம்

திருவோணம்            - தேவம்

அவிட்டம்                 - ராக்ஷசம்

சதயம்                        - ராக்ஷசம்

பூரட்டாதி                  - மனுசம்

உத்திரட்டாதி          - மனுசம்

ரேவதி                       - தேவம்


தேவம்- அழகு, ஈகைகுணம், விவேகம், நல்லொழுக்கம், அல்ப போஜனம், பேரறிவு


மனுசம்- அபிமானம், செல்வமுடைமை, கிருபை, அதிகாரம், பந்துக்களை பாதுகாத்தல்


ராக்ஷசம்- பராக்கிரமம், அதிமோகம், கலகப்பிரியம், துக்கம், தீயசெயல், பயங்கர வடிவம்


தாமசாதி நட்சத்திர  குணங்கள்:-       

--------------------------------------------------------

                    

அஸ்வினி                 - தாமசம்

பரணி                       - ராஜசம்

கிருத்திகை               - ராஜசம்

ரோஹிணி               - ராஜசம்

மிருகசீரிடம்             - தாமசம்

திருவாதிரை             - தாமசம்

புனர்பூசம்                 - சாத்வீகம்

பூசம்                           - தாமசம்

ஆயில்யம்                 - தாமசம்

மகம்                          - தாமசம்

பூரம்                          - ராஜசம்

உத்திரம்                   - ராஜசம்

ஹஸ்தம்                   - ராஜசம்

சித்திரை                   - தாமசம்

ஸ்வாதி                     - தாமசம்

விசாகம்                    - சாத்வீகம்

அனுசம்                     - தாமசம்

கேட்டை                   - சாத்வீகம்

மூலம்                        - தாமசம்

பூராடம்                     - ராஜசம்

உத்திராடம்              - ராஜசம்

திருவோணம்            - ராஜசம்

அவிட்டம்                 - தாமசம்

சதயம்                        - தாமசம்

பூரட்டாதி                  - சாத்வீகம்

உத்திரட்டாதி          - தாமசம்

ரேவதி                       - சாத்வீகம்


சாத்வீகம்-நுட்பமான புத்தி, ஞானம், தெய்வபக்தி, குருபக்தி, தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்


ராஜசம்- உயிர்கள் மீது இரக்கம், நல்லறிவு, இனிமையான பேச்சு,

கல்வியில்  தேர்ச்சி, இன்பசுகம், பரோபகாரம், யாருக்கும் தீங்கு நினையாமை, தான தர்மம் செய்வதில் விருப்பம், நடுநிலையோடு செயல்படுதல்


தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல்,  நிதானமின்மை, சோம்பேறித்தனம், பாவசிந்தை, முன்யோசனை இல்லாமை


நட்சத்திர  யோனி:-

--------------------------------

                           

அஸ்வினி                 - ஆண் குதிரை

பரணி                       - பெண் யானை

கிருத்திகை               - பெண் ஆடு

ரோஹிணி               - ஆண்  நாகம்

மிருகசீரிடம்             - பெண் சாரை

திருவாதிரை             - ஆண் நாய்

புனர்பூசம்                 - பெண் பூனை

பூசம்                           - ஆண் ஆடு

ஆயில்யம்                 - ஆண் பூனை

மகம்                          - ஆண் எலி

பூரம்                          - பெண் எலி

உத்திரம்                   - ஆண் எருது

ஹஸ்தம்                   - பெண் எருமை

சித்திரை                   - ஆண் புலி

ஸ்வாதி                     - ஆண் எருமை

விசாகம்                    - பெண் புலி

அனுசம்                     - பெண் மான்

கேட்டை                   - ஆண் மான்

மூலம்                        - பெண் நாய்

பூராடம்                     - ஆண் குரங்கு

உத்திராடம்              - பெண் கீரி

திருவோணம்            - பெண் குரங்கு

அவிட்டம்                 - பெண் சிங்கம்

சதயம்                        - பெண் குதிரை

பூரட்டாதி                  - ஆண் சிங்கம்

உத்திரட்டாதி          - பெண் பசு

ரேவதி                       - பெண் யானை


நட்சத்திர  கோத்திரங்கள்(வேறு):-

----------------------------------------------------------

                           

அஸ்வினி                 - மரீசா

பரணி                       - மரீசா

கிருத்திகை               - மரீசா

ரோஹிணி               - மரீசா

மிருகசீரிடம்             - அத்ரி

திருவாதிரை             - அத்ரி

புனர்பூசம்                 - அத்ரி

பூசம்                           - அத்ரி

ஆயில்யம்                 - வஷிஷ்டா

மகம்                          - வஷிஷ்டா

பூரம்                          - வஷிஷ்டா

உத்திரம்                   - வஷிஷ்டா

ஹஸ்தம்                   - ஆங்கீரஸா

சித்திரை                   - ஆங்கீரஸா

ஸ்வாதி                     - ஆங்கீரஸா

விசாகம்                    - ஆங்கீரஸா

அனுசம்                     - புலஸ்தியா

கேட்டை                   - புலஸ்தியா

மூலம்                        - புலஸ்தியா

பூராடம்                     - புலஸ்தியா

உத்திராடம்              - புலஹா

திருவோணம்            - புலஹா

அவிட்டம்                 - புலஹா

சதயம்                        - க்ரது

பூரட்டாதி                  - க்ரது

உத்திரட்டாதி            - க்ரது

ரேவதி                       - க்ரது


நட்சத்திர  திசைகள்:-

------------------------------------

                           

அஸ்வினி                 - கிழக்கு

பரணி                       - கிழக்கு

கிருத்திகை               - கிழக்கு

ரோஹிணி               - கிழக்கு

மிருகசீரிடம்             - கிழக்கு

திருவாதிரை             - தென்கிழக்கு

புனர்பூசம்                 - தென்கிழக்கு

பூசம்                           - தென்கிழக்கு

ஆயில்யம்                 - தெற்கு

மகம்                          - தெற்கு

பூரம்                          - தெற்கு

உத்திரம்                   - தெற்கு

ஹஸ்தம்                   - தென்மேற்கு

சித்திரை                   - தென்மேற்கு

ஸ்வாதி                     - மேற்கு

விசாகம்                    - மேற்கு

அனுசம்                     - மேற்கு

கேட்டை                   - மேற்கு

மூலம்                        - வடமேற்கு

பூராடம்                     - வடமேற்கு

உத்திராடம்              - வடக்கு

திருவோணம்            - வடக்கு

அவிட்டம்                 - வடக்கு

சதயம்                        - வடக்கு

பூரட்டாதி                  - வடக்கு

உத்திரட்டாதி          - வடக்கு

ரேவதி                       - வடக்கு


நட்சத்திர  திசைகள்(வேறு):-

-------------------------------------------------

                           

அஸ்வினி                 - கிழக்கு

பரணி                       - தென்கிழக்கு

கிருத்திகை               - தெற்கு

ரோஹிணி               - தென்மேற்கு

மிருகசீரிடம்             - மேற்கு

திருவாதிரை             - வடமேற்கு

புனர்பூசம்                 - வடக்கு

பூசம்                           - வடகிழக்கு

ஆயில்யம்                 - கிழக்கு

மகம்                          - தென்கிழக்கு

பூரம்                          - தெற்கு

உத்திரம்                   - தென்மேற்கு

ஹஸ்தம்                   - மேற்கு

சித்திரை                   - வடமேற்கு

ஸ்வாதி                     - வடக்கு

விசாகம்                    - வடகிழக்கு

அனுசம்                     - கிழக்கு

கேட்டை                   - தென்கிழக்கு

மூலம்                        - தெற்கு

பூராடம்                     - தென்மேற்கு

உத்திராடம்              - மேற்கு

திருவோணம்            - வடமேற்கு

அவிட்டம்                 - வடக்கு

சதயம்                        - வடகிழக்கு

பூரட்டாதி                  - கிழக்கு

உத்திரட்டாதி          - தென்கிழக்கு

ரேவதி                       - தெற்கு


வணங்க வேண்டிய தேவதைகள்:-

-----------------------------------------------------------

                           

அஸ்வினி                 - அஸ்வினி தேவதைகள்

பரணி                       - சிவன்

கிருத்திகை               - சுப்பிரமணியன்

ரோஹிணி               - ஸ்ரீக்ருஷ்ணன்

மிருகசீரிடம்             - நாக தேவதைகள்

திருவாதிரை             - சிவன்

புனர்பூசம்                 - ஸ்ரீராமன்

பூசம்                           - சுப்பிரமணியன்

ஆயில்யம்                 - நாக தேவதைகள்

மகம்                          - சூரியன்,நரசிம்மன்

பூரம்                          - சூரியன்

உத்திரம்                   - சாஸ்தா,தன்வந்த்ரி

ஹஸ்தம்                   - மஹாவிஷ்ணு,          

                                      ராஜராஜேஷ்வரி

சித்திரை                   - மஹாலக்ஷ்மி

ஸ்வாதி                     - மஹாலக்ஷ்மி,ஹனுமன்

விசாகம்                    - சுப்பிரமணியன்

அனுசம்                     - சிவன்

கேட்டை                   - ஹனுமன்

மூலம்                        - கணபதி

பூராடம்                     - ராஜராஜேஷ்வரி

உத்திராடம்              - ஆதித்தியன்

திருவோணம்            - மஹாவிஷ்ணு

அவிட்டம்                 - கணபதி

சதயம்                        - நாக தேவதைகள்

பூரட்டாதி                  - வராஹ மூர்த்தி

உத்திரட்டாதி            - சிவன்

ரேவதி                       - மஹாவிஷ்ணு


நட்சத்திர  அதிதேவதைகள்:-

-------------------------------------------------

                           

அஸ்வினி                 - கணபதி,சரஸ்வதி

பரணி                       - துர்கை

கிருத்திகை               - அக்னி தேவன்

ரோஹிணி               - பிரம்மா

மிருகசீரிடம்             - சந்திரன்

திருவாதிரை             - சிவன்

புனர்பூசம்                 - தேவதைகள்

பூசம்                           - குரு

ஆயில்யம்                 - ஆதிசேஷன்

மகம்                          - சுக்கிரன்

பூரம்                          - பார்வதி

உத்திரம்                   - சூரியன்

ஹஸ்தம்                   - சாஸ்தா

சித்திரை                   - விஸ்வகர்மா

ஸ்வாதி                     - வாயு

விசாகம்                    - சுப்பிரமணியன்

அனுசம்                     - லக்ஷ்மி

கேட்டை                   - தேவேந்திரன்

மூலம்                        - அசுர தேவதைகள்

பூராடம்                     - வருணன்

உத்திராடம்              - ஈஸ்வரன்,கணபதி

திருவோணம்            - விஷ்ணு

அவிட்டம்                 - வசுக்கள்,இந்திராணி

சதயம்                        - யமன்

பூரட்டாதி                  - குபேரன்

உத்திரட்டாதி          - காமதேனு

ரேவதி                       - சனீஸ்வரன்


நட்சத்திர  ஆதியந்த பரம நாழிகை:-

-------------------------------------------------------------

                           

அஸ்வினி                 - 65

பரணி                       - 56

கிருத்திகை               - 56

ரோஹிணி               - 56

மிருகசீரிடம்             - 56

திருவாதிரை             - 56

புனர்பூசம்                 - 62

பூசம்                          - 52

ஆயில்யம்                 - 56

மகம்                          - 54

பூரம்                          - 53

உத்திரம்                   - 56

ஹஸ்தம்                   - 57

சித்திரை                   - 60

ஸ்வாதி                     - 65

விசாகம்                    - 61

அனுசம்                     - 60

கேட்டை                   - 62

மூலம்                        - 63 ½

பூராடம்                     - 62

உத்திராடம்              - 55

திருவோணம்            - 65 ½

அவிட்டம்                 - 66 ½

சதயம்                        - 53 ½

பூரட்டாதி                  - 66 ½

உத்திரட்டாதி            - 63 ½

ரேவதி                       - 64


நட்சத்திர  நாடி:-

--------------------------

                           

அஸ்வினி                 - ஆதி

பரணி                       - மத்யா

கிருத்திகை               - அந்த்யா

ரோஹிணி               - அந்த்யா

மிருகசீரிடம்             - மத்யா

திருவாதிரை             - ஆதி

புனர்பூசம்                 - ஆதி

பூசம்                         - மத்யா

ஆயில்யம்                 - அந்த்யா

மகம்                          - அந்த்யா

பூரம்                          - மத்யா

உத்திரம்                   - ஆதி

ஹஸ்தம்                   - ஆதி

சித்திரை                   - மத்யா

ஸ்வாதி                     - அந்த்யா

விசாகம்                    - அந்த்யா

அனுசம்                     - மத்யா

கேட்டை                   - ஆதி

மூலம்                        - ஆதி

பூராடம்                     - மத்யா

உத்திராடம்              - அந்த்யா

திருவோணம்            - அந்த்யா

அவிட்டம்                 - மத்யா

சதயம்                        - ஆதி

பூரட்டாதி                  - ஆதி

உத்திரட்டாதி            - மத்யா

ரேவதி                       - அந்த்யா


நட்சத்திர  பஞ்சபக்ஷிகள்:-

---------------------------------------------

                           

அஸ்வினி                 - வல்லூறு

பரணி                       - வல்லூறு

கிருத்திகை               - வல்லூறு

ரோஹிணி               - வல்லூறு

மிருகசீரிடம்             - வல்லூறு

திருவாதிரை             - ஆந்தை

புனர்பூசம்                 - ஆந்தை

பூசம்                           - ஆந்தை

ஆயில்யம்                 - ஆந்தை

மகம்                          - ஆந்தை

பூரம்                          - ஆந்தை

உத்திரம்                   - காகம்

ஹஸ்தம்                   - காகம்

சித்திரை                   - காகம்

ஸ்வாதி                     - காகம்

விசாகம்                    - காகம்

அனுசம்                     - கோழி

கேட்டை                   - கோழி

மூலம்                        - கோழி

பூராடம்                     - கோழி

உத்திராடம்              - கோழி

திருவோணம்            - மயில்

அவிட்டம்                 - மயில்

சதயம்                        - மயில்

பூரட்டாதி                  - மயில்

உத்திரட்டாதி          - மயில்

ரேவதி                       - மயில்


நட்சத்திர  பஞ்சபூதங்கள்:-

---------------------------------------------

                           

அஸ்வினி                 - நிலம்

பரணி                       - நிலம்

கிருத்திகை               - நிலம்

ரோஹிணி               - நிலம்

மிருகசீரிடம்             - நிலம்

திருவாதிரை             - நீர்

புனர்பூசம்                 - நீர்

பூசம்                           - நீர்

ஆயில்யம்                 - நீர்

மகம்                          - நீர்

பூரம்                          - நீர்

உத்திரம்                   - நெருப்பு

ஹஸ்தம்                   - நெருப்பு

சித்திரை                   - நெருப்பு

ஸ்வாதி                     - நெருப்பு

விசாகம்                    - நெருப்பு

அனுசம்                     - நெருப்பு

கேட்டை                   - காற்று

மூலம்                        - காற்று

பூராடம்                     - காற்று

உத்திராடம்              - காற்று

திருவோணம்            - காற்று

அவிட்டம்                 - ஆகாயம்

சதயம்                        - ஆகாயம்

பூரட்டாதி                  - ஆகாயம்

உத்திரட்டாதி            - ஆகாயம்

ரேவதி                       - ஆகாயம்


நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்:-

---------------------------------------------------------------

                           

அஸ்வினி                 - அஸ்வத்தாமன்

பரணி                       - துரியோதனன்

கிருத்திகை               - கார்த்திகேயன்

ரோஹிணி               - கிருஷ்ணன்,பீமசேனன்

மிருகசீரிடம்             - புருஷமிருகம்

திருவாதிரை             - ருத்ரன், கருடன்,   

                                    ஆதிசங்கரர், ராமானுஜர்

புனர்பூசம்                 - ராமன்

பூசம்                           - பரதன்,தாமரை மலர்,   

                                       கிளி

ஆயில்யம்                 - தர்மராஜா,                 

                                லக்ஷ்மணன், சத்ருகணன்,   

                               பலராமன்

மகம்                          - யமன்,சீதை,அர்ச்சுணன்

பூரம்                          - பார்வதி, மீனாட்சி,         

                                     ஆண்டாள்

உத்திரம்                   - மஹாலக்ஷ்மி, குரு. 

ஹஸ்தம்                   - நகுலன்-சகாதேவன்,        

                                      லவ-குசன்

சித்திரை                   - வில்வ மரம்

ஸ்வாதி                     - நரசிம்மர்

விசாகம்                    - கணேசர்,முருகர்,

அனுசம்                     - நந்தனம்

கேட்டை                   - யுதிஸ்திரர்

மூலம்                        - அனுமன்,ராவணன்

பூராடம்                     - ப்ருஹஸ்பதி

உத்திராடம்              - சல்யன்

திருவோணம்            - வாமனன், விபீசனன்,

                                       அங்காரகன்

அவிட்டம்                 - துந்துபி வாத்தியம்

சதயம்                        - வருணன்

பூரட்டாதி                  - கர்ணன், கின்னரன்,     

                                     குபேரன்

உத்திரட்டாதி          - ஜடாயு,காமதேனு

ரேவதி                       - அபிமன்யு,சனிபகவான்


நட்சத்திரத்தொகை:-

----------------------------------

                           

அஸ்வினி                 - 3

பரணி                       - 3

கிருத்திகை               - 6

ரோஹிணி               - 5

மிருகசீரிடம்             - 3

திருவாதிரை             - 1

புனர்பூசம்                 - 2

பூசம்                          - 3

ஆயில்யம்                 - 6

மகம்                          - 5

பூரம்                          - 2

உத்திரம்                   - 2

ஹஸ்தம்                   - 5

சித்திரை                   - 1

ஸ்வாதி                     - 1

விசாகம்                    - 2

அனுசம்                     - 3

கேட்டை                   - 3

மூலம்                        - 9

பூராடம்                     - 4

உத்திராடம்              - 4

திருவோணம்            - 3

அவிட்டம்                 - 4

சதயம்                        - 6

பூரட்டாதி                  - 2

உத்திரட்டாதி            - 2

ரேவதி                       - 3


நட்சத்திர இருப்பிடம்:-

--------------------------------------

                           

அஸ்வினி                 - ஊர்

பரணி                       - மரம்

கிருத்திகை               - காடு

ரோஹிணி               - காடிச்சால்

மிருகசீரிடம்             - கட்டிலின் கீழ்

திருவாதிரை             - நிற்கும் தேரின் கீழ்

புனர்பூசம்                 - நெற்குதிர்

பூசம்                           - மனை

ஆயில்யம்                 - குப்பை

மகம்                          - நெற்கதிர்

பூரம்                          - வீடு

உத்திரம்                   - ஜலம்

ஹஸ்தம்                   - ஜலக்கரை

சித்திரை                   - வயல்

ஸ்வாதி                     - பருத்தி

விசாகம்                    - முற்றம்

அனுசம்                     - பாழடைந்த காடு

கேட்டை                   - கடை

மூலம்                        - குதிரைலாயம்

பூராடம்                     - கூரை

உத்திராடம்              - வண்ணான்  துறை

திருவோணம்            - கோயில்

அவிட்டம்                 - ஆலை

சதயம்                        - செக்கு

பூரட்டாதி                  - தெரு

உத்திரட்டாதி          - அக்னி மூலை வீடு

ரேவதி                       - பூஞ்சோலை


நட்சத்திர  குலம்:-

-------------------------------

                            

அஸ்வினி                 - வைசியகுலம்

பரணி                       - நீச்ச குலம்

கிருத்திகை               - பிரம்ம குலம்

ரோஹிணி               - க்ஷத்திரிய குலம்

மிருகசீரிடம்             - வேடர் குலம்

திருவாதிரை             - இராட்சச குலம்

புனர்பூசம்                 - வைசியகுலம்

பூசம்                           - சூத்திர குலம்

ஆயில்யம்                 - நீச்ச குலம்

மகம்                          - க்ஷத்திரிய குலம்

பூரம்                          - பிரம்ம குலம்

உத்திரம்                   - சூத்திர குலம்

ஹஸ்தம்                   - வைசியகுலம்

சித்திரை                   - வேடர் குலம்

ஸ்வாதி                     - இராட்சச குலம்

விசாகம்                    - நீச்ச குலம்

அனுசம்                     - க்ஷத்திரிய குலம்

கேட்டை                   - வேடர் குலம்

மூலம்                        - இராட்சச குலம்

பூராடம்                     - பிரம்ம குலம்

உத்திராடம்              - சூத்திர குலம்

அபிஜித்                     - வைசியகுலம்

திருவோணம்            - நீச்ச குலம்

அவிட்டம்                 - வேடர் குலம்

சதயம்                        - இராட்சச குலம்

பூரட்டாதி                  - பிரம்ம குலம்

உத்திரட்டாதி          - சூத்திர குலம்

ரேவதி                       - க்ஷத்திரிய குல


நட்சத்திர  யோனி திரை

சுயாதிகாரம், நற்குணம், தைரியம், அழகு, ஊராதிக்கம், யஜமான் விருப்பம் போல் நடத்தல்


யானை

ராஜ மரியாதை, உடல் வலிமை, போகம், உற்சாகம்


பசு

பெண் மோகம்


ஆடு

விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்


சர்ப்பம்(பாம்பு)

கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி


சுவானம்(நாய்)

முயற்சி,உற்சாகம்,வீரம்,உறவினருடன் பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு


மார்ச்சாரம்(பூனை)

சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்


மூக்ஷிகம்(எலி)

அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,


சிங்கம்

நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்


மஹிசம்(எருமை)

மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை


வியாக்ரம்(புலி)

முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை,


மான்

சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள் செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீது பாசம்


வானரம்(குரங்கு)

போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர் தொடர்பு


கீரி பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தில் அன்பு,நல்வழியில் செல்தல்,நன்றி விசுவாசம் இல்லாமை 


ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சிவ ஓம்


  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து

    சித்தர்களின் குரல் shiva shangarஅபூர்வ ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட உலகமே தேடி கொண்டிருக்கும்  அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


            ஒரு மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய நீண்ட நாட்களாக தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன். நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.


            ஒரு குறிப்பிட்ட   நேரத்தில்  ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.

            நட்சத்திர  மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27  நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.


நட்சத்திர  பெயர்கள்:-

-------------------------------------


1.அஸ்வினி     2. பரணி      3.கிருத்திகை    4.ரோஹிணி       5.மிருகசீரிடம்    6.திருவாதிரை    7.புனர்பூசம்        8.பூசம்         9.ஆயில்யம்     

          

10.மகம்               11.பூரம்              12.உத்திரம்        13.ஹஸ்தம்       14.சித்திரை       15.ஸ்வாதி           16.விசாகம்        17.அனுசம்         18. கேட்டை

                 

19.மூலம்        20.பூராடம்       21.உத்திராடம்      22.திருவோணம்    23.அவிட்டம்    24.சதயம்       25.பூரட்டாதி     26.உத்திரட்டாதி     27. ரேவதி


நட்சத்திர  வடிவம்:-

--------------------------------

                           

அஸ்வினி                 - குதிரைத்தலை

பரணி                       - யோனி, அடுப்பு,                              

                                     முக்கோணம்

கிருத்திகை               - கத்தி, கற்றை, வாள்,                

                                        தீஜ்வாலை

ரோஹிணி               - தேர், வண்டி, கோயில்,       

                                ஆலமரம், ஊற்றால், சகடம்

மிருகசீரிடம்             - மான் தலை,                          

                                      தேங்கைக்கண்

திருவாதிரை             - மனித தலை, வைரம்,      

                                       கண்ணீர்துளி

புனர்பூசம்                 - வில்

பூசம்                           - புடலம்பூ, அம்புக்கூடு,       

                                       பசுவின்மடி

ஆயில்யம்                 - சர்ப்பம்,அம்மி

மகம்                          - வீடு,பல்லக்கு,நுகம்

பூரம்                          - கட்டில்கால், கண்கள்,        

                              அத்திமரம், சதுரம், மெத்தை

உத்திரம்                   - கட்டில்கால், கம்பு, குச்சி,    

                                     மெத்தை

ஹஸ்தம்                   - கை

சித்திரை                   - முத்து,புலிக்கண்

ஸ்வாதி                     - பவளம்,தீபம்

விசாகம்                    - முறம், தோரணம், குயவன் சக்கரம்

அனுசம்                     - குடை, முடப்பனை,            

                                       தாமரை, வில்வளசல்

கேட்டை                   - குடை,குண்டலம்,ஈட்டி

மூலம்                        - அங்குசம்,சிங்கத்தின்         

                                    வால், பொற்காளம்,

                                    யானையின் துதிக்கை

பூராடம்                     - கட்டில்கால்

உத்திராடம்              - கட்டில்கால்

திருவோணம்            - முழக்கோல், மூன்று.     

                                        பாதச்சுவடு,அம்பு

அவிட்டம்                 - மிருதங்கம், உடுக்கை

சதயம்                        - பூங்கொத்து,                    

                                      மூலிகை கொத்து

பூரட்டாதி                  - கட்டில்கால்

உத்திரட்டாதி          - கட்டில்கால்

ரேவதி                       - மீன் படகு


நட்சத்திர பெயர்களின் தமிழ் அர்த்தம்:-

-------------------------------------------------------------------

                           

அஸ்வினி                 - குதிரைத்தலை

பரணி                       - தாங்கிப்பிடிப்பது

கிருத்திகை               - வெட்டுவது

ரோஹிணி               - சிவப்பானது

மிருகசீரிடம்             - மான் தலை

திருவாதிரை             - ஈரமானது

புனர்பூசம்                 - திரும்ப கிடைத்த ஒளி

பூசம்                           - வளம் பெருக்குவது

ஆயில்யம்                 - தழுவிக்கொள்வது

மகம்                          - மகத்தானது

பூரம்                          - பாராட்ட த்தகுந்தது

உத்திரம்                   - சிறப்பானது

ஹஸ்தம்                   - கை

சித்திரை                   - ஒளி வீசுவது

ஸ்வாதி                     - சுதந்தரமானது

விசாகம்                    - பிளவுபட்டது

அனுசம்                     - வெற்றி

கேட்டை                   - மூத்தது

மூலம்                        - வேர்

பூராடம்                     - முந்தைய வெற்றி

உத்திராடம்              - பிந்தைய வெற்றி

திருவோணம்            - படிப்பறிவு உடையது,      

                                         காது

அவிட்டம்                 - பணக்காரன்

சதயம்                        - நூறு மருத்துவர்கள்

பூரட்டாதி                  - முன் மங்கள பாதம்

உத்திரட்டாதி           - பின் மங்கள பாதம்

ரேவதி                       - செல்வம் மிகுந்தது


நட்சத்திர  அதிபதிகள்:-

----------------------------------------

                           

அஸ்வினி                 - கேது

பரணி                       - சுக்கிரன்

கிருத்திகை               - சூரியன்

ரோஹிணி               - சந்திரன்

மிருகசீரிடம்             - செவ்வாய்

திருவாதிரை             - ராஹு

புனர்பூசம்                 - குரு

பூசம்                           - சனி

ஆயில்யம்                 - புதன்

மகம்                          - கேது

பூரம்                          - சுக்கிரன்

உத்திரம்                   - சூரியன்

ஹஸ்தம்                   - சந்திரன்

சித்திரை                   - செவ்வாய்

ஸ்வாதி                     - ராஹு

விசாகம்                    - குரு

அனுசம்                     - சனி

கேட்டை                   - புதன்

மூலம்                        - கேது

பூராடம்                     - சுக்கிரன்

உத்திராடம்              - சூரியன்

திருவோணம்            - சந்திரன்

அவிட்டம்                 - செவ்வாய்

சதயம்                        - ராஹு

பூரட்டாதி                  - குரு

உத்திரட்டாதி           - சனி

ரேவதி                       - புதன்


சராதி நட்சத்திரப்பிரிவுகள்:-         

-------------------------------------------------

                 

அஸ்வினி                 - சரம்

பரணி                       - ஸ்திரம்

கிருத்திகை               - உபயம்

ரோஹிணி               - சரம்

மிருகசீரிடம்             - ஸ்திரம்

திருவாதிரை             - உபயம்

புனர்பூசம்                  - சரம்

பூசம்                           - ஸ்திரம்

ஆயில்யம்                 - உபயம்

மகம்                          - சரம்

பூரம்                          - ஸ்திரம்

உத்திரம்                   - உபயம்

ஹஸ்தம்                   - சரம்

சித்திரை                   - ஸ்திரம்

ஸ்வாதி                     - உபயம்

விசாகம்                    - சரம்

அனுசம்                     - ஸ்திரம்

கேட்டை                   - உபயம்

மூலம்                        - சரம்

பூராடம்                     - ஸ்திரம்

உத்திராடம்              - உபயம்

திருவோணம்            - சரம்

அவிட்டம்                 - ஸ்திரம்

சதயம்                        - உபயம்

பூரட்டாதி                  - சரம்

உத்திரட்டாதி          - ஸ்திரம்

ரேவதி                       - உபயம்


மூலாதி நட்சத்திரப் பிரிவுகள்:-

-----------------------------------------------------

                           

அஸ்வினி                 - தாது

பரணி                       - மூலம்

கிருத்திகை               - ஜீவன்

ரோஹிணி               - தாது

மிருகசீரிடம்             - மூலம்

திருவாதிரை             - ஜீவன்

புனர்பூசம்                 - தாது

பூசம்                          - மூலம்

ஆயில்யம்                 - ஜீவன்

மகம்                          - தாது

பூரம்                          - மூலம்

உத்திரம்                    - ஜீவன்

ஹஸ்தம்                    - தாது

சித்திரை                    - மூலம்

ஸ்வாதி                      - ஜீவன்

விசாகம்                     - தாது

அனுசம்                      - மூலம்

கேட்டை                    - ஜீவன்

மூலம்                         - தாது

பூராடம்                      - மூலம்

உத்திராடம்               - ஜீவன்

திருவோணம்             - தாது

அவிட்டம்                  - மூலம்

சதயம்                        - ஜீவன்

பூரட்டாதி                  - தாது

உத்திரட்டாதி            - மூலம்

ரேவதி                       - ஜீவன்


பிரம்மாதி நட்சத்திரப் பிரிவுகள்:-

--------------------------------------------------------

                           

அஸ்வினி                 - பிரம்மா

பரணி                       - சிவன்

கிருத்திகை               - விஷ்ணு

ரோஹிணி               - பிரம்மா

மிருகசீரிடம்             - சிவன்

திருவாதிரை             - விஷ்ணு

புனர்பூசம்                 - பிரம்மா

பூசம்                           - சிவன்

ஆயில்யம்                 - விஷ்ணு

மகம்                          - பிரம்மா

பூரம்                          - சிவன்

உத்திரம்                   - விஷ்ணு

ஹஸ்தம்