Sunday, July 30, 2023

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி??

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி??

Thank fb
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

1. ஜலவாசம் :

புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறை பட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

2. தான்யவாசம் :

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய 

48 நாட்கள் வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவதானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்யவாசம். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசத்தையும் தாண்டி ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். 

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.

3. ரத்னவாசம்

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்னவாசம்.

4. தனவாசம்

பின்னர் சிலைகளை பொற்காசுகளில் மூழ்கவைப்பர்கள் இது தனவாசம்.

5. வஸ்திர வாசம்

பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலைவாசம் செய்யும்

6. சயன வாசம்

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகாமஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான்தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலைவைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்

கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

7. ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். ரத்தினவாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான 

நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

8. ஆறு மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வசிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான்  திறக்கப்படும்.

கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வசிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன் பிறகே அந்த தெய்வ சிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற

பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை அதிர்வுகள் ஊட்டப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. 

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது, கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

Friday, July 7, 2023

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம்.


உங்கள் கையெழுத்து சொல்லும் ரகசியம் ..
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

நம் எதிர்காலத்தினை ஜோதிடம், கைரேகை பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அவரவரின் கையெழுத்தினை பார்த்து கூட தலை எழுத்தினை தீர்மானித்து விடலாம்.

ஒருவர் செல்வந்தர் ஆவதும் செல்வாக்கான வாழ்க்கையினை இழப்பதும் அவரவரின் கையெழுத்தினை பொருத்து கூட அமையும். கையெழுத்தினை வைத்து அவரின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் கலைக்கு பெயர் கிராபாலஜி.

கி.பி.1782-க் ஆண்டு இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தஅன்னா கோரன் என்னும் பெண்மணி கையெழுத்து ஆராய்ச்சி கலை பற்றி இவர் நிறுவிய நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது.

ஒவ்வொருவரின் மூளையிடும் கட்டளையின்படி தான் அவரவரின் கையெழுத்து அமைகிறது. இதன்மூலம் அனைவரின் குணசதியத்தினை அறிய இயலும் என்கிறது விஞ்ஞானம்.

ஒருவர் எந்த மொழியில் எழுதினாலும் அதன் வடிவத்தினை வைத்து அவர்களின் எதிர்காலத்தினை அறிய இயலும்.

கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு ‘கிராபாலஜி’ என்பது பெயராகும். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளமுடியும் என்று கருதப்படுகிறது.

மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் ஆராய்ந்து அந்த எழுத்துக்குச்சொந்தக்காரரின் குணநலன்களை அறிந்து கொள்வது தான் ‘கிராபாலஜி’ எனப்படும் கையெழுத்துக்கலையாகும்.

ஒருவரின் கையெழுத்தின் மூலம் அவரது குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. அழுத்தம்: எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம். காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்பிறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதேநேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.

உங்களது கையெழுத்து காகிதத்தின் பின்பிறம் தெரியவில்லை என்றால் நீங்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக்கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் விருப்பத்தின்படி நடப்பதை விரும்பமாட்டீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே எதையும் செய்வீர்கள். மேலும் நீங்கள் பிறரின் கருத்துக்கும், விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்து, பிறர் சொல்வதை பொறுமையுடன் கேட்டால் நீங்கள் வெற்றியாளர்களாக மாறலாம்.

2. எழுத்தின் கோணம்: சிலர் எழுதும் போது இடது அல்லது வலது புறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை சரித்தும், கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு. வலது அல்லது இடது புறம் சரித்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும். ஒருவரது எழுத்து வலது புறம் சரிவாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர். இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.

3. 'ஐ’ (மி) என்று உச்சரிக்கப்படும் ஆங்கில எழுத்தை சிலர் பெரியதாகவும், அழுத்தமாக எழுதுவதுண்டு. அப்படி எழுதுபவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்திறன் மிக்கவர்களாவும் இருப்பார்கள்.

பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள் சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல்லிலும், செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும்.

4. எழுத்தின் இடைவெளி: எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்களும் நெருக்கமாக இருப்பது அல்லது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பது உண்டு. இதில் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். அந்த நண்பர்களிடம் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவர்களிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் நல்ல நண்பர்கள், தீய நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் நெருக்கம் காட்டுவார்கள். மேலும் இத்தகைய எழுத்துக்களை எழுதுபவர்கள் எதிலும் ஒழுங்கான தன்மையை கையாள மாட்டார்கள். இவர்களிடம் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் இருக்காது.

வார்த்தைகளுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால் அவர் அதிக செலவாளியாக இருப்பார்கள். அதேநேரத்தில் இவர்கள் தெளிவாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி சீராக இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாக, நட்பு பாராட்டுபவர்களாக இருப்பார்கள்.

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். எனவே அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

ஒருவர் தன் கையெழுத்தினை அரிசாண்டில்(Horizantal) நிலையில் தெளிவற்றதாக எழுதினாலோ அல்லது 15டிகிரி என்ற நிலையில் எழுதினாலோ அவரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இது ஆண், பெண் இருபாலர்க்கும் பொருந்தும்.

30 டிகிரி கோணத்தில் ஒரு பெண் தன் கையெழுத்தினை எழுதினால், அவர் புகழ் பெற்ற வாழ்க்கையினை அடைவர். ஆனால், ஆண்களின் கையெழுத்து இருந்தால் துன்பத்தினை அடைவர்.

45 டிகிரி கோணத்தில் தங்களின் பெயர் தெரியும்படி கையெழுத்து இடுபவர்களுக்கு வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் போது 1 செ.மீ. க்கு அதிகமாக கையெழுத்திற்கு அடியில் நீளமான கோடு வரைவது அவ்வளவு நல்லது.

கையெழுத்திற்கு நம் தலையெழுத்தினை மாற்றும் சக்தியுண்டு அதற்கேற்ப நம் கையெழுத்தினை மாற்றி கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நன்றி ; கண்ணன்