Monday, September 28, 2020

தலைப்பு: 4 – “வாழ்வியல் ஜோதிடம்” திரு. சண்முகப்பிரியன்

4 – “வாழ்வியல் ஜோதிடம்” திரு. சண்முகப்பிரியன் , Singapore

https://youtu.be/h77nVhB7j3o








,
https://youtu.be/h77nVhB7j3o


இந்த வார தலைப்பு: 4 – “வாழ்வியல் ஜோதிடம்”

வழங்குபவர்: திரு. சண்முகப்பிரியன், Dell, Singapore
8 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் உலக வாழ்வியல் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு ஆன்மீக மற்றும் சமுதாய தொண்டாற்றி வருகிறார்

தேதி: 27th September 2020
நேரம்: 11.30 AM IST
கட்டணம்: இறை பக்தி

Google Meet Code: bwb-ohje-fzd
Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd
Open to All

சத்சங்கம் பற்றி உடனுக்குடன் தகவல் பெற இணையுங்கள் Telegram Group: https://t.ly/rRfa
நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf
Google Meet இணைவதற்கான வழிமுறை (Tutorial Link): https://t.ly/pzRO (YouTube)

--
அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள்,
ஹரி மணிகண்டன் வி | +91 – 9841267823
வீரா கி | +91 – 9840646368
பூர்ணிமா சுகுமார், சிங்கப்பூர்
ஆத்ம கமலம் குழு

Greetings!
Aathma Kamalam – Ahara Oli !! Jointly organize
“Online Sathsangam”
(Every Sunday 11.30 am Series)

Topic: “வாழ்வியல் ஜோதிடம்”
Presenting by: Mr Shanmugapriyan, Dell, Singapore
8+ years doing research and development in Spiritual, Astrology, Life-Skill and many more, which he utilizing into his Spiritual & Social Services in many ways

Date: 27th September 2020
Time: 11.30 AM IST
Fee: Love on God

Google Meet Code: bwb-ohje-fzd
Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd
Open to All

To get update about the webinar, Please join the Telegram Group: https://t.ly/rRfa
To Register as Speaker: https://t.ly/bkvf
Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO
--
Thanks and Regards,
Coordinators:
Hari V
Veera K | +91 – 9840646368
Poornima Sukumar, Singapore
Team - Aathma Kamalam



Saturday, September 26, 2020

உயிர் [ உடல் , மனம் , ஆத்மா ] Uyir [ Body , Mind , Atma] TDScd14

TDScd14

உயிர் [ உடல் , மனம் , ஆத்மா ] Uyir [ Body , Mind , Atma]

Dr Dheenadayaalan
https://sadhanandaswamigal.blogspot.com/2011/11/uyir-body-mind-atma.html



https://www.youtube.com/watch?v=XgQ68ChO28Q
Dr Dr Dheenadayaalan [ Uyir ] He is working as doctor in Government Hospital . who explained in simple language the various aspects of Uyir .Man is an amalgam of body, mind and Atma. Without the existence of all three man cannot accomplish anything. Both the body and mind are associated with the Atma, without which neither of them can function.
Vasi
https://www.youtube.com/channel/UCD224xctTfXkn_lzQlWj-aQ/featured
Uyiradimai -Vasi yogam
online class 1 9/8/20 9445133397 https://www.youtube.com/watch?v=OSup8UvX5Nw&t=3526s

online class 2 16.8.20 https://www.youtube.com/watch?v=qhZaw-GS22Q&t=1899s

online class 3 https://www.youtube.com/watch?v=-YOncChryqc&t=2211s

online class 4 https://www.youtube.com/watch?v=wB92RORW9qM&t=4s

online class 5 https://www.youtube.com/watch?v=ZLe41iy9gG0&t=1972s
WHO ARE SIDDHARS ? https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/who-are-siddhars.html
Is there any previous birth? and Next Birth? https://sadhanandaswamigal.blogspot.com/2019/09/is-there-any-previous-birth-and-next.html
ஆனந்தம் -- இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்ன? https://sadhanandaswamigal.blogspot.com/2015/08/blog-post_26.html
DISCUSSION REGARDING MUKTHI AND SIDDHI https://sadhanandaswamigal.blogspot.com/2014/05/discussion-regarding-mukthi-and-siddhi.html
You can also download Tamil devotional speech (45 Hrs - 700mb) https://sadhanandaswamigal.blogspot.com/2011/04/free-tamil-devotional-speech-30-hours.html

Mantra Vidyās in ŚrīVidyā

Mantra Vidyās in ŚrīVidyā
Thanks FB
There are several mantra Vidyās that are practiced as part of ŚrīVidyā worship. Broadly, there are two kinds of mantras – mūla Vidyās (the central or root Vidyās) and anga Vidyās (subsidiary Vidyās).
Mūla Vidyās
There are four main or mūla Vidyās in ŚrīVidyā
(a) Gāyatri: Vedic Gāyatri, the primary Vidyā that one is initiated into, before the ŚrīVidyā mantras like Bāla or Pancadāsi.
(b) Bāla: The three lettered Vidyā. The presiding devata, Bāla Mahā Tripura Sundari, is a child. Bāla is said to be one of the most attractive and wonderful forms of Devi.
Holding book and japa mala and sitting in a white flower, She presides over knowledge and bliss, and grants all the boons that the devotees ask for. It is a general practice to initiate ŚrīVidyā practitioners into Bāla before initiating them into Pancadāsi. However there are several sādakās who are happier practicing Bāla Vidyā alone and have attained salvation. There are multiple Bāla mantras, such as the Māla mantra and Bāla Hridayam.
(c) Pancadāsi: Pancadāsi is the famous fifteen lettered ŚrīVidyā mantra. Dakśiṇamūrti is said to be the seer of Pancadāsi. There are several variations to Pancadāsi. There are twelve major variations, and are called dvādasa Vidyās in Pancadāsi. First two of them are the famous “ka-adi” Vidyā (begininning with ka) and “ha-adi” Vidyā (begininning with ha). The remaining ten are said to be practiced by, and hence named after Manu, Candra, Kubera, Agastya, Nandikesvara, Surya, Indra, Viṣṇu, Śankara and Durvāsa.
The Pancadāsi is set of three putis or groups of bījas. Each puti is said to represent a level of consicousness, a kuta in mantra Śāstra, and a granthi in Kunḍalini yoga and in general a level in sadhana. Each puti ends with Māya or Bhuvanesvari bīja. Symbolically Devi is called Tripura Sundari, since there are three Bhuvanās or Puras She is ruling. Presiding Devatās of mantras with Māyabīja are usually pleasant forms, and Tripura Sundari is one of the most pleasant and beautiful forms.
(d) Śodasi: Śodasi is the sixteen lettered ŚrīVidyā. Pancadāsi with an additional bīja (usually Śrībīja) becomes Śodasi. Tripura Sundari, the presiding Devata is said to be sixteen years old. Practitioners say that there is no form of Devata which is more beautiful and pleasant than Śodasi. The very incarnation of Devi in this form is to restore desire, creation and bliss in the world.
Anga Vidyās
The several subsidiary Vidyās of ŚrīVidyā are arranged into six Amnayās. Amnayā means Veda/Agama, and in Saiva there are five Amnayās. They are represented by the five faces of Śiva facing Purva (eastwards), Dakṣiṇa(southwards), Pascima (westwards), Uttara (northwards) and Urdhva (upwards). In ŚrīVidyā there is a sixth Amnaya called Anuttara. Each Amnaya is associated with a guru mandala and several Vidyās, astra kamya and parā. Besides, all the Vidyās are grouped at different levels. Some of the major Vidyās are listed below.
The Purvamnaya contains Vidyās for
• three gurus sva-guru, parama guru and paramesthi guru four peethas or seats of Devi, called Kāmagiri, Purnagiri, Jalandhara and Odyana Gaṇapati , various forms of Śyāmala, Mrityunjaya, Pratyangira
Dakṣiṇamnaya contains Vidyās for
• eight Bhairavas
• nine Siddhās
• three Vatukās (celibates)
• the two feet of Devi, the prakāśa and vimarśa
• forms of Bagala, Vārāhi, Dakśiṇamūrti and Paśupata
Pascimamnaya
Pascimamnaya contains Vidyās for
• ten Duti Devatās (messenger Devatās)
• three mandalās (the Agni-Surya-Soma mandalās representing three putis of ŚrīVidyā)
• ten vīra Bhairavās or warriors
• sixty four siddhas
• forms and associate Devatās of Viṣṇu
• nine grahās
• Sura mantras or mantras for Devatās like Indra
Uttaramnaya
Uttaramnaya contains Vidyās for
• Mudra Navakam or mantras for nine mudrās
• Viravāli or the five presiding Devatās of the universe (Brahma, Viṣṇu, Rudra, Īśvara and SadaŚiva)
• Forms of Durga, Candi, Kāli etc.
Urdhvamnaya
Urdhvamnaya has Vidyās for
• Mālini or Mātrika varna māla (the alphabet mantras)
• Guru Mandala
• parā Vidyās like parā Sāmbhavi, Paramba, parā Śodasi, Khecari, Ajapa, Tvrakāmba, Niśkala
Anuttaramnaya
Anuttaramnaya has Vidyās for
• Catuśpāt or Gāyatri of four feet
• Śodasi
• Various forms of nyāsa, sankalpa and pāduka Vidyās
Nitya Devatās
There are fifteen Nitya Devatās who preside over each day between a full moon and a new moon day. Each Nitya Devata is worshiped through a Vidyā named after Her. They are
• Kāmeśvari
• Bhāgamālini
• Nityaklinna
• Bherunda
• Vahnivāsini
• Mahāvidyeśvari
• Śivaduti
• Tvarita
• Kula Sundari
• Nitya
• Nīla Pātaka
• Vijaya
• Sarva Mangala
• Jvāla Mālini
• Vicitra


Thanks FB

Solar year of earth orbit wth day & time

Solar year of earth orbit:
1. Old Surya Siddhanta 365.25875 days

2. Modern Surya Siddhanta 365.258756 days

3. Surya Siddhanta of Varahimira 365.25875 days

4. Ardharatrika of Aryabhatta 365.25875 days

5. Aryabhatiya 365.25868 days

6. Brahmagupta 365.2584375 days

7. Ptolemy sideral 365.256813 days

8. Modern Sidereal 365.2563624 days

9. Modern Tropical 365.24219 days

10. Modern anomalistic year 365.25963 days

11. Hipparchus 365.24667 days

        In what basis the decimal differences are fixed..?

Regards,
C.S.Mallish Kumar
Chennai

ஞானப் பறவைகள்


ஞானப் பறவைகள்

மகாபாரதக் கதை முழுவதையும் வியாச பகவானிடம் கேட்டறிந்தார் ஜைமினி முனிவர். 

ஜைமினி முனிவர் வியாசரின் சீடர்.

ஆனாலும் அவருக்குச் சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினார். 

ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு முறை ஜைமினி முனிவர் மார்கண்டேய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று “மகரிஷியே! எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“ஜைமினி! உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நியாயமானவையே!  உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை. நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும்” என்றார்.

வியப்படைந்த ஜைமினி, “முனிவரே! பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களைப் போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா?” என வினவினார்.

“ஜைமினீ ! ஒரு முறை தேவேந்திரன் அப்சர ஸ்தீரிகளுடன் நந்த வனத்தில் உலாவி மகிழ்ந்திருக்கையில் அங்கு நாரத மகரிஷி வந்தார். 

அவரை வரவேற்ற தேவேந்திரன் அவரிடம், ” முனிவரே! இந்த அப்சர பெண்களில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தேடுத்து அவளை நாட்டியம் ஆடும்படி ஆணையிடுங்கள்” என்றான்.

நாரதர், “அப்சரப் பெண்களே! உங்களில் யார் ரூப லாவண்யங்களில் உயர்ந்தவர் என்று 

எண்ணுகிறீரோ அவர் ஆடலாம் என்றார்.

அவர்களில் ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று வாதிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். 

தேவேந்திரன் அவர்களுள் சிறந்தவளை நாரதரே தீர்மானிக்க வேண்டும் என்றான். நாரதர் அதற்கு ஒரு வழி கூறினார்.

“ஹிமாலயத்தில் துர்வாச முனிவர் கடுந்தவம் செய்து வருகிறார். உங்களில் யார் அவர் தவத்தைக் கலைத்து உங்களை மோகிக்கும்படி செய்வீர்களோ அவர்களே சிறந்தவர் என்று தீர்மானிப்பேன்” என்றார் நாரதர்.

துர்வாசரின் பெயரைக் கேட்டதும் அப்பெண்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது..  

அவர்களுள் அநேக மகரிஷிகளுக்கு விரத பங்கம் ஏற்படுத்திய கர்வத்துடன் ‘வபு’ என்ற பெண் “நான் துர்வாசர் இருக்கும் இடத்திற்குச் சென்று அவருக்கு விரத பங்கத்தை ஏற்படுத்துவேன்” என்று சொல்லிப் புறப்பட்டாள்.

‘வபு’ தன் ஆடலாலும் பாடலாலும் துர்வாசரின் தவத்தைக் கலைக்க முற்பட்டாள். 

அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், “அப்சரப் பெண்ணே! நீ கழுகாகப் பிறப்பாய்!:” என்று சபித்தார். 

அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவறை மன்னித்து சாப விமோச்சனம் அளிக்கும்படி வேண்டினாள்.

கருணை கொண்ட முனிவர், “உனக்கு நான்கு குஞ்சுகள் பிறக்கும். நீ அர்ஜுனனின் அம்பு பாய்ந்து மரணமுற்று நிஜ ரூபத்தை அடைந்து இந்திரலோகம் செல்வாய்” என்று ஆசீர்வதித்தார்.

வபு கழுகாகப் பிறந்தாள். 

அப்போது அவள் பெயர் “த்ராக்ஷி”. 

மந்தபாலன் என்பவனின் மகனான துரோணன் என்பவனை மணந்தாள். அவள் பதினாறு ஆண்டுகள் கழித்து கர்பமுற்றாள்.

அப்போது மகாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. 

அதனைப் பார்க்கச் சென்ற த்ராக்ஷி, மேலே பறந்தபடியே யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு அவள் மேல் பாய்ந்தது. உடனே த்ராக்ஷியின் கர்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன.

“என் குழந்தைகளை தெய்வம் தான் காக்க வேண்டும்” என்று பிரார்த்தித்து உயிர் துறந்தாள் த்ராக்ஷி.

அச்சமயம் யுத்த பூமியில் பகதத்தன் என்ற வீரனின் வாகனமான சுப்ரதீபம் என்ற யானையின் கழுத்தில் தொங்கிய மணி பாணம் பட்டு அறுந்து சரியாக அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழுந்தது. அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன.

பாரத யுத்தம் முடிந்து குருக்ஷேத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை ‘சமீகர்’ என்ற மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். 

மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் ‘கீச், கீச்’ எனும் ஒலியைக் கேட்டார். 

அதை கேட்டு ஆச்சர்யமாய்ந்த முனிவர் மணியைத் தூக்கிப் பார்த்து அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள் இருக்கக் கண்டார். 

கருணையோடு அவற்றைத் தம் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார்.

அப்போது அக்குஞ்சுகள் அவரிடம், “மகானுபாவரே! எங்களை கோரமான மரணத்திலிருந்து காத்தருளினீர்கள். எங்களுக்கு நீங்களே தாய் தந்தை குரு ஆவீர்கள். தங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள்” என்றன.

வியப்புற்ற சமீகர், ” ஓ! பறவைக் குஞ்சுகளே! நீங்கள் யார்? எதனால் பக்ஷி ஜென்மத்தை அடைந்தீர்கள்?” என்று கேட்டார்.

“முனிவரே! நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகா முனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தோம். பெற்றோரைப் பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பிய தேவேந்திரன், கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டுமென்று கேட்டார்.

எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். 

ஆனால் சகல ஜீவிகளுக்கும் தங்கள் உயிரை விட பிரியமான பொருள் வேறு இல்லை அல்லவா? நாங்கள் பயந்து அதனை ஏற்கவில்லை. கோபமடைந்த எங்கள் தந்தை, 

“துஷ்ட புத்திரர்களா! நான் இந்த பக்ஷி ராஜனுக்கு வாக்களித்து விட்டேன். நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் பறவைகளாகப் பிறக்கக் கடவீர். என்று சபித்து விட்டார். 

பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு உணவாகச் சமர்ப்பித்தார்.

இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி, மகிழ்ந்து 

எங்களிடம், “நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பக்ஷிகளாக இருந்தாலும் சகல வேத, தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞான பக்ஷிகள், தர்ம பக்ஷிகள் என்று போற்றப் படுவீர்கள்” என்று அருளினார்”.

பறவைகள் இவ்விதம் தம் பூர்வ ஜென்மக் கதையைக் கூறக் கேட்ட சமீகர்,

“நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய சேவை எதுவும் இல்லை.  நீங்கள் இனி விந்திய பர்வதத்திற்குச் செல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

அதனால், ஜைமினி முனிவரே! நீங்கள் அந்த பறவைகளைக் கேட்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கேட்பவரின் ஐயத்தைத் தீர்ப்பது மகாத்மாக்களின் இயல்பு” என்று கூறி மார்க்கண்டேயர் தவமியற்றச் சென்றார்.

ஜைமினி முனிவர், விந்திய பர்வதத்தில் ஞானப் பறவைகளைத் தேடித் சென்ற போது அவை இனிமையாக வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தன. 

அவற்றை அணுகி, “ஓ! ஞானப் பறவைகளே! நான் வியாசரின் சீடன். என்னை ஜைமினி என்பார்கள். மார்கண்டேயர் கூறியபடி உங்களிடம் வந்துள்ளேன். என் சந்தேகங்களைத் தீர்த்து எனக்கு மனசாந்தி அளியுங்கள்”. என்றார்.

அப்பறவைகள், “முனீஸ்வரரே! உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரிந்த வரை கூறுகிறோம்” என்று பதிலளித்தன.

ஜைமினி தனது சந்தேகங்களைக் கேட்டார்:-

1.ஸ்ரீமன் நாராயணன் துவாபர யுகத்தில் மானுட உடலோடு அவதரித்ததன் காரணம் என்ன?

2. உலகம் வியந்து பார்க்கும்படி திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?

3.கௌரவ பாண்டவ யுத்தத்தின் போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?

4.திரௌபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட நிகழாமல் திக்கற்றவர் போல் அகால மரணமடையக் காரணம் என்ன?

முனிவரே, தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கும் போது பூமி பாரத்தைக் குறைக்க ஸ்ரீமன் நாராயணன் அவதாரமெடுப்பார். அக்காரணத்தால் தான் மனிதனாக அவதரித்தார்.

முன்பொருமுறை ‘த்வஷ்ட்ரு பிரஜாபதி’ புதல்வனான திரிசூரன் (விஸ்வரூபன்) சிரசாசனத்தில் தவம் செய்து கொண்டிருக்கையில் தேவேந்திரன் அவனைக் கொன்றதால் பிரஹத்தி தோஷம் பற்றியது. 

அப்பாவத்தை யமனுக்கும், வாயுவுக்கும், அஸ்வினி தேவதைகளுக்குமாக நான்காகப் பிரித்துக் கொடுத்து அவர்கள் மேல் கருணையோடு தன் அம்சங்களையும் அவர்களிடம் இருத்தி வைத்தான்.

அதனால் எமனின் அம்சமாக தர்ம புத்திரரும், வாயு மூலமாக பீமனும், அஸ்வினி தேவதைகள் மூலம் நகுல சகதேவனும் பிறந்தனர். இந்திரன் தன் அம்சத்தோடு அர்ஜுனனாகப் பிறந்தான். இந்த விஷயத்தை அறிந்த இந்திரனின் மனைவி சசிதேவி, துருபதன் வளர்த்த வேள்வியில் இருந்து திரௌபதியாக உதித்து, இந்திர அம்சத்தோடு பிறந்த பஞ்ச பாண்டவர்களை மணந்தாள்.

பலராமர் பாண்டவர்களின் உறவினர். சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து சம்பந்தியானவர். துரியோதனனுக்கு ‘கதை’ யுத்தம் பயிற்றுவித்து குருவானவர். ஸ்ரீகிருஷ்ணரோ பாண்டவர் பக்கம் நிற்பவர். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும்.

அது மட்டுமல்ல. ஒரு முறை பலராமர் நைமிசாரண்யம் சென்ற போது பாகவத கதை சொல்லிக் கொண்டிருந்த சூத முனிவர் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் அவரைக் கொன்று விட்டார். அங்கிருந்த மகரிஷிகள் பலராமரைப் பார்த்து வெறுப்புடன், “நீ செய்த பாவத்தை எல்லோரிடமும் சொல்லியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை விரதம் அனுசரிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டனர்.

அதனால்தான் தீர்த்த யாத்திரை செல்லும் சாக்கில் பலராமர் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.

பாண்டவ புத்திரர்களான உப பாண்டவர்கள் விச்வேதேவர்கள் ஆவர்.

ராஜா அரிச்சந்திரனை அரசுரிமையை விட்டு நீக்கி, துன்புறுத்திய விச்வாமித்திரரை, வானத்திலிருந்து பார்த்த விஸ்வேதேவர்கள் ஐந்து பேர் கருணை கொண்டு, “இத்தனை துன்பம் செய்கின்ற இந்த விசுவாமித்திரர் எந்த பாவ உலகிற்குச் செல்வரோ!” என்று தம்மில் தாம் பேசிக் கொண்டனர்.

அவ்வார்த்தைகளைக் கேட்ட விசுவாமித்திரர் ரோஷத்தோடு, “நீங்கள் ஐவரும் மனித உலகில் பிறப்பீராக!” என்று சாபமிட்டார். அப்போது விஸ்வேதேவர்கள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க சாந்தமடைந்து, ” நீங்கள் மனித ஜென்மமெடுத்தாலும் மனைவி, சந்ததி, காமம், க்ரோதம் போன்றவை இன்றி மீண்டும் தேவர்கள் ஆவீர்கள்” என்று ஆசீர்வதித்தார்.

இந்த ஐந்து விஸ்வேதேவர்களே திரௌபதியின் கர்பத்தில் பிறந்து, விவாகம், பிள்ளைகள் போன்ற பந்தங்களில் சிக்காமல் பிரம்மசாரிகளாகவே அஸ்வத்தாமனின் கையால் மரணமடைந்தனர்.”

ஞான பக்ஷிகளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஜைமினி, அவைகளிடம் அரிச்சந்திரனின் வரலாற்றை சம்பூர்ணமாகக் கேட்டு அறிந்து கொண்டார்.

மேலும், “மஹாத்மாக்களே ! எனக்கு இன்னும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றையும் தீர்த்து வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். பக்ஷிகள் சம்மதித்தன.

“ஜனன மரணங்கள் எதனால் ஏற்படுகின்றன? மிருத்யு என்றால் என்ன? நரகத்தைப் பற்றி விவரமாக எடுத்துரையுங்கள்” என்றிவ்வாறு எத்தனையோ சந்தேகங்களை தர்ம பக்ஷிகளைக் கேட்டு அறிந்து கொண்டார் ஜைமினி.

“பாவ புண்ணியங்கள் என்றால் என்ன?” என்று கேட்டார் ஜைமினி.

“முனிவரே! பாவங்கள் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இரண்டு வகைப்படும். சின்னச் சின்னப் பாவங்களுக்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடும். ஏதோ ஒரு வியாதியின் உருவில் அவை அனுபவிக்கப்பட்டு விடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரித்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும்.” என்று பதிலளித்தன தர்ம பக்ஷிகள்.

இவ்விதமாக இன்னும் தத்தாத்திரேயரின் கதை, காலயவனனின் கதை, மதாலசா சரித்திரம், கிருஹஸ்தாசிரம தர்மங்கள் போன்ற எத்தனையோ சந்தேகங்களைக் கேட்டார் ஜைமினி. அவற்றுக்கெல்லாம் ஞானப் பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் சாப விமுக்தி பெற்றன.

சந்தேக நிவ்ருத்தி அடைந்த ஜைமினி ரிஷி, ஞான பட்சிகளின் உருவத்தில் இருந்த முனி குமாரர்களை ஆசீர்வாதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

Thanks FB sridara Krishan

ஸ்ரீ பாலா மந்திரம்

சிவ சிவ
ஓம் சிவாய நம
🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻
சித்தர்களின் மேலான தெய்வம்!
வாலை பூசையின்  ரகசியம் ...
 ஸ்ரீ  பாலா மந்திரம்
********************************************************************************

Thanks FB vvasudavan
பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது
தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப்
பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து
கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப்
போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என
எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க,
ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக
தேவைப் படும். இதை உணர்ந்திருந்த
சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம்
ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த
அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ்
சிறிய பெண்ணின் அம்சம் என்பது
ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும்
அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர்
பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப்
பெண்ணே!"
- கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின்
பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின்
பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை.

அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த
வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற
வழிகளில் பூசை செய்தார்கள். இந்த
வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே
இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத
சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில்
இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு
அவளே அனைத்திற்கும் காரண காரியமாக
இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித
யோகா ஞானங்களுக்கும் அவளே
தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த
சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி
பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின்
அருளால் சித்தியடைந்து, பின் அவளை
கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக
மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து,
இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி
நிலையான மெய்ஞான நிலையினை
அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர்
நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை
எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

வாலை பூசை என்பது என்ன?
இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு
விளக்குகிறார்

"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும்
தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல
மகனேசொன்னேன்!"
- அகத்தியர் -

இத்தனை சிறப்பான வாலை பூசையின்
 இரகசியம் என்ன?

 வாலை பூசையின் ரகசியம்...
******************************

பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும்
ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை
வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம்
என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல
மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில்
இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின்
உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று
சித்தியடைவதுதான் வாலைபூசையின்
நோக்கம்.

இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின்
வருமாறு கூறுகிறார்.

"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல்
வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "
- கொங்கணவர் -

"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்"
- கொங்கணவர் -

"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"
- வாலைக் கும்மி -

கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி
என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி
சொல்கிறார்..

"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"

வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும்
ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்
+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே
ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய
மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும்
ஆகும்.

வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை
புற நிலையில் அல்லாமல் அக நிலையில்
தெரிந்து கொண்டு , உணர்வைவும்,
நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில்
பரம்பொருளுடன் சேர இவ் வாலைப்
பூசையை கைக்கொண்டு சித்திபெற
வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.

ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள்
வழி சென்று சித்தி பெறலாம்.

இந்த வாலை பூசை முறைகளை சிறந்த
குருவின் வழிகாட்டல் மூலம் பெற்று நாமும்
பயனடைந்து மற்றவர் பயனடைய வழி
காட்டுவோமாக...!

வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமு மாமே
- திருமந்திரம்

மனதை உன் மணியில் வைத்தால்!
மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள்
காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி
கண்மணியில் நிறுத்தி தவம்
செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால்
பெரிதாகும்! கண்மணி சுழல சுழல
காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்!

“மன்மணம் எங்குண்டு வாயு
அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!
அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில
லோக அன்னைக்கு சேவகம்
செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும்
2 கோடியாகும்! அவ்வாறு உள்ள
2 கோடி பூதகணங்கள் தான் தாயின்
கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்!
மிகப்பெரிய இரகசியம் இது!

சித்தர் சொன்ன இரகசியம் !
*****************************

ஆய்ந்து அறிந்து அறிய முடியாத
மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த
அரணுக்கு இவளே எல்லாமாம்!
ஆதி சக்தியாக படைத்ததால் தாய்!
சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக
இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய்
துலங்குவதால் மனைவி!
உயிரெல்லாம் சக்தியம் சமல்லவா சிவம்
படைத்தாரல்லவா எனவே உயிரை
படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி
துலங்குவதால் மகளுமாவாள்!

ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை
இது!

ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள்
பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள்
உள்ளன!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில்
உள்ளது!

“நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்”
முருகப் பெருமானின் பூதகணங்களின்
எண்ணிக்கை நாலாயிரம்!
வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள்
தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை
பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து
செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையைப்
பணிந்தால் அரவணைப்பாள்!
மும்மலத்தில் பெரியது மாயை!
எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!

தாயே என்று சரணடைந்தால் மட்டுமே
தப்பலாம்!
உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக
பார்த்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமி பட்டரைப் போல!
அழுதால் அமுதம் தருவாள்!
ஞானசம்பந்தருக்கு தந்தது போல!
பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு
தந்ததை போல!

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்
அன்னையின் மகிமையை!!
அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!

இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது
போல!
எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!
வாலை தான்!

 பாலாதிரிபுர  சுந்தரி 
*********************

........... விளக்கம்……………………………
………........பெண் என்பவள் சக்தி,ஆண் என்பவன்
சிவம்.ஆண் இருப்பு,பெண் இயக்கம், இயக்கம்
இல்லா இருப்பு உபயோகம் அற்றது.பிரபஞ்சத
்தில் இருக்கிற அனைத்துமே இவ்விரு
தத்துவங்களுக்குள்ளே அடங்குவதை நாம்
தெளிவுற சிந்திக்கும் போது
புலப்படும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கிற
ஐந்து சக்திகளான பஞ்ச பூத தத்துவங்களான
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்
ஆகியவகைகளின் அடிப்படையில்தான் நம்
ஞானிகளும் சித்தர்களும் பூமியில் இருக்கிற
அனைத்து விசயங்களிலும் உட்புகுத்தி அதன்
செயல் சூத்திரங்களையும் கணக்கிட்டார்கள்
.இப் பஞ்ச பூத தத்துவத்தில் இருப்பு
சிவனாகவும்,இயக்கம் சக்தியாகவும் கொண்டு
பல சூட்சுமங்களை உணர்த்திருக்கிற
ார்கள்.மனிதனின் உருவாக்கத்தில் சக்தியும்
சிவனும் மட்டுமே இயங்குவதாக கண்டார்கள்.

இதில் இருப்பு சிவனை விட இயக்க சக்தி
பெரும் சக்தி வாய்ந்ததாக உணர்ந்ததால் தான்
இயக்கத்தின் ஆதி கடவுளாக ஆதிபராசக்தியை
கொண்டு அச்சக்திக்கு பெண் வடிவமும்
கொடுத்தனர். மேலும் நாம் வணங்குகிற
அனைத்து கடவுள்களிலும் மேற்கூறிய
தத்துவங்களின் அடிப்படையில்தான்
சித்தரித்து இருக்கிறார்கள்.சிவம் சக்தி
இரண்டையும் ஜோதிட தத்துவத்தில் சூரியன்
சந்திரனுக்கு ஒப்பிட்டு பூமியின் இயக்கத்தை
இரவு,பகல்,நாள் நட்சத்திரம்,திதி இவைகளின்
கணக்குகளின் மூலமாக கொண்டிருப்பார்க
ள்.மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனை
மட்டுமே கணக்கெடுப்பதால் நம் நாட்டின்
ஜோதிடத்தில் இருக்கிற தீர்க்கம் அங்கு
கிடைப்பதில்லை.

உயிர் ஜனித்ததிலிருந்து 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை அவ்வுயிரின் நிலை மாறி அடுத்த
நிலை அடையும்.இது ஜனன கால குருவின்
சுழற்சியை கணகெடுத்து சொல்லபட்டு
இருக்கிற ஒரு விஷயம். சக்தியின் இயக்கமான
பெண்ணில் இத்தன்மை பெரிய மாற்றங்களை
ஏற்படுத்துகிறது.பெண்ணில் முதல் 12
ஆண்டுகள் முடிவுறுகிற தருவாயில் அடுத்த
நிலைக்கு சக்தியினை உருவாக்கி ஒரு சக்தி
பிரவாகமாக மாற்றுகிற காலம். ஆம் ஓர்
உயிரிலிருந்து இன்னொரு உயிரை
உருவாக்குவதற்கு உண்டான சக்தி மைய
இயக்கத்தின் ஆரம்பம். ஒரு அணுவே பிரித்தால்
பல அணுக்தளாக பிரிவதன் ரகசியம் அறிய
முற்பட்டால் சக்தி சிவன் மூலம் உற்பத்தியின்
ரகசியம் அறியலாம் ஓர் உயிரை
ஜனனிப்பதற்க்கு உண்டான கருவறை
திறப்பு,கோவில் கும்பாபிஷேகம். ஒளியாக
இருந்து ஒளி பிழம்பாக உருமாறுகிற
பருவம்.இந்த ருது, பெண் வடிவத்தை தாயாக
சக்தியாக சக்தியின் திரளாக உருவெடுக்கும்
நேரம். இது சக்தியாக பெண்ணிற்கு மட்டுமே
ஏற்படுகிற இயற்க்கை தந்த வரம்.

இத்தன்மையில் அந்த பெண்ணின் உடலில்
பிரபஞ்ச சக்தியின் வலிமை இறங்கி இருக்கிற
நேரம். நம் வீட்டில் இருக்கும் 12 -13 வயது
பெண்ணை பாருங்கள் புரியும். குழந்தை தனம்
மாறி உடலில் மாற்றங்களை மட்டுமே நாம்
வெளிப்படையாக காணமுடியும் அனால்
சூட்சுமத்தில் பெரிய சக்தி வடிவமாக
இருப்பார்கள்.

அச்சக்தியின் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி
அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக
பெரிய சக்தி அவள்.பால பருவத்தின் இறுதி
நிலை குழந்தையும் தெய்வீகமும்
தாண்டவமாடும் வசீகர முகம்.
இப் பெண் என்ற சக்தி மையத்திற்கு 3
நிலைகள் முக்கியமாக கருதபடுகிறது.

1.ருது என்கிற கர்ப்பகிரக திறப்பு 2.சக்தி
சிவனை ஆகர்ஷணமாக்கி தன்னுள் அடக்குகிற
முதல் தாம்பத்திய உறவு 3.சக்தி,சிவம் உரு
கருவாகி இருக்கிற கர்ப்ப காலம்.இம்மூன்று
தன்மைகளிலும் பெண் ஜொலிப்பாள்.அவர்
களுடைய முகம் ஒரு பொலிவு பெற்று
தெய்வீக தன்மையை வெளிபடுத்துவதை
காணலாம்.

பெண் ருதுவாகி சக்தியாகின்ற அந்த யோனி
திறப்பை இன்றும் மிக பெரிய சக்தி விழாவாக
மேற்கு வங்காளம்,கவுகாத்தியில் உள்ள
காமாக்கினி கோவிலில் காணலாம்.அவ்விழா
வில் சாதுக்கள்,சித்தர்கள்,நாகாக்கள்
,பெருவாரியாக கலந்து கொள்கிற வருடத்திற்கு
ஒருமுறை நடக்கின்ற மிக பெரிய விழா அது.

பெண்ணாகிய சக்தியில் இவ்வுண்ணதத்தை
உணர்ந்து தான் நம் முன்னோர்கள்
சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று
கேந்திரத்தை இயக்குகிற திரிகோணத்தை
போற்றி உள்ளனர்.இச்சக்தியை பெண்ணை
போற்றுவோம்,வணங்குவோம் .

ஸ்ரீ பாலா மந்திரம்
***********************

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக
வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே
விரும்பி எடுத்துக்கொண்ட
குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ
பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி
முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி
அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட
தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிய
ே.எல்லா யோகிகளுக்கும் யோக
முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா
திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்
என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன
மேலும்
சில சூபி ஞானியாரின்
பாடல்களும் நூல்களும் இதை
ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்
களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்
இருக்கிறான் என்று கூறுகின்றனர்

ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு
புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள்
உள்ளான் என்று நமக்கு நாமே
கேட்டுக்கொண்டால் பதில் உண்டா
நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே
வெளிப்படுகின்றது
பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய
நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து
செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது
அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும்
ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின்
செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட
மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட
தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச்
செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி
விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி
பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே
பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-
*********************************************

1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி
மந்திரம்:-

ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று
சொல்லுவது சிறந்தது.

ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.-
பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம்
மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வ
ாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம்
எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி,
மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல
செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீக
ரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,ம
ுருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில்
இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை
தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம்
சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும்
ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ
பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள்
மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு
வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த
நிலையை அடையலாம்.

2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி
மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி
மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம்
க்லீம் சௌம்||

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த
பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும்
ஜெபிக்க உத்தமம்.

இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா
என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும்
தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி
வணங்கி தொடங்குகின்றனர். 

வாலை தாய்
அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால
பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர்
களின் தலைவன் முருக பெருமானை வணங்கி
வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து,
சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும்.
சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து
முக்தியடைய முடியும்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று
சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை
ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள்
நம்மனைவரையும் வாழ்விலும்
ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர
வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க
வேண்டுகிறேன்.

  வாலைசக்தி மந்திரம் !
*************************

"ஓம் ஐம் க்லீம் சௌம்
க்லீம் ஐம் க்லீம் ஐம் சௌ
ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் சங் ஹங்
ஸ்ரீ பாலபரமேஸ்வரி மமமுக கமல
வாஸின்யை ஸ்வாஹ..."

இந்த மந்திரம் பலவித ஆற்றல்களைத்
தரவல்லது. ஆனால் முறைப்படி சொல்லிப்
பழகிய குருவின் வழி இந்த மந்திரத்தை
கேட்பதால் மட்டுமே முழுப்பயன் கிட்டும்.

 பாலா திரிபுரசுந்தரி -வாலை பூசை : ‘பாலா’-பாலாம்பிகை பாலா திரிபுரசுந்தரி என்று போற்றப்படுபவள். எப்போதும் ஒன்பது வயது உடையவளாகத் தோன்றுபவள் பாலாதேவி. செங்கழுநீர்ப் பூமேல் அமர்ந்து, ஜபமாலையும் புத்தகமும் தாங்கி, அபயமும் வரதமும் காட்டி, சிவந்த திருமேனியுடன் திகழ்பவள் பாலா திரிபுரசுந்தரி. இவளுடைய மந்திரமான பாலா மந்திரமே முதலில் ஸ்ரீவித்யாவில் உபதேசிக்கப்படும். அம்மந்திரத்தை எளிதில் ஜபித்து அதிகமான பலன்களை அடையலாம். எனவே, பாலா மந்திரத்தை, ‘லகு ஸ்ரீவித்தை’ என்பர். பாலா மந்திரத்தை ஒரு கோடி முறை ஜபிக்க சித்திகள் தாமாகவே வந்து சேரும் இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார் "கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர் நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும் ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும் தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!" சித்தர் வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த வாலை என்னும் தெய்வத்தை பற்றி தெரியும் . சித்தர்கள் நம்மை அப்பனிடம் சேர்க்கும்அன்னை
யாக இருப்பவள் . இவளை பற்றி தெரிய வேண்டும் என்றாலே விட்ட குறை வேண்டும் என்கிறார் கொங்கனவர் தம் பாடல்களில் . நந்தவனத்திலே சோதியுண்டு நிலம் நித்திய பேருக்கு நெல்லுமுண்டு விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் ஞானப்பெண்ணே என்கிறார் . இது மட்டுமல்ல வாலையை பற்றி தம்முடைய வாலைக்கும்மி பாடல்களில் நிறைய கூறுகிறார் . வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங் காப்பது சேலைக்கு மேலுமில்லை பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக் கும்மிக்கு மேலான பாடலில்லை என்று இந்த வாலை தெய்வத்தின் மகிமையை நமக்கு அறிவுறுத்துகிறார் .ஆத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு செல்ல வாலையால் மட்டுமே இயலும் இவளை பாடாத சித்தரில்லை , என்னும் அளவிற்கு எல்லா சித்தர்களும் இவளை பாடி பணிந்திருக்கிறார்கள் . மாயையும் அவளே , மாயையை இவள் தான் உண்டு பண்ணுகிறாள் என்பதையும் கொங்கணர் அழகாக எடுத்து வைக்கிறார் பாருங்கள் அஞ்சு பூதத்தை யுண்டு பண்ணிக் கூட்டில் ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக் கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் நம்முடைய ஆன்மீக ஞானத்தை சோதித்து நம்மை சுற்றி மாயைகளை உருவாக்கி அதற்குள்ளே விழச் செய்திடுவாள் நாம் விழுந்து விட்டோமேயானால் முக்தியில்லை இதைத்தான் சிவவாக்கியர் தனது பாடலில் .. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களுங் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே ஆகவே அவளையே சரணாகதியாக , அப்பனிடம் நம்மை அவளால் மட்டுமே கொண்டு சேர்க்க முடியும் என்று அவளையே கதியாக இருந்தோமேயானால் நம்மை கண்ணைப் போல காத்திடுவாள் . குழந்தை தானே அன்போடு அவளை அழைத்தாள் உடனே வருவாள் . மந்திரத்திற்கும் , தந்திரத்திற்கும் அப்பாற்பட்டவள் , எதற்குள்ளும் அடங்காதவள் அன்பு என்னும் ஒரே சொல் தான் அவளை நம்மோடு இருக்க வைக்கும் . மற்ற எதுவும் இவளைக் கட்டுப்படுத்தாது . ஈசனும் , அவளும் வேறில்லை . கொங்கனவர் கூறுகிறார் கேளுங்கள் … காலனைக் காலாலுதைத் தவளாம் வாலை ஆலகா லவிட முண்ட வளாம் மாளாச் செகத்தை படைத்தவளா மிந்த மானுடக் கோட்டை இடித்தவளாம் .

 வாலை தேவி பூசை குறித்து -மச்சமுனி வாலையைக் கண்டு வணங்கி நீ மைந்தா காலையு மாலையுங் கருத்தாய் வணங்கினால் ஆலைய மாகு மவனுருத் தானுந் தாழ்வது மில்லைத் தவமதுவாமே தவமது வாக சாத்துவோங் கேளு உவமான மில்லை யோங்கார வட்டத்துள்i சிவமான விந்துவைச் ம்மென்று பூசைசெய் நவமாந் திரேகம் நலச்சிவ யோகமே முத்திக் கொழுந்து முனைகொண்ட தீபம் நித்திப் பிடிக்கும் பதிவான வாசியை நித்தமும் நோக்கி நேர்நிலைக் கண்டால் சித்தம் பெருகி சிவனவ னாமே.🙏🏻🙏🏻🙏🏻


அயனாம்சம் ஒரு பார்வை

அயனாம்சம் ஒரு பார்வை 

(C.S.Mallish Kumar) thanks for fb
"ஜோதிடம்" என்றால் ஜாதக பலன், ராசி பலன், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, ஏழரை சனி, அஷ்டம சனி என்றுதான் பாமர மக்களுக்கு தெரியும். ஆனால் அதனுள் இருக்கும் நுட்பமான விசயங்களை ஜோதிடர்கள் நன்கறிவர். காரணம், இன்றைய ஜாதக கணிதத்திற்கு பயன்படுத்தும் பஞ்சாங்கம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஏனெனில், நடைமுறையில் இருக்கும் வெவ்வேறான அயனாம்சங்களே இதற்கு காரணம். உதாரணமாக,

1. நிராயன வாக்கிய பஞ்சாங்கம் (Vakya Panjangam)

2. நிராயன திருகணித பஞ்சாங்கம் (Drik Panjangam)

3. சாயன மேற்கத்திய ஜோதிடம் (Western Zodiac)

மேலை நாடுகளில் சாயன முறையும் (Tropical system); இந்தியாவில் நிராயன முறையும் (Sidereal system) பயன்பாட்டில் இருந்தாலும், நிராயனத்தில் "வாக்கியம் - திருகணிதம்" என இருவேறான கணிதமுறைகள் உண்டு. இம்மூன்று முறைகளிலும் வேறுபடும் காரணியான பூமியின் சாய்மானம் எந்த கோணத்தில் இருக்கிறது என்கிற "அயனாம்ச" கணிதமே ஜோதிடத்தின் 'அச்சாணி' ஆகும். ஏனெனில் அயனாம்சத்தைப் பொருத்தே கிரகங்களின் நகர்வு, வேகம், கோணம், பாகை என அனைத்தின் துள்ளியமும் இருக்கிறது.

அதாவது, புவியின் சுற்றுரேகை (Ecliptic) மற்றும் சாய்வு ரேகை (Celestial equator) இரண்டும் வெட்டும் புள்ளி (Vernal eqinox) மேஷத்தின் ஆரம்புள்ளியில் இருந்து எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதே தற்போது புவியின் சாய்மான "அயனாம்ச" கோண அளவாகும். Vernal equinox அன்று (March 20, 2020) பூமியில் இரவு / பகல் சமமாக இருக்கும் 

சாயன முறையில் சூரியனை மையமாக வைத்து நகரும் புள்ளியைக் (moving zodiac) கணக்கிடுவதால் ஒரே ஒரு அயனாம்சம் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது; மாறாக நிராயன முறையில் புவியை மையமாகக்கொண்டு அஸ்வினி-மேஷத்தை நிலையான ஆரம்பப் புள்ளியாகக் (fixed zodiac) கணக்கிடுவதால், காலப்போக்கில் பூமியின் கோண வேறுபாட்டைப் பொருத்து வாக்கிய முறையில் சில அயனாம்சங்களும்; திருகணித முறையில் எண்ணிலடங்கா அயனாம்சங்களும் நடைமுறையில் உள்ளது. வாக்கியத்தில் சூர்ய சித்தாந்த அயனாம்சமும்; திருகணிதத்தில் லஹிரி அயனாம்சமும் பயன்படுத்தப்படுகிறது. எனில், இந்த அயனாம்சங்கள் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால்,

1. ராசி சக்கரத்தின் ஆரம்பப் புள்ளி (Meshadhi zero point)

2. பூமி சூரியனை சுற்றிவரும் பாதை மாறுபாடு (Eccentricity)

3. பூமியின் சாய்வு கோணம் (Obliquity)

4. அயனாம்சம் மொத்த சுற்றுகாலம் (Axial precession year)

5. பூஜ்ஜிய அயனாம்ச வருடம் (Zero ayanamsa year)

6. பூமியின் அச்சு/சாய்மானம் வெட்டும் புள்ளி (Vernal equinox point)

7. புவியின் தள்ளாட்டம் ஒரு பாகையில் நகரும் காலம் (Wobbling 1 deg/yr)

8. தள்ளாட்டத்தின் அதிகபட்ச கோணம் (Maximum wobbling angle)

9. தள்ளாட்ட கால வேறுபாடு (Axial precession time)

Precession time என்பது புவியின் கோணம், வேகம் மற்றும் சுற்றும் பாதையைப் பொருத்து அளவில் வேறுபடும். பூமியின் சாய்மானம் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக 27 பாகை வரை சென்று மீண்டும் பூஜ்ஜிமாகும் நிகழ்வு 3600 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாக "சூரிய சிந்தாந்தம்" கூறுகிறது. ஆனால், இந்த தள்ளாட்ட வேறுபாடு 360 பாகைகள் முழுவதும் நிகழும்  காலம் ஒவ்வொரு முறையிலும் வேறுபடுகிறது.

1. சூரிய சித்தாந்தம் 21,600 வருடங்கள்

2. ஶ்ரீயுக்தேஸ்வர் 24,000 வருடங்கள்

3. சாயன/நிராயன 25,771.5 வருடங்கள்

அதுபோல பூமி சூரியனை சுற்றிவரும் ஒரு வருட காலம்  ஒவ்வொருவரின் கூற்றிலும் வேறுபடுகிறது:−

1. பழைய சூர்ய சித்தாந்தம் 365.25875 days

2. புதிய சூர்ய சித்தாந்தம் 365.258756 days

3. வராகிமிரனின் சித்தாந்தம் 365.25875 days

4. ஆரய்பட்டா அர்த்தராத்ரிகா 365.25875 days

5. ஆர்யபட்டா சித்தாந்தம் 365.25868 days

6. பிரம்மகுப்தா 365.2584375 days

7. தாலமி நிராயன 365.256813 days

8. தற்கால நிராயன 365.2563624 days

9. சாயன 365.24219 days

10. ஹிப்பார்கஸ் 365.24667 days

11. Anomalistic year 365.25963 days

இவற்றிற்கெல்லாம் மேலாக, தற்போது 24 பாகை சாய்மானத்தில் இருக்கும் பூமியின் பூஜ்ஜிய அயனாம்ச வருடம் குறித்து 'சூர்யசித்தாந்தம்' முதல் தற்போதுவரை வெவ்வேறான கருத்துக்கள் நிலவுகிறது.

1. De Lice 1 B.C

2. Galactic centre 69 A.D

3. Cyril Fagan 213 A.D

4. Aldebran 15 Taurus 220 A.D

5. Fagan / Bradley 221 A.D

6. Babylonian, Huber 229 A.D

7. Chandra Hari 233 A.D

8. Old Surya Siddhanta 238 A.D

9. N.C. Lahiri 285 A.D

10. K.S. Krishnamurthy 291 A.D

11. B.V. Raman 397 A.D

12. Sepharial 498 A.D

13. Aryabhata 499 A.D

14. Yukteshwarar 499 A.D

15. Varahimira 505 A.D

16. Grahalaghava/Munjala 522 A.D

17. Bhaskara 523 A.D

18. Laghumanasa/Kapileshwara 527 A.D

19. Hipparchos 545 A.D

20. Ushashashi 559 A.D

21. Sassanian 564 A.D

இதுபோல இன்னும் பலரின் கருத்துக்களும் உண்டு. அளவீட்டில் இத்தகைய மாறுபாடுகள் இருப்பதனால் அயனாம்சங்களும் மாறுபட்டே இருக்கிறது. அதில் அவரவருக்கு ஏற்புடையதைப் பயன்படுத்தி பலன் சொல்லி வருகின்றனரே, தவிர சொல்லும் பலனை வைத்து இதுதான் சரியென யாராலும் நிரூபிக்க இயலாது. காரணம், மூன்று முறைகளிலும் சரியாக பலன்கூறும் ஜோதிடர்களும் உண்டு. இதிலிருந்து எம்முறையும் முற்றிலும் தவறில்லை, மாறாக 100% துல்லியமும் இல்லை என்பது ஆய்வின் முடிவாகும்!

C.S.#மல்லீஸ்குமார் / #சென்னை

Friday, September 25, 2020

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்

Thanks FB. Agni b sivaraju

 Aaa

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்


நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.


நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம்  வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம். 

அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.


கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி   சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம்.  அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது. உப்பு தண்ணீரின் மகிமை   சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும்.  அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.


இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த  சக்கரங்களை பலப்படுத்தும்..


அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.


அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.


செப்பு காசின் மகிமை   குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால்  இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.


செங்கல்லின் மகிமை  குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.


தண்ணீருக்கும் சக்தி   யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.


பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு  தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.


திருஷ்டியை போக்கும் “மை”   சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை  செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.      


தோஷங்களை நீக்கும் பரிகாரம்   பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.  


எண்ணை தானம்   உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க  நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.  


குழந்தைகளை தாக்கும் தோஷம்   ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.


அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.


பசுவின் பாத மண்ணுக்கு சக்தி வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில்  இருக்கிறது. வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.


திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது  பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது.   இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.


ஸ்படிகத்தின் மகிமை   சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.


ஒரு கைபிடி உணவு   நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது  நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று. திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும். இதற்கு பரிகாரம், ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும். அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நீங்கும்


வாழ்வியல் ஜோதிடம். சண்முகப்பிரியன்

 

வணக்கம் !! 


ஆத்ம கமலம் - அகர ஒளி இணைந்து வரவேற்கும் 

“Online சத்சங்கம்”

(ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST)


இந்த வார தலைப்பு: 4 – “வாழ்வியல் ஜோதிடம்”



வழங்குபவர்: திரு. சண்முகப்பிரியன், Dell, Singapore

8 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் உலக வாழ்வியல் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு ஆன்மீக  மற்றும் சமுதாய தொண்டாற்றி வருகிறார்


தேதி: 27th September 2020 

நேரம்: 11.30 AM IST 

கட்டணம்: இறை பக்தி 


Google Meet Code: bwb-ohje-fzd

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd

Open to All 


சத்சங்கம் பற்றி உடனுக்குடன் தகவல் பெற இணையுங்கள் Telegram Group: https://t.ly/rRfa

நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf

Google Meet இணைவதற்கான வழிமுறை (Tutorial Link): https://t.ly/pzRO (YouTube)


-- 

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள்,

ஹரி மணிகண்டன் வி | +91 – 9841267823

வீரா கி | +91 – 9840646368

பூர்ணிமா சுகுமார், சிங்கப்பூர்

ஆத்ம கமலம் குழு

 

Greetings!   

Aathma Kamalam – Ahara Oli !! Jointly organize

“Online Sathsangam”

(Every Sunday 11.30 am Series)


Topic: “வாழ்வியல் ஜோதிடம்”

Presenting by: Mr Shanmugapriyan, Dell, Singapore

8+ years doing research and development in Spiritual, Astrology, Life-Skill and many more, which he utilizing into his Spiritual & Social Services in many ways


Date: 27th September 2020 

Time: 11.30 AM IST 

Fee: Love on God


Google Meet Code: bwb-ohje-fzd

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd 

Open to All


To get update about the webinar, Please join the Telegram Group: https://t.ly/rRfa

To Register as Speaker: https://t.ly/bkvf

Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO

-- 

Thanks and Regards, 

Coordinators: 

Hari V

Veera K | +91 – 9840646368

Poornima Sukumar, Singapore

Team  - Aathma Kamalam



Thursday, September 17, 2020

யாகம் ஹோமத்திலும் பயன் படுத்தவேண்டியவை

Thanks FB S.Swaminathan


 96 வகையான ஷண்ணவதி ஹோமங்கள் விபரம்


1.சமித்துவகைகள் _13 

2.ஹோமதிரவியம் _45

3.ரஸவர்க்கம்.           _8

4.பழவர்க்கம்.            _7

5.கிழங்கு வகையறா_5

6.உலோகம்                _2

7.வாசனாதிரவியம் _5

8.அன்னவர்க்கம்     _ 4

9.பக்ஷ்யம்.                 _5

10.பட்டுவஸ்திரம்     _1

11.தாம்பூலம்             _1

               

          மொத்தம்_       (96)


இதன் விளக்கம்.


1.      13.சமித்து

.அரசன்,ஆலன்,அத்தி,

முருங்கை, கருங்காலி, சந்தனம், மாசமித்து, மூங்கில், வன்னி, வில்வ, எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது


2.     45ஹோமதிரவியம். 


அரிசி மாவு, 

மூங்கில் அரிசி, வெல்லம் ,

பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு ,

பேரிச்சை ,வால்மிளகு வலம்புரிக்காய்_ இடம்புரி காய், மாசிக்காய், நாயுருவி, சீந்தில்கொடி,

 நெல்லி வத்தல், வெள்ளறுகு, சுக்கு ,

ஜட மஞ்சரி, களிப்பாக்கு, ஓமம், அகில்_குகில், அதிமதுரம்,

 செண்பக மொட்டு, வெட்டி வேர் ,

ரோஜா மொட்டு, கிராம்பு, கோரோஜனை, அவல், நெல்லு பொறி, கொப்பரை தேங்காய், குங்குமம் , விரளிமஞ்சள்,வங்காளமஞ்சள்,கஸ்தூரிமஞ்சள், கோதுமை, காராமணி, துவரை, பயறு ,கருப்பு கொண்டை கடலை, மொச்சை, எள் ,உளுந்து, கொள்ளு , இந்த45பொருட்கள் மட்டுமே 


3. 8 ரஸவர்க்கம்


நெய் ,பால், தயிர் ,தேன், பன்னீர், இளநீர் ,வெண்ணெய், சந்தனாதிதைலம்,


4.   7_பழவர்க்கம்


வில்வ பழம், பலாபழம், திராட்சைபழம் ,

அன்னாசிபழம்,

மலப்பழம், விளாம்பழம், மாம்பழம்.


5. கிழங்குவகையறா_5


சக்கரவள்ளி,

சேப்பங்கிழங்கு,

கருனைகிழங்கு,

தாமரை கிழங்கு

நீலோத்பலகிழங்கு

கரும்பு


6. உலோகங்கள்_2

ஸ்வர்ணம், வெள்ளி


7.  வாசனாதிரவியம்_5


ஜாதிபத்திரி, ஜாதிக்காய்,

ஏலக்காய்,

புனுகு, ஜவ்வாது,


8., அன்னவர்க்கம்_4


சக்கரை பொங்கல்

எலுமிச்சை சாதம்

தேங்காய் சாதம்

தயிர் சாதம்


9.பக்ஷ்யம்_5


லட்டு,பாயசம்,வடை, அப்பம்

மோதகம்


10. பட்டு வஸ்த்திரம்

11.தாம்பூலம்

மேற்கண்ட பொருட்கள் அனைத்து ஹோமத்திலும் பயன் படுத்தவேண்டியவை


ஒருசில யாகத்தில் சில பொருட்கள் மாறும் 


சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ‌நீங்கள் ஹோமம் செய்யும் பொழுது 54,108ஹோமசாமான்பொட்டலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அதில் உள்ளதில் பல பொருட்கள் பூஜை க்கு கிடையாது தயவுசெய்து  நீங்கள் செய்ய கூடிய பூஜை பயன்உள்ளதாக அமைய மேற்கண்ட பொருட்கள் பயன்படுத்துங்கள் மேலும் விபரங்களுக்கு  


அருள்மிகு ஜடாயுபுரீஸ்வரர் தேவஸ்தான அர்ச்சகர்

ஸ்ரீ.சுவாமி நாத அகோர சிவாச்சாரியார்    

திருப்புகலூர்


Monday, September 14, 2020

“திருமந்திரத்தின் பெருவழி தந்திரங்கள்” வழங்குபவர்: முருகேசன் , மதுரை

 



வணக்கம் !! ஆத்ம கமலம் பக்தியுடன் வரவேற்கும் Online சத்சங்கம் (ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST) இந்த வார தலைப்பு: 2 – “திருமந்திரத்தின் பெருவழி தந்திரங்கள்” வழங்குபவர்: திருச்செல்வர் முருகேசன், ஆன்மீகநெறியாளர், மதுரை தேதி: 13th September 2020 நேரம்: 11.30 AM IST கட்டணம்: இறை பக்தி Google Meet Code: bwb-ohje-fzd Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd Open to All To get update about the webinar, Please join the Telegram Group: https://t.ly/rRfa நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO (YouTube) -- அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி மணிகண்டன் சா | +91 – 9841267823 வீரா கி | +91 – 9840646368 ஆத்ம கமலம் குழு Greetings! Aathma Kamalam !! Happy to invite you for the Webinar session Online Sathsangam (Every Sunday 11.30AM Series) Topic: “Thirumandhirathin Peruvazhi Thandhirangal" Presenting by: Mr Murugesan, Madurai Date: 13th September 2020 Time: 11.30 AM IST Fee: Love on God Google Meet Code: bwb-ohje-fzd Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd Open to All To get update about the webinar, Please join the Telegram Group https://t.me/joinchat/AAAAAEYUtrWS-c9YyLU26w To Register as Speaker: https://t.ly/bkvf Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO -- Thanks and Regards, Coordinators: Hari C | +91 – 9841267823 Veera K | +91 - 9840646368 Team - Aathma Kamalam


Friday, September 11, 2020

பாரதியை ஆகர்சித்த எமது அருளம்பல (மௌன) சுவாமிகள்


பாரதியை ஆகர்சித்த எமது அருளம்பல (மௌன) சுவாமிகள்

எமது யாழ் மண்ணின் செழுமைக்கு கை கொடுத்தவர்கள் பலர். கல்வி, வாணிபம், அரசியல் கலை இலக்கியம் என எத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் கால் பதித்து அளப்பரிய பணிகள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் பலர்.




அந்த விதத்தில் எமது மண்ணின் ஆத்ம ஞானிகள் பலரும் மண்ணில் பலமாக ஆழ வேரூன்றி அகலச் சடைபரப்பி எம்மை ஒத்த சாதாரணர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு உள்ளொளி பாய்ச்சியதை மறக்க முடியாது. சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சுவாமிகள் எனப் பலவாறு எம்மக்களால் அழைக்கப்பட்டு உயர் பீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்கள். கடையிற் சுவாமிகள், யோக சுவாமி முதற்கொண்டு ஜேர்மன் சுவாமி என அறுகுபோல் வேரூண்டிப் படர்ந்த ஞானப் பரம்பரியம் இம் மண்ணில் இருந்திருக்கிறது. அவர்களின் ஞானத் தேறலில் ஒரு சிறு பங்காவது எம் எல்லோரிலும் இன்றுவரை ஒட்டிக் கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியம்தான்.

"குவலயத்தின் விழி போன்ற" என மகாகவி பாரதி போற்றிய அற்புத ஞானி ஒருவர் வடமராட்சியில் அதுவும் நான் பிறந்த ஊரான வியாபாரிமூலை மண்ணில் விளைந்திருக்கிறார். அவர்தான் தான் அருளம்பல சுவாமிகள் ஆவார். யாழ்பாணத்துச் சுவாமி என பாரதி அவரை விழித்தபோதும் மௌன சுவாமி எனத் தன்னைத்தான் ஓரிடத்தில் குறிபிட்டிருக்கிறார். ஊரவர்களும் அருளம்பல சுவாமி, மௌன சுவாமி ஆகிய பெயர்களில் அவரைப் போற்றித் துதித்திருக்கினறனர்.

ஆயினும் அவரைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. எனது தந்தையார் பாட்டனார் ஆகியோர் அவரைப் காணும் பாக்கியம் பெற்றிருக்கின்றனர். 1942 மார்கழி மாதம் மகாசமாதியடைந்த அவரை வியாபாரிமூலை பேந்தாள் வளவிலிருந்து நிஷ்டையிலிருந்த அதே நிமிர்ந்த கோலத்தில் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாபாரிமூலை வீரபத்திர கோயிலுக்கு அண்மையாக, ஈசான மூலையில் சமாதி வைக்கபட்டார். தானும் சிறுவனாகக் அதில் கலந்து கொண்டதை எனது தந்தையார் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளைக்கும் வதிரியைச் சேர்ந்த இலட்சிமி அம்மாள் ஆகியோரின் மகனாக 1980 ஆண்டு அருளம்பலம் பிறந்தார். அவர் பிறந்த தினம் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி என அவரைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் நா.ஞானகுமாரன் 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்' என்ற நூலில் ஆய்வு ரீதியாகக் குறிப்பிடுகிறார்.




எமது ஊரில் பிறந்து, எமது பகுதிப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் கல்வி கற்றபோது அவர் சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கனாக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 5ம் வகுப்புவரை அங்கு கல்வி கற்ற அவர் பின்னர் குடும்ப பொருளாதார நிலைகாரணமாக் தொழில் நிமித்தம் கம்பளை சென்றார்.

5ம் வரை மட்டுமே கல்வி கற்ற போதும் இராமாயணம் மகாபாரதம் திருமூலர் திருக்குறள் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் பட்டினத்தார் பாடல்கள் அருகிரிநாதர் பாடல்கள் வரையானவற்றில் தேர்ச்சி பெற்றிருந்ததை அவரது படைப்புகள் ஊடாக அறிய முடிகிறது என பேராசிரியர் நா.ஞானகுமாரன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உலக வாழ்வில் நாட்டங் குறைந்து ஆன்மீக ஆர்வம் மீதௌ 1910ம் ஆண்டளவில் இந்தியா சென்ற அவர் நாகை நீலலோசனி அம்மன் ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார் என அவரது படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். அந் நிலையில் புலித்தோலில் அவர் அமர்ந்திருக்கும் உடல் மெலிந்த ஞானத் தோற்றமுடைய புகைப்படம் ஒன்று கிட்டியுள்ளது. அவரது மேலும் இரு புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக் குற்றச்சாட்டு செய்தபோது பொலிசார் இவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபோது அறை பூட்டிய படியே இருக்க இவர் காணாமல் போயிருந்தார். தேடியபோது இவர் கடற்கரையில் நிஷ்டையில் இருப்பதைக் கண்டனர். இதைக் கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து, எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகிறது.

சித்து வல்லமை பெற்ற அருளம்பல சுவாமி அவர்கள் வரப்போவதை எதிர்வு கூறல், மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல், ஒரு நேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றை செய்யும் ஆற்றல் பெற்றிருந்திருக்கிறார். ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை.



அருளம்பல சுவாமிகள் ஞானந் தெளிந்த சித்தர். அதற்கு மேலாக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட கலைஞனாகவும் காணப்படுகிறார். நுணுக்கமும் நேர்த்த்pயும் கொண்ட அவரது பல கைவினைப் பொருட்களான மண்விளக்கு, சட்டி, செம்பு போன்றவற்றை அவரின் பரம்பரையினர் வதிரியில் பேணி வந்ததை நேரில் கண்டுள்ளேன்.

அத்துடன் அவர் சிறந்த ஓவியராகவும் விளங்கியுள்ளார். எமது ஊரான வியாபாரிமூலை விநாயகர் ஆலய களஞ்சியசாலைக்கு முன்பாகவுள்ள வாகனசாலைச் சுவரில் செங்காவி கோட்டோவியமாக பக்த அடியார் ஒருவரின் சித்திரம் ஒன்றைச் சிறுவயதில் கண்டது மங்கிய கனவாக நினைவில் நிற்கிறது. அதேபோல வசந்த மண்டப சுவரிலும் அவர் வரைந்த தெய்வ ஓவியங்கள் இருந்திருக்கின்றன.

பேணப்பட வேண்டிய பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்கள் அவை. "..பாவியரைக் கரை சேர்க்கும் ஞானத் தோணியான"  அருளம்பல சுவாமிகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் கைவண்ணமான அவற்றை வெள்ளை அடித்து  மறையச் செய்த எமது பேதமையை எண்ணி மனங் கலங்குவார் எமது மண்ணின் பிற்கால ஓவியரான திரு.ஏ.கே. நடராஜா.

சித்தராக, கலைஞனாக, ஓவியனாக தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தவும் தவறவில்லை. தான் தெளிந்த ஆன்மீக அறிவையும் உணர்வையும் மக்களுக்கு ஊறச் செய்யும் முயற்சியாக கவிதையாகவும் உரைநடையிலும் அவர் படைத்தவை பல. பதின்னான்கிற்கு மேற்பட்ட இத்தகைய ஆக்கங்கள் உள்ளதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் கூறுகிறார். இவை படித்துப் பயன்பெற ஏற்றவை என்பதற்கு மேலாக ஆய்விற்குரிய ஆவணங்களாகவும் திகழ்கின்றன.

அருளம்பலம் சந்தேக நிவிர்த்தி, கற்புநிலை, அருவாச தேவ ஆரம், நாகை நீலலோசனி அம்மன் பேரில் தோத்திரம், நாகை நீலலோசனி அம்மன் ஊஞ்சல், கற்பு நிலைச் சுருக்கம், பழைய வேற்பாட்டுடன் படிக்கை, ஆதிபுராணம், ஆதிநீதி ஆகியவை கிடைக்கப் பெற்றதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் குறிப்படுகிறார். ஆநாதி போதம், சங்க வினாவிடை, சைவ வினாவிடை, தர்க்க சாஸ்திரம் ஆகியவை கிடைக்கப் பெறவில்லை.

இருந்தபோதும் எம்மிடையே விளைந்த அந்த ஞான ஒளியை நாம் உணரச் தாமதித்தபோது, தமிழகப் பாரதி எம் கண்ணைத் திறக்கத் தேவைப்பட்டான். நாகையிலிருந்த சுவாமிகள் வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயாவாரம், சிதம்பரம்,  காரைக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிற்கும் சென்றிருக்கிறார். பாரதி புதுவையில் மறைந்திருந்த காலத்திலேயே சுவாமிகளைச் சந்தித்துள்ளார்.

"..மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் யாழ்ப்பாணத்தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போது முன்னே கொண்டு
சரணடைந்த . . ."

என்று பாரதி அவரைப் பாடுகிறான். வேறு இரு பாடல்களிலும் இவரைத் தனது ஞானகுருவாகச் சுட்டிக் காட்டுகிறான்.

பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் இவர்தான் என 1960 களில் இ.மு.எ.ச ஆரவாரமாக விழா எடுத்துக் கொண்டாடியதன்; பின்னர் வெளியுலகில் மறக்கப்பட்டிருந்த அருளம்பல சுவாமிகளை, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவாண்மையுடன் ஆய்வு செய்து 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்' என நூலுருவில்; நிலை நிறுத்தியவர் பேராசிரியர் நா.ஞானகுமாரன்.

அவரின் தொடர்ந்த சலிக்காத தேடலும், தன்னலமற்ற பணியும் காரணமாக அருளம்பல சுவாமிகளின் சில படைப்புகள் இப்பொழுது நூல் வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

எம்.கே.முருகானந்தன்.