Tuesday, July 28, 2015

'Funny guy ! Are you doing well ?' - Dr.APJ last words



Funny guy! Are you doing well?” he said. I smiled back, “Yes”. 
 The last words :  Dr.APJ 

What a shocker it was to learn the sudden passing away of the 'missile man' Dr. APJ Abdul Kalam. The man with a vision, the man who empowered our dreams with wings of fire. Now we know how to live and how to die.
All From  Ponraj.vellaichamy ayya Face book...


Last day ....


Srijan Pal Singh (Face book )
What I will be remembered for.. my memory of the last day with the great Kalam sir...
It has been eight hours since we last talked – sleep eludes me and memories keep flushing down, sometimes as tears. Our day, 27th July, began at 12 noon, when we took our seats in the flight to Guhawati. Dr. Kalam was 1A and I was IC. He was wearing a dark colored “Kalam suit”, and I started off complimenting, “Nice color!” Little did I know this was going to be the last color I will see on him.

Long, 2.5 hours of flying in the monsoon weather. I hate turbulence, and he had mastered over them. Whenever he would see me go cold in shaking plane, he would just pull down the window pane and saw, “Now you don’t see any fear!”.
That was followed by another 2.5 hours of car drive to IIM Shillong. For these two legged trip of five hours we talked, discussed and debated. These were amongsthundreds of the long flights and longer drives we have been together over the last six years.
As each of them, this was as special too. Three incidents/discussions in particular will be “lasting memories of our last trip”. 

First, Dr. Kalam was absolutely worried about the attacks in Punjab. The loss of innocent lives left him filledwith sorrow. The topic of lecture at IIM Shillong was Creating a Livable Planet Earth. He related the incident to the topic and said, “it seems the man made forces are as big a threat to the livability of earth as pollution”. We discussed on how, if this trend of violence, pollution and reckless human action continues we will forced to leave earth. “Thirty years, at this rate, maybe”, he said. “You guys must do something about it… it is going to be your future world”

Our second discussion was more national. For the past two days, Dr. Kalam was worried that time and again Parliament, the supreme institution of democracy, was dysfunctional. He said, “I have seen two different governments in my tenure. I have seen more after that. This disruption just keeps happening. It is not right. I really need to find out a way to ensure that the parliament works on developmental politics.” He then asked me to prepare a surprise assignment question for the students at IIM Shillong, which he would give them only at the end of the lecture. He wanted to them to suggest three innovative ways to make the Parliament more productive and vibrant. Then, after a while he returned on it. “But how can ask them to give solutions if I don’t have any myself”. For the next one hour, we thwarted options after options, who come up with his recommendation over the issue. We wanted to include this discussion in our upcoming book, Advantage India. 

Third, was an experience from the beauty of his humility. We were in a convoy of 6-7 cars. Dr. Kalam and I were in the second car. Ahead us was an open gypsy with three soldiers in it. Two of them were sitting on either side and one lean guy was standing atop, holding his gun. One hour into the road journey, Dr. Kalam said, “Why is he standing? He will get tired. This is like punishment. Can you ask a wireless message to given that he may sit?” I had to convince him, he has been probably instructed to keep standing for better security. He did not relent. We tried radio messaging, that did not work. For the next 1.5 hours of the journey, he reminded me thrice to see if I can hand signal him to sit down. Finally, realizing there is little we can do – he told me, “I want to meet him and thank him”. Later, when we landed in IIM Shillong, I went inquiring through security people and got hold of the standing guy. I took him inside and Dr. Kalam greeted him. He shook his hand, said thank you buddy. “Are you tired? Would you like something to eat? I am sorry you had to stand so long because of me”. The young lean guard, draped in black cloth, was surprised at the treatment. 
He lost words, just said, “Sir, aapkeliye to 6 ghantebhikhaderahenge”.
After this, we went to the lecture hall. He did not want to be late for the lecture. “Students should never be made to wait”, he always said. I quickly set up his mike, briefed on final lecture and took position on the computers. As I pinned his mike, he smiled and said, “Funny guy! Are you doing well?” ‘Funny guy’, when said by Kalam could mean a variety of things, depending on the tone and your own assessment. It could mean, you have done well, you have messed up something, you should listen to him or just that you have been plain naïve or he was just being jovial. Over six years I had learnt to interpret Funny Guy like the back of my palm. This time it was the last case. 

“Funny guy! Are you doing well?” he said. I smiled back, “Yes”. Those were the last words he said. Two minutes into the speech, sitting behind him, I heard a long pause after completing one sentence. I looked at him, he fell down. 

We picked him up. As the doctor rushed, we tried whatever we could. I will never forget the look in his three-quarter closed eyes and I held his head with one hand and tried reviving with whatever I could. His hands clenched, curled onto my finger. There was stillness on his face and those wise eyes were motionlessly radiating wisdom. He never said a word. He did not show pain, only purpose was visible. 

In five minutes we were in the nearest hospital. In another few minutes the they indicated the missile man had flown away, forever. I touched his feet, one last time. Adieu old friend! Grand mentor! See you in my thoughts and meet in the next birth.
As turned back, a closet of thoughts opened. 
[ Dr. Kalams handbag placed where it always is supposed be. I put it there & he never came back for it ]

Often he would ask me, “You are young, decide what will like to be remembered for?” I kept thinking of new impressive answers, till one day I gave up and resorted to tit-for-tat. I asked him back, “First you tell me, what will you like to be remembered for? President, Scientist, Writer, Missile man, India 2020, Target 3 billion…. What?” I thought I had made the question easier by giving options, but he sprang on me a surprise. “Teacher”, he said.
Then something he said two weeks back when we were discussing about his missile time friends. He said, “Children need to take care of their parents. It is sad that sometimes this is not happening”. He paused and said, “Two things. Elders must also do. Never leave wealth at your deathbed – that leaves a fighting family. Second, one is blessed is one can die working, standing tall without any long drawn ailing. Goodbyes should be short, really short”. 

Today, I look back – he took the final journey, teaching, what he always wanted to be remembered doing. And, till his final moment he was standing, working and lecturing. He left us, as a great teacher, standing tall. He leaves the world with nothing accumulated in his account but loads of wishes and love of people. He was a successful, even in his end.
Will miss all the lunches and dinners we had together, will miss all the times you surprised me with your humility and startled me with your curiosity, will miss the lessons of life you taught in action and words, will miss our struggles to race to make into flights, our trips, our long debates. You gave me dreams, you showed me dreams need to be impossible, for anything else is a compromise to my own ability. The man is gone, the mission lives on. Long live Kalam.
Your indebted student,
Srijan Pal Singh
(pic .. Dr APJ Abdul Kalam meeting the jawan who stood in the gypsy)










Tuesday, July 21, 2015

வாராஹி நவராத்திரி - ஆஷாட நவராத்திரி

(12.07.2018 - 20.07.2018)

அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறை சாக்த வழிபாடு. சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.
வாராஹி நவராத்திரி - ஆஷாட நவராத்திரி 
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.
12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.
அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் :வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி .(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
வசந்த நவராத்திரி யை கடந்த பதிவுகளில் கண்டோம்.
இங்கு ஆஷாட நவராத்திரி பற்றிக் காண்போம்.

வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம்.
பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.
இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.
பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது.
வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.
வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.
வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.
வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.
ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.





















முதலாம் நாள் இந்திரா தேவி (ஐந்த்ரி)
இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)
மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)
நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)
ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)
ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா)
ஏழாம் நாள் சாகம்பரி தேவி
எட்டாம் நாள் வராகி தேவி
ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி
நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ஆலயம் கொண்டமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகின்றாள்.
சாக்த சாஸ்திரத்தின் படியும், வேதோக்தமாகவும் வைதீக கிரமமாகவும் பூஜைகள் நடைபெறும் ஆலயம்.
இந்த ஆலயத்தில், அம்பிகைக்கு உண்டான பண்டிகைகளான வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி போன்றவை கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

ஆஷாட நவராத்திரியின், ஒன்பது தினங்களிலும், காலை வேளையில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், மாலை வேளையில் அம்பிகைக்கு உரிய நவாவரண பூஜை, மஹா தீபாராதனையும் நடைபெற இருக்கின்றது.

சிறப்பு நிகழ்வாக தானியங்களை காக்கும் அம்பிகையை வழிபடும் வகையில், தானியங்கள் கொண்டு கோலங்கள் (தானிய ரங்கோலி) இடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
மாலை வேளையில் வாராஹி தேவிக்குரிய ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற இருக்கின்றது.

ஆஷாட நவராத்திரியில் அம்பிகையை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.



Also visit : 
மணிராஜ்: வாராஹி நவராத்திரி
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்  உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா  வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே  செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.    
Preview by Yahoo


வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு.

சிவனின் பாகம் சத்தி. சத்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.

  • அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி
  • இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது.
வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம். வழக்குகளில் வெற்றி பெற (பகை அழிக்க) வராகியை பஞ்சமி திதி அன்று தேங்காயில் நெய் ஊற்றி விளக்குப் போட்டு வழிபடுவர்.
இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

  • பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.
பகைவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்குக எனக் கேட்டுக்கொள்ளும் 10 பாடல்கள் இதில் பிற்காலத்தில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன.
பாடல்கள் சிறந்த நடையில் அமைந்துள்ளன. பாடல்கள் பின் வருமாறு.

 ஸ்ரீ வாராஹி மாலை

1.  

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
2.  
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3.  
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வராஹி பகைஞரையே.
4.  
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5.  
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி  வராஹிநீலி தொழில் இதுவே.
6.  
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வராஹிஎன் நாரணியே.
7.  
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள்  வராஹியை வாழ்த்திலரே.
8.  
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9.  
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
10.  
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11.  
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள்  வராஹி சிவசக்தியே.
12.  
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராஹிஎன் நெஞ்சகத்தே
13.  
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள்  வராஹி குலதெய்வமே.
14.  
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வராஹிஎன் மெய்த் தெய்வமே.
15.  
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள்  வராஹி மலர்க்கொடியே
16.  
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
17.  
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18.  
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. 
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.
20.  
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21.  
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.
22.  
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23. 
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
24.  
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25.  
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26.  
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.
27.  
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய்  வராஹிநற் பொற்கொடியே.
28.  
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வராஹிஎன் நிர்க்குணியே.
29. 
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய்  வராஹி குலதெய்வமே.
30.  
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராஹி எனும்தெய்வமே.
31.  
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
32.  
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
வாராஹி

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

 



Thank :- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪                                     
  

Saturday, July 18, 2015

Muthupettai dargha




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னர்ரஹிம்அஸ்ஸலாமு அலைக்கும்உலக மருத்துவ கலாநிதி மாமேதை ஹஜரத் ஹக்கீம்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ்-முத்துப்பேட்டை
     அனைத்துப் புகழும் அகிலத்தாரின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது


(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற நிறைந்த அன்புடையோன்(அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி (எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் (நடத்துவாயாக) (அது உன்) கோபத்துக்குள்ளானோர்களின் வழியுமல்ல நேர்வழி தவறியோர் வழியமல்ல.
nvix0 391d37bc688c0465af9d860dda0e57fd resize

வரலாறு
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா மேன்மை தங்கிய மஹான் ஹக்கீமுல் ஹூக்கமா செய்யிதினா ஷெய்குல் அஃலம் குத்பேரப்பானி ஆரிபு பில்லாஹி வஷ்ஷெய்கு சமதானி அஷ்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டவர்கள் அடக்மதாகி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகத்துவமிக்க ஒரு மாபெரும் புனித ஸ்தலமாகும். மஹான் அவர்களை கருணை வள்ளல்இ காரணக்கடல்இமருத்துவ வேந்தர் என்ற சிறப்பு சொற்களால் மக்கள் போற்றி வருகிறார்கள்.தர்ஹா ஜாம்புவானோடை கிராமத்தில் அமைந்திருந்தாலும் உலக மக்களால் முத்துப்பேட்டை தர்ஹா என போற்றி வரப்படுகிறது   

மஹான் அவர்களின் அருள் வேண்டி உலகின் பல பகுதிகளிளிலிருந்தும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சவுதிஅரேபியா, இலங்கை, அமெரிக்கா, குவைத், துபாய் முதலிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து அருள் பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றார்கள். தீராத நோய்களும், ஓடாத பேய்களும் மருந்துகளுக்கும் மந்திரங்களுக்கும் கட்டுப்படாத மனக்குழப்பங்களும் மனிதர்களை நிலைத் தடுமாறச் செய்திடும் வஞ்சினை, செய்வினை, ஏவல்,பில்லி, சூனியங்களும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் மஹான் அவர்களின் பேரருளால் தீர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இது ஏதாவது ஒரு நாள் மட்டும் நிகழ்வு அல்ல அன்றாடம் நடக்கும் அற்புத நிகழ்வுகள் ஆகும்.
 
மேன்மை தங்கிய மஹான் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்கள் நபி மூஸா(அலை) அவர்களின் கவ்மில் இஸ்ராயில் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜாம்புவானோடை கிராமம் அடர்;ந்த புதர்களால், மண்டிய மரம், செடி, கொடிகயாலும் நிறைந்த காடு ஆகம். இப்பகுதி மக்களால் இன்றும் கூட அக்கரைக்காடு என்று இதை அழைப்பது உண்டு. காடுகளை அழித்து விவசாயம் செய்ய முனைந்த கருப்பையாக் கோனார் எருது பூட்டி உழுதழட இரத்தம் பீரிட்டு அடித்து, கண்பார்வையற்று மயங்கி மூர்ச்சையாகிவிடுகிறார். உடனே பாவா அவர்களுடைய தரிசனமும் அசிரீரி வாக்கும் அவருக்கு கிடைக்கிறது. நான் ஒரு இஸ்லாமிய இறை நேசர். எனது பெயர் ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ். நீர் ஏர் உழுத இடத்தில் தான் நான் அடக்கமாகி இருக்கிறேன், கவலைப்படவேண்டாம். மயக்கம் நீங்கி பார்வை தெரியும். உடனடியாக நாச்சிக்குளம் சென்று அங்கு எனக்கு பணிவிடைகள் செய்வதற்காக காத்திருப்பவர்களை அழைத்து வாரும் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் கோனாரின் மனைவி உணவு எடுத்து  வந்து சேருகிறார். ஏர் அப்படியே இருக்கிறது. கணவர் கீழே விழுந்து கிடக்கிறார். முகத்தில் இரத்தம் வழிகிறது. அதிர்ச்சியோடு கணவரை உசுப்புனிறார். நினைவு திரும்பிய கோனார் உழுந்து நடந்த விபரங்களை சொல்கிறார். அங்கே இரு இஸ்லாமிய சகோதரர்கள் இவர்களை எதிர்பார்த்து தயாராக இருக்கிறார்கள். நடந்த விபரத்தை அவர்களிடம் சொல்லும் முன்பே இந்த விபரங்களை பாவா அவர்கள் தங்களிடம் அறிவித்து விட்டதாக சொல்லி கோனாரோடு ஜாம்புவானோடை வந்து சேர்ந்த போது நிலத்தில் ஏர் உழுத அடையாளம் எல்லாம் மறைந்து கபுர்(சமாதி) கூட்டப்பட்டு கால்மாடு தலமாடு அடையாளத்திற்கு இரண்டு எலுமிச்சம் பழங்களும் வைக்கப்பட்டு இருக்கிறது. நாச்சிக்குளத்திலிருந்து வந்த கான் சகோதரர்கள் பத்தி கொளுத்தி, சாமிபிராணி போட்டு, விளக்கு ஏற்றி கபுருக்கு போர்வை போர்த்தி பாத்திஹா யாசின் ஓதி துஆ செய்து கபுருக்கு மேல் கீற்றுக்கொட்டகை போட்டு பகல் நேரங்களில் மட்டும் வந்திருந்துவிட்டு இரவில் விளக்கு ஏற்றிவைத்து விட்டு சென்று கொண்டு இருந்துள்ளார்கள்.
 
சில வருடங்கள் கழித்து இவ்வழியாக தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் தனது பரிவாரங்களுடன் வந்த போது ஆற்றங்கரையில் மன்னரின் பட்டத்து யானை கீழே விழுந்து படுத்துக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் எழும்பாமல் போகவே மஹான் பாவா அவர்களுடைய ஜியாரத்தில் இருந்து புனித சந்தனம் தப்ருக் (பிரசாதம்) எடுத்துச் சென்று யானையின் நெற்றியில் வைக்க, உடனே எழுந்து விடுகிறது. மஹான் அவர்களுடைய மகிமையையம், அற்புதத்தையும் அறிந்து வியந்த அரசர் தனது பரிவாரங்களுடன் நடந்தே வந்து பாவா அவர்களை வணங்கி மரியாதை செய்து பிரர்த்தித்து உடனடியாக தற்போது தர்ஹா அமைந்துள்ள இடம் உட்பட 51ஃ2 வேலி நிலத்தையும். ஷேக் தாவூது ஆண்டவர் தர்ஹா என்ற பெயரில் பட்டயம் போட்டுக் கொடுத்து சென்றுள்ளார்கள். இன்று அரசரின் யானை விழுந்த இடத்தை 'யானை வழுந்தான் கிடங்கு' என்று மக்களால் சொல்லப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக தர்ஹா கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தில் ஜமாத்துல் அவ்வல் பிறை 1-ல் கொடியேற்றமும், பிறை 10ல் சந்தனக்கூடும், பிறை 14ல் கொடி இறக்கமும் பெரிய ஹந்தூரி வழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உரூஸ் என்னும் பெரிய ஹந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான இந்து, முஸ்லீம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வரமுடியாதவர்கள் தங்களின் காணிக்கைகளை அஞ்சல் மூலமாக அனுப்பி கோரிக்கைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். மேன்மை தங்கிய பாவா அவர்களை நாகூர் ஆண்டவர் ஹஜரத் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களும், கீழக்கரை ஞானக்கடல் சதக்கத்துல்லா அப்பா அவர்களும். பல்லாக்கு தம்பி ஒலியுல்லாஹ் அவர்களும், பொதக்குடி நூர் முகம்மது ஷா வலியுல்லாஹ் அவர்களும் இன்னும் பல வலிமார்களும் தங்களின் ஹயாத்தோடு வந்து தரிசித்து சென்று இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.

மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்களின் சன்னிதானத்தில் நோய்வாய்ப்பட்டவர்களும், பேய்,பிசாசு பிடித்தவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் வஞ்சினை, செய்வினை, ஜின், சைத்தான், பில்லி, சூனியங்களால் பாதிக்கப்பட்டவர்களம் 11 நாட்கள், 41 நாட்கள் என நேர்த்தி கடனுக்கு தங்கி இருந்து நல்ல சுகம் பெற்று செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கழமை இiவு கிழமை இரவாக கருதப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து, முஸ்லீம் பக்தர்கள் வந்து இரவு தங்கி இருந்து காலையில் செல்கிறார்கள். இஸ்லாமிய வழக்கப்படி வெள்ளி இரவு என்பது வியாழன் மாலை 6 மணிக்கே தொடங்கிவிடும். அன்று முஸ்லீம்களைவிட இந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து தங்கி செல்வார்கள்.




மேன்மை தங்கிய பாவா அவர்களின் சன்னிதானத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கனவிலும், நினைவிலும் சுகம் அருளப்படுகிறது. அவர்களுடைய வியாதிகளுக்கு தகுந்தவாறு ஆப்ரேஷன் மூலமாகவும்வாய்வழியாகவும். கிளாஸ,; ஓடு, முடி, எலுமிச்சம்பழம் உருவங்கள் போன்றவைகள் எடுக்கப்படுவதை கண்கூடாக காணப்படுகிறது. தீராத நோய்களுக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு ஆப்ரேஷனும் மஹான் அவர்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற அற்டபுதங்களும் அதிசயங்களும் கற்பனைக்கு எட்டாத மனித அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் அல்லாஹ்வின் N பரருளால் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வலிமார்களுக்கு கராமாத்துகளை நிகழ்த்தும் வல்லமையை பேரருளாரின் அல்லாஹ் வழங்கி இருக்கிறான். அதனால்தான் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் புரியும் ஒரு அற்புத மருத்துவசாலையாகவும், அருள்மனம் கமழும் சோலையாகவும் அண்ணலின் பீடம் திகழ்கிறது. மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்கள் இங்கு அடக்கமாகிய நாள் தொட்டு இன்று வரை எண்ணலடங்கா அற்புதங்கள் பல நிகழ்ந்து வருகிறது.

தமிழகத்தின் கவர்னராக மேதகு கே.கே.ஷா அவர்கள் இருந்த பொழுது பாவா அவர்களை தரிசிக்கும் பொருட்டு இங்கு வந்து தர்ஹா ஷிஃபா குளம் எங்கே என்று கேட்டு தர்ஹாவுக்கு எதிர்புறம் அமைந்துள்ள புனித ஷிஃபா குளத்திற்கு சென்று கை, கால், முகம் கழுவி மூன்று மிடர் தண்ணீரும் குடித்துவிட்டு பாவா அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு உள்ளே சென்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பிரார்த்தனை செய்து விட்டு வெளியில் வந்து தனக்கு கிடைத்த ஆண்டவர்களின் அருளைப்பற்றி சொல்கிறார். ஹிந்து பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப்படித்து முத்துப்பேட்டை ஆண்டவரைப்பற்றியும் புனித ஷிஃபா குளம் மகிமை பற்றியும் தெரிந்து கொண்டேன். எனக்குள்ள குறை நீங்க வேண்டி இங்கு வந்து திருக்குளத்தின் நீரை பருகி அதில் கை, கால், முகம் கழுவி ஆண்டவரை கரிசித்தேன். இப்போது எனக்கு நல்ல சுகமும் பரம திருப்தியும் கிடைத்துவிட்டது. எனக்கூறிபோது கசர்னருடன் வந்த அதிகாரிகள் அனைவரும் குளத்திற்கு சென்று கை, கால், முகம் கழுவி தண்ணீரையும் குடித்து சென்றுள்ளார்கள் என்பது சமீப காலத்தில் நடந்த சம்பவமாகும். மேன்மை தங்கி பாவா அவர்களை நாடி வரக்கூடியவர்களக்கு பாவா அவர்களின் ஜியாரத்து கப்ரிலே பூசி இருக்கும் சந்தனமும், மேலே போடப்பட்டுள்ள பூவும், திருவிளக்கில் எரித்த எண்ணையும், புனித ஷிஃபா குளத்து தண்ணீரும் நோய்தீர்க்கும் அருமருந்துகளாக பயனபட்டு வருகிறது.
 
பாவா அவர்களின் ஜியாரத் 60 அடியாகும் ஜயாரத் கதவு தினமும் காலை சுபுஹூக்கு பாங்கு கொ:த்தவுடன் திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூடப்படுகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமை இரவும் மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னால் தாவூதியா மஜ்லிஸில் மௌலூது ஷரீப் ஓதப்படுகிறது. மேன்மை தங்கிய ஹக்கீம் செய்கு தாவூது காமில் வலியுல்லாஹ்  அவர்களை நாடிவரக்கூடியவர்கள். தங்களுடைய நாட்டங்கள் கபூலா நிய்யத்து வைத்துக்கொண்டு பாவா அவர்களின் புனித ஜீயாரத்திற்கு புனித முறாத ஹாசில் போர்வை போர்த்துவதுஅல்லாஹ் பெயரால் சதக்கா (தர்மம்) கொடுப்பதும் நீண்ட ஆயுளுக்காக வேண்டி அல்லாஹ் பெயரில் நிய்யத்து வைத்து. உயிரோடு ஆடு வாங்கி கொடுப்பதும், பாவா அவர்கள் கனவில் சொன்ன மிக முக்கிய காரியங்களாகும். இது தொன்று தொட்டு நடந்து வருவதோடு இதன் மூலம் அவர் அவர்களுடைய எண்ணங்களும் அல்லாஹ்வின் உதவியால் ஈடேறி வருகிறது. எந்த நிய்யத்தும் இல்லாவிட்டாலும் கூட பாவா அவர்களுக்கு மரியாதை செய்து சங்கை செய்யும் பொருட்டு புனித ஜியாரத்திற்கு புனித போர்வை போர்த்துவது ஏற்றமான செயலாகும். என்று பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் ஆமன்மை தங்கிய மஹான்ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்களின் கிருபை துஆ பரக்கத்தைக் கொண்டு நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், நோயற்ற நல்வாழ்வையும், சரீர சுகத்தையும், குன்றா நலத்தையும், ஈமானுடைய நூரையும், எல்லா வளத்தையும், ரஹ்மத்தையும் சிறப்பாக்கித் தந்து தொழில்கள், வியாபாரம், விவசாயம், உத்யோகம் முதலியவைகளில் மேன்மையையும் முன்னேற்றத்தையும் தந்து, கண் திஷ்டிகள், பொறாமைகள், போட்டிகள், ஜின். சைத்தான், பில்லி, சூனியங்கள் ஏவலபாடு, முசீபத்துகள், வஞ்சினை, செய்வினைகள் போன்ற எந்த விதமான முசீபத்துகளும், தீய சக்திகளும் அணுகாமல் காப்பாற்றி நிம்மதியாக நலமோடும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் இடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறோம்.
வல்ல ரஹ்மான் கபூல் செய்வானாக ஆமீன்


எஸ்.ரபீக் அஹமது லெப்பை
எஸ்.ராஜா முஹம்மது லெப்பை
த.பெ.கே.எஸ்.எம்.சேகனா லெப்பை
ரபீக் இல்லம்
ஹஜரத் ஹக்கீம் ஷெய்குதாவூது காமில்
வலியுல்லாஹ் தர்;ஹா ஷரிபு
முத்துப்பேட்டை-614 738
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு
செல்: 9943323483


History
The Muthupet Dargah is around 1000 years old and is believed to be one of the very old Muslim structures in the Indian sub continent. The dargah is also called as Jambavanodai Dargah. The story goes like this, while cultivating a land, Aayarkola Karuppaiah Konnaar, a local inmate and local personality, suddenly lost his eyesight. In the night, an old Arabi man came in his dreams and after waking up the Konnaar advised that the Arabi man was buried many years ago in the place where they were ploughing and hence lost his eye sight. The Arabi man asked him that he should visit Naachikullam to meet and inform his followers Kabir Khan and Hameed Khan about the same. Thus, he visited them and got back his eye sight. So powerful was this holy place. Oliyullah is the one who takes care of the desires and needs of devotees through their dreams. People who suffer from physical and mental illness, and also other different problems come to this Dargah to get it resolved. At about a distance of one km is the Mudhaliai Mudaku Dargah, which is called Fathima Natchiyaar Dargha. Many give different information and news about the sacred and powerful disposal of problems in this Dargah. 
https://www.indiamapped.com/dargahs-in-india/muthupet-dargah/

First Aadi friday


Yesterday First Aadi friday [17/07/2015 ) in Soorathamman Temple , New perungalathur chennai .. about   hrs one cow Praying Amma even rain too  ... 








Friday, July 17, 2015

"With a Silent Mind" - Jiddu Krishnamurti

"With a Silent Mind" - Jiddu Krishnamurti

An Introduction to His Life and Teachings (from 1990). For sixty years, Krishnamurti (1895-1986) was known throughout the world for his talks and publications in which his goal was to set humanity absolutely and unconditionally free. This film is a richly detailed biographical portrait of him and blends his own deep insights with the impressions of scientists, authors, educators, students and friends. Extraordinary archival footage from India, England and America in the 20s and 30s provides the background for his story. We follow Krishnamurti's initiations and education under Theosophist Annie Besant in preparation to become the next "world teacher" who according to tradition comes to earth every 2,000 years.








Renganatha Perumal, chennai ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சென்னை அருகிலேயே சேவிக்கலாம்


ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சென்னை அருகிலேயே சேவிக்கலாம்





தமிழ்நாட்டின் உத்திர ரங்கம்(வட ஸ்ரீ ரங்கம்) எனப்படும் ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் திருக்கோவில் சென்னை மீஞ்சூர் அடுத்த தேவதானம் எனும் இ டத்தில் அமைந்துள்ளது.
சாளக்ராமங்களை சேர்த்து சுதாபிம்ப ரங்கநாதர் 5அடி உயரமும் 18 அடி நீளமும் கொண்டு திருச்சி ஸ்ரீரங்கநாதரை விட நீளமாகவும் மிக பிரம்மாண்டமாகவும் சாளுக்கிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது.
1000 வருடங்கள் பழமையானக் கோவில்.
How to reach the temple
Take a Sub-Urban train from Chennai Central and get down at Minjur (27kms- 45minutes) – Gummudipoondi section. From Minjur, take a share auto/ mini bus on the Eastern Side just outside the station to reach the temple in about 20-30minutes
Bus 56D runs between Broadway ( Parrys Corner) and Minjur. 
It will take about 1 ½ hours to reach Minjur by bus from Chennai.
Quick Facts
Moolavar : Lord Ranganatha in Bhoga Sayanam facing East
Thaayar : Ranganayaki Thaayar
Time : 630am-12noon and 4pm-8pm
Priest : Sridhar Bhattar @ 97868 66895
 அன்புடன்  
<>KSR<>
"Every Sunrise Gives Us One Day More To Hope!!!"

-- 
Kindly visit https://amrithavarshini.proboards.com/ for reading more articles.

Monday, July 13, 2015

மகா கோதாவரி புஷ்கரம்


ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை ‘கோதாவரி புஷ் கரம்’ விழா நடைபெறுவது உண்டு. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடக்கும் ‘கும்ப மேளா’ போல ஆந்திராவில் நடக்கும் ‘கோதாவரி புஷ்கரம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது.

‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கையாகும். இறுதியாக கடந்த 2003–ம் ஆண்டு ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் ‘புஷ்கரம் விழா’ நடைபெற்றது.

அதன்பின் 12 ஆண்டுக்கு பிறகு தற்போது கோதாவரி புஷ்கரம் விழா ராஜமுந்திரியில் நடக்கிறது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதால் விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் கொண்டாடப்படுவது உண்டு. இதனை ‘ஆதி புஷ்கரம்’ என்றும் அழைப்பது உண்டு.

இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோதவரி ஆறு மராட்டிய மாநிலம் நாசிக்கில் உதயமாகி தெலுங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து வங்ககடலில் கலக்கிறது. எனவே கோதாவரி ஆறு பாயும் மராட்டியம், தெலுங்கானா, ஆந்திராவில் இந்த புஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

குருபகவான் நாளை (14–ந்தேதி) காலை 6.25 மணிக்கு கோதாவரி ஆற்றில் பிரவேசிக்கிறார். அந்த நேரத்தில் புனித நீராடுவது சிறப்பானது என கருதப்படுகிறது.

நாளை தொடங்கும் விழா வருகிற 25–ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.

மொத்தம் 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராட ராஜமுந்திரி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் வசதிக்காக ஆந்திரா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது.

கோதாவரி வரும் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். சிலர் கோதாவரி நதிக்கு ஆராதனை செய்வார்கள். இந்த பூஜைகள் நடத்த ஆந்திர அறநிலையத்துறை சார்பில் 4295 பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜமுந்திரியில் நாளைய முகூர்த்த நேரத்தில் காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி கோதாவரிக்கு ஆரத்தி எடுத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இதேபோல் கோவூர் கோஸ்பாத சேத்திரம் நதியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்கர நீராடுகிறார்.


ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலத்தில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும் கோவில்கள் வருமாறு:–

பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).