Monday, October 24, 2016

ஹோரைகள் தரும் பலன்கள்


---------------------------
சூரிய ஹோரை:
**************
செய்யக்கூடியவை:
--------------------------
இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் .
தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்
உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.
பத்திரங்கள் பார்க்கலாம்
சிவ தரிசனம் செய்யலாம் .
ஹோரைகள் தரும் பலன்கள்

செய்யகூடாதவை :
---------------------------
சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது
ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது

சந்திர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்

செய்ய கூடாதவை:
--------------------------
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.

செவ்வாய் ஹோரை
******************
செய்யக்கூடியவை :
-----------------------------
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .

செய்ய கூடாதவை:
--------------------------
கடன் வசூல் செய்ய போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .

புதன் ஹோரை
*************
செய்யக்கூடியவை :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம்.
ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம்.
வங்கியில் புது கணக்கு தொடங்கலாம்.
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் .
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.

செய்ய கூடாதவை:
--------------------------
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம்பற்றி பேச கூடாது.
சொத்துகளை பார்வையிடக்கூடாது.

குரு ஹோரை
*************
செய்யக்கூடியவை :
---------------------------
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை.
பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் .
வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்.
யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.

செய்ய கூடாதவை:
---------------------------
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது.
புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது.


சுக்கிர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம்.

செய்ய கூடாதவை:
---------------------------
நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது.


சனி ஹோரை
************
செய்யக்கூடியவை :
--------------------------
சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம்.
செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.

செய்ய கூடாதவை:
---------------------------
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது.
முதல் முதலாக பிறந்த குழந்தையை
போய்ப்பார்க்க கூடாது .
துக்கம் விசாரிக்க கூடாது.


தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்.

Image result for horai calculator

Horai Calculator ( with sunriseing  )
www.agasthiar.org/panchang/horai/horai.htm


ஹோரை அல்லது ஓரை என்பது என்ன?
ஹோரை என்பதஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம்.
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.   சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.
அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.
இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.
 6 – 1- 8 – 3 
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.  காலை 6 மணிக்கு  வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும்  , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.
சூரிய ஓரை : 
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல்,  போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.
இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சுக்கிர ஓரை  :   
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
புதன் ஓரை  :  
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள்  விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
சந்திர ஓரை : 
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
சனி ஓரை : 
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு  நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக  சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
குரு ஓரை  :  எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.
செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.  செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
===================================================
மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும்.  ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை…
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
tags : graha horai, horai, orai timing, orai, graha orai, கிரஹ ஓரை, ஓரை, ஹோரை, ஹோரை நேரம், ஓரை நேரம், கிரஹ ஓரை அட்டவணை, graha horai chart,  கிரஹ ஹோரை அட்டவணை,செவ்வாய் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சூரிய ஓரை, சனி ஓரை, சந்திர ஓரை,

ஃபேஸ்புக் ரிப்ளை

Tuesday, October 18, 2016

Sabarimala Virtual Q Coupons 2016 - 2017


உங்கள் சபரிமலை பயணம் திட்டமிடுகிறீர்கள் ...
E-கூப்பன்கள் முன்பதிவு 16/11/2016 -11/01/2017

Plan your sabarimala journey ...
Booking  Coupons  dates open from  16/11/2016 to 11/01/2017

Sabarimala Temple Opening & Closing 2016-2017

Book Virtual Q Coupons here
https://www.sabarimalaq.com/



























How to reach Sabarimala Temple
Please note all details only up to Pamba, one has to walk steep hill Neelimala around 7 Kms. In fact many people prefer walking right from Erumeli 42 Kms to reach Sabarimala. The joy of reaching Sabarimala thru this long walk gives immense pleasure once it is reached. Without pain not much gain. May be that is the hidden agenda of Sabarima pilgrimage.







Virtual Tour of Sabarimala Temple p4panorama

Rare photo of Sabarimala Temple taken by Shri. Utrradam Thirunal Marthand Varma in 1942 when he came to sabrimala with his brother King Shri. Chitra Thirunal Balarama Varma Maharaja.




Sunday, October 9, 2016

ஸ்ரீ சரஸ்வதி கோயில்

ஸ்ரீசரஸ்வதிதேவி சந்நிதிகள் கோயில்

saraswathi-image
* வேலூர்- தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் திருக்கோயிலில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவுக்கு எதிரில் கலைமகள் காட்சி தருகிறாள். 

* கும்பகோணம் அருகில் உள்ள திருவீழிமிழலை திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்திரி ஆகிய மூன்று தேவியரும் தனித்தனியே சிவ லிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்த னர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகள் முறையே சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என அழைக்கப்படுகின்றன. 


* குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதிதேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு. 

* கங்கை கொண்ட சோழபுரம் பெரியகோயிலின் வடக்கு வாசல் மாடத்தில், நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் மேற்குத் திசை நோக்கி அமர்ந்த நிலையில் ஞானசரஸ்வதி என்ற பெயரில் அழகிய சிற்பம் உள்ளது. 

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் சரஸ்வதியை தரிசிக்கலாம். மேலும் கீழமாட வீதியில் கோமதி அம்மன் கோயிலிலும், தனிச் சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி அருள் புரிகிறாள். 

* தஞ்சாவூர் பெரிய கோயில் தென்புற வாயிலின் மேல் திசையில் இரு கரங்கள் கொண்ட சரஸ்வதி சிற்பம் உள்ளது. 

* தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். மேலிரண்டு கரங்களில் அட்சமாலை- சுவடியும், முன்னிரு கரங்களில் அபய, ஊரு முத்திரையுடனும் விளங்குகிறாள். 

* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண் ஒன்றில் சரஸ்வதியின் திருவுருவம் நின்ற நிலையில், கையில் வீணையுடன் உள்ளது. 

* வேதாரண்யம் திருத்தலத்தில் அருள் புரியும் சரஸ்வதிக்கு வீணை கிடையாது. யாழைப் பழித்த மொழியாள் எனும் அம்பிகையை நோக்கி சரஸ்வதி தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். 

* தஞ்சாவூர்- திருவையாறு சாலையில் உள்ள திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயக் கருவறையில் நான்கு திருக்கரங்கள் கொண்ட சரஸ்வதி, பிரம்மாவுடன் இணைந்து காட்சி தருகிறாள். அற்புதமான திருக்கோலம் இது! 

* திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோயிலில் பிரம்மா சந்நிதிக்கு இடப் புறம் சரஸ்வதிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அட்சமாலையும், ஓலைச் சுவடியும் ஏந்தி அபய- வரத முத்திரை தாங்கி, தெற்கு திசை நோக்கி சுகாசன கோலத்தில் கலைமகள் அருள் புரிகிறாள். கையில் வீணை இல்லாத இவளை, ஞானசரஸ்வதி என்று போற்றுகிறார்கள்.

* கங்கை கொண்ட சோழபுரம், திருக்கோடிக்காவல் ஆகிய திருத்தலங்களிலும், சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் அருள் புரிகிறாள். 

* காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதிக்குத் தனிச் சந்நிதி உண்டு. இவளை ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருத்தியான சியாமளா தேவி சொரூபமாக வணங்குகிறார்கள். இந்த சரஸ்வதி எட்டுக் கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், மலரம்பு, கரும்பு, வில் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். 

* கும்பகோணம்- காரைக்கால் சாலையில் உள்ள கூத்தனூர் திருத்தலத்தில் சரஸ்வதிக்கு தனிக் கோயில் உள்ளது. இங்கு தவக்கோலத்தில் வெள்ளைத் தாமரையில் பத்மாசன கோலத்தில் அமர்ந்து ஞானசொரூபமாகக் காட்சி தருகிறாள் சரஸ்வதி.


Saturday, October 8, 2016

50th Thiruvannamalai Dwadashi Annadanam (துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் )


This'll be our 50 th month Dwadashi Annadanam

On 13.10.2016    at Thavathiru thiru padha swamigal  'Sathguru Chadaiswamy Ashram' at Palamaram cave Thiruvannamalai https://sadhanandaswamigal.blogspot.in/2012/11/thiruvannamalai-dwadashi-annadanam.html ]   to Sadhus who living in annamalai hill side. 


How Annamalai call me to do this Dvadashi Annadanam ?

MysticSelvam Ayya , one of his book he told this information , after that I saw same information in www.aanmigakkadal.com  site also.

Three month before one of my blog follower asked me about this , on Aug 7 2012 new comer came to my house ( My daughter Srividya ) at that time www.aanmigakkadal.com editor wish my daughter and asked me to do “ Dvadashi Tithi Annadanam”in Thiruvannamalai  .

First week of September my friend call me said ‘ I got information about “ Dvadashi Tithi Annadanam” ‘ , I also explain about this to him. After that we decided to start this event  monthly in ‘Valarpirai Dwadashi Tithi’. 

 With in 25 day's we stated first Dvadashi Tithi Annadanam On 26/09/2012 with my Guru Wish “ Srimat Sadhananda Swamigal “ and Mystic Selvam Ayya , our Group stated  first Dvadashi Tithi Annadanam to Sadhus who living in girivalam way at Thiruvannamalai   .

With lord Annamalaiyar wish we want to do this service regularly thisThiruvannamalai Dvadashi Annadanam (துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் )



Why we want to do “Dvadashi Tithi Annadanam” ?

  1. MysticSelvam Ayya - ‘SivaMahapuranam‘

       One of my Guru MysticSelvam Ayya written in his Book “ When we give feast for 1,00,000 people, it is equal to do one Sadhu in Kasi, but same time when we give 1,00,000 Sadhu in Kasi , it is equal to do one Sadhu in Thiruvannamalai for 3 times in a day  [ ie Breakfast , Lunch and Dinner ] on Dvadashi Tithi . it will clearing our forefather & our karma in this life time itself , This information inSivaMahapuranam‘ old book ”.


2. AdiSankara - 'Kanakadhara Stotram'

              As pr the practice the brahmachari has to go from house to house and take alms and submit this to his guru. On a Dwadasi day AdiSankara happened to go to the house of a very poor lady jand asked for the alms. The lady did not have a single grain of rice in her house to give. However she had kept a single Amla fruit for herself as it was a Dwadasi day. She unhesitatingly gave this Amla fruit to Sankara as she could not send a Brahmachari empty handed. Sankara was moved by her selflessness and the poverty of the lady and prayed to Goddess Lakshmi in a beautiful sloka which is called'Kanakadara Stotram'. On completion of this stotram, Goddess Lakshmi appeared in person and showered a rain of golden coins on the poor lady's house.





start with Mahadeva pooja All Sadhus are see like GOD ,We Decorated with flowers  on their head and offer food with kanikkai [ money ] and do puja to all Sadhu and we asked them to take food... ] 


 Thank and regards




5th Head Thavathiru Thirupatha Swamigal 






Old Palamaram tree


All Sadhus waiting for feast 

 offer food with kanikkai [ money ]

Monday, October 3, 2016

Thiruvannamalai Gnana Ulaa திருவண்ணாமலை அருணாச்சல ஞானஉலா 20-11-2016

திருவண்ணாமலை அருணாச்சல ஞானஉலா

ஞான உலா எதர்கு ? 

* சிவாய நம! அடியார்கள் தரிசனம்! சிவ தரிசனம்!

வருகின்ற 20/11/2016. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலையில்  சிவனடியார்கள் சங்கமிக்கும் அருணாச்சல ஞானஉலா! திருவாசக முற்றோதுதலோடு 14 கிலோ மீட்டர் கிரிவலம் நடைபெறுகின்றது. 

இவ்விழாவில் மாணிக்க வாசகப் பெருமான் புறப்பாட்டில் கிரிவல பாதை முழுவதும் குங்கிலிய புகை மணக்க, கைலாய வாத்தியம் முழங்க அடியார்கள் புடைசூழ அருணாச்சல ஞானஉலா நடைபெறுகின்றது.


There are 10000000 more Siddhar in and around us, but now some of Soul Waiting for you in Thiruvannamalai …. 

 Our 4nd Annual event on 20-11-2016 [SUNDAY]  at ” Siva Siva mutt “ Gandhimathi ammal illam in Thiruvannamalai

Nandi Flag Hosted at 4.15 am Manickavasagar Athi maram [wooden] statue decorator with flowers carrying by Adiyar Thirukoottam for Girivalam at 4.30 am with blessing  our Guru  about 15 minutes “Kailayam vathiyam”  by Adyarkal play in front "Raja gopram " at 5.00 am and carrying Kungiliam smoke [sambrani smoke] Girivalam


 

Thiruvasakam Mutrotha by varies Adiyar Thirukoottam song Thiruvasakam while doing Girivalam ..


first event 2012 : 2012 girivalam-with-panniru-thirumurai.html https://goo.gl/BBjYqV

lst year event Video 2013 ( https://goo.gl/FF9KI2 .. )

2ed year event 2014 https://goo.gl/wP9k6K

3ed year event 2015 https://goo.gl/Qv4Xjg





All are welcome to this event ....

Thanks & Regards

Harimanikandan .V

ஹரிமணிகண்டன்