Thursday, July 9, 2026

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பள்ளியறை பூஜை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் .thank FB

வாழ்க்கையில் ஒருமுறையேனும்
கண்ணார காண வேண்டிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை! 
அங்கயர்கண்ணி அன்னை மீனாட்சி நாள் தோறும் பல பூஜைகளையும் பல தரபட்ட அலங்காரங்களும் தந்தருள்கிறாள்.

திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது. 

ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை.

வருடத்தில் 5 தினங்கள் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தாலும் சுவாமியும், அம்மனும் திரும்பி இந்த பூஜையில் நிச்சயமாக அருள்பாலிக்கின்றனர்.

சிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இரவு வெகுநேரம் நடை திறந்திருந்தாலும் அதிகாலை 3-4 மணியளவில் இப்பூஜைகள் நடக்கும்.

அதே போல் தெப்பதிருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்து குமரனுக்கு திருக்கல்யாண உற்சவநாளுக்கும் முதல் நாள் இரவே இப்பூஜைகளை  இரவு முழூவதும் பக்தர்களுக்கு காண அருள் பாலிக்கின்றனர்.

எல்லாகோவிலிலும் முதலில் சுவாமிக்கு தான் தீபஆராதனை மற்றும் எல்லாவித பூஜைகள் செய்வர். ஆனால் மதுரையில் முதலில் அம்மனுக்கு தான் பூஜை செய்வது வழக்கம். இதற்க்கு 
பல வித காரணங்கள் உள்ளன.

1. மீனாட்சி அம்மன் முதலில் மதுரையை ஆண்ட சமயத்தில் எல்லா வித மரியாதைகளும் அவருக்கே முதலில் செய்யப்பட்டதாகவும் காலப்போக்கில் அதுவே வழி வழியாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது

2. மனைவியானவள் கணவனுக்கு முன்பாக எழுந்து தயாராகி கணவனுக்கு பணிவிடை செய்து எழுப்பவேண்டும் என்ற நியதியை கடைப்பிடிக்க இவ்வாறு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இரவு 8:00 மணியளவில் அம்மன் சன்னிதி திரையிடப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வெள்ளை மலர்களாலும், மற்றும் வெண்நிற பட்டு சாற்றியும் அருட்காட்சி தருவாள் அன்னை அங்கயர்கண்ணி.

மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

அவ்வாறு காட்சி தரும் அன்னையை தரிசித்தால் கையில் கிளியேந்திய கலைவாணி இவளே தான் என்றும் சிலர் சத்தியம் செய்து விடுவர், இவரே தான் அந்த வேதமாதாவோ என்றும் தோன்றக்கூடும்!

பள்ளியறை பூஜை:

முதல் நாள் இரவு சுவாமி தன் சன்னிதியில் இருந்து கிளம்பி வெளியே வருவார்! பிறகு கம்பத்தடி மண்டபத்திற்க்கு முன்னால் இருந்து, சமயக்குறவர்கள் சன்னிதியில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாடலிசைக்க பயணம் அம்மன் சன்னிதி நோக்கி தொடரும்.

பின் முக்கூருனி விநாயகருக்கு அருகில் தீபஆராதனையும் - அம்மன் சன்னிதி நுழைவாயிலில் பாதபூஜை நடக்கும். சுவாமி பல்லக்கில் இருந்த வாரே அம்மன் சன்னிதிக்குள் செல்வார், பிறகு திருமலை நாயக்கர் சன்னிதிக்கருகில் ஒரு முறை தீபாராதனை காட்டுவர், கடைசியாக பள்ளியறை எதிரில் இருக்கும் வாசல் வழியாக நேரே பள்ளியறைக்குச் செல்வார்.

பிறகு இரவு 9.15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் அம்மனுக்கு செய்யப்படும் கடைசி நேர இரவு தீபாரதனை பூஜையினை காண ஓடுவர்

அம்மனுக்கு செய்யும் இந்த தீபாரதனையில் மேலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் அம்மனுக்கு சூட்டபட்டிருக்கும் மூக்குதியானது எத்தனை தூரமாக நாம் நின்று கண்டாலும், மிகத் தெளிவாக தெரியும். காரணம் உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.

ஆகவே தான் இந்த மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர்.

அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். பலர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்க முடியவில்லை என்று சொல்வர், சிரமம் பார்க்காமல் இந்த பூஜைக்கு சென்றால் நிச்சயம் அம்மனை தரிசிக்க இயலும்.

பள்ளியறை பூஜை சமயம், ஓதுவார் ஒருவர்

"தேவ தேவோத்தமா 
தேவதா சர்வ தோமா 
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் எச்சரிகா! 
பார்வதிப் பிரிய நாயகா எச்சரிகா 
பாண்டியமண்டாலிதிபாஎச்சரிகா
சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"

என்று பராக் சொல்ல, பல்லக்கில் இருந்து திருவாச்சி சமேதமாக இருக்கும் சோமசுந்தர கடவுளின் பாதுகை பள்ளியறை நோக்கி செல்லும்!

(எச்சரிகை என்பது பராக் என்பதன் இன்னொரு வடிவம்!
அரசன் வருவதைக் குறிப்பிடுவது.
எச்சரிக ரா ராம, ஹே ராமச்சந்திரா என்ற தியாகராஜர் பாடலும் இதே வகை தான்)

பின் தீப தூப ஆராதனைகள் ஆரம்பமாகும்.

தீபங்களில் 16 வகை உண்டு.
தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்

ஆகிய 16 வகை தீபஆராதனைகள் செய்வித்து! அப்பனும் அம்மையும் உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பர்.

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

தீபஆராதனைகளனைத்தும் முடிந்தவுடன், கூடியிருக்கும் அடியார்கள்

"பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து! 
பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து! 
ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து 
கண்ணூஞ்சல் ஆடுகின்றாள் 
காஞ்சனமாலை
மயிலாள் பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...

பூலோக கைலாச,
பூலோக கைலாச 
புண்ணியமா ம மதுரா,
புண்ணியமா ம மதுரா 
ஆகாச சுந்தரேசா,
ஆகாச சுந்தரேசா 
சதானந்தமே கண்மலராய்!

இந்திரயங்கள் பூஜிக்க,
சங்கரியும் பூரித்து
மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி
தங்க கதவை மெல்ல சாற்றினாள்!"

என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி அப்பனும் அம்மையும் அருள்பாலித்து நடையை சாற்றுவர்!

ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சி அன்னையை தரிசிக்க வேண்டிய நேரங்கள்.

இச்சா-சக்தி(காலை பொழுதில் - 11.00 மணியளவில்).

கிரியா-சக்தி (மாலை பொழுதில் மாலை 4-4.30 மணியளவில்).

ஞான-சக்தியாக (இரவு பொழுதில் - 8.00 மணியளவில்).

(அன்னையின் சக்தியினை ஒவ்வொரு நாளும் 5 விதமாகச் சொல்லுவர். காலையில் மஹா ஷோடசி (திருவனந்தல்), பின்னர் ப்ராத சந்தியில் பாலை, பின்னர் உச்சிகாலத்தில் கெளரி, மாலையில் மாதங்கீ, இரவில் பஞ்சதசாக்ஷரி என்பதாக சாக்த ரூபங்களைக் கொள்வதாகச் சொல்வது வழக்கம். இதனால்தான் லலிதா பரமேஸ்வரி/பராசக்தியின் சகல கலைகளையும் கொண்டவளாக மீனாக்ஷியைச் சொல்வது வழக்கம்.)
#aarakadai #sankara #meenakshi #சுந்தரேஸ்வரர் #madurai #டிராவல் #டூரிஸ்ட் #meenkashisundareswarar #டெம்பிள் Voice of the people —suriyaprakash

Monday, January 19, 2026

முனீஸ்வரன் வரலாறு

ஸ்ரீ முனீஸ்வரர்

முனீஸ்வரன் வரலாறு  மற்றும் 
முனீஸ்வரன் மந்திரம்:
முனீஸ்வரன் காயத்ரி: 

 முனீஸ்வரன் ஈசன் அம்சமாக கருதப்படுவர் ஆவார். முனிவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் என பொருள்படும் மேலும் முனீஸ்வரன் வழிபாடு என்பது இன்று நேற்று அல்ல பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருக்கிறது கிராம காவல் தெய்வமாக மக்கள் வழிபாடு செய்கின்றனர். 

கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியப்பனி, முனியப்பர் எனவும் அழைத்து வழிபடுகின்றனர்

முனி என்றால் "ரிக் வேதத்தில்" "தெய்வ ஆவேசம் படைத்தவர்" என்றும், பயமற்றவர் என்றும் பொருள், நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயர்"பஞ்ச முனிகள்" அதாவது ஐந்து முனிகள், பச்சை அம்மனுக்கு காவலாக பூலோகம் வந்ததாக வரலாறு உண்டு. சில இடங்களில் சப்த முனிகள் உண்டு. ஈஸ்வர பட்டம் பெற்றவர் முனீஸ்வரர் ஆவர் இந்த முனீஸ்வரன், சிவ அம்சம் கூடியவர்.

முன்னொரு காலத்தில் "அந்தகாசுரன்" என்னும் அசுரன் தேவர்களையும், மக்களை வதைத்து, இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களை காக்கும் படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர், பார்வதி அம்மன் "காத்தாயி" என்ற பெயரில் பூமியில் அவதரித்து அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லடாமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வாழ்முனி,சட்டைமுனி, என்று ஏழு முனிகளை உருவாக்கி, அந்த ஏழு முனிகளும் சேர்ந்து அந்த நரகாசுரனை அடக்கி வதம் செய்தனர், பின்பு முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக மக்களை காக்க பூமிக்கு வந்தனர். 

பொதுவாக மக்களுக்கு முனீஸ்வரனை பற்றி நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உண்டு, இதில் உண்மை எது பொய் எது என்றும் குழப்பங்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை மற்றும் பூலோகம் உயிரினங்கள் -  புல் முதல் அண்டசராசரம் வரை படைத்த இறைவன் ஈஸ்வரன் ஆவான்.  பரமாத்மாவில் இருந்தே ஜீவாத்மா பிரிந்தது. அதுபோல் தான் முனீஸ்வரன் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சமே. கலியுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவும் மக்களை காக்கவும் வீர ஆவேசமாக அவதரித்தவரே "முனீஸ்வரன்" .

முனீஸ்வரன் வழிபாடு என்பது நம்மை காக்கும், ஆண்டி முதல் அரசன் வரை பாகுபாடின்றி வழிபாடும் தெய்வம் முனீஸ்வரன். கலியுகத்தில் ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு வழிபாடு செய்ய கூடிய  எளிய முறை உள்ள ஒரே வழிபாடு முனீஸ்வரன் வழிபாடு மட்டும் தான்.

எல்லா தரப்பு மக்களும் வழிபாடு செய்யவே கிராமங்கள் தோறும் சிறு ஆலயங்களிலும் முனிகள் வீற்றிருக்கின்றனர். 

சிவன, பெருமாள், அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு , இவர் தான்  காவலர் ஆவார். பெரிய ராஜகோபுரம் உள்ள கோவில்களிலும் முனீஸ்வரர்க்கு தனி சன்னதி உண்டு உதாரணமாக ஸ்ரீரங்கம் திருதலத்தில் ராஜா கோபுரத்தில் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. பல பெரிய தனி சன்னதிகளும் முனீஸ்வரன் காட்சி தருவதும் உண்டு இப்படி எல்லா இடங்களிலும் முனீஸ்வரன் வழிபாடு உண்டு. 

இவர் கனல் வீசும் கண் உடையவர், அருள் ஒளிரும் மேனி உடையவர், சகல சௌபாக்கியமும் தருபவர், நள்ளிரவில் கண்ட நெடிய வெண்புகை வடிவத்தில் வலம்வருபவர் என்று பல நம்பிக்கைகள் உண்டு. "நம்பினார் கெடுவதில்லை" என்ற வாக்கின் அடிப்படையில் நம்பி வழிபட்ட பலருக்கு முனீஸ்வரன் இப்படி காட்சி தந்த வரலாறுகள் நமது கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான கதைகள் உண்டு. 

நமது நாட்டில் மட்டுமல்ல "பர்மா" என்று அழைக்கப்பட்ட தற்போதைய "மியான்மர்" என்ற நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு பல லட்சம் தமிழர்கள் வசித்தனர். "ரங்கூன்" என்று அழைக்கப்பட்ட "யாங்கூன்" இருந்து சுமார் 1 மணி நேரப்பயணம் வருகிற ஊர் "பிலிக்கான்" அங்கே முனீஸ்வரர்க்கு அற்புதமான ஆலயம் உள்ளது. நீதி, நியாயம்  இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இந்த தேசத்து மக்கள் இவரை"ஜட்க் ஐயா" என்றே அழைக்கிறார்கள். 

பர்மா மட்டுமல்ல மலேஷியா, சிங்கப்பூர் சீனா, ஜப்பானிலும் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது.
இது சம்மந்தமான ஆராய்ச்சியில் உள்ளோம் தீர்க்கமாக. ஆராய்ச்சி செய்து தெளிந்த பின்பு உங்களுக்கும் தெரிவிக்கிறோம். 

மலேசியாவில் மட்டும் 500 இக்கும் மேற்பட்ட முனீஸ்வ்ர் கோவில்கள் உள்ளன.  Kuala Lumpur &  Penang உள்ள கோவில் விபரங்கள்  இதோ 

முனீஸ்வரன் மந்திரம்:
'ஓம் ஹம் ஜடா மகுடதராய 
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய 
சத்ரு சம்ஹாரனாயஜடா 
முனீஸ்வராய நமஹ.'

முனீஸ்வரன் காயத்ரி: 
" ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத் "
 

ஸ்ரீ  முனீஸ்வரர்  ஒருவர் தானா? சில கோவில்ல ஆக்ரோஷமா அருவா, சுருட்டு, சாராயத்தோட  இருக்கிறாரு, சில கோவில்ல சாந்தமா தவம் கோலத்தில்  இருக்கிறாரே!!!

நான்  செவி வழி செய்தியாக கேட்டுள்ளேன்  ஸ்ரீ முனீஸ்வரர் சைவம் என்று! எத்தனை ஸ்ரீ முனீஸ்வரர்  உள்ளார் ?

ஸ்ரீ முனியாண்டி   to   ஸ்ரீ முனிஸ்வரன்

அதி காலங்களில் முனியாண்டி என்றே அழைக்கப்பெற்றார், எப்படி சனி பகவான் “ஈஸ்வரன்” பட்டம் பெற்றாரோ அதே போல்  முனியாண்டியும் “ஈஸ்வரன்” பட்டம் பேற்று ஸ்ரீ முனீஸ்வரன் என்று போற்றப்பெற்று , எல்லா காவல் தெய்வங்களும் முதற் கடவுளாக இருக்கிறார்.
“ஈஸ்வரன்” -  இறைவன் அல்லது ஆட்சியாளர் என்று பொருள்.

பொதுவாக சொல்வது சப்த முனிகள்- எங்களுக்கு தெரிந்ததை இங்கே குறிப்பிட்டுளோம் 

1. வாழ்  முனி
2.  செம் முனி 
3. கரு முனி 
4. வேத முனி 
5. கும்ப முனி 
6. ஜடா முனி 
7. நாத முனி 
8. முத்து  முனி 
9. சிங்க முனி 
10. லாட முனி 
11. சன்னியாசி முனி 
  விளக்கமாக பார்ப்போம்

சப்த முனிகள் ......

ஸ்ரீ முனீஸ்வரர் ஒருவர் தானா? சில கோவில்ல ஆக்ரோஷமா அருவா, சுருட்டு, சாராயத்தோட இருக்கிறாரு, சில கோவில்ல சாந்தமா தவம் கோலத்தில் இருக்கிறாரே!!!

ஏழு என்ற எண்ணிக்கையில் உள்ள சப்த கன்னிகளை வழிபடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. 

அதே போல சப்த(7) முனிகளையும் அவரது 21 பரிவாரங்கள்  கொண்டாடும் மரபும், பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. 

சப்த முனிகள் 

1.ஜடா முனி 
2. வாழ்  முனி
3. தவ முனி 
4. நாத முனி 
5.  தர்ம முனி 
6. சிவ முனி 
7. மகா முனி

1. ஜடாமுனி

ரோம ரிஷியே ஜடாமுனியாக உள்ளார் என கூறப்படுகிறது. யோகப் பட்டை தரித்து, யோகாசனத்தில் பெரிய கூடைமுடிகளோடு இவர் காட்சி தருகிறார். அதிகமான ஜடைகளுடன் இருப்பதால், இவர் ‘ஜடாமுனி’ என வழங்கப்படுகிறார். குழந்தைகளுக்கு ஜடை விழுந்து முடி சிக்கலாகி விடும் போது இவருக்கு வேண்டிக் கொண்டு பயன்பெறுகின்றனர்.

2. வாழ்முனீ

அனைத்து பச்சையம்மன் ஆலயத்தில் மிகப்பெரிய வடிவத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் வாழ்முனீஸ்வரர். திருமாலின் மறுவடிவான இவர், அன்னை பார்வதிக்கு காவலராக விளங்குகிறார். வான் முட்டிய கோலத்தில் இருப்பதால் இவருக்கு ‘வான்முனி’ என்று பெயர். இதுவே மருவி ‘வாழ்முனி’யாக வழங்கப்படுகிறது.

உக்கிர மாமுனியான இவர், வலது கரத்தில் மேல் நோக்கிய நீண்ட வாளையும், இடதுகரத்தில் கீழ்நோக்கிய குத்து வாளான சலாகையும் ஏந்தியுள்ளார். ஊன்றிய வலது காலடியில் அக்னிவீரன் தலை உள்ளது. இவர் போரிட வரும் வீர ராட்சதனைக் கத்தியால் குத்திய கோலத்தில் அமர்ந்துள்ளார். அனைத்து முனிவர்களுக்கும் இவரே பிரதானம்.

குழந்தைக்கு உண்டாகும் பாலரிஷ்டங்கள் நீங்க, இவர் மடியில் குழந்தைகளைப் படுக்க வைத்து எடுப்பார்கள். இவருக்குச் சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை விலகும். மேன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

3. தவ முனி
தவமுனி - அசுரர்களால்  தேவர்கள் மற்றும் ரிஷிகளின் யாகத்திற்கு நிறைய தடைகள் வந்தமையால், அவர்களுக்கு பாதுகாப்பிற்கும், அவர்கள்   பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கவும்  தவ முனி உறுதுணையாக இருந்தார். வெண்ணிற தாடியுடன் காணப்படுவர்.

4. நாதமுனி
இசையில் சிறந்து விளங்கும் நாரதரே ‘நாதமுனி’யாகக் கருதப்படுகிறார். முதுகில் நீண்ட சடை, எடுத்துக் கட்டிய ஜடாமகுடத்துடன், கையில் மகர யாழை இசைக்கும் தோற்றத்தில் இவர் காணப்படுகிறார். இவருக்கு விலங்கு போட்டு வைத்திருப்பார்கள். ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்றாலும், பூமியிலும் அவர் ஏதும் கலகம் செய்யாமல் தடுக்கும் நோக்கில், இந்த முனிக்கு விலங்கு பூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர் துடிப்பாகவும், அச்ச மூட்டுபவராகவும் இருப்பதால் இவரை விலங்கு பூட்டி வைத்துள்ளதாகவும் மற்றொரு காரணம் கூறப்படுகிறது. இவரிடம் வேண்டி குழந்தைப்பேறு பெற்றவர்கள் பிறந்த குழந்தைக்கு நாதமுனி என பெயர் சூட்டி மகிழ்கின்றனர். இவருக்கு ‘பூவிலங்கு முனி’ என்ற பெயரும் உண்டு.

5. தர்ம முனி 

தர்மமுனி என்பவர் , தர்மத்தை  நிலை நிறுத்தவும், நல்லதை  நடத்துவதற்கும், மக்களை  பாதுகாப்பவர் மற்றும் தீமையை அழிப்பவர்.
6. சிவன முனி
சிவ முனி- அவர் சிவனின் முகத்திலிருந்து தோன்றியதால் அவருக்கு சிவமுனி வடிவம் கிடைத்தது.
7. மகா முனி - அளவிட முடியாத தெய்வீக சக்தியைக் கொண்டிருந்த மகாமுனியாக ஆனார்.

21  பரிவார முனிகள்
சப்த முனிகளை பற்றி பார்த்தோம், இந்த பதிவில்  21 பரிவார முனிகளை பற்றி பார்ப்போம்

21  பரிவார முனிகள்

1.முனியாண்டி
2. பாண்டிமுனி
3. செம்முனி
4. கருமுனி
5.கொடுமுனி
6. தங்கமுனி
7. வேதமுனி
8. முத்துமுனி
9. லாட முனி
10. சத்திய முனி
11. சந்தனமுனி
12. கோரைமுனி
13. கொங்குமுனி
14. யோகமுனி
15. பாலயமுனி
16. கோட்டமுனி
17. பந்தள முனி
18.அக்னிமுனி
19. ராஜமுனி
20.சாமா / சலேமுனி
21. நொண்டிமுனி

செம்முனி, கருமுனி

இவர் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, பச்சையம்மனுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறார். வாழ்முனிக்கு அடுத்த நிலையில் இருக்கும் முனிகள், செம்முனி - கருமுனிகளாகும். கருமுனி, பெயருக்கு ஏற்றபடி கருமை நிறத்திலும், செம்முனி, செந்நிறத்துடனும் காட்சி தருகின்றனர். இவர்கள் நீண்ட வாளையும், சலாகையும் ஏந்தி காட்சி தருகின்றனர் இவர்கள் மந்திர தந்திரங்களில் சிறந்தவர்களாகவும், பக்தர்கள் வாழ்வில் வளத்தை அளிப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். மேலைக் கடலோரத்து செம்மலை, கருமலையில் இருந்து இவர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மக்களைக் காக்கவும், பச்சையம்மனுக்கு காவலராக நிற்கவும், சிவபெருமானின் அம்சங்களாக கருமுனி, செம்முனிகள் பூமிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காலடியில் தீயகுணம் கொண்ட மந்திரவாதிகளின் தலைகளைக் காணலாம்.

வேதமுனி

இவர் தன் கைகளில் ஏடுகளைத் தாங்கி, வேத நூல்களை பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தில் காணப்படுவார். வேத நூல்களை கற்பவர் என்பதால், ‘வேதமுனி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஜடாமண்டலத்துடன் பிரமாண்ட மீசையும் கொண்டு காட்சி தருகிறார். இவர் வாழ்வில் நல்வழி காட்டுபவராக புகழப்படுகிறார்.

கும்பமுனி

கும்பத்தில் தோன்றிய முனிவர் அகத்தியர். இந்த அகத்தியரின் மறுவடிவமே கும்பமுனி ஆகும். அகத்தியரைப் போலவே, உருவத்தில் குள்ளமானவராக இவர் விளங்குகிறார். இவரை ‘முனிரத்தினம்’ என்றும் அழைப்பார்கள். செம்முனியும் அகத்தியரின் மறுவடிவம் என்று சொல்பவர்களும் உண்டு.

முத்துமுனி

முத்து மாலைகள், முத்து மகுடம், வெண்ணிற ஆடைகளைத் தரித்து வெண்மையான தோற்றத்தில் காட்சியளிப்பவர் முத்துமுனி ஆவார். பிரம்ம தேவரே ‘முத்துமுனி’யாக விளங்குகின்றார் என கூறப்படுகிறது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர்தான் ‘முத்துமுனி’ என்று சொல்பவர்களும் உண்டு. இவருக்கு ‘செட்டி முனி’ என்ற பெயரும் உண்டு. ஒரு சிலர் முருகப்பெருமானே முத்துமுனியாக இருப்பதாகவும் நம்புகின்றனர். இதனால் இவரை ‘முத்தையன்’ எனவும் அழைக்கிறார்கள்.

சிங்கமுனி

விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தின் அம்சமே ‘சிங்கமுனி’ என கூறுகின்றனர். இவர் தனது கையில் வாளும், கேடயமும் கொண்டு விளங்குகிறார். முகம் சிலிர்த்த கோலத்தில் காட்சி தருகிறது. பிடரிகளுடன் கூடிய சிங்கமுகம் இவருக்கு அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் அகலும். பெரும்பகை நீங்கும் என்பது நம்பிக்கை.

லாட முனி

பழங்காலத்தில் லாட தேசம் ஒன்று இருந்ததாகவும், அந்த தேசத்தைச் சார்ந்த முனியே ‘லாடமுனி’ என்றும் சொல்லப்படுகிறது. சில ஆலயங்களில் முனிகளின் வரிசையில், இந்த லாட முனியும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம். சில ஆலயங்களில் லாட சன்னியாசி என்ற பெயரில் இவர் வீற்றிருப்பார்.

சன்னியாசி முனி

முனிகள் கூட்டத்தில் உயரம் குறைந்த தனி மேடையில் இவரை தரிசனம் செய்யலாம். இவரை ‘சந்நாசி அப்பன்’ என்றும், ‘சன்னியாசி முனி’ என்றும் அழைப்பார்கள். இவர் கவுபீனம் (கோவணம்) தரித்து யோக தண்டத்துடன், புலித்தோலில் அமர்ந்து காட்சி தருவார். இவரோடு பைரவர் (நாய்) ஒன்றும் இருக்கும்......

உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அணைத்து பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, மன அமைதியாக, சந்தோஷத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள  என்றும் நம்முடன் துணை இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரரையம்  வழிபடுங்கள்....

Monday, January 12, 2026

சூரியன் மறைவதற்குள் ஏன்பிணங்களை ...

சூரியன் மறைவதற்குள் ஏன்
பிணங்களை ...
 எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள் ....

இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். 

ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது. 
ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. 

ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்கள்.

மூக்கில் பஞ்சு வைப்பது.
இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறி விடும். 

எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். 

இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். 

மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். 
உயிர் சக்தியானது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறி விடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேறத் தொடங்கி விடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றி வரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றி வைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்த பின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்
ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகி விடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?
அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். 
எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாக கூறும் போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது
இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இ.

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. 
உடலை எதிர்மறை சக்திகளின்பின்பற்றுவோம தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை...

இந்துரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது

நன்றி Pon Veera Pandian  sir.. 🙏🙏🙏