Saturday, November 21, 2015

துளசி தேவிக்கும் திருமணம் 23-11-2015 [ Tulasi Devi Marriage]

பிருந்தாவன துவாதசி 

துளசி தேவிக்கும் திருமணம் ....  23-11-2015

 ( Every year this marriage function will perform in my friend house near  Mylapore chitrakulam ... , i will update pic later ) 
Tulsi refers to an age-old ritual of Tulsi Devi's marriage to Lord Vishnu. According to traditional Hindu calendar, it is celebrated during the month of 'Kartik', with the auspicious day being celebrated on Thursday this time. Some communities also celebrate it on 'Kartik Ekadasi' (eleventh bright day of the new moon)...
Every year this marriage function will perform in my Family friend  Mrs. Padmavathi  reted. headmistress house near Mylapore chitrakulam ... She doing this pooja above 40 years .. about 100 friend's & her relatives attended this function in her house ...
She told  " Tulsi ma will fulfil all our need like marriage , child issue , Job , study and all thing .. because  Tulsi ma & Lord Vishnu will blessing us " ..

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

துளசிச்செடியின் பெருமைகள் நிறைய. மிக மகிமை வாய்ந்த துளசி, தோன்றிய புராணக்கதையை இப்போது பார்க்கலாம்.

புராணக்கதை.
இது விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலிய பல நூல்களில் விரிவாக அமைந்துள்ளது.
தர்மத்துவஜன் என்னும் அரசன், மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, கார்த்திகை மாதம், பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு 'துளசி' என்று பெயரிட்டனர்.
துளசி, பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள்.  ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள்(அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்). பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.
பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார். அவளிடம், இறைவனிடம் நீங்காத பக்தி, தாசத் தன்மை அல்லது மோக்ஷம் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்டார்.
ஆனால், துளசியோ அவரை வணங்கி, 'தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நான் சென்ற பிறவியில், கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். ஆகவே, ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.
பிரம்மன், 'துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, சுதர்மன் என்ற கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், 'சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான்.  அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும்,  விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்' என்று வரமருளினார்.
துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், பதினாறு அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை புஷ்கர க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான்.

துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்த்தைக் கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, காந்தர்வ முறையில் அவளை மணந்து கொண்டான்.
துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான்.  அவன் கழுத்தில் அவனைக் காக்கும் மந்திரக் கவசம் மின்னியது.
மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், சங்கரர் ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.
தேவர்கள்   சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார்.  சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார்.
சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார்.
சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.
தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான்.
சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.
சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான்  விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள்.
சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும்  என்று  நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.
விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு, யுத்தத்திற்கு புறப்பட்டான்.
சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.
சிவனார், அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கிறீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.
பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது,  விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான்.
அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.
கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். 
துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.
துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.
தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.
விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார்.  துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ,  கல்லாகப் போவாய்' என சபித்தாள்.
விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.
துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.
என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.
இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து,  கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின. சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
இந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.
துளசி பூஜை செய்யும் முறை:
துளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 
பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.
துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்க.


அவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.

கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.
மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

துளசி தேவியைப் போற்றி, பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!!!
 - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪





https://www.facebook.com/IndianLifeEthics/ and 5 others.Like Page
November 22 at 6:52pm ·
* TULSI Vivaah / Tulsi Puja Vidhi *
-------------------------------------------------
In Sanskrit Tulsi is often referred as "Tulanaa naasti athaiva tulsi" meaning 'That which is incomparable in it's Qualities'. Tulsi Puja forms an important part of Hindu household worship and people offer water to the sacred Tulsi plant everyday and perform parikrama around it.
Tulsi Puja is performed during the Tulsi Vivah along with the worship of Lord Vishnu in the form of Shaligram.
Tulsi vivah is celebrated on the next day of Karthik Ekadashi. On this day Tulsi is married to Saaligram.
The tulsi plant is held sacred by the Hindus as it is regarded to be an incarnation of Mahalaxmi who was born as Vrinda. Tulsi was married to demon king Jalandhar. She prayed to Shri Vishnu that her demon husband should be protected, with the result no God was able to harm him. However on the request of the other Gods, Shri Vishnu took the form of Jalandhar and stayed with the unsuspecting Tulsi. When the truth emerged after Jalandhar’s death, Vrinda cursed Shri Vishnu and turned him to stone (Saaligram) and collapsed. From her body emerged the tulsi plant. That is why Vishnu puja is considered incomplete without tulsi leaves.
Tulsi Puja Mantra :
ऊँ त्रिपुराय विद्महे तुलसी पत्राय धीमहि |
तन्नो: तुलसी प्रचोदयात ||
Ohm Tripuray Vidmahe Tulsi Patray Dhimahi |
Tanno: Tulsi Prachodayat ||

Tulsi Vivah Mantra:
महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी |
आधि व्याधि जरा मुक्तं तुलसी त्वाम् नमोस्तुते ||
Mahaprasad Janani Sarvasaubhagyavadhini |
Aadhi Vyaadhi Jara Muktam Tulsi Tvaam Namostute ||

Preparations for the Puja :
•Tulsi pot
•Bright coloured odni forTulsi plant
•Sugar cane
•Moli, deepak
•Food rice, puri, sweetpotato, kheer, red pumpkin, aanvla, tamarind
•Suhaag pitari containingsaree, blouse, mahendi, kaazal (kohl), sindoor, bangles, bindi etc.
•Dishes

Vidhi / Method of Performing the Puja :
• Tulsi pot / Vrinda devi is coloured and decorated as a bride. Four pieces of sugarcane are tied around the Tulsi pot with moli and bright coloured odni is draped on the Tulsi plant.
• At midday, a full meal consisting of rice, puri, sweet potato kheer, red pumpkin vegetable cooked with pieces of sugarcane, amla and tamarind is offered to Tulsi Vrindavan.
• Tulsi Vivah ceremony takes place in the late evening. The Pundit and housewives performs the ceremony. Tulsi Devi takes the sacred phera with Saaligram. The Punditji brings the Saaligraam with him. In a basket- saree, blouse, mehendi, kaajal, sindoor, bangles, etc. i.e. suhaag related things are kept. This suhaag pilari is offered to Tulsi Devi and later given to a Brahmini.
• Various poha dishes are offered to Shri Vishnu.
• Then Prasad is distributed among family members and friends.





Thursday, November 19, 2015

சும்மா 1 -- எஸ்.ஜெயபாரதி

சும்மா #1

வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
கடாரத் தமிழ்ப் பேரரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



 


    ஒரு குறிப்பிட்ட ஆதீனத்திற்குட்பட்டு கோயிலொன்று இருந்தது. அந்தக் கோயிலின் கணக்குகளைப் பா¢சோதிப்பதற்காக ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் அங்கு வந்தார். கணக்குச் சுவடிகளைப் பார்க்கும்போது, அன்றாடப் படித்தரக் கணக்கு ஏடு வந்தது. அதில் கோயிலில் தினப்படிதரமாக வழங்கப்படும் பட்டைச் சோறு பெறுபவர்களின் பட்டியலும் இருந்தது. அதில் ஓ¡¢டத்தில்,

"சும்மா இருக்கும் சோற்றுப்பண்டாரத்துக்குப் படிதரம் பட்டை ஒன்று" என்று இருந்தது.

    கட்டளைப் பண்டாரத்துக்குக் கோபம்.

    "ஏனய்யா? அதென்னைய்யா அது? 'சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரம்'? அப்படி என்னைய்யா அந்தப் பண்டாரம் செய்கிறான்?" என்று கேட்டார்.

    "அவர் ஒன்றும் செய்வதில்லை. சும்மாதான் இருப்பார். படிதரம் கொடுக்கச் சொன்னது பொ¢ய சந்நிதானம்." என்றார் கோயிலின் கா¡¢யஸ்தர்.

    மிக ஆத்திரமாக வெளியேறிக் கட்டளைத்தம்பிரான் நேரே பொ¢ய சந்நிதானமாகிய ஆதீனகர்த்தா¢டம் சென்று முறையிட்டார்.

    முடிவில்,
    "இதென்ன அக்கிரமமாயிருக்கிறது? சும்மாயிருக்கிறவனுக்கெல்லாம் சோறு போட இங்கென்ன கொட்டியா கிடக்கிறது?" என்றார்.

    ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் ஒருவித மர்மப்புன்னகையுடன் அவரைப் பார்த்தார்.

    மெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,
    "வாரும். இவ்விடம் இரும்.ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே சிந்திக்காமல், எண்ணமிடாமலிரும். எதையும் நினைக்கவும் கூடாது. இரண்டு மணி நேரம். இது என் கட்டளை."

    ஐந்து நிமிடம்.... பத்து நிமிடம்.... இருபது நிமிடம்..... எழுந்தார் கட்டளைத் தம்பிரான். கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடி கீழே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்.

    எழுந்தார்....
    ஓடினார்....
    ஓடினார்.....
    புலம்பிக்கொண்டே ஓடினார்.....
    "பேய்மனம்... பாழும் மனம்.... மனக்குரங்கு...."

    நேரே கோயிலுக்குச் சென்றார்.

    கணக்குச் சுவடியை எடுத்தார்.

    திருத்தி எழுதினார்.

    "சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரத்திற்குப் படிதரம் பட்டை இரண்டு!"


    சும்மா#2

    அது சா¢.

    சும்மா இருப்பதில் அப்படியென்ன சிறப்பு?

    இந்த "சும்மா" என்ற சொல்லை நாம் பல பொருள்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த சொல்லை எனக்குத் தொ¢ந்து முதன்முதலில் பயன்படுத்திய பட்டினத்தாரும் அவரைத் தொடந்து வந்தவர்களும் யோகியரும் ஞானிகளும் முற்றிலும் வேறான பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    இறைவனே குருவாக வந்து உபதேசம் தரும் பேறு பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் கண்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனன், ஸ்ரீமன்நாராயணனிடம் அஷ்டாட்சரத்தை உபதேசமாகப் பெற்ற திருமங்கையாழ்வார்("தாயினமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்"); சிவனிடமிருந்து வாங்கிய மாணிக்க வாசகர்; வினாயகா¢டமிருந்து பெற்றுக்கொண்ட ஒளவையார் போன்றவர்கள். முருகனிடமிருந்து உபதேசம் பெற்றவர்களில் ஒருவர் அருணகி¡¢நாதர்.

    இளமையில் playboy ஆக விளங்கிய அருணகி¡¢, தொழுநோயால் அவதியுற்று, மனம் வெறுத்து, திருவண்ணாமலைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்தார்.

    அப்போது முருகன் ஓர் ஆண்டிக்கோலத்தோடு வந்து அவரை ஏந்தித் தாங்கிக் கொண்டார்.

    உயிரை வெறுத்திருந்த அருணகி¡¢ தாம் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். முருகன் சொன்னது.....

    சுருக்கமான இரண்டே வா¢கள்....,

    "சொல்லற!
    சும்மா இரு!"

    அவ்வளவே.

    அதன் பொருளை அவரால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டார். அவருடைய வாழ்க்கையில் அவரால் இயற்றப்பட்டவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, மயில்விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்பு. இறுதியாக அவர் பாடியது கந்தர் அனுபூதி.

    அதில் அவருடைய ஆத்மானுபவங்களை 51 பாடல்களாக அப்படியே வடித்திருக்கிறார். ஐம்பத்தோராவது பாடலில் தம்முடைய குருவாகிய முருகனை நாடி,

    "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"

என்றவாறு பறந்து சென்று விட்டார்.

    பன்னிரண்டாம் பாடலில் அவர் பெற்ற உபதேசத்தைக் குறிப்பிடுகிறார்.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளன்றும் அறிந்திலனே!"

இது அருணகியார்.

    "சும்மாயிரு. சொல்லற" என்ற சொல்லின் பொருளை அறிந்துகொள்ளவே முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.

    அவர் மட்டுமா?
    பட்டினத்தாரும்தான்.

"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"

                - பட்டினத்தார்

    சும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.

"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்!
சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவா¡¢யே!"

    சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா?
    அதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!

                - தாயுமானவர்

    மதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

    ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!

    அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!

    ஆளை விடு.
---------------------------------------------------------------------------------------------
"சும்மா இருப்பது எப்படி?" : https://sadhanandaswamigal.blogspot.com/2015/10/blog-post_27.html

Tuesday, November 17, 2015

ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சரத்னம்




ஸ்வாமியே சரணம் ஐயப்பா :

Ayyappa Loka veeram by Yesudas KJ

ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சரத்னம் : ( அர்த்தத்துடன் )
லோகவீரம் மஹாபூஜ்யம்
ஸர்வரக்ஷாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஒம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( உலகில் தலைசிறந்த வீரனும் சிறப்பாக பூஜிக்கத் தகுந்தவனும் அனைத்து உயிர்களையும் காப்பவனுமான தலைவனும் பார்வதி தேவியின் மனதுக்கு ஆனந்தம் தருபவனுமான ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம்
விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( சான்றோர்களால் வழிபடப்படுபவனும் உலகத்தாரால் வணங்கப்படுபவனும் விஷ்ணு சிவனின் ப்ரியமான புதல்வனும் விரைந்து வந்து அருள் புரிபவனுமான ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
மத்த மாதங்க கமனம்
காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( வெள்ளை வாரணத்தின் மேல் வருபவனும் கருணைமழை பொழிபவனும் அமுத விழிகள் உடையவனும் அனைத்து இடர்களையும் களைபவனும் ஆன தெய்வமாகிய ஐயப்பனே
உன்னை நான் வணங்குகின்றேன் )
அஸ்மத் குலேஸ்வரம் தேவம்
அஸ்மத் ஸத்ரு விநாஸனம்
அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( என்னுடைய குலதெய்வமும் என்னுடைய பகையை அழிப்பவனும் என் வேண்டுதலை நிறைவேற்றுபவனுமான ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
பாண்ட்யேச வம்ச திலகம்
கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்த த்ராணபரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( பாண்டிய வம்ச தலைவனும் கேரளத்தில் திவ்ய ரூபத்துடன் விளையாடல் புரிந்தவனும் எளியோர்க்கு உதவும் மேலான தெய்வமுமாகிய ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
பஞ்சரத்னாக்ய மேதத்யோ நித்யம்
ஸுத்த படேந்நரஹ
தஸ்ய ப்ரஸன்னோ பகவான்
சாஸ்தா வஸதி மானஸே
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Swamiye Saranam Ayyappa! Loka Veeram Mahapoojyam or Lokaveeram Maha Poojyam is the Namaskara Sloka (Stotra) of Lord Swamy Ayyappa or Sree Dharmasastha of Sabarimala Swamy Temple.
Loka Veeram Maha Poojyam,
Sarvarakshakaram Vibhum !
Parvathi Hridayanandam,
Saasthaaram Pranamamyaham !!
Swamiye Saranam Ayyappa !! 1 !!
Viprapoojyam Viswavandyam,
Vishnu Shambho Priyam Sutham !
Kshipraprasaada Niratam,
Saasthaaram Pranamamyaham
Swamiye Saranam Ayyappa !! 2 !!
Mattha Maatanga Gamanam,
Kaarunyaamrita Pooritam !
Sarva Vighnaharam Devam,
Saasthaaram Pranamamyaham !!
Swamiye Saranam Ayyappa !! 3 !!
Asmatkuleswaram Devam,
Asmat Shatru Vinaashanam !
Asmadista Pradaataram,
Saasthaaram Pranamamyaham !!
Swamiye Saranam Ayyappa !! 4 !!
Pandyesha Vamsa Tilakam,
Keraley Keli Vigraham !
Aarta Thraana Param Devam,
Saasthaaram Pranamamyaham !!
Swamiye Saranam Ayyappa !! 5 !!
Pancha Ratnaakya Methadyo
Nityam Shudha Patennaraha !
Tasya Prasanno Bhagawaan
Saastha Vasathi Maanase !!
Swamiye Saranam Ayyappa !! 6 !!
Sabarigiri Nivaasam Shaantha Hrid Padma Hamsam !
Sashi Ruchi Mrithuhaasam Shyamalam Bhodha Bhaasam !!
Kalitha Ripu Niraasam Kaantha Mrithunga Naasam !!
Nathinuthi Paradaasam Naumi Pinjaava Thamsam !!
Swamiye Saranam Ayyappa !! 7 !!
Sabarigiri Nishaantham Shange Kundenthu Dhantham !
Shamadhana Hridi Bhaantham Shatru Paalee Krithaantham !!
Sarasija Ripukaantham Saanu Kampeksha Naantham
Kritha Nutha Vipadantham Keerthaye Hum Nithaantham !!
Swamiye Saranam Ayyappa !! 8 !!
Sabarigiri Kalaapam Shaastra Vadhwaantha Deepam
Shamitha Sujanathaapam Shanthiheer Nir Dhuraapam !
Kara Dhrutha Sumachaapam Kaarano Paatha Rupam !
Kacha Kalitha Kalaapam Kaamaye Pushkalabham !!
Swamiye Saranam Ayyappa !! 9 !!
Sabarigiriniketham Shankaropendrapotham
Shakalitha Dhithijaatham Shatruji Moothapaatham !
Padanatha Puruhutham Paalitha Shesha Bhootham
Bhavajala Nidhi Bhotham Bhavaye Nitye Bhootham !!
Swamiye Saranam Ayyappa !! 10 !!
Sabari Vihrithi Lokham Shyamalo Ddhaara Chelam
Shathamakha Ripukaalam Sarva Vaikunta Balam !
Nathajana Surajaalam Naaki Lokaanukoolam
Navamayamani Maalam Naumi Nisshesha Moolam !!
Swamiye Saranam Ayyappa !! 11 !!
Sabarigirikuteeram Shatru Samghaatha Ghoram
Shatagiri Shathadhaaram Shashpi Theyndraari Shooram !!
Harigirisha Kumaarem Haari Keyura Haaram
Navajaladha Shareeram Naumi Vishwaika Veeram !!
Swamiye Saranam Ayyappa !! 12 !!
Sarasija Dalanethram Saara Saaraathi Vakthram
Sajala Jaladha Ghaathram Saandhra Kaarunya Paathram !
Sahathanaya Kalanthram Saambha Govinda Puthram
Sakala Vibhudha Mithram Sannamam Pavithram !!
Swamiye Saranam Ayyappa !! 13 !!
Shridhaa Nanda Chinthamani Shreenivasam
Sada Sacchidaananda Purna Prakasham !
Udhaaram Sadhaaram Suraadhaara meesham
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham !!
Swamiye Saranam Ayyappa !! 14 !!
Vibhum Veda Vedaantha Vedhyam Varishtam
Vibhoothi Pradam Vishrutham Brahma Nishtam
Vibhaaswath Prabhaava Prabhum Pushka Leshtam
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham !!
Swamiye Saranam Ayyappa !! 15 !!
Parithraana Dhaksham Parabrahma Soothram
Sfuraschaaru Gaathram Bhava Dhwaantha Mithram!
Param Prema Paathram Pavithram Vichithram
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham !!
Swamiye Saranam Ayyappa !! 16 !!
Paresham Prabhum Purna Kaarunya Rupam
Girishaadi Peeto Jwala Chcharu Deepam !
Sureshaadi Samsevitham Suprathaapam
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham !!
Swamiye Saranam Ayyappa !! 17 !!
Gurum Purna Lavanya Paadadi Kesham
Gareeyam Mahatkoti Surya Prakasham !
Karaambhoru Hanya Sthavethram Suresham
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham !!
Swamiye Saranam Ayyappa !! 18 !!
Haree Shaana Samyuktha Shakthyey Ka Veeram
Kiraathaava Thaaram Kripaa Paanga Pooram !
Kireetaavath Sojjwalath Pinjcha Bhaaram
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham!!
Swamiye Saranam Ayyappa !! 19 !!
Mahaayoga Peeto Jwalantham Mahaantham
Mahaavaakya Saaro Padesham Sushaantham!
Maharshi Praharsha Pradam Jnaana Kaantham
Param Jyothi Rupam Bhaje Bhootha Naatham !!
Swamiye Saranam Ayyappa !! 20 !!

Saturday, November 7, 2015

Parvathamalai Moondravathu Kan ( 06/11/2015 )


Thank to Vendhar Tv
         Parvathamalai Moondravathu Kan
 ( 06/11/2015 )





பர்வதமலை கும்பாபிஷேகம் 20-01-2016





Thursday, November 5, 2015

Abdul Kalam Seva Ratna Awards 2015


Dalai Lama to present Abdul Kalam Seva Ratna Awards  at Chennai Music Academy



Tibetan spiritual leader Dalai Lama will present the first edition of the Abdul Kalam Seva Ratna awards here on November 9. The awards were instituted by the Abdul Kalam Vision India Movement to recognize outstanding contribution of individuals/organisations to tree plantation, de-addiction, reviving water bodies, providing safe drinking water and creating green campuses, villages and cities.

According to V. Ponraj, who was advisor to Kalam for over a decade, at least 10 lakh entries from individuals or organisations were received for the awards.

For the tree plantation category alone, 7.08 lakh entries from across the country were registered. Nine organisations had sent entries for rehabilitating 72,040 persons through de-addiction programmes.

A jury comprising eminent academicians, former bureaucrats and others will finalize the winners.

The movement decided to invite Dalai Lama as he and the former President Kalam shared the same ideology of peace and prosperity.

Kalam always considered the Tibetan leader as a symbol of peace.

Both the leaders had a long association in encouraging the youth to work towards an enlightened society. Mr. Ponraj said the awards ceremony would be held at Chennai Music Academy 

Though entry was free and on a first-come-first-served basis, the front few rows would be reserved for people representing various walks of life, including farmers, auto drivers and children.

Mr. Ponraj said.

sadhanandaswamiga.blogspot crossing 400240 pages view


Blessing from Guru ..
Thank for all viewers... 
Today my Blog [sadhanandaswamiga.blogspot.com ] crossing 400240 pages view ...


with in 191 days 27 April 2015 to 4 November 2015 crossing 1,00,000 hhttps://sadhanandaswamigal.blogspot.com/2015/04/thank-for-all.html