Monday, March 12, 2012

ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகப் பயிற்சி வகுப்பு 1


ருத்ராட்சத் தெரபிஸ்ட்,ஆன்மீகச் செம்மல் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால சீடர் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தெய்வீக விபூதி தயாரிக்கும் முறை பற்றியும்,நாம் விரும்பும் தெய்வம் அல்லது நமது குலதெய்வத்துடன் நேரடித் தொடர்பை இந்த ஜீவசக்தி வாய்ந்த விபூதி மூலம் உருவாக்கும் விதத்தைப் பற்றியும்,நமக்குப் பயிற்சியளிக்க சம்மதித்திருக்கிறார்.

இந்த தெய்வீக ஜீவசக்திவாய்ந்த விபூதியின் மூலம் நமது முற்பிறவி கர்மாக்களை முழுமையாகக் கரைக்கமுடியும்;மேலும்,நேர்மையாக வாழ்ந்துவருபவர்கள் தமது கஷ்டங்களிலிருந்து விடுபடவும்,நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் செய்யலாம்.நமது ஆத்ம பலத்தை அதிகரித்துக் கொள்ளமுடியும்.

இந்த ஆன்மீகப் பயிற்சி வகுப்பு 1 ஐ திருவண்ணாமலையில் 25.3.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 வரை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர்,தங்களின் ஜாதக நகல் ,இரண்டு பாஸ்போட் சைஸ் கலர் போட்டோ,உங்களின் சொந்த ஊர்,தற்போது வாழ்ந்து வரும் ஊர்,செல் எண் போன்றவைகளை aanmigakkadal@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.(எச்சரிக்கை:சிலர் தங்களின் பிறந்த ஜாதகத்தை அனுப்பாமல்,வேறு ஜாதகத்தை அனுப்பியிருக்கின்றனர்.இப்படி அனுப்பும் கோரிகைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்) இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்: 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்;ஆண்,பெண் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;108 மாணவ,மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி!

தகுதியான மாணவ,மாணவிகளை திரு.சிவமாரியப்பன் அவர்கள் தாங்கள் அனுப்பிய ஜாதகம்,போட்டோவைக் கொண்டு தேர்ந்தெடுப்பார்.உங்கள் ஜாதக நகல்,போட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி:20.3.2012 !அதன்பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது;25.3.12 அன்று பயிற்சி வகுப்பின் வாசலில் வரும் கோரிக்கைகள் கவனிக்கப்பட மாட்டாது.
இந்த பயிற்சி வகுப்பானது,மிகவும் பெருமை மிக்க ஆன்மீக,ஜோதிடப் பெரியவர்களின் ஆசியோடும்,முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

Thank:
https://www.aanmigakkadal.com/2012/03/blog-post_09.html

No comments:

Post a Comment