Thursday, July 18, 2013

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்



காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)

அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.


இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.


என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.


ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் எஎனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.

Thank: https://www.aanmigakkadal.com/2009/09/blog-post

No comments:

Post a Comment