Monday, May 15, 2017

சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்" "வாலைத்தாய்"


Thank: https://sivarppanam.blogspot.com/2014/12/blog-post_38.html
https://ravindhaa.blogspot.com/2017/02/



வாலாம்பிகை (சித்தர்களின் தெய்வம்)
image from whatapp
வாலாம்பிகை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்து வந்தது.இவள் சித்தர்களுக்கு முழு முதற் கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதானவள் என்றும், பதினாறு வயதாள் என்றும், கனியென்றும்,பச்சை நிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும், புவனையென்றும், அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். இவளால் தர இயலாதது எதுவும் இல்லை. இவளைப் பூசை செய்யும் செய்யும் முறையைப் பற்றி சட்டை முனி கூறுவதைப் பாருங்கள்.
சட்டை முனி ஞானம் -4  பூசை செய்யும் முறை

காணப்பா பூசை செய்யும் முறையைக் கேளாய் கைம் முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துபுகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்நம்முடைய பூசையென்ன மேருப் போலேஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தேஉத்தமனே பூசை செய்வார் சித்தர்தானே! பாடல் (1)தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகாவானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்கோனென்ற வாத சித்தி கவன சித்திகொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே! பாடல் (2)கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்மைந்தனே இவளை நீ பூசைபண்ணதேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்திறமாக புவனையை நீ பூசை பண்ணுஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே! பாடல் (3)பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக்  கேளாய்பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்புவன்னியதோர் வாசியென்ற யோகத்துக்குமைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லைஉன்னியதோர் உலகமென்ன சித்தரென்னஉத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! பாடல் (4)

சிலர் தீபம் வைத்து பூசை செய்வார்கள் . சிலர் இந்த வாலைப் பெண்ணை வைத்து பூசை செய்வார்கள் . சிலர் சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் .சிலர் மகா மேருவை வைத்து பூசை செய்வார்கள் .சித்தர்கள் நாற்பத்து முக்கோண சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் சித்தர்கள் .  மேருவைப் பூசிக்கின்றவர்கள் சாபமிட்டால் அண்டரண்டமெல்லாம் தீயாய்ப் பிடித்து வேகும். இதற்கு தீட்சை அவசியம் வேண்டும் . சிறுபிள்ளைபோல எண்ணி யாரும் இதைத் தொடல் ஆகாது.வான் தத்துவமாகிய இந்த மேரு பூஜை செய்கிறவர்கள் வாயைத் திறந்து யாருக்காகிலும் உபதேசம் ( இரு தேசங்களைப் பற்றிய ரகசியங்களை) சொல்ல முற்படுவரானால் , அவர்களுக்கு ஞான , யோக, வாத ரகசியங்கள் எல்லாம் வசப்படும்.
வாலையின் மூன்றெழுத்தான அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய்.திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) புரிந்து பூசை செய்வாய்.எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் .அவள் அருள் உனக்குக் கிடைக்கும். யாமளையாகிய அவளின் ஆறெழுத்தையும் நீ உணர்ந்து பூசை செய்வாய்.
ஐந்தெழுத்தாகிய பஞ்ச பூதங்களின் உறைவிடத்தைக் காண்பாய் . இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்த பின், வாசியை உணர்ந்து கொள்.இதில் வகாரமான காற்றையும் , சிகாரமான நெருப்பையும் உணர்ந்து ( இதையே நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார் திருமூலர். நாயை எப்படி ஓட்டுகிறோம் , சி என்றல்லவா?இந்த சிகாரமான நெருப்பு யமனை வெல்லும். ) வகாரமான காற்றையும் சிகாரமான நெருப்பையும் சரியாக வைத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டான் என்பதால்தான் , இறந்து போனவனின் எலும்பில் பாலூற்றும் போது காசி ,காசி என்று ஊற்றுகிறார்கள். அவன் இவற்றை சரியாக பராமரிக்காமல் இறந்து போனான் ,உயிரோடிக்கும் நீயாவது இறக்காமல் இருந்து கொள் என்றுணர்த்தவே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன . இறந்தவனை கொண்டு போகும் போது  உறுமி மேளம் அடிப்பார்கள் , அது உண்டுண்டு என்றடிக்கப்படும் . அதாவது இந்த மரணம் உனக்கும் உண்டு , உனக்கும் உண்டு என்று உணர்த்தவே ஆகும் .
உத்தமனே முந்தைய பிறவிகளில் இந்த வாலையைத் தியானித்திருந்து அரைகுறையாக விட்டிருந்தால் , அந்த விட்ட குறை , அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்து ஞானத்தைத் தந்தே தீரும் . இதை அந்த வாலைத் தாய் மரணமில்லாப் பெருவாழ்வை  நிறைவேற்றித் தருவாள்.Image may contain: 1 person, standing
பட்டினத்தார் ஞானம் -100

நெஞ்சமுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்றகுஞ்சரத்தை யாதரித்து கும்பிட்டால்- தஞ்சமுடன்காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்பூமிதனில் வாழ்வரெ ப்போதும்  பாடல் (1)ஆவுடையாளொடிருந்தேன் அருளானந்தம் பெறவேகோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்இட்டமுடன் நெஞ்சே இரு (பாடல் 4)

நெஞ்சமுடன் தாம்புலம்பி , நீலநிறத்தாள் ஈன்ற குஞ்சான அகார , உகாரத்தைக் கும்பிட்டால் , நம்மைத் தஞ்சமடைந்திருக்கின்ற காமம் முதலான மும்மலத்தின் கட்டறுந்து ஞானத்துடன் பூமியில் வாழ்ந்திடுவார்கள் எப்போதும். பட்டினத்தார் ஆவுடையாளோடிருந்தேனென்றும் (வாலைத் தாயுடன் இருந்தேன் ) , அவளுடைய அருளானந்தம் பெற்று , பூவுடையாள் கட்டழகியைத்தான் கடந்து , வேதாந்தப் பெருவெளிக்குள்   இட்டமுடன் நெஞ்சே இரு என நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்.
இந்த வாமியான வாலையைக் கனவினில்  கண்ட காட்சியையும் , அவளிடம் கேட்ட வரம் பற்றி பாரதியார் தனது பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.                             மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்.வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை! பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும், புன்னகையின் புதுநிலவும்  போற்ற வரும் தோற்றம்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து, துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள்! அங்கதனில் கண்விழித்தேன் !அடடா ஓ அடடா!
அழகென்னும் தெய்வம் அதுவென்றேயறிந்தேன்! காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன்? காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்! ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ? நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! – பாரதியார் –
முதலில் அந்த வாலாம்பிகையின் காட்சியை வருணித்த பாரதியார் , வாலாம்பிகையிடம் காலத்தின் விதி தமது மதியைக் கடந்திடுமோவென்று கேட்கிறார்.அதற்கு வாலாம்பிகை காலமே மதியினுக்கு ஓர் கருவி என்று கூறுகிறாள். இந்த உலகத்தில் விரும்பியது கிடைக்குமா என்று வினவுகிறார் பாரதி , அதற்கு வாலைப் பெண்ணாத்தாள் , நாலில் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்றாள்.
வாலை தெய்வம்★
★வாலையை பணியாமல் சித்தராக முடியாது!
★அவளை யறியா அமரரும் இல்லை
★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
★அவளின்றி யூர் புகு மாறறி யே னே"
★அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே!
★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்!
★பின்னரல்லவா தவம் செய்வது?! ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது!
★சக்தி - வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது!
★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும் சிவமயம்! சிவம் சக்தி மயம்!
★அவளே வாலை! தாய்!
★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!
★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!
★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே!
★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!
★உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி !
★அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை!
★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா?
★"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே"
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”
இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம்
சிவ சக்தி போற்றி.
அம்மா தாயே சரணம் 
வாலையைக்கும்பிட்டு சித்தரானார்..
வாலைக்கொத்தாசையாய் சிவகர்த்தரானார்... 
வாலைக்கு மேலான தெய்வமில்லை....
கொங்கண சித்தர் ...
தாயிர் சிறந்த கோயிலும் இல்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அவளை அறிய முதலில் ஐவரை அறிய வேண்டும் 
இருப்பிடம் உள்நாக்கு 
இயக்குவது காற்று
கன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும் உன்னத தாய்மை பொருந்திய உண்மை தெய்வம்.

No comments:

Post a Comment