Showing posts with label Q-A. Show all posts
Showing posts with label Q-A. Show all posts

Wednesday, September 4, 2019

Is there any previous birth? and Next Birth?

Dear sir,


Self realisation is a matter of soul not body! one has to be eligible to receive the grace of the Almighty to realise his Self and when it happens that will be the day when all the questions cease and the Soul shall enjoy unending bliss with enchanting tranquility.

Image result for THIRUMOOLAR


VENAI MUDINDAL THENAI ALAVUM NILLATHE ETHEGAM - THIRUMOOLAR
A grass body - soul in it has single sense. human body - soul in it has six sense.The increase in sense will lead to changes in the body structure and changes in behaviour. So the soul is in ignorance. As the ignorance clears step by step the changes in body occurs from grass, animals to human beings. in this sequence the ignorance of the soul is cleared by adding the knowledge to the soul and changes our to the body structure with increased ability .We are gifted to get this human body. With this six sense we can get self realization and know about the universe and the supreme. With this sixth sense only we can do this.So know we will go to the Thirumoolars song venai mudinthal thenai alavum nillathe ethegam. Here venai is not the good and bad fate. Ignorance of the soul is called venai. If the ignorance of the soul is completely cleared There wont be any type of body. so we wont have rebirth to live in this miserable universe. We will keep on adding knowledge to our soul to realize the next changes. This the main aim of humankind. Let us try this to reach the goal of humankind by the

 HELP OF WISDOM THE SUPREME ALMIGHTY 
KARUNAI ,PAROUBAKAGARAM AND SATHVICHARAM WILL HELP US TO RECEIVE THE ARUL OF WISDOM THE SUPREME ALMIGHTY
WITH REGARDS,


UYIR.

Friday, August 23, 2019

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........3

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........3

கடந்த பதிவில் சாதம் ,பிரசாதம் பற்றியும் கண்களின் நெருப்பு சக்திகளை பற்றி பார்த்தோம் .இனி .....
சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
அதன் படி
உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று
முறை இருக்கிறது .
சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிர் தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று
சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம்
இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு )நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது
இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் )
நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர்
வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும்
அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

நீங்கள் எடுத்து உணவு சரியாக செரிமானம் ஆகிறதா?
நமக்கு எல்லா சக்திகளையும் அவைகள் தருகிறதா?
நம்முடைய குடல் நாம் எடுத்த உணவை போதும் என்று எப்படி சொல்லும் ?..................அடுத்த பதிவில் பாப்போம் ...
அகத்தியர்
புஜெந்தர் ஆசிகளுடன் ....
முறைப்படியும் ,
கால்களை மடக்கி அமர்ந்து உன்ன ஆரம்பித்ததும் என் உடலில் பல மாற்றம் நான் கண்டது உண்மை .....


சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் - 1 வது பதிவு

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........1
இந்த தொடர் முழுமையாக சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட பழக்கவழக்கம் ,உணவு முறைகள் இவைகளை பற்றி ....
மணி ,மந்திரம் ,---வைத்தியம் .
சில விவரம்கள் ....
இந்த உலகில் புண்ணிய பூமியானது நம் நாடு ,பல நாடுகளை சேர்ந்த மகான்கள் ,சாதுக்கள் இங்கே வந்ததும் நம் பூமியின் அருமைகளை
புரிந்து இங்கே இருந்து விட்டார்கள் என்பது நாம் அறிந்தது .
பல வகையான தாவரம்கள் இங்கே உண்டு என்று நாம் அறிந்தது .
மனித குலம் நன்றாக வளமுடன் ,வாழ சித்தர்கள் பல விவரம்களை
கொடுத்து இருக்கிறார்கள் ....
இறைவன் மனிதனுக்க மிக மிக அவசியமானதாக கற்பக விருட்சம் என்னும் இளநீர் கொடுத்தார் ,மனிதனின் குலம் தழைக்க விதை இல்லாத வாழை மரம் கொடுத்தார் .
மனிதன் சுவைக்க பார்த்தவை எல்லாம் உன்ன தொடங்கிவுடன் பல வித
வியாதிகளுக்கு அடிமையானான் .
இறைவன் மிகவும் கருணை கொண்டு மனிதனின் உடம்பில் உள்ள சுரபிகள் ,உறுப்புகள் சரியாக பல பழ வகைகளை உண்டாக்கினார்
மனிதனின் முளை பலம்பட முளை போல் சீதாபழம் (custard apple )
கிட்னி பலம்பட கிட்னி போல ஆரஞ்சு
கண்கள் பலம்பட திராட்சை
பற்களை பலம்பட மாதுளை
இதயத்தை பலம்பட இதயம் போல ஆப்பிள்
ரத்தத்திற்கு பீட் ரூட்
பெண்களின் கருவறைக்கு பப்பாளியும்
இது போல நிறைய ......
இதை அறிந்த சித்தர்கள் எது எல்லாம் மனிதனுக்கு நன்மை செய்யும்
என்று கண்டு கொண்டு நமக்கு சொல்லி உள்ளார்கள் ...
மனிதன் உயிர் வாழ உணவு வேண்டும்
வியாதியால் இருக்கும் பொழுது மருந்து வேண்டும்
உணவை சுருக்கினால் மருந்து
மருந்தை சுருக்கினால் விஷம்
விஷத்தை சுருக்கினால் மணி
மணிகளை சுருக்கினால் மந்திரம் ......
உணவை சுருக்குவது என்பது .....
ஒரு உணவில் கிடைக்கும் சக்திகளை எடுத்து கொடுப்பது
அதாவுது ஆரஞ்சு பலத்தை உரித்து சாப்பிட்டவுடன் அவை வயிற்றில் செரித்து குருதியில் கலந்து அமிலம்களை பிரித்து இனிப்புகளை சேர்த்து
உபரிகளை வெளிய தள்ளும்
ஆரஞ்சு பலத்தில் உள்ள ரசத்தை எடுத்து பதபடுத்தி அதை சின்ன சின்ன
உருண்டையாக்கி வைத்தால் மருந்து
மருந்துடன் மருந்தை சேர்த்தல் விஷம்மாக மாறும்
பல விஷதுடன் விஷம் சேரும் பொழுது அது மணி . .
இதை நாகம் தேவதை கதைகளில் அறியலாம்
பல மணிகள் சேரும்பொழுது அது மந்திர ஒளி, ஒலிகளை தரும்
பல மணிகளை சோதிடர்கள் ,மந்திரவாதிகள் ,சித்து வேலை செய்பவர்கள் அணிய இது தான் காரணம்.
சில மணிகள் வியாதிகளை சரிசெய்யும் என்று சொல்ல இது தான் காரணம் .
மருந்து உன்று சரிசெய்யலாம்
மணி உடுத்தி சரிசெய்யலாம்
மந்திரம் சொல்லி சரிசெய்யலாம்
இது எல்லாம் சரி... வியாதிகள் வராமல் நாம் எப்படி உணவு பழக்க வழக்கம்
மேற்கொள்ள வேண்டும்
சித்தர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் ........

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் - .2 வது பதிவு

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........2 வது பதிவு
சித்தர்கள் மனித குலம் தழைக்க சிறப்பாக வாழ பல நல்ல அற்புதமான தகவல்கள் தந்து உள்ளார்கள்
நம்முடைய பழக்க வழக்கத்தில் உள்ள சின்ன சின்ன செயல்கள் நமக்கு
வியாதிகளை கொடுக்கிறது ....
சித்தர்கள் சொன்னது ...
படுகையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
கண்களை பற்றி உங்களுக்கு அறிய படவேண்டிய ரகசியம் .
கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான்
இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை
தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும் .
அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து
அவனை பார்க்கிறாள் .
பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய
நபர்களை சந்திக்கிறேன் .
அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..
என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான
உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...
காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது .....
சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன்
குளியல் .
குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
உணவு எடுக்கும் முறைகள் பற்றி
அடுத்த பதிவில் பார்போம் ..........
Unlike · Comment · 

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் - 1 பதிவு

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் ................1 பதிவு
இந்த பதிவு நம் நாட்டில் உள்ள கோவில்களின் தன்மைகளைப்பற்றியும்
சித்தர்கள் கோவிலை பற்றிய கூரிய ரகசியம்களையும் பதிகப்பட்டுள்ளது 
அறிந்து பயன்பெறவும் .......
கோவிலை பற்றி முகநூல் அன்பர்கள் நிறைய தகவல்கள் பதிகிறார்கள்
இந்த பதிவில் சித்தர்கள் ஏன் ,எப்படி ,கோவில் உண்டாக்கி ,பயன்படுத்தி
அதை நமக்கு கொடுத்து உள்ளார்கள் என்பதனை பார்போம் .
கோவில் .........
தலம்,தீர்த்தம் ,மூர்த்தம் .......
கோவில் அமைந்த இடம் தலம் ....
கோவிலில் உள்ள ஊற்று நீர் (தீர்த்தம் )
கோவிலில் செய்யப்பட்டு உள்ள மூர்த்தம் (சிலைகள்)
உருவ வழிபாடு என்ற நகைப்பு ஒரு புறம்
இதை வைத்து சம்பாத்தியம் ஒரு புறம்
இது தவறு என்பது ஒரு புறம்
இவைகள் எல்லாம் இன்று நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்
அவர்களுக்குகாகவும் சித்தர்கள் நிறைய நான்மைகளை செய்து உள்ளார்கள்
ஆம் நாம் நாட்டில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் ,பல நபர்கள் கோவிலின் தன்மைகளை கெடுக்க ,மாற்றவோ ,அழிக்கவோ ,முற்பட்டாலும் முடிவில் தோல்வியாகி அவர்களிடம் மாற்றத்தை கொடுத்து உள்ளது நிறைய கோவில்கள் இதை நாம் பல புராணம் ,சரித்தரம் படிக்கும் பொழுது அறியலாம் .
எப்படி இந்த கோவில்கள் மனிதர்களுக்கு உதவி செய்கிறது என்று பார்போம் .....
கோவில்களின் அமைப்பு ...
ஒரு ஊற்று ,ஒரு மரம் ,ஒரு மூர்த்தம் என்பதனை பார்த்தோம் இவைகளை விரிவாக பார்க்கும் மூன் விருட்சி சாஸ்திரம் என்னும்
மரம்களை புரிந்து கொள்ளவேண்டும் .......
நம்முடைய நாட்டில் மட்டும் தான் அறிய வகை முலிகை உடைய வனங்கள் உண்டு .
இதில் மனிதனின் வியாதிகளை குணபடுத்தும் மரம் ,தாவரம் நிறைய உண்டு என்பதனை நாம் அறிவோம்
ஆம் நாம் மரம் ,தாவரம் என்று நினைப்பது என்ன என்பதனை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
அவைகள் எல்லாம் மனிதனாக இருந்து சிவா பெருமானை வழிபாடு செய்து அமரர்களாக மாறி இறைவனிடம் தாம் பூமியில் என்றும்
சஞ்சீவியாக இருந்து மனிதர்களுக்கு உதவி செய்ய பூமிக்கு வந்தது ...
சிவனின் பக்தரான ,சைவ முறையாக வாழ்ந்து உயிரை உண்டாக்கும்
மந்திரத்தை சிவனிடம் இருந்து பெற்ற அசுர (சைவர்கள் )குல ஆசான்
சுகர பகவான் நூலை படிக்கும் பொழுது நான் புரிந்து கொண்டது ...
ஆம் , சுக்ரஆசான் சைவர் ,அசுரர்கள் சைவர்கள் சிவ நெறியாளர்கள்
இவர்கள் தான் பூமியில் முலிகை ,செடி ,மரமாக வந்தார்கள் .இதை
சதுரகிரி மலை அந்தரங்க நூலில் அறியலாம்
எந்த முலிகை எப்படி ,எந்த நேரத்தில் ,என்ன சொல்லி பறிக்க வேண்டும்
என்ற விவரம்களை கும்ப முனி சொல்லி உள்ளார்
இந்த மரம்கள் மூலிகைகள் மலை மேல் வளரும் ,அவைகளை அழைத்து வந்து சிவபெருமானுடன் சேர்க்கும் பொழுது அவைகள் மருந்தாக
மாறும் தன்மையுடையதாக ஆகிவிடும் .
இந்த அமைப்பை முதலில் கண்டுபிடித்து அங்கே கோவிலை தேர்ந்து
எடுத்தார்கள் சித்தர்கள் ....
ஆம் சிவ பெருமான் வன நாதர்
அகில்மரம் வாழ்ந்த இடம் என்றால் கண்களுக்கு மருந்து ,இதை போல
தனி தனியாக விவரம்களை தரபோகிறேன் கவனித்து படித்து புரிந்து கொள்ளவும் ..
தல விருட்சம் என்றால் என்ன ?.............

தேகமும் யோகமும் - கவியோகி வேதம்

THANK TO : https://www.vallamai.com/?p=55456 

About the Author

கவியோகி வேதம்
 has written 13 stories on this site.
kaviyogi.vedham@gmail.com http;//kaviyogi-vedham.blogspot.com/
PART1 
images
என்னிடம் யோகா-பயிற்சி பெற்ற அன்பர்களும் அவர்தம் நண்பர்களும் ‘சார்! ‘சார்! பிராணாயாமத்தைப்பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் இல்லை,’ எந்த ஏட்டிலாவது,, இல்லை “வல்லமை’யிலாவது எழுதுங்களேன் என்றுஇடைவிடாது போன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லலாம்தான். ஆனால் அது ஒரு தகுதியான குரு மூலமே கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகத்தைப்பார்த்துக் கற்கும் வழி அன்று அது. மிக ஆழமான மூச்சு இழுத்தல் பற்றியும், மெதுவாகப் பின்பு விடுவதுபற்றியும் எவ்வளவுதான் இங்கே விவரித்தாலும் ஆசிரியர் மூலம் நீங்கள் கற்றால்தான் பயனளிக்கும். “ இனிஷியேஷன்’, அல்லது ஆசிரியர் உடல்தொட்டுப் பயிற்றுவிக்கும்( நேரடிக் கண்காணிக்கும்) வழிமுறைப்பயிற்சி அது.. ஏன் எனில் ஒரு ஆசான் பிராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது அவரது ‘வைப்ரேஷன்’ (-தொடு அதிர்வுகள்’ )மூலமே சீடனுக்கு அந்தத் தெய்வீகக்கலை வெற்றி கொடுக்கிறது. இது அனுபவ பூர்வ உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. மகான் விவேகாநந்தரின் சரித்திரத்தை ஆழமாகப்படிக்கும் எவரும் இதை ஒத்துக்கொள்வர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரைத்தொட்டார். அவ்வளவுதான் தியானத்தில் ஆழ்ந்தார் விவேகாநந்தர்!!
yoga
..1980இல் நான் இதுபற்றி விளக்கமாக என் ‘கசின்’ (பெரியப்பா பையன்)இடம் எடுத்துச் சொல்லியும், ஒரு தகுந்த ஆசான் மூலமே நீ மூச்சிழுத்தல் பற்றிக் கற்கவேண்டும். என் புத்தகத்தைப் படித்துச் செய்யாதே என்று பல தடவை அவனிடம் சொல்லியும் கேட்காமல் அவன்தன் வீட்டில் என் யோகா மற்றும் பிராணாயாமப் புத்தகத்தை முன்னால் வைத்துக்கொண்டு அதில் சொன்னவாறு செய்ய ஆரம்பித்தான்.
சில இடங்கள் அவனுக்குப் புரியவில்லை. அப்படியும் மூச்சை ஏதோ ஒரு ரேஸ் குதிரை போல் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு(சீக்கிரமே இதில்) வெற்றி அடையவேண்டும் என்று தீவிர வெறியில்( என்மேல் பொறாமை?)_ மூச்சைப் பலமாக இழுத்து, ரொம்ப நேரம் கழுத்து நரம்புகள் புடைக்க நெற்றியில் மூச்சைத் தேக்கினான். வேகம் அதிகம் ஆனதால் மூன்றே நாளில் அவன் கழுத்துநரம்பு சுளுக்கிக்கொண்டது. மருந்து சாப்பிட்டுக் கொண்டே விடாமல் பலமாக இன்னும் மூன்று நாள் செய்தான். வெளியே விடும்போதும் உடல் பலத்தை அழுத்தி மூச்சைவிட்டான். புத்தகத்தையும் சரியாகப்படிக்கவில்லை.
பத்துநாள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றால் அவனது பெரியப்பா, “பாருடா இவனை. இரண்டுநாளாக ஏதோ மனம் பேதலித்தவன் மாதிரி ஆகாயத்தையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். யோகாவெல்லாம் பண்ற நீ இவனிடம் சொல்லி என்னவென்று கேட்டுச் சரி பண்ணக்கூடாதா? என்னிடம் பேசவே மாட்டேன் என்கிறானே,”- என்றுசொல்லிக் கண்கலங்கினார். நிதானமாகக் கேட்டதில், அவன் இது பற்றி என்னிடம் மெதுவாக விவரித்ததில் எல்லா விஷயமும் எனக்குப் புரிந்துபோச்! பிறகென்ன? ஒரு நரம்பு மற்றும் மன ஆலோசனை நிபுணரிடம் அவனை அழைத்துப்போய் எல்லாவற்றையும் சரி செய்தோம். அந்த அனுபவத்திற்குப்பிறகு அவனிடம் பிராணாயாமம் என்று ஆரம்பித்தாலே,அதோ அந்தத் ‘ தெனாலிராமனின் சூடான பால்கண்டால் நடுங்கும் பூனைமாதிரி’ பயப்பட்டான். தேவையா இது?
..அதனால்தான் சொல்கிறேன். மூச்சுப்பிராணாயாமம், தீவிர அழுத்தமான யோகா போன்றவற்றை ஒரு யோகா நிபுணர் மூலம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. எனினும் மெது மெதுவாக இத்தொடரில் ஆபத்து இல்லாத மிகலேசான ஆசனங்கள் பற்றியும் அதிக மூச்சிழுப்பு தேவையில்லாத ஒருவகை த்யானம் பற்றியும் விளக்க இருக்கிறேன்.ஆனால்,..
..-தியானம் பயில்வதற்குமுன் மனத்தைப் பக்குவப்படுத்த, எண்ணங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை முதலில் இங்கே விவரிக்கின்றேன். ஏன் எனில் அவை கட்டற்ற எண்ணங்களை அடக்கி தியானத்தில் நமக்கு வெற்றியைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
..முதலாவதாக நம் ‘உள்மனதும் பழக்கவழக்கமும்’ எனும் மிகத் தேவையான விஷயம் பற்றி அலசுவோம். இது ஒரு அடிப்படைப் பயிற்சி ஆகும். கவனமாகப் படிக்கவும்.
ஒருநல்ல தெய்வீகமான பழக்கத்தை உள்மனம் வரை வளர்ப்பது என்பது நல்ல நிலத்தை உழுவது போன்றது.இதற்குச் சிலகாலம் பிடிக்கும். பொறுமை தேவை.ஏன் எனில் அது மனசின் ‘உள்’ளிலிருந்து வரவேண்டும்.இந்த நல்ல பழக்கம் பிற துணைப்பழக்கங்களை உருவாக்கும். அவை மனிதனை சரியான வாழ்க்கைப்பாதையில் செலுத்தும். இதற்கு நாமே முயன்று ‘செயல்தூண்டுதல்’ கொடுக்கவேண்டும். பின்பு அதுவே இயல்பாகி விடும்.உதாரணத்திற்கு ஒருவன் விடாமல் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கெடுதல் என்று தெரிந்தும் அவனால்சட்டென விட முடியாது. ஆனால் அப்பழக்கம், அவனுள் ஆஸ்த்மா என்னும் நோயை உண்டு பண்ணுகிறது. உடனே டாக்டரிடம் ஓடுகிறான்.அவர் அவனிடம்
“டேய்! நீ எப்படியாவது பாடுபட்டு இந்த சிகரெட் பழக்கத்தை ஒழி. ஆனால்தான் நீ பிழைப்பாய்.. இல்லாவிடில் நீ அடுத்தவருடமே பயங்கர இழுப்புநோயால் காலி!” எனச்சொன்னார் என்றால் முயன்று அவன் மெல்லமெல்ல அப்பழக்கத்தை நிச்சயம் விட்டுவிடுவான். ஏன் எனில் அவனது உள்மனமே பயப்படுவதனால். நிச்சயம் இது சாத்தியம். இல்லையா?
துன்பமான காலங்களில் தைரியத்தைக்காட்டும் திறனும், இச்சைப்படும்போதே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் வலிவும்,மனம் காயப்படும் போதும் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கும் திறனும்,தடைகள் ஏற்படும்போது நல்லநம்பிக்கையுடன்(positive approach உடன்) நல்வாய்ப்பையே எதிர்பார்க்கும் ஆழமான எண்ணமும், ’தற்செயல்’ நிகழ்வுகள் இல்லை.ஏன் எனில் இவை நாம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் துணிச்சலுடன் கொடுக்கும் நிலையான, மாறாத ‘பயிற்சி’யின் பயனே ஆகும்.சரியா?அற்பமான சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் ஒரு கோழையைப்போன்று எதிர்மறையாக, அஞ்சியோ இல்லை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் ஒதுங்கியோ போனால், தியானம்
சித்திக்காது. மாறாக அந்தத் தடைகளையே, துன்ப நினைவுகளையே எண்ணுவதால மனம் தியானத்தில் நிலைக்காது. ஆனால் விடாமல் இயல்புப் பழக்கத்தை மீறி ஒருவன் மேலே சொன்னபடி பயிற்சி செய்தால் எந்த நிலைமையிலும் கலங்காதிருப்பான் அதே மனிதன்! பெரிய விஷயங்களையும் அவன்தான் துணிவோடு செய்து வெற்றியையே பரிசாகப்பெறுவான். இது நம் அனுபவ உண்மை.
ஆம்!பழக்கமாகும்வரை நாம் எந்த நல்லதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறோமோ அதை நீடித்து எப்போதுமே செய்ய முனைய வேண்டும்.அதில் தடை வந்தாலும் எதிர்த்து நல்லதையே செய்யவேணும்.பின் வாங்கலாகாது. ‘தீமை இது’ என்று ஒன்று தெரிந்துவிட்டால் அதிலிருந்து கட்டாயம் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்பு அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும்.தியானப் பயிற்சியாளனுக்கு அது வரும்முன்பே தீமை என்று தெரிந்துவிடும். விலகி விடுவான் உடனே. தெய்வீகப்பாதையில் போகும் பலனை உடனே அவன் அறுவடை செய்வான். மகிழ்வான். இனி நமது சிந்திக்கும் முறை பற்றியும், தற்காலக்காலகட்டத்தில் இந்த விஞ்ஞான வசதிகள் எப்படி நம்மை நேர்-
பாதையிலிருந்து கவிழ்த்துவிடத் துடிக்கின்றன என்பது பற்றியும் அடுத்த வாரம் தீவிரமாக அலசுவோம்.(தொடரும்).

Friday, August 9, 2019

Greatest force in the Universe

Q. What is the greatest force in the Universe?
A. Sound.

Q. How?
A. The Universe was created by Sound.

Q. What was it?
A. Pranavam. (ॐ)

Q. How was it created?
A. Contact the Creator for that.

Q. What happened next?
A. ॐ became Multi-dimensional.

Q. What's that?
A. It became the Gayatri.

Q. The Gayatri Mantra?
A. Yes.

Q. What's so special about that?
A. Within it lies the entire secret of Creation itself.

Q. Really?
A. Literally.

Q. How?
A. All this that you know and don't, came from sound. The Gayatri contains the secret of sound, which is safely hidden in the 24 syllabicated matrix of the Mantra.

Q. Please explain in detail?
A. Some other time maybe.

Q. What happens when we chant the Mantra?
A. You tap into the power of the 24 syllables (qualities), replicating the very rhythm (qualities) of the Creator.

Q. If so?
A. A drop taken from the Ocean, shall have all the qualities of the Ocean.

Q. Do I become God then?
A. That's a foolish one.

Q. Then?
A. You become godly.

Q. Just by chanting the Gayatri?
A. By meditating on it.

Q. How's that?
A. Just like butter is hidden in milk, so is divinity hidden in Gayatri. Why not churn it yourself to see.

Q. Can you give a simple meaning of Gayatri?
A. "I meditate on the Supreme Light of the Creator, which is His own resplendence, to illumine my intellect; so I can safely cross it and know the Truth beyond it..." viz. Spiritual Awakening!

Wednesday, July 31, 2019

Who is God? Siva? Yogi? Bhogi?

Q. Who is God?
A. It's not "Who" but "What" is God?
Q. Okay! Then "What" is God?
A. "That" is God!
Q. Who is That?
A. That is exactly "What" is God and not "Who".
Q. Now I am confused?
A. Good. That's what happens, when you try to understand "That", equating it with a "Who" and that too with your intellect.
Q. Why not?
A. Intellect is limited; how can it fully understand "That" which is limitless?
Q. Then how to understand?
A. By becoming one with it.
Q. How to become one with it?
A. By becoming aware of it.
Q. How's that possible?
A. By knowing that you are no different from it.
Q. When that happens, what happens?
A. What happens when salt or sugar is dropped in Water?
Q. It dissolves!
A. Indeed. You too shall dissolve and become a part of it.
Q. Which is?
A. Tat Twam Asi! (You are That!)
~ The Mirror simply reflects what's shown; it never changes with what's reflected.



Q. Who is Siva?
A. The indivisible and invisible whole.
Q. What is Jiva?
A. The divisible and visible parts of the whole.
Q. What's their connection?
A. The same that's there between a drop of Ocean and the Ocean.
Q. Is Siva an Ocean?
A. An ocean of all Jivas, which culminates in Siva.
Q. If Siva is the Ocean, then who is Shakti?
A. The power to make the Ocean churn out waves.
Q. With that what happens?
A. With each wave a new Universe is born.
Q. Where will it all go?
A. When the force is centrifugal, it's creation; When centripetal it's dissolution.
Q. What is the basis of all this?
A. Siva and Shakti!
Q. Where is the basis of all this?
A. Sri Chakra!
Q. What is this Sri Chakra?
A. A blue print of the Universe.
Q. Where to find it?
A. There where the deity resides.
Q. Where would it be?
A. In a temple of course.
Q. Which temple?
A. The Temple of Human Body.
Q. What?
A. The perfect Sri Yantra, is the body itself. In it, lies the gateway to another perfect world.




Q. Who is a Yogi?
A. The One who has controlled his Body, Mind and Breath.
Q. Who is a Bhogi?
A. The One who is controlled by Body, Mind and Breath.
Q. Who is a Drohi?
A. The One who has misused His Body, Mind and Breath.
Q. Who is a Devotee?
A. The One who is trying to control His Body, Mind and Breath.
Q. What is common between the above four?
A. The above four has all the above three, viz. Body, Mind and Breath in common. What they do with it, makes the difference.
Q. How is the Body of the four?
A. The Yogi's body is steady and light; the Bhogi's body is flabby and heavy; the Drohi's body is painfully famished by constant misuse.
Q. How is the Breath of the four?
A. For the Yogi, it's like steady candle flame in a windless night. For the Bhogi, sometimes it's steady, and at other times flickering. For the Drohi, it's constantly, in the fear of being extinguished.
Q. How is the Mind of the four?
A. The Yogi's mind is at peace; the Bhogi's mind is trying to find peace; the Drohi's mind is in pieces.
Q. You haven't told anything about the Devotee?
A. Yes. Because He has a choice between the three and can be whatever likes to be.

வாசியோகம் [ VAASI YOGAM ]

VAASI YOGAM
[ 3ed eye ]
வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்துமூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும்அவ்வாறு இடகலைபிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும்இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம்வாசியோகத்தினால் பிராணன் (காற்றுதங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும்வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்மறையும்இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும்இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும்மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும்மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும்மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலைபிங்கலைகளாகும்அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார்மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும்இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம்பித்தம்சிலேத்துமம்(கபம்மூன்றும் ஆகாதுஎனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறதுஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும்இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்றுகாற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள்இந்தக் கனலால் கபம் அறுபடுகிறதுஇந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்லஉடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறுஇதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்என்று கூறுகிறதுஊத்தை சடலம்உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமேமூலகாரணம்எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கிஉள்ளொளி பெருக்கிஎன்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம்ஊன் என்பது ஊத்தைக்கசிறுஉடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறுஇந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும்வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள்இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறதுபிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறதுஇது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலைஇடையூறாக இருக்கிறதுமாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாதுவாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலைகழுத்து உடல் நேராக நிமிர்த்திபுருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும்பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார்அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்திகாலைமாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும்இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும்புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம்பச்சைவெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்புகிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும்உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும்புலன்கள் வலிமை குன்றும்இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும்மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும்மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்திவருவதே வல்லபம் ஆகும்யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும்அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதேமனதால் அந்த இடத்தைக் காணவேண்டும்நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும்அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும்மேலே தூக்கும்மனமும்வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும்இந்நிலையில் தன்னைத் தான் காணலாம்சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான்தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்நெற்றியடி புருவமத்திஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும்எனவேபுருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும்சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம்அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும்இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும்புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம்இதனால் ஞானரசத்தைப் பருகலாம்உடல் ஒளியுறும்புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும்அப்போது உடல் கற்பூர வாசனை வீசும்உலக விவகாரம் அற்றுப் போகும்வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும்மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும்இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்கபூட்டச் செய்யலாம்அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம்கமண்டலம்குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும்நரைமூப்புமரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறிபிடரி வரை வரும்உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும்அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும்மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும்அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும்பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும்சூரியன்சந்திரன்நட்சத்திரம்ஆகியவை அவர்களுடன் பேசும்இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும்நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும்தொலைதூரம் நடப்பதைக் காணவும்தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும்இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும்சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும்இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான்அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான்எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும்அதற்குக் கால சித்தியே துணையாகும்காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான்வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாதுபசி நீங்கும்கபம் போகும்காம உணர்வு நீங்கும்இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவுஇருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும்தனிக்குடிசை (வீடு-மாடிகட்டிக் கொள்ளவேண்டும்இந்நிலையில் நல்ல குருவும்சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசிபாசிப்பயிறுமிளகுசீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும்மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும்வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாதுமழைவெயில்பனிகாற்று நான்கும் ஆகாதுபிரம்மசரிய விரதம்ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும்தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள்இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால்மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம்சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம்இதற்கு இடம்பொருள்ஏவல் மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும்பாதம்ஆசனவாய் இவைகளில் எரிச்சலும்வலியும் இருக்கும்தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும்அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம்இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும்ஒளி காணும்வரை செலுத்தவேண்டும்சாதனை காலத்தில் புருவமத்திஉச்சிபிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும்ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலைமாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும்இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர்இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும்அதாவது புலன்களும்கருவிகளும் செயலிழந்துவிடும்மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றனபுலன்கள் சுத்தமாகும்முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லைபுருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறிபிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும்சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம்திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்துசரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலைமதியம்மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள்தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர்காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள்ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லைசஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும்அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும்பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும்முக்திநிலை கூடும்இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும்அஜபா காயத்ரியை (ஓம்தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும்சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும்இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசிவரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும்உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும்அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும்அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும்உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும்இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாதபித்தசிலேத்துமம் அதிகரிக்கும்பித்தம் அதிகமாகும்மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும்பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள்அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும்அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும்காலைமாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும்உடலும் இணங்கிய (காலம்சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும்யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும்பிராணன் கபாலம் ஏறும்யோகம் 12 ஆண்டில் சித்தியாகும்அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும்மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும்இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம்இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும்இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர்தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம்இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல்இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல்அங்கு பரை ஆடுவதைக் காண்பாய்அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடிஉயிர்நாடிபிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாதுயோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும்சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள்பொய் யோகியாகி விடும்ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள்சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள்இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்புமயக்கம் இவை தோன்றும்மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும்இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும்இதைக் குளிகை என்பர்இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள்கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும்முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடிநரம்புகள் இறுகிக் காணப்படும்உடல்உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும்குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும்மனம்உடல்உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும்ஒளி பெருகும்இருள்விலகும்இந்நிலை வந்தால் நரைமூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடிநரம்புகள் இறுகும்ககன மார்க்கத்தில் செல்ல முடியும்பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம்வல்லபங்கள் அநேகம் உண்டுமனதில் உற்சாகம் தோன்றும்கேட்டதெல்லாம் கிடைக்கும்வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள்இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாதுமனம் சித்தியும்உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.பிரமரந்திர உற்பத்திபிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும்இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும்ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும்முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும்இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும்இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும்வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும்இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும்உடல் பலமடையும்சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும்ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறிரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும்உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும்அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும்பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரிமூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோசஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம்மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும்மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வுதாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும்இதுவே எல்லாம் பிரம்மமயம்இதை எல்லாரும் அடையலாம்இதற்கே மறு பிறவி கிடையாது.

 thank 
Deena Dayaalan sent Mail to me
from  https://sivasakthipandian.blogspot.in/