Wednesday, October 11, 2017

ஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள்[ மூன்று தேவி = மூதேவி ] முனிநிழல் வழிபாடு [jeshta] Jyestha

மன அமைதியையும் பெற்று வாழ ஸ்ரீவெங்கடராம சித்தர் அருளிய அமுத மொழிகள் 

Tirupparaṅkuṉṟam, 773 CE




Image taken on 21/12/2022 
பாண்டியர்கள் தேடி பயணம ( Facebook) 

நந்தி மண்டபம் இடதுபுறம் படிக்கட்டு கீழே கிரில் போட்டு மூடி இருக்கும் இடம்


Now currently 







கிபி 773 ஆண்டு மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனின் தளபதியான சாத்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி , ஆறுபடை வீட்டின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஜேஷ்டா தேவி என்னும் மூதேவிக்கு குடைவரை கோயில் எடுப்பித்ததாக அங்கு இருக்கும் கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது. இவரை பூஜை செய்தால் நோய் தீரும் என ஆகமம் கூறுகிறது. அதன் அடிப்படையில் பாண்டியர்கள் தேடி பயணம் குழு வின் சார்பாக வழிபாட்டிற்கு முயற்சி எடுக்கப்பட்டு இன்று திருக்கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்பின் பேரில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் தீர்க்கும் மூதேவி என்னும் ஜேஷ்டா தேவியை வழிபட வாருங்கள்.
சு.மணிகண்டனா,பேரா ப.தேவி அறிவு செல்வம், சிற்ப சாஸ்திர பயிற்றுநர் ,மு. அறிவு செல்வம், கோயில் கட்டடக்கலை பொறியாளர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருக்கும் நமது தாய் தெய்வமான தவ்வையை இன்று காண்பதற்கு சென்றவர்கள் பூட்டி இருப்பதாக தெரிவித்ததை அடுத்து நாங்கள் சென்று இது பற்றி விசாரித்த பொழுது, தீப்பந்தத்துடன் மிகவும் சிரமப்பட்டு வழிபாடு செய்வதுபோல இருப்பதால், மக்கள் வசதியாக வழிபடுவதற்கு தேவையான வசதிகளை கும்பாபிஷேகத்தின் போது செய்துவிட்டு பின்பு பொதுமக்கள் வழிபாட்டிற்கு விடுவதாக செய்தி கிடைத்தது. அதன்படி கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஜேஷ்டா தேவியின் அருள் நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருப்போம். அதுவரை அவள் ஓய்வில் இருக்கட்டும்.

Thank to Devi Arivu Selvam .. 
#பாண்டியர்கள்_தேடி_பயணம் #பாண்டியநாடு_அறக்கட்டளை 
#கயல்சின்னம் #ஜேஷ்டாதேவி #மூத்ததேவி #மூதேவி #தவ்வை #மீன்சின்னம்





Thank: Canopus Krishnakumar
அடியார்
சற்குரு மகாதேவா, மூதேவியின் வழிபாடு சோம்பேறித் தனத்தை உண்டாக்கும் என்கிறார்களே. இதைப் பற்றிய விளக்கத்தை தங்கள் திருவாக்கால் அறிய விரும்புகிறோம்.


சற்குரு
உன்னுடைய கேள்வியிலேயே பதிலிருக்கிறதே. நீதான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ”மூ” என்றால் உயர்ந்த, சிறந்த, உன்னத, உத்தம, மூல, முதன்மையான, மூத்த என்றெல்லாம் பொருளுண்டு. அப்படி இருக்கும்போது உயர்ந்த தேவியை வணங்கும் நீ தாழ்ந்து போவாயா, சற்றே சிந்தித்துப் பார்.

மூதேவி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டாதேவி திருமகளுக்கு மட்டும் மூத்தவள் என்று நினைக்க வேண்டாம். நவகிரகாதியருக்கே மூத்தவள் ஜேஷ்டாதேவி. மேலும் மூத்தவள் என்றால் எல்லோருக்கும் முன்னால் உற்பவித்தவள் என்று மட்டும் பொருளல்ல. அனைவரையும் விட ஞானத்தில், இறை பக்தியில் உயர்ந்தவள் என்றும் பொருள் உண்டு.
ஸ்ரீஜேஷ்டாதேவியிடம் தஞ்சம்
அடைந்த ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி
திருக் கைலாயம், வைகுண்டம் போன்ற தெய்வ லோகங்களைப் போல ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு என்றே ஒரு பிரத்யேகமான லோகமும் உண்டு.
மௌனகுரு தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்களுடன் காட்சி தருவதைப் போல ஸ்ரீஜேஷ்டாதேவியும் இரு கன்னிகைகளுடன் காட்சி தருவதை பல திருத்தலங்களில் நாம் பார்க்கலாம். ஸ்ரீஜேஷ்டாதேவி லோகத்தில் நிரந்தர வாசம் கொண்ட இத்தேவியர்களின் திருநாமங்கள் வில்வாம்ருதா, சுநந்யை என்பதாகும். ஸ்ரீஜேஷ்டாதேவியின் வலது புறத்தில் குதிரை முகத்துடன் அருள்புரியும் தேவியே வில்வாம்ருதா தேவி ஆவாள்.
ஒவ்வொரு தெய்வத்தின் அருள் புரியும் பாங்கு யுகம் என்னும் காலக் கோட்பாட்டைப் பொறுத்தும், மனிதர்கள் விலங்குகள் என்று ஜீவ சக்திக் கோட்பாட்டைப் பொறுத்தும் மாறுபடுவதைப் போல இத்தேவியர்களின் அருள்புரியும் பாங்கும் யுகத்திற்கு யுகம் ஜீவன்களைப் பொறுத்து மாறுபடும். கலியுக நியதியாக மனிதர்களுக்கு இவர்களின் அனுகிரக பாகுபாட்டை விளக்க வேண்டுமானால் வில்வாம்ருதா தேவி மனிதர்களுக்கு ஞாபக மறதியைத் தரக் கூடிய தேவியாக அருள்பாலிக்கிறாள்.
பொதுவாக, தேவதைகளும் தெய்வங்களும் மனிதர்களுக்குத் தேவையான நற்சக்திகளைத் தானே வரமாகத் தருவார்கள்? அப்படி இருக்கும்போது ஞாபக மறதியை ஒரு தெய்வம் அளித்தால் அது எப்படி ஒரு அனுகிரகமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம்? உண்மையில் இதை தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஞாபக மறதியின் மகத்துவம் புரிய வரும்.
எந்த ஜீவ ராசியும் ஞாபக மறதி இல்லையென்றால் அது ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ளவே முடியாது. இதுவே உண்மை. இதற்காகத்தான் ஒரு ஜீவன் ஒரு பிறவி முடிந்து அடுத்து பிறவி எடுக்கும்போது இறைவன் அந்த ஜீவனின் முந்தைய பிறவி நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறான்.






இதை மேலும் விளக்கினால் இன்று நீங்கள் ஏதாவது ஒரு வருத்தமான செய்தியைக் கேள்விப்பட்டால் இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது. நாட்கள் செல்லச் செல்ல அந்த துக்கமான செய்தியை எந்த அளவிற்கு மறக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்குத் தூக்கம் அமைய வாய்ப்புண்டு. அது மட்டுமல்லாமல் ஒருவர் தேவைக்கு அதிகமாக செல்வத்தைத் தேடி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இறந்தபின் தான் பாடுபட்டுத் தேடிய செல்வத்தின் நினைவு அவரிடம் இருந்தால் அவருடைய உயிர் தான் தேடிய செல்வத்தை விட்டுப் பிரியாமல் பேயாய் அவ்விடத்திலேயே சுற்றி வரும்.
இதைத்தான் பூதம் காத்த செல்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த செல்வம் யாருக்கும் பயன்படாது. அதை வேறு யாரும் பயன்படுத்தவும் முடியாது. மனித உடல் இல்லாததால் உயிர் பிரிந்தவர்கள் ஆவி ரூபத்தில் அதை பயன்படுத்த முடியாது. மற்றவர்கள் அந்தச் செல்வத்தைக் கண்டால் அதைப் பயன்படுத்தும் எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது. எனவே பணம் சேர்த்தவர்களுக்கு ஞாபக மறதி என்ற ஒன்று ஏற்பட்டால்தான் அவர்கள் தாங்கள் தேடிய செல்வத்தைப் பற்றி மறந்து இப்பூமியிலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவிகளுக்குத் தங்களை ஆயத்தம் செய்து கொள்ள முடியும்.
அதே போல ஒருவர் உங்ளைத் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் மீண்டும் அவரைக் காணும் போதெல்லாம் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும் அல்லவா? இவ்வாறு ஒருவர் உங்களுக்கு இழைத்த துன்பம் முற்பிறவிகளில் நீங்கள் அவருக்கு இழைத்த துன்பத்தால் ஏற்பட்ட விளைவாக இருந்தால் நீங்கள் அவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறுதானே. இத்தகைய பழிவாங்கும் உணர்ச்சி உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக தங்கி விடும்போது அதுவே கான்சர் அல்லது புற்று நோய் என்ற கொடிய நோயைத் தோற்றுவித்து விடுகிறது.
மனிதன் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் காரணம் அவனுடைய முற்பிறவியின் செயல்களே என்று மகான்கள் வலியுறுத்துகிறார்கள். பழிக்குப் பழி என்ற உணர்வு சமுதாயத்தில் தற்போது மேலோங்கி நிற்பதன் காரணமாகவே எங்கு நோக்கினும் புற்று நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் கண் கூடாகக் காணலாம்.
எனவே தயவு செய்து பழிவாங்கும் எண்ணத்தை வேரோடு களைய இறைவனை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு ஒருவர் அளித்த துன்பத்தை மறக்கத் தேவையான சக்தியை அளிக்கும் தேவியே வில்வாம்ருத தேவி ஆவாள்.
இவ்வாறு மனித உடல் இருக்கும்போது அந்த உடலில் தூக்கம் போன்ற சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக வில்வாம்ருத தேவியும் மனித உடலைத் துறந்து அடுத்த பிறவிக்குத் தயாராவதற்காக இப்பிறவி நிகழ்வுகளை மறக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக சுநந்யை தேவியும் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீஜேஷ்டாதேவியின் இடது புறம் அருள்பாலிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.  
ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி பிரசாதமாகப் பெற்ற அபிஷேக தீர்த்தத்தை தூங்கு மூஞ்சி மரத்திற்கு ஊற்றி மேற்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தால் எதை எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க வைக்கும் சக்தியை வில்வாம்ருத தேவியும் சுநந்யை தேவியும் அருள்வார்கள்.
மேலும் பாதுகாப்பு, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மறுமணம் செய்து கொண்ட இளம் பெண்கள் தங்கள் முந்தைய மண வாழ்க்கை நிகழ்ச்சிகளால் தற்போதைய வாழ்வில் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து மன அமைதி இழக்க நேரிடும். அத்தகையோருக்கு மன அமைதி அளிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள். 
அதே சமயம் கணவனை இழந்தவர்கள் தாங்கள் மீண்டும் மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் கணவனையே நினைத்து மிஞ்சிய காலத்தை ஆன்மீகமாகப் பாதையில் அமைத்துக் கொள்வோம் என்ற மன உறுதியுடன் இருந்தால் அவர்களுக்குத் தேவையான மன உறுதியும் பாதுகாப்பான சூழ்நிலையும் அமைய சுநந்யை தேவி அருள்பாலிக்க வல்லவள்.
பல்வேறு உடல், மன உபாதைகளால் ஒவ்வொரு இரவும் தூக்க மாத்திரையை உட்கொண்டே தூங்குவது என்னும் நோயால் பலரும் வாடுகிறார்கள். அத்தகைய பழக்கத்திற்கு ஆளானோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு மேற்கூறிய முறையில் வழிபாடுகள் இயற்றி வந்தால் நாளடைவில் இயற்கையான உறக்கமும் மன அமைதியும் கிட்டும். நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமடையும்.
மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடு
மூத்த திருமகள் என்றழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டா தேவியை வணங்கி வழிபட பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இதில் கலியுகத்தில் தேவியை வழிபடும் சிறப்பு பூஜை முறையாக சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளதே மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடாகும்.
தியாக சீலரான, உத்தம புருஷரான உத்தாதலக மகரிஷியின் அனுகிரக சக்திகளையே நாம் முனிநிழல் என்றழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறந்த ஒன்றைக் கூற வேண்டுமானால் அதுவே குரு பிரசாதம் ஆகும். சற்குருவின் கருணை கடாட்சத்தைத் தவிர உயர்ந்த பொருள் இங்கு வேறொன்றுமில்லை. இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
உத்தம பத்தினி என்றால் கணவனை நிழல் போல் தொடர்பவள் என்ற ஓர் அர்த்தம் உண்டு. அதாவது உருவமும் நிழலும் ஒன்றை விட்டு ஒன்றுப் பிரியாத நிலையில் இருப்பதால் இந்நிலையில் வாழும் தம்பதிகள் தெய்வ கடாட்சம் பூரணமாய் நிரம்பப் பெற்றவர்கள் ஆகிறார்கள். அப்படி சிறப்பான வாழ்க்கை வாழும் கணவனின் திருமார்பில் மனைவியும் மனைவியின் உள்ளத்தில் கணவனும் வாழ்கிறார்கள் என்பது இல்லற தத்துவம்.
அதனால்தான் பெருமாளை வழிபடுவதால் திருமாலின் திருமார்பில் உறையும் லட்சுமி தேவியையும் வழிபட்ட பலன் பெருகி இல்லத்தில் லட்சுமி கடாட்ச சக்திகள் நிரவும். அதே போல திருமாலின் அவதாரமான மச்சாவதாரத்தை நினைவு கூரும் வகையில் அமையும் வண்ண மீன்கள் வளர்ப்பும் இல்லத்தில் செல்வத்தையும் அமைதியையும் பெருக்கும்.
ஸ்ரீசதாதப சித்தர் அருளிய இந்த முனிநிழல் வழிபாட்டை திருக்கோயில்களில் நிகழ்த்துவதே சிறப்பாகும். திருச்சி, செம்பொனார் கோயில், காஞ்சீபுரம் போன்ற குறித்த சில திருத்தலங்களில் மட்டுமே ஸ்ரீஜேஷ்டாதேவியின் திருஉருவம் உள்ளது. மற்ற திருத்தலங்களில் தேவியை வழிபட விரும்புவோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய வடமேற்கு (வாயு மூலை) திசையில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
இல்லத்தில் ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபட விரும்பினால் அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது (300 நாட்களுக்குக் குறையாமல்) காலையில் எழுந்தவுடன் கரதரிசனம் செய்து உத்தாதலக மகரிஷியை வழிபட்டிருக்க வேண்டும். ஸ்ரீசதாதப சித்தர் அருளிய ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை குறைந்தது 300 தடவை ஓதி வழிபட்டவர்களும் இல்லத்திலேயே ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
சுத்தமான நல்லெண்ணையால் 36 அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த 36 தீபங்களும் திசைக்கு ஒன்பது தீபங்களாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிழக்கு திசையை நோக்கி மூன்று வரிசையில் மூன்று தீபங்களையும். அதே போல தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளையும் நோக்கி தீபங்களை ஏற்றி அந்த 36 தீபங்களின் நடுவில் பச்சரிசி மாவால் ஹிருதய கமல கோலத்தையோ அல்லது ஸ்வஸ்திக் சக்கரத்தையோ வரைந்து கொள்ள வேண்டும்.
திருக்கோயில்களில் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றிய பின் ஆப்பிள், செந்தாமரை, பவளமல்லி, நீலோத்பலம் போன்ற மலர், கனி அலங்காரத்தை நிறைவேற்றுவது சிறப்பாகும். மேற்கூறிய முறையில் 36 தீபங்களையும் ஏற்றி வைத்து ஸ்ரீஜேஷ்டாதேவி துதியையும் வில்வாஷ்டகம், கோளறு பதிகம் போன்ற துதிகளையும் ஓதி வழிபடுவதால் சித்தர்கள் அருளும் முனிநிழல் என்ற அபூர்வமான அனுகிரக சக்திகளைப் பெறலாம்.
2012ம் வருடத்திற்கு உரிய சிறப்பான வழிபாடாக மலர்வதே மேற்கூறிய மலர், கனியுடன் திகழும் ஸ்ரீஜேஷ்டாதேவி வழிபாடாகும். காலம் செல்லச் செல்ல அமைதியின்மையும் மனக் குழப்பமும் மக்கள் சமுதாயத்தில் மிகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட சமுதாயத்தில் தோன்றும் பல்வேறு சீர்கேடான நிகழ்ச்சிகளால் கடவுள், குரு நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உறுதியான, திடமான மனத்தை பெற்று வாழ உதவுவதே ஸ்ரீஜேஷ்டா தேவி வழிபாடாகும்.


வரும் 2020ம் ஆண்டு தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு சூரியனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. எதிர்பாராத வகையில் ஓரிரு நிமிடங்கள் மின் விளக்குகள் நின்று விட்டாலே மக்கள் மனதில் அச்சம், குழப்பம், பீதி போன்றவை உருவாகி விடுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருக்கும்போது சூரியனே மறைந்து போகிறார் என்றால் அத்தகைய சூழ்நிலையில் எத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம் ஏற்படும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
எனவே அத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம், பீதியையும் அகற்றக் கூடிய அனுகிரக சக்தியை அளிக்கக் கூடியதே மூத்த திருமகள் வழிபாடாகும். தெய்வ நம்பிக்கையையும், குரு நம்பிக்கையையும் மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள விழைவோர் தொடர்ந்து ஸ்ரீஜேஷ்டா தேவியை மேற்கூறிய முறையில் துதித்து வருவதால் தங்கள் சாதனையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.
பொதுவாக தெய்வத்தை இந்நாளில் இந்த இடத்தில்தான் வழிபடலாம் என்ற வரைமுறை கிடையாது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை வழிபடலாம். இதில் எந்த விதமான சந்ததேகமும் வேண்டாம். ஆனால், சில குறிப்பிட்ட பூஜைகளில் சிறப்பான பலனை பெறுவதற்காக குறித்த கால தேச வரைமுறைகள் சித்தர்கள், மகான்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் உண்மையே.
இம்முறையில் ஸ்ரீஜேஷ்டா தேவியை ரோஹிணி, மகம், அனுஷம், திருவோணம் என்னும் நட்சத்திரங்களில் வழிபடுவதால் உறுதியான மன உறுதியும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் சாதிக்கும் திறமையும் சிறப்பான முனிநிழல் அனுகிரகமாக கிட்டும். ஒரு வருடத்தில் வரும் மேற்கூறிய நான்கு நட்சத்திர தினங்களிலும் தொடர்ந்து வழிபாடுகளை நிகழ்த்தி வந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் அஞ்சாமல் செயல்படும் மன உறுதியைப் பெறலாம்.
நவமி, திரயோதசி, பௌர்ணமி திதிகளும் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய சிறப்பான பூஜை தினங்களாகும். இந்த திதிகள் மேற்கூறிய நட்சத்திரங்களுடன் இணைந்து வந்தால் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.

ஸ்ரீஜேஷ்டா தேவி போற்றித் துதிகள்
(சனீஸ்வர பகவான் ஸ்ரீஜேஷ்டாதேவியை சுஜனி என்ற தேவமொழியில் ஓதி வணங்கிய துதியை தமிழ் மொழியில் அருளியவர் ஸ்ரீசதாதப சித்த ஈச பிரான் ஆவார்)
திருமகள் பூவாளுர்













1. ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி
2. ஓம் க்லீம் அடைக்கலம் அருள் அன்னையே போற்றி
3. ஓம் க்லீம் சிவனருள் இனிதருள் சியாமளா போற்றி
4. ஓம் க்லீம் ஆசை அறுப்பாய் போற்றி
5. ஓம் க்லீம் மும்மலம் நீக்கும் மூலதேவியே போற்றி

திருமகள் பூவாளுர்
6. ஓம் க்லீம் பாற்கடல் பனித்த பைந்தளிர் போற்றி
7. ஓம் க்லீம் சுயம்வர சூட்சும சுந்தரி போற்றி
8. ஓம் க்லீம் சுரபி முலைப்பால் சுவையே போற்றி
9. ஓம் க்லீம் இணைகரம் ஓர்கரம் உவந்தாய் போற்றி
10. ஓம் க்லீம் ஆதவன் செஞ்சுடர் அருட்குடை போற்றி
11. ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி
12. ஓம் க்லீம் சந்தியா வந்தன தாரகை போற்றி
13. ஓம் க்லீம் மூலாதார முப்புரி முனிநிழல் போற்றி
14. ஓம் க்லீம் ஆறாதாரம் அமர்தீ அருளே போற்றி
15. ஓம் க்லீம் தினகரன் கனல்மேவும் வெஞ்சுடர் போற்றி
16. ஓம் க்லீம் அங்காரகனுக்கு அருள் அம்மையே போற்றி
17. ஓம் க்லீம் நீலோத்பலம் நயந்த நிர்மலா போற்றி
18. ஓம் க்லீம் முத்திக்கு வித்தே முழுமதி போற்றி
19. ஓம் க்லீம் நித்திய திருவடி நீங்காய் போற்றி
20. ஓம் க்லீம் நிலமளந்தான் நல்லுறவே போற்றி
21. ஓம் க்லீம் தீர்க சுமங்கலித் தாயே போற்றி

ஸ்ரீஜேஷ்டாதேவி பூவாளுர்
22. ஓம் க்லீம் வரம்பிலா வரமருள் வனிதா போற்றி
23. ஓம் க்லீம் உள்ளம் உவக்கும் உண்மை போற்றி
24. ஓம் க்லீம் துன்பத்திடை துணை வரும் தோணி போற்றி
25. ஓம் க்லீம் அறிதுயிலான அருமருந்தே போற்றி
26. ஓம் க்லீம் வழித் துணை நீயே தோளா மணியே போற்றி
27. ஓம் க்லீம் ஆனந்த பைரவி அமுதே போற்றி
28. ஓம் க்லீம் ஆணி பொன்னம்பலத்து அற்புதமே போற்றி
29. ஓம் க்லீம் சுந்தர வடிவழகி சூலினி போற்றி
30. ஓம் க்லீம் சாட்சியானவளே சத்தியமே போற்றி
31. ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
32. ஓம் க்லீம் தன்னிலை மறைக்கும் தயாநிதி போற்றி
33. ஓம் க்லீம் என்னிலை எனக்கருள் எந்தாய் போற்றி
34. ஓம் க்லீம் எண்ணம் வண்ணமாக்கும் ஏந்திழை போற்றி
35. ஓம் க்லீம் சித்சபையின் நர்த்தனமே சிந்தாமணி போற்றி
36. ஓம் க்லீம் குருவருள் திருவருள் நினதருள் போற்றி

நமது பூமியில் உள்ள தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தேவ லோகங்களிலும் சரஸ்வதியின் அருளால் தோன்றிய பல்லாயிரக் கணக்கான மொழிகள் உண்டு. அது போல சனீஸ்வர லோகத்திற்கு உரித்தான தேவமொழியே சுஜனி என்னும் மொழியாகும். யாராக இருந்தாலும் தமது தாய் மொழியிலேயே உரையாடுவதால் தங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளியிடலாம் என்ற கருத்தை ஒட்டி சனீஸ்வர பகவானும் ஸ்ரீஜேஷ்டா தேவியை தன்னுடைய தேவ அன்னையாகக் கருதி அந்த மாதாவைத் தன்னுடைய லோகத்திற்கு உரித்தான சுஜனி என்ற தேவமொழியில் துதி செய்து வணங்கினார்.
சுஜனி மொழியில் அமைந்த துதியை கலியுக மக்களும் உணர்ந்து பயன்பெறுவதாற்காக திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதா தப சித்த பிரான் அந்த சனீஸ்வர துதியின் தத்துவத்தை தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள். மிகவும் சக்தி வாய்ந்த இத்துதிகளின் ஆழ்ந்த உட்பொருளை உணர்ந்து கொள்ள குறைந்தது 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பது சித்தர்கள் கருத்து.
இருப்பினும் மூன்று துதிகளின் மேலோட்டமான பொருளை மட்டும் இங்கு அளித்துள்ளோம். இதன் மூலம் அனைத்து துதிகளின் மகத்துவத்தையும் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து ஸ்ரீஜேஷ்டாதேவியை துதித்து, வணங்கி பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி
ஐந்து அட்சரங்களின் சக்தியாக விளங்கும் நாதனான ஆதிசிவன் அருளால் தோன்றிய ஐந்து எழுத்து நாமம் கொண்ட சதாதபஸ் என்னும் அடியேன் ஐந்து வண்ணமாய் உலகெங்கும் விளங்கும் மக்கள் ஐந்து விதமாய் துலங்கும் அனைத்து சுக போகங்களையும் பெற்று வாழ ஐந்து கரங்களுடன் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கி ஐந்து எழுத்து தேவியின் துதியை சமர்ப்பிக்கிறேன் என்பது இத்துதியின் மேலோட்டமான பொருளாகும்.
உலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் சிவப்பு, கருப்பு போன்ற ஐந்து வண்ணம் உடையவர்களாய்ப் பிரிக்கலாம். இவ்வாறு ஐந்து வண்ணம் உடைய மக்களுக்கும் அருள்பாலிப்பதால் திருச்சி உறையூரில் அருள்புரியும் பெருமான் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்தால் துதிக்கப்படுகிறார். உலகத்தில் எந்த வண்ணம் உடைய மனிதர்கள் எந்த இடத்திலிருந்து எந்த மொழியில் இறைவனைத் துதித்தாலும் அவர்கள் பிரார்த்தனை உறையும் இடமே உறையூர் என்பதாகும்.
மனிதப் பிறவி எடுத்த ஓர் உயிர் 32 விதமான இன்பங்களையும்  சுக போகங்களையும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவித போகங்களையும் ஒரு மனிதன் அனுபவித்தால்தான் அவன் முக்தி பெற்று அடுத்த ஜீவ நிலைக்கு உயர முடியும். இவ்வாறு 32 விதமான இன்பங்களை மக்கள் அனுபவிப்பதற்காகவே நமது முன்னோர்கள் 32 விதமான அறங்களைப் போதித்து அதைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தியும் வந்தார்கள்.
கலியுகத்தில் அத்தகைய 32 அறங்களையும் நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதால் ஸ்ரீஅகத்திய பெருமான் பெருங்கருணை கொண்டு 32 தேவாரத் துதிகளை அருளியுள்ளார்கள். இத்துதிகளைத் தொடர்ந்து ஓதி வந்தால் இறைவன் அருளால் 32 விதமான அறங்களை ஆற்றிய பலன்களையும் நாளடைவில் பெறமுடியும். (3+2=5 என்பதால் 32 அறங்களும் ஐந்தாய் விளங்கும் என்பதன் பொருள் இதுவே,)
ஐந்து எழுத்து தேவி என்பது ஸ்ரீஜேஷ்டாதேவியைக் குறிக்கும் நாமம் ஆகும். ஸ்ரீஜேஷ்டாதேவியை மூத்த திருமகள் என்று துதித்து வணங்குவதல் மரபு. ராமரை பெருமாள் என்றும் லட்சுமண மூர்த்தியை இளைய பெருமாள் என்றும் அழைப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே.
எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் கிழக்கு திக்கு நோக்கி நின்று ஆரம்பித்தல் நலம் என்ற வழக்கத்தை ஒட்டி எண் கணித சூத்திரப்படி ”ஐங்கரன் அவணியாய்” என்ற பத்து எழுத்துக்களும் கிழக்கு திக்கைச் சுட்டுகின்றன. மேலும், எட்டு திக்குகளுடன், ஆகாயம், பாதாளம் என்ற திக்குகளும் சேர்ந்து திக்கு சக்திகள் பத்தாக அமைவதால் ஸ்ரீஜேஷ்டா தேவியின் இம்முதல் துதி திக்கு தேவதா வழிபாடாகவும் மலரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இத்துதியில் உள்ள சக்தியை மக்களுக்கு அளிப்பதற்காக ஸ்ரீசதாதப சித்த பிரான் தன்னுடைய அருந்தவ சக்திகளை ”க்லீம், போற்றி” என்ற அட்சரங்களில் பதித்து வைத்துள்ளார். மேலும், இந்த துதிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாய் இருப்பதால் இவற்றை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி விடாமல் இருப்பதற்காக இத்துதிகளை ”ஓம்” என்ற அட்சர பாதுகாப்புப் பெட்டகத்தில் பொலிந்து வைத்துள்ளார்.
இம்முதல் துதியில் உள்ள அட்சரங்கள் 18. அதாவது 1+8=9. 9 என்ற எண் விநாயகப் பெருமானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் உரியதாக இருப்பதால் இம்முதல் துதியே மக்களுக்கு ஆதி, அந்தமாய் அனைத்து நலன்களையும் நல்க வல்ல அற்புதமான மகத்துவத்துடன் விளங்குகிறது. மேலும் எண் 9 முழுமையையும் பூர்ணத்துவத்தையும் குறிக்கும்.
ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி
பொதுவாக, மகா விஷ்ணு நெற்றியில் திருநாமத்துடனும், சிவபெருமான் திருநீற்றுப் பட்டையுடனும் திகழ்வார்கள் அல்லவா? ஆனால், குறித்த விசேஷ தினங்களில் இருவரும் தங்கள் நெற்றித் திலகங்களை மாற்றிக் கொள்வதுண்டு.
உதாரணமாக, வைகுண்ட ஏகாதசி திருநாளன்று சிவபெருமான் நெற்றிக்கு அழகான திருமண் தரித்து நாம அலங்காரத்துடன் சென்ற விஷ்ணு மூர்த்தியை வைகுண்டத்தில் தரிசித்து மகிழ்வார். அதே போல மகா சிவராத்திரி அன்று லட்சமி தேவி பெருமாளுக்கு திருநீற்றை நீரில் குழைத்து இட அந்த அற்புதமான விபூதி அலங்காரத்துடன் திருக்கைலாயம் சென்று சிவபெருமானை தரிசித்து மகிழ்வார்.
எனவே இறை மூர்த்திகளிடம் எந்த பேதமும் கிடையாது. இதை உணர்ந்தாவது சிவ, வைஷ்ணவ பக்தர்கள் அந்தந்த மூர்த்திகளுக்கு உரித்தான விசேஷ பூஜை தினங்களில் குறித்த நெற்றித் திலகங்களை அணிந்து வழிபாடுகளை இயற்றுவதால் தங்கள் பக்தியை எளிதாக பெருக்கிக் கொள்ள முடியும்.
நெற்றித் திலகம் என்பது இறை மூர்த்திகளுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும் நெற்றித் திலகம் இன்றியமையாததே. கணவன்மார்கள் தினமுமோ அல்லது வெள்ளிக் கிழமைகளிலாவது தங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் நெற்றி, முன் வகிடு, திருமாங்கல்யம் இவற்றில் தூய்மையான குங்குமத்தால் பொட்டு வைத்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் பெண்களின் சுமங்கலித்துவ சக்திகள் விருத்தியாகி அது கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுளையும் லட்சுமி கடாட்ச சக்திகளையும் அளிக்கும்.
அதே போல மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்கள் வெளியே செல்லும்போது இறைவனை வேண்டி கணவன்மார்களின் நெற்றியில் குங்குமத்தால் திலகம் இட  வேண்டும். இது கணவன்மார்கள் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் இடர்களை, தடங்கல்களை நீக்கி அவர்களுக்கு வெற்றியை அளிக்கும். அதனால் இத்திலகம் வெற்றித் திலகம் என்றழைக்கப்படுகிறது.
சப்த ரிஷிகள் ஒரு முறை ஸ்ரீஅகத்திய பெருமானை அவருடைய காரியங்களில் ஏற்படும் தொடர்ந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்று கேட்டபோது அப்போது அவர், ”அடியேனுடைய தர்ம பத்தினி லோபாமாதா அடியேன் வெளியே செல்லும்போதெல்லாம் அடியேனுக்கு வெற்றித் திலகமிட்டு எம்பெருமானை பிரார்த்தித்துதான் விடை கொடுப்பாள். அதுவே அடியேன் ஆற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றி வாகை சூட உதவி புரிந்தது,” என்று பணிவுடன் பதிலளித்தாராம்.
எப்போதும் வெற்றியையே நல்கும் வர சக்திகளை அகத்திய மாமுனி பெற்றிருந்த காரணத்தால்தான் அவர் ஸ்ரீராமருக்கே ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஜெயராமனாக ராவணனை வெற்றி கொள்ளச் செய்தார்.
அவ்வாறு கணவன்மார்கள் மனைவிமார்களுக்கு சுமங்கலித் திலகம் இடும்போதும், மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு வெற்றித் திலகம் இடும்போதும்
இறை நாமம் திருநாமம்
திருநாமம் ஒரு நாமம்
ஒரு நாமம் நாமபுரீசா நின் திருநாமமே
என்று ஸ்ரீநாமபுரீசரை தியானித்து திலகம் இடுதல் நலம். ஸ்ரீநாமபுரீசர் திருத்தலம் புதுக்கோட்டை பட்டுக் கோட்டை சாலையில் ஆலங்குடியில் அமைந்துள்ளது. 
ஸ்ரீநாமபுரீஸ்வரர் திருத்தலம்
ஆலங்குடி
இவ்வாறு தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஸ்ரீஜேஷ்டா தேவி தன் உத்தம கணவரான உத்தாதலக மகரிஷிக்கு நெற்றித் திலகம் இடுவது வழக்கம். நாம் காலையில் எழுந்து கரதரிசனம் செய்யும்போது உத்தாதலக மகரிஷியை தியானித்து வணங்கும்போது ஸ்ரீஜேஷ்டாதேவியின் சுமங்கலித்துவ சக்திகளும், உத்தாதலக மகரிஷியின் தபோ பல சக்திகளும், சாயா தேவி சூரிய பகவானின் பாஸ்கர சக்திகளும், நவ கிரக சக்திகளும் நமது நெற்றியில் பதிக்கப்படுகின்றன.
நீங்கள் கர தரிசனம் செய்யும்போது உங்களின் விரல் அமைப்பைக் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். உங்களது இடது சூரிய விரல் (மோதிர விரல்) நுனி, இடது புத விரல் நுனி (சுண்டு விரல்), வலது புத விரல் நுனி, வலது சூரிய விரல் நுனி இவைகள் இணைந்து நாமத்தின் வடிவத்தை உருவாக்கும். இந்த நாமத்தின் வழியே வரும் பாஸ்கர கிரண சக்திகளை உங்கள் நெற்றியில் ஆக்ஞா சக்கரத்தில் பதிக்கும் தெய்வீகத் திருப்பணியை மேற்கொள்ளும் தேவியே ஸ்ரீஜேஷ்டாதேவி ஆவாள்.
அந்த அற்புத திருப்பணியையே நாம் ”நாமம் பதிக்கும் நல்லாள்” என்று துதித்து ஆராதிக்கிறோம்.
சில கணவன்மார்கள் தங்கள் மனைவியர்களை அழைக்கும்போது அவர்களின் பெயரைச் சுருக்கி அழைப்பது வழக்கம். இது மங்களகரமான பெயராக அமைவது அவசியம். உதாரணமாக, ராமலட்சுமி என்ற தெய்வீக நாமத்தை ரம்மி, லச்சு என்று அழைப்பதைத் தவிர்தது லட்சுமி என்றோ, தேவி என்றோ அழைத்தல் நலம். பொதுவாக, மனைவிமார்களை நாரிமணி, நல்லாள், தேனம்மை என்று இனிமையாக அழைப்பதால் லட்சுமி கடாட்ச சக்திகள் பெருகி குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.
ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
கும்பகோணம் அருகே உள்ள தேரழுந்தூர் என்னும் ஊரில் சுந்தரன் என்ற பெயருடைய ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி அழகான அங்க லட்சணங்கள் வாய்க்கப் பெற்ற அவன் தன்னுடைய குலத் தொழிலான மரமேறும் வேலையைச் செய்து வந்தான் அக்காலத்தில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு யாரும் பணம் தருவது கிடையாது. பணம் என்பதே புழக்கத்தில் இல்லாத காலம்.

ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்தால் ஒரு மரத்திற்கு மூன்று தேங்காய்களைக் கூலியாகத் தருவார்கள். இவ்வாறு தினந்தோறும் கூலியாகக் கிடைத்த தேங்காய்களில் ஒரு மரத்தில் கிடைத்த மூன்று தேங்காய்களை மட்டும் தன்னுடைய உணவாக எடுத்துக் கொண்டு எஞ்சிய தேங்காய்களை உடைத்து காய வைத்து அந்த காய்களிலிருந்து எண்ணெய் ஆட்டி, அவ்வாறு கிடைத்த தேங்காய் எண்ணையை வைத்து திருக்கோயில்களில் ஆயிரக் கணக்கான அகல் விளக்கு தீபங்களை ஏற்றி தீப சேவை செய்து வந்தான் சுந்தரம்.

பொதுவாக கோயில்களில் தீபம் ஏற்றி வந்தால், அதிலும் சிறப்பாக அர்த்த நாரீஸ்வர மூர்த்திக்கு பஞ்சமி திதிகளில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் குடும்ப ஒற்றுமை பெருகும். தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்கும். இவ்வாறு சுந்தரன் ஏற்றி வந்த அகல் விளக்கு தீபங்களால் அவனுடைய காலத்தில் குடும்பத் தகராறு என்பதே கேள்விப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்தது.

திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் சுந்தரம் ஆற்றிய தொண்டு அவ்வூர் மக்களை மட்டும் அல்லாது அக்கம் பக்கம் ஊர்களில் உள்ள தம்பதிகளையும் கவர்ந்தது. பல தம்பதிகளும் சுந்தரனை நாடி தங்கள் பிரச்னைக்கு தீர்வு அளிக்க வேண்டினர். அவ்வாறு தன்னிடம் அடைக்கலம் அடைந்த தம்பதிகளுக்கு இறைவனை வேண்டி மூன்று  ஆழாக்கு தேங்காய் எண்ணெயை அளித்து அவரவர் ஊரில் உள்ள திருக்கோயில்களில் தீபம் ஏற்றுமாறு பணித்தான்.

சுந்தரம் அளித்த தேங்காய் எண்ணெயால் தீபம் ஏற்றிய தம்பதிகள் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை உணர்ந்தது மட்டும் அல்லாமல் குழந்தைச் செல்வம் போன்ற செல்வப் பெருக்கையும், நோயற்ற ஆரோக்கிய வாழ்வையும் அடைந்தனர்.

தேங்காய் மட்டையை உரித்து அதிலிருந்து பெறும் நாரையும் சுந்தரம் பாதுகாத்து அதைக் கொண்டு கயிறு திரித்து திருக் கோயில் தேர்களை இழுக்க அற்புதமான வடக்கயிறுகளையும் தயாரித்துக் கொடுத்தான்.

திருக்கோயில்களில் தேர் இழுப்பதை திருத்தேர் வடம் பிடித்தல் என்றுதான் அக்காலத்தில் அழைப்பார்கள். அதாவது இறைவன் பவனி வரும் தேரை யாரும் இழுக்க வேண்டியது இல்லை. தேர் வடத்தைப் பிடித்தால் போதும் அதுவே இறைவன் அருளால் வீதிகளில் வலம் வரும் என்பதே இதன் பொருள்.

தேர் திருவிழாக்கள் நடக்கும்போது பக்தர்கள் குறித்த திருத்தலத்தில் கூடி தேர் வடத்தைப் பிடித்துக் கொண்டு இறை நாமங்களை, கீர்த்தனங்களை ஓதியவாறே நின்று கொண்டிருப்பார்கள். நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்யங்களையும் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

யாரும் தேரை இழுக்க முயற்சி செய்வது கிடையாது. இறைவன் விரும்பிய குறித்த முகூர்த்த நேரம் வந்தவுடன் தேர் தானாக நகர ஆரம்பிக்கும். அவ்வாறு தேர் நகர்வதற்கு எத்தனை மணி நேரம் ஆனாலும் அவர்கள் தேர் வடத்தைத் தொட்டவாறு இறை நாமத்தைக் கூறியவாறே நின்று கொண்டிருப்பார்கள்.

தேர் வடம் மிகவும் தெய்வீக சக்தியை உடையது. தேரில் எழுந்தருளிய இறை மூர்த்தியை தரிசனம் செய்த அதே பலனை தேர் வடத்தை தரிசனம் செய்தாலும் பெறலாம் என்பது உண்மையே. இன்றும் பல பக்தர்கள் இந்த உண்மையை செயலில் நிறைவேற்றி நன்மை அடைகிறார்கள்.

குறிப்பாக, முதுகுத் தண்டில் ஏற்படும் நோய்களுக்கு தேர் வடக்கயிறு அருமருந்தாக அமையும். திருத்தலங்களில் தேர் வடத்தைத் தொட்டவாறு ஆதித்ய ஹ்ருதய துதியை ஓதி வந்தால் எத்தகைய கடுமையான முதுகுத் தண்டு நோய்களுக்கும் நிவாரண வழி முறைகள் கிட்டும்.

தற்காலத்தில் இறை நம்பிக்கை குறைந்து போய் மக்கள் இழுத்தால்தான் தேர் ஓடும் என்ற கருத்து பலம் பெற்று விட்டதால் பல திருக்கோயில்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி தேரிழுப்பது மட்டும் அல்லாமல் புல்டோசர் போன்ற இயந்திரங்களையும் தேரிழுக்க பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

சுந்தரத்தின் தன்னலமற்ற சேவையால் எவரும் தேரை இழுக்காமல் இறைவன் தானே விரும்பி தேர் வலம் வந்த காட்சி அனைவரையும் பரவசப் படுத்தியது. எனவே பாரத தேசம் எங்கும் சுந்தரத்தின் புகழ் பெருகி பல தூர பிரதேசங்களில் உள்ள ஆலயங்களுக்கும் தேவையான தேர் வடத்தை சுந்தரமே செய்து தரும்படி இறை அடியார்கள் கேட்டுக் கொண்டனர்.

இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அற்புத இறை சேவை ஆற்றிய சுந்தரம் தன்னுடைய மானிட உடலை உகுக்க வேண்டிய தருணம் வந்தது. உத்தம இறை அடியார்களின் உயிரை எம தூதர்கள் தீண்டுவது கிடையாது. உயர்ந்த ஜீவன்களின் உயிரை எம தர்ம ராஜாவே நேரில் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற இறை நியதி இருப்பதால், அரிய ஆன்மீகத் திருப்பணி ஆற்றிய சுந்தரத்தை உரிய இடத்தில் சேர்ப்பதற்காக எம தர்ம ராஜா தேரழுந்தூர் திருத்தலத்தை அடைந்து நறுமணம் வீசும் புஷ்ப விமானத்தில்  சுந்தரத்தை ஏற்றி பிரம்ம லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பொதுவாக, நூறு கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகத் திருப்பணிகளை ஆற்றியவர்களுக்கு இந்திர பதவி அளிக்க வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால், சுந்தரமோ ஆயிரக் கணக்கான திருக்கோயில்களுக்கு அற்புத திருப்பணிகள் ஆற்றி விட்டதால் சுந்தரத்தின் தெய்வீகத் தகுதியை நிர்ணயிக்கும் பொருட்டு சுந்தரத்தை பிரம்ம லோகம் அழைத்து வந்தார் எம தர்ம ராஜா.

பிரம்மாவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி பணிவுடன் நின்றார் சுந்தரம். பிரம்மா சுந்தரத்தை ஆரத் தழுவிக் கொண்டு, ”சுந்தரா, அற்புதமான தெய்வீக திருப்பணிகள் நீ ஆற்றி உள்ளதால் உன்னை இந்திர பதவியில் அமர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளார்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

சுந்தரம், ”ஐயனே, தங்களின் தேவ வாக்கு அடியேனை பேரானந்தத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த அற்புதமான பிரம்ம லோக திருச்சன்னதியில் தங்களிடம் ஒரு வரம் கேட்க விரும்புகிறேன். அடியேன் இந்திரப் பதவியில் அமர்ந்து தேவ லோகத்தை ஆட்சி செய்யும்போது அதில் எந்த வித தவறும் நேராமல் நேர்மையான நியாயமான ஆட்சியை அமைக்க விரும்புகிறேன். அதற்காக அடியேன் செய்ய வேண்டிய தவ முறையைப் பற்றி அருள வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டார்.
பிரம்ம தேவர் மகிழ்ந்து, ”நல்லது, குழந்தாய். பொதுவாக, இந்திர பதவி கிடைத்ததுமே அதை உடனே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே மானிட ஜீவன்களிடம் மிகுந்திருக்கும். நீயோ அதற்கு விதி விலக்காக இருக்கிறாய். அதுவும் இறைவன் திருவுள்ளமே”, என்றார்.

”நெறி தவறாமல் தர்மம் பிறழாமல் இந்திர லோகத்தை ஆள விரும்பினால் நீ ஜேஷ்டாதேவியை நோக்கி தவம் செய். உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று அருளினார். சுந்தரமும் அவ்வாறு ஸ்ரீஜேஷ்டாதேவியை நோக்கி தவம் இயற்ற பிரம்ம தேவரிடமும் எமதர்ம ராஜாவிடமும் அனுமதி பெற்று பிரம்ம லோகத்திலிருந்து புறப்பட்டார்.

தொடர்ந்து ஒன்பது சதுர் யுகங்கள் தவம் ஆற்றிய பின்னர் சுந்தரத்திற்கு ஸ்ரீஜேஷ்டாதேவியின் தரிசனம் கிட்டியது. அன்னை அருளிய அமுத மொழிகளை சிரம் மேற்கொண்டு தேவ லோகம் அடைந்தார் சுந்தரம்.

மனிதனாக இருந்த சுந்தரத்திற்கு தற்போது சுந்தர வர்ம இந்திரன் என்ற பட்டத்தை சப்த ரிஷிகளின் தலைமை ரிஷியாக விளங்கிய ஸ்ரீஅகத்திய  ரிஷி அளித்து அவரை கௌரவப் படுத்தினார்.

தேவ லோகத்தில் இந்திரனுக்கு தேவ லோக சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் நிகழ்த்தும் போது சப்த ரிஷிகள் இந்திரனை ஒரு பல்லக்கில் ஏற்றி தேவ லோகத்தை பவனி வந்து பின்னர் வைரம், வைடூரியம் போன்ற தேவ லோக நவரத்தினங்கள் பதித்த அபராஞ்சித தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்த்துவது வழக்கம்.
அவ்வழக்கப்படி பல்லக்கை இந்திரன் முன் கொண்டு வந்து வைத்து சப்த ரிஷிகளும் அவர்களின் தலைலைக் குருவுமான ஸ்ரீஅகத்திய மாமுனி சுந்தர வர்ம இந்திரனை பல்லக்கில் அமரும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர வர்ம இந்திரன் ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, ”தேவரீர் அகத்திய மகா பிரபு, தங்களைக் காணவே பல ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய மேன்மை படைத்த தங்கள் திருக்கரங்களின் ஸ்பரிசம் படுவதற்கு கூட இந்த இழியவனுக்குத் தகுதி கிடையாது. அப்படி இருக்கும்போது தாங்கள் பல்லக்கைச் சுமந்து அதில் அடியேன் ஏறி வருவது என்பதை அடியேனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தயவு செய்து அடியேன மன்னித்து விடுங்கள்,” என்று உறுதியாகக் கூறி விட்டார்.

சப்த ரிஷிகளும் ஸ்ரீஅகத்தியரும் சுந்தர வர்ம இந்திரனின் பணிவையும் பக்தியையும் கண்டு பேருவகை எய்தினர். இந்திர லோகம் உண்மையில் பேறு பெற்றது என்று நினைத்து வியந்தனர்.

எத்தனை எத்தனையோ இந்திரர்களை பதவியில் ஏற்றி வைத்த சப்த ரிஷிகள் இப்படி ஒரு பணிவுடைய இந்திரனைப் பார்த்தது கிடையாது. ஒரு முறை ஒரு இந்திரன் ஸ்ரீஅகத்திய முனியை ”சர்ப்ப சர்ப்ப” என்று சொல்லி அவர் பல்லக்கு சுமக்கும்போது காலால் நெண்டி ஸ்ரீஅகத்திய முனியின் சாபத்தைப் பெற்றான்.
மற்றோர் இந்திரனோ கௌதம முனிவரின் உத்தம பத்தினியான அகலிகை மேல் மோகம் கொண்டு அவர் சாபத்தைப் பெற்றான். இவ்வாறு தவறுகள் பல செய்த இந்திரர்களைக் கண்ட தேவ லோகத்தில் உத்தம இந்திரன் ஒருவன் வருகை தந்தது கண்டு தேவ லோகமே பிரமிப்பில் ஆழ்ந்தது.

சப்த ரிஷிகள் தன்னுடைய பல்லக்கத்தைத் தூக்கக் கூடாது என்று உறுதியுடன் கூறியதோடு சுந்தர வர்ம இந்திரன் நின்று விடவில்லை. ஒவ்வொரு சப்த ரிஷியின் பாதங்களிலும், ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஒவ்வொருவரையும் பல்லக்கில் வைத்து தேவ லோகம் முழுவதும் தான் ஒருவனாகவே பல்லக்கில் அவர்கள் அனைவரையும் சுமந்து சென்று அவர்களுக்கு சேவை ஆற்றினார் சுந்தர வர்ம இந்திரன்.

இந்த அற்புதமான தெய்வீக சேவையைப் பாராட்டி மும்மூர்த்திகளுமே தங்கள் பத்தினி தெங்வங்களுடன் எழுந்தருளி சுந்தர வர்ம இந்திரனை மனமார வாழ்த்தினர்.
இப்படி இதுவரை தேவலோகம் கண்டிராத அற்புத இந்திரனாக மாறுவதற்கு உதவி செய்த தேவியே ஸ்ரீஜேஷ்டா தேவி ஆவாள். அன்னை ஜேஷ்டா தேவியின் அறிவுரைப் படிதான் இந்திரன் சப்த ரிஷிகள் பல்லக்கு சுமப்பதை அனுமதிக்காமல் தான் அவர்களைப் பல்லக்கில் சுமந்து சென்று சேவை ஆற்றினான். அதனால் இந்திர லோகத்தில் நிரந்தர பதவியையும் பெற்றான்.

எல்லா மனிதர்களுக்கும் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி என்ற ஒரு அற்புத சக்தி மறைந்துள்ளது. குண்டலினி என்ற இந்த அரும்பெரும் சக்தியை தியானத்தின் மூலம் மேலெழச் செய்தால் அளப்பரிய ஆற்றல்களைப் பெற்றலாம். இவ்வாறு பெறும் அளப்பரிய ஆற்றலை மற்ற ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தியவர்களே மகான்களும் ரிஷிகளும்.

இவ்வாறு குண்டலினி சக்தி உச்சந் தலையில் சஹஸ்ரார சக்கரத்தை அடையும்போது அதை முறைப்படுத்தி உத்தம ஜீவன்கள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைகிறார்கள். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை மனித உடலில் ஏற்கும்போது உடலின் வெப்ப நிலை முச்சுடர் கத அளவிற்கு உயர்கிறது என்பது சித்தர்களின் கணக்கு. முச்சுடர் கதம் என்ற சித்த பரிபாஷை பதத்தை இன்றைய விஞ்ஞான அளவு கோல் கொண்டு கூற வேண்டுமானால் அதை 30,000 டிகிரி சென்டிகிரேட் என்று கூறலாம்.

நிர்விகல்ப சமாதியில் நிலைத்திருக்கும் ஒரு ஜீவனின் உடல் வெப்ப நிலை 30,000 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயரும் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆனால், இதுவே உண்மை. இதுவே சமாதி ரகசியம் ஆகும். ஒரு சிறிய அகல் விளக்கின் தீபம் உடலில் ப,ட்டாலே உடம்பு வெந்து போகிறது என்றால் இத்தகைய கற்பனைக்கு எட்டாத அளவு சூட்டை எப்படி மனித உடல் தாங்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயமே.

ஒரு சாதாரண மனித உடல் இந்த அபரிமிதமான வெப்பத்தை, சூட்டை ஏற்க முடியாது என்பது உண்மை. ஆனால், மனித உடல் முழுவதும் தூய்மை அடையும் போது அது ஒளி உடம்பாக மாறி எந்த அளவு உஷ்ணத்தையும் ஏற்கும் அளவிற்கு தயாராகிறது. மேலும், நிர்விகல்ப சமாதி நிலையை அடையும் அளவிற்கு ஒரு மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது அவன் மறைமுகமாக ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தைப் பெற்றவன் ஆகிறான்.

அந்நிலையில் ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தால் அந்த ஜீவனின் உடலில் முனிநிழல் என்ற ஒரு குளிர்ச்சி, சீதளத் தன்மை ஏற்படுகிறது. எந்த அளவிற்கு உடல் வெப்பம் அதிகரிக்கிறதோ அந்த உஷ்ண அளவிற்கு, உடல் வெப்பத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இந்த முனி நிழல் என்ற குளிர்ச்சி நிலையும் உடலில் தோன்றும்.
இறைவனின் அனுகிரகத்தை கருணை என்று அழைக்கிறோம். சற்குரு நாதனின் அனுகிரகத்தை குரு பிரசாதம் என்று அழைக்கிறோம். அதுபோல ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரக சக்தியை ”முனி நிழல்” என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். தியாகத்தின் சிகரமாகப் பொலிந்த உத்தாதலக மகரிஷியின் நிழலாக எங்கும் அவரைத் தொடர்ந்து அவர் திருவடிகளில் சதா சர்வ காலமும் பாத பூஜையை நிறைவேற்றி வந்ததால் ஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் என்ற பட்டம் மட்டும் அல்லாது மூத்த சுமங்கலி என்ற உயர்ந்த பட்டத்தையும் கொண்டு விளங்குகிறாள் என்பது பலரும் அறியாத ரகசியம்.

எம்பெருமான் ஈசன் அடிமுடி காணா அழற்பிழம்பு ஜோதியாக விஷ்ணு மூர்த்திக்கும் பிரம்ம தேவருக்கும் காட்சி அளித்தார் அல்லவா? பின்னர் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பூலோக மக்களும் மற்ற ஜீவன்களும் எல்லை இல்லாப் பரம்பொருளான ஈசனை தங்கள் ஊனக் கண்ணால் கண்டு வணங்கும் வண்ணம் மலையாய்க் காட்சி தர இசைந்தார்.

பரம்பொருள் அக்னி பிழம்பாக ஒளிர்ந்தால் அதை யாராலும் காண முடியுமா? எனவே பரம்பொருளின் உஷ்ண சக்தியை யாராவது ஏற்றுக் கொண்டு அக்னியை குளுமை அடையச் செய்தால்தான் தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்று எம்பெருமான் அருளிடவே எல்லையில்லா அண்ணாமலை உஷ்ண சக்தியை தாங்கும் வல்லமை பெற்ற அந்த உத்தமர் யார் என்று பிரபஞ்சம் எங்கும் தேடி அலைந்தனர் தேவர்கள்.

இறைவனின் ஒரு சிறு துளியாக தோன்றிய சூரியனிடமிருந்து வெளிவரும் ஒளியில் உஷ்ணம், வண்ணம், பிரகாசம், வியாப்தம் போன்ற பல்வேறு குணங்கள் உண்டு என்றால் எம்பெருமானின் அழற்பிழம்பு ஜோதியில் எத்தனை ஆயிரமாயிரம் குணாதிசயங்கள் பொதிந்திருக்கும். அந்த ஜோதியின் உஷ்ணம் அல்லது வெப்பம் என்னும் குணத்தை மட்டும் கிரகிக்கும் உத்தமரைப் பல லோகங்களில் தேவர்கள் தேடி அலைந்த பின்னர் எம்பெருமானின் அழற் பிழம்பு ஜோதியின் வெப்பத்தைத் தாங்கி குளிரச் செய்து அதை பூலோக மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கக் கூடிய தியாகேசன் உத்தாதலக மகரிஷி ஒருவரே என்று தெளிந்து அவரிடம் தஞ்சம் அடைந்தனர்.
தேவர்களின் விருப்பத்தை அறிந்த உத்தாதலக மகரிஷியும் பிரபஞ்சத்தின் நன்மையை உத்தேசித்து அண்ணாமலை ஜோதியின் வெப்ப சக்தியைத் தாங்கி அதற்கு அற்புதமான குளிர்ச்சியை ஊட்டி தியாகச் செம்மலாக மலர்ந்தார். அதனால்தான் அனல் மலையான திருஅண்ணாமலையின் உட்புறம் மிக மிக குளிர்ச்சியாக விளங்குகிறது. இது சித்தர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் ஆகும்.

தியாகத்தால் உன்னத நிலைபெற்ற உத்தாதலக மகரிஷியின் நிழலாக ஸ்ரீஜேஷ்டாதேவி விளங்கும் காரணத்தால் தேவி மனித உடலில் தோன்றும் குண்டலினி சக்திக்கு ஈடு செய்யத் தேவையான சீதள சக்தியை வழங்கி சீதளாம்பிகையாக அருள்பாலிக்கிறாள்.

எனவே, சுந்தர வர்ம இந்திரன் போற்றும் குளிர்ந்த நாமத்தை உடையவள் என்பது இந்த துதியின் மேலோட்டமான பொருளாகும்.
மேற் கூறிய மூன்று துதிகள் மட்டும் அல்லாது அனைத்து துதிகளையும் தினந்தோறும் ஸ்ரீஜேஷ்டாதேவியை தியானத்துடன் ஆத்த விசாரம் செய்து வந்தால்தான் அன்னையின் அருளை ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும்.

காயத்ரீ மந்திரம் (தமிழ் வடிவம்)
ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின்
மேலான ஒளியைத் தியானிப்போமாக.
நிதியே பொருள் யாவர்க்கும் முதலே
பானுவே பொன்செய் பேரொளித் திரளே
கருதி நின்னை வணங்கித் தொழுதேன்
கர்ம வினை தீர காட்டுதி வழியே.

காஞ்சிபுரத்தில், தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர்ந்துள்ள இந்த அன்னையின் திருப்பெயர் 'அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்’. மகேசனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன், முனிவர்களையும் பக்தர்களையும் பயமுறுத்தி அழிக்க நினைத்த தால், அவனை சம்ஹாரம் செய்ய அனைத்து சக்தி தெய்வங்களும் சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்ததாக வரலாறு.
பனை மரத்தை 'கருக்கு மரம்’ என்றும் அழைப்பர். அதேபோல், நள்ளிரவு நேரத்துக்கு 'கருக்கு நேரம்’ என்று பெயர். பனைமரத்தின் கீழே நடு இரவில் தாமரைப் பீடத்தின் மீதமர்ந்து மகிஷா சுரனை சம்ஹாரம் செய்ததால் அம்பாளுக்குக் 'கருக்கினில் அமர்ந்தவள்’ என்று பெயர். இந்தக் கோயிலின் தல விருட்சம் பனைமரம்.
தாமரைப் பீடத்தில் அமர்ந்தவண்ணம் சூரனை வதம் செய்வது போலவே மூல சந்நிதியில் அம்மன் காட்சியளிக்கிறாள். இந்த மூலவர் கருவறை, 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது, கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் வாயிலாகப் புலனாகிறது. திருக்கோயிலில் அமைந்துள்ள நவகிரகங்களில் ஒருவரான சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு!
ஆடி மாதத்தில் ஆடிப் பூரம் விழா இங்கே விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் வீதி உலா வருகிறாள். ஆடியில் ஐந்து வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் படுவதுடன், ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து பம்பை, உடுக்கை, சிலம்பம் இசைத்து, பூஜைகள் நடத்தப்பெறும்.
இந்தக் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஜேஷ்டா தேவி அம்மனுக்கு கறுப்பு ஆடை சாற்றி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். இங்குள்ள புற்று நாகம்மனுக்குப் பால் வைத்து வழிபட, நாக தோஷம் நிவர்த்தியாகும். மேலும் திருமணத்தடை உள்ளோர், குழந்தை வரம் வேண்டுவோர், நாகதோஷம் உள்ளவர்கள் மற்றும் மனச் சஞ்சலம் கொண்டோர், இந்த அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சென்று தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட, நினைத்தவை கைகூடும் என்பது ஐதீகம்.

Thank : https://hinduspritualarticles.blogspot.com/2014/10/blog-post_17.html
No automatic alt text available. Image may contain: text

No automatic alt text available.No automatic alt text available.

No automatic alt text available. No automatic alt text available.No automatic alt text available.
https://agasthiar.org/AUMzine/0022-Jyeshta-Devi.htm


Jyeshta Lakshmi or ‘Jeshta Devi’

Laxmi's elder sister, keep Goddess goddess of misfortune from her home if not far ... 

She is also called Jyestha Devi and has the likes of Goddess Alakshmi, the elder sister of Goddess Lakshmi. She is therefore the Goddess of Inauspicious things and Misfortunes. She comes into families or businesses as a new addition to a family or social unit or incoming partner. She is the opposite of good fortune and beauty. With her she brings a string of negative qualities such as sadness, ill-fortune, disease, social and psychological problems, disharmony and monetary troubles. She comes on her mount the donkey and invites trouble to escalate existing shortcomings. She is symbolic of amangalam. Her consort is the Sage Dussaha.

Some of her other characteristics are her links with inauspicious places and links with sinners. Commonly, she is also associated with sloth, poverty, sorrow, ugliness and the crow. In many ways, despite taking a different name, Jyestha Devi is directly identified with Alakshmi, the misfortune goddess. So, worshiping Jyestha Devis is effectively to keep away from households. She is rarely worshipped directly because positive worship is available through Mother Goddess Devi or reverence to Goddess Lakshmi. Still Hindu homes give a thought to keeping Jyestha or Alakshmi from nearing them.

By the 7th – 8th century, her worship had peaked in South India but there are mentions of Jyestha way back to 300 BCE. With the advent of Mother Goddess worship, the ills and problems brought in by Jyestha Devi was left at the lotus feet of Mother Kali and Durga. So, direct worship of Jyestha was not apparent reducing her deity to be collection pieces or unattended deities.

VISNUDHAROTTARA PURANA: This is considered a supplement to the Vishnu Purana. It is included in the list of 18 Upapuranas as given in the Brihaddharma Purana. There are three khandas in this Purana. The Third Khanda deals with the origin of image making and interdependence of arts. Jyestha Devi’s iconography is considered in this Purana. Other Agamas connected to Jyestha are Amshumadbhedagama, Suprabhedagama and Purvakarangama.

DEPICTION: Jyestha is shown with two arms and a prominent raised nose nearly like that of an elephant trunk. Her ink colored lower lips are hanging. She is described to carry large pendulous breasts descending as far as her navel. This is supported by a flabby belly and and swollen stomach. She has thick thighs.

Jyestha’s hair is usually brainded and piled on top of her head. Otherwise it is wound around in a style that is called vasikabandha. She is well ornamented for herself. She has a tilaka mark on her forehead to symbolise her married states.

Her blue-black or red garments cover her black or red complexion. Jyestha Devi is often depicted seated comfortably on a throne with her feet on the ground. She holds a blue or white lotus in her right hand. A water-pot is held in her left hand or placed near her throne or placed in the hand that makes while she gestures protection by her abhya mudra. The left hand rests on her seat or thigh.

Now, Jyestha sometimes holds and broom. Her banner depicts a crow. The banner and the crow banner are sometimes carried by her attendants. The broom is symbolic of her sweeping in bad-omen to a home. The crow which sometimes stand around her, represents the negative aspects, ‘muthukattil uvakkum pinam’ means one that gathers in the cemetery to take a seat on corpse. The Tamil word ‘Kakkaikodiyal’ describes her being crow-bannered. The attendants are a man is bull-faced and holds a rope. The other is beautiful women with a conical crown.

VAHANA: Both Alakshmi and Jyestha Devi share the same vahana, the donkey. But she is seldom shown mounting it except for scanty descriptions. Some texts depict her being drawn in a chariot by lions. Some show lions following her. But the general agreement is the donkey being her vahana.

PADMA PURANA: Mythological accounts of the samudra manthan episode, show Jyestha as Alakshmi, the elder sister of Lakshmi. Jyestha means elder. It is said that Jyestha Devi arose out of the sea before Mother Lakshmi on the day of the ksheera sagara manthanam. She is depicted as a dark woman, wearing dirty clothes and carrying a broom and a pan. There is general agreement that her arrival is connected to the halahala poisons that streamed from the ocean while mother Lakshmi, as antithesis was born when the elixir of life emerged.The Purana goes on to state that Jyestha, wearing red garments, appeared from the ocean when Lord Shiva swallowed the halahala.

The Gods unwelcomed her and she is quickly subscribed to dwell in inauspicious places. So Jyestha went on to bring disaster to many homes. When there was auspiciousness and happiness, Jyetha entered the homes to make it unauspicious and unhappy. She brought poverty and sends many homes to the doldrums of sorrow. She invited quarrels and harsh language. She split happy families despite their attempts to make ends meet. Thus in Hindu homes she was symbolised by skulls, bones, ashes or charcoal and in some way the cemetary.

LINGA PURANA: Lord Vishnu divides the material world to have good-bad divisions. So he creates Lakshmi and Jyestha. Both are made to be born from the churning of the cosmic ocean. Later Mother Lakshmi is Vishnu’s consort. Jyestha complains that she is yet to meet a groom but later is grounded with the sage Dussaha.

The sage was tolerant for a while but soon his patience turns sour when he finds out that that his wife throws in the spanner whenever there is an auspicious sight or sound. Dussaha brings up the matter to Vishnu and Markandeya. They advise that Jyestha is restricted to darkness and inauspicious place. But she brings about so much of sorrow and tears and finally Dussaha abandons Jyestha and leaves her in non-Vedic place. Jyestha then approached Mahavishnu for relief. He decreed that she would get her offerings when she still visited families due to their kharmaphala.

KAMBA RAMAYANA: In the Tamil Kambaramayana, there is consensus of her appearing together with Lakshmi in samudra mandam episode. Kamba Ramayana goes on to state that the Hindu trinity decreed that she live in inauspicious places only. Since she is elder to Lakshmi, she is named Mudhevi, one that brings in bad omen to the hosts. The opposite is Sridevi, a reference to Mother Lakshmi.

SHAIVA PURANAS: Puranas depict the balance of prakriti and the role of Mother Goddess Parashakti, the Supreme Goddess who regulates human lives in different ways. Jyestha denotes the negative aspects of a incoming Hindu wife, while Lakshmi denotes wisdom and wealth. Her name-sake nakshatra, Jyestha constellation inherits the negative qualities of the goddess. If a bride enters a house in the Jyestha constellation or with the qualities of Jyestha, the family is predicted to be doomed unless they are watched over by the more ferocious Goddess Kali or Durga. Finally Kali drives Jyestha away.

Jyestha is also linked to other goddesses such as Sitala, one that brings small pox and disease; Nirriti, the goddess of death and corruption; Yama, the Lord of Death; Dhumavati, a widow goddess known for dirt and pestilence. Generally, Jyestha does not fit in any Saumya or benevolent Hindu goddesses. She does not even fit in the ugra-fierce goddesses, for they have inherent love and goodness within them despite being ugra. In the family set up Jyestha is seen as sloth and ugliness of the heart and as streams of laziness and slumber. She carries a facade face despite the being the invitee of inauspiciousness and troubles.

It is for this reason, especially after the advent of Mother Goddess worship, Jyestha’s deities were decreed unworthy of worship. It was kept in temple corners or thrown away into seas and rivers. Otherwise the deity is kept with the face towards the ground as the mere glance of the goddess is believed to bring immeasurable trouble, sadness and disharmony.

Hara Hara Mahadeva
(drafts Gods, Goddesses, Minor Deities and Sages)
Yogi Ananda Saraswathi

https//vedicgoddess.weebly.com/goddess-vidya-blog/devi-jyestha-by-yogi-ananda-saraswathi


Jyestha Devi is mentioned in ancient scriptures to be the older sister of Laxmi and Dispeller of Sorrows and Misfortunes. Vedic mythology mentions that the Lord of Kali Yuga hid Jyestha Devi from the human race so that they have to undergo various lessons before getting salvation.

Its said that the Lord of Kali Yug is changing his mind out of compassion and letting humans find and worship Jyestha Devi so that they can live prosperous lives that were common in past yugas. Its also believed that in the previous yug (Dwapara Yug), people worshipped Jyestha Devi for help in overcoming severe drought and famine, and despite the odds to live in prosperity and happiness.

Those who worship Jyestha Devi tend not to have losses in income or business, and will sometimes receive money unexpectedly. Everyday, She drives out negativity and ill fortune from individuals, households and business premises.

Brahmapureeswarar, an ancient temple in Kanchipuram is known for Jyestha Devi worship along with a huge Ganesha (Motta Ganesha).  Its believed that Jyestha Devi is highly fond of Ganesha and would literally offer prayers daily to this Ganesha.

Siddhas have specific/special days when they are able to observe the worship bearing fruit.  In Vedic terms, the days are known as ‘Tri-Thina-Spuruk’ when 3 stars or Nakshatras are all seen in one day. This is very rare but considered highly auspicious for Jyeshta Devi worship. Other than these specific days, Sundays are also considered fine for offering pujas to Jyestha Devi.


other site
Jyeshtha is the goddess of Hindu religion. Jyeshtha is considered to be the elder sister of good fortune and goddess of beauty Lakshmi Ji, which is exactly opposite to her. In addition to bad events and sinners, it is also believed to be related to sloth, poverty, misery and misery. These are called goddesses of misfortune. People worship them only to keep them away from their home. They are also known as Alkshimi.

According to a story of Padmapuraan, when sea churning was done to get nectar between gods and demons, the poison from the sea first came out which Shiva ji filled in his throat. After this, goddess Jyeshtha was born from sea churning. At that time he kept wearing red clothes. His back was just opposite to Lakshmi Ji. That is, the way it goes, Lakshmi ji lives in the same way.

The look of Goddess Jyeshtha is very beautiful. He always worn in red clothes. They have four hands, two of which are in Abhay and Vaara in the posture and the other two arms have an arrow bow. Their vehicle is crow. It always sits on the lotus. Peepal tree contains the habit of Alkshimi or Mata Jyeshtha.

Goddess Jyeshtha was born during the sea churning. His younger sister Lakshmi ji. Goddess Jyeshtha was married to a Brahmin named a sadhas. They reside in the house of atheists and sinners.




1 comment:

  1. Very valuable information, unheard in popular books and other media. Thanks for sharing 🙏.ஜேஷ்டா தேவி நாமம் வாழ்க வாழ்க வாழ்க. Narayanaswamy Coimbatore

    ReplyDelete