Thursday, January 21, 2016

வாலை தெய்வம் தாய்



சித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்?
மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே"என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள்.
"நாணயமாய் நடப்பவரே ஞானி 
யோகியமாய் நடப்பவரே யோகி சகலமும் தள்ளியவரே சந்நியாசி 
ஆண்டவனை அறிந்தவரே ஆண்ட ஒழுக்கம் உடையவரே துறவி சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன் 
செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்"
"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே..... வாலைக்கு வுருவமில்லை் என்றால்? உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் ஏன் இந்த பாடலை எழுதி உள்ளார்

 கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை தெய்வம் பற்றி இப்படி சொல்கிறார்....
பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்....
வாலை தெய்வம் புற வழிபாடு ஓம் ஐயும் கிலியும் சவும் சவும் கிலியும் 
ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமக
வாலைதெய்வம் என்று வாலைபரமேஸ்வரி இவள் சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதாளென்றும், பதினாறு வயதாள் என்றும், கன்னியென்றும்,பச்சைநிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும்,புவனையென்றும்,அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள்.
கண்டு கெட்ட வன்கோடி காணாமல் கெட்ட வன் கோடி கேட்டு கெட்ட வன் கோடி கேட்காமல் கெட்ட வன் கோடி பார்த்து கெட்டவன் கோடி பார்க்காமல் கெட்ட வன் கோடி கோடியிலே ஒருவனுக்கு விளங்கு மய்யா

([18/01 1:19 pm] Cithrasu CL FB:)

வாலை தெய்வம்★
★வாலையை பணியாமல் சித்தராக முடியாது!
★அவளை யறியா அமரரும் இல்லை
★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
★அவளின்றி யூர் புகு மாறறி யே னே"
★அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே!
★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்!
★பின்னரல்லவா தவம் செய்வது?! ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது!
★சக்தி - வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது!
★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும் சிவமயம்! சிவம் சக்தி மயம்!
★அவளே வாலை! தாய்!
★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!
★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!
★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே!
★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!
★உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி !
★அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை!
★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா?
★"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே"
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”
இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம்
சிவ சக்தி போற்றி.
அம்மா தாயே சரணம் 
வாலையைக்கும்பிட்டு சித்தரானார்..
வாலைக்கொத்தாசையாய் சிவகர்த்தரானார்... 
வாலைக்கு மேலான தெய்வமில்லை....
கொங்கண சித்தர் ...
தாயிர் சிறந்த கோயிலும் இல்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அவளை அறிய முதலில் ஐவரை அறிய வேண்டும் 
இருப்பிடம் உள்நாக்கு 
இயக்குவது காற்று
கன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும் உன்னத தாய்மை பொருந்திய உண்மை தெய்வம்.




                   


Wednesday, January 13, 2016

Agasthyakoodam 2016 online அகஸ்தியரை தரிசிக்க 2016


Thank to FB அகஸ்தியர் கூடம். ‪#‎agasthyakoodam‬

அகஸ்தியரை தரிசிக்க ஆவலாக இருப்போருக்கு கிடைத்துவிட்டது வாய்ப்பு.

Agasthyakoodam Online registration/Booking Link

Agasthyakoodam peak and surrounding areas are protected reserved forest under the control of Kerala Forest Department and entry is restricted. Forest department allows a controlled pilgrimage/trek during January to March of every year. This pilgrimage starts on the day of the Makaravilakku festival in Sabarimala temple and ends on the Sivarathri day. Usually this means that the trek will be available for about 60 days. Only 100 entry passes are issued each day of the trek and the entry passes are given on first come first serve basis.
This service falls under Permit and Passes group and can be applied by Registered applicants.
Who can Apply
This service is intended for male applicants above the age of 14 years.
How to Access the Service
This Service can be accessed through the website of Kerala Forest Department https://forest.kerala.gov.in. Alternatively, the service can be accessed through https://serviceonline.gov.in


Monday, January 11, 2016

Swara Yoga [ ஞான சர ] video





SWARA YOGA TECHNIQUES..

Swara Yoga [ ஞான சர ] PDF book : TAMIL / ENGLISH


https://www.youtube.com/watch?v=AIYUk9780jo

Soma - An Interview With Dr. Vasant Lad, MASc
https://www.youtube.com/watch?v=egnGUFDQoBg


 Swara Yoga - Top Secret Vedic Pulse Knowledge


https://www.youtube.com/watch?v=2aRapV6WgMc

Destiny Control


[ https://www.youtube.com/watch?v=OTlmRJ2N46A] 


Breathing Techniques: Swara Yoga to Achieve Higher Knowledge


[ https://www.youtube.com/watch?v=wD0sLXfA4xc]


https://ayurveda.com/videostream/
https://www.youtube.com/channel/UC7CqLutU_--eDp3XF35ECSg/videos






Friday, January 8, 2016

பருவதமலையில் கும்பாபிஷேகத் திருவிழா 20/1/2016

அன்புடையீர்! வணக்கம்.

தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்புமிக்க மலை - ஸ்ரீபருவதமலை.

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள
இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்கிறார்கள்; பலருக்குக் காட்சிக் கொடுத்து ஆசியும் வழங்கியிருக்கிறார்கள்.

இம்மலையில்
2000 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்ததும்
4560 அடி உயரத்தில் உள்ளதுமான அருள்மிகு பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளாக நமது முன்னோர்கள் இக்கோவிலை சீரும் சிறப்புமாகப் பாதுகாத்து வந்தார்கள்.

ஆனால் கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இன்றியும் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் கவனிப்பாரின்றி விடப்பட்டது   இத்திருக்கோவில்.

இந்நிலையில், ஒருசில பக்தர்கள்  "திருவல்லிக்கேணி ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்" என்னும் அமைப்பின் பெயரில் ஒன்று சேர்ந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் அனுமதி பெற்று 23.04.2010 அன்று ஆலயத் திருப்பணியைத்  தொடங்கினார்கள்.

இத்திருப்பணிக்குத் தேவையான தண்ணீர், மணல், சிமென்ட், கற்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானப் பொருட்களும் தரைப்பகுதியிலிருந்து 4560 அடி உயரத்திற்கும் சுமார் 4 மணி நேரம் கால்நடையாகவே சுமந்து கொண்டுபோய்ச்  சேர்க்கப்பட்டன!

இப்பணியில் கூலி ஆட்களைத் தவிர்த்துக் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

செங்குத்தான அமைப்புக் கொண்ட இந்த மலையில் 4560 அடி ( அதுவும்  கட்டுமானப் பொருட்களை சுமந்துகொண்டு) ஏறுவதென்பது மிகவும் சவாலானப் பணி!

மழைக்கால இன்னல்களை சொல்லவேத் தேவையில்லை.

இவ்வாறாகப் பல்வேறு சவால்களுக்கு இடையே 5 ஆண்டுகள் தொடர் முயற்சியின் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து  திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும் கோவிலுக்கு,  வருகின்ற 20-01-2016 புதன் கிழமை காலை 9.31 - 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

 "ஒருமுறை பருவதமலைக்குச் சென்று வந்தால் பூமியிலுள்ள எல்லா சிவாலயத்திற்கும் சென்று வந்ததற்குச் சமம்" என்று கூறப்படும்
ஸ்ரீ பருவதமலையில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீன சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

மேலும், கும்பாபிஷேகத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால் பக்தர்கள் பெருமளவில் பொருளாதார உதவி செய்து இறைபணியில் தாங்களும் இணையுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

BANK DETAILS

Account Name: Triplicane Sri Paruvathamalai Adiyargal Thirupani Sangam
A/c No. 60052010054870
Bank: Syndicate Bank
Branch: Royapet Branch
IFS Code: SYNB 0006005.

For further details, please contact:
R. தரணி -(9962382601)
தலைவர்

விகாஸ் E. பாண்டியன் (9884236697)
செயலாளர்

K.R. இந்திரன் (9841674725)
பொருளாளர்

திருவல்லிக்கேணி ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்
Regd.No. 138/2009
7, வி.ஆர்.பிள்ளை முதல் தெரு,
டாக்டர் பெசன்ட் ரோடு,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600005





Tuesday, January 5, 2016

Srimath Sadhananda Swamigal 94th Guru Pooja


Om –Dath – Sath Guruparabrammane Nam:

Lord Srimath Sadhananda Bramme Gurudevadath Swamigal 94th Annual Guru Pooja Invitation




Guru Srimat Sadhananda Swamigal in Audio Stroy book  .[https://www.mediafire.com/StorySadhanandaSwamigal.mp3 ] playing for 55 minutes.. 



26-01-2016 On Tuesday You please kindly come to the Gurupooja and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar

President –Swamy Chinmayananda
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
Sadhanandapuram (near to New Perungalathur)
Chennai – 600 063
email: sadhanandaashramam@gmail.com

Landmark:
Take left at the left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.

MTC Bus : Tambaram to Sadhanandapuram M55G,55D,M118A
Railway station : Perungalathur next to Tambaram
Share Auto : from Perungalathur police station




Swami Biography in Brief

Swami Sadhananda lived in this village Alapakkam (1909-1922), his last phase of life spent here serving the mankind and teaching spiritual exercises, and still living here with spiritual body and blessing the devotees. This place Alapakkam is located near Perungalathur, Chennai, Tamil Nadu, India.

Swami Sadhananda was brought here by Sri Narayanasamy - his first and most disciple. The Guruji attained Jeeva Samathi in 1922. During his sadhu lifespan he did several miracles to save peoples and the village, besides guiding his students to be blessed with high levels in sprituality.

Swami Sadhananda was a Navakanda Yogi, learned the practice from Thiruvidaimaruthur Avaduth Mouna Swamigal...link About Ashramam


DONATION ARE ACCEPTED
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
Syndicate Bank-Perungalathur Br. A/c No. 61152200053202  [ IFSC Code: SYNB0006115 ]


---------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 92வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்

சுவாமிகளின் இந்த வருடத்திய 94வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் கர வருடம் தைத்திங்கள் 12ம் நாள் (26-01-2016)  மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .



சுவாமி சதானந்தாவாழ்கை வரலாறு - சிறு குறிப்பு

சுவாமி சதானந்தா தன் வாழ்கையின் கடைசி காலத்தை ஆலப்பாக்கம் கிராமத்தில் (1909-1922) வாழ்ந்து ஜீவ சமாதி நிலையை அடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆலப்பாக்கம் எனும் கிராமம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ளது.

சுவாமி சதானந்தசதானந்தா சுவாமிகள் தன் முதல் நிலை சீடர் ஸ்ரீ நாராயணசாமி ஐயா மூலமாக இங்கு அழைத்துவரப்பட்டார். சுவாமி சதானந்தா இங்கு வாழ்ந்த நாட்களில் கிராம மக்களுக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் நிறைய சித்துகளை நிகழ்தினார்.

சுவாமி சதானந்தா தன்னுடைய ஜீவசமாதியை 1922 இல் ஏற்பாடுசெய்து கொண்டார். இங்கு அவர் தனது சூட்சும தேகத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பூர்வாசிரமத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருந்த சுவாமி சதானந்தா - ஒரு நவகண்ட யோகி, இந்த கலையை திருவிடைமருதூர் அவதூத மௌன சுவாமிகள் முலமாக கற்றுக்கொண்டார்....
tamil: https://sadhanandaswamigal.blogspot.com/2015/10/sadanantha-swamigal-story.html
ஸ்ரீமத் சதானந்தபிரம்ம சுவாமிகள் கதை [PDF]:




இவ்வண்ணம்
தலைவர் - சுவாமி சின்மையானந்தா அவர்கள்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
சதானந்தபுரம் , சென்னை -600063

சுவாமிகள் 94வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ் :










You please kindly come to jeeva samadhi and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar

Video 1:


Also contain samadhi's of his disciples Narayana swamingal,Veluswami swamingal, Pichai swamingal, agandapuri swamigal, Mayaa swamigal and gopal swamingal.

Video 2:                                                                       his disciples Video 



Video 3:                                                                    Other Place in Ashram



Thanks & Regards

ஹரிமணிகண்டன்
Harimanikandan .V

Hp +91 98412 67823

                 

ஓம் சிவசிவ ஓம்

Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  

Be Good & Do Good

Monday, January 4, 2016

மிஸ்டிக் செல்வம் அவர்களின் சமாதி திருக்கோவில் கும்பாபிசேகம் 20-1-2016

Thank to https://www.aanmigakkadal.com/

அன்பர்களே !!! 

17-1-2016 ஞாயிறு கிழமை ஶ்ரீ மகாகணபதி ஹோமம் முதல் தொடங்கி 20-1-2016 புதன் கிழமை அய்யா மிஸ்டிக் செல்வம் அவர்களின் திருக்கோவில் கும்பாபிசேகம் வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

இதோ அய்யா அவர்களின் திருக்கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் : 


தவபீடம் அமைந்துள்ள இடம் : 

ஶ்ரீலஶ்ரீம்.மிஸ்டிக் செல்வம் தவபீடம் 
கிழக்குத் தெரு, 
வாகை குளம் அருகில் , 
முடிவைத்தானேந்தல் அஞ்சல், 
தூத்துக்குடி மாவட்டம் 

ஸ்ரீலஸ்ரீம்.டாக்டர்.மிஸ்டிக் செல்வம் அய்யா - வரலாறும் ஆன்மீக சேவையும் :  


       தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயாஅவர்கள் கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்த அவர்,திருச்செந்தூரில் பணிநிமித்தமாக சில காலம் தங்கியிருந்தார்;அப்போது அவருக்கு சில தெய்வீக அனுபவங்கள்ஏற்பட்டன. இதனால், அவருக்கு அசாதாரண தெய்வீக சக்திகள் உண்டாகின. இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு.        

       
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார். பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள், சித்தர்கள் ஆகியோரின் நட்பையும், ஆசியையும் பெற்றதுடன், பயிற்சிகளையும் மேற்கொண்டார். மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார். குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம், அஷ்டகர்மம், அஷ்டாங்க யோகம், மானசயோகம் , மூலிகை மர்மங்கள், சூட்சும உலகம், மந்திர ரகசியம், கிரக இயக்கங்கள், பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள், ஜோதி வழிபாடு, சூரிய வழிபாடு, மதங்களின் வணக்கமுறை, விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.


 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும், வழிகாடடுதல்படியும் ஞான சிந்தாமணி, ஜோதிட பூமி,ஜோதிட அரசு, ஸ்ரீவராஹி விஜயம், பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரஙகுகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.மும்பை மருத்துவ கல்லுரி திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது . அய்யா அவர்கள் ஆன்மிகம் தொடர்பான சில நூல்களை எழுதியுள்ளார்கள். 

 " ஓம் சிவசிவ ஓம் " என்னும் ஒப்பில்லாத லோக வசிய மந்திரத்தினை நமக்கு தந்து சென்றவர் நம் குருவின் குருவாம் ' ஸ்ரீலஸ்ரீம் .டாக்டர்.மிஸ்டிக் செல்வம் அய்யா என்பதில் ஐயம் இல்லை. 


இப்படி நமது குருவினை நமக்கு தந்து சென்ற, இன்றும் சூட்சுமவடிவில் உலா வரும் அய்யா மிஸ்டிக் செல்வம் அவர்களின் - சமாதி கோவிலின் குடமுழுக்கு ( கும்பாபிஷேகம் ) விழா..

Wednesday, December 30, 2015

Sri Eswarapattar Swamigal Maha Guru Pooja 2016

 Sri Eswarapattar Swamigal  Maha Guru Pooja 2016
 Satguru Sri Eswarapattar Swamigal Whose odukum at Palani was a saint born in a Kannada speaking family. His young age was in Andhra and has his odukkam at Tamilnadu. His Jeeva samadhi Palani.

Sri Eswarapattar Swamigal  is one of Guru to Dr. Mystic Selvam ayya , in his “ Kaala dosha nivaaranam Prayoganm ” speech. Just hear Mystic Selvam ayya speech for 2 minutes “ https://www.mediafire.com/download.php?4f4jdf7u7ox94pn ” (2mb) .


Mystic ayya said when we keep photo Sri Eswarapattar Swamigal (above pic) and just say “ Om Eswarapattar Namaha “ 11 times in morning & evening , Swamigal will take away our 'Cast the evil eye',  solve court-cases crisis and all our problem. 

Satguru Sri Eswarapattar Swamigal   Maha Guru Pooja Invitation at Thiruchendur & Palani  04-01-2016 . 
  
Get in touch with Sivayoga Guruji R.Santhanakrishnan +91 9159532526 Thoothukudi for this Guru Pooja.
At.Thiruchendur Invitation 





also in Palani ....