Tuesday, March 28, 2023

51 சக்தி பீடங்களை

51 சக்தி பீடங்களை பற்றி பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை திருவாவடுதுறை ஆய்வுமையத்தில் கூறப்பட்டவாறு காட்டப்பட்டுள்ளது.

Thank to fb

01) முதல் சக்திபீடம் ~ *அட்டஹாஸம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *கீழ்உதடு*

விழுந்தஇடம் ~ *அட்டஹாஸம் அஹ்மத்பூர் - காட்வா பாதையருகில் - லாப்பூர்*

தேவியின் பெயர் ~ *புல்லரா*

பைரவர் பெயர் ~ *விஸ்வேஸ பைரவர்*

02) இரண்டாம் சக்திபீடம் ~ *உத்கலம் பீஹார்*

விழுந்த அங்கம் ~ *தொப்புள்*

விழுந்த இடம் ~ *உத்கலபீடம் ஹவுரா - வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *ஜகந்நாத பைரவர்*

03)மூன்றாம் சக்திபீடம் ~ *உஜ்ஜெயின்*

விழுந்த அங்கம் ~ *இடது முழங்கை*

விழுந்த இடம் ~ *உஜ்ஜெயின் ஹரஸித்தி தேவி ஆலயம் - சிப்பரா நதிக்கரை - ( மத்தியப்பிரதேசம் )*

தேவியின் பெயர் ~ *மாங்கல்ய சண்டிகா*

பைரவர் பெயர் ~ *கபிலாம்ப பைரவர்*

04) நான்காம் சக்திபீடம் ~ *முக்திநாத்., நேபாளம்*

விழுந்த அங்கம் ~ *வலது கன்னம்*

விழுந்த இடம் ~ *கண்டகீ நதிக்கரை - முக்திநாத் - ( நேபாளம் )*

தேவியின் பெயர் ~ *கண்டகீ சண்டீ*

பைரவர் பெயர் ~ *சக்ரபாணி பைரவர்*

05) ஐந்தாம் சக்திபீடம் ~ *கன்னியாகுமரி., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *முதுகு*

விழுந்த இடம் ~ *கன்னியாகுமரி ( தமிழ்நாடு )*

தேவியின் பெயர் ~ *சர்வாணீ*

பைரவர் பெயர் ~ *நிமிஷ பைரவர்*

06) ஆறாம் சக்திபீடம் ~ *பவானிபூர்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *வலதுகால் பெருவிரல்*

விழுந்த இடம் ~ *பவானிபூர் பூதாத்ரீ ஆலயம் ( பங்களாதேஷ் )*

தேவியின் பெயர் ~ *அபர்ணா*

பைரவர் பெயர் ~ *க்ஷீரகண்ட பைரவர்*

07) ஏழாம் சக்திபீடம் ~ *கர்ணாட் (கோகர்ணம்., கர்நாடகா)*

விழுந்த அங்கம் ~ *காதுகள்*

விழுந்த இடம் ~ *கர்ணாட் (கோகர்ணம்., கர்நாடகா)*

தேவியின் பெயர் ~ *ஜயதுர்க்கா*

பைரவர் பெயர் ~ *அபீரு பைரவர்*

08) எட்டாம் சக்திபீடம் ~ *அமர்நாத்., ஜம்மு-காஷ்மீர்*

விழுந்த அங்கம் ~ *கழுத்தின் மேல்பகுதி*

விழுந்த இடம் ~ *அமர்நாத் குகை ( உள்ளே பனியிலான சக்திபீடம் ) ஜம்மு-காஷ்மீர்*

தேவியின் பெயர் ~ *மஹாமாயா*

பைரவர் பெயர் ~ *த்ரிஸந்த்யேஸ்வர பைரவர்*

09) ஒன்பதாம் சக்திபீடம் ~ *காமாக்யா.,கௌஹாத்தி., அஸ்ஸாம்*

விழுந்த அங்கம் ~ *யோனி*

விழுந்த இடம் ~ *காமாக்யா ( பிரம்மபுத்ரா நதிக்கரை ) கௌஹாத்தி - அஸ்ஸாம்*

தேவியின் பெயர் ~ *காமா*

பைரவர் பெயர் ~ *உமாநந்த பைரவர்*

10) பத்தாம் சக்திபீடம் ~ *கல்கத்தா., மேற்கு வங்கம்*

விழுந்த அங்கம் ~ *வலதுகால் விரல்கள் ( கட்டை விரலைத் தவிர )*

விழுந்த இடம் - *கல்கத்தா காளீ கோவில் ( மேற்கு வங்காளம் )*

தேவியின் பெயர் - *காளீகா தேவீ*

பைரவர் பெயர் - *நகுலீச பைரவர்*

11) பதினோராம் சக்திபீடம் ~ *காஞ்சிபுரம்., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *எலும்புகள்*

விழுந்த இடம் ~ *காமாக்ஷி கோவிலுக்கும் கந்தக்கோட்டத்திற்கும் இடையேயுள்ள மகாகாளீ கோவில் - காஞ்சிபுரம் - தமிழ்நாடு*

12) பனிரெண்டாம் சக்திபீடம் ~ *பூரி., ஒடிஸா*

விழுந்த அங்கம் ~ *இடுப்பின் வலதுபக்கம்*

விழுந்த இடம் ~ *நீலமாதவன் கோவில் ( பூரி ஜகந்நாதர் கோவில் அருகில் ) பூரி - ஒடிஸா*

தேவியின் பெயர் ~ *காலீ*

பைரவர் பெயர் ~ *அஸிதாங்க பைரவர்*

13) பதிமூன்றாம் சக்திபீடம் ~ *ஹவுரா., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் கிரீடம்*

விழுந்த இடம் ~ *ஹவுரா - பர்ஹர்வா பாதையில் அஜீம்கஞ்ச் என்ற இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் என்ற சிற்றூரில் கங்கைநதிக்கரை தேவி ஆலயம்*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *சம்வர்த்த பைரவர்*

14) பதினான்காம் சக்திபீடம் ~ *குருக்ஷேத்ரம்., ஹரியானா*

விழுந்த அங்கம் ~ *வலது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *குருக்ஷேத்ரம் ஸ்தாணு சிவன் ஆலயம் அருகிலுள்ள பத்ரகாளீ கோவில்*

தேவியின் பெயர் ~ *சாவித்ரீ*

பைரவர் பெயர் ~ *ஸ்தாணுநாத பைரவர்*

15) பதினைந்தாம் சக்திபீடம் ~ *குவ்வூர்., ஆந்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ இடது கன்னம்

விழுந்த இடம் ~ *ராஜமுந்திரி அருகேயுள்ள குவ்வூர் கோதாவரிக்கரை., ஆந்திர பிரதேசம்.*

தேவியின் பெயர் ~ *விஸ்வேஸீ*

பைரவர் பெயர் ~ *தண்டபாணி பைரவர்*

16) பதினாறாம் சக்திபீடம் ~ *கோலாப்பூர்., மகாராஷ்டிரா*

விழுந்த அங்கம் ~ *முக்கண்கள்*

விழுந்த இடம் ~ *கோலாப்பூர்., மஹாராஷ்ட்ரா*

தேவியின் பெயர் ~ *மஹாலக்ஷ்மீ*

பைரவர் பெயர் ~ *க்ரோதீச பைரவர்*

17) பதினேழாம் சக்திபீடம் ~ *சட்காவ்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *வலது முழங்கை*

விழுந்த இடம் ~ *பங்களாதேஷில் ஸீதாகுண்டம் அருகேயுள்ள சட்காவ் என்ற இடத்திலுள்ள சந்திரநாத் மலையிலுள்ள சந்திரசேகரர் ஆலயத்தில்*

தேவியின் பெயர் ~ *பவாநீ*

பைரவர் பெயர் ~ *சந்திரசேகர பைரவர்*

18) பதினெட்டாம் சக்திபீடம் ~ *ஸுநந்தா., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *மூக்கு*

விழுந்த இடம் ~  *ஸுநந்தா நதிக்கரையில் உள்ள உக்ரதாரா தேவீ ஆலயம் - சிகார்பூ கிராமம் - பங்களாதேஷ்*

தேவியின் பெயர் ~ *ஸுநந்தா*

பைரவர் பெயர் ~ *த்ரியம்பக பைரவர்*

19) பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸுஸீந்த்ரம்., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *மேல் பல்வரிசை*

விழுந்த இடம் ~ *தாணுமாலயன் கோவில் - சுசீந்தரம் - தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *நாராயணீ*

பைரவர் பெயர் ~ *ஸம்ஹார பைரவர்*

20) இருபதாம் சக்திபீடம் ~ *ஹவுரா., மேற்கு வங்காளம்.*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் ஹாரம்*

விழுந்த இடம் ~ ஹவுரா - க்யூல் வழியில் நல்ஹாடி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள ஆலயம்.

தேவியின் பெயர் ~ *காளீகா*

பைரவர் பெயர் ~ *யோகேச பைரவர்*

21) இருபத்தோராம் சக்திபீடம் ~ *அமர்கண்ட்., மத்திய பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *இடுப்பின் இடதுப் பக்கம்*

விழுந்த இடம் ~ *அமர்கண்ட் ( மத்திய பிரதேசம் ) நர்மதை உற்பத்தியாகும் குண்டம்*

தேவியின் பெயர் ~ *சோணா*

பைரவர் பெயர் ~ *சோணபத்ர பைரவர்*

22) இருபத்திரெண்டாம் சக்திபீடம் ~ *நந்திபூர்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *குடல்*

விழுந்த இடம் ~ *நந்திபூர் கிராமம் ஆலமரத்தடி கோவில் ( ஹவுரா - க்யூல் வழியில் சந்தியா இரயில் நிலையம் அருகில் )*

தேவியின் பெயர் ~ *காளீகா*

பைரவர் பெயர் ~ *யோகேச பைரவர்*

23) இருபத்திமூன்றாம் சக்திபீடம் ~ *பசுபதிநாத்., நேபாளம்*

விழுந்த அங்கம் ~ *முழங்கால்*

விழுந்த இடம் ~ *பசுபதிநாத் பாக்மதீ நதிக்கரையில் உள்ள குஹ்யேஸ்வரீ ஆலயம் - நேபாளம்*

24) இருபத்திநான்காம் சக்திபீடம் ~ *திரிபுரா., அஸ்ஸாம்*

விழுந்த அங்கம் ~ *வலது கால்*

விழுந்த இடம் ~ *திரிபுராவிலுள்ள ராதாக்ருஷ்ணபூர் கிராமத்தில் 2 கிமீ தொலைவிலுள்ள மலையில் - அஸ்ஸாம்*

தேவியின் பெயர் ~ *திரிபுரசுந்தரி*

பைரவர் பெயர் ~ *திரிபுரேச பைரவர்*

25) இருபத்தைந்தாம் சக்திபீடம் ~ *த்ரிஸ்ரோதா., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கால்*

விழுந்த இடம் ~‌ *மேற்கு வங்காளம் ஜல்பாகுரி ஜில்லா சால்வாடீ கிராமத்தில் உள்ள த்ரிஸ்ரோதா நதியின் கரையில்*

தேவியின் பெயர் ~ ‌ *ப்ராம்ஹீ*

பைரவர் பெயர் ~ *அம்பர பைரவர்*

26) இருபத்தாறாம் சக்திபீடம் ~ *பஞ்சசாகரம்., ஹரித்வார்., உத்ரகாண்ட்*

விழுந்த அங்கம் ~ *கீழ் பல்வரிசை*

விழுந்த இடம் - *பஞ்சசாகரம்., ஹரித்வார்., உத்ரகாண்ட்* 

தேவியின் பெயர் ~ *வராஹீ*

பைரவர் பெயர் ~ *மஹாருத்ர பைரவர்*

27) இருபத்தேழாம் சக்திபீடம் ~ *கேது ப்ரஹ்மம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கை*

விழுந்த இடம் ~ *அஹ்மத்பூர் கட்வா செல்லும் வழியில் கேதுப்ரஹ்மம் கிராமம்., மேற்கு வங்காளம்.*

தேவியின் பெயர் ~ *மஹீலா*

பைரவர் பெயர் ~ *பீருக பைரவர்*

28) இருப்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *அலோப்தேவீ., பிரயாகை., அலகாபாத்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ கை விரல்கள்

விழுந்த இடம் ~ *அலோப் தேவீ - ஆலயப் பிரயாகை., அலகாபாத்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *லலிதா*

பைரவர் பெயர் ~ *பவ பைரவர்*

29) இருபத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸோம்நாத்., குஜராத்*

விழுந்த அங்கம் ~ *வயிறு*

விழுந்த இடம் ~ *ஸோம்நாத் - குஜராத்*

தேவியின் பெயர் ~ *ஸந்த்ரபாஹா*

பைரவர் பெயர் ~ *வக்ரதுண்ட பைரவர்*

30) முப்பதாம் சக்திபீடம் ~ *மதுரா (பிருந்தாவனம்) ஆக்ரா அருகில்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் - கேசம்

விழுந்த இடம் - *மதுரா - பிருந்தாவன ரோட்டில் பூதேஸ்வர மஹாதேவர் ஆலயம் ( ப்ருந்தாவனத்தில் இருந்து 3 கிமீ ) மதுரா (பிருந்தாவனம்) ஆக்ரா அருகில்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *உமா*

பைரவர் பெயர் ~ *உமேச பைரவர்*

31) முப்பத்தோராம் சக்திபீடம் ~ *உஜ்ஜையினி., மத்தியபிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *மேல் உதடு*

விழுந்த இடம் ~ *சிப்ரா நதிக்கரை - உஜ்ஜையின் - மத்தியபிரதேசம்*

தேவியின் பெயர் ~ *அவநதீ*

பைரவர் பெயர் ~ *லம்பகர்ண பைரவர்*

32) முப்பத்திரெண்டாம் சக்திபீடம் ~ *புஷ்கர்., ராஜஸ்தான்.*

விழுந்த அங்கம் ~ *மணிக்கட்டு*

விழுந்த இடம் ~ *புஷ்கர் ( ராஜஸ்தான் )*

தேவியின் பெயர் ~ *காயத்ரீ*

பைரவர் பெயர் ~ *சர்வானந்த பைரவர்*

33) முப்பத்துமூன்றாம் சக்திபீடம் ~ *பாட்னா., பிஹார்*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *படீபடனேஸ்வரீ கோவில் - மகராஜ் கஞ்சி - பாட்னா*

தேவியின் பெயர் ~ *ஸர்வானந்தகிரீ*

பைரவர் பெயர் ~ *வ்யாமகேச பைரவர்*

34) முப்பத்திநான்காம் சக்திபீடம் ~ *மானசரோவர்., திபேத்*

விழுந்த அங்கம் ~ *வலது முன் கை*

விழுந்த இடம் ~ *மானஸரோவர் ஏரி - கைலாஷ் - திபெத்*

தேவியின் பெயர் ~ *தாக்ஷாயணீ தேவீ*

பைரவர் பெயர் ~ *அமர பைரவர்*

35) முப்பத்தைந்தாம் சக்திபீடம் ~ *உச்சய்த்., மதுபானி மாவட்டம்., பிஹார்* 

விழுந்த அங்கம் ~ *இடது தோள்*

விழுந்த இடம் ~ *நேபாள எல்லையிலுள்ள ஜனக்புரியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள உச்சய்த் ஊரிலுள்ள துர்க்கையின் ஆலயத்திலிருந்து 14 கிமீ தொலைவிலுள்ள வனதுர்க்கா ஆலயம்., மதுபானி மாவட்டம்., பிஹார்*

தேவியின் பெயர் ~ *உமா*

பைரவர் பெயர் ~ *மஹோதர பைரவர்*

36) முப்பத்தாறாம் சக்திபீடம் ~ *ஜெய்ஷோர்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *இடது முன் கை*

விழுந்த இடம் ~ *ஜெய்ஷோர் - பங்களாதேஷ்*

தேவியின் பெயர் ~ *யசோரேஸ்வரீ*

பைரவர் பெயர் ~ *சண்ட பைரவர்*

37) முப்பத்தேழாம் சக்திபீடம் ~ *குளித்தலை., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *வலது தோள்*

விழுந்த இடம் ~ *குளித்தலை ( அராளகேசி அம்மன் திருக்கோவில் ) தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *குமாரீ*

பைரவர் பெயர் ~ *சிவா பைரவர்*

38) முப்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *சித்ரகூடம்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *வலது மார்பு*

விழுந்த இடம் ~ *சித்ரகூடம் அருகிலுள்ள மைஹர்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *ஷிவானி*

பைரவர் பெயர் ~ *சண்ட பைரவர்*

39) முப்பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *திரிகோணமலை., ஸ்ரீலங்கா*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் கால் சலங்கை*

விழுந்த இடம் ~ *திரிகோணமலை., ஸ்ரீலங்கா*

தேவியின் பெயர் ~ *இந்த்ராக்ஷீ*

பைரவர் பெயர் ~ *ராக்ஷேஸேஸ்வர பைரவர்*

40) நாற்பதாம் சக்திபீடம் ~ *ஒண்டால் சந்தியா., பிர்பம் மாவட்டம்., துப்ராஜ்பூர்., மேற்கு வங்காளம்.* 

விழுந்த அங்கம் ~ *நெஞ்சு*

விழுந்த இடம் ~ *ஒண்டால் சந்தியா வழியில் துப்ராஜ்பூரிலிருந்து 10 கிமீ வடக்கே பாபஹரா என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகேயுள்ள மயானம்., ஒண்டால் சந்தியா., பிர்பம் மாவட்டம்., துப்ராஜ்பூர்., மேற்கு வங்காளம்.*

தேவியின் பெயர் ~ *மஹிஷாஸுர மர்த்தினி*

பைரவர் பெயர் ~ *வக்ரநாத பைரவர்*

41) நாற்பத்தோராம் சக்திபீடம் ~ *மணிகர்ணிகா., காசி/வாரணாசி., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் குண்டலங்கள்*

விழுந்த இடம் ~ *மணிகர்ணிகா கட்டிடத்தின் அருகேயுள்ள ஆலயத்தில்., காசி/வாரணாசி., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *விசாலாக்ஷி*

பைரவர் பெயர் ~ *கால பைரவர்*

42) நாற்பத்திரெண்டாம் சக்திபீடம் ~ *பஞ்சகுரா., மிட்னாபூர் மாவட்டம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *பஞ்சகுரா இரயில் நிலையத்திற்கருகே உள்ள விபாசநதிக் கரையிலுள்ள ஆலயம்., மிட்னாபூர் மாவட்டம்., மேற்கு வங்காளம்*

தேவியின் பெயர் ~ *கபாலினி*

பைரவர் பெயர் ~ *பீம பைரவர்*

43) நாற்பத்திமூன்றாம் சக்திபீடம் ~ *வைராட்., (ஜெய்பூர்)., ராஜஸ்தான்*

விழுந்த அங்கம் ~ *இடது கால் பெருவிரல்*

விழுந்த இடம் ~ *வைராட் - ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமம்., ராஜஸ்தான்*

தேவியின் பெயர் ~ *அம்பிகா*

பைரவர் பெயர் ~ *அம்ருதாக்ஷ பைரவர்*

44) நாற்பத்திநான்காம் சக்திபீடம் ~ *ஜஸிடீஹ்., டியோகர் மாவட்டம்., ஜார்கண்ட்*

விழுந்த அங்கம் ~ *இருதயம்*

விழுந்த இடம் ~ *ஹவுரா - பாட்னா வழியில் ஜஸ்டீஹ் வழியிலுள்ள வைத்யநாதர் ஆலயம்., டியோகர் மாவட்டம்., ஜார்கண்ட்*

தேவியின் பெயர் ~ *ஜெய துர்க்கா*

பைரவர் பெயர் ~ *வைத்யநாத பைரவர்*

45) நாற்பத்தைந்தாம் சக்திபீடம் ~ *பாஉர்பாக்., ஜயந்தியா மாவட்டம்., மெகாலயா*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *அஸ்ஸாமிலுள்ள ஷில்லாங்கிலிருந்து 52 கிமீ தொலைவிலுள்ள ஜயந்தியா மலையிலுள்ள பாஉர்பாக் என்ற கிராமம்., பாஉர்பாக்., ஜயந்தியா மாவட்டம்., மெகாலயா*

தேவியின் பெயர் ~ *ஜெயந்தீ*

பைரவர் பெயர் ~ *க்ரமதீஸ்வர பைரவர்*

46) நாற்பத்தாறாம் சக்திபீடம் ~ *திருவானைக்காவல் - திருச்சி மாவட்டம் - தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *முகவாய்க் கட்டை*

விழுந்த இடம் - *திருவானைக்காவல் - திருச்சி மாவட்டம் - தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *அகிலாண்டேஸ்வரீ*

பைரவர் பெயர் ~ *விக்ருதாக்ஷ பைரவர்*

47) நாற்பத்தேழாம் சக்திபீடம் ~ *ஜலந்தர்., பஞ்சாப்*

விழுந்த அங்கம் ~ *இடது மார்பு*

விழுந்த இடம் ~ *ஜலந்தர் - பஞ்சாப்*

தேவியின் பெயர் ~ *திரிபுர மாலினி*

பைரவர் பெயர் ~ *பீக்ஷண பைரவர்*

48) நாற்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *ஜ்வாலாமுகீ., கங்ரா மாவட்டம்., ஹிமாச்சலப் பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *நாக்கு*

விழுந்த இடம் ~ *ஜ்வாலாமுகீ ரோட்டிலிருந்து 21 கிமீ - கங்கா மாவட்டம் - ஹிமாச்சலப் பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *ஸித்திதா ( ஜ்வாலை வடிவில் )*

பைரவர் பெயர் ~ *உன்மத்த பைரவர்*

49) நாற்பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸ்ரீசைலம்., ஆந்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *கழுத்தின் கீழ்பகுதி*

விழுந்த இடம் ~ *மல்லிகார்ஜூனம் - ஸ்ரீசைலம் - ஆந்திரப் பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *பிரம்மராம்பிகாம்பாள்*

பைரவர் பெயர் ~ *சம்பராநந்த பைரவர்*

50) ஐம்பதாவது சக்திபீடம் ~ *ஸ்ரீ பர்வதம்., ஜம்மு-காஷ்மீர்*

விழுந்த அங்கம் ~ *வலது புட்டச்சதை*

விழுந்த இடம் ~ *காஷ்மீர் - லடாக் இடையேயுள்ள ஸ்ரீ பர்வதம் - ஜம்மு-காஷ்மீர்*

தேவியின் பெயர் ~ *சுந்தரி*

பைரவர் பெயர் ~ *சுந்தரானந்த பைரவர்*

51) ஐம்பத்தொன்றாம் சக்திபீடம் ~ *ஹிஸ்கோஸ்., பாகிஸ்தான்*

விழுந்த அங்கம் ~ *தலையின் உச்சிக்குழி*

விழுந்த இடம் ~ *பாகிஸ்தான் கராச்சியிலிருந்து வடமேற்கில் ஹிஸ்கோஸ் நதிக்கரையில் பலுசிஸ்தான் லாஸ்பேஸ்தானிலுள்ள ஹிங்க்லாஜ் என்னுமிடத்தில் ஜ்வாலை ( தீப்பிழம்பு ) வடிவில் உள்ளாள்.*

தேவியின் பெயர் ~ *கோடரீ*

பைரவரின் பெயர் ~ *பீமலோசன பைரவர்*

Thursday, February 2, 2023

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் :

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து பகிறவும்...

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

அஷ்ட பந்தனம்

அஷ்ட பந்தனம்:

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?
அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.
`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள். 

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'
இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். 

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

Friday, January 27, 2023

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்
-----------------------------

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.

மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ..

சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.

பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைபவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை.

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.

● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

● பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!

● எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.

● எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

● இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.

● நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

● உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

● மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

● அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

● இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.

● அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.

எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு.

 இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது.

சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.

இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழி பாட்டைச் செய்து மது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங் களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்
--------------------------------------------------------------

உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
அதுதான் மெலடோனின் (melatonin)!!
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது!

அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது. அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

Wednesday, January 25, 2023

கருட புராணம் கூறும் தீட்டு

|| கருட புராணம் கூறும் தீட்டு ||

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.

88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.

வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.

பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.

ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்

மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.

6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.

அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.

மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :
தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்

முகம், கழுத்து

இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.

கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும். 

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் (பிறப்பால்) ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.

இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு —
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு: உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்

உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)

உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை

இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்) தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா

தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா

தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)

தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை – பிதாமஹன்

தந்தையின் தாய் – பிதாமஹி

தாயின் தந்தை – மாதாமஹன்

தாயின் தாய் – மாதாமஹி

உடன் பிறந்த ஸஹோதரி

ஸஹோதரியின் பெண்கள்

மருமாள் (ஸஹோதரனின் பெண்)

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்

ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்

ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்

ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்

ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.
10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
இறந்தவர் (குழந்தை)யின் தந்தை

தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு. தாயின் தந்தை (மாதாமஹர்)

தாயின் தாய் (மாதாமஹி)

தாயின் ஸஹோதரன் (மாதுலன்)

மாமன் மனைவி (மாதுலானி)

மாமனார்

மாமியார்

தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)

தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)

ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்

உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)

ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)

கல்யாணமான பெண்

கல்யாணமான ஸஹோதரி

ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)

ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)

ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)

7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.

2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.

7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள். பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்). அத்தையின் பிள்ளை அல்லது பெண்

மாமனின் பிள்ளை அல்லது பெண்

தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்

தன்னுடைய ஸஹோதரியின் பெண்

தன் ஸஹோதரனின் மணமான பெண்

சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்

தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)

பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)

உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)

உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)  கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்). ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி

ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.

ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை

ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா

கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.

ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்

ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.

கருட புராணம்

ஜெய் ஸ்ரீராம்.
ஸர்வம் கிருஷ்ணார்பணம்.
Fb

Saturday, January 21, 2023

விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இடம்

விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இருந்த மிக மிக உயரிய இடம் பற்றிய எனது இனிய நண்பர் - அனீஸ் கிருஷ்ணன் நாயர் - (இவர் மலையாள நாயர் குடியை சேர்ந்தவர் ஆக பிறந்து இருப்பினும் - இவரது ஆழ்ந்த சாஸ்திர புலமையை கண்டு - வட மொழி அறியாத நான் சொன்னால் அபத்தம் - என்னிடம் சிரித்து கொண்டே சொன்னவர் - வியாசராஜா மட பீடாதிபதியும் - திருப்தி வேத பாடசாலை தலைவராகவும் பல பெரிய வேத பீடங்களை அலங்கரித்த - ஸ்ரீ  ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்த சுவாமிஜிகள் - நாங்கள் இருவரும் அவரின் ஸ்ரீரங்க விஜயத்தில் பேசும் பொது - வியந்து இவ்வளவு சாஸ்திர விற்பன்னரை கண்டது மகிழ்ச்சி என்று என்னிடம் சொன்னார் !!! 

====================================
விதவைகள் பற்றி காஞ்சி சங்கராச்சாரியா - பெரியவர் சொன்ன பற்றிய செய்தி - அதற்கு மறுப்பு என்கிற விசயத்தை பற்றிய பதிவு இது - சங்கர மட விஸ்வாசிகள் கூட இவ்வளவு தெளிவாக எழுத முடியாது - படித்து பாருங்கள் 

==================

மத்யமர் குழுவில் கு.பி (மகளிர் பிரிவு) மஹாபெரியவரை திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர் . 

பெரியவர் சிலையை ஆகமக் கோவில்களில் வைக்கக் கூடாது என்று நான் சொல்லும் போதெல்லாம் வந்து தகராறு செய்யும் " பெரியவர் விசுவாசிகள்" கும்பலைச்சார்ந்த எவனாவது விளக்கம் எழுதுவான் என்று பார்த்தேன் .ப்ச் . அவர்கள் என்ன நம்மைப் போல வெட்டியாக வா இருக்கிறார்கள் ? பெண்டாட்டியையும் பெண்பிள்ளையும் வேலைக்கு அனுப்பி திரட்டிய பணத்தில் தண்ணியடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது ஏதாவது நிறுவனத்தில் வாடிக்கையாளர் கணக்கில் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள் .

தேவ்ராஜ் அமெரிக்காவிலோ மயிலாப்பூரிலோ லோஷன் தடவி முகத்தை பராமரித்துவிட்டு, நாளை அமாவாசை என்பதால் இன்று இரவே முகத்தை மொழுங்க சிரைத்து விட்டு  நிம்மதியாக கண்ணயர்ந்திருப்பார் .

ஆகவே  வேறு வழியே இல்லாததால் நானே பதில் எழுதினேன் .

//
மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் காஞ்சி மடாதீசர் சந்திரசேகர சரஸ்வதி குறித்து ஒரு பதிவை ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார் .மஹா பெரியவர் சகேசி விதவைகளை பார்க்க மாட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்ட பதிவு (இதைக்கூட தெளிவாக புரிந்து கொள்ளாமல் அவர் விதவைகளையே பார்க்க மாட்டார். ஏன் என்றால் விதவைகள் அமங்கலிகள் ; விதவைகளுக்கு மன சஞ்சலம் வரும் .அவர் அம்பாள் உபாசகர் என்பதால் .....என்று ஏகப்பட்ட விளக்கங்கள்) .

குருவின் தேவை குறித்து பலரும் எழுதியிருந்த பதிவுகளுக்கு எதிராக  இப்பதிவு வந்தது என்று எண்ணுகிறேன் . இது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லலாம் என்று எண்ணுகிறேன் .

அ) வைதவ்ய தீக்ஷை என்பது துறவறத்திற்கு சமமமானது .துறவிகளின் வாழ்வும் வைதவ்ய தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களது வாழ்வும் ஏறத்தாழ ஒன்று தான் .தினசரி மூன்று / இரண்டு அல்லது குறைந்த பட்சம் ஒருமுறையாவது முழுமையான குளியல் . ஜபம் ; சூரியாஸ்தமனத்திற்கு பிறகு உணவு உண்பதில்லை என்ற நியமம்

ஆ) 30/40 வருடங்களுக்கு முன்பு வரை துறவியும் விதவையும் ஒரு வகையான காவி + சிவப்பு கலந்த உடையைத்தான் அணிந்து வந்தார்கள் .வெள்ளை ஆடை வாங்கி அதில் 10/20 நாட்களுக்கு ஒரு முறை காஷாயம் முக்கி அணிந்து கொள்வார்கள் .இப்போது பல  துறவிகள் ஆயத்த காவி வேஷ்டிகளை பயன்படுத்துகிறார்கள் 

இ) பிராமணனுக்கு பிரதானம் சிகையும் பூணூலும் . ராமானுஜ வைணவம் தவிர்த்து ஏனைய மரபுகளில் துறவறத்தின் போது சிகையும் பூணூலும் நீக்கப்டும் .அதே போல வைதவ்ய தீக்ஷை எடுத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்கள் தாலியையும் கேசத்தையும்  நீக்கி கொள்வார்கள் .துறவிக்கும் விதவைக்கும் தலை மொட்டை தான் .தினசரி மூன்று முறை குளிப்பதற்கு இது தான் வசதி .இருவருக்கும் கடும் உணவு நிபந்தனைகளும் ஆச்சார நிபந்தனைகளும் உண்டு .

ஈ) துறவியின் நோக்கமும் விதவையின் நோக்கமும் முக்தி மட்டுமே .அவர்களுக்கு லௌகீக நோக்கங்கள் இல்லை .

உ) ஒரு காலத்தில் துறவிகளுக்கும் விதவைகளுக்கும் சமமான அளவு மரியாதை கொடுக்கப்பட்டது .நல்ல மடி ஆச்சாரம் உள்ள விதவைகளுக்குத்தான் பல நேரங்களில் மடாதிபதிகள் முதல் தீர்த்தத்தை வழங்கினார்கள் .

மாத்வ விதவை ஒருவர் ஒழுங்காக ஏகாதசி விரதம் இருப்பதால் தான் மழை பொய்க்காமல் பெய்கிறது என்பாராம் மஹா பெரியவர் . தனது தவத்தை விட அந்த விதவையின் ஆச்சாரத்திற்கு, ச்ரத்தைக்கு , வைராக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார் பெரியவர் .

ஊ) கணவனை இழந்த மனைவிக்கு லௌகீக கடமைகள் ஏதும் இல்லை . அதனால் அவள் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என மதம் சொன்னது .இதே விதிதான் மனைவியை இழந்த கணவனுக்கும் .அவனை விதுரன் / அபத்னீகன் என்று சாத்திரம் சொல்கிறது 

.அவனும் துறவறம் ஏற்க வேண்டும் என்று நூல்கள் சொல்கின்றன . மனைவியை இழந்தவன் அநாச்ரமி ; அவனுக்கு தானம் கொடுக்கக்கூடாது ; அவனிடம் ஆசிர்வாதம் வாங்கககூடாது ; அவனுக்கு யாகங்களில் பங்கில்லை ; அவன் ஒற்றை பிராமணன்; சில அர்ச்சக மரபுகளில் திருமணமாகாதவனும் மனைவியை இழந்தவனும் தெய்வத்திருமேனியை தீண்டக் கூடாது என்ற விதி இருக்கிறது .

அவன் முக்கியின் பாதையில் செல்ல வேண்டும் என்று புனித நூல்கள் சொல்கின்றன . துறவற வழக்கம் இல்லாத யாகங்களை இறக்கும் வரைக்கும் செய்ய வேண்டிய பூர்வ மீமாம்சக பிரிவை சார்ந்தவனுக்கு தான் நியாயத்திற்கு மறுமணம் .பிறர் எல்லாம் பெண்டாட்டி போன பிறகாவது வைராக்யத்தை கைக்கொள்ள வேண்டும் என்பதே விதி . ஆனால் விதவிலக்கை ஆண்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினர் .

எ ) நிவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் விதவைகள் மற்றும் சாமியார்கள் மீது  ப்ரவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் கருஹஸ்தர்களுக்கு என்றுமே விலக்கம் இருந்தது .சாமியார்களுடன் சுற்றும் சம்சாரியும் உருப்பட மாட்டான் ; சம்சாரியுடன் சுற்றும் சாமியாரும் உருப்பட மாட்டான் என்பார்கள் . சில வீடுகளில் சாமியார்கள் வந்து போனால் கழுவி துடைக்கும் வழக்கம் இருந்தது. ஆக சாமியார்களையும் விதவைகளையும் சம்சாரிகள் அமங்கல வஸ்துக்களாகத்தான் கண்டனர் . இதில் எப்போது சாமியார் மங்கல ரூபமாகவும் விதவை மட்டும் அமங்கலமாகவும் மாறினாள் என்பது தெரியாது .
ஏ) பிரச்சனை எங்கு வந்தது? பாட்டி செத்த பிறகு தாத்தா மைனராக சுற்றினால் யாருக்கும் பிரச்சனை இல்லை ; ஆனால் அத்தான் இறந்த பிறகு அக்கா வண்ண ஆடை அணிந்தால் மறுமணம் குறித்து யோசித்தால் தம்பிக்கு மான பிரச்சனை . ஜாதிக்கு ஒழுக்க பிரச்சனை .ஆணோ பெண்ணோ அனைவருக்கும் வைராக்யம் இருக்க வேண்டும் என்பதில்லை .ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்கும் ; ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்காது . இருப்பவர்களை போற்ற வேண்டும் ; இல்லாதவர்களை விட்டு ஒதுங்கி விட வேண்டும் . சாத்திரத்தில் பாகுபாடு இல்லை . சமூகத்தில் தான் உண்டு . அந்த சமூக பாகுபாட்டால் தான் பிரச்சனை .

ஐ) ஒரு உதாரணத்தை சொல்கிறேன் .வறட்டு ஆச்சாரத்திற்கு பெயர் போன ஒரு மாத்வ நிறுவனம் உண்டு .அதன் சிஷ்யர்களுக்கு தங்கள் சாமியாரின் வறட்டு ஆச்சாரத்தின் மீது மிகப்பெரிய பிரமிப்பு உண்டு . பாரம்பர்யமோ இன்னபிற பெருமைகளோ  சொல்லத்தக்க மஹான்களோ இல்லாததால் இந்த வறட்டுத்தனத்தையே இவர்கள் பெரும் ஆபரணமாக அணிந்து வந்தனர் . ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆஷாட தசமி அன்று சமூக ஊடகங்களில்  மேற்படி நிறுவனத்தின் சிஷ்யர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். தங்கள் சாமியார் ஆஷாட ஏகாதசி அன்று எந்த சகேசி விதவைக்கும் (தலையை மழிக்காத விதவை) தப்த முத்திரை (சங்கு சக்ர தாரணம் ) வழங்க மாட்டார் என்று பெருமையாக அறிவித்தனர் 

உண்மையில் சகேசி விதவைகள் இவர்களது லூசுத்தனங்கள் தெரிந்து அந்த அமைப்பு இருக்கும் தெருவிற்கு கூட செல்ல மாட்டார்கள் .இருந்தாலும் தங்களது சாமியாரின் கடும் நியமத்தை பறைச்சாற்ற மேற்படி கும்பல் செய்த வேலை இது. சாமியாருக்கு தெரியும் என்று தோன்றவில்லை .செய்தி பற்றிக்கொண்டது .பல விதமான வாத பிரதிவாதங்கள் நடந்தன;

 நான் அவர்கள் பதிவில் ஒரு கருத்தை சொன்னேன் ."சகேசி விதவைகளுக்கு முத்திரை கொடுக்கக்கூடாது என்பதை ஆதரிக்கிறேன் .ஆனால் அதே போல சிகை இல்லாத ஆண்களுக்கும் முத்திரை கொடுக்கக்கூடாது . சிகை இல்லாமல் இருப்பதும் பெரும்பாவம் அல்லவா ?" என்று கேட்டேன் . சிகை வைத்தவனுக்கு மட்டும் தான் முத்திரை என்றால் வசூல் என்னவாவது? ஆகையால் அந்த பதிவு காணாமல் போனது 🙂 அவ்வளவு தான் விஷயம் .

ஒ) சகேசி விதவைகளை மஹாபெரியவர் பார்க்க மறுத்தது இம்மியளவும் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். சகேசி விதவைகள் எதற்கு மடத்திற்கு செல்லவோ சாமியாரை பார்க்கவோ விரும்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை .வைராக்யம் இத்யாதிகள் கைகூடாமல் வேடிக்கை பார்க்கவா செல்கிறார்கள் ? வாசிப்பதில் விருப்பமே இல்லாதவர்களை நூலகத்தில் பொழுது போக்க விட்டால் என்னவாகும்?

ஓ) அவரவர் விஷயத்தில் மஹாபெரியவர் இன்னமும் கொஞ்சம் கருணை காட்டியிருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள் .மஹாபெரியவரே சொன்னது போல அவனவன் கொஞ்சம் கொஞ்சமாக மீறத்தொடங்கினால் தர்மம் என்று ஏதும் மிஞ்சாது .சிலருக்கு முடியுடன் இருக்கும் விதவையை பார்க்க மறுப்பது மனதை புண்பட செய்யும் சிலருக்கு மடாதிபதி பிராமணராக இருப்பது உறுத்தும் .சிலருக்கு மடத்தில் இடியாப்பம் பாயா கிடைக்காதது மன வருத்தத்தை தரும் .சிலர் மடத்திற்கு ஆகும் செலவில் எத்தனை பள்ளிக்கூடங்கள் நடத்தலாம் என்று புண்படுவர் .இப்படியே போனால் மடம் என்பதே இருக்காது.

ஒள) அபத்னிகர்களை மஹாபெரியவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்று தெரியவில்லை .என்னை கேட்டால் சிகை இல்லாதவர்களை , மீசை வைத்தவர்களை , ஸ்ம்ருதி விரோதமான, வர்ண விரோதமான ஜீவன உபாயங்களை கொண்டவர்களை எல்லாம் மடத்திற்குள் அவர்  விடாமல் இருந்திருக்க வேண்டும். அந்த அளவு கடுமையாக அவர் இருந்திருந்தால் இந்த விவாதமே நடந்திருக்காது .ஒரு சிலர் இன்று அவர் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை கோவில் ஆக்கமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கவும் மாட்டார்கள் .
//

நன்றி .... Bcak Nayar 

விஜயராகவன் கிருஷ்ணன்
Fb

Wednesday, January 18, 2023

பிள்ளையாரை பற்றி தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்

.பிள்ளையாரை பற்றி தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்.. 
"சிவமகா"புராணத்தில் உள்ள கதை
நமக்கு எல்லோருக்கும் தெரியும் அதாவது
முற்காலத்தில் யானை முகம் கொண்ட "கஜாசுரன்" என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தானாம்.
அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார்.

அதற்கு
"கஜாசுரன்",
தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெருக்கிறான்.
இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி,
தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கேட்கிறார்.

பிறகு விஷ்ணு
மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வருகின்றனர்.
நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த "கஜாசுரன்",
அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான்.
அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார்.

கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்து,
அவன் மீண்டும் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.
அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்,
"கஜாசுரனின்" யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார்.

மேலும்
சிவபெருமான் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்.

சிவபெருமான் கயிலாயம்
வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி,
அவரை வரவேற்கும் முன்பு
தயாராக நினைத்தார்.
ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை.
எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார்.
அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார்.

மேலும் தான் தயாராகி
வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான்.
பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார்.

பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி,
பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி,
விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார்.
அதன்படி சிவகணங்கள் "கஜாசுரனின்" தலையுடன் திரும்பி வந்தனர்.

அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர்.
பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான்,
அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்ற பெயரை வழங்கினார்'ரென்று அந்த புராணம் கூறுகின்றது.

சரி இது கட்டுக்கதை அல்ல இதெல்லாம் உண்மையேன்றே வைத்துக்கொள்வோம்,
அடுத்து கவனியுங்கள்.

பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் சொல்லே காணவில்லை,
இது மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம்
(உடலின் ஆதார சக்கரங்களான ஏழு சக்கரங்களின் மூலாதரத்தை பற்றி பேசும் விநாயகர் அகவல்)
தமிழ் நாட்டில் தொடங்கியது.

வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில்,
அவரை வணங்கி வந்தார்கள்.
வட நாட்டவர்களின் பார்வையில் ஆரம்ப காலத்தில்
மனித முயற்சிகளுக்கு,
கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார்.

மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில்,
பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்பு படுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும்,
இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறிவிட்டார்.

வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும்,
வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம்.

வங்காளதேசத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார்.
உழவுத் தொழிலின் பல செயல்களிலும்,
அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார்.
ஒவ்வொரு ஆண்டும்
ஆவணி மாதம் வரும் விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக,
விநாயகரை வேண்டி பெண்கள் தங்களின் வீடுகளிலே களிமண் பொம்மை வைத்து விரதம் இருக்கிறார்கள்.

பொதுவாக,
செழிப்பைக் குறிக்கும் தெய்வம் மஹாலட்சுமி,பச்சையம்மாள், போன்ற பெண் தெய்வமாக இருக்கும்.
கொஞ்சம் ஆழ சிந்தியுங்கள்,
பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே,
செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது.

ஆனால்,
பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த 
பெண் வடிவிலான விநாயகரை விநாயகி,
கணேசினி,
விக்னேஸ்வரி,
கஜனானி இப்படி பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
நம்முடைய முன்னோர்கள் விநாயகரை பெண் தெய்வமாக வழிபட்டுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக தமிழ்நாட்டில் பல கோவில்களில் விநாயகரின் பெண் உருவம் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி பெண் உருவில் உள்ள விநாயகி சிலைகள் எங்கெங்கு உள்ளதுதோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால்,
முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை.

பண்டைய தமிழ்நாட்டு உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலிலும்,
மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்.

இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம், உழவுக்காலுக்கும்,
மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.
பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம்.
இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.

பண்டைய (உழவர்களின்)தமிழரின் பிள்ளையாரின்
ஒரு பாடலை காணுங்கள்.

"பிள்ளையார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!

வட்டார வழக்கில்,
முச்சாணி புழுதி = சாணம் + புழுதி, ஒடு
முத்தும் - ஒடு முற்றிய: கொடுக்கறமாம் - கொடுக்கிறோம்.

குறிப்பாக
தமிழர்களின் பார்வையில் 
பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை.
விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை.
உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார்.
இது தமிழ்நாட்டார் நம்பிக்கை.
முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள்

ஆகவே விவசாய செழிப்புக்கான கடவுளாக பண்டைய தமிழர்கள் பார்த்தர்களே தவிர
ஆரிய வேத கடவுளாக பார்த்ததில்லை
அவர்களுக்கு "சிவமகா" வேத புராணங்களும் சிவன் பார்வதி மைந்தன் என்ற இடைச்சொறுகள் கதைகளையும் அறிந்திருக்க சற்றும் வாய்ப்பில்லை.
நன்றி.