Friday, September 1, 2023

கணபதி மந்திரங்கள்




சக்தி  கணபதி மூல மந்திரங்கள் .

1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க) 

மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம: 

2. மகாகணபதி : (பரிபூரண சித்தி) 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா 

ஹஸ்தீந்த்ரானனம் 
இந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்தான் வஹந்தம் பஜே 

3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு) 

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா 

4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர) 

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ! 

 ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ! 

 ஓம் க்லீம் சௌ : வக்ர துண்டாய ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வசமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள: 

 தியானம்:
 பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத் 

5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க) 

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட் 

6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட) 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா 

7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட) 

ஓம் ஹும் கும்             க்லௌம்  ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா 

8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்) 

வக்ர துண்டாய ஹும் பட்

9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட) 
ஶ்ரீம்
 வக்ரதுண்டாய ஹும் !! 

10. புஷ்டி கணபதி : 

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா 

11. பால கணபதி : (மகிழ்ச்சி) 

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித்தி தாய ஸ்வாஹா 

தியானம்:
கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம் 

12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும் நிறைவேற) 

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம் 

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே 

13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு) 

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா 

14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர) 

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம: 

15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க) 

ஓம் ஹும் க்லௌம் ட:ட:ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா 

16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக) 

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா 

17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க) 

ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகேஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா 

18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி) 

ஓம் கூம் நம: 

19. விஜய கணபதி : (ஜயம் ஏற்பட) 

ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா 

பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக 

20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி) 

ஓம் கம் கணபதயே அர்க்க கணபதயே வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா 

21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர) 

ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா 

நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக 

22. விரிவிரி கணபதி : (விசால புத்தி) 

ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதயே ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா 

23. வீர கணபதி : (தைரியம் வர) 

ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட் 

வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி 

24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க) 

ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா 

25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்) 

ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா 

சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர 

26. ராஜ கணபதி 

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா 

27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்) 

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம: 

28. யோக கணபதி : 

ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம: 

29. நிருத்த கணபதி : (கலை வளர) 

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம: 

பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம் 

30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி) 

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா 

பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ 
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா 

31. புத்தி கணபதி : (கல்விப் பேறு) 

ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா 

32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட) 

ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா 

33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு) 

ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா 

34. குரு கணபதி : (குருவருள் உண்டாக) 

ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம: 

35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்) 

ஓம் ஹ்ரீம் க்லாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட் 

36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய) 

ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா 

37. பக்த கணபதி 

நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம் 

38. த்விஜ கணபதி 

ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய 

39. க்ஷிப்ர கணபதி 

தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம் 

40. ஹேரம்ப கணபதி 

அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா 

41. ஊர்த்வ கணபதி 

கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந 

42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம் 

43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது) 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா 

44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத மந்திரம் 

கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம் 

45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம் 

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம: 

46. கணேசர் மாலா மந்திரம் 

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா 

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா 

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே 

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே 

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா 

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா. 

47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர : 

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா 

48. போக கணபதி (ஸகலபோகப்ரதம்) 

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ 

கராங்கந்யாஸ: 

ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா 

தியானம் 

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி 

ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்: 

லமித்யாதி பூஜா
மந்த்ரா : 

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம் 

49. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர : 

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக: 

கராங்கந்யாஸ: 

ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர: 

தியானம் 

முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி 

லமித்யாதி பூஜா
மந்த்ர: 

ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா 

ஸமர்ப்பணம். 

50. குமார கணபதி (மாலா மந்த்ர:) 

ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம: 

51. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர) 

ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா : 

52. தருண கணபதி (தியானம்) 

பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச: 

மந்த்ர : 

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம: 

53. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி) 

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்: 

54. நவநீத கணபதி (மனோவச்யம்) 

ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம: 

55. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி) 

மேதோல்காய ஸ்வாஹா: 

56. வாமன கணபதி (விஷ்ணு பக்தி) 

ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு ஸ்வாஹா: 

57. சிவாவதார கணபதி 

ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா: 

58. ரக்த கணபதி (வச்யஸித்தி) 

ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும் ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா : 

59. ப்ரம்மணஸ்பதி 

1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம: 

2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம: 

60. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம் 

த்வநி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம் 

சதாசிவ கணபதி 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம் ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச் வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா

 எல்லா விதத் தடைகளும் உடைத்து    எறிய  விக்ன  ஹரண  விநாயக  ஹோம்ம்  செய்து   மஹா கணபதி ரக்ஷைகள் பெற எனது what's up எண்ணுக்கு msg மட்டும்  உங்கள் முகவரி நட்சத்திரம் இணைத்து msg  செய்க  ,! கால் செய்யாதீர்கள்,! What's up number 9443175671

Wednesday, August 23, 2023

108 வெற்றிலை பாக்கு வைப்பர் அந்த வெற்றிலை பாக்கு யார் யாருக்கு என்றது பற்றிய பட்டியல்.

Thank🙏 to fb

செங்குந்த முதலியார் சமூக திருமண நிச்சயதார்த்த விழாவில் 108 வெற்றிலை பாக்கு வைப்பர் அந்த வெற்றிலை பாக்கு யார் யாருக்கு என்றது பற்றிய பட்டியல்.

1 ஸ்ரீ சித்திபுத்தி வியைகருக்கு 

2 சிவகுருநாதனுக்கு 

3 காஞ்சி காமாட்சி அம்மனுக்கு

4 ஏகாம்பரநாதருக்கு 
5 மதுரை மீனட்சிதேவிக்கு

6 சொக்கநாதருக்கு
 
7 காசி விசாலாட்சிக்கு

8.காசி விஸ்வநாதருக்கு

9 தவசத்தி தாய்மார்களுக்கு

10 அளிஞ்சியப்பருக்கு

11 பெருங்கருணை அம்மனுக்கு

12 வைத்தியநாத சுவாமிகளுக்கு

13 தையல் நாயகி அம்மனுக்கு

14 செல்வமுத்துக்குமார சுவாமிக்கு

15 பேரூர் பட்டீள்வரச் சுவாமிக்கு

16 பச்சைநாயகி அம்மலுக்கு

17 சப்தகிரி வேங்கடேச பெருமாளுக்கு 18 மங்காபுரம் அலமேலுமங்கை தாயாகுக்கு "P

10 சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு 20 பூரண புஷ்களாம்பிகைக்கு

21... விஜயமங்கலம் விஜயாபுரி அம்மனுக்கு மோகனூர் அங்காள பரமேஸ்வரிக்கு

22

23 மூலனூர் வஞ்சியம்மனுக்கு 24 ஈடுவுச்சேரி சிவளாபுரி அம்மனுக்கு

25 பெண் வீட்டார் குலதெய்வங்களுக்கு மாப்பிள்ளை விட்டார் குலதெய்வங்களுக்கு

குன்றுதோராடும் குமரனுக்கு தலை ஆறுபடைவீடு நக்கீரனுருக்கு

திருப்பரங்குன்றம் கார்த்திகேயனுக்கு 30 திருச்செந்தூர் ஆறுமுக சுவாமிக்கு 31 திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு

20

32.. பழனி ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு 33 சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு

34 திருத்தணிகை தண்டபாணி சுவாமிக்கு

35 பழமுதிர்சோலை அழகமுருகனுக்கு

36 வீரவாகுதேவர் செங்கந்தருக்கு

37 வீரகேசரிதேவர் செங்கந்தகுக்கு 38. வீரமகேந்திரதேவர் செங்குந்தருக்கு

39 வீரமதேசதேவர் செங்கந்தருக்கு M 40. வீரபுராந்திரதேவா செங்குந்தருக்ற

வீரராக்கத்தேவர் செங்குந்தருக்கு 42 வீரமார்த்தாண்டதேவர் செங்குந்தருக்கு

41

43 வீரசந்தகதேவர் செங்குந்தருக்கு 44 வீரதிரதேவர் செங்குந்தருக்கு 45 இலட்சம் வீரதேவர் செங்குந்தருக்கு

46 அகஸ்திய மாமுனிவருக்கு 47 காளங்கி முனிவருக்கு

48 மதங்கி முளிவருக்கு

49 போக முனிவருக்கு 50 புலிப்பாணிச் சித்தருக்கு

51 அருணகிரிநாதருக்கு

52 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு 

53 வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முனிவருக்கு

54.ஸ்ரீ பழனி பெரியநாயகி அம்மனுக்கு அரம்பை காமாட்சி தாயாருக்கு
65 64 சண்முகஞானியார் சுவாமிகளுக்கு
79 அமுதகளி சம்பந்த சாணுலயருக்கு மார்க்கசகாய தேவருக்கு

81

57 முத்துக்குமார சுவாமிக்கு பராசத்தி வேலாயுதத்திற்கு

59 செஞ்சேவல் கொடிக்கு

மரகதமயில் வாகளத்திற்கு

61 விண்ணுலகநாயகி தெய்வானை அம்மனுக்கு

மண்ணுலகநாயகி வள்ளி அம்மைக்கு

அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு

பன்னிறு ஆழ்வார்களுக்கு 66 தென்னாடுடைய சிவஸ்தலங்களுக்கு

67 தென்னாடுடைய சிவடிையார்களுக்கு

குன்றுதோராடும் குகனடியார்களுக்கு

69 திருப்போரூர் சிதம்பர சுவாமிகளுக்கு 70 தில்லை நடராஜப் பெருமானுக்கு

71 தில்லை சிவகாமி அம்மனுக்கு

72 சிவசைலம் கல்யாணி அம்மனுக்கு 73 சிவசைலம் சிவசைல நாதருக்கு

74 திருவண்ணாமலை அருணசலீஸ்வரருக்கு 75 உண்ணமுலைத் தாயாருக்கு

76 கந்தவேட்கினிய முக குந்தனூர்க்கு. 77 கம்பைசூழ் காஞ்சி சுச்சியப்பருக்கு

குமரகுருபர சுவாமிகளுக்கு

நம் பிரான் திருமூல நாதருக்கு 82 ஆறுசமயம் ஆச்சாரியர்களுக்கு 33 கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்க

84 பாம்பன் குமரசுருதாச சுவாமிகளுக்கு சிரவை சாமானந்த சுவாமிகளுக்கு

85 திருவிசைப்பாவிசைத்த சேந்தனுகுக்கு 86

87

திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு

89 திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு.

90 மாணிக்கவாசக சுவாமிகளுக்கு

01 பிரிங்கி முனிவருக்கு

92 மாணிக்கவல்லித் தாயாருத்த 93

தரளவல்லித் தாயாருக்கு

94 புட்பராசுவல்லித் தயாருக்கு கோமேதகவல்லித் தாயாருக்கு

95 96 வைடூரியவல்லித் தாயாருக்கு

97 வயிரவல்லித் தூயாருக்கு

98 மரகதவல்லித் தாயாருக்கு 222

99 பவளவல்லித் தாயாருக்கு 100 நிலவல்லித் தாயாருக்கு

101 சேக்கிழார் பெருமானுக்கு

நாரத மாமுனிவருக்கு 103 இடும்பா சூரனுக்கு

104 சிற்றம்பலவ நாடியருக்கு

கவிராஜ பண்டிதருக்கு

106 ஆறெழுத்து ஓதும் அடியார்களுக்கு

107 திருநீறு புளைவார்க எனைவருக்கும் 108 தெத்தும் தெரியாமலும் உள்ள தேவாதிதேவர், திருத்தொண்டர் அனைவருக்கும்

Tuesday, August 8, 2023

பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம்! வாங்க..

Thanks FB
🔱💥🤔இந்துக்களே! இந்துமதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்! இந்துமத வாழ்வியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்!

🔱💥🤔முகூர்த்தக் கால் நடுவது ஏன்? எதற்காக!?

🔱💥திருமண நிகழ்ச்சிகளில் முகூர்த்தக் கால் நடுவதற்கு இது தான் காரணமா?

🔱💥 திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் போன்றவை துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது மங்கள நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. 

🔱💥 பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம்! வாங்க..

🔱💥ஈசானிய மூலை :

🔱💥 திருமணத்திற்கு முன் வீட்டின் முன்பு முகூர்த்தக் கால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. பெரும்பாலும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரங்களையே பயன்படுத்துவார்கள். மூங்கிலை நன்கு சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு வெள்ளைத் துணியில் செப்புக்காசை வைத்து கட்டி, இதை அந்த மூங்கிலின் மேற்பகுதியில் கட்டுவார்கள். 

🔱💥 பந்தக்கால் நடும் குழியில் நவதானியங்கள் போட்டு, பால் ஊற்றி உறவினர்கள் ஒன்று சேர்ந்து இந்த பந்தக்காலை வடகிழக்கு மூலையில் நடுவார்கள். வடகிழக்கு மூலையை ஈசானிய திசை எனக் கூறுவர். ஈசானிய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும். 

🔱💥நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு, மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

,🔱💥 மணமகன் வீடு, மணமகள் வீடு, விசேசம் நடக்கும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சுபமுகூர்த்த நாளில், சுபமுகூர்த்த வேளையில் நடப்படும். இந்த பந்தக்காலே நடக்க போகும் விசேசத்திற்கு பந்தலை தாங்கி நிற்கும் தூண் போன்றதாக அமையும் என்பார்கள். 

🔱💥 மூங்கில் மரம் செழித்து உயரமாக வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

🔱💥வரலாற்றில் பந்தக்கால் :

🔱💥 தற்போது திருமண விழாக்களின் போது குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல, முந்தைய காலத்தில் நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசருக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருந்தது. 

🔱💥 அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். 

🔱💥 அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

🔱🔱 கண்திருச்டி விலகி நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காகவும் முகூர்த்தக் கால் நடப்படும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை தொடங்குவார்கள். 
🔱நன்றி! : கோடாங்கி பூசாரி🙏

Sunday, July 30, 2023

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி??

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி??

Thank fb
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

1. ஜலவாசம் :

புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறை பட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

2. தான்யவாசம் :

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய 

48 நாட்கள் வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவதானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்யவாசம். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசத்தையும் தாண்டி ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். 

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.

3. ரத்னவாசம்

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்னவாசம்.

4. தனவாசம்

பின்னர் சிலைகளை பொற்காசுகளில் மூழ்கவைப்பர்கள் இது தனவாசம்.

5. வஸ்திர வாசம்

பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலைவாசம் செய்யும்

6. சயன வாசம்

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகாமஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான்தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலைவைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்

கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

7. ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். ரத்தினவாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான 

நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

8. ஆறு மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வசிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான்  திறக்கப்படும்.

கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வசிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன் பிறகே அந்த தெய்வ சிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற

பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை அதிர்வுகள் ஊட்டப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. 

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது, கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

Friday, July 7, 2023

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம்.


உங்கள் கையெழுத்து சொல்லும் ரகசியம் ..
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

நம் எதிர்காலத்தினை ஜோதிடம், கைரேகை பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அவரவரின் கையெழுத்தினை பார்த்து கூட தலை எழுத்தினை தீர்மானித்து விடலாம்.

ஒருவர் செல்வந்தர் ஆவதும் செல்வாக்கான வாழ்க்கையினை இழப்பதும் அவரவரின் கையெழுத்தினை பொருத்து கூட அமையும். கையெழுத்தினை வைத்து அவரின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் கலைக்கு பெயர் கிராபாலஜி.

கி.பி.1782-க் ஆண்டு இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தஅன்னா கோரன் என்னும் பெண்மணி கையெழுத்து ஆராய்ச்சி கலை பற்றி இவர் நிறுவிய நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது.

ஒவ்வொருவரின் மூளையிடும் கட்டளையின்படி தான் அவரவரின் கையெழுத்து அமைகிறது. இதன்மூலம் அனைவரின் குணசதியத்தினை அறிய இயலும் என்கிறது விஞ்ஞானம்.

ஒருவர் எந்த மொழியில் எழுதினாலும் அதன் வடிவத்தினை வைத்து அவர்களின் எதிர்காலத்தினை அறிய இயலும்.

கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு ‘கிராபாலஜி’ என்பது பெயராகும். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளமுடியும் என்று கருதப்படுகிறது.

மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் ஆராய்ந்து அந்த எழுத்துக்குச்சொந்தக்காரரின் குணநலன்களை அறிந்து கொள்வது தான் ‘கிராபாலஜி’ எனப்படும் கையெழுத்துக்கலையாகும்.

ஒருவரின் கையெழுத்தின் மூலம் அவரது குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. அழுத்தம்: எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம். காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்பிறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதேநேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.

உங்களது கையெழுத்து காகிதத்தின் பின்பிறம் தெரியவில்லை என்றால் நீங்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக்கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் விருப்பத்தின்படி நடப்பதை விரும்பமாட்டீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே எதையும் செய்வீர்கள். மேலும் நீங்கள் பிறரின் கருத்துக்கும், விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்து, பிறர் சொல்வதை பொறுமையுடன் கேட்டால் நீங்கள் வெற்றியாளர்களாக மாறலாம்.

2. எழுத்தின் கோணம்: சிலர் எழுதும் போது இடது அல்லது வலது புறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை சரித்தும், கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு. வலது அல்லது இடது புறம் சரித்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும். ஒருவரது எழுத்து வலது புறம் சரிவாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர். இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.

3. 'ஐ’ (மி) என்று உச்சரிக்கப்படும் ஆங்கில எழுத்தை சிலர் பெரியதாகவும், அழுத்தமாக எழுதுவதுண்டு. அப்படி எழுதுபவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்திறன் மிக்கவர்களாவும் இருப்பார்கள்.

பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள் சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல்லிலும், செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும்.

4. எழுத்தின் இடைவெளி: எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்களும் நெருக்கமாக இருப்பது அல்லது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பது உண்டு. இதில் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். அந்த நண்பர்களிடம் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவர்களிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் நல்ல நண்பர்கள், தீய நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் நெருக்கம் காட்டுவார்கள். மேலும் இத்தகைய எழுத்துக்களை எழுதுபவர்கள் எதிலும் ஒழுங்கான தன்மையை கையாள மாட்டார்கள். இவர்களிடம் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் இருக்காது.

வார்த்தைகளுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால் அவர் அதிக செலவாளியாக இருப்பார்கள். அதேநேரத்தில் இவர்கள் தெளிவாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி சீராக இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாக, நட்பு பாராட்டுபவர்களாக இருப்பார்கள்.

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். எனவே அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

ஒருவர் தன் கையெழுத்தினை அரிசாண்டில்(Horizantal) நிலையில் தெளிவற்றதாக எழுதினாலோ அல்லது 15டிகிரி என்ற நிலையில் எழுதினாலோ அவரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இது ஆண், பெண் இருபாலர்க்கும் பொருந்தும்.

30 டிகிரி கோணத்தில் ஒரு பெண் தன் கையெழுத்தினை எழுதினால், அவர் புகழ் பெற்ற வாழ்க்கையினை அடைவர். ஆனால், ஆண்களின் கையெழுத்து இருந்தால் துன்பத்தினை அடைவர்.

45 டிகிரி கோணத்தில் தங்களின் பெயர் தெரியும்படி கையெழுத்து இடுபவர்களுக்கு வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் போது 1 செ.மீ. க்கு அதிகமாக கையெழுத்திற்கு அடியில் நீளமான கோடு வரைவது அவ்வளவு நல்லது.

கையெழுத்திற்கு நம் தலையெழுத்தினை மாற்றும் சக்தியுண்டு அதற்கேற்ப நம் கையெழுத்தினை மாற்றி கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நன்றி ; கண்ணன்

Sunday, June 25, 2023

ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 17/07/2023

ஆடி அமாவாசை நாளில் சிறப்பு விருந்து - ராமேஸ்வரம் 24/07/2025
                                ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து




அன்படையீர் ..

 அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 24/7/25  ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் இராமகிருஷ்ண மடத்தில் நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் சிறப்பு விருந்து மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

 நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு  பணி சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். 


" பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009