Tuesday, November 3, 2015

Ganesa Pancharathnam - Adi Shankara at Madurai Meenakshi Temple Mudali Mandapam

ஆதிசங்கரரின் கணேச பஞ்ச ரத்னம்
Ganesa Pancharathnam - Adi Shankara

Madurai Meenakshi Temple - Mudali Mandapam
 Today only i say Jbee ayya article in his site ... How HE call & ask my DAD to do renovate this historical mandapam where Adi Shankara created Ganesa Pancharathnam .... 

  Meenakshi Temple my dad  ' Chamundi ' P.N.Viveakanandan while crossing Iruttu Mandapam, he will ask himself   "Why Ganesa and Subramanian idols right and left corner , No gopuram but only having  granite pillar’s structures ?".
Madurai Meenakshi Temple kumbabishekam fixed 7 July 1995 , that time Temple PWD  engineer Mr.Sridaran sir , down very amusing job to getting donor to help for kumbabishekam  , he also ask my dad to renovate Iruttu Mandapam . At that time only we came to know that is “Mudali Mandapam”.This was constructed by Kadanthai Mudaliar in 1613 .
'Dream came true to .. ', my Dad  accepts to do renovate but  he requested to  “Build new small gopuram to Ganesa and Subramanian idols”. Mr.Sridaran sir told “i will try to get permission from temple endowment board” and he give order to renovate Iruttu Mandapam [Mudali Mandapam]. Now I am proudly say … " My dad name also in Meenakshi Temple history to Build two small gopuram . I think now this is last gopuram to build in Meenakshi Temple too .."  More:https://sadhanandaswamigal.blogspot.com/2014/12/goddess-meenakshi-child.html



வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி    
Thank to https://www.visvacomplex.com/ganesa_pancharathnam.html ]
ஆதிசங்கரர், இந்த தோத்திரத்தை மதுரையில் பாடியதாகச் சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதியிலிருந்து உள்ளே போனால் பொற்றாமரைக் குளத்துக்குச் செல்லும் வழியில் கோபுர வாசல் ஒன்று இருக்கும். அதில் சில
அற்புதமான சிறபங்கள் உண்டு. அந்தக் கோபுர வாசலின் இடப்பக்கத்தில் 'நர்த்தன கணபதி' மூர்த்தி இருக்கிறார்.



    அவருடைய நர்த்தனத்துக்கேற்ற வகையில் ஆதிசங்கரர் இந்தத் தோத்திரத்தைத் தாளக்கட்டுடன் அமைத்திருப்பதாகச் சொல்வார்கள். இந்தத் தோத்திரத்துக்கேற்றவகையில் விநாயகரும் ஆடியதாகச் சொல்வார்கள்.


ஸ்ரீசங்கரபகவத்பாதர் இயற்றிய
கணேச பஞ்சரத்னம்

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


முதாகராத்த மோதகம் - மகிழ்ச்சியுடன் கரத்தில் மோதகத்தைக்
கொண்டுள்ளவர்

ஸதாவிமுக்திஸாதகம் - தம்மை வழுத்துபவர்களுக்கு எப்போதும்
முக்தியைக் கொடுப்பவர்

கலாதராவதம்ஸகம் - கலா என்பது சந்திரனின் கலை - பிறைச்சந்திரன்.
பிறையணிந்தவர் சிவனென்பது மட்டுமே மக்கள் சாதாரணமாக
அறிந்திருப்பது. 


ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பாலா திரிபுரசுந்தரி, ஆத்யகாளி
எனப்படும் மகாகாளி தசமுகி ஆகிய அம்பிகை வடிவங்களும்
பிறையணிந்திருப்பார்கள்.
மகாகணபதி, வல்லபகணபதி, உச்சிஷ்டகணபதி என்னும் வடிவங்களுக்கும்
முக்கண்களும் பிறைச்சந்திரனும் உண்டு.





விநாயகர் அகவல் :
சீதக்களபச்சுஎந்தாமரைப்பூம்
பாதச்சிலம்பு பல்லிசை பாட
பொன்னரைஞாணும் பூந்துகிலாடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தழகெறிப்ப
பேழைவயிறும் பெரும்பாரக்கோடும்
வேழமுகத்தில் விளங்கு சிந்தூரமும்
அஞ்சுகரமும் அங்குசபாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
நான்றவாயும் நாலிருபுயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்பரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞான
அற்புதம் திகழும் கற்பகக் களிறே!

முருகனுடைய திருவுருக்களில் மகாசுப்பிரமணியர் என்னும் வடிவம் உண்டு.
மீனாட்சியம்மன் கோயிலின் சில கோபுரங்களில் இந்த வடிவின்
சிலைகளைக் காணலாம். இவ்வடிவிலும் ஒவ்வொரு முகமும் முக்கண்கள்
பெற்று, பிறைகள் அணிந்தவாறு காட்சியளிக்கும்.

இந்த வரியின் பொருள் - சந்திர கலையைத் தலைல் தரித்திருப்பவர்.

விலஸிலோகரக்ஷகம் - தம்முடைய பக்தியில் திளைத்து மகிழ்ச்சியாக
இருக்கும் பக்தர்களைக் காப்பவர்

அநாயகைகநாயகம் - அநாயக ஏகநாயகம் - தங்களைப் பாதுகாக்கக்கூடிய
தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்

விநாசிதே பதைத்யகம் - இபதைத்ய என்னும் சொல் கஜாசுரனைக்
குறிக்கும். இபம் - யானை.
காசியப முனிவருக்கு திதி என்னும் மனைவி உண்டு. அவர்களுக்குப்
பிறந்தவர்கள் அசுரர்கள். திதியின் புத்திரர்கள் என்பதால் தைத்யர்
என்று பெயர்.
கஜாசுரனைக் கொன்றவர்.

நதாசுபாசுநாசகம் - தம்மை வணங்குபவர்களின் பாவங்களை எப்போதும்
நாசம் செய்பவர்

நமாமிதம் விநாயகம் - அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


இரண்டாவது பாடல்:

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்



நதேதராதிபீகரம் - தம்மை வணங்காதவருக்கு அடிக்கடி பயத்தைக்
கொடுத்துத் தடுத்தாட்கொள்பவர்.
விநாயகரின் பல மூர்த்தங்களில் விக்னஹரன் என்று விக்னகரன்
என்றும் இரண்டு உண்டு.
அவரை வணங்காது தொடங்கப்படும் காரியங்களில் விக்னங்கள்
ஏற்படுத்துபவர் விக்னகரன்.
ஆகவே எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் விக்னம்
ஏற்படாமல் இருப்பதற்காக வழிபடப்படுபவர்.
இன்னொருவராகிய விக்னஹரர், இடையூறுகளை நீக்குபவர்.
    இவர்கள் இருவரையும் சேர்த்து 'இரட்டைப் பிள்ளையார்' என்று
சொல்வார்கள். மதுரை மீனாட்சியம்மன் சன்னிதியில்கருவறைக்குப் பக்கத்தில்
இவர்கள் இருவரின் திருவுருவங்கள் இருக்கின்றன.

நவோதிதார்க்கபாஸ்வரம் - நவ உதாதித அர்க்கபாஸ்வரம் - உதய கால
சூரியனைப்போல் விளங்குபவர்

நமத்ஸ¤ராரி நிர்ஜரம் - ஸ¤ரர் என்போர் தேவர்கள்; அவர்களின்
விரோதிகள் அசுரர்கள்; ஸ¤ராரி என்பது அசுரர்களைக் குறிக்கும்.
தம்மை வணங்கும் தேவர்களின் விரோதிகளான அசுரர்களை அழிப்பவர்.

நதாதிகாபதுத்தரம் - ஆபதுத்தரம் என்றால் ஆபத்திலிருந்து காப்பாற்றுதல்.
தம்மை வணங்குபர்களை ஆபத்துக்களைலிருந்து காப்பாற்றுவர்.

ஸ¤ரேச்வரம் - தேவர்களின் தலைவர்

நிதீச்வரம் - நவநிதிகளுக்கும் அதிபதி; புதையல்களுக்கு அதிதேவதை.

கஜேச்வரம் - யானைகளுக்கு அதிபதி

கணேச்வரம் - கணங்களுக்கெல்லாம் நாதராக இருப்பவர்

மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் - மஹா ஈஸ்வரனாக
விளங்குபவரும் பரத்தும் பரமாக
இருப்பவரும் ஆகியவர்.

அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.


ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


கணேச பஞ்சரத்னம் 3-ஆவது பாடல்

ஸமஸ்தலோகசங்கரம் - அனைத்து உலகங்களுக்கெல்லாம் சுகத்தைக்
கொடுக்கக்கூடியவர்
நிரஸ்ததைத்யகுஞ்சரம் - தைத்ய குஞ்சரம் -அசுர யானையாகிய
கஜாசுரனை அழித்தவர்
தரேதரோதரம் - அனைத்து உலகங்களையெல்லாம் தமது வயிற்றுக்குள்
வைத்து, காப்பாற்றுபவர்.
கணேச புராணம் என்றொரு புராணம் இருக்கிறது. அது காணபத்ய
சமயத்தின் முக்கிய புராணம். விநாயகரின் ஆதீஸ்வர, மஹேஸ்வரத்
தன்மையை நிறுவதாகும். அதில் ஒரு கட்டத்தில் மும்மூர்த்திகளையும்
தம்முடைய துதிக்கைக்குள் இழுத்து, தமது வயிற்றுக்குள்
செலுத்திவிடுகிறார். அங்கு அவர்கள் பிரபஞ்சமும் சராசரங்களும்
புவனங்களும் இருப்பதைக் காண்பார்கள்.
 
வரம் வரேபவக்த்ரம் - உத்தமமானவர்; சிறந்த யானை முகத்தோன்
அக்ஷரம் - அழிவற்றவர்
க்ருபாகரம் - கிருபை செய்பவர்
க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் மநஸ்கரம்நமஸ்க்ருதாம் பாஸ்வரம் -
பிழைகளை மன்னிப்பவர்; பொறுப்பவர்; கிருபை கொண்டு
அவர்களின் மனத்தை நல்வழியில் திருப்பி அவர்களுக்கு
மகிழ்ச்சியையும் கீர்த்தியையும் மேன்மையையும் உண்டாக்குபவர்.

நமஸ்கரோமி - அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்


கணேச பஞ்சரத்னம் - 4-ஆம் பாடல் 

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் - தம்முடைய பக்தர்களின் ஏழ்மையை
நாசம் செய்பவர்
சிரந்தநோக்தி பாஜநம் - அநாதியாக விளங்கும் வேதங்களின்
மந்திரங்களால் பூஜிக்கப்படும் சிறப்புமிக்கவர்
புராரிபூர்வநந்தநம் - புர அரி - திரிபுரங்களை நாசம் செய்த சிவன்;
அவருடைய மூத்த மகன்
ஸ¤ராரிகர்வ சர்வணம் - ஸ¤ர அரி - அசுரர்; கர்வ சர்வணம் -
அசுரர்களின் கர்வத்தை அடக்குபவர்
ப்ரபஞ்சநாசபீஷணம் - பிரபஞ்சத்தை அழிக்கக்கூடிய காலனுக்கு
பயத்தைக் கொடுப்பவர்
தநஞ்சயாதிபூஷணம் - அர்ஜுனன் முதலானவர்களால் பூஜிக்கப்பட்டவர்
கபோலதாநவாரணம் - கபோலத்தில் மத நீர் பெருகியோடப்பெற்றவர்
பஜேபுராண வாரணம் - புராதனமான முதல்வனாகிய யானை உருவனை
வணங்குகிறேன்.
'முன்னைப் பழம்பொருளுக்கும் மூத்த பழம்பொருள்' என்று
சிவன் குறிப்பிடப்படுகிறார்.
அம்பிகையை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 'புராதனா' என்று
வழுத்துகிறது. பழந்தமிழர்கள் தாய்தெய்வமாகிய கொற்றவையை
'பழையோள்' என்று அழைத்திருக்கின்றனர்.

கணேச பஞ்சரத்னம் - 5-ஆவது பாடல்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் - அழகிய பல்வரிசையும் தந்தமும் தருகின்ற
பிரகாசத்தையுடையவர்
அந்தகாந்தகாத்மஜம் - அந்தக அந்தக - காலனுக்குக் காலனாகிய சிவன்;
அவனுடைய மகன்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம் - மனதால் சிந்திக்கமுடியாத
அளவுக்கு அப்பாற்பட்ட உருவத்தை உடையவர்; நாசமற்றவராகிய
அவர், வழிபடுவோரின் எல்லா விக்கினங்களையும் நாசம் செய்பவர்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம் - யோகியர்களின் இருதயதிற்குள்
அந்தரங்கமாக நிரந்தரமாக வசிப்பவர்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் - ஒரே தந்தத்தையுடையவராகிய
கணேசரை மட்டுமே எப்போதும் சிந்திக்கிறேன்.

கணேச பஞ்சரத்னம் - 6-ஆம் பாடல் 
பலசுருதி

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த தோத்திர நூலை
யார் தினந்தோறும் அதிகாலையில் விழித்தெழுந்தவுடன்
மகாகணபதியை இருதயத்தில் நினைத்து இருத்திக்கொண்டு
பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள்விரைவிலேயே எல்லாப்
பிணிகளிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல கவித்துவத்தையும்
நன்மக்களையும் நீண்ட ஆயுளையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும்
அடைகிறார்கள்.



    இப்போது இந்த கணேச பஞ்சரத்னத்தில் உள்ள விசேஷத்தைப் பார்ப்போம். அதற்கு முன்னால் முழுத் தோத்திரத்தையும் பார்ப்போம்.

அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

    முழு தோத்திரத்தையும் மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இதில் பல விசேஷங்கள் இருக்கின்றன.

    அவற்றில் ஒன்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

    இந்தப் பாடலின் ஒவ்வொரு அடிக்கும் பதினாறு அட்சரங்கள்
இருக்கின்றன. அட்சரங்கள் என்னும்போது மெய்யெழுத்துக்கள் சேர்த்துக்
கொள்ளப்படுவதில்லை. உயிர், உயிர்மெய் ஆகியவைதாம். மாத்திரைக்
கணக்கும் உண்டும்.

    முதல் பாடலின் ஒவ்வொரு அடியும் இரண்டு பாதிகளாகப்
பிரிப்போம்.
    ஓர் அடியின் பாதியில் எட்டு அட்சரங்கள் இருக்கின்றன.
    ஒவ்வொரு அரையடியின் எட்டாவது அட்சரத்தைக் கவனியுங்கள்.
 

மு-தா-க-ராத்-த-மோ-த-கம்
ஸ-தா-வி-முக்-தி-ஸா-த-கம்
க-லா-த-ரா-வ-தம்-ஸ-கம்
வி-லா-ஸி-லோ-க-ர-க்ஷ-கம்
அ-நா-ய-கை-க-நா-ய-கம்
வி-நா-சி-தே-ப-தைத்-ய-கம்
ந-தா-சு-பா-சு-நா-ச-கம்
ந-மா-மி-தம்-வி-நா-ய-கம்

'கம்' என்று முடிகிறதல்லவா?
'கம்' என்பது கணேச பீஜாட்சரம். இதுதான் விநாயகரின்
முக்கியமான பீஜ மந்திரம். இப்படி ஒவ்வொரு எட்டாவது அட்சரத்துக்கும்
ஒரு அட்சரத்தை வைப்பதை 'அஷ்டப்பிராஸம்' என்று சொல்வார்கள்.
முதல் பாடலில் உள்ள அறுபத்துநான்கு அட்சரங்களுக்கும்
மொத்தம் எட்டு 'கம்' பீஜம் அமைந்திருக்கின்றன.
அடுத்த இரண்டு பாடல்களிலும் 'ரம்' என்னும் 'அக்னி பீஜம்'
பயில்கிறது.
நான்காவது பாடலில் 'ணம்' என்னும் பீஜம் வருகிறது.

அதற்கடுத்த பாடலில்,

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

தோத்திரத்தின் எல்லாப்பாடல்களுமே இது நல்ல தாளக்கட்டுடன்
அமைந்திருந்தாலும் இந்த ஐந்தாவது பாடல்தான் ரொம்பவும் 'துள்ளலுடன்'
விளங்குகிறது. அதுவும் 'ஜம்நம்ரம்நாம்தம்தம்' என்று விசேஷமாக
விளங்குகிறது.

இந்தத் தாள அமைப்புக்கும் ஒரு விசேஷம் இருக்கிறது.

இந்தத் தோத்திரத்தை ஆதி சங்கரர் மதுரை மீனாட்சியம்மன்
கோயிலில் அங்கிருந்த விநாயகர் சிலையன்றின் முன்னிலையில் பாடினார்.
அவர் பாடப் பாட அந்த நர்த்தன விநாயகர் ஆடினாராம். அப்படித்தான்
அந்தப் பாடலின் ஐதீகம்.

சரி.
இந்தச் சிலை எங்கிருக்கிறது?

    மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதி வாயிலின் வழியாக உள்ளே சென்றோமானால் அஷ்ட சக்தி மண்டபம் இருக்கும். அதைத் தாண்டியவுடன் ஒரு பெரிய மண்டபத்தில் ஏராளமான பூக்கடைகள் தென்படும். அதற்கும் அப்பால் ஒரு கோபுரவாசல். அதைத் தாண்டிச் சென்றால் ஒரு ஆறுகால் மண்டம இருக்கும். மிக அழகிய தூண்களில் உயிரோட்டமுள்ள சிலைகள் இருக்கும். இங்குதான் குறவன் குறத்தி சிலை என்ற புகழ்பெற்ற சிலைகள் இருக்கின்றன.
    இந்த மண்டபத்துக்கும் அடுத்தாற்போல இன்னொரு கோபுரவாசல். அதையும் தாண்டிச் சென்றால் பொற்றாமரைக் குளம் வரும். அந்தக் கோபுர வாசலின் இருபக்கங்களிலும் விநாயகர், முருகன் சன்னிதிகள் இருக்கின்றன.
    விநாயகர் சன்னிதியில் இருப்பவர் நர்த்தன விநாயகர்.
    அவர்தான் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்னத்துக்கு ஏற்றவாறு ரசித்து ஆடியவர் என்று கர்ணபரம்பரைக் கதை சொல்கிறது.

அன்புடன்

ஜெயபாரதி


No comments:

Post a Comment