Monday, September 7, 2020

மதுரை மீனாட்சி கோவில் 16 சித்தர் சமாதிகள்





"All Siddhar will come at 8 pm on pournami day in madurai meenakshi temple " say by Prof. So So Meenakshi Sundaram ayya speech about "Madurai Meenakshi Amman" in Madurai Sri thirupugal Sabai inside Temple. This Hidden secrets message from 98 minutes /2.05hrs with bless of my GURU in 7 July 1995 Meenakshi Temple kumbabishekam 'Dream came true' to my Dad accepts to do renovate Build new small gopuram to Narthana Ganapathy and Subramanian idols and renovate Iruttu Mandapam [Mudali Mandapam]. Now I am proudly say … " My dad name also in Meenakshi Temple to Build two small gopuram . I think now this is last gopuram to build in Meenakshi Temple history .." https://sadhanandaswamigal.blogspot.com/2014/12/goddess-meenakshi-child.html
In my mind say "There is Jeeva Samadhi in Meenakshi temple " thing only .. but now only , i hear of this audio got evidence from SoSo Mee Sundram ayya ...


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 16 சித்தர் சமாதிகள்... 16 siddhars in Madurai Meenakshi Amman Temple The Hidden secrets of Meenakshi Temple Audio mp3 : Thiru SoSo Mee Sundram Ayya,,told 16 Siddhar Jeeva Samadhi inside madurai meenakshi temple on his youtube speech Madurai ... please play 98 min also below link .... 16 Siddhar Jeeva Samadhi inside madurai meenakshi temple .. 10 years before one person not wearing shirt coming on pournami day round around temple ..he is siddhar & also we can see him @ night 12 pm on shivaratri in north tower ( moti gopuram muniyandi) .. he told that "16 Siddhar Jeeva Samadhi only place is Madurai temple... very important Samadhi is chockalingam swami sannathi { sundareswarar }" when you go near to him you can feel vibration ..lokanathan friend from foreign also said same...... also said nandi near 1000 pillar mandapam , next near meenakshi kodimaram ther will be thirumalai nayakar lawdown ... kasi viswanathar sannathi .. ayya told 16 but i don't know ..when we came begin swamy sannathi there lot of siva lingam there we find one siva lingam facing east & south ..this two are guru and shishya Jeeva Samadhi .. other one corner we see adhiparasakthi this too a Jeeva Samadhi ..All Siddhar will come at 8 pm on pournami day .. Thank note: I got this speech from Internet.. 

Very Thank to Madhurakkaran Karthikeyan ayya .. i uploaded his images in Video ( https://www.facebook.com/my.ancient.madura/photos/?ref=page_internal ) and also from Temple History book from Madurai Meenakshi Sundareswarar Thirukovil & my friend's FB image too ... 

You can also download Tamil devotional speech (45 Hrs - 700mb) https://sadhanandaswamigal.blogspot.com/2011/04/free-tamil-devotional-speech-30-hours.html



Friday, September 4, 2020

Online சத்சங்கம் 1 - சிவவாக்கியர் Google Meet 06/09/2020

 வணக்கம் !!

ஆத்ம கமலம் பக்தியுடன் வரவேற்க்கும் Online சத்சங்கம் (ஒவ்வொரு ஞாயிறும்)

இந்த வார தலைப்பு: “1 - சிவவாக்கியர்” By முருகேசன், ஆன்மிக நெறியாளர், மதுரை


தேதி: 6th September 2020

நேரம்: 11.30 AM IST

கட்டணம்: இறை பக்தி

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd

அன்புடன்

ஒருங்கிணைப்பாளர்கள்

ஹரி மணிகண்டன்  | +91 – 9841267823

வீரா கி | +91 – 9840646368

ஆத்ம கமலம் குழு


Greetings!  

Aathma Kamalam !!

Happy to invite your for the webinar session Online Sathsangam (Every Sunday Series)


Topic: “Sivavaakkiyar" By  Mr Murugesan, Madurai


Date: 6th September 2020

Time: 11.30 AM IST

Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd


 get update about the webinar, Please join the Aathma Kamalam Telegram Group


Thanks and Regards,

Coordinators:

Hari Manikandan V | +91 – 9841267823

Veera K | +91 - 9840646368

Team  - Aathma Kamalam

Sunday, August 16, 2020

Saturday, August 8, 2020

மந்திர பிரயோகம் Manthira Prayoganm || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் ||speech 1

மந்திர பிரயோகம் Manthira Prayoganm || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் | speech 1

https://youtu.be/ixYTsm2BHYU

about Ayya : https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html




மந்திர பிரயோகம் Manthira Prayoganm || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் || ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம் மஹா சித்தர் தவ பீடம் ஓம் சிவசிவ ஓம் ஆதீனம் கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட், தூத்துக்குடி மாவட்டம் - 628102 Map : https://www.google.co.in/maps/place/Mudivaithanendal பஸ் ஸ்டாப் : வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல் தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம் 150, 87, 87A, ராஜா ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146) அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2 செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்), வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது



Monday, August 3, 2020

ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ( Om Siva Siva Om Mantra Chanting )

ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ( Om Siva Siva Om Mantra Chanting ) || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் ||






ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம் மஹா சித்தர் தவ பீடம் ஓம் சிவசிவ ஓம் ஆதீனம் கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட், தூத்துக்குடி மாவட்டம் - 628102 Map : https://www.google.co.in/maps/place/Mudivaithanendal பஸ் ஸ்டாப் : வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல் தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம் 150, 87, 87A, ராஜா ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146) அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2 செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்), வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது


Thursday, April 9, 2020

ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்

Thank FB karthi


திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.

இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.

யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.

குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.

சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.

இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.

மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.

மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.

தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.

அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.

தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.

சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.

சித்தரை தனது அரியணையில் அமரவைத்து ஜமீன்தார் வணங்கி நின்ற காட்சி

நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.

அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.

சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.

சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.

அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.

இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.

ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.

அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.

அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.

அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.

அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் கடந்தன.

எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், 'என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்' என்றார்.

அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக 'அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

குருவுக்கு மரியாதை

தனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

‘அய்யம்பெருமாள்! நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.

குருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார்.

 ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், 'சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

அதற்கு சித்தர், 'எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், 'தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் 'சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், 'குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். 'அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.

இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெருமானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், 'சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

'உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.

பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்ேவாருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பூசம் நட்சத்திரத்தில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

Sunday, April 5, 2020

பிதுர் உலகம் இறையனார்கள் உலகம் ..


Thank விஜயராகவன் கிருஷ்ணன் FB


பிதுர் உலகம்  இறையனார்கள் உலகம் ..

இன்று உலகமெங்கும் உள்ள இறை வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருப்பதை காண முடிகிறது ..நமது ஹிந்து கோவில்கள் , திருப்பதி , தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களும் ... அப்ரகாமிய மதங்கள் .. மெக்கா , வாட்டிகன் .. எல்லாம் மூடப்பட்டு இருப்பதை காண்கிறோம் ...

மக்கள் மத்தியில் ஒரே ஒரு எண்ணம் ...மரண பயம் ...

இதில் ஒரு ஆச்சரிய விசயம் ...

இன்று நமது தொலைகாட்சிகள் .. எதோ எலெக்சன் ரிசல்ட் போல நாடு வாரியாக .. இந்தியாவில் மாநில வாரியாக கொரோனா வியாதிக்காரர்கள் .... அதில் செத்தவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை போடுகிறார்கள் ..

சென்னை போன்ற பேரு நகரங்களில் எப்படியும் நான்கு ஐந்து பேர் தினமும் சாலை விபத்துகளில் இறப்பார்கள் .. பலர் சாலை மற்றும் தொழிசாலை விபத்துக்களில் காயமுருவார்கள் ..
இவைகள் இன்று நடைபெறாதா வகையில் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கிறோம் ..

இதேதான் உலகமெங்கும் .. இந்த கொரோனா சாவை கண்டு பயந்து முடங்கியதால் .. மக்கள் விபத்தில் இறப்பு  மற்றும் காயங்களில் இருந்து தப்பியே இருக்கிறார்கள் !!!

இந்தியாவில் கிரகண காலங்களில் .. கோவில்கள் மூடப்படும் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் .. காரணம் .. ராகு பகவான் சூரியனை விழுங்குகிறான் என்று சொன்ன விசயம் (அடேய் இதெல்லாம் நடக்குமா என்று கேட்பவர்களே .. 1500 வருடம் முன்பாகவே  உங்கள் வீட்டில் இருக்கும் பஞ்ச (5) அங்கம் புத்தகத்தில் உள்ள ஒரு விசயதின் கணக்கை சொன்னதை பற்றி எழுதுகிறேன் )

இரண்டு கிரகணங்கள் (சூரிய சந்திரன் ) பொது சூரியனின் ஈர்ப்பு விசை குறைந்து சந்திரனின் விசை பூமியில் அதிகமாக இருக்கும்

சந்திரன் நமது பிதுர் காரகன் .. சூரியன் நமது தெய்வங்களின் காரகன் ..

அந்த நேரத்தில் கோவில்கள் மூடப்பட்டும் பிதுர் வழிபாடும் சொல்லப்பட்டு இருக்கிறது .. இதில் கோவில்களை மூடும வேலையை சனாதன மதத்தில் மட்டும் சொல்லி இருக்கும் பொது .. இன்று உலகில் உள்ள அனைத்து இறை வழிபாட்டு முறைகளும் மூடப்பட்டு இருப்பது ராகு பகவான் மிக கடுமையாக பூமியில் சூரியனின் ஆளுமையை குறைத்து விட்டது தெரிகிறது ..

பஞ்சங்கப்படி மார்கழி மாதம் 8 ஆம் தேதி (22 December ,2019 ) அன்று ராகு பகவான் திருவாதிரை 2 பாதத்திற்கு சென்று இருந்த காலம் கவனிக்க தக்கது .. (அதனுனடைய சோதிட விஷயங்கள் பதிவின் நோக்கம் இல்லை )

பிதுர் உலகம் நமது பூமியை நெருங்கி இருக்கிறது , நாம் வணங்கும் இறை மூர்த்தங்கள் நமது உலகில் இருந்து நாம் இப்போது தனிமை படுத்தப்பட்டு இருக்கிறோம் ..

விஞ்ஞானத்தை மட்டும் நம்பும் அறிவாளிகள் - சூரியன் வெளிச்சம் மட்டும் அளிக்கும் விசயம் இல்லை என்பதை பற்றி அறிய - கீழே காணும் நான்கு விசயங்களை பற்றி தேடி படிக்க வேண்டுகிறேன்

"solar wind, coronal holes, coronal mass ejections (CME’s) and solar flares." - திண்ணை வாசகர்கள் இதை கடந்து செல்வோம் .. காரணம் மனிதனின் விஞ்ஞானம் இன்னும் சூரியனின் முழுமையான செயல்பாடுகளை அறியவில்லை ..

சில மணி நேரமே நீடிக்கும் கிரகண காலம் .. ரெண்டு மூன்று மாதம் நீடிப்பது போல ஒரு நிலை ..

கிரகண நேரத்தில் சுமார் இராண்டாயிரம் வருடமாக நாம் கடைபிடித்த விசயங்களை இன்று உலகமே செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்ப்பட்டு இருக்கிறது ..

பிதுர் உலகம் நம்மை கோலூச்சுகிற நேரத்தில் நாம அமைத்தியாக வீட்டில் இருக்க வேண்டி .. இல்லை வைத்து விட்டது ..

நாகர்களும் இந்த உலகமும் என்கிற பதிவில் இது வந்து இருக்க வேண்டியது .. மேலும் இன்னும் பல விசயங்கள் இதில் சொல்ல வேண்டி இருக்கு ..

Part 2

பிதுர் உலகம் மற்றும் இறையனார்கள் உலகம் .. 2

 இன்று தங்களை அறிவார்ந்த விஞ்ஞான தன்மையை மட்டுமே ஒத்துக்கொள்ளுவேன் என்கிற மக்களுக்கு சில பல உண்மைகளை பார்ப்போம் இந்த பிரபஞ்சம் பற்றி

 கோபர்நிகஸ் என்கிற மனிதர் 1543 இல் " "De Revolutionibus Orbium Coelestium" ("On the Revolutions of the Heavenly Spheres") என்கிற புத்தகத்தில் சூரியன் உலகின் நடுவில் அசையாமல் நிற்கிறது பல கிரகங்கள் அதை சுற்றி ஒரு வித நீள் வட்ட  பாதையில்  சுற்று கிறது என்று சொல்லி வைத்தார் !!! - சூரியன்  பால் வெளியில் நகர்ந்து செல்கிறது என்பது இன்றைய கண்டுபிடிப்பு .. நிற்க .

 உங்கள் வீட்டில் பஞ்சாங்கம் என்று புத்தகம் இருக்கும் .. அதன் அர்த்தம் ... ஐந்து அங்கம் ... காலம் மற்றும் கிரக நிலை பற்றிய ஐந்து விசயங்களை சொல்லும் ஒரு புத்தகம் அது ..

தமிழ் ஆர்வலர்கள் (தமிழன் என்றால் தான் சேறு கிடைக்கும் தமிழன் நம்புவான் .. நானே 799 AD இல் உள்ள பல்லவன் தந்தி வர்மன் கல்வெட்டில் இந்த பஞ்சாங்க குறிப்பை படித்து இருக்கிறேன் ) கவனிக்க ..

எனவே பஞ்சாங்கம் பற்றியா அறிவு இந்தியாவில் (மறத்தமிழர்கள் ) மத்தியில் சுமார் 2000 ஆண்டுகளாக இருக்கிறது ..பரிபாடல் சிலப்பதிகாரம் இவைகளில் காணப்படுகிறது ..

அதுக்கு என்ன ?? - ஐநூறு வருசத்துக்கு முன்பாக இந்த வெறும் வட்ட பாதையை கண்டு பிடிப்பதற்கு முன்பாக .. பஞ்சாங்கம் இருந்தது ..

நக்ஷத்திரம் , திதி , வாரம் , யோகம் , கரணம் ... இதான் இந்த ஐந்து விசயம் பஞ்சாங்கத்தில்

முதல் மூன்று எல்லாருக்கும் தெரியும் ... திதி சந்திரனின் நகர்வு ... இதில்நக்ஷத்திரதின் நகர்வு மிக மிக கடினமான கணக்கு .. அதையும் விட்டு விடுவோம் ..

இதில் கரணம்  என்பது என்ன ??

"A karana is the time required for the angular distance between the sun and the moon to increase in steps of 6° starting from 0°.

ஒரு திதியின் பாதியே கரணம் என்றழைக்கப்படுகிறது. மொத்தம் பதினோரு கரணங்கள், இதில் நான்கு கரணம் மாதம் ஒரு முறையே மாறும். மீதமுள்ள ஏழு கரணங்களும் மாதத்திற்கு எட்டு முறை மாறும். ஒரு கரணம் சூரிய-சந்திர கோண இடைவெளியில் (angular distance) 6 டிகிரியை குறிக்கும்.

ரொம்ப யோசிக்க வேண்டாம் .. இது சூரியன் சந்திரன் பற்றிய கணக்கு ..நான் சோதிடம் பற்றியெல்லாம் எழுத போவதில்லை .. வெறுமன தொட்டு காட்ட வே

பூமி சூரியனை சுற்றுது .. நம் கூடவே சந்திரன் நமது பூமியை சுற்றி கொண்டு சூரியனை சுற்றும் கோண அளவை அன்று துல்லியமாக் அளந்து அதை தினமும் காட்டும் மிக மிக பிருமாண்ட கணிதம் அது ..

பாலைவனத்தில் பல கிலோ மீட்டர் நடந்து மணல் மேடு மீது நின்று பிறை தெரிகிறதா என்று பார்த்து பண்டிகை கொண்டாடிய நாடு இது இல்லை ..

இது நம்பவே முடியாத மிக மிக complex mathematics..

சந்திரன் ஒரு நீள் வட்ட பாதையில் செல்லுகிறது .. அதையும் கூட்டிக்கொண்டு பூமியும் சூரியனை சுற்றி ஒரு நீள் வட்ட பாதையில் செல்லுகிறது ..இந்த நிலையில்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இருக்கும் தொடர்பை துல்லியமாக கணித்து .. சரி விடுங்க வெள்ளைக்காரன் மடமையை பற்றி பேசி என்ன ஆகா போகுது ..

இந்த கரணம்தான் நமது பிதுர் உலக மற்றும் சூரிய உலகத்தையும் இணைக்கும் ஒரு வித கணக்காக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன் ..

எனது முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்கு ..

நக்ஷத்திரம் என்பது நீங்கள் பிறக்கும் பொது நீங்க பிறந்த ஊர் மீது இருந்து சந்திரனை காணுங்கள் காலத்தே அதன் பின் புறம் இருக்கும் நக்ஷத்திரமே ..இதை கொண்டு உங்கள் வாழ்வின் பலனை கணிப்பார்கள் ..

இது பூமியின் உள்ளே மனிதர்கள் வரும் வழி ..

இதுவே சூரிய வழி ... எப்படி என்றால் ஜாதகத்தில் லக்னம் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள் அது .. அது நீங்கள் பிறக்கும் நேரத்தில் சூரியன் வானில் எங்கு இருக்கும் கோணமே

காலையில் 6-7 AM என்றால் .. உத்தேசமாக உங்கள் லக்னத்தில் சூரியன் இருக்கும் !!! மாலையில் ஒரு ஆறு மணிக்கு நீங்க பிறந்து இருந்தீர்கள் என்றால் உங்கள் லக்னத்தின் எழில் அதவாது 180* இல் இருக்கும் !!!

திதி .. இது சந்திரனின் வளர்ந்து தேயும் தன்மையை காட்டும் கணக்கு ... ஒருவர் இறந்த பிறகு செல்லும் வழி என்பதால் ...

இதுவே பிதுர் உலகம் (சந்திரன்) செல்லும் வழி என்பதால் ..

 இறந்த நாளை இந்த திதி கொண்டே நாம் முன்னோர் வழிபாடை நடத்துகிறோம் ..

நமது பதிவின் தலைப்பான பிதுர் மற்றும் தெய்வ உலகமான சூரிய சந்திரன் பற்றிய விசயங்களில் இந்த கரணம் மிக உயர்வாக சொல்லப்பட்டு இருக்கிறது ..

ஒருவன் பிறக்கும் பொது இந்த சூரிய சந்திர பாதிப்பால் அவனது பிறவி குணங்கள் தோன்றுகிறது என்று சொல்லுகிறார்கள்

மொத்தம் பதினோரு கரணங்கள் இருக்கின்றனர் !!

இதில் பிறக்கும் மனிதர்களை பிதுர் லோகத்தில் இருந்தும் சூரிய உலகில் இருந்து நமது ஆன்மாவும் பல பரிமாங்களை இணைத்து பல குணங்கள் கொண்ட மனிதர்கள் உண்டாகிறார்கள் !!!

இதை தமிழில் எடுத்து எழுத  சோம்பல் நீங்களே படித்து கொள்ளுங்க

Karana and their effects in Astrology

Bav Karana
Individuals born in Bav Karana in Astrology are spiritual and like to be involved in holy activities. They are divuthful and have faith in giving their best to any work that’s given to them.

Baalav Karana
Like the earlier Karana, Baalav Karana also gives a spiritual nature to the person. People born in Balav Karana may do pilgrimage and spend more time of their life doing spiritual activities.

Kaulav Karana
A person born in the Kaulav Karana is very friendly. This Karana gives its people some of the best talents like love and caring.

Taitil Karana
Persons born in Taitil Karana are very lucky. They have a wealthy life and become a possessor of buildings and properties. Love has an important role in their life and maybe this is the reason they diveat people open-mindedly.

Gar Karana
As per Astrology, people of Gar Karana are punctilious. They divust in their aptitude not fortune. They attain their desired objective by hard work and effort.

Vanij Karana
People of Vanij Karana are bright and smart. It is seen that they have an extreme interest in business and take this talent for earning funds.

Vishti or Bhadrā Karana
As per Astrology, the Vishti Karana is not considered fortunate. This Karana cast its negative nature about the person due to which the native might have a distrustful character. They may involve in immoral deeds. Vishti Karan is also known as ‘Bhadrā’ Karan, and is avoided in all auspicious activities. However, Vishti or ‘Bhadrā’ Karan is appropriate for destructive activities e.g. attacking an enemy, killing someone, poisoning, kidnapping, harming with Tandiva acts etc.

Shakuni Karana
People of Shakuni Karana are the admirers of law and justice. They are very practical in solving conflicts. That means they can be very capable in terminating a quarrel with their cleverness.

Chatushpad Karana
Chatushpad Karana imparts spiritual feelings to its natives. Individuals born in Chatushpad Karana respect educated people and help animals. They are generally very fancier of animals and know how to diveat pets with medicine. They can become successful animal doctors.

Nāg Karana
According to Astrology, Nāg Karana is a portentous one. People born in Nag Karana may be have unlucky events. Their life may be full of sdivuggles and problems. They will get results only through hard work and determination, and not through good fortune. Natives of Nag Karan are usually very irritated.

Kimstughna Karana
People of Kimstughna Karana are very lucky. They violently pursue charitable work. They will get every type of contentment in their life. They also get quality education and lead a wealthy life.

இது பிதுர் உலக மற்றும் சூரிய இறையனார் உலகம பற்றிய விசயங்களை பார்த்தோம் ..

உங்கள் கேள்விகளை கேளுங்கள் ..

மனித மற்றும் உலகின் மேல் கிரகங்களின் தாக்குதல் பற்றி பார்ப்போம் ..

ஆனால் .. வெறுமன தொடர்ந்து படிக்க என்று போடுவதை விட

==========================

நன்றி
விஜயராகவன் கிருஷ்ணன் ..
FB