Friday, May 30, 2014

சும்மா -1

சும்மா
#1


வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
கடாரத் தமிழ்ப் பேரரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 

    ஒரு குறிப்பிட்ட ஆதீனத்திற்குட்பட்டு கோயிலொன்று இருந்தது. அந்தக் கோயிலின் கணக்குகளைப் பா¢சோதிப்பதற்காக ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் அங்கு வந்தார். கணக்குச் சுவடிகளைப் பார்க்கும்போது, அன்றாடப் படித்தரக் கணக்கு ஏடு வந்தது. அதில் கோயிலில் தினப்படிதரமாக வழங்கப்படும் பட்டைச் சோறு பெறுபவர்களின் பட்டியலும் இருந்தது. அதில் ஓ¡¢டத்தில்,

"சும்மா இருக்கும் சோற்றுப்பண்டாரத்துக்குப் படிதரம் பட்டை ஒன்று" என்று இருந்தது.

    கட்டளைப் பண்டாரத்துக்குக் கோபம்.

    "ஏனய்யா? அதென்னைய்யா அது? 'சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரம்'? அப்படி என்னைய்யா அந்தப் பண்டாரம் செய்கிறான்?" என்று கேட்டார்.

    "அவர் ஒன்றும் செய்வதில்லை. சும்மாதான் இருப்பார். படிதரம் கொடுக்கச் சொன்னது பொ¢ய சந்நிதானம்." என்றார் கோயிலின் கா¡¢யஸ்தர்.

    மிக ஆத்திரமாக வெளியேறிக் கட்டளைத்தம்பிரான் நேரே பொ¢ய சந்நிதானமாகிய ஆதீனகர்த்தா¢டம் சென்று முறையிட்டார்.

    முடிவில்,
    "இதென்ன அக்கிரமமாயிருக்கிறது? சும்மாயிருக்கிறவனுக்கெல்லாம் சோறு போட இங்கென்ன கொட்டியா கிடக்கிறது?" என்றார்.

    ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் ஒருவித மர்மப்புன்னகையுடன் அவரைப் பார்த்தார்.

    மெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,
    "வாரும். இவ்விடம் இரும்.ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே சிந்திக்காமல், எண்ணமிடாமலிரும். எதையும் நினைக்கவும் கூடாது. இரண்டு மணி நேரம். இது என் கட்டளை."

    ஐந்து நிமிடம்.... பத்து நிமிடம்.... இருபது நிமிடம்..... எழுந்தார் கட்டளைத் தம்பிரான். கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடி கீழே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்.

    எழுந்தார்....
    ஓடினார்....
    ஓடினார்.....
    புலம்பிக்கொண்டே ஓடினார்.....
    "பேய்மனம்... பாழும் மனம்.... மனக்குரங்கு...."

    நேரே கோயிலுக்குச் சென்றார்.

    கணக்குச் சுவடியை எடுத்தார்.

    திருத்தி எழுதினார்.

    "சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரத்திற்குப் படிதரம் பட்டை இரண்டு!"


    சும்மா#2

    அது சா¢.

    சும்மா இருப்பதில் அப்படியென்ன சிறப்பு?

    இந்த "சும்மா" என்ற சொல்லை நாம் பல பொருள்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த சொல்லை எனக்குத் தொ¢ந்து முதன்முதலில் பயன்படுத்திய பட்டினத்தாரும் அவரைத் தொடந்து வந்தவர்களும் யோகியரும் ஞானிகளும் முற்றிலும் வேறான பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    இறைவனே குருவாக வந்து உபதேசம் தரும் பேறு பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் கண்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனன், ஸ்ரீமன்நாராயணனிடம் அஷ்டாட்சரத்தை உபதேசமாகப் பெற்ற திருமங்கையாழ்வார்("தாயினமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்"); சிவனிடமிருந்து வாங்கிய மாணிக்க வாசகர்; வினாயகா¢டமிருந்து பெற்றுக்கொண்ட ஒளவையார் போன்றவர்கள். முருகனிடமிருந்து உபதேசம் பெற்றவர்களில் ஒருவர் அருணகி¡¢நாதர்.

    இளமையில் playboy ஆக விளங்கிய அருணகி¡¢, தொழுநோயால் அவதியுற்று, மனம் வெறுத்து, திருவண்ணாமலைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்தார்.

    அப்போது முருகன் ஓர் ஆண்டிக்கோலத்தோடு வந்து அவரை ஏந்தித் தாங்கிக் கொண்டார்.

    உயிரை வெறுத்திருந்த அருணகி¡¢ தாம் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். முருகன் சொன்னது.....

    சுருக்கமான இரண்டே வா¢கள்....,

    "சொல்லற!
    சும்மா இரு!"

    அவ்வளவே.

    அதன் பொருளை அவரால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டார். அவருடைய வாழ்க்கையில் அவரால் இயற்றப்பட்டவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, மயில்விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்பு. இறுதியாக அவர் பாடியது கந்தர் அனுபூதி.

    அதில் அவருடைய ஆத்மானுபவங்களை 51 பாடல்களாக அப்படியே வடித்திருக்கிறார். ஐம்பத்தோராவது பாடலில் தம்முடைய குருவாகிய முருகனை நாடி,

    "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"

என்றவாறு பறந்து சென்று விட்டார்.

    பன்னிரண்டாம் பாடலில் அவர் பெற்ற உபதேசத்தைக் குறிப்பிடுகிறார்.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளன்றும் அறிந்திலனே!"

இது அருணகியார்.

    "சும்மாயிரு. சொல்லற" என்ற சொல்லின் பொருளை அறிந்துகொள்ளவே முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.

    அவர் மட்டுமா?
    பட்டினத்தாரும்தான்.

"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"

                - பட்டினத்தார்

    சும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.

"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்!
சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவா¡¢யே!"

    சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா?
    அதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!

                - தாயுமானவர்

    மதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

    ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!

    அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!

    ஆளை விடு.


No comments:

Post a Comment