Wednesday, March 16, 2016

நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை


Thank to Kiruba Haran [ FB friend] and one of my friend from madurai also send Pic few days before


Narai @ Madurai Meenakshi Temple

A Bird found in Madurai Meenakshi Temple : for the past 4 days it is been sitting and watching the Golden Lotus as if it is asking for Mukthi and this makes us remember about Thiru Sundharar gave Mukthi to a Bird

முன்பொரு காலத்தில் பாண்டியன் நாட்டின் தென் பகுதியில் இருந்த பெரிய குளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றி போக நாரை உணவு கிடைக்காமல் ஒரு வனத்தில் உள்ள குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள்.
அவர்கள் மீது, மீன்கள் தவழ்ந்து சென்றதனால், அந்த மீன்களை உண்ணபது பாவம் என்று கருதி நாரை நின்றது. அந்த சமயத்தில் அங்குள்ள ஒரு முனிவர்களில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுந்தரேசுவரர் புகழ் பற்றி சக முனிவர்களிடம் பேசினார். இதை கேட்ட நாரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்தது.

அங்கிருந்த மீன்களையும் உண்ணாமல் சுந்தர விமானத்தை சுற்றி சுற்றி பரந்தது. இதேபோல் மீன்களை உண்ணாமல் 15 நாட்கள் அந்த குளத்திலேயே தங்கியது. அப்போது, சுந்தேசுவரர் நாரை முன் தோற்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஐயனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுவாபம் உள்ளவர்கள் இந்த புன்னிய குளத்தில் அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாத நிலையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தை தந்தருளம் படி வேண்டியது.
அவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்து ஒரு நாரை தங்கி உள்ளது. அதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர். அந்த நாரையும், ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை அலங்காரத்தில் நாரையும் இருப்பதை படத்தில் காணலாம். 

No comments:

Post a Comment