Thursday, September 1, 2016

# குலதெய்வமும் # தேவதையும்

# குலதெய்வமும் # தேவதையும் --1

எங்களுடைய குலதெய்வம் பச்சைஅம்மா - Near Perampakkam

குலதெய்வத்தை பற்றி பல பதிவுகள் இங்கு வந்து உள்ளது , நானும் பல பதிப்புகளை இங்கே பதிந்து உள்ளேன் .

இந்த பதிவு பலரின் கேள்விக்கான விடைகளை தரும் என்று நம்புகிறேன் ....

அன்பர்கள் பலர் எண்ணிடம் எங்களுடைய குல சாமிகள் யார் என்று எப்படி அறிந்து கொள்வது என்று கேள்விகள் கேட்ட படி உள்ளார்கள் , மேலும் இந்த குல சாமீ வழிபாட்டில் சில புதிர்களும் உள்ளதால் பெரும்பான்மையோர ுக்கு இதை வழிபாடு முறை மற்றும் தகவல்களை பற்றி தெரிவது இல்லை அவர்களுக்கும் இந்த பதிவு புரிந்து விடும் என்று நம்புகிறேன் ....

குல தெய்வம்களை பற்றி சுருக்கமாக சொன்னால் சிவ பெருமானின் அம்சமான ருத்ரனின் அவதாரம்கள் ஆண் தேவதைகள் சக்தி தேவியின் அம்சமான காளி தேவியின் அவதாரம்கள் பெண் தேவதைகள் .. 

இவைகளை பற்றி நான் பல பதிவுகளில் சொல்லி உள்ளேன் . இப்படி உலகத்திற்கு வந்த தேவதைகள் காவல் தேவதைகளாக தெய்வம்களின் கோவில்களில் பிரதிஷ்டை செய்யபட்டு உள்ளது.

சரி ,இந்த குல தெய்வத்தை பற்றி பார்போம் , குல தெய்வ வழிபாடுகளில் ஆண் தெய்வம்களை வழிபாடு செய்வது ஒரு வகையினர் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வது ஒரு வகையினர் ...

இந்த இரு வழிபாடு மட்டும் தான் உலகில் உள்ளது , கவனித்து பார்த்தால் புரியும் ..

நம் சமயத்தில் அளித்தலை(கொடுத்தல் ) சிவ பெருமானும் படைத்தலை பிரம்ம தேவனும் காப்பதை பெருமாளும் செய்வதை நாம் அறிவோம், இதை போல மற்ற ஒரு விவரமும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் , இவர்களுடைய காரத்துவம்(செயல்களுக்கு உட்பட்டது )என்று மற்ற விவரம்கள் உள்ளது அது "உருவாக்கும் தொழில் ,கற்பிக்கும் தொழில் ,ஊரை சுத்தம் செய்யும் தொழில் ,மனிதனை சுத்தம் செய்யும் தொழில் ,பொருட்களை சுத்தம் செய்து புது பிக்கும் தொழில்" -- இவைகள் எல்லாம் பிரம்மனின் காரத்துவம்கள்..
.

"அழகு படுத்தும் தொழில் ,மிளிர வைக்கும் பொருட்கள் ,வாசனை உண்டாக்கும் பொருட்கள் ,மனிதனை அழகு படுத்தும் பொருட்கள் அதை சார்ந்த தொழில்கள் ,பெண்களை மையமாக கொண்ட தொழில் ,பெண்கள் நடத்தும் தொழில் ,விபச்சாரம் ,மற்றும் இந்த உலகில் உள்ள எல்லா அழகுக்கும் இன்பத்திற்கும் காரணமான  செயல்கள்" அனைத்தும் பெருமாளின் காரத்துவம்கள் பிணம்களை (உயிர் )சார்ந்த தொழில் ,வேட்டை ,மாந்திரீகம்,தந்திரம் ,மாயம் , மருத்துவம் ,சோதிடம் ,சட்டம் ,காவல் ,நீதி ,ஆன்மிகம் செயல்கள் ,யோகம் ,தவம் ,தியானம் ,ஒழுக்கம் ,தாண்டவம் ,கட்டுப்பாடு போன்றவற்றை சார்ந்த தொழில்கள் அனைத்தும் சிவ பெருமானின் காரத்துவம்கள் அடங்கிய செயல்கள் ... இவர்களின் துனைவிரை கொண்டு மேலும் சில தொழில்கள் விரிவு அடையும் ..

இப்படி இந்த உலகில் இவர்களின் காரத்துவம் சார்ந்து மனிதர்கள் செய்த தொழிலுக்கு தகுந்தார்போல வழிபாடுகளை செய்து வந்தார்கள் , இந்த தொழில்களின் அடிப்படையில் தான் ஜாதியும் பிறக்கபட்டன இப்படி சிவனுடைய வழியே (கோத்திரம் ) வந்தவர்கள் ஆண்களை குல தெய்வமாகவும் --

முனி ,பெரிய சாமி ,அய்யனார் போன்றவர்கள் இவன் மனைவி சக்தி தேவியை குல தேவியாகவும் கொண்டு வழிபட்டார்கள் --

காமாட்சி ,மகா மாயா ,போன்றவர்கள் பெருமாளுடைய வழியே (வைணவம்) வந்தவர்கள் ஆண்களை குல தெய்வமாகவும் -- கருப்பு ,காத்தவராயன் போன்றவர்கள் . இவன் மனைவி லக்ஷ்மி தேவியை குல தேவியாகவும் கொண்டு வழிபட்டார்கள் --

நரிகுறவர்கள் (நெறிகுரவர்கள்) வழிபாடு செய்வது இவர்களை .
பிரம்ம தேவனின் வழியே வந்தவர்கள் வரதமான் போன்றவர்களையும் மந்திர சக்தி யை பிரதானமாக வழிபாடு செய்வார்கள் (ஆகம வழிபாடு ,முறைகள் இவர்கள் கொண்டது தான் மாறி வைணவர்களுக்கு வந்தது ) இவர்கள் வடக்கில் உள்ளவர்கள் , தெற்கில் இவர்களை யாரும் அறிய மாட்டார்கள்
...
இப்படி வகுக்கப்பட்ட தெய்வம்களை குல தெய்வமாக வழிபாடு செய்து வாழ்ந்தார்கள் ..

இந்த தெய்வம்கள் பூமியில் வந்து தனக்கு என்று ஒரு இடத்தை தேர்வு செய்வது பற்றி அந்த அந்த கோவில்களில் கேட்டால் தான்
நமக்கு ஒரு அளவுக்கு உண்மைகள் புரியும் . இப்படி அமைந்த தெய்வம்களை சுற்றி காவலாக தேவதைகள் சூழ்ந்து அங்கே தங்கி
ஒடுங்கி விடும் ..

இதை பற்றி 1995--2000 வரையில் வந்த ஞான சிந்தாமணி நூலில் நம் மண்ணின் தேவதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் s .s .மணியன்
அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள நிறைய தேவதைகள் வரலாறு எழுதினார் , அவைகளை நான் படித்த பொழுது முதலில் பெரிய குழப்பமும் ,சந்தேகமும் அடைந்தேன் , என்னுடைய ஆய்வில் 18 வருடம் கழித்துதான் தேவதைகளை ஒரு அளவுக்கு புரிந்து
கொண்டு இங்கு பதிகிறேன் ...

இவர்கள் ஒரு குடும்பத்தில் நுழைந்து அவர்களுடன் வாழ்ந்து அவர்களை பாதுகாத்து அவர்களை நல் வெளிபடுத்தி அவர்களை
இறைவனிடத்தில் அழைத்து செல்லும் சக்தி படைத்தவர்கள் தான் குல சாமிகள் , குலசாமிகள் எங்கு பிரதிஷ்டை ஆகி உள்ளதோ அங்கு தான் நம் முன்னோர்களும் இருப்பார்கள்
...

#குறிப்பு --ஜாதிகளை அடையாளமாக தகவல் சொல்ல மட்டுமே பதிந்தேன் யாரேனும் வருத்தப்பட்டால் மண்ணிக்கவும்...

சிவனும் சக்தியும் பூமிக்கு தெய்வம்களாக உருமாறி தங்கி இருக்கிறார்கள் என்று பார்த்தோம் .

இப்படி பூமிக்கு வந்து இறங்கிய இவர்களை பின் தொடர்ந்து இவரின் பூத கனம்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு காவலாக மாறி அமர்ந்து விடு கிறார்கள் , இப்படி அமர்ந்தவர்கள் தான் தேவதைகள் என்று அழைக்கபடுவார்கள் , ஒரு மனிதனின் திருமணதிற்கு பிறகு தான் அவன் முழு மனிதனாக சமுதாயத்தில் செயல் படுவான் ,
இதை கவனித்து புரிந்து கொள்ள வேண்டும் , ஒரு குடும்பம் என்று அமைந்த பின் தான் அவனுக்கு தேவைகள் ,குடும்ப சூழ்நிலைகளின் தேவைகள் ஏற்படுகிறது , அப்பொழுது தான் அவனுக்கு மனதாலும்
,உடலாலும் பலம், ஆலோசனை தேவை படுகிறது , இப்படி ஒரு நிலை தான் அவனுக்கு மனம் தவறுகள் செய்யவும் அல்லது தப்பித்து
கொள்ள வழியை தேடுகிறது , இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அவனுக்கு ஒரு சக்தி தேவை படுகிறது இப்படி தேவைக்கி தேடியபொழுது உதவியர்கள் தான் ஒரு வகையில் அவனின் குல தேவியர்களாக உண்டாக படுகிறார்கள் , ஆம் நான் பலரிடம் குல தேவதை பற்றி கேட்ட பொழுது அவர்கள் சொன்னது என்னுடைய பிள்ளையை மரண படுகையில் இருந்து காப்பாற்றிய அந்த அய்யனாரே எங்களின் குலசாமியாக வழிபடுகிறோம் என்று என் தாத்தா சொன்னார் என்றார்கள் ஒரு சிலர் , ஒரு சிலரோ குழந்தை இல்லாமல் இருந்த பொழுது எங்களுக்கு குழந்தை கொடுத்து குலத்தை வளர்த்த பெருமாள் தான் எங்கள் குலதெய்வம் என்பார் சிலர் ..

இப்படி இக்கட்டான சூழ்நிலையை சரி செய்தவுடன் ,தேவைகளை சரியானதும் பலர் ஆன்ம நிறைவோடு அவர்கள் இஷ்ட தெய்வத்தை குல தெய்வமாக வணங்க துவங்கி விட்டார்கள் என்று புரிந்து கொண்டேன் , மற்ற ஒரு பார்வை என்பது ...

நம் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்த தெய்வத்தை நமக்கு சொல்லி கொடுத்து வழிபட செய்தார்கள் , அவர்களுக்கு எப்படி இந்த தெய்வம் ஆசிகள் கொடுத்தது ,என் அவர்கள் இந்த தெய்வத்தை 
தேர்ந்து எடுத்தார்கள் என்று கேள்வியை தவிர்த்து நமக்கு அந்த தெய்வம் எப்படி எத்தனை வருடம் ஆசிகள் கொடுக்கும் என்பது ஒரு கேள்வி ?

நான் சோதிடம் பழகும் பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடன் சேர்ந்து கோள்களை ஆராய்ந்து கொண்டும் ,எங்கு சோதிடர்கள் உள்ளார்களோ அங்கு சென்று அவர்களிடம் சில கேள்விகளை கேட்டு அவருடைய குழபம்களை தீர்த்து 
கொள்வார் ..

இப்படி என்னை அழைத்து கொண்டு ஒரு உபசாகரிடம் சோதிடம் கேட்க போனார் .

அவரின் இடத்திற்கு சென்றதும் நான் கவனித்தேன் ஒரு பெரிய பாம்பு புற்று ,அருகில் ஒரு மாரியம்மன் சிலை , ஒரு குடிசையில் அவர் அமர்ந்து இருந்தார் , அவர் முன் சிலர் அமர்ந்து இருந்தனர் ,
எங்களை அழைக்கும் வ ரை காத்திருந்தோம் , ஒருவர் எங்களை அழைத்ததும் நண்பரின் ஜாதகத்தை அவரிடம் தந்தார் , அவர் பார்த்து விட்டு உன்னுடைய வீட்டில் குல தெய்வம் இல்லை , உன் தந்தை ஜாதி மாறி திருமணம் செய்தது ஒரு புறம் , குல தெய்வ
வழிபாடே செய்யாமல் உன் அம்மா இருப்பதால் உன் தந்தை உங்களை விட்டு மறு திருமணம் செய்வார் அல்லது அவரின் உடல் நிலை நோயால் பாதிக்கபடும் என்றார் ..

எனக்கு புதிராக இருந்தது ,அவரின் குடும்பம் மிக நல்ல நிலையில் உள்ளது ,மேலும் அவர்கள் அம்மா நல்ல வழிபாடு செய்பவர்கள் , நண்பரின் முகத்தில் சில மாற்றம் ,பிறகு சொன்னார் நாங்கள் முருகனை வழிபடுவோம் ,மேலும் நாங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகள் மற்றும் முக்கிய தினம்களில் வழிபாடு செய்கிறோம் என்றார் , நான் இடையில் அவரிடம் எந்த தெய்வம் இவருக்கு உடையது என்றதும் , அவர் காமாட்சி தேவி இவர்களின் தேவி , இவருடைய தாத்தா பணம் ஈட்டுவதில் குறியாக இருந்து அவரின் மனைவின் குல தெய்வமான அங்காள பரமேஸ்வர்யை வழிபாடு செய்து விட்டு காமாட்சியை மறந்தார் ,இதனால் 60 வருடம் அந்த தேவி இவர்கள் வீட்டில் ஏங்கி இன்று இவர்களை விட்டு சென்று விட்டது , இனி அடுத்த 60 வருடம் கழித்து தான் இவர்களுக்கு நல்லது நடக்கும் என்றார் , (இவரின் தந்தைக்கு 60) நான் கேட்டேன் இவர்கள் இப்பொழுது வழிபாடும் தெய்வம் உதவி செய்யாதா? என்றேன் .

அதற்கு அவர் சொன்னார் ,இஷ்ட தெய்வம் என்பது ஒரு எல்லை வரை தான் , ஒரு குடும்பத்தில் திருமணம் என்று வைபவம் நடக்கும் பொழுது அந்த குடும்பத்து குலதேவி அந்த விளக்கில் வாசம் செய்து
அந்து வீட்டினுள் நுழையும் புதிய பெண்ணுடன் அமர்க்கிறாள் ..

திருமணத்தின் பொழுது பெண்ணின் பெற்றோர் ஒரு புதிய விளக்கினை வாங்கி மாப்பிளை வீட்டாரிடம் தருவார்கள் ,அவர்களின் வீட்டில் உள்ள பெண் வாரிசு அதில் என்னை ஊற்றி தீபம் ஏற்றி நெல் கொட்டிய படியுடன் வைத்து அதை திருமண பெண்ணின் பின் புறம் நின்று தாலி கட்டும் வரை எறியும் விளக்குடன் நின்று கொண்டு இருப்பார் , தாலி காட்டிய பின் அவர்களை வீடிற்கு அழைத்து செல்லும் பொழுது அவர்களை வாசலில் நிறுத்தி , அந்த நெல் மணிகளை உடைய படியை வாசலில் வைத்து திருமண பெண்ணின் கால்களால் தட்டி விட சொல்லி விட்டு ,அந்த தம்பதியரை வீட்டிற்குள் அழைத்து அந்த
பெண்ணிடம் அவள் கொண்டு வந்த விளக்கில் அவர்கள் வீட்டில் தீபம் ஏற்ற சொல்வார்கள்..

அப்பொழுது அந்த விளக்கில் முதல் முறையாக அந்த பெண்ணால் ஏற்பட்ட தீபத்தில் அந்த குல தேவி அமர்ந்து அந்த பெண்ணை அவர்கள் குலத்தில் சேர்த்து ஆசிகள் கொடுப்பாள் இப்படி குல தேவி தன்னுடைய ஆசிகளை திருமண ஆன நாளின் முதல் அந்த தம்பதியரிடம் கொடுத்து வந்து விடுவாள், இப்படி வந்தவுடன் தான் அந்த குடும்பம் தலைக்கும் என்பது நியதி , இவர்கள் குடும்பத்தில் அப்படி வரவில்லை என்றார் ...

நண்பருக்கு இவராக பலன் சொன்ன அவரிடம் இருந்து விடை பெற்று நங்கள் வந்தோம் ,அதன் பிறகு பல மாதம் கழித்து என் நண்பருக்கு தெரிந்தது அவரின் தந்தை வேற ஒரு பெண்ணை
திருமணம் செய்து இருந்தது என்பது.....

எனக்கு ஒரு ரகசியம் புரிந்தது ஒரு குடும்பத்தில் பெண்கள் வழியாக தான் குல தேவியர்கள் உள்ளே வருகிறார்கள் ... அடுத்த பதிவில் குழந்தை பிறப்புக்கு ,பிறந்தவுடன் குல தேவி என்ன செய்வாள்
என்று பார்போம் ...

#குறிப்பு ... 
திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் தனி குடும்பம் அமைத்து கொள்ளும் தம்பதியர்கள் இந்த விளக்கை தான் பயன்படுத்த வேண்டும் . கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களின் மாமியார் பயன்படுத்தும் விளக்கை தான் பயன் படுத்த வேண்டும் ...

ஒரு வீட்டில் இரு விளக்கு கூடாது. கூட்டாக இருந்து விட்டு தனியாக வந்தால் திருமணத்தின் பொழுது வாய்த்த விளக்கை ஏற்ற வேண்டும் .......

இந்து மதத்தில் குறிப்பாக தெற்கு பகுதியில் தான் சில பழக்க வழக்கம்களில் செயல்களில் குடும்பத்தை காக்கும் தெய்வம்களிடம் இருந்து ஆசிகள் பெறும்படி இருக்கும் என்று கவனித்து பார்த்தால் புரியும்
....
இவைகள் எல்லாம் ரிஷ்கள் முலமாக உலகத்திற்கு கிடைத்தது ...

ஒரு குடும்பத்தில் சுப காரியும் நடக்கும் பொழுது தான் இந்த குல தெய்வம்களின் கருணை ஆசிகள் பற்றி புரிந்து கொள்ள முடியும் ,
திருமணம் ,பூப்படைந்த சடங்கு ,நிச்சியதார்த்த ம்,புது வீடு கட்டி அதில் புதுமனை புகுவிழா போன்ற நிகழ்சிகள் நடக்கும் பொழுது தான் நமக்கு குல தேவதைகளின் கோபம் /ஆசிகள் புரிய வரும் .

நான் கவணித்த வரையில் குடும்ப தலைவன் வருமானம் அதிகம் சம்பாதனை செய்ய உடலால் மனத்தால் உழைக்கும் தருவாயில்
இந்த குல தெய்வம்களை மறந்து விடுகின்றார்கள் , 20 வருடம் கழித்து அவர்களுக்கு திருமணம் கூடவில்லை ,குழந்தை பிறக்கவில்லை , ,எத்தனை மருத்துவம் பார்த்தாலும் தீராத,
விடாத நோய்கள் என்று பல தரப்பட்ட சங்கடம்களில் அல்லல் படுகிறார்கள் , என்னால் உறுதியாக சொல்ல முடியும் இவர்களுக்கு குல தெய்வ ஆசிகள் இருந்தால் நன்றாக வாழ முடியும் ..
உறையூர் எல்லையில் வெக்காளி அம்மன் கோவிலின் அருகில் உள்ள அக்ஹாரத்தில் ஒரு பிராமண பெரியவர் 1992ல் இருந்தார் .

இவர் ஒரு அம்பாள் உபாசகர் . எனக்கு அடிக்கடி வயிற்று வலி வரும்
,இதனால் பல மருத்துவம் கண்டும் பயன் இல்லை ,இதை அறிந்த கொண்ட எண்ணிடம் பழகிய நண்பர்களில் ஒருவர் என்னை அந்த அம்பாள் உபாசகரிடம் அழைத்து சென்றார் .

அவரை பார்க்கும் செல்லும் முன் 1 எலும்பிச்சை பழம் வாங்கி கொண்டார் . அவரின் வீடு அடைந்தவுடன் நண்பர் அவரிடம்
வாங்கி பழத்தை தந்தார் , அங்கே நான் கவனித்தது அந்த வீடு
முழுவதும் அம்பாளின் படம்கள் , மேலும் காஞ்சி மடத்து பெரியவா படம் இருந்தது .

நண்பர் அவரிடம் நலம் விசாரித்து விட்டு என்னை குறிப்பிட்டு இவருக்கு சில உடல் உபாதைகள் என்று சொன்னார் . அந்த பெரியவர் என்னை பார்த்து விட்டு அவரின் பூசை அறைக்குள் வருமாறு அழைத்து சென்றார் ,இருவரும் சென்றோம் அங்கே நான் பல வித்தியாசமான தேவியர் படம்களை கண்டேன் .

ஸ்கந்த மாதா ,ஜுவலாமுகி ,தலைகாளி,புவனேஷ்வரி போன்ற 
தேவியர்களை கண்டதும் அதிசியமாக எனக்கு இருந்தது , உபாசகர் என்னை ஒரு இடத்தில அமர வைத்து ஒரு தட்டில் விபுதி நிரப்பி அதில் ஒரு எந்திரம் வரைந்து தன கைகளின் ஆள்காட்டி விரலை ஒரு ஊசியால் கீறி தன் ரத்தத்தை அதில் சொட்ட விட்டு கண்களை மூடி அம்மா என்றார் . சிறுது நேரம் கழித்து கண்களை திறந்து உன்
குல தெய்வம் காத்து ரட்சனை செய்யும் தேவி இவளை காத்தாயி என்று சொல்வார்கள் , இவளுடன் மலையாள முனியப்பன் என்ற தவசி உள்ளார் இவரை சுடல மலை சாமீ என்று அழைப்பார்கள் ,
உங்கள் குடும்பத்தில் உன் தந்தை வெளி நாடு சென்று விட்டு அவருடைய தந்தைக்கு திதி கொடுக்க வில்லை ,வீட்டு தேவியை வழிபட வில்லை அதனின் கோபம் தலைசன் பிள்ளை உனக்கு சாபமாக கிடைத்து விட்டது , அதனால் மருந்தினால் பலன் ஏற்பட முடியாது , நீ உன் பெற்றோரிடம் சொல்லி முதலில் குல தேவியருக்கு என்னை காட்பு சாற்றி அவளை மகிழ்விக்க வேண்டும் , மேலும் பிதுர்களுக்கு படையல் செய்து வழிபட்டால் உன் உடல் நலம் பெரும் என்றார் ...

ஒரு விவரம் எனக்கு புரிந்தது நோய்கள் குல தேவியாரின் சாபத்தினாலும் வருகிறது ,கோபத்தினாலும் வருகிறது .....  அடுத்த பதிவில் குழந்தை சாபம் பற்றியது .....

இந்த பதிவை பதிக்க துவங்கிய நாள் முதல் அன்பர்கள் பலர் குல தெய்வத்தையும் விரும்பிய தெய்வத்தையும் சேர்த்து பார்த்து
குழப்பி கொள்கிறார்கள்.

குல தெய்வம் வேறு விரும்பிய தெய்வம்  வேறு, இதைநன்றாக புரிந்து கொள்ளல் வேண்டும் , இதை தெளிவாக முதல் பதிவிலே சொல்லி விட்டேன் , மேலும் திருப்தி ,பழனி ,சிதம்பரம் ,போன்ற கோவில்களின் மூர்த்திகள் குல தெய்வம் ஆகாது ..

ஒருவகையில் பார்த்தால் நம்முடைய முன்னோர்கள் தான் குல தெய்வம் அமைப்பில் சம்பம்தம் உடையவர்களாக இருப்பார்கள் ,
இதை நான் திருநெல்வேலி முக்குலத்தோர் வகை சார்ந்த நபர்களிடம் குல சாமியை கேட்ட பொழுது நபர்களின் பெயர்களை சொல்லி குல சாமி என்றார்கள் , கவனித்து பார்த்தால் வாழ்ந்த நபர்கள் , இது போல பட்டவர்கள் என்று ஒரு சிலரை குல தெய்வ கோவிலில் அமைத்து வைப்பார்கள் ,இவர்கள் அந்த ஊருக்காக உயிர் நீத்தார் என்பார்கள் ,

இப்படி தலை முறைகள் பல கடக்கும் பொழுது சில தேவதைகள் அந்த தெய்வத்தின் இருப்பிடம் தேடி வந்து அமைந்து கொள்ளும் ஒரு குலத்தில் திருமனம் நடந்த பின்பு அந்த குடுபத்திற்கு ஆண்களை அல்லது பெண்களை அல்லது குழந்தை செல்வம் தரலாமா வேண்டாமா என்ற உத்தரவு பிறப்பித்து செயல் படுத்துவது இந்த குல சாமிகள் தான் ..

கிராமம்களில் நான் பார்ப்பது உண்டு ,ஒரு நபருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் ,குழந்தை பாக்கியும் இல்லை என்றாலும் அவர்கள் அவருடைய குல தெய்வ கோவிலில் பிராத்தனை செய்து கொள்வார்கள் ,அவர்களின் ப்ராத்தனை நிறைவு பெற்றவுடன் அதற்க்கு உண்டான முறைகளை அந்த கோவிலில் செய்து விடுவார்கள் , இவர்களுக்கு பெருமாள் கோவிலும் ,சிவன் கோவிலும் வேடிக்கை பார்பதற்கும் சிறிய அர்ச்சனை செய்வதற்கு மட்டும் தான் , மற்றபடி நம்பிகை முழுவதும் அவர்களின் கோவில் தான் , இதை மாதிரியான மக்களை நான் கிராமம்களில் அமைந்து இருக்கும் சிவன் கோவிலுக்கு
போகும் பொழுது பார்த்தது உண்டு ...

நான் 5 வருட காலம் அந்த அம்பாள் உபசாகருடன் பழகி சில நுணுக்கமான மாந்திரீக விவரம்களை அறிந்து கொண்டு இருந்த
பொழுது ஒரு தம்பதியர்கள் குழந்தை செல்வம் இல்லை என்று அவரிடம் வந்தார்கள் , அவர்களின் சாதகத்தை பார்த்து விட்டு எண்ணிடம் அவைகளை காண்பித்து குழந்தை ஆசிகளை தரும் குரு தேவர் சாபமாகி விட்டார் , விந்துக்குள்ள அடங்கும் சனியும் கெட்டு விட்டார் தாத்தா பாட்டி என்ற ராகு கேதுவும் மட்டும்
நல்ல நிலையில் உள்ளது இவர்களை வைத்து நாம் பரிகாரம் செய்தால் ஒரு வேலை குழந்தை கிடைக்கலாம் என்றார் , அப்பொழுது நான் சோதிடம் கற்று கொண்டு இருந்தேன் , அவர் சொன்னது புரிந்தும் புரியாமலும் இருந்தது .

நான் அவரிடம் சொன்னேன் இந்த பதில் சரியாக எனக்கு புரிய வில்லை என்றதும் அவர் சொன்னார் நமக்கு குழந்தை உருவாக ராகுவும் கேதுவும்
,
அந்த குழந்தை ஊனம் இல்லாமல் இருக்க சனியும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து பெற்று நல்ல பெயருடன் வாழ, மேலும் பெற்றோர் என்ற பெயர் தருபவர் இந்த குரு தேவர் தான் என்றார் ..

அவர்கள் இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும் என்றார்கள் .

அவர்களிடம் ஒரு எலுமிச்சை பழம்வாங்கி வர சொல்லி அதை அவர்கள் வாங்கி வந்தவுடன் அதை தன் வலது கைகளில் வைத்து ஏதோ ஒரு மந்திரம் சொல்லி விட்டு கண்களை மூடி அந்த பழத்தை காதுகளில் வைத்து அம்மா என்றார் சிறுது நேரம் கழித்து அவர்களிடம் உன் பாட்டனார் ஒரு சிறு கிராமத்தின் தலைவர் பல குடும்பத்திற்கு நல்லது செய்து உள்ளார் ,ஆனால் உன் தாத்தாவோ பணத்தின் மீது உள்ள மோகத்தினால் ஊர்மக்களுக்கு துரோகம் செய்து பொது சொத்தை அபகரித்து அவர்களின் சாபத்தை வாங்கி முடிவில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்
..

இதன் விளைவாக உன் தந்தையை விட்டு குலதேவி சென்று விட்டது
இந்த தகவலை உனக்கு இப்பொழுது அந்த தெயவம்கள் சொல்கிறது..

நீ தில ஹோமம் என்ற ஹோமத்தை ராமேஸ்வரத்தில் செய்ய வேண்டும் பிறகு ராகு கேது சிவ பெருமானை பூசைகள் செய்த கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும் மேலும் உன் மனைவியை அழைத்து கொண்டு குல சாமீ கோவில் சென்று மனதார மண்ணிப்பு
கேட்டு உன் மனைவி மாவிளக்கு போட்டு குழந்தை வரம் வேண்டும் என்று மடி பிச்சை கேட்டு அழுதால் அவளின் ஆசிகளால் உங்களுக்கு குழந்தை கிடைக்கும் என்று
கூறினார் .

இதை கேட்டதும் அந்த நபர் கண்ணீர் சிந்தி என்தந்தை திருமணம் முடிந்ததும் வேறு நகரத்துக்கு வந்து விட்டார் என்றும் குல சாமிகள் கோவிலுக்கு போக முயற்சி செய்யும் பொழுதெல்லாம் உடல் நிலை அல்லது எதாவது ஒரு தடை வந்துவிடும் மீறி சென்றால் போகும் வழியில் அபசகுனமாக பிரச்சனைகள் வரவும் விட்டு விட்டார் ,
தற்பொழுது அவரின் உடல் நிலை சரி இல்லைதாங்கள் கூறியது போல என் ஊருக்கு எங்களால் செல்ல முடியவில்லை என்றார் ..

உபாசகர் மனமுடன் பிரார்த்தனை பரிகாரம் செய்து கோவிலுக்கு செல்லுங்கள் என்று சொல்லி முடித்தார் ..

அவர்கள் சென்றதும் நான் கேட்டேன் ,யாரோ செய்த தவறுக்கு இவர்கள் ஏன் வேதனை அனுபவிக்க வேண்டும் என்றேன் , உபாசகர் சொன்னார் பிறந்து அனுபவிப்பது பாவம் செய்த அதே நபர் , நம்முடைய சைவ நூல்கள் சொல்கிறது தாத்தா  தான் மறுபடியும் அந்த குலத்தில் பிறப்பான் , அவன் செய்த பாப புண்ணியத்தை அவனை அனுபவித்து தீர்ப்பான் ...

இதை மையமாக வைத்து தான் சட்டத்தில் தாத்தா சொத்து பேரனுக்கு என்று எழுதப்பட்டது என்றார் ..

எனக்கு சில உண்மைகள் புரிந்தது ..குல தெய்வம் ஆசிகொடுத்தால் தான் நமக்கு குழந்தை பிறக்கும் , பிறர்களின் சாபத்தை வாங்கி விட்டால் அவைகள் நம்மை விட்டு விலகி விடும் என்பது புரிந்தது ....

கடந்த பதிவில் குலசாமிகளின் ஆசிகள் தான் குழந்தை செல்வதை நம் பெறுவதற்கு முதல் படி என்று பார்த்தோம் ...

நான் கவனித்த வரையில் மனிதர்கள் துன்பம் வரும் வரை தெய்வ சிந்தனைகளை வளர்த்து கொள்வதும் இல்லை பழகி கொள்வதும்
இல்லை என்று தான் சொல்வேன் ..

இதை போல குழந்தை இல்லை என்று வருந்தும் நபர்களிடம் நான் பேசும் பொழுது அவர்களிடம் நீங்கள் குல சாமீ கோவிலுக்கு
எப்பொழுது சென்று வந்தீர்கள் என்றால் சிலர் எங்கே போவது நேரம் கிடைப்பது இல்லை ,
சிலர் அந்த ஊருக்கு நங்கள் போக மாட்டோம் பங்காளி தொல்லைகள் , சிலர் கோவில் ஒன்றும் பெரியது இல்லை சின்னது ,
அங்கே போனால் புசாரிகள் பணம் பறிக்கிறார்கள் , சிலர் எங்களுக்கு தெரியாது ,சிலர் முருகன் ,பெருமாள் ,சிவன் என்பார்கள் ...

இப்படி குல தேவதை பற்றி சரியான விழிப்புஇல்லாமல் வழிபாடும் செய்யாமல் ஒரு தலைமுறையை வளர்க்க துவங்கும் பொழுது
தான் சிக்கல் வரும் ..

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் ஒரு உயிர் உண்டாகும் , இது ஒரு பெரிய செயல் இல்லை ,எதற்கு குழந்தை இல்லை என்றும் குழந்தைக்காக இப்படி இவர்கள் கவலை படுகிறார்கள் என்று திருமணதிற்கு முன் நான் நினைத்தது உண்டு , உண்மையில் எனக்கு திருமணம் ஆன பின்பு தான் ஒரு ஆண்மகனை தந்தை என்றும் பெண்ணை தாயி என்றும் பெயர் வைக்க குலசாமிகள்
அருள் செய்ய வேண்டும் என்று புரிந்தது ...

அம்பாள் உபசாகரிடம் வந்த பலர்களில் ஒரு மருத்துவர் வந்தார் ,
அவருடைய மகனுக்கு திருமணம் செய்து பல வருடம் பல விதமான மருத்துவ முறைகளை பின்பற்றியும் குழந்தை உண்டாகவில்லை ,
என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டார் ..

உபாசகர் கண்களை முடி தியானித்து பிறகுகுழந்தை கிடையாது ,நீங்கள் கிளம்பலாம் என்றார் ,அவர் கெஞ்சி பார்த்தார் பிறகு சென்று விட்டார் ..

அவர் சென்றதும் நான் கேட்டேன் மாமா ஏன் கோபமாக சொன்னீங்க ? உபாசகர் சொன்னார் பாவி இவனின் தந்தை வயதான தாயை கிணற்றில் வீசி கொன்று விட்டான் , அதனால் காளி தேவியின் கோபத்திற்கு ஆளாகி வம்ச விருத்தி நின்று விட்டது என்றார் . நான் ஒன்றும் பேசவில்லை ..

இதை போல ஒரு தம்பதியர்கள் தன் மகனுடன் வந்தனர், அவர்கள் தம் பிள்ளைக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது , மேலும் உடல் நிலை சரி இல்லாமல் போகிறது என்று சாதகத்தை காண்பித்தார்கள் ,

9 தேவர்களை கவனித்த உபாசகர் என்னிடம் பாலரிஷ்ட தோஷம் உள்ளது பார் என்று வயதை கணக்கு பண்ணி விட்டு 7.5 வயது வரை ஆபத்து நீங்கள் திருவாசி கோவிலுக்கு திங்கள் அன்று சென்று அம்பாளிடம் இவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றார் .

அவர்கள் சொன்னார்கள் அப்படி தான் ஒரு ஜோசியர் சொன்னார் ,
நீங்கள் அம்பாளிடம் கேட்டு சொல்ல வேண்டும் என்று எலும்பிச்சை பழத்தை தந்தார்கள் .

அவர் சிறிது நேரம் பழத்தை கையில் வைத்து விட்டு கண்களை முடி
அம்மா என்று சொல்லி விட்டு அவர்களிடம் காது குத்தவில்லையா ?என்றார் . அவர்கள் ஆமாம் . அது ஒன்றும் பெரிய வேலை இல்லை
அதனால் மெதுவாக செய்யலாம் என்று இருகிறோம் என்றனர் .
குழந்தையின் காது குத்திய பின் உங்கள் பிரச்சனை மறையும் என்று சொல்லி அனுப்பி விட்டார் .

அவர்கள் சென்றதும் காது குத்துதல் அதற்க்கும் உடல் சுகத்திற்கும் என்ன தொடர்பு என்ற என் சந்தேகத்தை கேட்டேன் . குல தெய்வ கோவிலில் பிரதானமான தெய்வம்கள் இருவர் அவர்களிடம் ஒரு ஒரு தேவதைகளும் பல இடத்தில இருந்து வந்து சேர்ந்து கொள்ளும் .இப்படி சேர்ந்தது அவர்களுடன் அந்த கோவிலில் இருந்து அருளாக அவர்களை வழிபடும் நபர்களுக்கு உதவி செய்யும் ,

இப்படி உருவானது தான் 11 படையல் முப்புசை போன்ற சடங்குகள் ,
மேலும் இப்படி தான் ஒரு கோவிலில் அம்மன் அதன் உடன் கருப்பு அல்லது முனி பிரதான தெய்வம் மற்றவைகள் எல்லாம் தேவதைகள்
இவைகள் வீட்டின் உள்ளே வராது குல தேவி மட்டும் நம் வீட்டிற்க்கு வரும் வீட்டு சாமி என்று மாறி விடும் . ஒரு புதிய உயிர் ஒன்றை அந்த குலத்தில் கொடுத்தவுடன் அந்த தெய்வம்கள் வாழும் எல்லைக்கு குழந்தையை அழைத்து கொண்டு அந்த புதிய உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தத்தை அங்கே காற்றில் விடவேண்டும் இப்படி விட்டால் மற்ற எல்லா தேவதைகளும் அந்த ரசத்தை சுவைத்து அந்த குழந்தையை ஆசீர்வாதம் செய்யும் இதனால் அந்த குழந்தைக்கு அங்கு உள்ள தேவதைகளினால் பாதுகாப்பு ஏற்படும் அடிக்கடி ரத்த காயம் ஏற்படாது என்றார் ..

உண்மையில் அங்கே உள்ள தெய்வம் இவைகளை நெருங்காது ,ஆனால் தேவதைகள் விரும்பி வரும் , இதை முலமாக வைத்து தான் மாந்துரீகம் உள்ளது . நான் சொன்னேன் எல்லோரும் இப்படி செய்ய
மாட்டார்கள் என்றேன் .

அவர் சொன்னார் உண்மை தான் ஆனால் நாம் பலி பூசை போட மாட்டோம் மற்றபடி எல்லோரும் ஒரு முறை காது குத்துவார்கள் , (கிழித்து விடுதல் ) மற்று மதத்தினர் பலி பூசை (ஆடு பலி ) போடுவதால் அவர்கள் இந்த பலனை அடைந்து கொள்வார்கள்
இது ஒரு நுட்பமான விவரம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்றார் . உண்மை தான் அப்பொழுது எனக்கு புரிய வில்லை ,
பல ரகசியத்தை சித்தர்கள் புரிய வைத்தார்கள் ....

இந்த தெய்வம்கள்/தேவதைகள் பற்றிய பாடம் ஒரு வித்தியாசமான அனுபவம் ,இதை புரிந்து கொள்ள நமக்கு நல்ல பொறுமையும் 
நுணுக்கமும் தேவை ...

மக்களோடு மக்களாக வாழ்ந்து தான் இவர்கள் தேவதைகளாக மாறி உள்ளார்கள் என்று சில நாட்டுப்புற கதைகளை கேட்டால் புரியும் .

தெய்வம் இருக்கும் இடத்தை தேடி வந்து இந்த தேவதைகள் அடைந்து கொள்ளும் , உதராணமாக திருவனைகோவில் எல்லையில் சிவ பெருமானை புசித்து அவருடன் கலந்தாள் அம்பாள்..

இங்கே நாம் அந்த எல்லையில் சுற்றி வந்து கவனித்தால் பல குலத்தாரின் கோவில்கள் உண்டு அதில் பலவகையான தேவதைகள் உண்டு , அவைகள் எல்லாம் சிவனை புசித்து படி இருக்கும் , அவர்களின் காலம் பூமியில் முடிந்து விட்டால் விண்ணுலகம் சென்று விடும் , இந்த தேவதைகள் எல்லாம் சத்ய தர்ம பரிபால ராஜ்ஜியம் நடத்தும் சக்தி படித்தவை , இவைகள் சத்தியத்திற்கு கட்டு பட்டது , உண்மை வேண்டும் ,நேர்மை வேண்டும் ,ஒழுக்கம் வேண்டும் இவர்களிடம் இப்படி தன்மைகளுடன் நாம் அணுகினால் அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் , கீரனூர் எல்லையில் வீரமாகாளி என்ற கோவிலுக்கு நானும் என் நண்பரும் சென்றோம்
,
அங்கே ஒரு பெண்மணி நாணையத்தை வெட்டி அந்த கோவிலுக்குள் செலுத்தி அவளின் எதிரி என்று கருத்திய மற்ற ஒரு பெண்ணை இந்த அம்பாள் பலி வாங்க வேண்டும் செய்து இருக்கிறாள் , இது அவள் அங்கே புலம்பிய படி இருந்ததில்
இருந்து நான் புரிந்து கொண்டேன் நண்பரிடம் குல கோவில் அதன் அருகில் இருப்பதால் அவரிடம் இந்த பெண்ணின் செயலை பற்றி கேட்ட பொழுது , இப்படி செய்தால் யாரை நினைத்து செய்கிறோமோ அவர்கள் கடுமையான நோயால்
பாதிக்க பட்டோ அல்லது கைகால்கள் இழந்தோ விடுவார்கள் என்ற நம்பிக்கை , ஆனால் நடக்கவில்லை போல தெரிகிறது அந்த பெண் புலம்புகிறாள் என்று சொன்னார் ..

மனம் கணக்கு போட துவங்கியது , தேவதைகள் நல்லது தானே செய்யும் இது என்ன தப்பான செயல் ஆயிற்றே... குழப்பத்துடன் தேவியை தரிசனம் செய்ய நுழைந்த பொழுது ஒரு சூலம் மட்டுமே எதிரில் புற்றுடன் அய்யனார் ரூபம் . தரிசனம் செய்து விட்டு வந்தேன் ...

5 வருட காலம் நான் அந்த பிராமண அம்பாள் உபாசகர் பெரியவருடன் பழகி வந்தேன் ,(இன்று அவர் இல்லை இருந்தால் இதை பற்றி கேட்டு இருப்பேன்) , கடும் மஞ்சள் காமாலையால் பதிக்க பட்ட அவர் ஒரு நாள் சூரிய கிரணம் அன்று இறந்து போனார் .

இதெற்கு பின் நான் எந்த மருலாளிகளிடம் பழகவில்லை .

எனக்கு திருமணம் முடிந்த பின்பு ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்ற பொழுது எனக்கு ஒரு ஆசை வந்தது , 4 அடி உயரம் கொண்ட விளக்கை கோவிலுக்கு தானமாக தரவேண்டும்
என்ற ஆசை அதன் படி நான் ஒரு நபரிடம் விளக்கு செய்து தரும் படி 15000 ஆயிரம் பணம் தந்தேன் , அவர் சேலத்தில் உள்ளவர் செய்து விட்டு பொருளை திருச்சிக்கு எடுத்து வந்து எனக்கு தொலைபேசியில் அழைத்தை பொழுது எங்கள் வீட்டில்
எனது பாட்டி இறந்து இருந்தார் , நான் அவரிடம் அந்த விளக்கை எனது நண்பரின் வீட்டில் 16 நாட்கள் வைக்கும் படி சொல்லிவிட்டேன் .

16 நாட்கள் முடிந்த பின் அந்த விளக்கை என்னுடைய வீட்டிற்க்கு எடுத்து வந்து விட்டேன் .

விளக்கை கோவிலுக்கு எடுத்து செல்லலாம் என்று என்று முடிவு செய்வேனோ அன்று உடல் நிலை பாதிப்பு மற்றும் என் குடும்பத்திற்குள் சண்டை ஆரம்பம் ஆகும் ..

இப்படியே 3 வருட காலம் முடிந்து விட்டது , நோய்களின் தாக்கத்தினால் இருந்த பொழுது நண்பர் ஒருவர் நாடி பார்க்க அழைத்து சென்றார் , முதன்  முறையாக சென்றேன் நண்பர் என்னை அறிமுகம் செய்து விட்டு எனக்கு மருத்துவ காண்டம் படிக்க வேண்டும் என்றார் ..

நாடி படிப்பவர் நூலை எடுத்து பிரித்து பார்த்து குறிப்புகளை சொல்லி சரி பார்த்து விட்டு , முருகனிடம் அனுமதி வேண்டும் 9 விளக்கில் தீபம் ஏற்றி முருகனை வழிபாடு செய்து விட்டு வாருங்கள் என்று என்னை திருப்பி அனுப்பிவிட்டார்.

வயலூர் சென்றேன் அவர் சொன்ன படி செய்து விட்டு வந்து அமர்ந்தேன் , மருத்துவ காண்டத்தில் அனுபவிப்பது நோய் இல்லை தண்டனை என்றார் , காரணம் முற்பிறவியில் செய்த பாவம் , அது என்ன முற்பிறவி என்றேன் ?

மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு அப்படி பிறந்து பாப புண்ணியம் செய்து அதன் விளைவால் மீண்டும் பிறந்து அதை அனுபவிக்க வேண்டும் இப்படி தான் சித்தர்கள் பல ஆயிரம் பிறவி கடந்து சித்தத்தை வென்று சிவனோடு கலந்து விடுவார்கள் என்றார் .

நான் கேட்டேன் என்னுடைய பிறவி என்ன ?
இலங்கையில் ராவண குலத்தில்(அசுரம் ) பிறந்து அங்கே வாழ்ந்த இடத்தில அம்மனுக்கு வைத்த உணவில் விஷம் கலந்து வைத்து விட்டாய் அதை உண்ட மக்கள் சாகவில்லை ஆனால் வயிற்று வலியால் துடித்தார்கள் அவர்கள் தந்த சாபம் தான் உனக்கு ,
மேலும் அடுத்த பிறவியில் மலை நாட்டில் நம்பூதிரி குலத்தில் பிறந்து மந்திரம் கற்று தவறான வழியில் பயன்படுத்தி பலரின் வேதனையை பெற்று விட்டாய் , முடிவாக திருவாரூரில் பிறந்து அங்கே பெரிய சோதிடனாக இருந்து தியகேசனின் பாதம்
பணித்து பிள்ளைஇல்லாமல் இறந்து மீண்டும் பிறக்க பெற்றாய் என்றார் ...

எனக்கு தலை சுற்றியது ..ஆம் எங்கள் குல சாமீ திருவாரூர் அருகில் உள்ளது , நாடி பார்க்கும் நண்பரிடம் விளக்கு ஏன் எடுத்து செல்ல முடியவில்லை என்ற காரணத்தை பற்றி கேட்க வேண்டும் என்று கூறினேன் ..

சிவ நாடி படித்தார் அதில் குல தேவியரின் ஆசிகள் உனக்கு உண்டு ஆனால் கோவிலுக்கு விளக்கு தானம் செய்யும் பாக்கியம் இல்லை மேலும் உன்னுடைய கர்மம் தீர வில்லை உனது கர்மம் 9 கோள்களால் தீர்ந்து விட்டால் அம்பாள் விளக்கை எடுத்து கொள்வாள் என்றார் ...

குல சாமீ கோவிலுக்கு வருடம் தவறாமல் செல்கிறேன் , வீட்டில் சரியாய் தை வெள்ளி , புரட்டாசி சனிபோன்ற நாட்களில் படையல்
படுகிறேன் , ஆடி 28ம் நாள் கூட வழிபாடு செய்கிறேன் , குல தெய்வம் இருக்கும் கோவிலுக்கு சென்றால் சரியாக என்னை காட்பு அபிஷேகம் செய்து உடைகள் தந்து மலர்
மாலை சுட்டி வழிபாடு செய்கிறேன் இப்படி இருக்க இவர்கள் விளக்கை ஏற்று கொள்ள கர்மம் தடுக்கிறது என்றால் கர்மத்தை கலைக்கும் சக்தி யாருக்கு , இவர்கள் ஏன் கலைக்க வில்லை ?
இவர்களுக்கு இந்த கர்மத்தை அழிக்கும் சக்தி கிடையாதா என்று கேள்வி என்னுள் வந்தது கேட்டேன் ?

நாடி படிப்பவர் சொன்னார் "குல சாமிகள் நமக்கு எல்லாம் செய்ய
முன் வரும் நம்மில் கடந்த ஜென்மத்து கணக்கை அவைகள் அறியும்
அதன்படி தான் நமக்கு அவைகள் தர முடியும் இது ஒரு எல்லை
இந்த கர்மத்தை அறிந்து அழிக்க சோதிட கணக்கு தெரிந்த நபர்கள்
வேண்டும் அவர்களின் துணையோடு கர்மத்தை சாந்தி செய்ய முடியும் அழிக்க முடியாது இப்படி செய்தால் குல தேவியர்கள் வழி கிடைத்தது என்று நமக்கு அருள்வார்கள் , அல்லது கர்மத்தை அழிக்கும்சித்தர்கள் .மகான்கள் ,சர்குருமார்கள் போன்ற தவசிகளால் முடியும் இவர்கள் மூலமாகவோ அல்லது இவர்களின் ஆசிகள் அல்லது இவர்களைப் போல சிவதீயை நாம் தீண்டினால் நம் கர்மம் அழிந்து விடும் பாக்கியம் ஏற்பட்டும் விடும் என்றார் "
எனக்கு கொஞ்சம் புரிந்தது , குல தேவி நமக்கு அருள் செய்ய வேண்டும் என்றாலும் நம்மில் உள்ள பாப புண்ணிய கணக்கு படி தான் செய்ய முடியும் , அகவே நாம் இந்த கணக்கை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்,
இதை  போல பாப புண்ணிய கணக்கு சரியாக இருந்தாலும் குல தேவரின் கோபம் முன்னோர்கள் அவஸ்தைகள் நம்மில் கலந்து இருந்தாலும் நமக்கு பாக்கியம் ஏற்படுவது இல்லை ...

ஒரு குழந்தை தாயிடம் ஒரு பொருளை கேட்கும் பொழுது அந்த பொருளை தயாரிக்கும் உரிமையாளர் சொன்ன விலை கொடுத்து தான் தாய் அவரிடம் இருந்து நமக்கு வாங்கி தருவாள் , அந்த பொருளை வாங்க பொருள் என்னும் புண்ணியம் நம்மிடம் இல்லை என்றால் எப்படி நமக்கு கிடைக்கும் , இன்னும் விரிவாக சொல்லும் பொழுது ஒருவன் வேலை இல்லை , குழந்தை இல்லை என்று குலதேவியரிடம் முறையிடும் பொழுது அவள் நம்முடைய கணக்கை பார்த்து இதை பெற இங்கே உள்ள அலுவலகத்தில் முறையிட்டு அனுமதி வங்கி கொள்ள என்பது
தான் பரிகாரம் , இதற்கு சோதிடம் உதவி செய்யும் , இதைபோல பரிகாரம் பண்ணிய பின் நமக்கு நாம் கேட்பதை கொடுப்பது அவளின் கடமை என்று நான் புரிந்து கொடேன் ...

தெய்வம்கள் வேறு தேவதைகள் வேறு என்று நான் எல்லா பதிவுகளிலும் பதிந்த படி வருகிறேன் ,நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் , நம் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டார்கள் என்றால் அந்த காரியம் முடிந்த பிறகு 16 வது நாள் ஒரு பிராமணரை அழைத்து சில சங்கல்பம் செய்வார்கள் அப்படி எங்கள் வீட்டில் என் பாட்டிக்கு செய்த பொழுது அந்த நபர் என்னிடம் குல தேவதா இஷ்ட தேவதா என்று சொல்லி தான் ஆரம்பித்தார் இப்படி அவர் சொன்ன பிறகு தான் நான் சிந்தித்தேன் குல தேவதா என்றால் என்ன ?என் இவர்கள் தெய்வம் என்று சொல்ல வில்லை ? என்ற கேள்வி இதன் பின் நான் கவனித்த கோவில்கள் , எந்த கோவிலில் புசாரி உள்ளார்கள் எந்த கோவிலில் பிராமணர்கள் உள்ளார்கள் என்று ..

இப்படி பார்த்ததில் தேவதைகள் உள்ள கோவிலில் மட்டும் புசாரிகள் ,தலைமுறை தலைமுறையாக இருந்தார்கள் என்று புரிந்து கொண்டேன் ..

தெய்வம்கள் அருளாக மனிதர்களுக்கு உதவும் தேவதைகள் மருளாக உதவி செய்யும் தெய்வம்கள் நல்லது மட்டுமே செய்யும் தேவதைகள் கேட்டதும் செய்யும் தெய்வம் அருளாக உதவி செய்யும் என்பது நெற்றியில் (திலகம் இடும் இடம் ) வெளிச்சமாக தோன்றி காதுகளில் மொழியாக கேட்க்கும் இதை அவர்கள் நம்மிடம் அமர்ந்த படி அல்லது நின்றபடி அசையாமல் அமைதியாக சொல்வார்கள் ..இது ஒரு வகை (தெய்வ தன்மை ) இவர்கள் உணவாக சைவம் அதிலும் பழம்கள் பால் மட்டுமே அதிகமாக உண்பார்கள் ...

மருள் என்பது தேவதைகள் உடலில் ஊடுருவி அதனால் குதித்து அருவாள் மேல் நின்று கொண்டோ ஆடிகொண்டோ சொல்வது ,இப்படி தேவதைகள் ஒரு நிலையில் இல்லாமல் சொல்வது ,இப்படி சொல்லப்படும் பொழுது உடல் மிகவும் சோர்வு பெற்று மயக்க நிலை அல்லது அசதி வந்து விடும் இது ஒரு வகை இப்படி வருபவர்களுக்கு போதையை உடலில் ஏற்றி கொள்ளும் பழக்கம் வந்து விடும் ,இதனால் தான் இவர்கள் குடிப்பார்கள் அல்லது சுருட்டை சுவைப்பார்கள் , இப்படி அருள்வாக்கை பார்த்தவர்கள் முனி சாமிக்கு சுருட்டு பிடிக்கும் என்றும் சாராயும் பிடிக்கும் என்றும் அதை வைத்து படைப்பார்கள் , உண்மையில் முனி சாமீ சைவர் , பெரியவர் ,தவசி , சிவனின் அம்சம் இவர் கல்கண்டு பொங்கல் விரும்பி உண்பார் ...

இவரை போல கறுப்பர் சைவர் , தேங்காய் விரும்பி உண்பார் , வெண்பொங்கல் விரும்பி உண்பார் .. இப்படி மனிதன் அவனுடைய உடல் தேவைக்கு உண்டானதை உன்ன போய் அதுவே படையலாக இன்று மாறிவிட்டது ....

நான் அடிக்கடி சிவ பெருமான் கோவிலுக்கு போவது உண்டு அப்படி போகும் பொழுது வாசலில் உள்ள காவல் தெய்வம்களை வணங்கி விட்டு தான் உள்ளே செல்வேன் , எனக்கு இவர்களை வணங்கும் பொழுது அடிக்கடி கொட்டாவி (கேட்ட ஆவீ ) வரும் , இது ஏன் என்று நான் ஆராய்ந்து இல்லை , ஒரு முறை இது அதிகமாக வந்து கண்களில் நீர் வர துவங்கியது , மேலும் கருப்பு சாமீ கோவில் திருவிழா நடக்கும் எல்லையை நான் கடந்து செல்லும் பொழுது என் கழுத்தில் ஏதோ ஒரு பூச்சி ஊர்வது போல் ஒரு கூச்சம் ஏற்படும் வலது காதுகளில் சூடான ஒரு காற்று வெளி வருவதை உணருவேன் பிறகு உடல் முழுவதும் சூடாகும் என் கண்களுக்கு எல்லாம் சிறு பொருளாக தெரியும் அதாவது நான் உயரமாக வளர்ந்தது போல் இருக்கும் ,, சில நிமிடம்கள் தான் பிறக்கு பிறகு உடல் தளர்ந்து விடும் , இப்படி வருவது எனக்கு தொல்லையாக இருந்தது , என்னுடைய வியாபார இடத்துக்கு வந்த ஒரு நபர் என்னை கவனித்து கொண்டே நின்றது எனக்கு தெரிய வில்லை , ஒரு நாள் அவர் என்னை தனியாக அழைத்து உங்களிடம் பேச வேண்டும் என்றார் ,சொல்லுங்கள் என்றேன் , நான் இந்த இடத்திற்கு வரும் பொழுதெல்லாம் பார்கிறேன் இந்த இடம் கருப்பின் விளையாட்டு கூடமாக இருப்பது போல் உள்ளது உங்களிடம் அந்த கருப்பன் வர நினைக்கிறான் என்று புரிந்து கொண்டேன் , நீங்கள் என் உடன்பட மறுக்கிரிர்கள் என்றார் , நான் அவரிடம் எப்படி சொல்கிறீர்கள் என்றதும் ,அவர் சொன்னார் நான் பெரியசாமீ பக்தன் , கொல்லிமலை என் விடு போல் , உம்மை பற்றி தெரிந்து கொள்ள ப்ராத்தனை பண்ணி உறங்கிய பின் கறுப்பர் என்னிடம் அவனை என்னிடம் அழைத்து வா என்று மட்டும் சொன்னார் ...

கருப்பின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும் வரவேண்டும் என்றார் , நான் சொன்னேன் எங்கள் குலசாமீ முனி அய்யா மற்றும் காத்துரட்சனை செய்யும் தேவி இவர்கள் தான் எனக்கு வேண்டும் ,மண்ணிக்கவும் என்று சொல்லி முடித்து கொண்டேன் ...

அந்த நபர் சென்ற பிறகு எனக்கு குழப்பமும் கவலையும் வந்தது , தொல்லைகள் வராமல் இருக்கவேண்டும் என்று அகத்தியரிடம் நூலில் தெரிந்து கொள்ள சிவ நாடியில் நான் கேட்ட பொழுது. அவர்கள் சொன்னது சிவபெருமான் காலருத்ர அவதாரம் இதில் இருந்து வந்தவர் காலநிரஞ்சன், காலநிரஞ்சன் அவதாரத்தில் இருந்து வந்தவர் காலபைரவன், இவர்கள் வழி வந்த யமன் ,சனி இவர்களை போல காலருதரனின் மற்ற ஒரு அவதாரம்கள் தான் இந்த மஹா பராக்கிரம ருத்ர ரக்த பீஜ தேவதைகள் , இந்த தேவதைகள் அசுரனின் தன்மைகளுடன் இருப்பதால் அசுரதன்மைகள் இதனில் கலந்து இருக்கும் குறிப்பாக செவ்வாய் தேவரின் அம்சம் கொண்ட வீரபாகு இவரின் அம்சமானவர்கள் இந்த ஆண் வீரர்கள் சுக்ர தேவரின் அம்சமாக பெண் வீராங்கனைகள் குறிப்பாக கன்னியர்கள் என்றும் இவர்கள் இருவரும் தான் தேவதைகளாக பூமியில் ருபம்களை எடுத்து வருகிறார்கள் என்றார் ...

சற்று விளக்கமாக ...

முனி ,கருப்பு ,பெரியசாமி ,அய்யனாரின் , போன்றவர்கள் செவ்வாய் முலமாக தன் வேலையை செய்வார்கள் மகாமாயா,யசஸ் வினி ,யட்சிணி ,காளி,வடுக பைரவி ,பைராகி ,சாமுண்டி,கன்னிமார் ,போன்றவர்கள் சுக்ரன் முலமாக தன் வேலையை செய்வார்கள் ..

இவர்கள் எல்லோரும் கால ருத்ரனின் ஆட்சிக்கு உட் பட்டவர்கள் உன் உடம்பில் பஞ்ச புத்த கலவையில் இவர்கள் கலக்க நாம் அணுமதிக்க வில்லை , அசுர சக்திகளான இவர்களை நீ அடைந்தால் பல ஜென்மத்தின் தொடர்ப்பு ஏற்பட்டு மறுபடியும் நீ தவறுகள் செய்ய துணிவாய் ,மேலும் தேவதைகளின் ஆசிகள் மட்டும் போதும் ,பைரவ பாதுகாப்பு மற்றும் ஆசிகளை அடைய கோட்டை பைரவர் எல்லை என்ற திருமயம் எல்லைக்கு வந்து அர்ச்சனை செய்து , சப்த தில்லை என்ற ஸ்தளம்களை அர்ச்சித்து ஆசிகள் பெறுவாய் மகனே என்று கூறினார் ... இதன் பதிப்பை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் ...

குல தெய்வம் தெரியாதவர்கள் சுவடிகள் முலம் அறியலாம் , காமாட்சி தேவியை வணங்கி அவளின் முலம் அறியலாம் முனி ,அய்யனார் ,கருப்பு கோவில்களில் உடுக்கு அடித்து மருலாளிகள் முலம் பாடி அழைத்து அறிந்து கொள்ளலாம் .

நன்றி

அகத்தியர் காக புசெந்தர் ஆசிகளுடன் ....

thanks for Raja Govindaraj.....


#குறிப்பு ..

ஒரு குடும்பத்தில் பல நபர்கள் பிறந்தாலும் யாரிடம் மறுபடியும் தாத்தா பிறந்தால் அவர்கள் செய்த பலனை அனுபவிக்க முடியும் என்பது தேவ கணக்கு ........

மாந்துரீகம் குடும்பத்திற்கு ஆகாது , இதை வைத்து நாம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும் என்று முடிவு செய்ய வேண்டாம் .. அடுத்த பதிவில் காது குத்தல் பற்றி பார்போம்.....

இந்த பதிவுகளை முழுமையாக படித்து வந்தால் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் , எனக்கு message நிறைய வருவதால் தனியாக பதில் பதியாமல் இங்கே பதிகிறேன் நன்றி .....

சித்தர்களின் குரல்


சாயி சரித்திர புத்தகத்தை டௌன்லோடு (இறக்குமதி) செய்து கொள்ளலாம் ..




2 comments:

  1. குல தெய்வம் தெரிய எங்கு சுவடி பார்க்க வேண்டும்

    ReplyDelete
  2. ஊனம் எதனால் ஏற்படுகிறது இந்த கிரகத்தால் ஏற்படுகிறது இந்த குலதெய்வத்தை வருகிறது?

    ReplyDelete