Friday, June 2, 2023

தந்திர யோகம்

🥀 தந்திர யோகம்! 

மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஒன்றாகும்.

இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்த நிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வெவ்வேறு பெயர்களாலும் உணரப்பட்டது.

ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தான்.

அவ்வழிகள் யாதெனில் 
பக்தி மார்க்கம், 
ஞான மார்க்கம், 
கர்ம மார்க்கம், 
யோக மார்க்கம், 
தந்திர யோக மார்க்கம், 
என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்
**************
பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல். என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும். அடுத்து

ஞானமார்க்கம் 
***************
அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும்.

கர்ம மார்க்கம் 
**************
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜுனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடைந்து முக்தி பெற கடைபிடிக்கப்படுபதே கர்ம மார்க்கமாகும். 

யோக மார்க்கம் அறிக 
**********************
அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும். 

தந்திர மார்க்கம்
****************
தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும்.

புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும். மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும்.

இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது..

யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும். உதாரணமாக ஒன்றை அறியுங்கள்.

மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர்.

பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான்.

குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன.

இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன.

இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தாற் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது .
மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளும் நல்லது சரியானது என சில கலைகள் தான் உள்ளது. எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது, அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம், சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம், அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பிழையில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும்.

இங்கு  பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும். தந்திர யோகத்தின் வெற்றி மன ஈடுபாட்டில்தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

இயற்க்கையை எதிர்க்காமலும், தர்மத்தை மீறாமலும் , எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ, அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்ல முடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும். இதுவும் தந்திரகலையாகும் .

நம்மால் முடிக்கமுடியாத செயலை அதை முடிக்கும் தகுதியானவரை தேர்ந்தெடுத்து ஏவி செயல் படுத்துவதும் தந்திர கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் .ரகசியமாக இருந்தால் தான் எதிரியை எதிர்க்காமல் வெல்ல முடியும் .எதிர்ப்பை பகையாகாமல் பலனை நம் வசமாக்க முயல்வதும் தந்திரக்கலையாகும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகொள்வது வீரம். எதிரியை நண்பனாக்கி அன்பால் வெற்றிகொள்வது தந்திரமாகும் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திர அறிவாகும் .

நீங்கள் உங்களுடைய உழைப்பையும் பலத்தையும் நம்புவது அறிவு, இதன்கூடவே வெற்றி பெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முன்னுக்கு வர முயல்வது தந்திரம் .

முன்னோர்கள் நமக்கு கொடுத்துச்சென்றுள்ள புரானங்கள் , இதிகாசங்கள் யாவும் சாமான்யருக்கு கதையாக தோன்றுகிறது இதில் பல திருத்தங்களை கவிஞர்களும் தன் பங்கிற்க்கு செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். ஒருவிஷயத்தை நன்றாக கவனம் வையுங்கள் சாதாரனமாக பார்க்கும் கேட்கும் படிக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே பார்ப்பது சராசரி அறிவாகும். ஆனால் அதன் உள்நுழைந்து காரணங்களை தேடுவது பகுத்தறிவாகும். ஆனால் இதையும் கடந்து நடந்த நிகழ்வுகள் யாவும் வாழ்க்கை சூத்திரங்கள் என்றும் நம் வழிகாட்டி மரங்கள் என்றும் யார் எடுத்து கையாழ்கிறாறோ அவரே ஞான அறிவு பெற்றவராவர் .

மகாபாரதத்தை கேட்கும் போது சூது வாதம், வீரம், வேதனை, வெற்றி, பாசம், பிரிவு என்ற சம்பவங்களையே உணர்வோடு பார்த்து சலிப்பும், ஆர்வமும் கொள்கிறோம் . நம்மவர்களுக்கு  உணர்வுகளின் தாக்கம் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளதால் எல்லாவற்றையுமே தன் வாழ்க்கை சம்பவங்களோடு ஒற்றுமை படுத்தி உணர்ச்சி வசப்பட்டே பழகிவிட்டது. ஆனால் அதை கடந்து மகாபாரதத்தை ஆய்வு செய்தால், அதுவும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் பல அரிய தந்திர ரகசியங்கள் கிடைக்கும் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்னரும், கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையான்டது முழுக்க தந்திரம் தான். தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சிவசப்படுதலோ, கோபப்படுதலோ கூடாது. எதையும் எளிதில் நம்புதலும் கூடாது. இதை கடைசி நேரத்தில் சகுனியால் கடைபிடிக்க முடியாமல் போனாது. இதுதான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு அடித்தளம் போட்டது. ஸ்ரீகிருஷ்னன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெற்றியை பாண்டவருக்கு பெற்றுத்தந்தார். தர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் ஸ்ரீகிருஷ்னர். அதர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் சகுனி . 

ஆக தந்திரம் நல்லவனுக்கும் பலன் கொடுக்கும் கெட்டவனுக்கும் பலன் கொடுக்கும். தந்திரத்திற்க்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அருவடை செய்வோம். இதை மனதில் வைத்து தந்திரத்தை கையாள வேண்டும். கெட்டவருக்கு சகுனி போன்ற ஒருவர்தான் துணைக்கு தந்திரமாக வந்து இருதியில் தோல்வியை பெற்று தருவர். ஆனால் நல்லவனுக்கு ஸ்ரீகிருஷ்னரை போல தெய்வமே துனையாக வந்து இறுதி வரை உடனிருந்து வெற்றியை பெற்றுத்தரும். இதை மறவாதீர்கள் .

மூலிகையை பயன்படுத்துவது, யந்திரம், முத்திரை, ஆசனம், ஆசனவிரிப்பு, ஆடையின்வண்ணங்கள் , விருட்சங்கள், மந்திரம், தீட்சை, முகூர்த்தம், பட்சி, ஓரை பார்த்தல் , அஞ்சனம் இடுதல், எதிரியின் உடமையை கையாழுதல், அஷ்டகர்ம முறைகள், பலவித மலர்கள், யாகங்கள் செய்தல், மனதை அடக்குதல், உலோகம், நவரத்னம், பரிகாரமுறைகள், சமர்பணம் செய்தல், வணக்கம் செய்தல், முயற்ச்சித்தல் இன்னும் பல்வேறு செயல்களிலும் தந்திரங்கள் மறைந்துள்ளது . காரணகாரியம் இல்லாமல் முன்னோர்கள் எதையும் சொல்லிச்செல்லவில்லை எல்லாம் தந்திரமே .

தந்திரம் என்பது புத்தி யோசனை செயல் விவேகம் இவைகளோடு பின்னிபினைந்தது ஆகும். தந்திரம் என்பது எதிரியின் வலயில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று, எதிரியை தன் வலையில் விழவைப்பதும் தந்திரமாகும். ஆயிரம் பேரை எதிர்த்து சண்டை இடுவதை விட எதிரி கூட்டத்தின் தலைவன் ஒருவனை பிடித்து விட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம். இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும். எதிரியோடு மோதுவதை விட எதிரியை தன்வசப்படுத்த முயல்வதே தந்திரமாகும்.

நமக்கு தந்திரத்தை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அன்பு, உண்மை, தன்னம்பிக்கை, தர்மம் , விடாமுயற்ச்சி, புரிந்து செயல்படுதல், ஊக்கம் இவைகளை மட்டுமாவது பின்பற்றுங்கள் கூடவே ரகசியத்தை கடைபிடியுங்கள், மற்றவர் நம் மேல் அன்பாய் இருக்க என்ன அனுகுமுறை அவசியமோ அதை கடைபிடியுங்கள் போதும். இறை சக்தி உங்களை நாடிவர இதுவே போதும். இந்த அனுகுமுறையும் தந்திரக்கலைதான்.

-பைரவ கல்பம் என்னும் தந்திர யோக நூலில் இருந்து.....
Thank to FB.. 

No comments:

Post a Comment