Monday, July 29, 2019

ஜீவசமாதி அருப்புக்கோட்டை சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள்



சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் 






 அருப்புக்கோட்டை நகரில் , சொக்கலிங்கபுரத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் சமாதி ஆலயம். கன்னடம் பேசும் நெசவாளர் வகுப்பிலே சுவாமிகள் அவதரித்துள்ளார்கள். ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிகள் அவதரித்துள்ளதாகத் தெரிகிறது.
குடும்ப வாழ்வில் இருந்துக் கொண்டே ஆன்மிகத்திலும் உயர் நிலையினை சுவாமிகள்  அடைந்துள்ளார்கள். 
This temple priest explains about the miracles of  Shri.Ujji Swamiji. The video link follows :
https://www.youtube.com/watch?v=c2oprJV3bg8&feature=player_detailpage



ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் லீலைகள்


அருப்புக்கோட்டையில் அருளும் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் லீலைகள் 

ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் சமாதியில் பூஜை செய்யும் திரு.காமராஜர் என்பவர் கூறும்போது 

" சுவாமிகள் அடக்கம் ஆகி தற்போது 95 வருடங்கள் ஆகின்றன. சுவாமிகள் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்துள்ளார்கள். சுயமாக ஆன்ம ஞானம் பெற்ற சுவாமிகள் , இல்லறத்தார் கடமையையும் தொடர்ந்துள்ளார்கள்.  

அந்நாளில் அவர் வாழ்ந்த பகுதியிலே , ஊர் மக்களின் பயன்பாட்டிற்காய் இரண்டு கேணிகள் தோண்டும் பணியினை , சுவாமிகள் தாமாகவே செய்து உள்ளார்கள்.

தினமும் கேணி வெட்டி முடிந்தவுடன் , கூலி ஆட்களுக்கு பணம் தர வேண்டுமே ? ஆனால் கேணி தொண்டுவோருக்கு கூலி கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.  என்ன செய்வது ?

தினமும் மாலையில் கூலி கொடுக்கும் நேரத்தில் சுவாமிகள்  தனது தலைப்பாகையில்  கையை  விட்டு பணம் வரவழைத்துக் கொடுப்பார்களாம். 

இதைப் போலவே , அருப்புக்கோட்டை தேவாங்கர் சமுதாயத்திற்காய் ஸ்ரீ சௌடாம்பிகை ஆலயம் எழுப்பும் காலத்தே , சமுதாய பெரியவர்கள் சுவாமிகளிடம் வந்து , ஆலயம் எழுப்பிட சுண்ணாம்பு வேண்டும் எனக் கேட்டு உள்ளனர்.

 சுவாமிகளும் மூன்று கோட்டை  சுண்ணாம்பு தருவதாகக் கூறி, குறிப்பிட்ட நாளில் வரும்படி கூறி அனுப்பியுள்ளார்கள். 

அவர்களும் அந்நாளில் வந்தபோது , சுவாமிகள் மூன்று கோட்டை சுண்ணாம்பைக் கொண்டுசெல்லும்படிக் கூறி உள்ளனர். 

 அவர்களோ .....
" சுவாமி !  தாங்கள் கோபுரம் கட்ட நூறு கோட்டை சுண்ணாம்பு அல்லவா தருவதாகக் கூறினீர்கள் ? நாங்களும் அதை நம்பி அல்லவா வந்தோம் "  என வினவி உள்ளனர். 

 சுவாமியும் தயங்காமல் 
"அப்படியா கூறினேன் ? சரி நீங்கள் மற்றொரு நாளில் வாருங்கள்"
எனக் கூறி ,தானே தனி ஆளாய் சுண்ணாம்புக் காளவாய் அமைத்து , நூறு கோட்டை சுண்ணாம்பையும் கோவில் கோபுர பணிக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.

நாளும் இறை பணியிலும் , இறை நினைவிலும் காலம் கழித்த சுவாமிகளிடம் , அவரது மனைவி வந்து 
               " நாளும் இறை நினைவிலேயே இருந்தால், நம் உணவிற்கு என்ன வழி ?  இன்று சமைக்கக் கூட ஒன்றும் இல்லை " 
 எனக் கூறி வருந்தி உள்ளார்.

 சுவாமியோ
" அடடா நீ என்ன இப்படி கூறுகிறாய் ?  சமையல் அறை சென்று பார் , சமயல் முடிந்து பதார்த்தங்கள் எல்லாம் தயாராக இருக்கின்றனவே "
எனக் கூறியுள்ளார்கள்.

அவர் மனைவியும் சமையல் அறைக்குள் சென்றுப் பார்த்தால் , அப்போதுதான் சமைத்து இறக்கியதுப் போலே உணவு வகைகள் எல்லாம் சுட சுட இருந்துள்ளன.  தன் தவறை உணர்ந்து அவர் சுவாமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். 

இன்றளவும் தன்னை நம்பி வருவோரின் துயர் தீர பல வழிகளிலும் அருள் புரிகின்றார்கள் " என பக்தியோடுக் கூறினார். 
thank:
https://bakthi-yugam.blogspot.com/

ஜீவ சமாதி அருப்புக்கோட்டை



ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்


அருப்புக்கோட்டை நகரில் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாக்ஷி சொக்கநாதர்  கோவில். அதன் அருகில் அமைந்துள்ள தெப்பக் குளத்தின் கரையிலே  சமாதி கொண்டு அருளும் மகான் ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள் ஆவர்.

தற்போது சமாதி சீரமைக்கப்பட்டு , கல்லால் கோவில் எழுப்பி வருகின்றனர்.
சுவாமிகளைப் பற்றிய தகவல்கள் விரைவில் வழங்கப்படும். 





               'புலியூரான் சித்தநாதர் கோயில்' 


 சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையிலிருந்து 10.கி.மீ. தொலைவில் புலியூரான் பகுதியில் கட்ட புளியமரம் (1 km) என்ற இடத்தில் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வாழ்ந்து வந்தார். அவர் அப்பகுதி மக்களுக்கு விஷமுறிவு தீர்த்தங்கள் வழங்கியும் மூலிகைகளால் வைத்தியம் செய்தும் குணப்படுத்தியுள்ளார்.  https://sadhanandaswamigal.blogspot.com/2012/03/puliyuran-siddhar.html

Approach to Puliyuran Village

Way1: 6Km Every 1 Hrs Jayavilas Mini Bus is stating from Aruppukkottai new bus-stand , Journey time 30-40 mits and  this will be stop at front of temple. .

Way2: 10 Km Own transport from Aruppukkottai on Tiruchuli Road turn from aathipatti to Puliyuran  [via sempatti ]

Google Map link: https://g.co/maps/vxhzn

Get in touch with :

                          Siddhar Sundram : 99657 89200
                          Thambidurai (Madurai) :9443144334


 சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்



"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "  என்று பாடிய பத்தினது அடிகளைப்போன்றே சர்குர் அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை  செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.
அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி , மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் , அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.



                                                           ஆலயத்தின் முகப்பு  


                                                      சுவாமிகளின் ஜீவ சமாதி 


                  
                                                      சுவாமிகளின் சீடரின் சமாதி 

                                                        சுவாமிகளின் ஜீவ சமாதி


 இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை , மாலை  என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து ,புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால் , தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது  எனக் கூறுகிறார்கள்.


அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி



அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து "மலையரசன் கோவில் " என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே , இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இவரை " கும்பகோணம் சுவாமிகள் " எனவும் அழைப்பார்களாம். வெட்ட வெளியிலே , சாலை ஓரத்திலே , நித்ய பூஜைகள் ஏதும் இன்றி , இந்த சமாதி அமைந்துள்ளது. இது சமாதியா அல்லது ஜீவ சமாதியா என்பது தெரியவில்லை.  குறிப்பிட்ட சமுதாயத்தினைச் சார்ந்தவர்கள்  பௌர்ணமி அன்று மட்டும் வந்து வழிபாடு செய்வதாகக் கூறுகிறார்கள். அருகில் உள்ளவர்கள் அவ்வபோது விளக்கு போடுவதாகவும் கூறுகிறார்கள். சமாதியினை சுற்றி உள்ள பகுதிகளையாவது தூய்மை படுத்தி வைக்கலாம்.  


மெட்டுகுண்டுவில்   ஜீவ சமாதி கொண்டு அருளும் 
" அழகர்சாமி சித்தர் "


அமைவிடம் :

விருதுநகர் to அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் இறங்கவும். அங்கிருந்து புகழ்பெற்ற "இருகங்குடி மாரியம்மன்" கோவில் செல்லும் வழியிலே 4  km தொலைவில் மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு சென்று "கடப்பாரை சாமி" சமாதி ஆலயம் எனக் கேட்டால்  யாரும் காட்டிவிடுவார்கள்.  

எளிமையான சூழலிலே , யாரும் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது இந்த ஆலயம். அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர்.

 ( ஜீவ சமாதி )
 (விபூதி கொப்பரை)
 ( சித்தர் அருள் பொங்கும் என கொட்டு முரசே ! )
 (அன்னதான கூடம் )
(சரியாக தெரியாத கல்வெட்டுக்கள் )

ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ

விருதுநகர் மாவட்டம் , அருப்புகோட்டை அருகினில் உள்ள கற்றங்குடி எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ காட்சியினைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள் ....

katrangudi sri reddi swamiji jeeva samaathi , virudunagar district]


விருதுநகர் மாவட்டம் - செட்டிகுறிசசி விலக்கு

 ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது ஆலயம்


 200 ஆண்டுகள் பழமையான சமாது ஆலயம் 
விருதுநகர் மாவட்டம் , பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் , செட்டிகுறிச்சி விலக்கு ஆகும். இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாது ஆலயம் இது ஆகும்.

ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது 
பிரதான சாலையின் மேற்புறம் அமைந்துள்ள ஆலயம் இது. கர்பகிரகம் மட்டும் உள்ள ஆலயம். சிறு விமானம் அமைந்துள்ளது. ஆலயம் முகப்பில் ஸ்ரீ வீரபத்திர சாமி சமாது - வருடம் 1812 என்று செதுக்கப் பட்டு உள்ளது.


இந்த சுவாமி அருப்புக்கோட்டை நகரில் வாழ்ந்து இந்த இடத்தில் ஐக்கியம் அடைந்து இருப்பதாகக் கூறபடுகிறது. தினமும் இங்கே விளக்கு மட்டும் ஏற்றப் படுகிறது. 

அருப்புக்கோட்டை ஸ்ரீ அய்யா சுவாமி (எ) ஸ்ரீ வீரபத்திர சுவாமி சித்தர்




 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் , அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில் .

 ஸ்ரீ அய்யா சுவாமி என்று மக்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீ வீரபத்திர சுவாமி , திருச்சுழி     அருகே உள்ள பள்ளிமடம் என்ற ஊரினில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அவதரித்து உள்ளார்கள். அவரின் இளமைக் காலம் குறித்து அதிகம் தெரியவில்லை. சில காலங்கழிந்த  பின் , அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டை நகருக்கு வந்த சுவாமிகள் பின்பு நிரந்தரமாக இங்கேயே தங்கி விட்டார்கள். ஆலயம் அமைந்துள்ள பகுதி சாலியர் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.

அந்நாளில் இப்பகுதி மக்கள் அதிகம் படிப்பு அறிவு இன்றி விளங்கியதால் , சுவாமிகள் இப்பகுதி மக்களுக்கு படிப்பறிவினை வழங்கி உள்ளார்கள். தன்னிடம் இருந்த திருவோட்டில் தினமும் இரவில் பிக்ஷை ஏற்கும் சுவாமிகள் , அவ்வுணவினை அன்று இரவிற்கும் மறுநாள் பகலுக்கும் என வைத்துக் கொள்வார்கள்.

 லீலைகள் :

தனது காலத்தில் சுவாமிகள் புரிந்த பல லீலைகள் தற்போது அறியப்படாமல் மறைந்து விட்டது. சில சம்பவங்கள் மட்டுமே தெரிகிறது.

ஒருமுறை சுவாமிகள் பிக்ஷை கேட்டுச் சென்ற வீட்டில் உள்ள குழந்தைக்கு உடல்நலம் இன்றி அழுதுக் கொண்டே இருந்துள்ளது. சுவாமிகள் ஆசிர்வதித்து விபூதி அளித்த பின் அக்குழந்தை குணமாகி உள்ளது.

" இவ்விடத்திலே ஒரு ஆலயம் வரும், இவ்வீதியிலே தேரோட்டம் நிகழும் " என சுவாமிகள் முன்பே கூரியதின்படியே , அருகிலேயே ஆயிரங்கண் மாரியம்மன் ஆலயம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி உள்ளது. அம்மனின் திருத்தேர் வலமும் நடைபெறுகிறது.

ஒருமுறை சுவாமிகள் பழனி மலை சென்று இருந்தபோது , அங்கு குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. சுவாமிகள் தம்மிடம் இருக்கும் திருவடு நிறைய பழைய சாத நீரைக் கொடுத்து அதனையும் அபிஷேகம் செய்யும்படிக் கூறி உள்ளார்கள். அங்குள்ள பூசாரிகள் அதனை மறுத்து அத் திருவோட்டினை தூக்கி எரிந்து விட்டனர். ஆயின் அத்திருவோடு கீழே விழாமல் , அந்தரத்திலேயே நின்று உள்ளது. அதனைக் கண்டு அஞ்சி அதிசயித்த பூசாரிகள் , சுவாமிகளின் மகிமையை உணர்ந்து , அவரிடம் மன்னிப்பும் கேட்டு , அந்த நீரை அபிஷேகம் செய்து உள்ளனர் எனும் செய்தியும் அறியப்படுகிறது.

சமாதி :


சுவாமிகள்  மாசி மாதம் புனர்பூச நக்ஷத்திரம் அன்று, உயிருடன் சமாதியில் அடங்கி உள்ளார்கள்.வருடம் சரியாகத் தெரியவில்லை. சுவாமிகள் சமாதியான தினத்திலே , திருசெந்துரிலே மாசி விழாவில் ஷண்முக விலாசம் திருநாள் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாம். சுவாமிகள் அதே நாளில் அங்கேயும் தரிசனம் கொடுத்து உள்ளார்கள்.


ஆலய அமைப்பு :


அருப்புகோட்டை - விருதுநகர் பிரதான சாலையிலேயே இக்கோவில் அமைந்து உள்ளது.முன்மண்டபம் , கருவறை  என்ற  அமைப்பில் உள்ளது. கருவறையின் இருபுறமும் விநாயகர் , முருகன் சிலைகள் உள்ளன. பேச்சி அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. சாலிய சமுதாய மக்கள் வழிபடும் வகையிலே சாலிய மகரிஷியின் சிலையும் அமைந்து உள்ளது.
கருவறையிலே லிங்க உருவினிலே சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து உள்ளது.நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்தாம் இவ்வாலயத்தை அமைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

சுவாமிகள் பயன்படுத்திய ருத்ராக்ஷம் லிங்கத்தின் மீது அணிவிக்கப்பட்டு உள்ளது.சுவாமிகள் பயன்படுத்திய திருவோடும் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளது.

சுவாமிகள் நிறைய ஓலை சுவடிகள் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. அவை பழைய வட்டெழுத்து வடிவில் உள்ளதாகவும் , தற்போது அவை ஒரு தனி நபரிடம் இருப்பதாயும் ஆலயத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

 சுவாமிகளின் சமகாலத்தே பொன்னம்பல சுவாமிகள் என்பவரும் வாழ்ந்து உள்ளதையும் , அவரது சமாதி அருகில் உள்ள மாரியம்மன் கோவில் அருகிலேயே உள்ளதையும் தெரிவித்தனர்.

வழிபாடுகள் :


நித்திய பூஜைகள் நடைப்பெறுகின்றன. சுவாமிகளின் சமாதி நட்சத்திரமான புனர்பூசம் அன்று , மாதம் தோறும் சைவ திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது.
அன்று ஒன்பது வகையான அபிஷேகமும்  ,  பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் மாலையில் திருவாசகம் ஓதுதல் நடைபெறுகிறது.அம்மாவாசை அன்றும் ஒன்பது வகையான அபிஷேகமும் , அன்னதானமும் நடைபெறுகிறது.
சுவாமிகளின் சமாதி நாள் அன்று வருடந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அனுபவம் :


"முழுமையான நம்பிக்கையோடும் , சரணகதியோடும் வழிபாட்டால் சுவாமிகளின் அருள் வழிநடத்துவதை உணரமுடியும் " என்றுக் கூறுகிறார் திரு.தமிழரசன் என்பவர். இவர் கோவிலின் அருகிலேயே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
"எனது மகளுக்கு பிரசவ வலி எடுத்து ஒன்றரை நாள் வரையிலும் குழந்தை பிறக்க வில்லை. இனி ஆபரேஷன்தான் செய்ய வேண்டும் எனும் சூழலில் , சுவாமிகளை மனதார வேண்டிக்கொண்டேன். அடுத்த இருபது நிமிடங்களில் என் மகளுக்கு சுக பிரசவமே நடந்து விட்டது." என பரவசமாகக் கூறுகிறார் அவர்.

நாமும் சுவாமிகளின் அடி பணிந்து அருள் பெறுவோம்.

குருவே சரணம்.


thank :https://bakthi-yugam.blogspot.com/2011/12/4.html

Sri Bade Sahib Siddha - Pondicherry

Sri Bade Sahib Siddha 

 Samadhi Location: Chinna Babu Samudram ( near Pondicherry).


  The Siddha who cures diseases. The Great Healer Siddha.
 See clip below for a lot more info on this Siddha and the blessings one can get at his samadhi shrine.

 When Sathguru Venkataraman took us to Bada Sahib Siddha's samadhi in the 1980s, the tomb shrine was but a small hut. Now it is a nice building visited by lots of worshippers .

 Sathguru Venkataraman's revelations on Bade Sahib Siddha have been published in an elaborate articles in our monthly magazine including a full page color photo. There are more Siddha secrets regarding this Siddha that have not been published yet.

Special mantra for praying to Sri Bade Sahib Siddha given by Sathguru Venkataraman

 Om Sri Jagat Purushaaya Vidhmahey 
 Bhoomi Roga Nivarthyaaya Dheemahi 
 Thanno Vaidya Linga Prachodhayaath.

See clip below for more info on this mantra and other Siddha secrets.
Great Healer Siddha Sri Bade Sahib.


Watch clip below. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=m1HuG6OLqA4

Special Times for Bade Sahib Siddha Worship given by Sathguru Venkataraman
Sathguru Venkataraman taught us about special medical curative shakti times such as  Aslesha (Aayilyam) nakshatra days (use ourfree calendar to find out these days),  Tuesdays,  Mars hora hours daily (Mars = Chevvaai = Mangal = Angaraka). Use ourfree Hora calculator to find these daily Mars hora hours.  There are more of these healing shakti times.  These are the special times for Bade Sahib Siddha worship, said Sathguru Venkataraman.

Siddha who cures incurable diseases.

See location map below. Sri Bade Sahib Siddha.


MAP: Siddha Ram Paradesi Swamigal and Bade Sahib Siddha
Thank to : https://www.agasthiar.org/a/siddha-samadhi.htm

சிவஸ்ரீ மகான் படே சாஹிப் வரலாறு

வரலாறு -1 ( மௌனம் )


மகான் படே சாஹிப் சின்னபாபு சமுத்திரம் என்ற சிற்றூரில் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்து உள்ளது.



 மகான் படே சாஹிப் அவ்வளவாக யாரிடம் பேசுவதில்லை. மௌனத்தில் ஆழ்ந்தார். மகா மௌனத்தை அடைந்து விட்ட பிறகு படே சாஹிப்புக்கு   எண்ணங்கள் அற்று விட்டன. மனம் மறைந்து விட்டது. இவ்வுலக பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி முழு ஆத்மீக வாழ்வுக்கு மாறிவிட்டது. உலக வாழ்க்கையில்  இருந்து  ஆத்மீக வாழ்வுக்கு மாறுவது மிக கடினமானது.




மகான் புதுவை மாநிலத்தைச்  சார்ந்த திருக்கனூரில் சில ஆண்டுகள் தங்கி உள்ளார். திருக்கனூருக்கும் சின்னபாபு சமுத்திரதிற்கும் இடையிடையே சென்று வருவது உண்டு. இவருக்கு  இரவு, பகல் கிடையாது. அதற்காக அவர் மூன்று சுதந்திரத்தை விட்டார்.
1 .தேக சுதந்திரத்தை விட்டார்
2 .போக  சுதந்திரத்தை நீக்கினார்.
3.ஜீவ சுதந்திரத்தை விலக்கினார்.



ஆண்டுகள் ஓடின. ஆத்மசக்தி பெருகின. சித்துக்கள் கைவரப் பெற்றார். கருணையே வடிவமானர். மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள். தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறையை மகானிடம் கூறுவார்கள்.



சற்று நேரம் கழித்து தலை அசைப்பார். நோய் குணமாகி விடும். சிலரை அங்குள்ள ஒரு மரத்தை சுற்றும்படி ஜாடை காட்டுவார். அதன் படி சுற்றும் மக்கள் அனைவருக்கும் நோய் நீங்கி , மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக மாறிவிடுவார்கள்.   


மகான் படே சாஹிப் வரலாறு -2 ( பாம்புக்கு மோட்சம் அளித்தல்)


ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ண குப்பத்திற்கு மகான் படே சாஹிப் திரும்பி வந்துகொண்டிருந்தார். ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ  என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி போய்க்கொண்டே இருந்தார்.  மக்கள் அவர் கூடவே  ஓடி விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதை கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார்.

மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணைக்குப்பம் போய்   சேர்ந்தார்கள். இரவு முழுவதும் மஹானை கவனித்துக் கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள்.  இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. 

பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் பெரிய பிள்ளையான ஞானசொருபமான உள்ளாழ்ந்த பக்தியை செலுத்தினார். இமைகள் மூடி கொண்டன. நிஷ்டை நிலைக்கிறது. ஒரே ஏகாந்த நிலை தொடர்கிறது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்து எய்துகிறது. பேசுவதற்கு ஏதும் இல்லை, சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை, ஏங்குவதற்கும் ஏதும் இல்லை. இத்தைகைய விவரிக்க தெரியாத தெய்வீக சக்திவாய்ந்த நிலையில் மகான் படே சாஹிப் அமர்ந்திருந்தார். 

அப்போது அவரை தீண்டிய பாம்பு (கருநாகம்) ஆனந்தமாக கோவிலுக்குள் நுழைந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மகான் ஆனந்தத்தில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டி இடத்தில வாய் வைத்து விஷத்தை உறிஞ்சிய உடன் விநாயகப் பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவர்களை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின் மேல் படம் எடுத்தது. பின் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருமணி நேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறந்தது. நிஷ்டை கலைந்து, தன்னை பார்த்துக் கொண்டு இருக்கும் கருநாகத்தை பார்த்தார். தன் தலையை சுருட்டி தலை குனிந்து வணங்கியது. அவர் பாதத்தில் ஆபடியே தன் உயிரை விட்டது. 

அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்சம் அளித்தார். அந்த பூஉடலுக்கு தன் கைகளாலே இறுதி சடங்குகளை செய்து முடித்தார். மக்கள் இந்த நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டனர். கொடிய விஷத்தை தந்த நாகத்திற்கு கூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது. 

மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாத படியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணை இட்டு ஆசிர்வதித்தார் .   

மக்கள் மனதில் அந்த ஆத்மஞானி "தெய்வம்" என்ற நிலையில் வைத்து போற்றபடுகிறார். 


மேலும்.... 

சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடத்தைப் பார்க்க
https://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_24.html 


சிவஸ்ரீ மகான் படே சாஹிப் படங்களை பார்க்க
https://www.puduvaisiththargal.com/2010/12/sri-bade-saheb.html 



  Thank : 
https://www.puduvaisiththargal.com/

சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade Saheb)

Bade saheb

விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.


ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.

இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக  கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.

இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.






 


இங்கு உள்ள படங்கள் சுற்று பிரகாரத்தில் உள்ள படே சாஹிப் ஐயாவின் உருவ சிலைகள் . 

படே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும்பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)
படே சாஹிப் ஐயா அவர்களால் வணங்கப்பட்ட சிவன் கோவில்
சிவன் கோவிலுக்கு வெளியில் உள்ள விருட்சத்தின் அடியில் அமைந்து இருக்கும் நாகங்களின் உருவ சிலைகள்.

thank: https://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_24.html

தத்துவநிக்கரகம்

 தத்துவநிக்கரகம் 


தத்துவநிக்கரகம் செய்தல் என்பது தத்துவங்களை கைவிடுதல் ஆகும். இந்த செயல் நாம் முயற்சிசெய்து வேண்டுமா?. அதுவே நடக்குமா ?. தத்துவங்களை ஒழித்தல் எப்படி செய்வது?. இது பூரண அறிவால் நாம் எப்போதும் பூரண அறிவாகவே உள்ளோம், நம்மில் இயக்கம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து அறிதல், புரிதல், உணர்தல், தடுத்தல், தவித்தல் , தவிர்த்தல் என்ற ஆசையால் ஆராய்ச்சி செய்யாமல் மௌனித்து இருந்தால் தத்துவங்கள் தானே விலகிவிடும். உண்மை அறிவை உணர்ந்து ஒருமை நிலையை கடைபிடித்தால் தத்துவங்கள் தானே ஒழிந்துவிடும். சுததேகம் தானாக உருவாகும். பயிற்சியினால் உடல் சுத்தமாகும் ஆனால் பயிற்சியை நிறுத்தினால் பழையபடி அசுத்தம் சேர்ந்துவிடும். ஆனால் ஞானமார்கதில் மாறாத சுத்ததேகம் உருவாகும் அகப்பை சித்தர் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். 

தான் அர நின்றவிடம் சைவம். சைவம் யாருக்கடி 

தன்னை அறிந்தவன்னுக்கே. ஆசை அட்ற்றயிடம் 

எம் இறை கண்டாயே சித்தும் அசித்தும் விட்டே நீ பாரு 

........... பாவித்து பாராதே.


இது மரம் இது மலை இது மிருகம் இது மனிதன் இது ஆண் இது பெண் என்ற பேதம் பார்க்காமல் அனைத்தும் ஒரே அறிவு, தானும் அதே அறிவு தான் என்பதை உணர்ந்து பாவித்து பார்க்காமல் இருந்தால் சித்தி நிலை உருவாகும் என்று அகப்பை சித்தர் கூறுகிறார் .