Monday, July 29, 2019

தத்துவநிக்கரகம்

 தத்துவநிக்கரகம் 


தத்துவநிக்கரகம் செய்தல் என்பது தத்துவங்களை கைவிடுதல் ஆகும். இந்த செயல் நாம் முயற்சிசெய்து வேண்டுமா?. அதுவே நடக்குமா ?. தத்துவங்களை ஒழித்தல் எப்படி செய்வது?. இது பூரண அறிவால் நாம் எப்போதும் பூரண அறிவாகவே உள்ளோம், நம்மில் இயக்கம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து அறிதல், புரிதல், உணர்தல், தடுத்தல், தவித்தல் , தவிர்த்தல் என்ற ஆசையால் ஆராய்ச்சி செய்யாமல் மௌனித்து இருந்தால் தத்துவங்கள் தானே விலகிவிடும். உண்மை அறிவை உணர்ந்து ஒருமை நிலையை கடைபிடித்தால் தத்துவங்கள் தானே ஒழிந்துவிடும். சுததேகம் தானாக உருவாகும். பயிற்சியினால் உடல் சுத்தமாகும் ஆனால் பயிற்சியை நிறுத்தினால் பழையபடி அசுத்தம் சேர்ந்துவிடும். ஆனால் ஞானமார்கதில் மாறாத சுத்ததேகம் உருவாகும் அகப்பை சித்தர் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். 

தான் அர நின்றவிடம் சைவம். சைவம் யாருக்கடி 

தன்னை அறிந்தவன்னுக்கே. ஆசை அட்ற்றயிடம் 

எம் இறை கண்டாயே சித்தும் அசித்தும் விட்டே நீ பாரு 

........... பாவித்து பாராதே.


இது மரம் இது மலை இது மிருகம் இது மனிதன் இது ஆண் இது பெண் என்ற பேதம் பார்க்காமல் அனைத்தும் ஒரே அறிவு, தானும் அதே அறிவு தான் என்பதை உணர்ந்து பாவித்து பார்க்காமல் இருந்தால் சித்தி நிலை உருவாகும் என்று அகப்பை சித்தர் கூறுகிறார் .

No comments:

Post a Comment