Monday, May 25, 2015

இனிய சென்னை, சென்னை சூழ்ந்த அன்பர்களே


********************************************************************* 
by Marma Yoogi ayya [ Facebook]...
வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை 30 & 31-5-15 ல் நடக்கும் இரண்டு நாள் பயிற்சி சம்பந்தமாக சில குறிப்புகளை கவனிக்க வேண்டி உள்ளது.. 
பயிற்சி சமயம் மிகவும் அமைதி காத்தல் மிகவும் முக்கியம்.. உடன் இருப்போருடன் அதிகமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.. பேச்சே மிகவும் பயிற்சிக்கு இடையூறு செய்யும்... இந்த பயிற்சியில் முதலில் பசிக்காத நிலை உருவாக்கப் பட வேண்டும்.. பசியை அடக்கி நின்று, இரண்டு நாட்கள் கழிக்கும் பயிற்சி அல்ல.. 
வாய் வழி உணவிற்கு பதிலாக அமிர்த உணவான அண்ட ஆற்றலை உணவாக கொள்ளும் போது, தேகம் சுத்தம் அடைவதால், தன் பால் உள்ள நோய்க்கு ஆதாரமான சூட்சம நோய் கிருமிகளையும் நீக்கத் துவங்குகிறது... இதை எந்த மருத்துவத்தாலேயும் நடை பெறாத ஒன்று.. அமிர்தமான அண்ட ஆற்றலுக்கு நிகரான மருந்து இந்த உலகில் கிடையாது.. ஆகையால் புரிந்து பயில வேண்டிய கட்டாயம் உள்ளது.. வீண் பேச்சுக்கள் மிக பெரிய தடை.. ஆகையால் அண்ட ஆற்றலை உள் வாங்கும் இந்த இரண்டு நாட்கள் வீண் பேச்சை நிறுத்த முடியாதவர்கள் தயவு செய்து வகுப்பிற்கு வர வேண்டாம்.... 
சனி கிழமை அன்று பகல் 11 மணிக்குள் அண்ட ஆற்றலை உள் வாங்கும் பயிற்சி அளிக்கப் பட்டு விடும்... ஆதலால் அதன் பின் வருபவர்களை வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.. பயிற்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள மன அளவில் முடியாதவர்களுக்கு பசி ஏற்படுவது இயற்கையே.. அவர்கள் வகுப்பை விட்டு விலகி செல்ல வேண்டும்.. 
வலு கட்டாயமாக பசியை தாங்கி கொண்டு இருக்க கூடாது... வருபவர்கள் 48 மணி நேரம் தங்க வேண்டி இருப்பதால் போர்வை மாற்று உடை கொண்டு வருவது நலம்... அன்பர்கள் அதிகம் வருவதால் சுய கட்டுப்பாடு அதிகம் தேவை.. 
காரணம் உங்களை அதிகாரம் செய்து கட்டுப் பாட்டை நிலை நிறுத்த வகுப்பில் யாரும் கிடையாது.. பதிவு செய்த அன்பர்கள் மட்டுமே வர வேண்டும்..ஏற்கனவே பதிவு செய்து இந்த பதிவில் உள்ள வகுப்பு நடக்கும் இடத்தை பார்க்க தவறி இருக்கக்கூடும் என்ற கருத்தில் பதிவு செய்தவர்களுக்கு cell மூலமும் SMS மூலமும் வரும் புதன் கிழமை காலையில் வகுப்பு நடக்கும் இடம் அறிவிக்கப் படும்..
பயிற்சி சமயம் நீரை தவிர 48 மணி நேரத்திற்கு எந்த உணவும் அளிக்கப் பட மாட்டாது.. ஆனால் திங்கள் கிழமை காலையில் 6.00 மணிக்கு மட்டும் சிற்றுண்டி உணவோடு வகுப்பு முடிவடைகிறது.. வகுப்பில் கலந்து கொள்ளும் அன்பர்கள் ஒரு மிகப்பெரிய உடல் உள்ளம் உயிரின் உயர் மாற்றத்திற்கு, அண்ட ஊடல் பழகல்,பயிற்சி மூலம், 
நெகிழ்ச்சி,அனுபவம், பெற ஆயத்தமாகுங்கள்... வாய் வழி உணவு இன்றி இந்த 48 மணி நேரமும் பிரபஞ்ச ஆற்றலோடு உங்களுடன் நானும் தான் இருப்பேன்.. ஆனால் ஒரு நாளைக்கு உங்களை அமைதியில் வைக்க குறைந்தது 14 மணி நேரமாவது பேச வேண்டியதிருக்கும்..
வகுப்பு நடக்கும் இடம் :--
சதானந்த சாமிகள் மடம்,
சதானந்த புரம்,
தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம்,

சென்னை...
எந்த கட்டணமும் கிடையாது.. ஆனால் செலவின் பளுவை, குறைக்க நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன..

at Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, left turn before perungalathur police station Chennai. 600063

Landmark:
Take left at the left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.It will be open from morning 7am to night 8 pm.

MTC Bus : Tambaram to Sadhanandapuram M55G, 55D, M118A
Railway station : Perungalathur next to Tambaram
Share Auto : from Perungalathur police station


No comments:

Post a Comment