Tuesday, June 13, 2017

பரமந்திர விபேதனம்



PARAMANTHRA VEBHEDHANAM

பரமந்திர விபேதனம்
https://jaybeeskadaram.blogspot.com/2012/10/para-manthra-vebhedhanam.html
Image result for மந்திரங்களை

"பரமந்த்ர விபேதனம் என்றால் என்ன?" என்று பெருமாள் கேட்டிருந்தார்.

நம்மை வேண்டாத பிறத்தியார் ஏவிவிட்ட மந்திரங்களை உடைக்கும் செயலைத்தான் அவ்வாறு குறிப்பிடுவது.

இப்போதெல்லாம் மலேசியாவில் பிரத்யங்கிரா ஹோமங்கள், சத்ருவினாசன ஹோமம் என்று வகை வகையாக, விரிவாக, அதிகமாகச் செய்கிறார்கள்.

லோக க்ஷேமத்துக்காகவோ 'லோகான் ஸமஸ்த சுகினோ பவ'ந்தாக வேண்டுமென்றோ இந்த மாதிரி ஹோ¡மங்கள் செய்யப்படுவதில்லை. எங்கு பார்த்தாலும் எப்போதும் இந்த மாதிரியான யாக, ஹோமங்களைச் செய்யும்போது அந்த நெகட்டிவ் எதிர்மறை அதிர்வலைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது தெரிந்தோ தெரியாமலோ யாருமே பாதிப்படையும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன.

தவிர்க்க முடியாத நிலைமைகளில் அந்த ஹோமத்தையோ பரமந்த்ர விபேதன வித்யாவையோ நன்கு அறிந்தவர்கள் மூலம் செய்யப்பட வேண்டிய கர்மா இது. டெலஸ்கோப் லென்ஸ் மூலம் குறி பார்த்து, குறி வைத்து டார்கெட்டை மட்டுமே அடிக்கவேண்டிய விஷயம்.சும்மா ஆர்டீ எக்ஸைக் கீலோக் கணக்கில் போட்டு ஆயிரம் பால்பேரிங்ஸைச் சேர்த்து செய்த வெடிகுண்டை தூக்கி ஜனப்புழக்கம் மிகுந்த இடத்தில் போடுவது போல செய்யக்கூடாதல்லவா?

அந்த மாதிரிதான் பரமந்திர விபேதனமும்.  'பரமந்த்ரவிபேதனம்' என்பதன் விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லி யிருந்தேன்.

 'பிறத்தியார் பிரயோகம் செய்த மந்திரங்களை' என்பதில்தான் அழுத்தம் கொடுக்கவேண்டியுள்ளது.  சிலர் மந்திர உபதேசம் பெற்று மந்திர ஜபங்கள் செய்து உபாசனை அல்லது பூஜைகளைச் செய்வார்கள். இவை அவர்களுக்கு உரிய மந்திரங்கள். அவர்களுக்குச் சொந்தமாக உள்ள யந்திரங்களிலோ அல்லது விக்கிரகங்களிலோ ஆவாஹணம் செய்துவைத்திருப்பார்கள். அல்லது மானச மந்திரங்களாக மனதுக்குள் வைத்திருப்பார்கள்.

 சில பொருள்கள் இருக்கின்றன. அவை எந்தவகையான மந்திரங்களையும் குலைத்துவிடும் ஆற்றல் படைத்தவையாக இருக்கும். அவற்றை வைத்திருந்தாலோ, அல்லது நமக்கே தெரியாமல் யாராவது அவற்றைக் கொண்டுவந்து மறைவாக வைத்தாலோ, ஏற்கனவே செய்துவைத்திருக்கிற ஆவாஹணம், ஏற்றி வைத்த உரு எல்லாம் கலைந்துபோய்விடும். சில கோயில்களில் உள்ள மூலமூர்த்திகளுக்கு சான்னித்தியம் குறைந்து போகவோ அல்லது அறவே இல்லாமல் போகவோ செய்வதும் உண்டு.
 இந்த மாதிரியான பொருள்கள் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் குலைத்து விடக்கூடியவை.  அப்படியில்லாமல் பிறன் பிரயோகம் செய்து வைத்த மந்திரங்களை மட்டும் உடைப்பதே பரமந்திரவிபேதனம்.

 நமக்கு உரிய மந்திரங்கள் எவ்வகையிலும் பாதிப்பு அடையமாட்டா.  Antibiotic மாதிரி. உடலைப் பாதிக்காமல் உடலைப் பாதிக்கும் கிருமிகளை மட்டும் அழிப்பதுபோல.
Image result for Antibiotic

No comments:

Post a Comment