Friday, October 31, 2014

கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமி

ஒம் ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமியே நமஹ


வரலாறு
-----------------
பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய், முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய், சடாமுடியோ, கம்பீரமான தோற்றமோ இல்லாமல், ருத்திராட்சம் அணியாமல், காவி உடுத்தாமல், கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமே, ஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு அண்மைக்காலத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோ, மலையோ, குகையோ அன்று; கங்கை, நர்மதை, காவிரி போன்ற நதித்தீரமும் அன்று; தமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்), மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.

அவர்கள் பொதுவாக மௌனமாகவே இருந்தார்கள். இருப்பினும் பாரதநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் கூட ஏராளமானோர் வந்து சுவாமிகளைத் தரிசித்து அவர்களின் ஆசியும், அருளும் பெற்றுச் செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மகான்களெல்லாம் தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் இந்த அவதூதரரைப் பற்றிப் புகழ்ந்துரைத்து, அவர்களைப் போய் காணும்படி சொல்வார்கள். திருவண்ணாமலை யோகி இராம்சுரத்குமார் அவர்கள், தான் ஒரு அலை என்றால் கசவனம்பட்டி மகான் ஒரு கடல் என்றும், திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகளால் ஜோதி என்றும், துருவநட்சத்திரம் என்றும், ஜமீன் புரவிப்பாளையம் கோடி சுவாமிகளால் மகான்களுக்கெல்லாம் மகான் என்றும் போற்றப்பட்டவர்கள் நம் சுவாமிகள்.
சுவாமிகள் துறவு என்னும் சொல்லுக்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த உலகத்திற்கு எந்நிலையில் அவதாரமெடுத்து வந்தார்களோ அந்நிலையிலேயே உலக மக்களுக்குக் காட்சியளித்து அந்த நிலையிலேயே மகாசமாதி அடைந்தவர்கள் நம் சுவாமிகள். நிர்வாண நிலையில் அவர் இருந்தாலும் அவரை அன்புடன் பெற்ற குழந்தையாய் உற்றார் உறவினர் போன்று பேணிக்காத்த பெருமை இவ்வூர் மக்களையும், அவரிடம் உண்மை அன்பு செலுத்திய பக்தர்களையும் சாரும். அவரைத் தரிசித்த பக்தர்களும் அவரின் உயர்ந்த நிலை கண்டு, எந்தவித விகற்பமுமின்றி பிறந்தமேனியாய் விளையாடிக் திரியும் ஒரு சிறு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தவர்களும் உண்டு. இக்கலியுகத்தின் பார்த்தசாரதி இவர்தான் என்று உணர்ந்தவர்களும் உண்டு. அந்தப் பரிவும், பக்தியும், பாசமும் சுவாமிகள் மீது எந்த வித அசூசையையும், அருவருப்பையும் பக்தர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தவில்லை; மாறாக அருள் ஒளியாகவும், ஆனந்த ஊற்றாகவும், அச்சம் அகற்றி ஊக்கமும், பலமும் அளிக்கும் சக்தியாகவும் சுவாமிகள் அவர்களுக்கு விளங்கினார்கள்.
ஒவ்வொரு மனிதரும் பரம்பொருள் நிலையை அடைய முயற்சி தேவைப்படுகிறது. அம்முயற்சி பலனளிக்க நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆகலாம். இயேசு - கிறிஸ்து நிலையை அடை, சித்தார்த்தர் - புத்த நிலையை அடைய, இராமகிருஷ்ணர், பரமஹம்ச நிலையை அடைய, நரேந்திரர் உலகம் போற்றும் விவேகானந்தராக சிறிது காலம் ஆயிற்று. ஆனால் இந்தத் தெய்வ நிலையைத் தோன்றியவுடனேயே, பெற்று அவதூதராக விளங்கியவர்கள் நம் மௌமகுரு சுவாமிகள். பற்றற்ற நிலையை நிர்வாணம் என்று கூறுகிறது. பௌத்தம். அந்த நிர்வாணத்திலும் முழு நிர்வாணமாகக் காட்சி அளித்தவர்கள் நம் மௌனகுரு சுவாமிகள்.

சுவாமிகளின் அவதாரம்
சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குக் கிழக்கே குட்டத்து ஆவரம்பட்டிக்காட்டில் பிறவிக்கோலத்துடன் வேலிகளிலுள்ள பச்சை இலைகளை உண்ணும் நிலையுடன், பத்துப் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க வயதில் பித்தனைப்போல், பால் முகத்துடன், மாநிறத்துடன், மெலிந்த மேனியாய். நீண்ட கைகள், அழகிய பாதங்கள், சிவந்த கண்களுடன், தெளிந்த ஞானத்தோடு, படிப்பறிவில்லாத சாதாரண மனிதன் போல் சுற்றித் திரிந்து கொண்டு இருந்திருக்கிறார். அது சமயம் இவ்வூர் வேளாண்மைப் பெருமக்கள் ஆடு, மாடு மேய்ப்பதற்கு அப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இதில் ஒரு சிலர் பயபக்தியுடன் சிறுபிள்ளைகளிடம் பழகுவது போல் தொடர்பு கொண்டு, தாங்கள் எடுத்துச் சென்ற ஆகாரத்தைக் கொடுத்து, ஊட்டிவிட்டுப் பழக்கி அரைகுறையாக உபதேசித்து, ஏதோ இவ்வூருக்கு அவர்கள் கூப்பிட்டால் வரக்கூடிய அளவிற்கு ஒரு தொடர்பை உண்டு பண்ணிவிட்டார்கள். அவ்வாறே அழைத்தும் வந்தனர்.

இவ்வாறிருக்கும் சமயத்தில் சுவாமிகள் சிலகாலம் கோனூரிலும், சில தினங்கள் வெல்லம்பட்டியிலும் திரிந்துள்ளார்கள் இதைக் கண்ணுற்ற கசவைப் பெரியோர்கள், சுவாமியை ஊருக்கே அழைத்து வந்துவிட்டார்கள். ஊருக்கு அழைத்து வந்து, நீராடச் செய்து அவருக்கு ஆடை அணிவித்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அதை சுவாமியவர்கள் கந்தல் கந்தலாக கிழித்து எறிந்துள்ளார்கள். இவ்வாறு பலமுறை செய்தும் பலனளிக்காமல் போகவே, அவரைப் பிறவிக்கோலத்துடனேயே விட்டுவிட்டனர். சுவாமியவர்கள் பிறவிக்கோலத்துடன் இருப்பது கண்டு மக்கள் கூச்சமோ, அருவருப்போ அடைந்தது கிடையாது, மாறாகத் தெய்வப் பிறவியாக அவதார புருஷராக ஏற்கத் தொடங்கினார்.
அடிக்கடி வேறு ஊர்களுக்குச் சென்று விடுவார்கள். பிறகு ஊர்க்காரர்கள் சென்று அழைத்து வருவார்கள். அவ்வாறு சென்றவிடங்களில் ஈனர்களால் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். ஆனால் யார் அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். இத் தெய்வக் குழந்தையை, ஆம் அப்படித்தான் கசவை மக்கள் அவரைக் கருதி நிலையாக கசவனம்பட்டியிலே இருக்குமாறு செய்தனர். யாரேனும் ஒருவர் அவர் கூடவே இருந்து காவல் காத்தனர்.
பகலில் சுவாமிகள் ஊரின் நாலாபுறங்களிலும் திரிவார். குறிபாக அருள்மிகு சிவசக்தி கோயில், மாலா கோயில், பூங்காணியம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் இருப்பார். சிறு குச்சிகளால் தரையில் கிறுக்கிக்கொண்டே இருப்பார். பகலிலும் இரவிலும் பெரும்பாலும் முத்தாலம்மன் கோயிலில் அமர்ந்திருப்பார். இரவில் முத்தாலம்மன் கோயிலின் மூலஸ்தானத்தில் பள்ளிகொள்வது வழக்கம். அதற்காக ஒரு கட்டிலும் விரிப்பும் போட்டுவைத்துவிடுவர். அவ்வாறு சுவாமிகள் பயன்படுத்திய கட்டில் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



சுவாமியவர்கள் ஊரில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் விளையாடித்திரியும் குழந்தையைப் போல போவார்கள். வருவார்கள். இது நல்ல வீடு, கெட்ட வீடு என்ற பாகுபாடு கிடையாது. அவரவருக்குத் தகுந்தவாறு கூழைக்கலக்கி, சிறிது வெங்காயம், இரண்டு மிளகாய் போன்றவை கொடுத்தால் சுவாமியவர்கள் அதை வாங்கி அன்புடன் குடிப்பதை நாங்கள் கண்குளிரக் கண்டதுண்டு. அதே நேரத்தில் (பெரும் பணக்காரர்கள் அனைத்து வகை உயர்பதார்த்தங்களை வைத்துக் கொண்டு சுவாமிகளைப் பின் தொடர்ந்து சென்று படைத்தாலும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்). பக்தர்கள் கொண்டு வரும் உயர்வகைப் பதார்த்தங்களை சுவாமிகள் விரும்பிச் சாப்பிட்டதில்லை. மாறாக அரிசி, கீரை, உணவுகளை சிறிது எடுத்துக் கொள்வார்கள். பக்தர்களால் அன்புடன் கொடுக்கப்படும், டீ, காபி, பால் போன்ற பானங்களை மருந்து குடிப்பது போல் குடிப்பார்கள். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்காமல், மடக்மடக்கென்று வேகமாகக் குடித்து விடுவார்கள். சிறிது மிச்சம் வைத்து வைத்து விடுவார்கள். அதை பக்தர்கள் பிரசாதமாக புகைப்பார்கள். சிகரெட்டை மட்டும் வேண்டாமென்று கூறியது கிடையாது. சுவையான பதார்த்தங்கள் எதையும் விரும்பிச் சாப்பிடாத சுவாமிகள், சிகரெட்டில் மட்டும் அவ்வளவு பியும் காட்டியது ஏன்? இதில் ஒர் ஆழ்ந்த உட்கருத்து உள்ளது. உடல்நலத்திற்குத் தீங்கிழைக்கக் கூடிய இதை அனைத்தும் அறிந்த நமது சுவாமிகள் நன்கு அறிந்தவர்கள்தான். இருப்பினும் பிறர் கொடுத்த சிகரெட்டுகளைப் புகைத்ததன் மூலம், அவர்களுடைய பாவங்களையும், துன்பங்களையும் பாவங்களை தான் ஏற்றுக் கொண்டு அருள்புவதற்காகவே அவ்வாறு செய்தார்கள் என்பது தெளிவு. எப்படி தெளிவு. எப்படி உலக மக்களுக்காக, உலக மக்களின் பாவங்களை ஏற்றுத் தேவகுமாரன் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரரோ, எப்படி ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்குத் தீட்சை வழங்கி அவர்கள் செய்த பாவங்களை ஏற்று அவர்களைக் காத்தாரோ, அதைப்பபோலவே இந்த ஞானியும் எந்த ஒரு பக்தன் சிகரெட் கொடுத்தாலும் வேண்டாம் என்றும் கூறாமல், அதை ஏற்றுப் புகைத்து அப்பக்தனுடைய பாவங்களைத் தான் ஏற்று அப்பக்தனுக்கு அருள்புந்தார்கள்.
சில சமயங்களில் அவர்கள் பாஷையில் முணுமுணுத்துக் கொண்டிருப்பார். பக்தர்கள் கொண்டுவரும் அன்ன ஆகாரத்தைச் சிறது எடுத்துக் கொண்டு பின்பு அவர்கள் கொடுக்கும் சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டால், குடித்துக் கொண்டே, உட்கார்ந்திருக்குமிடத்தில் குச்சிளைப் பொறுக்கிக் கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். சாதாரணமானவனுக்கு என்னடா தரையில் கிறுக்கிக் கொண்டே இருக்கின்றார். என நினைக்கத் தோன்றும். ஆனால் அவ்வாறு எழுதுவது அன்று வந்துள்ள பக்தனின் தலையெழுத்தை மாற்றத்தான், சுவாமியவர்கள் அவ்வாறு கிறுக்கி அந்தக் குச்சிகளை அந்தந்த பக்தர்களுக்குச் சிற்சில சமயங்களில் வழங்குவதுண்டு.

இயற்கை அன்னை தன்னைப்படைத்த வண்ணமே காட்சி அளித்த சுவாமிகள் பார்வைக்கு ஒர் ஏழை விவசாயி போல் காணப்பட்டார்கள். ஊர் மக்களும், வரும் பக்தர்களும் அவருக்கு நெற்றி மற்றும் உடல் முழுவதும் திருநீறு பூசி, சந்தனமிட்டு, குங்குமமிட்டு விபூதியை பக்தர்கள் விரலால் எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வார்கள். போவோர், வருவோர் எல்லோரும் அவர்களின் காலைத் தொட்டு வணங்கிச் செல்வது வழக்கம். சுவாமிகள் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்கள் ஏதோ ஆகாயத்தைப் பார்ப்பது போன்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக இந்த ஞானி எவடமும் பேசியது கிடையாது இருப்பினும் சுவாமியவர்களைக் காண வரும் பக்தர்கள் எந்த மொழியில் பேசினாலும், உம் போயிட்டு வா, போ, நடக்கும் என்று ஒரிரு வார்த்தைகள் அந்தந்த மொழியில் பதில் கூறி அனுப்புவார்கள். அதைக் கண்டு வியப்புற்றோர் ஏராளம். எந்நேரமும் யாருக்கும் புலப்படாத பாஷையில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்.

சுவாமிகளுக்குச் சிற்சில நேரங்களில் கோபம் வருவதுண்டு. ஆனால் அது வெறும் தோற்றமே. அவரை நாடி வந்த பக்தர்களுக்குச் சில உண்மைகளை உணர்த்தும் பொருட்டும், அவர்களைத் திருத்தும் பொருட்டும் கோபத்தைக் காட்டுவார்கள் . அஃது அவர்களுக்குப் புரிவதற்குத் தகுந்த பக்குவமில்லாமல் காலம் கடந்து புரிந்தவர்களும் உண்டு. உடனே புரிந்து அவர் மகிமையை உணர்ந்தவர்களும் உண்டு.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் சுவாமிகள் ஒரு வினோதமான முறையைக் கையாண்டார்கள். கையை உயாத்தியோ அல்லது தலையைத் தொட்டோ அவர்கள் ஆசிவழங்கியதில்லை. அருள் புரிந்ததில்லை. கையால் அறைந்தும், காலால் உதைத்தும், அடிப்பது போல் அணைத்தும், வெறுப்பது போல் காட்டி அன்பு செலுத்தியும் திட்டுவது போல் திட்டி ஆசீர்வதித்தும் அருள்புந்தார்கள். சுவாமிகளிடம் அடியும், உதையும் பெற்றவாகள் அவற்றின் உட்பொருளை அப்போது உணர்ந்தார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் பிற்காலத்தில் அவற்றால் பெரும்பேறு பெற்றதாக உணர்ந்தார்கள்.

சுவாமிகளுடைய திருமேனி எக்காலத்திலும் பெரும்பிணி எதுவாலும் பீடிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஒரு போதும் மருந்துகள் உட்கொண்டது இல்லை. ஒரு சமயம் ஒரு வெறிநாயால் கடிக்கப்பட்ட போது கூட வைத்தியம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்கள். இருப்பினும் அந்தக்காயம் ஒருநாட்களில் தானாகவே குணமடைந்துவிட்டது. பல பெரிய மகான்களுடைய உடல்களெல்லாம் தங்கள் அடியார்களுக்கும், சீடர்களுக்கும் அருள்புந்த காலத்தில் அவர்களுடைய பாவங்களை ஏற்றதனால் அம்மகான்களுடைய உடல்கள் துன்புற்றதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் அனைத்தையும் பஸ்பமாக்கும் பிரம்மாக்கினியாய் விளங்கிய நமது சுவாமிகளின் திருமேனியை எந்தவொரு பாவமோ, தோஷமே தீண்டமுடியவில்லை.

எல்லையற்ற பரம்பொருளின ஈடு இணையற்ற வெளிப்பாடாகவும், நம்பிக்கைக்கும், பலத்திற்கும் கலங்கரை விளக்காகவும், அருளுக்கும், கருணைக்கும் ஊற்றாகவும், அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் வடிவாகவும் எழுந்தருளியிருந்த இந்த மகாபுருஷர் தன்னுடைய மானிட லீலையை முடித்துக் கொண்டு துந்துபி வருடம், ஐப்பசி மாதம் 5 ஆம் நாள் (22.10.1982) வெள்ளிக்கிழமை மூல நட்சத்திரத்தில், அதிகாலையில் தனது பரிபூரண பிரம்ம நிலைக்கு மீண்டார்கள்.

சுவாமியவர்கள் மகாசமாதி அடைந்து மறுநாள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தனது ஆன்ம ஒளியை உடலிலிருந்து பிரிக்காமலேயே பிரகாசித்திருந்தார்கள். மறுநாள் ஐப்பசி மாதம் ஆறாம் நாள் (23-10-1982) சனிக்கிழமை சமாதி வைக்கும் நேரத்தில் அதுவரை வெளிர்ந்திருந்த வெண்மேகக் கூட்டங்கள், சுருண்டு திரண்டு, அந்தக் குறிப்பிட்ட எல்லையில் மட்டும் முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்தது போல், கனமழை பெய்தது.

அந்த நெடுமாலின் வாகனம் (கருடன்) மும்முறை வட்டமிட்டு வலம் வர, ஆன்ம ஜோதி அருள் ஜோதியாகப் பக்தர்களுக்குப் பிரகாசிக்க, சுவாமியவர்களின் திருமேனி, சுவாமிகளுக்காக அமைக்கப்பட்ட குகைக்கோயிலில் முறைப்படி வைக்கப்பட்டு, வேத முறைப்படி சகல அபிஷேங்களும் செய்யப்பட்டு, கற்பூரம், விபூதி, சந்தனம், பன்னீர் ஜவ்வாது மற்றுமுள்ள வாசனைத் திரவியங்களால் நிறைவு செய்யப்பட்டது.
கசவனம்பட்டி போகும் வழி
-----------------------------------------------
சென்னை அல்லது எந்த ஊரிலிருந்தும்:
முதலில் திண்டுக்கல் செல்லுங்கள். கன்னிவாடி அருகில் இருக்கும் கசவனம்பட்டிக்கு திண்டுக்கல்லிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. ஆட்டோவிலும் செல்லலாம்.
https://www.kasavanam-siddhar.org/
I.Anandan (Trustee). H/P 9787618855 / 9486502714
Sri Jyothi Mouna Nirvana Swamigal Trust
Kasavanampatti-Post
Via-Kannivadi
Dindigul-District
Tamil Nadu - 624705
Phone: 0451-25 55445
or
J.Rajasegharan H/P: +91-9443107357


thank:Karthi Keyan [ FB]

Wednesday, October 29, 2014

Be still..[ Summa Iru ]


He saw his plight wasn't laudable at all,
As he had invited it all upon himself,
Disregarding the delicate laws of life,
He plunged himself into the game of dice,
You see, seldom a vice comes alone,
Along with it, comes many to give company,
So did many vices, including inordinate fornication,
Became an unabashed part of Him,
He spent gold and whatever He had on these two,
Making him lose control of his life day by day,
A point in time came, when He had no gold or girl to play with,
That's when out of sheer desperation, he began to steal it,
Such a miserable plight he had got on himself,
That his Sister from another Mother couldn't see his plight,
She did the unimaginable and offered Herself to Him,
It was the greatest blow to Him in all terms,
Tears were running on Her face, yet He couldn't dare see it,
His eyes were downcast and his body was shivering like a cast off leaf,
He was ashamed from within and wanted to repent for his misdeeds,
Arunagiri, as he was called, left home and ran towards the temple nearby,
He climbed the gigantic central citadel tower of the temple,
In an attempt to throw himself to death as a compensation,
They say, even an instant of deep repentance, sins of the past,
Will be burned to nothingness, just like a spark is enough,
To reduce bales of cotton into soot,
He flung himself from the top citadel and came crashing down,
But in his wildest dreams did he realize that someone was waiting,
Just to hold him from falling no more and to make him rise high,
Lord Skanda, the son of Shiva, caught hold of him just in the nick of time,
Arunagiri couldn't believe his eyes, to see the Siddhaguru in front of Him,
He bowed down to the resplendent being a thousand or more times,
With tears of repentance flowing down his eyes,
He began to recount his tales of past horror to the Lord,
The Lord simply smiled and sternly said, "Summa Iru!"
Which loosely means "Be still!",
With that there was a sudden transformation in the spirit of Arunagiri,
He became still as the Mount Kailasa and deep as the Ksheerasagara,
No matter what transpired before, He knew it was forgiven now,
And a new life was about to be unfolded before Him,
Where no longer He will be gambling with girls or gold,
But He was to be the Chosen One, to play a game of the Soul...



His Father taught the highest wisdom all so silently,
So much so that no one except a few,
Understood the essence of His silence fully,
The rest of the world still groped in darkness,
When the Son decided to be of some help gracefully,
Skanda, the beloved son of Lord Shiva,
Took the silent wisdom of Dakshinamurthy Shiva,
And transformed it all into a comprehensible one,
Which could be understood by a Scholar and a layman alike,
From his mouth was born the language of Tamil,
And it's inexhaustible supply of ageless wisdom,
To that Muruga, who made silence, sound audible,
I bow down in gratitude...

~ Whenever I feel down or out, and know not what to do, a simple whisper of "Summa Iru" inside my head and heart, sets all things alright. Nothing more than this is required, to bring perspective back on track.

Thank My friend : Srinath Raghavan

Tuesday, October 21, 2014

Kedhara Gowri vradham book pdf

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம் ..




                Kedhareshvara Vratam



கேதார கௌரி நோன்பு விரத மகிமை

“முனிவர்களே! இப்போது சர்வ கல்யாணங்களுக்கும் காரணமான கேதார விரதத்தின் மகிமைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்தக் கேதார விரதமானது, புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அஷ்டமியில் ஆரம்பித்து, இருபத்தியோரு நாட்கள் முடியும் வரையிலும் முறைப்படி அனுஷ்டிக வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தின் முடிவு தினத்திலும், முறைப்படி அனுஷ்டித்து நியமத்துடன் உணவு உட்கொள்ள வேண்டும். எவனொருவன் சகல மனோ விருப்பங்களையும் அடையக்கூடிய இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறானோ, அவன் இந்த உலகத்தில் சகலவிதமான போகங்களையு அனுபவித்துவிட்டு, முடிவில் மோக்ஷத்தையும் அடைவான்.
முன்பொரு சமயம் ஸ்ரீகௌரிதேவி இந்த விரதத்தை அனுஷ்டித்து, அதன் மகிமையால் சிவபெருமானின் பாதி உடலைப்பெற்று மகிழ்ந்தாள். திருமாலும் அவ்வாறே வைகுண்டத்திற்கு அதிபதியாக விளங்கினார். பிரும்மதேவனும் அதன் பயனாகவே அன்னத்தை வாகனமாக அடைந்தார். அஷ்டதிக்குப் பாலகர்களும் இந்த விரதத்தை அனுஷ்டித்து அந்த வினாடியிலேயே பிரும்ம தேவனுடைய சாபத்திலிருந்தும் விடுதலை பெற்றார்கள். இதேபோன்று முன்பொரு பாக்கியவதி, புண்ணியவதி என்னும் பெண்மணிகள் இருவர், இந்த விரதத்தை அனுஷ்டித்ததின் பயனாக அளவற்ற ஐஸ்வரியங்களை அடைந்து மகிழ்ந்தார்கள். நற்குணம் வாய்ந்த பிராமணச் சிரேஷ்டர் ஒருவர் உமாபதியின் பிரியத்திற்குப் பாத்திரமான இந்த விரதத்தை அனுஷ்டித்து ஒப்பற்றவர்களான நூறு புத்திரர்களைப் பெற்றெடுத்தார். அப்பிள்ளைகளையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கச் செய்த அவர், நீண்ட காலம் அவர்களோடு சேர்ந்து பலவிதமான போகங்களையும் அனுபவித்துவிட்டு, முடிவில் சிவலோகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் பெற்றார். இதுபோலவே கௌரிநாதருக்கு பிரீத்தியளிக்கக் கூடிய இந்த விரதத்தை அனுஷ்டித்து மோக்ஷமடைந்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆகையால் இந்தச் சிறப்பு வாய்ந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ, அல்லது கேட்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் பல போக பாக்கியங்களையும் அனுபவித்துவிட்டு முடிவில் ஈடு இணையற்ற மோக்ஷத்தையும் அடைவார்கள்”. இவ்வாறு தவ சீலரான சூதமாமுனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு கூறினார்.
            - ஸ்ரீகந்த புராணம்; உபதேச காண்டம்.
https://www.shaivam.org/siddhanta/feskedhara-vrata-mahimai-tam.htm




கேதாரநோன்பு விரத பூஜை

விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)
 
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே  
 கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|  
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே  
 ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||  
 
 அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி  
 மஹா கணபதிம் ஆவாஹயாமி 
 
    மஹாகணாதிபதயே  ஆஸநம்     ஸமர்ப்பயாமி  
 " " அர்க்யம்    " 
 " " பாத்யம்    " 
 " " ஆசமநீயம்    "  
 " " ஔபசாரிகஸ்நாநம்  "  
 " " ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் "  
 " " வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந்  "  
 " " யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் "  
 " " கந்தாந் தாரயாமி   "  
 " " கந்தஸ்யோபரி அக்ஷதாந்  "  
 " " அலங்கரணார்த்தம் அக்ஷதாந் "  
 " " ஹரித்ரா குங்குமம்  "  
 
    புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.) 
 
 ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம: 
  "   ஏகதந்தாய நம:  "   கணாத்யக்ஷாய நம:  
  "   கபிலாய நம:  "   பாலசந்த்ராய நம:  
  "   கஜகர்ணகாய நம:  "   கஜாநநாய நம:  
  "   லம்போதராய நம:   "   வக்ரதுண்டாய நம:  
  "   விகடாய நம:  "   ச்சூர்ப்ப கர்னாய நம:  
  "   விக்நராஜாய நம:  "   ஹேரம்பாய நம:  
  "   கணாதிபாய நம:  "   ஸ்கந்த பூர்வஜாய நம:  
 
    ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. 
 
  தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. 
 (வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.) 
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.
 
 ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே  
 குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி. 
 மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்) 
 
 அம்ருதாபிதாநமஸி - உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்  
 எடுத்து விடவும்)  
 
 தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)  
 (கற்பூரம் ஏற்ற வேண்டும்.) 
 நீராஜநம் ஸமர்ப்பயாமி. 
 நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)  

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப | அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்) கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)
ப்ராணாயாமம் :
ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூப்ர்புவஸ்ஸுவரோம்.  
ஸங்கல்பம் : 
அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.
விக்நேஸ்வர உத்யாபநம் :
உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு, "விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச" என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே || ப்ராணாயாமம் : ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாபோ: - ஜ்யோதீ ரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்--சுபே சோபநே முஹூர்த்தே--ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே--ச்வேத வராஹ கல்பே--வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே--ப்ரதமே பாதே--ஜம்பூ த்வீபே--பாரத வர்ஷே--பரத கண்டே--மேரோ; தக்ஷிணே பார்ச்வே--சகாப்தே--அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே--ப்ரபவாதி ஷஷ்டிஸம்வத்ஸராணாம் மத்யே. . . . நாம ஸம்வத்ஸரே ருதௌ மஸே பக்ஷேசுபதிதௌ. . . . வாஸரயுக்தாயாம். . . . நக்ஷத்ர. . . . யுக்தாயாம் ச ஏவங்குணவிசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம். . . . சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பாநாம் க்ஷேமஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்யைச்வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷசதுர்வித பல புருஷார்த்த ஸித்த்யர்த்தம், புத்ரபௌத்ராபி வ்ருத்த்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்த்யர்த்தம் மநோவாஞ்சா பல ஸித்த்யர்த்தம் கேதாரேச்வர வ்ரத பூஜாம் கரிஷ்யே. | என்று ஸங்கல்பம் செய்க.
விக்நேச்வர உத்யாபநம் :
விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (என்று கூறி மஞ்சள் பிள்ளையார்மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து வடக்காக நகர்த்த வேண்டும்.)

கலச பூஜை :

(சந்தநம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு) கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : | மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: || குக்ஷெள து ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா | ருக்வேதோ ஸ்த யஜுர்வேத: ஸாமவேதோப்யதர்வண : || அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : | ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா: || கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி | நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு || (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், ஸ்வாமியையும் தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.) சுலம் டமருகம் சைவ ததாநம் ஹஸ்த யுக்மகே | கேதாரதே தேவ மீசாநம் த்யாயேத் த்ரிபுர காதிநம் || கேதாரேச்வரம் த்யாயாமி கைலாஸ சிகரே ரம்யோ பார்வத்யா ஸஹித ப்ரபோ | ஆகச்ச தேவ தேவேச மத்பக்த்யா சந்த்ர சேகர் || கேதாரேச்வரம் ஆவாஹயாமி ஸுராஸுர ச்ரோரத்ந ப்ரதீபித பதாம்புஜ | கேதார தேவ மத்தத்த மாஸநம் ப்ரதிக்ருஹ்யதாம் || கேதாரேச்வராய ஆஸநம் ஸமர்ப்பயாமி. கங்காதர நமஸ்தேஸ்து த்ரிலோசந வ்ருஷத்வஜ | மௌக்திகாஸந ஸம்ஸ்த்தாய கேதாராய நமோநம: || கேதாரேச்வராய பாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மயேச்வர | ப்ரயச்ச மே பகவந் க்ருஹாணாசமநம் விபோ || கேதாரேச்வராய அர்க்யம் ஸமர்ப்ப்யாமி. முநிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ | கேதார தேவ் பகவந் க்ருஹாணாசமநம் விபோ || கேதாரேச்வராய ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. கேதாரதேவ பகவந் ஸர்வலோகேச்வரப்ரபோ | மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் சுபங்கர || கேதாரேச்வராய மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி. ஸ்நாநம் பஞ்சாம்ருதைர் தேவ ச்ரிதம் சுத்தோதகைரபி | க்ருஹாண கௌரீ ரமண த்வத்பக்தேந மயார்ப்பிதம் || கேதாரேச்வராய பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி. நதீஜலம் ஸமாயுக்தம் மயா தத்த மநுத்தமம் | ஸ்நாநம் ஸ்வீகுரு தேவேச ஸதாசிவ நமோஸ்து தே || கேதாரேச்வராய சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரயுக்மம் ஸதா சுப்ரம் மநோஹரமிதம் சுபம் | ததாமி தேவதேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம் || கேதாரேச்வராய வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி. ஸ்வர்ண யஜ்ஞோபவீதம் சகாஞ்சநம் சோத்தரீயகம் | ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ || கேதாரேச்வராய யஜ்ஞோபவீதோத்தரீயே ஸமர்ப்பயாமி. ஸமஸ்த கந்தத்ரவ் பாணாம் தேவ த்வமஸி ஜந்மபூ: | பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம் || கேதாரேச்வராய கந்தாந் தாரயாமி. அக்ஷதோபி ஸ்வபாவேந பக்தாநா மக்ஷதம் பதம் | ததாஸி நாத மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவாந் || கேதாரேச்வராய அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கல்பவ்ருக்ஷ ப்ரஸூநைஸ்த்வ மப்யர்ச்சிதபத; ஸுரை: | குங்குமை: பார்த்திவைரேபி: இதாநீ மர்ச்யதே மயா || கேதாரேச்வராய புஷ்பை: பூஜயாமி.
இந்த்ராதி அஷ்டதிக்பாலக பூஜை
(ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷை சேர்க்கவும்) 1. இந்திரன்: (கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ரபரிவார ஸமேதம் இந்த்ரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 2. அக்நி: (தென்கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் அக்நிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 3. யமன்: (தெற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவாரஸமேதம் யமம் திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி. 4. நிருருதி: (தென்மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம் ஸசக்திம், பத்நீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம், திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி. 5. வருணன்: (மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வருணம் திபாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 6. வாயு: (வடமேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வாயும் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 7. குபேரன்: (வடக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 8. ஈசாநன்: (வடகிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் ஈசாநம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:, ரத்நஸிம்ஹாஸநம் ஸமர்ப்ப்யாமி. பாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் ஸமர்ப்பயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ஸ்நாபயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. புஷ்பாணி ஸமர்ப்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்சயாமி. மஹாநைவேத்யம் நிவேதயாமி. தாம்பூலம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து. பிறகு சிவபெருமானுக்குத் தெற்கில் 'ப்ரஹ்மணே நம:' என்று பிரம்மாவையும், வடக்கில் 'விஷ்ணவே நம:' என்று விஷ்ணுவையும், நடுவில் 'கேதாரேச்வராய நம:' என்று கேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு தியானிக்கவும்.

|| அங்க பூஜா ||

மஹேச்வராய நம: பாதௌ பூஜயாமி ஈச்வராய நம: ஜங்கே " காம ரூபாய நம: ஜாநுநீ " ஹராய நம: ஊரு " த்ரிபுராந்தகாய நம: குஹ்யம் " பவாய நம: கடிம் " கங்காதராய நம: நாபிம் " மஹாதேவாய நம: உதரம் " பசுபதயே நம: ஹ்ருதயம் " பிநாகிநே நம: ஹஸ்தாந் " சிவாய நம: புஜௌ " சிதிகண்ட்டாய நம: கண்ட்டம் " விரூபாக்ஷாய நம: முகம் " த்ரிநேத்ராய நம: நேத்ராணி " ருத்ராய நம: லலாடம் " சர்வாய நம: சிர: " சந்த்ர மௌளயே நம: மௌளிம் " பசுபதயே நம: ஸர்வான்யங்காநி " (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)
|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||
ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம: " சம்பவே நம: " பிநாகிநே நம: " சசிசேகராய நம: " வாமதேவாய நம: " விரூபாக்ஷாய நம: " கபர்திநே நம: " நீலலோஹிதாய நம: " சங்கராய நம்: (10) " சூலபாணயே நம: " கட்வாங்கிநே நம: " விஷ்ணுவல்லபாய நம: " சிபிவிஷ்டாய நம: " அம்பிகாநாதாய நம: " ஸ்ரீ கண்ட்டாய நம: " பக்தவத்ஸலாய நம: " பவாய நம: " சர்வாய நம: " த்ரிலோகேசாய நம: (20) " சிதிகண்ட்டாய நம: " சிவப்ரியாய நம: " உக்ராய நம: " கபர்திநே நம: " காமாரயே நம: " அந்தகாஸுரஸூதநாய நம: " கங்காதராய நம: " லலாடாக்ஷாய நம: " காலகாலாய நம: " க்ருபாநிதிதயே நம : (30) " பீமாய நம: " பரசுஹஸ்தாய நம: " ம்ருக பாணயே நம: " ஜடாதராய நம: " கைலாஸ வாஸிநே நம: " கவசிநே நம: " கடோராய நம: " த்ரிபுராந்தகாய நம: " வ்ருஷாங்காய நம: " வ்ருஷபாரூடாய நம்: (40) " பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: " ஸாமப்ரியாய நம: " ஸ்வரமயாய நம: " த்ரயீமூர்த்தயே நம: " அநீச்வராய நம: " ஸர்வஜ்ஞாய நம: " பரமாத்மநே நம: " ஸோமஸூர்யாக்நி லோசநாய நம: " ஹவிஷே நம: " யஜ்ஞமயாய நம: (50) " ஸோமாய நம: " பஞ்சவக்த்ராய நம: " ஸதாசிவாய நம: " விச்வேச்வராய நம: " வீரபத்ராய நம: " கணநாதாய நம: " ப்ரஜாபதயே நம: " ஹிரண்யரேதஸே நம: " துர்தர்ஷாய நம: " கிரீசாய நம: (60) " கிரிசாய நம: " அநகாய நம: " புஜங்கபூஷ்ணாய நம: " பர்காய நம: " கிரிதந்வநே நம: " கிரிப்ரியாய நம: " க்ருத்திவாஸஸே நம: " புராராதயே நம: " பகவதே நம: " ப்ரமதாதிபாய நம: (70) " ம்ருத்யுஞ்ஜயாய நம: " ஸூக்ஷமதநவே நம: " ஜகத்வ்யாபிநே நம: " ஜதக்குரவே நம: " வ்யோமகேசாய நம: " மஹாஸேநஜநகாய நம: " சாருவிக்ரமாய நம: " ருத்ராய நம: " பூதபதயே நம: " ஸ்த்தாணவே நம: (80) " அஹிர்புத்ந்யாய நம: " திகம்பராய நம: " அஷ்டமூர்தயே நம: " அநேகாத்மநே நம: " ஸாத்விகாய நம: " சுத்தவிக்ரஹாய நம: " சாச்வதாய நம: " கண்டபரசவே நம: " அஜாய நம: " பாசவிமோசகாய நம: (90) " ம்ருடாய நம: " பசுபதயே நம: " தேவாய நம: " மஹாதேவாய நம: " அவ்யயாய நம: " ஹரயே நம: " பூஷதந்தபிதே நம: " அவ்யக்ராய நம: " தக்ஷாத்வரஹராய நம: " ஹராய நம: (100) " பகநேத்ரபிதே நம: " அவ்யக்தாய நம: " ஸஹஸ்ராக்ஷாய நம: " ஸஹஸ்ரபதே நம: " அபவர்கப்ரதாய நம: " அநந்தாய நம: " தாரகாய நம: " பரமேச்வராய நம: (108) ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி || என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

தோரக்ரந்தி பூஜை :

சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி வாஹாய நம: த்விதீயக்ரந்திம் " மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் " வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் " கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் " ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் " பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் " பீமாய நம: அஷ்டமக்ரந்திம் " த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் " நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் " ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் " ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் " பவாய நம: த்ரயோதசக்ரந்திம் " சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் " சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் " ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் " ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் " உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் " ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் " நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் " கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் " கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி. தசாங்க தூபமுக்யச்ச அங்கார விநிவேசித: | தூபஸ் ஸுகந்தை ருத்பந்ந: த்வாம் ப்ரீணயது சங்கர || கேதாரேச்வராய நம: தூபமாக்ராபயாமி. யோகிநாம் ஹ்ருதயேஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி | பாஹ்யதீபோ மயாதத்த: க்ருஹ்யதாம் பக்த கௌரவாத் || கேதாரேச்வராய தீபம் தர்சயாமி. த்ரைலோக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி: | நைவேத்யம் பக்தவாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ர்யம்பக த்வயா || கேதாரேச்வராய மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி. நித்யாநந்த ஸ்வரூபஸ்த்வம் யோகிஹ்ருத்கமலேஸ் தித: | கௌரீச பக்த்யா மத்தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் || கேதாரேச்வராய தாம்பூலம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மஹேச்வர | ப்ரயச்ச மே மநஸ்துஷ்டிம் பக்தாநா மிஷ்டதாயக || கேதாரேச்வராய அர்க்யம் ஸமர்ப்பயாமி. தேவேச சந்த்ர ஸங்காசம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம் | பக்த்யா தாஸ்யாமி கர்ப்பூர நீராஜநமிதம் சிவ || கேதாரேச்வராய கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி. பூதேச புவநாதீச ஸர்வதேவாதி பூஜித | ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு || கேதாரேச்வராய ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி. ஹர சம்போ மஹாதேவ விச்வேசாமர வல்லப | சிவ சங்கர ஸர்வாத்மந் நீலகண்ட நமோஸ்து தே || கேதாரேச்வராய நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
ப்ரார்த்தனை :
அபீஷ்டஸித்திம் குரு மே சிவாவ்யய மஹேச்வர | பக்தாநா மிஷ்டதாநார்த்தம் மூர்த்தீக்ருத களேபர || கேதார தேவ தேவேச பகவந் அம்பிகாபதே | ஏகவிம்சத்திநே தஸ்மிந் ஸூத்ரம் க்ருஹ்ணாம்யஹம் ப்ரபோ ||

தோரத்தை எடுத்து அணிதல் :

ஆயுச்ச வித்யாம்ச ததா ஸுகம் ச ஸௌபாக்ய ம்ருத்திம் குரு தேவ தேவ | ஸம்ஸார கோராம்புநிதௌ நிமக்நம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே ||
வாயந தானம் :
கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோ வை ததாதி ச | கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம: ||

ப்ரதிமா தானம் :

கேதாரப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸௌபாக்ய வர்த்திநீ | தஸ்மா தஸ்யா: ப்ரதாநேந மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா || தக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேசுவர பிரதிமையை அளித்து விடவும். யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தபோஹீநம் ஜநார்தரு | யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே || - கேதார விரத பூஜை முற்றும் -

"கேதார கௌரி விரதம்"


பதினாறு பேறுகள் தரும் கௌரி வடிவங்கள்

தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் "கேதார கௌரி விரதம்" அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது. 
அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.

ஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் "கெளரி என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).



ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.
 

01 ஸ்ரீ ஞான கௌரி

"உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே" என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்திதேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கௌரி என்று போற்றப்பட்டாள். சிவாலயங்களில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கௌரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும், எண்ணியது நிறைவேறும். விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.

02 ஸ்ரீ அமிர்த கௌரி

உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கௌரிக்கு அமிர்த கௌரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கௌரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி "அமிர்த கௌரி" என்று போற்றப்படுகிறாள்.

03 ஸ்ரீ சுமித்ரா கௌரி

இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு "சினேகவல்லி" என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் ஸ்ரீ சுமித்ரா கௌரி என்று போற்றுவர். இவளை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.

04 ஸ்ரீ சம்பத் கௌரி

வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை "சம்பத்" என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் ஸ்ரீ சம்பத் கௌரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கௌரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கௌரி உடனாய நந்தீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். மேலும், காசி ஸ்ரீ அன்ன பூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.

05 ஸ்ரீ யோக கௌரி

யோக வித்தைகளின் தலைவியாக ஸ்ரீ மகா கௌரி திகழ்கிறாள். இவளையே யோக கௌரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கௌரி எனப்படுகிறாள். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கௌரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கௌரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.
06 ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி

உறுதியான, ஆரோக்கியமான உடலை "வஜ்ரதேகம்" என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி என்று போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இந்த கௌரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். ("ச்ருங்கலம்" என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கௌரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள்புரியும் வடிவுடையம்மனே இந்த கௌரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும்.
 
07 ஸ்ரீ த்ரைலோக்ய மோகன கௌரி

மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவாலயத்தில் இந்த தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல் தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கௌரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக- மகிழ்வுடன் வாழ அருள்பவள்.

08 ஸ்ரீ சுயம்வர கௌரி

சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை- திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கௌரிஎன்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.

09 ஸ்ரீ கஜ கௌரி

காசி அன்னபூரணி ஆலயத்தில் ஸ்ரீ கஜ கௌரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அன்னையே கஜ கௌரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.

10 ஸ்ரீ விஜய கௌரி

நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் ஸ்ரீ விஜய கௌரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் - ஸ்ரீ வண்டார்குழலி ஆலயத்தில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்ட பின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கௌரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.

11 ஸ்ரீ சத்யவீர கௌரி

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; இந்த தேவியை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.

12 ஸ்ரீ வரதான கௌரி

வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் ஸ்ரீ வரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமி கூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.

13 ஸ்ரீ சுவர்ண கௌரி

ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகையே சுவர்ண கௌரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.

14 ஸ்ரீ சாம்ராஜ்ய மகாகௌரி

அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர் பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகௌரியாகப் போற்றப்படுகிறாள்.

15 ஸ்ரீ அசோக கௌரி

துன்பமற்ற வாழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம் பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கௌரியாவாள் மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கௌரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.

16 ஸ்ரீ விஸ்வபுஜா மகாகௌரி

தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கௌரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற்சொன்ன கௌரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.

"ஓம் ஸுபதாயை வித்மஹே 
காம மாலின்யை தீமஹி
தன்னோ கெளரீ ப்ரசோதயாத்"

அம்பிகையான கௌரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்


https://www.shaivam.org/siddhanta/feskedhar_puja_tam.htm

other link :
https://ta.wikipedia.org/
https://www.vallamai.com/?p=9587
https://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=18012
https://natarajar.blogspot.com/2010/11/blog-post.html



What is Gotra

How did the people thousands of years ago realize that genetically there was transference of some unique characteristics only from father to son (in the form of Y-chromosomes) ? In recent past when it was fashionable to condemn all Indian traditional systems as of no value, non-believers have referred to 'Gothra' as archaic, unscientific, irrelevant and male chauvinistic! The Scientifically proven factor DNA type test and assertions are more closer to the Gotra lineage matters. And to the Vedic line state nothing less than what your researchers & scientists speaking about! 


Modern DNA & genetic research has confirmed male line Y-chromosomal transference, through 8 generations in case of Thomas Jefferson. 'Gothra' in essence really stands for Y-chromosomal identity.

In the very recent, US President (& Author of Declaration of Independence of United States) Thomas Jefferson's paternity of his slave Sally Fleming's children has been in news. For nearly 200 years, since US president Thomas Jefferson's time, many traditionalists maintained that Jefferson did not cohabit with Sally. But some descendants of Sally maintained otherwise and claimed to be progeny of the ex-president. This old historical controversy has now been resolved using modern genetic DNA analysis methods (Source - Founding father by Eric S Lander & Joseph J Ellis and Foster et al, Nature [ Volume 396 - 5 November 19980] pages 14, 27 & 28).


The genetic DNA study of descendents of Jefferson family and Sally Fleming's family, has confirmed with very high probability that, US President Thomas Jefferson was indeed the father of at least one of the sons of Sally Fleming. How was this genetic work done? Geneticists used a scientific fact, that most of the male Y-chromosome is passed intact from father to son. Females do not carry the Y-chromosome. With modern advances in genetics, this fact has been used to trace paternal lineage, and resolve stories like Thomas Jefferson's.



Thomas Jefferson did not have surviving sons from his legal wife. But his paternal uncle's male lineage is in tact to present time.. The genetic Y-chromosome of these persons (eight generations down from Thomas Jefferson's paternal uncle) living at present time was used as the reference. This was compared with intact male line persons from (Five generations down from) Sally Fleming living presently. The geneticists used polymorph markers so that Y-chromosome can be distinguished by haplotypes. They found that Sally Fleming's son Eston's male line progeny had same haplotypes as Field Jefferson who was paternal uncle of Thomas Jefferson. Using other physical and living proximity factors, the geneticists have concluded with high probability that Eston Fleming was the son of Thomas Jefferson and Sally Fleming.

In the western countries, there are lots of research undertaken on the lineage and genealogy. But in India, there is no basis for equating genetics and race, other than specifying one's Gothram. And more interestingly, there is no female lineage taken into account! That is, if you are provided the geno-graphic profile of a random Indian, you would not be able to say to which caste or tribe that person belongs. Conversely, if you know the race of a person, you would not be able to say what genetic lineage that person will have. Race is a social phenomenon. Genetics is a biological phenomenon.
The Indian patrilineal pool is very diverse and cuts across castes and tribes. The Indian mitochondria DNA pool (female ancestry) falls into just four types, attesting to how closely related all Indians are to each other. Researchers suggest, that there is no link between language (Indo-European, Indo-Arabic and Dravidian) and genetic lineage.


Most of the genetic differences between people are superficial. However, geno-graphic profiles provide a way for us to understand our own origins and the migratory path of our ancestors (they may also be useful for understanding potential susceptibilities to certain diseases among people with different genetic lineages).



This class of human male lineage research is now very active and is being conducted in native populations of Wales, England, in Iceland and to establish uniqueness, paternity, historical lineage, medical issues and intellectual issues of heredity etc amongst various population groups. Does this not ring a bell amongst traditional Hindus who believe in 'Gothra' identification carried down from Sanathana-dharma orthodoxy?. 'Gothra' is an identity carried by male lineage in India from time immemorial. Most people have Gothra chain names traceable to Rig Vedic Rishis like 'Gowthama', 'Vasishta' 'Viswamithra' and to first sons of Vaivaswatha Manu like Angirasa & Bhrigu. Purana such as Vishnu Purana refer to individual identity through 'Gothra'. Listings of more than 250 Gothra chains have been explicitly listed. I have heard of instances of even Muslims converted from Hinduism still keeping track of their 'Gothra'.

In a classic example, I cite that Buddha, named Siddhartha was of 'Gowthama Gothra'.. It means that his Y-chromosomes were probably from Rig-Vedic Rishi 'Gowthama Rahoogana'.


Nearly 2500 years have passed since death of Lord Buddha, but many 'Gowthama Gothra' individuals exist even today. They can claim genetic relation to Buddha. Typically 4 generations occur in 100 years and in 2500 years nearly 100 generations are complete. Other 'Gothra' chains may have run 100-200 generations from Vedic period if male lineage did continue unbroken. Do Y-chromosomes remain intact after, say 100 generations of unbroken male issues? Genetic mutations may or may not have changed some Y-chromosomes. The Gotra lineage is the one aspect that is very interesting field of research for future to see if persons of same 'Gothra' in the present generations have common and unique Y-chromosomal features. Only deep study with dedicated research could bring about the truth, that Vedic Era findings are certainly more authentic and scientific one that our forefathers relied aptly.

In conclusion, considering the above, no doubt, the Gotra lineage and DNA roots, probably, are one and the same way to find out the Family tree from the roots!...

https://lalitashram.org/VedicNames.html

Wednesday, October 15, 2014

தேவியின் சக்தி பீடங்கள்


தெரிந்து  கொள்ள  வேண்டியவை  .  உமா பாலசுப்ர மணியன் 

தேவியின் அறுபத்துநான்கு சக்தி பீடங்கள்:

1 - மாத்ரு புரம் - ரேணுகா பீடம்.
2 - கொல்லாபுரம் - லஷ்மி பீடம்.
3 - துளஜாபுரம் - சப்தச்ருங்க பீடம்.
4 - இங்குளை - ஜுவாலாமுகீ பீடம்.
5 - ஸ்ரீ காசி - அன்னபூர்ணா பீடம்.
6 - ரக்த தந்த்ரிகை - விந்த்யாசல பீடம்.
7 - ரக்த தந்த்ரிகை - துர்கா பீடம்.
8 - சாகம்பரீ - ப்ராமீரி பீடம்.
9 - மதுரை - மீனாட்ஷி பீடம்.
10 - நேபாளம் - ரஷய காளீ பீடம்.
11 - ஸ்ரீ நகரம் - சாம்பு நகேச்வரி பீடம்.
12 - நிலபர்வதம் - நீலாம்பரி பீடம்.
13 - ஸ்ரீ சந்திரகலை - கௌசிகீ பீடம்.
14 - ஸ்ரீ காஞ்சி - காமாஷி பீடம்.
15 - வைத்ய நாதம் - ஜ்வாலா பீடம்.
16 - சைனா - நீலசரஸ்வதி பீடம்.
17 - வேதாரண்யம் - ஏகாம்பர பீடம்.
18 - வேதாரண்யம் - சுந்தரீ பீடம்.
19 - மஹாசலம் - யோகேஸ்வர பீடம்.
20 - ஹிதய பர்வதம் - மாதேவீ பீடம்.
21 - மணித்வீபம் - புவனேஸ்வரி பீடம்.
22 - மணித்வீபம் - திரிபுரபைரவி பீடம்.
23 - அமரேசம் - சண்டிகா பீடம்.
24 - ப்ரபாஸம் - புஷகரேஷணி பீடம்.
25 - புஷ்கரம் - காயத்ரீ பீடம்.
26 - நைமிமீசம் - தேவி பீடம்.
27 - புஷ்காராஷம் - புருகாதா பீடம்.
28 - ஆஷாடம் - ரதி பீடம்.
29 - பாரபூதி - பூதி பீடம்.
30 - கண்ட முண்டம் - தண்டினீ பீடம்.
31 - நாமுலம் - நாகுலேஸ்வரி பீடம்.
32 - ஸ்ரீகிரி - சாரதா பீடம்.
33 - பஞ்ச நகம் - திரிசூல பீடம்.
34 - ஹரிச் சந்திரம் - சந்திரா பீடம்.
35 - ஆமரதகேஸ்வரம் - ஸீஷ்மபீடம்.
36 - மஹாகாளாஸ்தி - சாங்கீரீ பீடம்.
37 - மத்யாபீதம் - சர்வாணி பீடம்.
38 - கயை - மங்கள பீடம்.
39 - கேதாரம் - மார்க்கதாயினீ பீடம்.
40 - பைரவம் - பைரவீ பீடம்.
41 - குருஷேத்ரம் - தர்ணுப்பிரியை பீடம்.
42 - விபினாகுலம் - ஸ்வாயம் பலி பீடம்.
43 - கணகளம் - உக்ர பீடம்.
44 - விமகேஸ்வரம் - விஸ்வேஸ பீடம்.
45 - ஹடாஹாசம் - மதாந்தக பீடம்.
46 - பீமம் - பீமபீடம்.
47 - வஸ்த்ரம்பதம் - பவானி பீடம்.
48 - அவமுக்தம் - விசாலாஷி பீடம்.
49 - அர்த்த கோடிகம் - ருத்ராணி பீடம்.
50 - அவழுக்தம் - வராஹி பீடம்.
51 - மஹாலயம் - மஹாபாகாபீடம்.
52 - கோகர்ணம் - பத்ரகாளீ பீடம்.
53 - பத்ரகர்ணீகம் - பத்ரா பீடம்.
54 - ஸ்தாணும் - ஸ்தாண்வீசாபீடம்.
55 - ஸ்வர்ணாஷம் - உத்பலாஷி பீடம்.
56 - கமலாலயம் - கமலா பீடம்.
57 - சகமண்டலம் - ப்ரசண்ட பீடம்.
58 - மகேடெம் - மகுடேஸ்வரி பீடம்.
59 - குரண்டலம் - த்ரிசந்திரகா பீடம்.
60 - மண்டலேசம் - சரண்டகா பீடம்.
61 - ஸ்தூலகேஸ்வரம் - ஸ்தூல பீடம்.
62 - சங்க கர்ணம் - தீவனி பீடம்.
63 - கரவஞ்சம் - காளி பீடம்.
64 - ஞானிகள் இதயம் - பரமேஸ்வரி பீடம்.


தேவியின் நூற்றெட்டு சக்தி பீடங்கள்:

1 - காசி ஷேத்திரத்தில் விசாலாஷி
2 - நைமிசாரண்யத்தில் லிங்க தாரணீ
3 - பிரயாகையில் லலிதை
4 - கந்தமாதனத்தில் காமுகீ
5 - மானசரஸில் குமுதா
6 - அதன் தென்திசையில் விசுவகாமா பகவதி
7 - அதன் வடதிசையில் விஸ்வகாமப்பூரணி
8 - கோமந்தகத்தில் கோமதி
9 - மந்தரத்தில் காமசாரிணீ
10 - சயித்திராதத்தில் மதோத்கடை
11 - அஸ்தினாபுரத்தில் ஜயந்தி
12 - கன்யாகுப்ஜத்தில் கௌரி
13 - மலையாசலத்தில் ரம்பை
14 - ஏகாம்பர பீடத்தில் கீர்த்திமதி
15 - விஸ்வத்தில் விஸ்வேஸ்வரி
16 - புஷ்பகரத்தில் புருஹீதை
17 - கேதார பீடத்தில் சன்மார்க்கதாயினி
18 - இமயமலையின் பின்புறத்தில் மந்தா தேவி
19 - கோகர்ணத்தில் பத்திரகர்ணிகா தேவி
20 - பவானியில் ஸ்தானேஸ்வரி
21 - வில்வ பத்திரிகையில் பில்வகை
22 - ஸ்ரீசைலத்தில் மாதவி
23 - பத்திரையில் பத்திரேஸ்வரி
24 - வராக மலையில் ஜயை
25 - கமலாலயத்தில் கமலை
26 - ருத்ரகோடியில் ருத்திராணி
27 - காலஞ்சரத்தில் காளி
28 - சாளக்கிராமத்தில் மகாதேவி
29 - சிவலிங்கத்தில் ஜலப்பிரபை
30 - மகாலிங்கத்தில் கபிலை
31- மாகோட்டத்தில் மகுடேஸ்வரி
32 - மாயாபுரியில் குமாரி
33 - சந்தானத்தில் லலிதாம்பிகை
34 - கயையில் மங்களாம்பிகை
35 - புருஷோத்தமத்தில் விமலை
36 - சகஸ்ராஷத்தில் உத்பலாட்சி
37 - இரணாஷத்தில் மகோத்பலை
38 - விபசாவில் அமோகாஷி
39 - புண்டரவர்த்தனத்தில் பாடலீ
40 - சுபாரு சுவத்தில் நாராயணி
41 - திரிகூட பர்வதத்தில் ருத்திர சுந்தரி
42 - விபுலத்தில் விபுலாதேவி
43 - மலையாசலத்தில் கல்யாணி
44 - சஹ்ய பர்வதத்தில் ஏகவீனர்
45 - அரிச்சந்திரத்தில் சந்திரிகாதேவி
46 - ராமதீர்த்தத்தில் ரமணா
47 - யமுனா தீர்த்தத்தில்மிருகாவதி
48 - கோடிக்கரையில் கோடவீ
49 - மாதவனத்தில் சுகந்தாதேவி
50 - கோதாவரியில் திரிசந்தி
51 - கங்காதுவாரத்தில் ரதப்பிரியை
52 - சிவகுண்டத்தில் சுபானந்தை
53 - தேவிகாதடத்தில் நந்தினி
54 - துவாரகையில் ருக்மிணி
55 - பிருந்தாவனத்தில் ராதை
56 - மதுரையில் தேவகி
57 - பாதாளத்தில் பரமேஸ்வரி
58 - சித்திரகூடத்தில் சீதாதேவி
59 - விந்தியத்தில் விந்தியாவாசினி
60 - கரவீரத்தில் மகாலஷ்மி
61 - வைத்தியநாதத்தில் ஆரோக்யை
62 - விநாயகத்தலத்தில் உமாதேவி
63 - மகாகளத்தில் மகேஸ்வரி
64 - உஷ்ண தீர்த்தத்தில் அபயாம்பிகை
65 - விந்தியமலையில் நிதம்பை
66 - மாண்டவியத்தில் மாண்டவி
67 - மகேஸ்வரபுரத்தில் ஸ்வாஹாதேவி
68 - சகலண்டலத்தில் பிரசண்டை
69 - அமரகண்டத்தில் சண்டிகாதேவி
70 - சோமேஸ்வரத்தில் வராரோகை
71 - பிரபாசத்தில் புஷ்கராவதி
72 - மகாலயத்தில் மகாபாகை
73 - சரசுவதி நதித்தலத்தில் தேவமாதை
74 - பயோஷணியத்தில் பிங்களேஸ்வரி
75 - கிருத சௌக்யத்தில் சிம்மாகை
76 - கார்த்திகையில் ஆதிசங்கரி
77 - உற்பலாவர்தத்தில் லோலாதேவி
78 - சோணசங்கமத்தில் சுபத்திரா
79 - சித்தவதனத்தில் லஷ்மி
80 - பரதாசிரமத்தில் அனங்கை
81 - ஜாலந்தரத்தில் விஸ்வமுகி
82 - கிஷ்கிந்தமலையில் தாராதேவி
83 - தேவதாரு வனத்தில் யுஷ்டிர்மேதை
84 - காஷ்மீரத்தில் பீமாதேவி
85 - ஹிமாத்திரியில் துஷ்டிவிஸ்வேஸ்வரி
86 - கபால மோசனத்தில் சுத்தி
87 - காயாரோகணத்தில் மாதாதேவி
88 - சங்கோத்தரத்தில் தாரா
89 - பிண்டாரக ஆலயத்தில் திருதி
90 - சந்திரபாகா நதியில் கலாதேவி
91 - அச்சோதயத்தில் சிவதாரணி
92 - வேணீயாற்றில் அமுதாதேவி
93 - பதரியில் உரசி
94 - உத்தரகிரியில் ஔஷதை
95 - குசத்வீபத்தில் குசோதகாதேவி
96 - ஏமகூடத்தில் மன்மதை
97 - குமுதத்தில் சத்தியத்வாதினி
98 - அஸ்வத்தில் வந்தினி
99 - குபோலயத்தில் நிதிதேவி
100 - தேவமுகத்தில் காயத்திரி தேவி
101 - பிருமாமுகத்தில் சரஸ்வதி
102 - சிவ சந்நிதியில் பார்வதி தேவி
103 - தேவலோகத்தில் இந்திராணி
104 - சூரியபிம்பத்தில் பிரபாதேவி
105 - சப்த மாதர்களில் வைஷ்ணவி
106 - பதிவிரதைகளில் அருந்ததி
107 - அழகான மங்கையரில் திலோத்தமை
108 - சகலதேகிகளின் சித்தத்தில் சக்தி பிரம்மகலை.


Friday, October 10, 2014

Annamaria grillivalam 28-09-2014

My son Keerthinaathan post in his Facebook about our 2nd Annual event at Thiruvannamalai..

"It start at 6.00 am and finish at 2.30 pm i was very happy to go Annamaria grillivalam and arunachaleswarar temple with harimanikandan chamundi [father] and my friends of 1000 peoples we expert 1500-3000 people but due to the CM problem many buses are cancel many people was not came some buses are arrive it is 2TH year celebration event 

 with Chao Vasan 





Thank to pic :  Ashwin Kumar Chandrasekar. & Arivu Nithi