Friday, June 29, 2018

ஆறுமாதம் ஒரு கதவு மறு ஆறுமாதம் வைணவ கோவில்

Thank:

இன்று தக்ஷிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு திருச்சி மணச்சநல்லூர் அருகில் உள்ள புண்டரிகாக்ஷப்பெருமாள் கோவில் திருக்கதவுகள் ... பூஜைகள் செய்து அயனங்களுக்கு ஒப்ப திறக்கப்படும்.
தமிழகத்தில் இப்படி ஆறுமாதம் ஒரு கதவு மறு ஆறுமாதம் இன்னொரு கதவு என்பதாக கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் இருப்பதாக அறிக்கிறேன் .
நான் முன்னமே சொன்ன படி ... சைவ வைணவ கோவில்களில் பிரதான மூர்த்திகள் இருப்பினும் .. காலத்தை ஒப்ப இந்திர வழிபாடும் .. சந்திர சூரிய வழிபாடும் இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் ஓங்கி இருந்திருக்க வேண்டும் ..
அதனால் சூரியனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இரண்டு வாசல்கள் அமைக்கபெற்றும் ... இந்தரனுக்கு மிகப்பெரிய சுதை சிற்பம் அமைக்கப்பட்டு இருக்கிறது .
இந்த கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு பிரமாண்ட சுதை சிற்பங்கள் .. பிரும்மாவுடன் ..
இன்று என்னுடன் எனது நண்பன் ... Tiruchendurai Ramamurthy Sankar வந்து சிறப்பித்தான் ..
கோவிலின் உள்ளே மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டை தொட்டு அனுபவித்தோம் ..
பின்னர் .. வெளியே ஒரு வினோத எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டை பார்த்தோம் .. எங்கள் ரெண்டு பேருக்கும் படிக்க தெரியாது .. ஆனால் டேய் .. மாமல்லன் அப்படீன்னு எழுத்தி இருக்கு என்று சங்கர் சொன்னான் .. எனக்கும் அப்படிதான் இருக்கு .. போட்டு பார்ப்போம் .. இதை படிக்க தெரிந்தவர்கள் என்ன எழுதி இருக்கு என்று சொல்லுங்க ..
விஜயராகவன் கிருஷ்ணன்

Gopala Krishnan இந்த கோவிலில் ஒரு குளம் உள்ளது அதில் நான்கு படித்துறை ஆதில் ஒன்றில் குளத்தால் அடுத்தபடித்துறையில் இருப்பவர்களுக்கு தெரியாது

Image may contain: 3 people, outdoor

Image may contain: 2 people, outdoor



கும்பகோணம் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.


படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது...... click' ...


Image result for 'சக்கரபாணி கோவில்'




No comments:

Post a Comment