Wednesday, March 13, 2024

வசீகரண அஞ்சனம்:

உலக வசீகரண அஞ்சனம்:

(1) ஆலமர வேரை எடுத்து வந்து அதை ஜலத்தில் உரைத்து விபூதியுடன் கலந்து திலகமிட்டுக் கொண்டால் உலகையே வசமாக்கலாம்.

(2) பூச நக்ஷத்திரத்தில் மூக்கறட்டை வேரை 7 தடவை மந்திரித்து அதை எவர் கையில் வைத்துக் கொண்டாலும் எல்லோரையும் வசப்படுத்தலாம்.

(3) நாயுருவி வேரை காராம் பசுவின் பாலில் உரைத்துத் தனது நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டால் மூவுலகையும் அவர் வசப்படுத்தலாம்.

(4) ஸஹதேவி என்ற அகிலமனைப் பூண்டுச் செடியைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தவும். அதனைப் பிறகு உடைத்து பொடித்துத் தாம்பூலத்தில் வைத்து ஒருவருக்குக் கொடுத்தால் அவர் வசமாவார். அது உலகையே வசமாக்கும்.

(5) கோரோசனையும் - அகிலமனைப் பூண்டையும் குழைத்துத் திலகம் இட்டுக் கொண்டால் அது உலகையே வசியம் ஆக்கும்.

(6) ஒரு ஸாதகர் அத்திமர வேரை எடுத்து வந்து அதைப் பொடித்துத் திலகம் இட்டுக் கொண்டால் அவர் பார்த்த மாத்திரத்திலேயே சகலருக்கும் ப்ரியமானவர் ஆவார்.

(7) தேவதாளி (Bristly cuffa - Emg) யையும் மஞ்சள் கடுகையும் பொடித்துக் குளிகையாக்கி அதை முகத்தில் வைத்துக் கொண்டால் உலகமே நம் வசமாகும்.

(8) குங்குமப்பூ ஊசித்தகரை கோஷ்டம் அரிதாரம் மனச்சிலை இவற்றை மோதிர விரல் இரத்தத்தில் கலந்து திலகம் இட்டுக்கொண்டால் ஸாதகர் எல்லோரையும் வசமாக்கலாம்.

(9) கோரோசனை - தாமரை இலை - ப்ரியங்கு (Calli Carpa Macro Phylla Vahl & லேடின்) செஞ்சந்தனம் இவற்றை ஒன்றாக்கி இங்கு முதலிலுள்ள மந்திரத்தை ஜபித்தால் ஸாதகர் சகல உலகையும் வசமாக்கலாம்.

(10) வெள்ளைக் குன்றி மணியை நிழலில் உலர்த்தவும். அதைக் காராம் பசுவின் பாலில் பாதியைக் கலந்து திலகம் இட்டுக் கொண்டால் எல்லா உலகையும் வசமாக்கலாம்.

(11) வெள்ளைக் குன்றி மணி வேரையும் இலையையும் தாம்பூலத்தோடு கூடச் சாப்பிட்டால் ஸாதகர் எல்லா உலகையும் வசமாக்கலாம்.

(12) அதே வெள்ளைக் குன்றி மணி வேரை அரைத்து உடம்பில் பூசிக் கொண்டால் உலகமே வசமாகும்.

(13) வெள்ளை அருகம்புல்லை காராம் பசுவின் பாலில் அரைத்து உடம்பில் தடவிக் கொண்டால் உலகமே வசமாகும்.

(14) வெள்ளை எருக்கைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி-அத்தோடு காராம் பசுவின் பாலையும் கலந்து உரைத்து அதைத் திலகமிட்டுக் கொண்டால் உலகமே வசமாகும்.

(15) வில்வ இலையையும், மாதுளைப் பழத்தையும் கலந்து ஆட்டுப் பாலில் அரைத்துத் திலகமிட உலகமே வசமாகும்.

(16) கற்றாழை வேரைக் கொண்டு வந்து கஞ்ஜா விதையோடு சேர்த்தரைத்து நெற்றியில் திலகமிட உலகமே வசமாகும்.

(17) அரிதாரம் அமுக்கிறாக்கிழங்கு ஸிந்தூரம் இவற்றை வாழைச்சாற்றில் அரைத்துத் திலகமிட உலகமே வசமாகும்.

(18) நாயுருவி விதையை ஆட்டுப் பாலில் அரைத்து வந்த விழுதைத் தடவிக் கொண்டால் உலகமே வசமாகும்.

(19) நெல்லிக்காய்ச்சாற்றில் எட்டுவித வாஸனைப்பொருளையும் மனோசிலையையும் சேர்த்து அரைத்துத்திலகமிட உலகமே வசமாகும்.

         - "மஹா மந்திர போதினி" நூலில் இருந்து....

இவை அனைத்தும் இந்த அரிய பொருள்கள்  அனைத்தும் சேர்த்து செய்த அஞ்சனம் யாகத்தின் மூலம் சக்தி ஊட்ட  பெற்றது ... 
Thanks Fb

No comments:

Post a Comment