Thursday, November 7, 2013

ruthratcham - Mystic Selvam




oru muga ruthratcham -  Mystic Selvam



ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் -மிஸ்டிக் செல்வம்
ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற்கை சீற்றம் பாதிக்காது.ருத்ராட்சம் ஒரிஜினலாக இருந்தால் தண்ணீரில் மூழ்கும்;வென்னீரில் வெடிக்காது.ருத்ராட்சத்துக்கு டூப்ளிகேட் பத்ராட்சம்.இந்த பத்ராட்சம் பூஜைக்கும்,ஜெபத்திற்கும் உதவாது.

தகுதி இல்லாத நபர்களையும் பொன்,பொருள்,புகழ் மூலம் தகுதியாக்கும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.ஒரு முக ருத்ராட்சத்தை வில்வ மரப்பெட்டியில் வைத்திருந்தாலே போதும்.பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லை;பூர்வ புண்ணியம் செய்திருப்பவர்களுக்கு ஒரு முக ருத்ராட்சம் தானாகவே தேடிவரும்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒருமுக ருத்திராட்சம் உருவாகும்.




ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் ருத்ராட்சங்களுக்கு சாம்பிராணி தைலமிட்டு தேய்ப்பார்கள்.அதனால் அதன் சக்தி பல மடங்காகப்பெருகும். ஒரு முக ருத்ராட்சத்துக்கு ஜின் போன்ற பூத கணங்களை விரட்டும் சக்தி அபரிதமாக இருக்கிறது.

ஒரு முக ருத்ராட்சத்தை ஓடும் நீரில் போட்டால் நீரை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் என்பது ஒரு பரிசோதனை;ஒரு முக ருத்ராட்சத்தை பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைத்தாலும் அது மேலே வந்துவிடும்.


பெரிய பால் பீப்பாயில் அதைப்போட்டு பஞ்சாட்சர மந்திரம் சொன்னால் பால் பூராவும் உறிஞ்சப்பட்டுவிடும்.பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு.ஒரு செம்பு தாம்பாளத்தில் ஒரு முக ருத்ராட்சம் வைத்து அதன்மேல் சாதாரண ருத்ராட்சங்களை போட்டால் பதினைந்து நிமிடத்தில் ஒரு முக ருத்ராட்சம் சாதாரண ருத்ராட்சங்களை விலக்கிக்கொண்டு மேலே வந்துவிடும்.




செட்டி நாட்டுப்பகுதிகளில் முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் சிவ தீட்சை பெற்று ஒரு முகருத்ராட்சம் வைத்திருந்தனர்.அதனால் அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்துள்ளனர்.பின்னர் வந்த அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு முக ருத்ராட்சத்தின் அருமை பெருமை தெரியாமல் அதைத்தூரப்போட்டுவிட்டார்கள்.அதனால் அப்பகுதியே களையிழந்தது.

பசுஞ்சாணவிபூதி அணிந்து ருத்ராட்ச மாலை அணிந்து ஓம்சிவசிவஓம் ஜெபித்து மகா வில்வாதிலேகியம் சாப்பிட்டு பசும்பால் குடித்துவந்தால் சகல விதமான சித்துக்களும் கிடைக்கும்.

 மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் 40 வருட ஆன்மீக ஆராய்ச்சி அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அந்த புத்தகத்தின் பெயர்:ஆன்மீகப்பயணம் இரண்டு பாகங்கள்.


ஜோதிடம்,மாந்தீரீகம்,சகல விதமான ஆன்மீக சந்தேகங்களையும் ஆராய்ந்து மிஸ்டிக் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.ஜோதிடர்,சிவ ஆராய்ச்சியாளர்கள்,மாந்திரீகப்பாதிப்பிலிருந்து மீள விரும்புவோர்,செல்வச்செழிப்பினை ஆன்மீக ரீதியிலும் அல்லது நேர்மையாகவும் அடைய விரும்புவோருக்கு இந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்...



thank :https://www.aanmigakkadal.com/2010/12/oru-muga-ruthratcham.html

3 comments: