Saturday, January 6, 2024

திருமறைக்காடு:-------ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்-

 "நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம் வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய"

"இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்"

                     ஆறாம் திருமுறை

                                                                          

023 திருமறைக்காடு
  
  

  பாடல் எண் : 5

 

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.



 பொழிப்புரை :

 

மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.
 
 
 
 
 
 

பாடல் எண் : 6

 

ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்
    அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
    குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
    நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.


.

பொழிப்புரை :

 

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான்பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்.
 
 
  
 
 
 
 
பாடல் எண் : 7
 
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
    விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
    அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
    பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.



பொழிப்புரை :
 
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன். சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத் தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன்.
 
 

1 comment:

  1. Description: Immerse yourself in a world of serenity and luxury at Hotel Vijayetha, one of the finest resorts in Nagercoil . Nestled amidst the picturesque landscapes, our resort is a sanctuary that promises an escape from the ordinary, where tranquility meets impeccable hospitality.

    Experience the epitome of comfort in our thoughtfully designed accommodations, ranging from cozy rooms to spacious suites. Each space is adorned with tasteful decor, modern amenities, and an inviting ambiance, ensuring a restful retreat for every guest.

    Indulge your senses in the culinary delights offered at our on-site dining options, or simply unwind and rejuvenate at our wellness facilities. Hotel Vijayetha's commitment to excellence extends to personalized service, ensuring that every aspect of your stay is tailored to meet your unique needs.

    ReplyDelete