Friday, January 5, 2024

கோபுர தரிசனம் #2

 கோபுர தரிசனம் #2


கொடி மரத்தில் காணப்படும்  கொடிக் கயிறுகள் இடைபிங்கலை, பிங்கலை என்ற  நாடிகளைக் குறிக்கின்றன. இவற்றின் வழியே மூச்சைச் சரியான முறையில் அமைத்து யோகம் பயிலும்போது,  ஆத்மா ‘ஆனந்தம்' எனப்படும் இறையடியை அடைந்து, பிறவியிலா பெரு நிலையை அடைகிறதென்பதைக் குறிக்கவே திருவிழாவின் போது, ‘கொடியேற்றம்' நடைபெறுகிறது.

எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய  நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது  மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது  ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக்  குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும்  விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன்  கருதி  கூறியவை.

 ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,  அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும்  பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.  இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்  என்று  நம் முன்னோர்கள் கூறினர்.

 கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு  இடையறாது  அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு  ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.

 இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி)  நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள  திருவுருவச் சிலை அந்த சக்தியை  பிரித்து  ஒன்பது  முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை  ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.

 கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர்  செல்லும் பொருட்டு  ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும்  நீரிலும் பிராண சக்தி  கலந்து  வெளிப்படுகிறது.  அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.

 இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன்,  அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது  என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.

 தமிழ் நாட்டுப் பல கோயில்களில்  சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள்.  சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும்,  ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும். நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது  நம்  உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும் போது  (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ஸ்ட்கு கீழே  இருக்கும்.  இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து வெளிப்பட்டு  கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம்  இதுதான்.

பலி பீடம்.

பலி பீடம் என்பது  இங்கு  உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல.

நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்  காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம்  எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் ந‎லன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த ‏ இடத்திலே பலி கொடுக்கவேண்டும். ம‎னிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்கவேண்டும்.                                                            

ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில் படும்படி அஸ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை,இரண்டு முழங்கால், மார்பு, என  நமஸ்காரம் செய்ய  வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து  வணங்க வேண்டும்.

 சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டி வரவேற்கின்றோம்?

வாழ்+ ஐ = வாழை என்பதற்கும் வாழ்+கை =வாழ்க்கை என்பதற்கும் நிறைய தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று தன் இனத்தைப் பெருக்கி கொள்ளூம்..பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடற் பகுதியிலுள்ள அனைத்தையும் ஈகம் செய்யும். தன் உயிரை இழந்த பின்னும் தநுச்,நார், காய்,கனி என்று உலகுக்கு வழங்கும். வாழை போன்றே தென்னையும் ஈகையின் வெளிப்பாடாகும். இவ்விரண்டு மரங்களும் அறவாழ்க்கையின் எடுத்துக் காட்டுகளாகும். இவ்விரு மரங்களையும் கற்பகத்தரு என்று  தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். மனித வாழ்க்கையில் உற்றவர்களுக்கும் உலத்தாருக்கும் முறையாக பயன் தருகின்ற அறவாழ்க்கையாக அமைய வேண்டுமென்று தமிழ்ச் சான்றோர்கள் எண்ணினார்கள்.

 வாழையும் தென்னையும் போல ஈகைவாழ்வாக அமைய வேண்டுமென்று நம்பினார்கள். அந்த அருமையின் வெளிப்பாடாக வாழையும் தென்னையும் மங்கல நிகழ்ச்சிகளில் கட்டினார்கள். இன்று வாழையும் தென்னையும்கட்டுவது ஒரு சடங்குபோல் செய்யப்படுகிறதே தவிர அதன் பண்பாட்டு நோக்கம் பலருக்கு தெரியவில்லை.

வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காக சுப காரியங்கள் போதும், குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகதான் வாழை மரம் கட்டுகிறோம்.  அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு. வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன்,  அகலமாகவும் இருக்கும். வாழை தண்டு மிகமிக மென்மையானது. கடுங்குளிரையும் கொடும் வெயிலையும் வாழைத்தண்டால் தாங்க இயலாது. இதற்காக இயற்கை தண்டை சுற்றி மடல்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்த கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிக்கட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் விடுகிறது. அடுத்து வாழை தரும் வாழைப்பழம். பூஜையின் போது, வாழைப்பழம் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.

அப்படி என்ன வாழைப்பழத்திற்கு மகத்துவம்?

 வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் (இதுவே மொந்தன் வாழை என்று மருவியுள்ளது) தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவின் வாழையிலும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஐந்து முக விளக்கும் ஐந்து முக தீபாராதனை.

 உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, மழை, நெருப்பு. உடலில் பஞ்ச பூதங்களும்  ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.

 நாம்  ஏன்  திருநீறு  சந்தனம்  குங்குமம் நெற்றி  குறியில் இட்டு கொள்கிறோம்?

 நம்  கபாலத்தில்  உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு  புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும்.  மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே  அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

 சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்  என்பதற்காகச் சந்தனம் பூசி,  சந்தனம் காயாமல் இருக்க  குங்குமம் இடுகிறோம். சந்தனம், திருநீறு சிவனுக்கும், குங்குமம் சக்திக்கும் அடையாளமாகும். இவற்றைத் தரித்தால் புத்துணரவும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும்,  உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.

 இறைவனையும், கோவிலையும் ஏன் வலமாகச் சுற்றுகிறோம்.

இறை சிந்தனையோடு, இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டு வலம் வரும்போது நம் மனம் இலகுவாகிறது புராண காலத்தில் பார்வதி சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் மலையை வலம் வந்த போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு.

 மேலான மனப்பா‎ன்மை உடையவர்க்குச் சுவாசத்தின் போக்குவரவு அல்லது பிராணயாமம் முறையாக நிகழ்கிறது.தங்கு தடையி‎ன்றி அமைதியாக வலம் போது பிராணயாமமும்  ஒழுங்காக நிகழ்ந்து விடுகிறது. சூட்சமமாக உடலி‎ன் கண் நிகழும் நிகழ்ச்சி பிராணயாம‎ம்.

. --

--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments:

Post a Comment